Saturday, January 31, 2015

தோழர் லெனின் அவர்களின் 91வது நினைவு தினம்(21.01.2015)

தோழர் லெனின் அவர்களின் 91வது நினைவு தினம்(21.01.2015)
நூலகங்களில் உறங்கிக் கிடந்த மாக்சியத்தை நடைமுறைப்படுத்திக் காட்டிய மாபெரும் ஆசான் தோழர் லெனின் அவர்களின் 91வது நினைவு தினம் இன்று ஆகும்.
ரஸ்சிய பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமையேற்று மாபெரும் ரஸ்சிய புரட்சியை வெற்றிபெற வைத்தவர். உலக பாட்டாளி வர்க்கத்திற்கு நம்பிக்கை ஒளி தந்தவர் தோழர் லெனின்
முதலாளி வர்க்க கொடுமைகள் ஒழிய, பாட்டாளி வர்க்கம் ஆட்சியைப் பிடிக்க, ஆயுதப் போராட்டம் மூலமே சாத்தியம் என்பதை நிரூபித்தவர் தோழர் லெனின்
தனி ஒரு நாட்டில் புரட்சி சாத்தியம் இல்லை என்று கூறிய டிரொக்சியின் அகில உலகப் புரட்சியை தத்துவார்த்த ரீதியாகவும, நடைமுறைரீதியாகவும் தோற்கடித்தவர் தோழர் லெனின்.
தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வாக சுயநிர்ணய உரிமையை முன்வைத்தவர் தோழர் லெனின். இதன் மூலம் சிறுபான்மை இனங்களின் நம்பிக்கையைப் பெற்றவர் தோழர் லெனின்.
திரிபுவாதிகளை அம்பலப்படுத்தினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஜக்கியத்தை ஏற்படுத்தியவர் தோழர் லெனின்.
• மாக்சிய லெனிச மாவோசிச சிந்தனையில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!
• பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய
மக்கள் யுத்தப் பாதையை முன்னெடுப்போம்.!
• போலிகளை அம்பலப் படுத்துவோம்.
புரட்சிவாதிகள் ஜக்கியப் படுவோம்!

லண்டனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா!

லண்டனில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா!
தமிழக பதிப்பகங்களின் சுரண்டலுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி!
“எழுநா” வின் முயற்சிகள் நம்பிக்கையளிக்கின்றன. பாராட்டுகள்!
லண்டனில் ஈஸ்ட்காமில் இன்று (25.01.2015) மாலை 5 மணியளவில் “எழுநா” வின் 10 புத்தகங்கள் அறிமுக விழா நடைபெற்றது.
இன்றைய இண்டர்நெட் யுகத்தில் அச்சுப் புத்தகங்கள் விரும்பப்படாது என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் லண்டனில் அதுவும் ஒரே நேரத்தில் 10 புத்தகங்கள் வெளியிடப்பட்டிருப்பது எதிர்வரும் காலங்களிலும் அச்சு நூல்களுக்கு மதிப்பு இருக்கும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.
ஈழத்து எழுத்தாளர்கள் தமது புத்தகங்களை வெளியிடுவதற்கு தமிழக பதிப்பக வியாபாரிகளை நம்பியிருக்கும் நிலையில், தமிழக பதிப்பக வியாபாரிகளால் சுரண்டப்படும் நிலையில், அதற்கு எதிரான “எழுநா” வின் முயற்சிகள் நிச்சயம் பாராட்டுக்குரிய பணியாகும்.
ஈழத்து எழுத்தாளர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள் தமது எழுத்துக்களை புத்தகமாக்குவதற்கு தமிழக வியாபாரிகளிடம் தமது எழுத்தை மட்டுமன்றி பெருமளவு பணத்தையும் கொடுத்துவிட்டு நீண்டகாலமாக காத்திருந்து ஏமாற்றமடைந்து வருவதை “எழுநா”வின் வருகை முற்று புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
“எழுநா” ஒரே நேரத்தில் 10 புத்தகங்களை வெளியிட்டது மட்டுமன்றி அந்த எழுத்தாளர்களுக்கு ராயல்டி பணமும் கொடுத்துள்ளனர். அது மட்டுமன்றி 3 வருட காப்புரிமை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சலுகை என பல பயன் மிக்க ஏற்பாடுகளையும் “எழுநா” செய்துள்ளமை மிகவும் பாராட்டுக்குரியதாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக “எழுநா” தனது கடந்த வருட கணக்கு வழக்கையும் பகிரங்கமாக முன்வைத்துள்ளமை மற்ற அமைப்புகளுக்கு ஒரு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது.
இது லாப நோக்கற்ற சமூக அக்கறையுள்ளவர்களின் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் இந்த முயற்சிக்கு ஆதரவளித்து உதவ வேண்டும்.
“எழுநா” வின் வளர்சியானது நல்ல புத்தகங்களை மலிவான விலையில் கிடைக்க வழி செய்வதுடன் ஈழத்து தமிழ் ஏழுத்தாளர்களுக்கு நியாயமான பணமும் கிடைக்க வழி செய்கிறது. முக்கியமாக தமிழக பதிப்பக வியாபாரிகளின் சுரண்டடலுக்கு முடிவு கட்டுகிறது.
“எழுநா” வின் பணி பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.

சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது?

சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது?
செய்தி:- சிறையில் உள்ளவர்களின் பெயர்களைத் தாருங்கள் விடுதலை செய்கிறேன் - ஜனாதிபதி மைத்திரி
மகிந்த ராஜபக்ச மறைத்து வைத்த விலையுயர்ந்த காரை கண்டு பிடித்த புதிய அரசுக்கு,
மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் மறைத்து வைத்த பணத்தைக் கண்டுபிடித்த அரசுக்கு,
மகிந்தவின் மகன் நாமல் மறைத்துவைத்த விமானத்தைக் கண்டு பிடித்த புதிய அரசுக்கு,
மகிந்தவின் தம்பி கோத்தபாயா கப்பலில் மறைத்து வைத்த ஆயுதங்களைக் கண்டு பிடித்த புதிய அரசுக்கு,
மகிந்த ராஜபக்சாவால் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் 20 ஆயிரம் தமிழர்களை கண்டு பிடிக்க முடியவில்லையா?
அல்லது அவர்களை கண்டு பிடித்து விடுதலை செய்ய புதிய அரசுக்கும் விருப்பம் இல்லையா?
புதிய மைத்திரி அரசு,
மகிந்தவினால் தண்டிக்கப்பட்ட சரத்பொன்சேகாவுக்கு பூரண விடுதலை அளிக்கப்பட்டுள்ளது.
மகிந்தவினால் பாதிக்கப்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் மகிந்தவினால் அடைக்கப்பட்ட தமிழ் கைதிகளை மட்டும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அது ஏன்?
தேர்தலுக்கு முன்னர் லண்டன் வந்திருந்த ரணில் தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.
மன்னார் ஆயர் முதல் மனித உரிமைவாதிகள் வரை பலரும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பினால் இனவாதிகள் எனக் கூறப்படும் ஜே.வி.பி இயக்கம் கூட தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என பகிரங்கமாக கோரியுள்ளது.
அதுமட்டுமல்ல 20 ஆயரத்திற்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்களையும் ஜே.வி.பி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் தமிழர்களின் பிரதிநிதியாக தன்னைக் காட்டீக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பகிரங்கமாக இல்லாவிடினும் இரகசியமாகவேனும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை ஏன் கோர முடியவில்லை? சீ வெட்கம்!
புதிய ஜனாதிபதி மைத்திரியிடம் டக்ளஸ் தேவானந்தாவை அரசில் சேர்க்க வேண்டாம் என கோரிய தமிழ்தேசிய கூட்டமைப்பு,
கருணாவுக்கு அமைச்சு பதவி வழங்க வேண்டாம் என கோரிய தமிழ் தேசிய கூட்டமைப்பு,
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரமுடியாதது ஏன்?
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைவிட டக்ளஸ், கருணா ஆகியோரின் விடயம் முக்கியமானதா?
இனியாவது தமிழ்தேசிய கூட்டமைப்பு சிறையில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக குரல் கொடுக்குமா?

தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?

தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?
புலிகள் வெற்றி பெறவில்லை என்பதால் ஆயுதப் போராட்டம் வெற்றி பெறாது என்கிறார் வடமாகாண முதல்வர் விக்கினேஸ்வரன்.
அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசால் ஆயுதம் கொண்டு நசுக்கப்பட்டதாலேயே இளைஞர்கள் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆனால் இன்று மீண்டும் அகிம்சைப் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா அறிவிக்கிறார்.
இந்திய சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருக்கும் சிறுபான்மை இனங்களில் ஒன்றான தமிழினம் விடுதலை பெற ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தார் “தமிழ்நாடு விடுதலைப்படை தளபதி” தோழர் தமிழரசன்.
ஆனால் தமிழன் ஒருவன் தமிழக முதலமைச்சரானால் இலங்கை, இந்திய தமிழினம் விடுதலை பெற முடியும் என்கிறார் “நாம் தமிழர்” சீமான்
அப்படியென்றால் தமிழின விடுதலைக்குரிய பாதை எது?
மகாத்மா காந்தி முன்வைத்த அகிம்சை பாதையா? அல்லது
மாசேதுங் முன்வைத்த ஆயுதப் போராட்ட பாதையா?
விபரங்களுக்கு கீழ்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையை படியுங்கள்.
http://tholarbalan.blogspot.co.uk/2015/01/blog-post_27.html

பாம்பிற்கு பல்லில்தான் விஷம். ஆனால் “துக்ளக்” சோ விற்கு உடம்பெல்லாம் விஷம்!

பாம்பிற்கு பல்லில்தான் விஷம். ஆனால்
“துக்ளக்” சோ விற்கு உடம்பெல்லாம் விஷம்!
“சோ” தனது 21.01.15 துக்ளக் இதழில் “ முன்பு வால்டர் தேவாரம் திருப்பத்தூர் பகுதியில் நக்சலைட்டுகளை கடுமையாக அடக்கி ஒடுக்கினார். இப்போது மீண்டும் துளிர்விடப் பார்க்கிற இந்த மாவோயிஸ்டுக்களையும் கடுமையாக அடக்கி ஒடுக்க வேண்டும். அரசும், காவல்துறையும் மெத்தனமாக இருந்து விடமாமல் முழு வேகத்தில் செயல்பட வேண்டும்” என்று எழுதியுள்ளார்.
அதாவது முன்பு பொலிஸ் அதிகாரியாக இருந்த தேவாராம் நக்சலைட்டுகளை ஒடுக்குவதாக கூறி திருப்பத்தூர் பகுதிகளில் பல அப்பாவி தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களை கொன்று குவித்தது போல் இப்போதும் கொன்று குவிக்கும்படி “சோ” நஞ்சைக் கக்கியுள்ளார்.
அதுமட்டுமல்ல சிறையில் உள்ள மாவோயிஸ்க்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய கொண்டு வரும்போது அவர்களது ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில் சந்திக்கின்றார்களாம். அதற்கு இடமளிக்க கூடாது என்றும் எழுதியுள்ளார்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். அப்படியானால் மாவோயிஸ்டுக்களை சட்டத்தின் முன் நிறுத்தி நீதிமன்றத்தின் மூலம் தண்டிப்பதற்கு மாறாக பொலிசாரை துப்பாக்கியால் சுட்டு அடக்கும்படி “சோ” வால் எப்படி கோரமுடியும்?
பொலிஸ் சட்டத்தை கையில் எடுப்பது சரியென்றால் அந்த பொலிஸ் அராஜகத்திற்கு எதிராக மக்கள் சட்டத்தை தமது கையில் எடுப்பது எப்படி தவறாகும்?
சட்டம் படித்த வக்கீல் என தன்னைக் கூறிக்கொள்ளும் “சோ” எப்படி பகிரங்கமாக இப்படி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும்படி பொலிசாரிடம் கோர முடிகிறது?
ஜெயா அம்மையாரின் அரசியல் தரகர் என்ற திமிரா? அல்லது சசிகலாவின் சாராய கம்பனியில் பங்குதாரர் என்ற அந்தஸ்தா? “சோ” தொடர்ந்தும் தமிழ் இனத்திற்கு எதிராக விஷம் கக்கி வருவதற்கு எது காரணம்?
கேரளாவில் இருந்து கொண்டு மலையாளிகளுக்கு எதிராக எழுதமுடியுமா?
கர்நாடகாவில் இருந்து கொண்டு கன்னடர்களுக்கு எதிராக எழுத முடியுமா?
மும்பையில் இருந்து கொண்டு மராட்டியர்களுக்கு எதிராக எழுத முடியுமா?
ஆனால் தமிழ் நாட்டில் இருந்துகொண்டு "சோ" வால் தமிழனுக்கு எதிராக எப்படி எழுத முடிகிறது?
தமிழன் “இளிச்சவாயன்” என்று “சோ” கருதுகிறாரா?

இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்!

இந்திய குடியரசு தின வாழ்த்து தெரிவிப்போர் ஒரு நிமிடம் இதனை சிந்தியுங்கள்!
இந்தியா ஒரு சுதந்திரமான நாடு என்கிறார்கள்.
இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் உள்ளது?
• மணிப்பூரில் பெண்களை கற்பழித்து தங்களுக்கு ஆண்மை உள்ளதாக நிரூபிக்க இந்திய ராணுவத்திற்கு சுதந்திரம் உண்டு.
• சாதி மாறி காதலித்தால் பெண்ணை 13 பேர் கற்பழிக்குமாறு உத்தரவிடுவதற்கு நாட்டாமைக்கு சுதந்திரம் உண்டு.
• கோடிக்கணக்கான ஊழல் செய்வதற்கு சோனியாவுக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளுக்கும் சுதந்திரம் உண்டு.
• காஸ்மீரில் அப்பாவி முஸ்லிம் மக்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி கொல்வதற்கு சுதந்திரம் உண்டு.
• கூலிப்படையை ஏவி கொலை செய்ய சங்கராச்சாரிக்கு சுதந்திரம் உண்டு. அது மட்டுமல்ல நீதியை விலை கொடுத்து வாங்கவும் அவருக்கு சுதந்திரம் உண்டு.
• பற்றரி வாங்கி கொடுத்த பேரறிவாளனுக்கு மரண தண்டனையும் கொலை செய்த சங்கராச்சாரிக்கு விடுதலையும் வழங்க இந்திய நீதித்துறைக்கு சுதந்திரம் உண்டு.
• இலங்கையில் 40 ஆயிரம் மக்களைக் கொல்ல இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு. அதுமட்டுமல்ல தமிழக மீனவனைக் கொல்ல இலங்கை கடற்படைக்கு பயிற்சி வழங்கவும் இந்திய அரசுக்கு சுதந்திரம் உண்டு.
இப்படி பல சுதந்திரம் இந்தியாவில் உண்டு.
நீங்கள் எந்த சுதந்திரத்திற்கு வாழ்த்து தெரிவிக்கின்றீர்கள்?

இதுதான் இந்திய நீதிமன்றத்தின் நியாயமா?

அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயம்.
அப்பாவி மக்களுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் இந்திய நீதிமன்றத்தின் நியாயமா?

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அப்பாவி மக்களுக்கு ஒரு நியாயமும் அரசியல்வாதிகளுக்கு இன்னொரு நியாயமும் வழங்கப்படுகிறது.
323 ரெலிபோன் இணைப்புகளை சன் டிவிக்கு முறைகேடாக பயன்படுத்தியதில் 400 கோடி ரூபா பெறுமதியான ஊழல் செய்த தயாநிதி மாறன் இன்னும் கைது செய்யப்படவில்லை. தண்டிக்கப்படவும் இல்லை.
2ஜி மூலம் பல லட்சம் கோடி ஊழல் செய்த கனிமொழி மற்றும் ராசா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் தண்டிக்கப்படவும் இல்லை.
66 கோடி ரூபா மக்கள் பணத்தைச் சுருட்டிய ஜெயா அம்மையாருக்கு 4 வருடம் தண்டனை வழங்கியும்கூட 21 நாளில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை அளித்துள்ளது.
ஆனால் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கு விடுதலையளிக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் நிரபராதி பேரறிவாளன் விடுதலையை வேண்டுமென்றே தாமதம் செய்கிறது.
மதுரையில் கைது செய்யப்பட்ட 6 தமிழ் இன உணர்வாளர்கள் 300 நாட்களுக்கு மேலாக மதுரை சிறையில் வாடுகிறார்கள். அவர்கள் இந்த தலைவர்கள் போல் ஊழல் செய்யவில்லை. மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை. மாறாக தமிழின விடுதலையை விரும்பியதே அவர்கள் செய்த தவறு.
மக்கள் பணத்தை திருடியவர்களுக்கு ஜாமீனில் விடுதலை. ஆனால் தமிழ் இன உணர்வாளர்களுக்கு தேசியபாதுகாப்பு சட்டத்தில் சிறை.
இதுதான் இந்திய நீதியா?

Tuesday, January 27, 2015

தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?


  • தமிழ் இன விடுதலைக்கான பாதை எது?



“துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது” - தோழர் மாஓசேதுங்

தமிழ் இனம் விடுதலை பெறவேண்டும் என்ற எமது இலக்கு வெற்றி பெற வேண்டுமாயின் அதனை அடைவதற்குரிய பாதை எது என்பது குறித்தும் நாம் தெளிவாக கண்டறிய வேண்டும். எமது பாதை தவறாக இருக்குமாயின் எமது இலக்கை ஒருபோதும் எம்மால் சென்றடைய முடியாது. எனவே முதலில் நாம் அடைய வேண்டிய இலக்கு பற்றி தீர்மானிக்கப்பட்டதும் அடுத்த முக்கியமான பணி அந்த இலக்கை அடைவதற்குரிய பாதையை தெரிவு செய்வதாகும்.

இன்று இரண்டு பாதைகள் எம்முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று மாபெரும் ஆசான் மாசேதுங் முன்வைத்த ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதை. இன்னொன்று அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையாகும். இதில் எந்தப் பாதையை தெரிவு செய்தால் தமிழ் இனம் விடுதலை பெற முடியும் என்பதே இன்று எம் முன் உள்ள கேள்வியாகும்.

ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை பலாத்கார முறையென்றும் அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையை சாத்வீக பாதையென்றும் இன்னொரு வடிவத்தில் சிலர் வரையறை செய்கிறார்கள். அத்தோடு கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்றும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்போர் ஆயுதத்தால் அழிக்கப்படுவர் என்றும் அவர்கள் மக்களை எச்சரிக்கின்றார்கள்.

புலிகள் இயக்கம் வெற்றி பெறவில்லை என்பதை வைத்து ஆயுதப் போராட்டம் பயனற்றது என இன்று சிலர் போதிக்க முற்படுகின்றனர். புலிகள் மௌனித்தது தங்களது ஆயுதங்களையே ஒழிய ஆயுதப் போராட்டத்தை அல்ல. மேலும் ஆயுதப் போராட்டம் புலிகளுக்கு முன்னரும் இருந்தது. அது புலிகளுக்கு பின்னரும் இருக்கும். எனவே புலிகள் வெற்றி பெறவில்லை என்பதால் அது ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்று பொருள் கொள்ள முடியாது.

புலிகள் பலமாக இருக்கும்வரை எந்த கருத்தையும் தெரிவிக்காத வட மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் இன்று புலிகள் இல்லை என்றவுடன் “ஆயுதப் போராட்டம் பயனற்றது” என்று பகிரங்கமாக கருத்து கூறுகிறார். அவர் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா  “மீண்டும் அகிம்சைப் போராட்டம் நடத்தப் போவதாக” அறிக்கை விடுகிறார்.

1948ம் ஆண்டு முதல் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாத நிலையில் இவர்களது இந்த தமிழரசுக்கட்சியே 1962ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது. இவர்களது இந்த அகிம்சைப் போராட்டத்தை வெகு இலகுவாக பலாத்காரத்தை பாவித்து இலங்கை அரசால் முறியடிக்க முடிந்தது. அகிம்சையை போதித்த தமிழரசுக்கட்சி தலைவர்களால் இலங்கை அரசின் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை முன்வைக்க முடியவில்லை. இருந்தபோதும் இவர்கள் பின்னால் சென்ற தமிழ் இளைஞர்கள் அந்த உண்மையைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கி அரச பலாத்காரத்திற்கு தகுந்த பதில் அளித்தார்கள். இதனை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் தமது பூரண ஆதரவை இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இவ்வாறே  இலங்கை அரசின் பலாத்காரத்திற்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பலாத்காரம் உருவாகியது.

மக்களை ஏமாற்றவும் புரட்சியின் கவனத்தில் இருந்து மக்களை திசைதிருப்பவுமே முதலாளித்துவ நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுகின்றனர். இதன்மூலம் இந் நாடுகளில் உண்மையான அதிகாரம் ஆயுதம் தாங்கிய படைகளின் கையில்தான் இருக்கின்றது என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது. பாராளுமன்ற வழி மூலம் உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வையும் போராட்ட மனப்பான்மையையும் மழுங்கச் செய்யப்படுகிறது. பாராளுமன்ற வழி மூலம் பேச்சுவாhத்தைகளினால் தீர்வு பெறும்படி கூறுவதன் மூலம் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றனர்.  இலங்கையில் பலமாக இருந்த புலிகள் இயக்கத்தை பேச்சுவாhத்தைக்கு அழைத்து பலவீனமாக்கியதை நாம் கண்முன் கண்டோம். அதேபோல் இந்தியாவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் மாவோயிஸ்டுகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி இந்திய அரசு அழைப்பதும் அவர்களது ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துவதற்காகவே.

எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கத்தை அடக்கிவைத்திருப்பது பலாத்காரத்தின் மூலமே. ஆயுதம் தாங்கிய படைகள் உள்ளடங்கிய ஒரு அரசு இயந்திரத்தை இதற்காக உருவாக்கி வைத்திருக்கின்றனர். ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கு உருவாக்கப்பட்ட இயந்திரமே அரசு எனப்படும். ஆளும் வர்க்கத்தின் காவல் நாய்களான ஆயுதப் படைகளின் கைகளில் இருக்கும் துப்பாக்கி இல்லாமல் ஒரு நிமிடமேனும் ஆளும் வர்க்கத்தால் ஆட்சி நடத்த முடியாது. அதனால்தான் “அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழாயில் இருந்து பிறக்கின்றது” என்று தோழர் மாசேதுங் கூறினார்.

இதன் அடிப்படையில்தான் ஆளும் வர்க்கத்தின் பலாத்காரத்திற்கு எதிராக ஆளப்படும் வர்க்கம் எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்காமல் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்று புரட்சியாளர்கள் கூறிவருகிறார்கள். அதாவது இன்றைக்கு தமிழ் மக்களை அடக்கி வரும் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் தவிடுபொடியாக்காமல் அதற்கு பதிலாக தமிழ்தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயந்திரமாகிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உருவாக்காமலும்  தொழிலாளி வர்க்கத்திற்கும் அதனுடைய நேச சக்திகளுக்கும் விமோசனம் கிட்டாது. இந்த உண்மையை நாங்கள் நன்றாக கிரகித்துக் கொள்ள வேண்டும்.

போராளிகள் வன்முறை மீது காதல் கொண்ட மன நோயாளிகள் அல்லர். இரத்தம் சிந்த வேண்டும் என்பதை இலட்சிமாக கொண்டு அலைபவர்களும் அல்லர். வன்முறை இன்றியும் இரத்தம் சிந்தாமலும் எந்த இழப்பும் இன்றி விடுதலை கிடைக்குமாயின் அதையிட்டு  மகிழ்சி கொள்பவர்கள் எங்களைவிட யார் இருக்க முடியும்? ஆனால் அது வெறும் கனவு. அந்தப் பொய்யை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

இயற்கையின் விதிகளை கவனித்து பார்ப்போமானால் அதிலிருந்தும் பலாத்காரத்தை தவிர்க்கமுடியாது என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம். உதாரணமாக ஒரு கோழிக் குஞ்சை எடுத்துக்கொள்வோம். கோழி முட்டையை அடைவைப்பதன் மூலம் குஞ்சு உருவாகிறது. அது பருவமடைந்தபின் தான் காந்தியின் சீடன் என்றும் அகிம்சையைக் கடைப்பிடிப்பவன் என்றும் முட்டைக் கோதிற்கு எதிராக பலாத்காரம் பாவித்து கொத்தாவிடில் அதற்கு என்ன ஆகும்? அது உள்ளேயே அவிந்து அழிந்து போகும். அதற்கு பதிலாக இயற்கை விதியின்படி அக் குஞ்சு முட்டைக் கோதிற்கு எதிராக பலாத்காரம் பாவித்து அதைக் கொத்தி உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது. முட்டைக் கோதிற்கு  எதிராக பலாத்காரம் பாவிக்க வேண்டும் என்ற விதியை அக் கோழிக் குஞ்சுக்கு சொல்லிக் கொடுத்தவர் யார்? தலைவர் மாசேதுங்கா? அல்லது கால் மாக்ஸா? இல்லை. இவர்கள் இருவருக்கும் முன்பாகவே அதாவது இயற்கையாகவே கோழிக்குஞ்சு கோதைக் கொத்திக்கொண்டு வெளியே வந்திருக்கிறது.  இது ஒரு இயற்கை விதி. இதைப் போல வேறு பல உதாரணங்களையும் எடுத்துக் கூற முடியும். இதற்காகத்தான் “பழைய சமுதாயம் என்னும் கர்ப்பப் பைக்குள் உருவாகியிருக்கும் ஒவ்வொரு புதிய சமுதாயத்திற்கும்  மருத்துவச்சி பலாத்காரம்” என்று கால்மாக்ஸ் கூறினார்.

கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிவான். இது கடவுள் செயல் என்று சாத்வீக வாதிகள் பொதிக்கின்றனர். ஆனால் அவர்களின் கடவுள்கள்கூட ஆயுதத்தைப் பாவித்தே அதர்மத்தை ஒழித்ததாக உள்ள கதைகளை இவர்கள் மறந்தவிடுகின்றனர். இந்துசமயப் புராணக் கதைகளை எடுத்துப் பார்த்தாலும் அதர்மத்தை அழித்து தர்மம் வெல்வதற்கு பலாத்காரமே காரணமாய் இருப்பதைக் காணலாம். அநேகமாக இந்துமத பக்தர்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளாத விடயம் ஒன்றிருக்கிறது. அது என்னவெனில் அவர்கள் வழிபடும் பெரும்பாலான தெய்வங்களின் கைகளில் பலாத்காரத்திற்கு பாவிக்கப்படும் ஆயுதங்கள் இருப்பதை அவதானிக்க முடியும். சிவன் கையில் சூலாயுதம் இருக்கிறது. கிருஸ்ணன் கையில் சக்கராயுதம் இருக்கிறது. முருகன் கையில் வேலாயுதம் இருக்கிறது. காளி கையில் கத்தி இருக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆயுதம் வைத்திருக்காத இந்து மதக் கடவுள் யாரேனும் இருக்கிறாரா என்றுகூட கேட்கலாம்

இந்துமத புராணக் கதைகளை எடுத்துப் பாருங்கள். கந்தபுராணக் கதையின் படி முருகன் சூரர்களை வென்றது சத்தியாக்கிரக போராட்டத்தின் மூலமல்ல. மாறாக வேல் ஆயுதத்தின் மூலமாகவே. அவர் சூர சங்காரம் செய்தார். இராமாய ணத்தில் இராவணைக் கொன்றது இராம பாணம். மகா பாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு வெற்றி கொடுத்தது அர்ச்சனுக்கு சிவபெருமானால் வழங்கப்பட்ட பாஸ்பதாஸ்திரம். மகா பாரதப் போர் தொடங்குவதற்கு முன்னர் பகவத் கீதையின் மூலமாக அர்ச்சனுக்கு கிருஸ்ணன் போதிப்பதும் அதர்மத்திற்கு எதிராக தர்மத்திற்காக போராட வேண்டிய கடமையையே.

மகாகவி பாரதியார் பாடினார் “ தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று. இதைத்தான் நாங்கள் புரட்சி என்று கூறுகிறோம்.
சிலி நாட்டில் கம்யுனிஸ்டுகள் தேர்தல் வென்று ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் உடனே சிலி நாட்டு ராணுவத்தின் துணையுடன் சதி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்தது. இது பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு படை இல்லாமல் ஆட்சியை தக்கவைக்க முடியாது என்பதை நிரூபித்தது. அதேபோல் வியட்நாமில் கம்யுனிஸ்டுகள் 26 வருடங்கள் ஆயுதப் போராட்டம் நடத்தியே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தோற்கடித்தார்கள்.

சிலி நாட்டில் நடந்த எதிர்ப் புரட்சியின் வெற்றியில் இருந்தும் இந்தோ சீனாவில் அதன் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய ஏகாதிபத்திய வல்லரசாகிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை போரில் தோற்கடித்தலில் இருந்தும் சோசலிசத்திற்கு சமாதானப் பாதையென்று ஒன்று இல்லை என்பதை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ருஸ்சிய அக்டோபர் புரட்சியும் சீனப் புரட்சியும் இதே பாடத்தைதான் உலகிற்கு வலியுறுத்துகின்றன.

அதே நேரத்தில் புரட்சியாளர்கள் தனிப்பட்ட பயங்கரவாதத்தை ஒரு அரசியல் கருவியாக பாவிப்பதை எப்பொழுதுமே எதிர்த்து வந்துள்ளனர். ஏனெனில் தனி மனிதனை அழிப்பதன் மூலம் சமுதாயத்தை மாற்றிவிட முடியாது என்பதை புரட்சியாளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர்.

ஒரு கால கட்டத்தில் ரஸ்சியாவில் போல்சிவிக் கட்சி உருவாவதற்கு முன்னர் ஜார் மன்னனை கொல்வதற்கு  சிலர் சதி செய்தனர். அவர்கள் அதில் வெற்றியும் பெற்றனர். ஆம், அவர்கள் ஜார் மன்னனை கொன்றனர். ஆனால் அவர்களால் ஜார் எதேச்சதிகாரத்தை தோற்கடிக்க முடியவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவ்விதமான ஒரு சதியில் ஈடுபட்டதற்கான மரண தண்டனை விதிக்கப்ட்டவர்களில் லெனின் சகோதரர் இலியானோவும் ஒருவர். இச்சம்பவம் லெனின் மேல் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் சகோதரரை மிகவும் நேசித்தார். அப்படியிருந்தும் அவர் திடமாக கூறினார் “ இந்த வழி எமக்கு உகந்தது அல்ல. வேறு வழிகளில் நாம் வெற்றியை தேட வேண்டும்” என்று. இதனடிப்படையில்தான் போல்சிவிக் கட்சியை கட்டியெழுப்பி அதன் மூலமாக லட்சக் கணக்கான  ரஸ்சிய மக்களை அணிதிரட்டி  பலாத்காரப் புரட்சியின் மூலமாக ஜார் எதேச்சிகாரத்தை லெனின் தோற்கடித்தார். இதுதான் பலாத்காரத்தைப்பற்றி புரட்சியாளர்களின் கண்ணோட்டமாகும்.

இந்தியாவில் தமிழக மக்களின் விடுதலைக்காக தமிழ்நாடு விடுதலையை தோழர் தமிழரசன் முன்வைத்தார். அவர் அந்த இலக்கை அடைவதற்காக ஆயுதப் போராட்டப்பாதையை முன்னெடுத்தார். ஆனால் அவரை வன்முறையாளர் என்றும் அவருடைய பாதையை பலாத்கார பாதை என்றும் மத்திய மாநில அரசுகள் விமர்சிக்கின்றன. தோழர் தமிழரசன் ஒரு புரட்சியாளர். அவர் மாக்சிச லெனிச மாவோசிச வழிகாட்டலில் தமிழ்நாடு விடுதலைக்காக போராடியவர்.

மாபெரும் ஆசான் மாவோ குறிப்பிட்டது போல் தோழர் தமிழரசன் “மக்கள் சக்தியே மகத்தான சக்தி” என்பதை புரிந்து ஏற்றுக்கொண்டவர். அதுமட்டுமல்ல மாசேதுங் கூறியதுபோல் தோழர் தமிழரசன்  மக்களுடன் சேர்ந்து உணவு உண்டார். மக்களுடன் சேர்ந்து உறங்கினார். மக்களுடன் சேர்ந்து உழைத்தார். அதனால்தான் மக்கள் அவரை மிகவும் நேசித்தார்கள். மக்கள் அவரை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை. மக்களின் பெரு ஆதரவின் மூலமே எதிரியின் கையில் பிடிபடாமல் அவர் வாழ்ந்து வந்தார். இறுதியில் உளவுப்படை சதி செய்தே தோழர் தமிழரசனைக் கொல்ல முடிந்தது.

தோழர் தமிழரசனைக் கொன்றதன்மூலம் அவரது கொள்கைகளைக் கொன்றுவிட்டதாக தமிழக காவல்துறை கனவு கண்டது. ஆனால் அவரது கொள்கை இன்று மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. அதனால்தான் அவரது கொள்கைகளை முன்னெடுப்பவர்களை நசுக்குவதற்காக மத்திய மாநில அரசுகள் புலிகள் மீதான தடையை நீடித்துள்ளன. இல்லாத புலிகளுக்கு தடைவிதித்தது மட்டுமல்ல வழக்கத்திற்கு மாறாக இரண்டு வருடத்திற்கு பதிலாக ஒரேயடியாக ஜந்து வருடம் தடை நீடிக்கப்பட்டுள்ளது. அவ் தடை நீடிப்புக்கு காரணமாக மதுரையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுக்கும் போராளிகள் மீதான பைப் வெடிகுண்டு வழக்குகளை தமிழக அரசு காட்டியுள்ளது. இதிலிருந்தே தமிழக அரசு புலிகள் மீதான தடையை நீடித்திருப்பது தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்டபாதையை முன்னெடுக்கும் தமிழ் இன உணர்வாளர்களை நசுக்குவதற்கே என்பது நன்கு புலனாகிறது.

கடந்த வருடம் இந்தியாவில் தேர்தல் மூலம் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. இந்த வருடம் இலங்கையில் மைத்திரி சிறிசேனா ஜனாதிபதியாகியுள்ளார். இது தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சியும் மகிந்த ராஜபக்சவும் தோற்கடிக்க முடியும் என்பதை காட்டியுள்ளது. இதன் அர்த்தம் என்னவெனில் தேர்தல் மூலம் ஆளும் வர்க்கத்தில் ஆட்களை மாற்ற முடியுமேயொழிய ஆளும் வர்க்கத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதே.

எம்மை அடக்கும் பிற்போக்கு சக்திகளை தேர்தல் மூலம் தூக்கியெறிய முடியாது என்பதையே கடந்த தேர்தல்கள் எமக்கு உணர்த்துகின்றன. லெனின் ஒரு தடைவ கூறியது- “பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையை பெற வேண்டும், அதற்கு பிறகுதான் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று கயவர்கள் அல்லது முட்டாள்கள்தான் சிந்திப்பார்கள். வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கத்தின் தலைமை ஆகியவற்றின் இடத்தில் பழைய முறையிலான பழைய அதிகாரமுடைய வாக்களிப்பை வைப்பது முட்டாள்தனத்தின் சிகரமாகும். மாறாக பாட்டாளி வர்க்கம் அதன் பக்கத்திற்கு மக்களை வென்றெடுக்க பூர்சுவா வர்க்கத்தை முதலில் தூக்கியெறிந்துவிட்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

பாராளுமன்ற தேர்ல்களை பகிஸ்கரிகும்படி கோரிய இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சண்முகதாசன் தமது அனுபவங்களில் இருந்து கூறியது “ இன்றுள்ள நவகாலனிச பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே அவை செயற்படும். எனவே அடக்கு முறையான பூர்சுவாவர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது”.

எனவே
பாராளுமன்ற பாதையை நிராகரிப்போம்!
ஆயுதப் போராட்டப் பாதையை முன்னெடுப்போம்!

Sunday, January 18, 2015

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

• அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!
2014 முடிந்து 2015 ஆரம்பித்துள்ளது.
அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துகள்.
2014 ல் இந்தியாவில் காங்கிரஸ் அராஜக அரசு வீழ்த்தப்பட்டது.
2015ல் இலங்கையில் மகிந்த சர்வாதிகார அரசு வீழ்த்தப்படும்.
இலங்கையில்
போர் முடிந்து 5 வருடமாகிவிட்டது. ஆனால் சிறையில் உள்ளவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
அதுமட்டுமல்ல இந்த தேர்தல் நேரத்தில்கூட ஒரு வேட்பாளரும் சிறையில் உள்ளவர்களின் விடுதலை குறித்து பேசவில்லை.
தமிழ்த் தேசிய கூட்மைப்புகூட சிறையில் உள்ளவர்களின் விடுதலையை கோராது நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது.
இந்தியாவில்
கூலிப்படையை வைத்து கொலை செய்த சங்கராச்சாரியார் விடுதலை.
என்கவுண்டர் வழக்கில் இருந்து பி.ஜே.பி தலைவர் அமிர்த்சா விடுதலை.
தண்டனை விதிக்கப்பட்ட ஜெயா அம்மையார் கூட ஜாமீனில் விடுதலை.
ஆனால் அப்பாவி பேரறிவாளன் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளும் விடுதலை செய்யப்படவில்லை.
2015ம் ஆண்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யும் ஆண்டாக தீர்மானிப்போம்.
அவர்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்.

• ஜனநாயகவிரோத, இனவாத, மகிந்தவின் குடும்ப அரசாங்கத்தினை நிராகரிப்போம்!

• ஜனநாயகவிரோத, இனவாத, மகிந்தவின் குடும்ப அரசாங்கத்தினை நிராகரிப்போம்!
நேற்று (03.01.2015) லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் சிறீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு சார்பில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் 7.30 மணிவரை நடைபெற்றது. பல்வேறு அமைப்புகள் , மற்றும் பிரமுகர்கள் பலர் உரையாற்றினார்கள். அனைவரும் ஜனநாயக விரோத, இனவாத, மகிந்தவின் குடும்ப அரசாங்கத்தினை நிராகரிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என மூவின மக்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் முன்னனி சோசலிச கட்சி சார்பில் சேனக்க என்ற சிங்கள இனத்தை சேர்ந்த சகோதரர் உரையாற்றினார். அவர் தமது உரையில் மகிந்தவோ அல்லது மகிந்தவிற்கு பதிலாக மைத்திரியோ வருவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை சுட்டிக்காட்டியதுடன் தமிழர் பிரச்சனை உட்பட அனைத்து பிரச்சனைகளும் தீர்வுகாண்பதற்கு அமைப்பு மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் ஒன்றினைந்து உழைப்போம் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.
இந்த தேர்தல் மூலம் மகிந்தவை விரட்டவேண்டும் என்று அனைவரும் ஒருமித்து குரல் கொடுத்ததோடு தேர்தலுக்கு பின்னரும் மூவின மக்களும் ஜக்கியப்பட்டு உரிமைகளை வென்றெடுக்க புலம்பெயர்ந்தோர் தமது பங்களிப்புகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டமை எதிர்காலம் குறித்த நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.

சர்வாதிகார மகிந்த அரசை விரட்டுவோம்!

 சர்வாதிகார மகிந்த அரசை விரட்டுவோம்!
மகிந்த தொடர்ந்து ஆள்வதற்கு இது ஒன்றும் மன்னர் ஆட்சி அல்ல.
தனது மகன் நாமலை பதவியேற்ற இது ஒன்றும் பரம்பரை ஆட்சியும் அல்ல.
ஒரு குடும்பம் மொத்த நாட்டையும் கொள்ளையிடுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
தொடரும் சர்வாதிகார கிட்லர் ஆட்சியை தூக்கியெறிய வேண்டும்.
மகிந்த கும்பலின் தேர்தல் தோல்வி உறுதியாகிவிட்டது.
மாற்றத்தை விரும்பும் மக்களின் முடிவிற்கு மாறாக
தில்லுமுல்லு செய்து பதவியில் தொடர முற்பட்டால்
லிபியாவில் கடாபிக்கு ஏற்பட்ட நிலையே கிடைக்கும்
மக்களின் பணத்தை கொள்ளையடித்த கும்பல் தப்பி ஓட முயல்கிறது.
அவர்கள் அனைவரும் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்.
அவர்களிடமிருந்து மக்கள் பணம் யாவும் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
ஜெர்மனியில் பாசிட் சர்வாதிகாரி கிட்லர் போல
பிலிப்பைன்சில் சர்வாதிகாரி மாக்கோஸ் போல
ஈரானில் சர்வாதிகாரி மன்னர் ஷா போல
இலங்கையின் சர்வாதிகாரி மகிந்த வீழ்த்தப்பட வேண்டும்.
யார் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதல்ல
யார் அடுத்த ஜனபதியாக வரக்கூடாது என்பதே
மக்கள் முன் உள்ள தெரிவாக இருத்தல் வேண்டும்.
ஒரு பிசாசுவே தன்னை பிசாசு என்று திமிராக ஒத்துக்கொண்ட பின்பும்
அந்த பிசாசு மகிந்தவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல.

• விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான இந்திய அரசின் தடை

• விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான இந்திய அரசின் தடை
விடுதலைப் புலிகள் இயக்கம் மீது வழக்கம்போல் இந்திய அரசு தடையை நீடித்துள்ளது.
வழமையாக ஒவ்வொரு இரண்டு வருடமும் தடையை நீடித்து வரும் இந்திய அரசு இம்முறை வழக்கத்திற்கு மாறாக 5 வருடம் தடையை நீடித்துள்ளது.
ஒருபுறம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்துவிட்டதாக இலங்கை, இந்திய அரசுகள் கூறிவருகின்றன. மறுபுறம் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடிக்கின்றன.
புலிகள் அழிந்துவிட்டதாக கூறி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பிரபாகரன் மற்றும் பொட்டு ஆகியோரை நீக்கிய இந்திய அரசு மறுபுறத்தில் புலிகள் மீதான தடையை நீடிக்கிறது.
முள்ளிவாய்க்காலில் 40 ஆயிரம் மக்களை அழித்த இலங்கை அரசுக்கு பெரும் உதவி புரிந்தது இந்திய அரசு. அந்த உண்மையை தமிழக மக்கள் உணர்ந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே புலிகள மீதான தடை நீடிக்கப்படுகிறது.
தமிழக மக்கள் இந்திய அரசின் சுயரூபத்தை இனங்கண்டு தமிழ்நாடு விடுதலையை முன்னெடுக்க கூடாது என்பதற்காகவே புலிகள் மீதான தடை நீடிக்கப்படுகிறது.
தமிழ்நாடு விடுதலையை முன்னெடுப்போரை நசுக்குவதற்காகவே புலிகள் மீதான தடை இம்முறை 5 வருடம் நீடிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கைது செய்யப்பட்ட தமிழ் உணர்வாளர்களை விடுதலை செய்யாமல் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைக்கவே விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழ் அகதிகளை தொடர்ந்தும் சிறப்புமுகாமில் அடைத்து வைப்பதற்காகவே புலிகள் மீதான தடை நீடிக்கப்படுகிறது.
தான் பதவிக்கு வந்தால் ஈழம் பெற்று தருவேன் என்ற ஜெயா அம்மையார் ஈழத் தமிழர்களை மட்டுமல்ல தமிழக உணர்வாளர்களையும் நசுக்குவதற்காகவே புலிகள் மீதான தடையை நீடித்துள்ளார்.
ஜெயா அம்மையாரின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள் இப்ப என்ன கூறப்போகிறார்கள்?

முழந்தாளிட்டு வாழ்வதனைவிட எழுந்து நின்று மரணிப்பதனையே நான் விரும்புவேன் -Stéphane Charbonnier

முழந்தாளிட்டு வாழ்வதனைவிட எழுந்து நின்று மரணிப்பதனையே நான் விரும்புவேன் -Stéphane Charbonnier
• எல்லாம் வல்ல அல்லாவுக்கு பகிடி, வெற்றி தெரியாதா?
ஒரு நகைச்சுவைக்காக 12 பேரை கொலை செய்வதுதான் அல்லாவுக்கு விருப்பமா?
ஒரு நகைச்சுவை எல்லாம் வல்ல அல்லாவை களங்கப்படுத்த முடியுமா? அல்லது ஒரு நகைச்சுவைக்காக 12 பேரை கொல்வது அல்லாவை களங்கப்படுத்துமா?
என்னே கொடுமை இது? இதை இன்னும் எத்தனை நாளைக்கு அனுமதிப்பது?
• கடவுள் இருக்கு என்று கூற ஒருவருக்கு கருத்து சுதந்திரம் உண்டென்றால் கடவுள் இல்லை என்று கூற இன்னொருவருக்கு கருத்து சுதந்திரம் உண்டு.
கருத்து சுதந்திரத்தை கருவி கொண்டு அடக்க முற்பட்டால்
அப்புறம் சிந்திப்பதற்கே மனிதன் அச்சப்பட வேண்டியிருக்கும்.
• கம்யுனிசத்திற்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்பட்ட மத அடிப்படைவாத தீவிரவாதம் இன்று அந்த ஏகாதிபத்தியங்களையே விழுங்க ஆரம்பித்துள்ளது. ஆனாலும் பிற்போக்கு மதக் கருத்தக்களை மாக்சிய கருத்துக்களால் மட்டுமே எதிர் கொள்ள முடியும்.
• இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மட்டுமல்ல எல்லா மத அடிப்படைவாதிகளும் எதிர்க்கப்பட வேண்டியவர்களே. அவர்களை புரட்சியாளர்களால் மட்டுமே தோற்கடிக்க முடியும்.

மக்கள் சக்தியே மகத்தான சக்தி!

• மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்.
மகிந்த கும்பலை நிராகரித்தார்கள்
மக்கள் சக்தியே மகத்தான சக்தி!
இனி மகிந்த கும்பல் கைது செய்யப்பட வேண்டும். அவர்களிடம் இருக்கும் மக்கள் பணம் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
சிறையில் உள்ள அரசியல் கைதிகள் யாவும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
வெள்ளைவான் அச்சுறுத்தலுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு இதற்காக முயல வேண்டும்.

• பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!


• பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
புலிகள் மௌனித்தது தமது ஆயுதங்களையே யொழிய ஆயுதப் போராட்டத்தை அல்ல.
புலிகள் வெல்லவில்லை என்பதால் ஆயுதப் போராட்டம் மூலம் வெற்றி பெற முடியாது என்று பொருள் அல்ல.
இலங்கையில் புலிகளுக்கு முன்னரும் ஆயுதப் போராட்டம் இருந்தது. புலிகளுக்கு பின்னரும் ஆயுதப் போராட்டம் இருக்கும்.
தேர்தல் மூலம் ஆளும் வர்க்கத்தில் நபர்களை மாற்ற முடியுமேயொழிய ஆளும் வர்க்கத்தை ஒருபோதும் மாற்ற முடியாது.
ஆளும் வர்க்கம் தன்னுள் மகிந்தவுக்கு பதிலாக மைத்திரியை மாற்ற அனுமதிக்கும். ஆனால் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திற்கு வர ஒருபோதும் அனுமதிக்காது.
தேர்தல் மூலம் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை ஒருபோதும் கைப்பற்ற முடியாது.
ஆயுதம் ஏந்திய புரட்சியின் மூலமே பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்ற முடியும்.
புதிய ஜனநாயக புரட்சிக்காக உழைப்பதே எமது வரலாற்று கடமையாகும்.
• தோழர்களே!
உழைக்கும் மக்களின் உரிமை நாளாம்
தைபொங்கல் நன்னாளில் வாருங்கள்
புரட்சிக்காக உழைக்க சபதம் ஏற்போம்

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்குமா?


• எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்குமா?
1983 ல் எம்.ஜி.ஆர் அனைத்து இயக்க பிரதிநிதிகளையும் கோட்டையில் சந்தித்தார். அப்போது அவர் புளட் இயக்க ஆதரவாளராக இருந்தமையினால் எல்லா இயக்கங்களையும் புளட் இயக்கத்தில் சேரும்படி ஆலோசனை கூறினார். அவருடைய ஆலோசனையை ஒரு இயக்கமும் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது பாலஸ்தீன விடுதலை அமைப்பு போல் எல்லா இயக்கமும் ஒரு குடையின் கீழ் வருவதாகவும் அதனை இந்திய அரசு அங்கீகரிக்க அவர் வழி செய்ய வேண்டும் எனவும் இயக்கங்களின் சார்பில் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் அதில் விருப்பம் காட்டவில்லை.
பாலஸ்தீன விடுதலை அமைப்பு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு இந்தியாவில் தூதர அந்தஸ்தும் அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிலும் கிண்டியில் அவர்கள் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவியும் வழங்கப்பட்டு வந்தது. அதனை சுட்டிக்காட்டி அதேபோல் ஈழவிடுதலை இயக்கங்களும் தமிழ்நாட்டில் வெளிப்படையாக இயங்க இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் என இயக்கங்களின் சார்பில் கோரப்பட்டது. அதற்கு எம்.ஜி.ஆர் மட்டுமல்ல எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதியும் ஆதரவு வழங்கவில்லை.
1983ற்கு முன்னர் தமிழீழத்திற்கு ஆதரவு தரும்படி தந்தை செல்வாவும் அமிர்தலிங்கமும் எம்.ஜி.ஆரிடம் கோரிய போது தனக்கு சிங்கள மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் இருப்பதால் தன்னால் ஆதரவு தரமுடியாது என்றார். பின்னர் கலைஞர் இவரை “மலையாளி” என்று விமர்சிப்பதற்கு அஞ்சியே போராளிகளை ஆதரிக்க முன்வந்தார். ஆரம்பத்தில் புளட் இயக்கத்தை ஆதரித்த எம்.ஜி.ஆர் பின்னர் கலைஞர் கொடுத்த பணத்தை புலிகள் இயக்கம் வாங்காதபடியால் அவர்களுக்கு பணம் கொடுத்தார்.
எம்.ஜி.ஆர் புலிகளுக்கு வெளிப்படையாக தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடியும் இரகசியமாக சுமார் 40 கோடி ரூபாவும் கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த 40 கோடி ரூபா (சாராய) உடையாரினால் வழங்கப்பட்ட லஞ்சப் பணம் என்றும் அறிய வருகிறது.
எம்.ஜி.ஆரும் கலைஞர் கருணாநிதியும் தங்கள் அரசியல் லாபங்களுக்காக ஈழவிடுதலை இயக்கங்களையும் ஈழவிடுதலைப் போராட்டத்தையும் பயன்படுத்தினார்களேயொழிய அவர்கள் ஒருபோதும் இலங்கையில் தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என விரும்பவில்லை.
எம்.ஜி.ஆரோ அல்லது கலைஞரோ ஈழவிடுதலை இயக்கங்களை இந்திய அரசு அங்கீகரித்து தமிழ்நாட்டில் சுதந்திரமாக இயங்க வழி ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் சகோதரப் படுகொலைகளினால் இயக்கங்கள் அழிந்திருக்காது. முள்ளிவாய்க்கால் அவலமும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது.
எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தாலும் தமிழீழம் மலர்வதற்கு இந்திய அரசு அனுமதித்திருக்காது என்பதே உண்மையாகும்.