Sunday, March 29, 2020

அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்தார்கள்

அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்தார்கள் அவன் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் அவனால் நடக்க இருக்கும் ஆபத்தை புரிந்து கொள்ள முடியவில்லை ஏனெனில் அவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன். அவர்கள் அவன் மீது பெற்றோலை ஊற்றினார்கள் அவர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்று கத்தியவாறு அவன்மீது நெருப்பு வைத்தார்கள். அவர்களுக்கு அவன் பெயர் முக்தாஸ் என்பது அவனைக் கொல்வதற்கு போதுமானதாக இருந்தது. ஆனால் அவனுக்கு தான் ஏன் கொல்லப்படுகிறேன் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாமல் சிரித்தக் கொண்டே கருகிப் போனான். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பாரத மாதா சிரித்திருக்கமாட்டாள். நிச்சயம் தலை குனிந்து கண்ணீர் சிந்தியிருப்பாள். குறிப்பு - அமைதிப்படை என்று வந்தவர்கள் 1989ல் நெல்லியடியில் மெண்டல் பத்மநாதன் என்ற மனநலம் பாதிக்கப்பட்டவனை சுட்டுக் கொன்றார்கள். அவனும் இறக்கும்போது தான் ஏன் கொல்லப்படுகிறேன் என்பது தெரியாமல் சிரித்துக் கொண்டே இறந்திருப்பானா? Image may contain: 1 person, smiling, close-up

•தியானம் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியுமா?

•தியானம் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியுமா? தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருந்தாலும் அதை அடைவதற்கான பாதை குறித்து பல்வேறு கருத்துகள் காணப்படுகின்றன. சிலர் பாராளுமன்ற பாதை மூலம் தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியும் என்கின்றனர். இன்னும் சிலர் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியும் என்கின்றனர். வேறு சிலர் இந்தியாவைப் பயன்படுத்தி இராஜதந்திரத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியும் என்கின்றனர். போராளிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என்கின்றனர். இவற்றைத் தவிர இப்போது கனடாவில் இருக்கும் உஷா சிறீஸ்கந்தராசா என்பவர் தியானத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியும் என்கிறார். உஷா சிறீஸ்கந்தராசா சிறந்த உணர்வாளர் மட்டுமன்றி செயற்பாட்டாளரும்கூட. அவர் “ஒரே நோக்கத்துடன் கருத்தொருமித்த மனத்திட்பத்துடன் நாம் வாழும் நாடுகளிலும் தாயகத்திலும் நின்று அவரவர் கால மண்டலத்தில் 4, 8, 12, 18, 22 மணிகளில், கண்களை மூடி, மனதை ஒரு நிலைப் படுத்தி, உயர்பேராற்றலை வேண்டியழைத்துத், தமிழீழம் மலர வழிபடுவோம் – என்று கூறுகிறார். தியானம் செய்வது, ஆலயங்களில் வழிபடுவது, விரதம் இருப்பது போன்றவை எமது மனங்களை ஒருநிலைப்படுத்த உதவலாமே யொழிய தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தராது. அகிம்சைப் போராட்டத்தையே மதிக்காத இலங்கை இந்திய அரசுகள் தியானத்திற்கு மதிப்பளித்து தமிழீழ விடுதலையை தரும் என நம்புவது முட்டாள்தனமாகவே இருக்கும். அதுமட்டுமல்ல தமிழ் மக்களின் விடுதலைக்கு தியானத்தை பாதையாக முன்வைப்பது இலங்கை இந்திய அரசுகள் தொடர்ந்தும் தமிழ் மக்களை நசுக்கி அழிப்பதற்கே உதவியாக இருக்கும். இந்த நேரத்தில் எதற்காக உஷா சிறீஸ்கந்தராசா இந்த தியானப்பாதையை முன்வைக்கிறார் என்ற கேள்வி ஒருபுறம் எழுந்தாலும் மறுபுறத்தில் மார்க்சியபாதையை முன்வைக்கும் தோழர் தியாகு இதை எப்படி மொழிபெயர்த்து ஆதரவு தெரிவிக்கின்றார் என்ற ஆச்சரியம் எழுகிறது. உஷா சிறீஸ்கந்தராசா முன்வைத்திருக்கும் தியானப் பாதையால் எந்த பயனும் இல்லையா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுக்கூடும். ஆம். தமிழ் இன விடுதலைக்கான பாதை எது என்ற ஆய்வை தமிழ் மக்கள் மத்தியில் தூண்டுவதைத் தவிர வேறு எந்த பயனும் இதனால் விளையப் போவதில்லை. குறிப்பு - உஷா சிறீஸ்கந்தராசாவின் அறிக்கை இணைப்பு கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது. Image may contain: 1 person Image may contain: 1 person

செய்தி - கடவுள் தமிழ் மக்களுக்காக கொடுத்த கொடை சம்பந்தன் - சுமந்திரன் பெருமிதம்.

செய்தி - கடவுள் தமிழ் மக்களுக்காக கொடுத்த கொடை சம்பந்தன் - சுமந்திரன் பெருமிதம். சுமந்திரன் அவர்களே! சரி. நம்புகிறோம். ஆனால் எந்தக் கடவுள் கொடுத்த கொடை என்பதையும் கூறினால் நம்புவதற்கு உதவியாக இருக்கும். ஏனெனில் உங்கள் கடவுள் இயேசு கிறிஸ்து. சம்பந்தர் ஐயாவின் கடவுள் காளி அம்மன். இதில் எந்தக் கடவுள் கொடுத்த கொடை என்பதையும் தெளிவாக கூறிவிடுங்கள். இல்லாவிடின் அப்புறம் மதக் கலவரம் வந்துவிடும். அவருக்கு காது கேட்கவில்லை. கண் தெரியவில்லை. பிறர் உதவி இன்றி நடக்ககூட முடியவில்லை. இந் நிலையில் அவராகவே ஒதுங்க முன்வரும்போது எதற்காக தடுக்கிறீர்கள்? இளையவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நீங்கள்தானே பேசியிருக்கிறீர்கள். அப்புறம் சம்பந்தர் ஐயா ஒதுங்கக்கூடாது என்றால் என்ன அர்த்தம்? சம்பந்தர் ஐயா போய்விட்டால் அப்புறம் உங்கள் ஆட்டம் எடுபடாது என்று அச்சப்படுகிறீர்களா? Image may contain: 2 people, possible text that says 'NEWSUTHANTHIRAN.COM கடவுள் தமிழ் மக்களுக்காக கொடுத்தகொடை சம்பந்தன்! சுமந்திரன் பெருமிதம்'

•மாபெரும் ஆசான் மாவோக்கு வந்த நிலைமை?

•மாபெரும் ஆசான் மாவோக்கு வந்த நிலைமை? இதைவிட மோசமாக மாவோவை யாராலும் அசிங்கப்படுத்த முடியாது. பரவாயில்லை. இதைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் இப்போது எனது கவலை என்னவென்றால் இதை சுமந்திரன் செம்புகள் யாராவது பார்த்துவிடக்கூடாது என்பதே. அப்புறம், “மக்கள் விரோத சக்திகளை மண்டியிட வைத்த ஈழத்து மாவோ சுமந்திரன் வாழ்க” என்று போஸ்டர் ஒட்டிவிடப் போறாங்கள். தற்கொலை செய்வதைவிட எமக்கு வேறு வழியில்லை. Image may contain: 2 people, text

ஓடுங்கடா! ஓடுங்கடா!

ஓடுங்கடா! ஓடுங்கடா! பாராளுமன்றத்தைச் கலைச்சுட்டாங்களாம்டா! இத்தனை வருடமும் பாராளுமன்றம் என்ற சாக்கடையில் உழன்ற பன்னிகள் யாவும் இனி ஒரு மாதத்திற்கு ஊருக்குள்ள வரப்போகுதுகள். அதில் இத்தனை காலமும் நீண்ட உறக்கத்தில் இருந்தவரும் எழும்பி வரப்போகிறார். ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்று கடந்த தேர்தலில் உறுதி தந்தவர் இந்த தேர்தலுக்கு என்ன உறுதி தரப்போகிறாரோ தெரியவில்லை. அவருக்கு தேர்தல் வந்தால் உஷாராக வருவார். ஆனால் தேர்தல் முடிந்ததும் அவருக்கு காது கேட்காது. கண் தெரியாது. சிறையில் இருக்கும் கைதிகள் விடுதலை பற்றிக் கேட்டால் கையில் திறப்பு இல்லை என்பார். வேலை கேட்டால் அப்புறமம் தீர்வு பெற முடியாது போய்விடும் என்பார். ஆனால் தனக்கு பதவி , பங்களா மற்றும் சொகுசு வாகனம் கேட்டு வாங்குவார். சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யவில்லை காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கவில்லை இடம் பெயர்ந்தோர் அனைவரும் மீள் குடியேற்றம் செய்யவில்லை. வாக்குறுதி அளித்தபடி ஒரு வருடத்தில் தீர்வும் பெற்றுத் தரவில்லை. அப்புறம் எந்த முகத்தோட மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்? ஆனால் தமிழ் மக்களிடம் பிஞ்ச செருப்பு இருக்கிறது வாசற் படலையில் விளக்குமாறு இருக்கிறது. வேலிப் பூவரசு மரத்தில் நல்ல கதியால் இருக்கிறது. வாருங்கள். இம்முறை நல்ல வரவேற்பு உங்களுக்கு காத்திருக்கிறது! Image may contain: 1 person, standing 97You, Sivasothy Vijayaruban, Nadarajah Kandiah and 94 others 20 comments

நாம் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்?

நாம் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்? தெருவில் நடந்து செல்லும்போது பச்சையாக ஏதோ கிடந்தது. எடுத்து நக்கிப் பார்த்தேன். புளிப்பாக இருந்தது. அப்புறம்தான் தெரிந்தது அது எருமைச்சாணி என்று. நல்லவேளை நான் மிதிக்கவில்லை. இப்படித்தான் சிலர் வரலாற்றைத் திரும்பிப் பார்த்து தாங்கள் ஏதோ நல்லவர்கள் போல் முட்டாள்தனமாக காட்டிக் கொள்கிறார்கள். வரலாற்றை திரும்பிப் பார்ப்பது என்பது நாம் முன்னோக்கி சரியாக செல்வதற்கு உதவ வேண்டும். அதாவது போராட்டத்தை முன்னெடுப்பதற்கு உதவ வேண்டும். மாறாக எதிரிக்கு காட்டிக் கொடுப்பதாகவோ உதவுவதாகவோ இருந்துவிடக்கூடாது. உதாரணமாக, சுமந்திரன் புலிகள் சகோதரப் படுகொலை செய்தவர்கள் என்கிறார். புலிகள் முஸ்லிம் இனப்படுகொலை செய்தவர்கள் என்கிறார். புலிகள் தமிழ் மக்களை கொன்றார்கள் என்கிறார். இவற்றை எல்லாம் விசாரணை செய்ய வேண்டும் என்கிறார். இப்போது புலிகள் இல்லை. இல்லாத புலிகள் மீது இப்படி கூறுவதன்மூலம் தமிழ் மக்களுக்கு என்ன நன்மையை பெற்றுக் கொடுக்க முடியும் என சுமந்திரன் கருதுகிறார்? நிச்சயமாக இதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக இது தாங்கள் செய்த இனப்படுகொலையை நியாயப்படுத்தவே இலங்கை அரசுக்கு உதவுகிறது. அதேபோல் சம்பந்தா ஐயாவும் புலிகளைப் பயங்கரவாதிகள் என்றும் தான் ஒருபோதும் பயங்கரவாதிகளை ஆதரிக்கவில்லை என்றும் கூறினார். இவ்வாறு கூறியதன் மூலம் அவர் தமிழ் மக்களுக்கு என்ன நன்மையை பெற்றுக் கொடுக்க முடிந்தது? மாறாக, இதனை தமிழ் செல்வனுக்கு பின்னால் பைல் கட்டை தூக்கிக்கொண்டு திரிந்தபோது கூறியிருக்கலாமே? புலிகள் இருந்தபோது அவர்களே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றுகூறி பதவி பெறுவது. அவர்கள் இல்லை என்றவுடன் அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறி இலங்கை அரசிடம் பதவியும் சலுகைகளும் பெறுவது இவ்வாறு தங்கள் நலனுக்காக வரலாற்றை திரும்பிப் பார்ப்பது தவறு மாறாக இனியாவது தமிழ் மக்களின் நலனுக்காக வரலாற்றை திரும்பிப் பாருங்கள். Image may contain: 2 people, people smiling, outdoor

தமிழின அழிப்புக்கு நீதிகோரி

•தமிழின அழிப்புக்கு நீதிகோரி 8வது நாளாக தொடரும் ஈருளிப் பயணம்! ஒருபுறம் கொரோணா வைரஸ் அச்சுறுத்தல் மறுபுறம் சீரற்ற காலநிலைக் கொடுமை ஆனாலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 8வது நாளாக இவர்கள் பயணம் தொடர்கிறது வழி எங்கும் மக்களை சந்திக்கிறார்கள் நகர பிதாக்களை சந்திக்கிறார்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார்கள் பத்திரிகையாளர்களைக்கூட சந்திக்கிறார்கள் அரசியல் தலைவர்கள் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்று சிந்திக்கிறார்கள் ஆனால் இவர்கள் அடுத்த தலைமுறை தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று சிந்திக்கிறார்கள் இப்போது கூறுங்கள் யார் உண்மையான போராளிகள் என்று. Image may contain: 7 people, including Mylvaganam Pathmanathan, bicycle and outdoor

“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.

•“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள். தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் பிறந்ததினம் இன்று ஆகும்.(04.03.2020) புலவர் அவர்கள் “தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர். தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர். அதனாலேயே அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கில் இணைக்கப்பட்டார். வயதான காலத்தில் வழக்கின் நிமித்தம் அலைக்கழிக்கப்ட்டபோதும் ஈழத் தமிழர்களுக்கான தனது ஆதரவை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை. தமிழின விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி. Image may contain: 1 person

•மக்களை ஏமாற்ற வேண்டும் என்றால்

•மக்களை ஏமாற்ற வேண்டும் என்றால் முதலில் அவர்கள் ஆசையை தூண்ட வேண்டும் அல்லவா! கடந்த முறை ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றினார்கள். இந்த முறை என்ன கூறி தமிழ் மக்களை ஏமாற்றப் போகிறார்கள்? சரியான பதில் தரும் நபருக்கு (உண்மையாகவே) எனது நூல் ஒன்று பரிசாக தரப்படும். கீழே உங்கள் பதில்களை பகிருங்கள். Image may contain: 3 people, people sitting

இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்நினைவு தினமாகும்.( 05.03.1953)

இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்நினைவு தினமாகும்.( 05.03.1953) தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள். மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும் பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும் உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது. பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி. தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. (முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது. ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் அவர்களும் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர். ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது. Image may contain: 1 person

தேர்தலில் போட்டியிட ஏன் பலர் முன்வருகின்றனர்?

•தேர்தலில் போட்டியிட ஏன் பலர் முன்வருகின்றனர்? தேர்தலில் போட்டியிட முன்வரும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வருவதாகவே கூறுகின்றனர். போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த சேவையோ அல்லது அர்ப்பணிப்போ செய்யாமல் இருந்தவர்கள் இப்போது ஏன் முன்வருகின்றனர்? ஏனெனில் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் சலுகைகளுமே காரணமாகும். இதோ ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் சம்பள விபரம், salary -54,485 Rs fuel -30,000 Rs transport-10,000 Rs Entertainment- 10,000 Rs mobile phone -2000 Rs meeting each -500Rs Current bill - free Land line phone - free train ticket first class free Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons) மற்றும் Secretary Vehicle Quarters Computers Bodyguards ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா. ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே. எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா இந்தளவு சம்பளம் பெறும் உறுப்பினர் பாராளுமன்றில் செய்வது, குறட்டை விட்டு தூங்குவது கெட்ட வாhத்தைகளால் திட்டுவது சண்டை பிடிப்பது, பேப்பர் ராக்கட் விடுவது மிளகாய் தூள் வீசுவது அப்புறம் மதியம் பாராளுமன்ற கண்டீனில் மலிவு விலையில் சாப்பாடு. கொழும்பில் சொகுசு பங்களா, சொகுசு வாகனம், சிங்கள பொலிஸ் பாதுகாப்பு சொகுசு வாகன பெர்மிட்டை விற்று 5 கோடி ரூபா சுளையாக எடுக்கலாம். உதவியாளர், சாரதி, அலுவலக வாடகை எல்லாம் தம் உறவினர்களுக்கு கொடுத்து அதில் இருந்தும் காசு பார்க்கலாம். 5 வருடம் பதவி காலம் முடிய பென்சன் பெறலாம். இதைவிட செம்புகளிடமிருந்து “போராளி” “வாழும் வீரர்” போன்ற பட்டங்கள் பெறலாம். இத்தனைக்குமாகவே இவர்கள் முன்வருகின்றனர். இவை இல்லை என்றால் இதில் ஒருவர்கூட முன்வர மாட்டார்கள். குறிப்பு - பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம் - தோழர் லெனின் No photo description available. Image may contain: 1 person

•பேராசிரியர் அன்பழகன் காலமானார்!

•பேராசிரியர் அன்பழகன் காலமானார்! 1983ல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் “தமிழீழம் ஏன் அவசியம்?” என்னும் தலைப்பில் திமுக தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் உரையாற்றியிருந்தார். அவர் சுமார் 3 மணி நேரம் இது குறித்து உரையாற்றியிருந்தார். இந்த உரையை பிரசுரமாக அச்சிட்டு திமுக வினர் பின்னர் விநியோகித்து வந்தனர். நான் அறிந்தவரையில் ஈழத்து தலைவர்கள்கூட தமிழீழம் ஏன் அவசியம் என்று இத்தனை மணி நேரம் எங்குமே உரையாற்றியதில்லை. கலைஞர் கருணாநிதியால் மதுரையில் நடத்தப்பட்ட தமிழீழ ஆதரவு (டெசோ) மாநாட்டிலும் பேராசிரியர் அன்பழகன் முக்கிய பங்கு ஆற்றினார். அதன் பின்னர் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராகியதும் தமிழீழத்தை கைவிட்டது யாவரும் அறிந்ததே. அவர் தமிழீழத்தை மட்டும் கைவிடவில்லை. கூடவே பேராசிரியர் அன்பழகன் தமிழீழம் ஏன் அவசியம் என்று பேசிய உரைப் பிரசுரத்தையும் கைவிட்டு விட்டார். பேராசிரியர் அன்பழகன் இறுதிவரை திமக கட்சிக்கும் அதன் தலைவர் கருணாநிதிக்கும் விசுவாசமாக இருந்தார். ஆனால் தான்கூறிய தமிழீழத்திற்கு விசுவாசமாக இருக்கவில்லை. தன் தமிழ் இனத்திற்கும் விசுவாசமாக இருக்கவில்லை. குறிப்பு - பேராசிரியர் அன்பழகனின் “தமிழீழம் ஏன் அவசியம்?” பிரசுரம் யாரிடமாவது இருந்தால் எனக்கு தந்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். Image may contain: 1 person, glasses

•சம்பந்தர் ஐயாவுக்கு மாற்று யார்?

•சம்பந்தர் ஐயாவுக்கு மாற்று யார்? சம்பந்தர் ஐயாவுக்கு வயசாயிடுச்சு. எனவே தலைமையை சுமந்திரனுக்கு வழங்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியில் சிலர் கூறுகின்றனர். சம்பந்தர் ஐயாவும் சுமந்திரனும் தமிழ் தேசியத்திற்கு நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. எனவே இவர்களுக்கு மாற்றாக முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கொண்டு வரவேண்டும் என இன்னும் சிலர் கூறுகின்றனர். விக்கினேஸ்வரன் சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் சேர்ந்து இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறார். எனவே கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மாற்றாக முன் நிறுத்த வேண்டும் என வேறு சிலர் கூறுகின்றனர். இவர்கள் எல்லோரும் சம்பந்தர் ஐயாவுக்கு மாற்றாக வெவ்வேறு நபர்களை முன் நிறுத்தினாலும் சம்பந்தர் ஐயாவுக்கு மாற்று வேண்டும் என்பதில் ஒரே கருத்தை கொண்டிருக்கின்றனர். அதாவது சம்பந்தர் ஐயாவினால் தமிழருக்குரிய தீர்வு பெற்றுக் கொடுக்க முடியவில்லை. என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கின்றனர். ஆனால் சம்பந்தர் ஐயாவினால் தீர்வு பெற முடியாமைக்கு காரணம் அவர் பயணம் செய்த தேர்தல் பாதையே என்பதை புரிந்து கொள்ள இந்த சிலர் தவறிவிட்டனர். தேர்தல் பாதையில் பயணம் செய்த தந்தை செல்வாவினால் தீர்வு பெற முடியவில்லை. தேர்தல் பாதையில் பயணம் செய்த அமிர்தலிங்கத்தால் தீர்வு பெற முடியவில்லை. தேர்தல் பாதையில் பயணித்த சம்பந்தா ஐயாவினால் தீர்வு பெற முடியவில்லை. எனவே சம்பந்தா ஐயாவுக்கு மாற்றாக விக்கினேஸ்வரனோ அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ வந்தாலும் அவர்களாலும் தேர்தல் பாதையில் சென்று தீர்வு பெற முடியாது என்பதே உண்மை. ஆதலால் தேர்தல் பாதையில் பயணிக்கும் சம்பந்தா ஐயாவுக்கு சரியான மாற்று என்பது ஆயுதப் போராட்டப்பாதையே ஆகும். எனவே எமக்கு தேவை முக மாற்றம் இல்லை. மாறாக தேவை கருத்து மாற்றமே! Image may contain: 2 people Image may contain: Shan Naranderan, beard and close-up Image may contain: 1 person, suit Image may contain: 1 person

இருப்பது தமிழ்நாட்டில்

இருப்பது தமிழ்நாட்டில் தின்பது தமிழன் போடும் சோற்றை துக்ளக் இதழை விற்றுப் பிழைப்பது தமிழில் ஆனால் விசுவாசம் காட்டுவது சமஸ்கிருத மொழிக்கு. பத்தாயிரம் கோடிக்கு மேல் சொற்கள் சமஸ்கிருத்தில் இருக்கிறது என்றால் துக்ளக் இதழை சமஸ்கிருத மொழில் அடித்து விற்க வேண்டியதுதானே? ஆனால் அப்படி செய்யமாட்டார். ஏனெனில் அவர் தமிழனை இளிச்சவாயன் என்று நினைக்கிறார். இதுவே இன்னொரு மாநிலமாக இருந்தால் இந்நேரம் இவரை உதைத்து விரட்டியிருப்பார்கள். Image may contain: 1 person, sitting, possible text that says 'சமஸ்கிருதத்தில் பத்தாயிரம் கோடிக்கு மேல் சொற்கள் உள்ளன- துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி'

தமிழரசுக்கட்சி வேட்பாளராவதற்கு

•தமிழரசுக்கட்சி வேட்பாளராவதற்கு “சுமந்திரனுக்கு வேண்டப்பட்டவர்” என்ற தகுதி மட்டும் போதுமா? நிருபர் - மேடம்! வாழ்த்துக்கள் . தமிழரசுக்கட்சி வேட்பாளரானதற்கு அம்பிகா மேடம்- ஆம். நன்றி. மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நிருபர் - மேடம்! நீங்கள் வெற்றி பெற்றால் கரவெட்டிக்கு என்ன செய்வீர்கள்? அம்பிகா மேடம் - கரவெட்டியா? அது எங்கே இருக்கிறது? நிருபர்- என்ன மேடம், யாழ் மாவட்டத்தில் போட்டியிடுகிறீர்கள். கரவெட்டி தெரியாது என்கிறீர்கள். அதிகளவு போராளிகளை போராட்டத்திற்கு வழங்கிய ஊர் அல்லவா அது. சரி பரவாயில்லை மில்லரை அறிந்திருப்பீர்கள் அல்லவா? அம்பிகா மேடம் - மில்லரா? அது யார்? எனக்கு சுமந்திரன் சேரை மட்டும்தான் தெரியும். நிருபர் - 2009ல் இனப்படுகொலை நடக்கும்போது மௌனமாக இருந்தீர்கள். அதன்பின்பும் இதுவரை மௌனமாகவே இருந்தீர்கள். இப்போது ஏன் திடீர் என்று ராஜினாமா செய்தீர்கள்? அம்பிகா மேடம்- இப்போதுதானே சுமந்திரன் சேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து தேர்தலில் போட்டியிடும்படி என்னிடம் கேட்டிருக்கிறார். நிருபர் - சரி. பரவாயில்லை. தேர்தலில் வென்றால் யாழ் மாவட்டத்தில் இருந்து மக்களுக்கு சேவை செய்வீர்களா? அம்பிகா மேடம் - ஏன் யாழ்ப்;பாணத்தில் இருக்க வேண்டும்? சுமந்திரன் குடத்தனையில் இருந்தா சேவை செய்கிறார்? சம்பந்தர் திருகோணமலையில் இருந்தா சேவை செய்கிறார்? நிருபர் - ஓ! அப்படியா? சரி பரவாயில்லை மேடம். இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? ஏன் உங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்? அம்பிகா மேடம்- நான் சுமந்திரன் சேருக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவள். இந்த ஒரு தகுதி போதாதா எனக்கு வாய்ப்பு தருவதற்கு. . குறிப்பு - தந்தை செல்வா மற்றும் அமிர்தலிங்கம் காலத்தில் தமிழரசுக்கட்சியில் வாய்ப்பு வழங்கும்போது குறிப்பிட்ட நபர் தமிழ் மக்களுக்கு என்ன சேவை செய்துள்ளார் என்று பார்ப்பதுண்டு. ஆனால் இம்முறை வேட்பாளராவதற்கு சுமந்திரனுக்கு வேண்டியவர் என்ற தகுதி மட்டுமே பார்க்கப்படுகிறது. Image may contain: 1 person

பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும்

பெண்களுக்கு முழு சுதந்திரம் வாங்கிக் கொடுக்காத வரையிலும்,பாட்டாளி வர்க்கம் முழு விடுதலையை அடைய முடியாது." - லெனின் ஒரு முதலாளித்துவ குடியரசில் எவ்வளவு ஜனநாயகம் உள்ள நாடாக இருந்த போதிலும் தனிச் சொத்துரிமை இருக்கின்ற நாடான போதிலும் உலகத்தின் எந்தப் பகுதியிலும் அதிகமான முன்னேற்றம் அடைந்த நாட்டில் கூட பெண்களுக்கு ஆண்களைப் போல் முழு அளவுக்கு சமமான உரிமைகள் இல்லை. முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் பற்றி அலங்காரமான சொற்றொடர்களும் கம்பீரமான வார்த்தைகளும் மிதமிஞ்சிய வாக்குறுதிகளும் ஆர்பாட்டங்களுமாக ஒலிக்கும் கோஷங்களும் உள்ள ஜனநாயகமாகும். ஆனால் பெண்களின் உண்மை நிலையை அதாவது சமத்துவமும் சுதந்திரமும் இல்லாது இருப்பதை மூடி மறைக்கிறது. ஆனால் ´சோலிஸ்ட் ஜனநாயகம்´ என்பது புரட்டான பகட்டான போலியான வார்த்தைகளை அலட்சியப்படுத்துகிறது... ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குவோர்களுக்கும் சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் என்பது இல்லை. அப்படி ஏற்படவும் முடியாது. ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பூர்வமான தனி உரிமைகளால் பெண்குலம் பாதிக்கப்படும் வரை மூலதனத்திலிருந்து தொழிலாளிக்கு விடுதலை கிடைக்காத வரை முதலாளி நில உரிமையாளர் வணிகர் ஆகியோரின் அதிகாரத்தில் இருந்து உழைக்கும் விவசாயிக்கு விடுதலை கிடைக்காத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது கிடையவே கிடையாது. "ஒடுக்கப்பட்ட பெண்ணினத்துக்கு சுதந்திரமும், சமத்துவமும்...." "தொழிலாளிகளுக்கும், உழைக்கும் விவசாயிகளுக்கும் சுதந்திரமும், சமத்துவமும்..." "ஒடுக்குபவர்களுக்கு எதிராக, முதலாளிகளுக்கு எதிராக, ஏழை விவசாயிகளைச் சுரண்டும் பணக்கார விவசாய உடைமையாளர்களுக்கு எதிராகப் போராட்டம்..." இதுவே நமது போர் முழக்கம்! இதுவே நமது பாட்டாளி வர்க்க உண்மை!!. Image may contain: text

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு.

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு. ஒரு கை போனாலும் மறு கையால் துப்பாக்கி ஏந்தி போராடவும் செய்தார்கள் ஒரு கையால் குடை பிடித்துக்கொண்டு மறு கையால் ஒழுகும் கொட்டிலில் பரீட்சை எழுதினார்கள் மாணவர்களை பதுங்குழியில் இருத்திவிட்டு தாய்க் கோழிபோல் காத்து நின்றார்கள். இவர்களால் மண் பெருமை அடைகிறதா அல்லது மண் இவர்களுக்கு பெருமை சேர்க்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இவர்கள் முறத்தால் புலியை விரட்டியதாக கூறும் புறநானூற்றுக் கதைகள் எல்லாம் உண்மைதானோ என்று இப்பொது நினைக்க தோன்றுகிறது. எனது கவலை எல்லாம், என் இனத்து பெண்களின் இந்த அற்புதமான கதைகளை உலகிற்கு சொல்ல ஒரு சிறந்த எழுத்தாளர் இல்லையே? இவர்களது கதையை ஒரு படமாக தர ஒரு சிறந்த இயக்குனர் இல்லையே? இவர்களது கதையை காவியமாக பாட ஒரு நல்ல கவிஞர் இல்லையே ? என்பதுதான். ஆனாலும் அவர்கள் தங்கள் வரலாற்றை தாமே படைப்பார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆதிகாலத்தில் பெண் தலைமையே இருந்ததாக சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காலப் போக்கில் பெண் எப்படி அடிமையானாள் அல்லது ஆணாதிக்கம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி இங்கு நான் உரையாடப் போவதில்லை. ஆனால் வெகுவிரைவில் அனைத்து அடிமைத்தனத்தையும் உடைத்து அவர்கள் தமது வரலாற்றை படைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்குரிய அனைத்து தகுதிகளும் எமது தமிழ இன பெண்களுக்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. (மீள் பதிவு) Image may contain: 2 people, people standing and outdoor Image may contain: one or more people Image may contain: one or more people Image may contain: 1 person, standing and outdoor

பெண் விடுதலை இன்றேல் மண் விடுதலை இல்லை

பெண் விடுதலை இன்றேல் மண் விடுதலை இல்லை மண் விடுதலை இன்றேல் இன விடுதலை இல்லை இன விடுதலை இன்றேல் தமிழ் இனத்திற்கு விடிவே இல்லை. இனியாவது பெண் விடுதலையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வோம்! Image may contain: one or more people, people standing, outdoor and nature

தமிழரசுக்கட்சி தகுதியில்லாவர்களுக்கு

•தமிழரசுக்கட்சி தகுதியில்லாவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதன் காரணம் என்ன? தமிரசுக்கட்சியில் எற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள்தான் தங்களுடன் சேர்ந்து போட்டியிடப்போகும் சக வேட்பாளர்களை தீர்மானிக்கிறார்கள். எனவே அவர்கள் ஒருபோதும் தங்கள் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் செல்வாக்குள்ள வேட்பாளர்களை ஒருபோதும் தெரிவு செய்ய மாட்டார்கள். அதாவது தங்களைவிட சிறந்த ஒரு வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்து தங்கள் தோல்வியை தாங்களே தீர்மானித்துக்கொள்ள மாட்டார்கள். அதனால்தான் கடந்த தேர்தலில் வெறும் நாற்பது வோட்டு மட்டுமே பெற்ற நளினி ரத்தினராசாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மை. ஆனால் இதை அவர்கள் ஒத்தக்கொள்ள மாட்டார்கள். மாறாக பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம் என மக்களை ஏமாற்றுவார்கள். Image may contain: 2 people, including Devananda Chunnakam, glasses

கீழ்வரும் நிபந்தனைகளுக்கு எந்தவொரு வேட்பாளராவது சம்மதிப்பாரா?

•கீழ்வரும் நிபந்தனைகளுக்கு எந்தவொரு வேட்பாளராவது சம்மதிப்பாரா? (1) தேர்தலில் வெற்றி பெற்றால் பாராளுமன்ற நாட்கள் தவிர மற்ற நாட்களில் வெற்றி பெற்ற தொகுதியில் தங்குவேன். வாரத்தில் ஒருநாளாவது மக்கள் குறைகளை கேட்பேன். (2) தேர்தலில் வெற்றி பெற்றால் சொகுசு வாகனம் வாங்க மாட்டேன். வாங்கினாலும் அதை விற்று வரும் 7 கோடி ரூபா பணத்தையும் அப்படியே மக்களுக்கு வழங்குவேன். (3) சிங்கள பொலிஸ் பாதுகாப்பு பெற்றுக் கொள்ள மாட்டேன். பெற்றுக் கொண்டாலும் மக்கள் மத்தியில் பொலிஸ் காவலுடன் வர மாட்டேன். (4) வெற்றி பெற்றபின் கட்சி மாறி அமைச்சுப் பதவி பெற மாட்டேன். அதற்காக 50 கோடி ரூபா பணமும் மகிந்த கும்பலிடம் இருந்து பெற மாட்டேன். (5) சாரதி, செயலாளர், இணைப்பாளர் போன்ற பதவிகளுக்கு என் உறவினர்களை நியமித்து அதில் இருந்தும் பணம் சம்பாதிக்க மாட்டேன். மாறாக முன்னாள் போராளிகளுக்கு இப் பதவிகளை வழங்குவேன். (6) என் பெயரிலோ அல்லது பினாமி பெயர்களிலோ சாராய பெர்மிட் வாங்க மாட்டேன். வன்னியில் பல ஏக்கர் நிலங்களை சுருட்ட மாட்டேன். (7) லஞ்சம் பெற மாட்டேன். ஊழல் செய்ய மாட்டேன். பதவி ஆரம்பிக்கும்போதும் பதவி முடியும்போதும் எனது குடும்ப சொத்து விபரங்களை பகிரங்மாக மக்கள் முன் தெரிவிப்பேன். (8) தேர்தல் செலவுக்காக இந்திய தூதரிடம் பணம் பெற மாட்டேன். யாரிடமாவது பணம் பெற்றாலும் அதற்குரிய கணக்கு வழங்குகளை பகிரங்கமாக தெரிவிப்பேன். (9) மக்கள் எங்கு மருத்துவ சிகிச்சை பெறுகிறார்களோ அதே மருத்துவமனையிலேதான் நானும் சிகிச்சை பெறுவேன். மக்கள் பணத்தில் சிங்ப்பூரோ அல்லது டில்லியோ சென்று சிகிச்சை பெற மாட்டேன். (10) மற்ற தொழில்கள் போன்று பென்சன் வயது வரும்போது ஒதுங்கி இளையவர்களுக்கு வழி விடுவேன். சாகும்வரை பதவியில் இருப்பேன் என்று அடம் பிடிக்க மாட்டேன். குறைந்த பட்சம் இவ் நிபந்தனைகளுக்கு சம்மதிக்கும் வேட்பாரளர் ஒருவராவது இருக்கிறாரா? தமிழ் மக்களே! வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் கேளுங்கள். குறிப்பு - எமது வேட்பாளர்களை பன்றிகளுடன் ஒப்பிட்மைக்காக தேவையானால் பன்றிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். Image may contain: outdoor

நம்புங்கள், 2020ல் இந்தியா வல்லரசு ?

•நம்புங்கள், 2020ல் இந்தியா வல்லரசு ? எல்லாவற்றையும்விட கடவுள் உயர்ந்தவர் என்றார்கள். ஆனால் இப்போது கடவுளைவிட கொரோனா வைரஸ் உயர்ந்து விட்டது. ஆம். கொரோனா வைரஸ் பயத்தில் பாப்பரசர் தனது விஜயங்களை நிறுத்தியுள்ளார். சவூ+தி ஆரேபியாவில் பள்ளிவாசலில் தொழுகை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துமத பண்டிகையான ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களை நிறுத்தியுள்ளார்கள். மாட்டு மூத்திரமும் மாட்டு சாணியும் கொரோனாவை விரட்டும் என்று கூறிய சங்கிகள் இப்போது ஹோலிப் பண்டிகை கொண்டாட்டங்களையே நிறுத்திவிட்டனர். ஏன் மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு கொண்டாட வேண்டியதுதானே? Image may contain: text

இவர்கள் சுமந்திரனுக்கு வேண்டியவர்களாக இருந்திருந்தால்

இவர்கள் சுமந்திரனுக்கு வேண்டியவர்களாக இருந்திருந்தால் இந் நேரம் மகிளிர் தின கொண்டாட்டத்திற்கு கொழும்பில் இருந்து அழைத்து வரப்பட்டிருப்பார்கள். அதுமட்டுமல்ல தேர்தலில் போட்டியிட தமிழரசுக்கட்சி சார்பில் வாய்ப்பும் அளிக்கப்பட்டிருக்கும். ஆனால் இவர்கள் தமிழ் மக்களுக்கு வேண்டப்பட்டவர்களாக இருந்தமையினால் அம் மக்களுக்காக போராடி இறந்து விட்டார்கள். இதுகூடப் பரவாயில்லை. ஆனால் இன்றுவரை இவர்களையும் இவர்களது போராட்டத்தையும் பயங்கரவாதம் என்று கூறி இகழ்ந்து வருபவர்களுக்கு அல்லவா வாய்ப்பு வழங்கப்படுகிறது. என்னே கொடுமை இது? Image may contain: 2 people, people standing

இது தவறு !

•இது தவறு ! இவருடைய கருத்துகள் தமிழின விடுதலைக்கு உதவுவதாக இல்லை. மாறாக எதிரிக்கு உதவுவதாகவே இருக்கிறது. எனவே இவருடைய துரோக அரசியலை அம்பலப்படுத்த வேண்டியது தமிழின விடுதலையை முன்னெடுப்பவர்களின் கடமையாகும். ஆனால் அதற்காக இவரை தரக்குறைவாகவோ அல்லது அநாகரிகமாகவோ விமர்சிப்பது தவறாகும். இவருக்கோ அல்லது இவரை முன்னிறுத்தும் சுமந்திரனுக்கோ பதில் அளிக்க முடியாத அளவிற்கு தமிழ்தேசியம் வறுமை யடைந்துவிடவில்லை. எனவே தயவு செய்து ஆக்கபூர்வமான உரையாடலை முன்னெடுங்கள். Image may contain: 2 people, text

•வன்மையான கண்டனங்கள்!

•வன்மையான கண்டனங்கள்! நேற்றிரவு நீர்கொழும்பில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலுக்குள் சிங்களக் காடையர் கும்பலொன்று நுழைந்து அங்கு பலாத்காரமாக அமர்ந்து மதுபானம் அருந்த முற்பட்டபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவரை கொலை செய்துள்ளனர். கெக்கிராவ, கணேவள்பொளயைச் சேர்ந்த 33 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான அப்துல் கபூர் அப்துல் அஸீஸ் என்பவர் அநியாயமாக வெட்டப்பட்டு ஸ்தலத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த ஹோட்டலில் வேலைசெய்து வந்தவர். சம்பவத்தில் நேரடியாகத் தலையிடாமல் இருந்துள்ள நிலையிலும் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஹோட்டல் உரிமையாளர் உட்பட இன்னும் இருவர் மருத்துவமனையில் உள்ளனர். இதுவே ஒரு சிங்கள கடையில் முஸ்லிம் காடையர் புகுந்து ஒரு சிங்கள இளைஞரைக் கொன்றிருந்தால் இந்நேரம் நீர்கொழும்பே பற்றி எரிந்திருக்கும். தெருவோரத்தில் இருக்கும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வாழைப்பழக்கடையைக்கூட எரித்திருப்பார்கள். ஆனால் இறந்திருப்பது முஸ்லிம் இளைஞர் என்பதால் அரசு மௌனமாக இருக்கிறது. பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர். முஸ்லிம் தலைவர்கள்கூட எந்தக்கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு பதவி பெறலாம் என்பதில்தான் அக்கறையாக இருக்கிறார்களேயொழிய தமது இன மக்களுக்கு ஒரு பாதுகாப்பான நிலையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் அக்கறை அற்று இருக்கின்றனர். இப்போது இருக்கும் கோத்தபாயா அரசு தனது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை அப்பட்டமாகவே காட்டத் தொடங்கிவிட்டது. இதனை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றினைந்து எதிர்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். Image may contain: one or more people

மக்கள் போராட துணிந்துவிட்டால்

மக்கள் போராட துணிந்துவிட்டால் வானில் பறக்கும் விமானத்தைக்கூட கல்லால் அடித்து வீழ்த்துவார்கள். அதுவும் பெண்கள் துணிந்துவிட்டால் கையில் எது கிடைத்தாலும் அதை ஆயுதமாக்கி அதிசயம் நிகழ்த்திக் காட்டுவார்கள். இவர்கள் மத்தியில், இது வன்முறை என்று கூற நளினி ரத்தினராசா இல்லை துரோகம் செய்ய சுத்துமாத்து சுமந்திரன்கள் இல்லை தேர்தல் பாதையைக் காட்ட சம்பந்தர் ஐயாக்கள் இல்லை அதனால்தான் இவர்களால் இப்படி போராட முடிகிறது. அதனால்தான் இவர்களால் இப்படி அற்புதம் நிகழ்த்த முடிகிறது. ஏனெனில், ஓடாத மானும் போராடாத இனமும் உலகில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்பதை இவர்கள் நன்கு அறிந்துள்ளனர். Image may contain: 1 person, hat, sky and outdoor

•இந்தியாவை ஒரு இந்தியர்தான் ஆள வேண்டும்

•இந்தியாவை ஒரு இந்தியர்தான் ஆள வேண்டும் என்பது சரியென்றால் தமிழ்நாட்டை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும் என்பது எப்படி தவறாகும்? சோனியாகாந்தி தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அவரது எம்.பி களின் ஆதரவோடு அவர் பிரதமர் பதவி ஏற்க முனைந்தார். ஆனால் அப்போது பாஜக கட்சி அவரை பிரதமராக விடமாட்டோம் என போராட்டம் செய்து தடுத்தது. ஏன் என்று கேட்டதற்கு சோனியா காந்தி இத்தாலியில் பிறந்தவர் என்றும் இந்தியாவை ஒரு இந்தியர்தான் ஆள வேண்டும் என்றார்கள். சோனியாகாந்தியும் வேறு வழியின்றி மன்மோகன் சிங் அவர்களை பிரதமராக தேர்தெடுத்தார். இப்போது தமிழ்நாட்டை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் இந்தியாவை ஒரு இந்தியர்தான் ஆள வேண்டும் என்பதை சரி என்றவர்கள் தமிழ்நாட்டை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும் என்பதை தவறு என்கிறார்கள். ஆனால் மராட்டிய நடிகரான ரஜனி அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாட்டேன் என்று கூறியுள்ளார். மராட்டிய நடிகருக்கு எமது பாராட்டுகள். Image may contain: one or more people, people sitting and beard

பூனையும் எலியும் ஓடும்போது

பூனையும் எலியும் ஓடும்போது பெரும்பாலும் எலிகளே வெற்றி பெறுகின்றன. ஏனெனில், பூனை உணவுக்காக ஓடுகிறது எலி உயிருக்காக ஓடுகிறது. அதாவது, தேவையைவிட குறிக்கோளே அதிக திறமையை வெளிப்படுத்தும். அதேபோன்று, அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல அது தற்காப்பு எனப்படும். பெண் போராளிகளின் போராட்டம் வன்முறை இல்லை என்பதை உண்மையான ஒரு தமிழ் பெண்ணால் உணர்ந்துகொள்ள முடியும் தமிழ் பெண் போல் இருக்கும் நளினி ரத்தினராசாக்களினால் உணர்ந்து கொள்ள முடியாதது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. Image may contain: 8 people, people standing Image may contain: 1 person

ஓடும் பஸ்ஸில் நாங்கள் தூங்கினால்

ஓடும் பஸ்ஸில் நாங்கள் தூங்கினால் அது சொகுசுப் பயணம் அதுவே டிறைவர் தூங்கினால் அது இறுதிப் பயணம் ஒரு இனத்தின் போராட்ட பயணத்தில் அதன் தலைவர் தூங்கினால் அது அந்த இனத்தின் அழிவுப் பயணம். நீண்ட உறக்கத்தில் இருக்கும் எம் தலைவர் எப்போது விழித் தெழுவார்? தேர்தலுக்காவது உறக்கத்தை கலைப்பாரா? வழக்கம்போல் “ஒரு வருடத்தில் தீர்வு” வாக்குறுதி தருவாரா? Image may contain: 1 person

செய்தி - ரணில் எங்களை ஏமாற்றிவிட்டார் - சுமந்திரன்

செய்தி - ரணில் எங்களை ஏமாற்றிவிட்டார் - சுமந்திரன் செல்லக்கிளி புருஷன் செவ்வாய்க்கிழமை செத்திட்டானாம் வீடு வெறிச்சோடிக் கிடக்கென்று வெள்ளிக்கிழமை உட்கார்ந்து அழுதாளாம் என்ட கதையாய் எல்லோ இருக்கு சுமந்திரன்ட கதை. நாம வோட்டு போட்டது கூட்டமைப்பிற்கு ஆனால் இவனுகள் இத்தனை நாளும் தேனிலவு கொண்டாடியது ரணிலுடன் இப்ப வந்து ரணில் ஏமாத்திப்புட்டார் என்டுறாங்கள். சுமந்திரன் மாதிரி ஆட்கள் வருவார்கள் என்று பட்டுக்கோட்டையார் அன்றே பாடிய வரிகள் இவை. ஆறறிவில் ஓரறிவு அவுட்டு இருக்கும் ஐந்தறிவு நிலைக்குமான்னா அதுவும்கூட டவுட்டு. ஜனாதிபதி வழக்கறிஞரே! நீதிபதி வழங்குவது தீர்ப்பு மக்கள்தான் நீதி வழங்குவார்கள். அதை விரைவில் வழங்குவார்கள்! Image may contain: 2 people

ரணில் உங்களை ஏமாற்றிவிட்டார் - சுமந்திரன் மனைவி.

ரணில் உங்களை ஏமாற்றிவிட்டார் - சுமந்திரன் மனைவி. சுமந்திரனின் துரோகத்தை நாம் விமர்சித்தபோது புலம்பெயர்ந்தவர்கள் விமர்சிக்க அருகதை இல்லை என்றார்கள். அதாவது சுமந்திரன் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்றும் அவரை தெரிவு செய்த மக்களுக்கே விமர்சிக்கும் அருகதை உண்டு என்றார்கள். அதன்பின் காணாமல்போன உறவுகளின் தாயார் செருப்பு கொண்டு விரட்டியபோதும் அவரை புலம்பெயர்ந்த சிலர் பணம் கொடுத்து தூண்டிவிட்டதாக கூறினார்கள். இப்போது தமிழரசுக்கட்சியின் மகிளிர் பிரிவு தலைவியே சுமந்திரன் இருக்கும்வரை கடவுளால்கூட தமிழ் மக்களை காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளார். தனக்கு சீட் தராத கோபத்தில் இவ்வாறு இவர் கூறுகின்றார் என்று சுமந்திரனின் விசுவாசிகள் கூறக்கூடும். ஆனால் “உங்களை ரணில் நல்லாய் ஏமாற்றிவிட்டார்” என்று மனைவியே தன்னிடம் கூறியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். இனி இதற்கு சுமந்திரனின் விசுவாசிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? சுமந்திரனின் மனைவிக்கு பணம் கொடுத்து தூண்டிவிட்டதாக தயவு செய்து வழக்கம்போல் எழுதிடவேண்டாம் என்று சுமந்திரன் விசுவாசிகளிடம் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் சுமந்திரன் மனைவியுடன் எமக்கு எந்த தொடர்பும் இல்லை என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பு - இதுவரை நான் சுமந்திரனின் குடும்பத்தவர்களை விமர்சித்ததில்லை. இப்போது சுமந்திரனே அதுவும் பொதுவெளியில் பகிரங்கமாக கூறியதால்தான் விமர்சித்துள்ளேன். அவருடைய மனைவியின் படம் இருந்தும்கூட அதனை நான் பயன்படுத்தவில்லை. Image may contain: 2 people, people sitting

மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள்

• மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள் மார்ச் 14, மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட நாள் என்று அவருடைய நண்பர் எங்கெல்ஸ் அவர்கள் உலகிற்கு அறிவித்தார். கால் மாக்ஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாக்சியமானது மாபெரும் அக்டோபர் புரட்சியினூடாக லெனிசமாக வளர்ச்சி கண்டது. பின்னர் மாபெரும் சீனப் புரட்சியினூடாக மாவோ சிந்தனையாக விரிபு பெற்றது. இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மாக்சியம் வளம் பெற்றது. இன்றைய உலகமயமாதல் சூழலிலே மாக்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியி;ன் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச்செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர் நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக் கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு. இன்றைய சூழலில் மாக்சியம் சோசலிசத்திற்கான தேவைகள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளன. மாக்சியம் படிக்கப்பட வேண்டியதாயும் சோசலிசத்திற்கான பல்வேறு வகைப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியனவாகவும் உள்ளன. Image may contain: தென்னரசு தென்னரசு

•சீ வெட்கம்!

•சீ வெட்கம்! தன் இனத்திற்காக ஆயிரக்கணக்கானவர்களை மாவீரர்களாக அர்ப்பணித்த இனம், இன்று தன் இனத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்று போராடுகிறது. ஒரு மனிதன் நோயுற்றால் அவன் யாராக இருந்தாலும் அவனுக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என்பது மனிதாபிமானம். ஆனால் நோயாளி ஒரு தமிழன் என்றும் தெரிந்தும்கூட அவனுக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என்றால் அதன் அர்த்தம் என்ன? இந்தளவு குறுகிய குரூர மனநிலைக்கு என் தமிழ் இனம் சென்றுவிட்டதா? இது தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டிய தலைவர்கள்கூட தேர்தல் நலனை கருத்தில் கொண்டு தூண்டி விடுகிறார்கள். என்னே கொடுமை இது? Image may contain: one or more people and outdoor

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்!

•வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்! எனது பிறந்தநாளை முன்னிட்டு, வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவயதில் அர்ச்சனை செய்த விபூதியை தாயார் என் நெற்றியில் பூசும்போது அன்று என் பிறந்தநாள் என்பதை தெரிந்து கொள்வேன். அதன் பின்னர் பெரியவனான பின்பு பிறந்த நாள் பற்றி அக்கறை கொள்வதில்லை. வாழ்த்துவதும் வாழ்த்தப்படுவதும் மகிழ்வுக்குரியவை. பெரு மகிழ்வை தந்த அனைவருக்கும் என் நன்றிகள். உங்கள் வாழ்த்துகள் மீண்டும் மீண்டும் என் தாயாரை நினைவூட்டுகின்றன Image may contain: 1 person, eating

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! தோழரே!!!!சகல சௌபாக்கியங்களுடனும்!நீடூழி நீங்கள் வாழவேண்டும்!!!!என... இறைவனிடம் வேண்டுகிறேன்!!! என் மனம்நிறைந்த வாழ்த்துகள்!தோழரே!!💐😍😍😍😍 தமிழினத்திற்கு எதிராக ஒன்று திரண்டு விட்ட பல வாறான சதிகளாலும்,எதிரிகளின் சூழ்ச்சிகளினால் எம்மினத்தினிடையே ஏற்பட்ட உள் முரண்களாலும்,”ஈழத்தமிழர்கள்” எனும் எம் இனம்!21ம் நூற்றாண்டில் சர்வ உலகங்களின் சதிகொண்டு அழிக்கப்பட்டோம்!! உலக நாடெங்கும் “அகதிகள்” எனும் “மனவலியை” தரும் “முத்திரைகளோடு” வலம் வருகின்றோம்.😔 ஆனபோதும்........ நாடுகள்தான் கடந்த போதும் நமக்குள்ளே இருக்கும் ஓர் “தாய்மண்ணை” விட்டகன்ற தவிப்பு,ஆற்றொணாத துயர்,எமக்குள்ளே இருக்கும் ஓர் பிடிவாதம்,நம்பிக்கை,மனவலிமை,துணிவு,விழ விழ எழுவோம்!!!! எனும் ஓர் உந்துதலின் வேகம்,அடக்குமுறையின் ஆற்றாமை அனைத்தையும் உள்ளடக்கி நம்மில் சிலர்,”இனத்திற்கான” விடிவை ஏற்படுத்த வேண்டும்,அதற்கான விதைகளை விதைத்தே ஆக வேண்டும் என்ற “உடும்பு பிடி” போன்று “ஈழத்தவர்” “எழுத்துலகை” கட்டியாளும் சில முன்னோடிகளில்!!!! #நீங்களும் ஒருவர் என்பதில் #பெருமகிழ்ச்சி கொள்கிறேன் தோழரே!!!😍😍😍 திசைகள்தான் வேறான போதும் எம் “எண்ணங்கள்” ஒன்றுதான்!!! ஆறுகள் போய் “சங்கமிக்கும்” இடம் கடல்!!! போன்று நாமும் “இலைமறை காயாக” உங்களின் காலத்திலேயே வாழ்கிறோம் என்பதிலும் மட்டற்ற மகிழ்ச்சியே!!!! நம் ஈழ அழிப்பின் பின்னான காலத்தில் பல எழுத்துலகில் தங்களை ஜாம்பவான்கள் என காட்டிகொண்ட பலர் இருந்த இடமோ!! பதிந்த தடமோ!! தெரியாமல் ஒளிந்த கொண்ட #இவ்வேளையில்!!!! நீங்கள் எம் “#வடமராச்சிக்கு” (மற்றவர்கள் கோபம் கொள்ள வேண்டாம்) உரிய துணிவோடு இன்றுவரை களத்தில் கடந்தகால!நிகழ்கால!பல வரலாற்று உண்மைகளையும்,சான்றுகளையும் உரிய நேரங்களில் எடுத்தெடுத்து போட்டு எம்மினத்தினிடையே விழிப்புணர்வை!ஏற்படுத்துவது மட்டுமல்லாது,ஒரு பத்திரிகை துறைக்கே உரிய “நொதுமலாளராக” பாரபட்சம் பார்க்காது அனைத்து தரப்பினரையும்,”அறுத்து தொங்கவிடும்” உங்கள் எழுத்திற்கு “ஈடு இணை” இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். “ஈழத்தவர்” எழுத்துலகில் “ஈடுஇணையற்ற” ஓர் போராளியாக!!! உங்களை பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் கூட தோழரே!!! எம் இனம் இழந்து நிற்கும் அனைத்தையும் இணைத்து ஈடேற்றவாவது,இறைவன் உங்களுக்கு “நீண்ட ஆயுளையும்” “சௌபாக்கியத்தையும்” தரவேண்டும் என இறைவனிடம் வேண்டிகொண்டு,மீண்டும் என் உளம் நிறைந்த பிறந்ததின!!வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்!! #உங்களின் சேவைக்கு நன்றியும் தோழரே!!!🙏😍😍😍😍😍😍😍😍 Image may contain: 1 person, standing and outdoor

•தோழர் தமிழரசன் தாயார்!

•தோழர் தமிழரசன் தாயார்! இவர் தமிழ்நாடு விடுதலைக்காக ஆயுதம் எந்திப் போராடி வீர மரணம் அடைந்த தோழர் தமிழரசனின் தாயார். இவருக்கு வயது நூறுக்கு மேல் என்கிறார்கள். இரு நாட்களுக்கு முன்னர் புலவர் கலியபெருமாளின் மகன் அருள்நம்பியாரின் மகன் திருமண வரவேற்பில் கலந்துகொண்டுள்ளார். இவருக்கே பிறப்பு சான்றிதழ் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இவர் தான் ஒரு இந்தியர் என்பதை நிரூபிக்க தன் தாய் தந்தையரின் பிறப்பு சான்றிதழ் காட்ட வேண்டிய நிலையில் மோடியின் சட்டம் இருக்கிறது. கைபர் கணவாய் வழியே இந்தியாவுக்கு வந்தவர்கள் இப்போது மண்ணின் மைந்தர்களை நிரூபிக்கும்படி கேட்கும் நிலை வந்துள்ளது. இந்தியா என்பது இருநூறு வருடமாகத்தான் இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு என்பது இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக இருக்கிறது. அப்புறம் எதற்கு தமிழன் கைபர் கணவாய் வழியே வந்தவர்களுக்கு தன்னை நிரூபிக்க வேண்டும்? Image may contain: 1 person

•கடவுளைவிட கொரோனா வைரஸ் உயர்ந்ததா?

•கடவுளைவிட கொரோனா வைரஸ் உயர்ந்ததா? கடவுள் “எல்லாம் வல்லவர்” என்றார்கள் ஆனால் கொரோனா வைரஸ் அதைவிட உயர்தது என்பதை நிரூபித்து விட்டது. கொரோனா வைரஸ் க்கு பயந்து கனடா முருகன் ஆலயத்தை மூடியுள்ளார்கள். தமது கடவுள் முருகன் தன்னை நாடி வரும் பக்தர்களை கொரோனா வைரஸ்ஸிடமிருந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை கோயில் நிர்வாகிகளுக்கே இல்லை. ஆனால் அருகில் இருக்கும் கியூபா நாடு சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது. வல்லரசு நாடான பிரான்ஸ்நாடு இன்று தன் நாட்டில் இருக்கும் முப்பதாயிரம் பிரிட்டன் நாட்டு சுற்றுலா பயணிகளை உடன் வெளியேறுமாறு கேட்டுள்ளது. சிறிய நாடான கியூபா தன் நாட்டுக்கு யாரும் வரலாம் என்று அறிவித்துள்ளது. உண்மையில் கியூபாவின் மனிதம்தான் கடவுளை விட உயர்ந்தது! No photo description available.

• இவர்கள் தியாகம் மறக்க முடியுமா?

• இவர்கள் தியாகம் மறக்க முடியுமா? ஒரு நாட்டில் போராடும் இனத்திற்காக இன்னொரு நாட்டில் வாழும் அதே இனம் தீக்குளித்து மரணிப்பது என்பது ஒரு அதிசய வரலாறுதான். அந்த அதிசய வரலாற்றை ஈழத் தமிழர்களுக்காக நடத்தியவர்கள் தாய் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 16 பேர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளனர். 2009ல் இதே நாளில் (17.03.2009) ஈழத் தமிழருக்கு ஆதரவாக யுத்தம் நிறுத்தம் கோரி இருவர் தீக்குளித்து மரணம் அடைந்தார்கள். ஒருவர் அரியலூரைச் சேர்ந்த ராசசேகர். இன்னொருவர் கடலூரைச் சேர்ந்த நா. ஆனந்து. இவர்களுடைய தியாகம் மறக்க முடியாதது. ஈழத் தமிழர்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியது. ஆனால் இவர்கள் உட்பட மொத்தம் 16 பேர் உயிர் தியாகம் செய்தும் யுத்தம் நிறுத்தப்படவில்லை. இவர்களது போராட்டத்திற்கோ அல்லது உயிர் தியாகத்திற்கோ இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை. ஏனெனில் 7 கோடி தமிழர் அருகில் இருந்தும் வெறும் இரண்டு கோடி பேர் கொண்ட சிங்கள அரசு அஞ்சவில்லை எனில் அதற்கு ஓரே காரணம் அந்த ஏழு கோடி தமிழரிடம் அதிகாரம் இல்லை. மாறாக ஏழு கோடி தமிழரும் அடிமையாக இருப்பதால்தான் இந்திய அரசும் பொருட்படுத்தவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை. சரி. அப்படியென்றால் ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்? ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும். இதை நான் கூறுவதாக கருத வேண்டாம். தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து போராட்டம் நடத்திய தோழர் தமிழரசன் கூறியிருக்கிறார். குறிப்பு - சுமந்திரனை போராளி என்றும் அவர் காசுக்கு வழக்கு பேசியதை மாபெரும் தியாகம் என்றும் எழுதுவோர் இந்த இருவர் தியாகத்தை அறிவார்களா? Image may contain: 1 person

வோட்டு போட்டுவிட்டு செத்துப் போ - ஜனாதிபதி கோத்தா

•வோட்டு போட்டுவிட்டு செத்துப் போ - ஜனாதிபதி கோத்தா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜனாதிபதி கோத்தா அவர்கள், பாடசாலைகளுக்கு விடுமுறை விட்டுள்ளார். விமான நிலையத்தை மூடியுள்ளார் பொது விடுமுறை அறிவித்துள்ளார் பல நீண்டதூh ரயில் சேவைகள் இரத்து செய்துள்ளார் மக்களை அநாவசியமாக வெளியில் நடமாட வேண்டாம் எனக் கேட்டுள்ளார். ஆனால் தேர்தலை ஒத்திவைக்க மறுத்துள்ளார். ஏனெனில் அவரைப் பொறுத்தவரையில் அவரது அக்கறை மக்கள் தேர்தல் வரை உயிருடன் இருக்க வேண்டும் என்பதே. அதாவது அவர் “ வோட்டு போட்டுவிட்டு செத்துப் போ” என்று மக்களுக்கு கூறுகிறார். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று ஜனாதிபதி நினைக்கிறார். இதனால் பாரிய விளைவுகள் எற்பட்டு அரசுக்கு கெட்ட பெயர் வரும் என அவர் கருதுகிறார். அதனால்தான் தேர்தலை ஒத்திவைக்காமல் நடத்தி முடித்துவிட வேண்டும் என நினைக்கிறார். Image may contain: 1 person, standing

தப்பு என்பது தெரிந்தே செய்வது

தப்பு என்பது தெரிந்தே செய்வது தவறு என்பது தெரியாமல் செய்வது எனவேதான,; தப்பு தண்டிக்கப்படல் வேண்டும் தவறு மன்னிக்கப்படல் வேண்டும் தண்டனை என்பது தப்பு செய்தவர் திருந்துவதற்கேயொழிய இன்னொருவர் தப்பு செய்யக்கூடாது என்பதற்காக ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது மரண தண்டனை என்பது இன்னொருவர் தப்பு செய்யக்கூடாது என்பதற்காக தப்புசெய்த ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனையாகும். அது மட்டுமல்ல, மரண தண்டனை மூலம் தப்பு குறைக்கலாமேயொழிய ஒருபோதும் தவறுகளை இல்லாமல் செய்ய முடியாது ஏனெனில் அதிக தண்டனை வழங்கும் நாடுகளில் நிகழும் குற்றங்களைவிட குறைந்த தண்டனை வழங்கும் நாடுகளில் நிகழும் குற்றங்கள் குறைவு. எனவே உணர்ச்சிகரமாக சிந்திக்காமல் உணர்வுபூர்வமாக சிந்தித்து தண்டனைகளை வழங்க வேண்டும். முக்கியமாக ஒருவனை வாழ வைக்க முடியாத சமூகத்திற்கு அவனை தண்டிப்பதற்கான உரிமை இல்லை என்பதை நாம் முதலில் உணர வேண்டும். குறிப்பு - இன்று காலை நிர்பாயா குற்றவாளிகள் தூக்கில் இடப்பட்டுள்ளனர். அவர்கள் தம் குடும்பத்தினரை சந்திக்க கேட்ட இறுதி விரும்பம்கூட நிறைவேற்றாமல் தண்டிக்கப்பட்டுள்ளனர். சட்டத்தின் பேரால் நால்வர் கொலை செய்யப்பட்டுள்ளனர். Image may contain: 4 people

தமிழ்தேசிய உணர்வாளர்களை சிறையில் அடைப்பதன்

தமிழ்தேசிய உணர்வாளர்களை சிறையில் அடைப்பதன் மூலம் தமிழ் தேசிய விடுதலையை தடுத்துவிட முடியும் என இந்திய அரசு நினைக்கிறது. தமிழ்தேசமக்கள்கட்சி பொதுச் செயலர் தோழர் தமிழ்நேயனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது இந்திய அரசு. அடக்குமுறை அதிகரிக்கும்போது அதற்கு எதிரான போராட்டமும் அதிகரிக்கும். இதை இந்திய அரசு விரைவில் உணர்ந்து கொள்ளும். • தோழர் தமிழ்நேயன் கைதை வன்மையாக கண்டிப்போம்! • தோழர் தமிழ்நேயன் விடுதலைக்கு அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்போம்!! Image may contain: 2 people, close-up

•நெற்குன்றம் விக்ரம் அவர்களை நினைவு கூர்வோம்!

•நெற்குன்றம் விக்ரம் அவர்களை நினைவு கூர்வோம்! எங்கள் இதயம் பூக்களைப் போல் மென்மையானது ஆம். அது மிகவும் மென்மையானது. எங்களை நீங்கள் வஞ்சித்தபோது வன்மையானது ஆம். அது இன்னும் வன்மையானது. எங்கள் தலைவிதியை மாற்றி எழுதிட நாம் மீண்டும் எழுந்து நிற்போம் இதற்கு முன் இழந்ததை எல்லாம் இனி ஒன்றாய் பெற்றிடுவோம் நாங்கள் நிச்சயம் வெல்வோம் ஆம். இனி நாங்கள் வெல்வோம்! இன்று (21.03.2020) நெற்குன்றம் விக்ரம் அவர்களின் 11வது நினைவு நாள் ஆகும். ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக யுத்த நிறுத்தம்கோரி தமிழ்நாட்டில் நெற்குன்றம் விக்ரம் தீக்குளித்து மரணித்த நாள் இன்று ஆகும். அவர் தேர்ந்தெடுத்த பாதை தவறானது. அதனால் அது பயன் தரவில்லை. அவர் நோக்கம் நிறைவேறவில்லை. ஆனாலும் அவரது தியாக உணர்வு அளப்பரியது. மதிக்கப்பட வேண்டியது. இந்திய அரசு ஒருபோதும் அகிம்சைப் போராட்டங்களை மதிக்காது என்பது மட்டுமன்றி தமிழர்களுக்கு உதவாது என்பதற்கும் இவரது மரணம் ஒரு உதாரணமாக வரலாற்றில் இடம் பெறும். Image may contain: 1 person, text

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்

•எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்வராவதும் கெட்டவராவதும் சமூகத்தின் வளர்ப்பினிலேதான்! நேற்றுதான் நிர்பாயா குற்றவாளிகள் நாலுபேரை தூக்கில் போட்டார்கள். கடுமையான மரண தண்டனை வழங்குவதன் மூலமே பாலியல் வல்லுறவை ஒழிக்க முடியும் என்றார்கள். இதோ இன்று காலை சென்னையில் ஒரு பத்து வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள். இனி என்ன செய்யப் போகிறார்கள்? எத்தனை பேரை தூக்கில் போட்டாலும் பாலியல் வல்லுறவை ஒழிக்க முடியாது என்பதை எப்போது உணரப் போகிறார்கள்? மரண தண்டனை தீர்வு அல்ல என்று நாம் கூறினால் உடனே பாலியல் வல்லுறவு செய்பவர்களை நாம் ஆதரிப்பதாக முத்திரை குத்துகிறார்கள். குற்றத்திற்கான காரணி சமூகத்தில் அப்படியே தான் இருக்கிறது. காரணிகளை களையாமல் குற்றங்களை குறைக்க முடியாது என்பதை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது? Image may contain: 1 person

இந்நிலையிலாவது ஜனாதிபதி இரங்குவாரா?

•இந்நிலையிலாவது ஜனாதிபதி இரங்குவாரா? தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வாரா? அநுராதபுர சிறையில் மூன்று கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகளுக்கு கொரோணா தொற்று ஏற்பட்டதால் கலகம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லை எனில் அவர்களை அடைத்து வைத்திருக்க அரசுக்கு உரிமை இல்லை. ஈரானில் இவ்வாறு பல்லாயிரம் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அநுராதபுரம் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் நிலை என்னவென்று தெரியவில்லை. தான் பதவிக்கு வந்தால் உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என்று ஜனாதிபதி கோத்தா உறுதியளித்திருந்தார். ஆனால் அவர் உறுதி அளித்தபடி இன்னும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையிலாவது ஜனாதிபதி கோத்தா தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முன்வர வேண்டும். Image may contain: 1 person, standing

• நினைவு கூர்வோம்!

• நினைவு கூர்வோம்! ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் பாலசுந்தரம் ஆகியோரின் 11வது நினைவு நாள் இன்றாகும். மாரிமுத்து என்பவர் "இலங்கைத் தமிழர்களை சோனியாகாந்தி காப்பாற்ற வேண்டும்" என்று கடிதம் எழுதி வைத்து விட்டு 22.03.2009 அன்று இரவு வீட்டு வாசலில் முன்பு தீக்குளித்து மரணமடைந்தார். பாலசுந்தரம் என்பவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பதாகைகளை அமைத்தார் ஆனால் காவல்துறை அவற்றை அகற்றினர். இதையடுத்து 22.03.2009 அன்று மதியம் 12 மணியளவில் தீக்குளித்து மரணமடைந்தார். இவ்வாறு மொத்தம் 16 பேர் ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உயிர் தியாகம் செய்தார்கள். ஆனாலும் இந்திய அரசு இவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை. புலிகள் ராஜிவ் காந்தியைக் கொன்றதால்தான் சோனியாவின் இந்திய அரசு இவர்களின் கோரிக்கைக்கு அக்கறை எடுக்கவில்லை என்றார்கள். இப்போது இருப்பது சோனியாவின் அரசு இல்லை. இப்போது இருப்பது மோடியின் அரசு. இப்போது புலிகளும் இல்லை. ஆனாலும் இப்பவும் இந்திய அரசு தமிழர்கள் மீது அக்கறை கொள்ளவில்லையே? இந்த 16 தமிழரின் உயிர் தியாகம் இன்றும் எமக்கு கூறும் முக்கிய செய்தி என்னவெனில் இந்திய அரசு ஒருபோதும் தமிழர் நலனில் அக்கறை கொள்ளாது என்பதே.. இந்த உண்மையை நாம் அனைவரும் உணர்ந்து கொள்வதே இவர்களுக்கு செய்யும் நினைவு அஞ்சலியாக இருக்கும். Image may contain: 1 person, text Image may contain: 1 person, text

ஏழு தமிழர் விடுதலை.

•ஏழு தமிழர் விடுதலை. மீண்டும் ஒருமுறை தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்! மக்கள் எல்லோரும் கொரோனா பிரச்சனையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் தமிழக அரசும் தமிழக ஆளுநரும் சேர்ந்து எழுவர் விடுதலையில் தமிழ்மக்களை ஏமாற்றியுள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழக அரசு எழுவர் விடுதலைக்கு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இரண்டு வருடங்களாக தனது கருத்தை தெரிவிக்காத ஆளுநர் தற்போது பதில் அனுப்பியிருப்பதாக தமிழக சட்ட அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார். ராசீவ் கொலையின் பின்னணியில் உள்ள பன்னாட்டுச் சதியை விசாரிக்க அமைக்கப்பட்ட MDMA விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் தீர்மானம் குறித்து முடிவெடுப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளாராம். 20 ஆண்டுகளைக் கடந்தும் MDMA தனது விசாரணையை முடிக்கவில்லை. இந்த அமைப்புதான் பெல்ட்பாம் எங்கே தயாரிக்கப்பட்டது என்பது குறித்தும் விசாரிக்கிறது. இந்த பெல்ட் பாமிற்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலம் தான் தண்டனைக்கான மூலச் சான்று. சட்டமன்றத் தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டியது தான் ஆளுநருடைய கடமையே தவிர அவர் ஒன்றும் நீதிமன்றம் கிடையாது. விசாரணை முடிக்காத அமைப்பைக் காரணம் காட்டுவது எழுவர் விடுதலையைத் தொடர்ந்து காலந் தாழ்த்தும் செயல்திட்டமே அன்றி வேறல்ல. MDMA விசாரணை அறிக்கை வேண்டும் எனக் கோரும் ஆளுநர் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை தான் தவறாக எழுதியதாகக் கூறும் விசாரணை அதிகாரி தியாகராசனின் பிராமணப் பத்திரத்தை ஏன் ஏற்பதில்லை? சட்டத்தை மீறிய சதுரங்க ஆட்டத்தை எழுவர் விடுதலையில் தொடர்ந்து ஆடிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழக அரசும் தமிழக ஆளுநரும் சேர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளனர். முடிவுறாத விசாரணைக்கு முப்பது ஆண்டுகள் தண்டனையா? Image may contain: 7 people, including சுசிந்திரன் பன்னீர், text

லைக்கா நிறுவனம் சினிமா தயாரிப்பை நிறுத்துமா?

• லைக்கா நிறுவனம் சினிமா தயாரிப்பை நிறுத்துமா? அண்மையில் லண்டனில் யமுனா ராஜேந்திரன் தனது சினிமா குறித்த நூல்களை வெளியிட்டு பேசும்போது சில செய்திகளை கூறியிருந்தார். அவர் பிரசுரத்திற்கு அல்ல என்று குறிப்பிட்டு கூறியிருந்தாலும் அதன் முக்கியம் கருதி அதனை இங்கு தெரியப்படுத்த விரும்புகிறேன் ( யமுனா ராஜேந்திரன் மன்னிக்க வேண்டும்) “இயக்குனர் பாலச்சந்தரும் தன் படங்களில் நடிக்கும் நடிகைகளை வைப்பாட்டியாக வைத்திருக்கிறார். ஆனால் அது குறித்து பேசாதவர்கள் நான் வைத்திருக்கும்போது பேசுகிறார்கள். ஏனெனில் இவர்களுக்கு ஒரு ஈழத் தமிழன் வந்து இவ்வாறு புகழ் பெற்று இருப்பது பிடிக்கவில்லை” என்று பேட்டியின்போது பாலுமகேந்திராரா தன்னிடம் கூறியதாக யமுனா ராஜேந்திரன் தெரிவித்தார். ஈழத் தமிழரான பாலு மகேந்திரா கூறிய இந்த விடயத்தை நான் பலமுறை தெரிவித்து வருகிறேன். இந்திய தமிழ் சினிமாவில் ஒரு தெலுங்கரோ அல்லது மலையாளியோ பிழைக்க முடியும். ஏன் பம்பாய்காரர்கூட பிழைக்க முடியும். ஆனால் ஒரு ஈழத் தமிழர் பிழைக்க விட மாட்டார்கள். யாராவது ஒரு ஈழத் தமிழர் தமிழ் சினிமாவில் கொஞ்சம் பிரபலம் அடைகிறார் எனில் எப்படியாவது அவரை வீழ்த்திவிடவே செய்வார்கள். அண்மையில் பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த ஈழத் தமிழர் தர்ஷன் மீதும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் மத்தியில் கொஞ்சம் தாக்கு பிடித்து நின்றது ஈழத் தமிழரின் லைக்கா தயாரிப்பு நிறுவனம் மட்டுமே. இப்போது அந்த நிறுவனமும் தொடர் நட்டத்தினால் தன் தயாரிப்பை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந் நிறுவனம் இப்போது தயாரித்து வரும் கமல் நடிக்கும் இந்தியன் படமும் எதிர்பாராத விபத்து மற்றும் தாமதத்தினால் அதிக செலவு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியன் படமும் இவர்களுக்கு இலாபம் சம்பாதித்து தரப்போவதில்லை. அத்துடன் மணிரத்னம் இயக்கும் படமும் லாபம் தர வழியில்லை. அதனால் இனி இந் நிறுவனம் படத் தயாரிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கே லைக்கா படம் தயாரிக்கிறது. எனவே லைக்கா நிறுவனம் நட்டம் குறித்து கவலை கொள்ளாது என சிலர் கூறுகிறார்கள். இது உண்மை என்று எடுத்துக்கொண்டாலும் எந்தளவு காலத்திற்கு தொடர்ந்து நட்டமாகவே படங்களை தயாரிக்க முடியும்? குறிப்பு - 500 கோடி ரூபாவில் ரஜனியை வைத்து படம் எடுத்து நட்ட மடைந்ததற்கு பதிலாக 50 ஈழத்து படம் எடுத்து நட்ட மடைந்திருக்கலாம். ஒரு ஆறுதலாவது மிஞ்சியிருக்கும். Image may contain: 1 person, standing and shoes

தியாகி பகத்சிங்கை மட்டுமல்ல

•தியாகி பகத்சிங்கை மட்டுமல்ல தோழர் தமிழரசனையும் நினைவு கூர்வோம். “பகத் சிங்கும் அவரது நண்பர்களும் குண்டு வீசியது கொல்ல வேண்டும் என்ற எண்ணத்திலான பயங்கரவாத நடவடிக்கை அல்ல. சுதந்திர வேட்கையின் குரல் மக்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை ஆகும். பகத் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கள் உயிரைக் கொடுத்ததால்தான் நாம் சுதந்திரம் அடைந்தோம்” என்று முன்னாள் குடியரசுத் தலைவர் சர்மா அவர்கள் குறிப்பிட்டார். (ஆதாரம்- 24.03.1994 தினமணி) வெள்ளைக்கார அரசை விரட்ட வெடிகுண்டு வீசிய பகத்சிங்கை தியாகி என்று போற்றும் சிலர் கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக குண்டு வீசிய தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்கின்றனர். நாம் பகத்சிங்கை மட்டுமல்ல மக்களுக்காக போராடிய தோழர் தமிழரசனையும் என்றும் நினைவில் போற்றுவோம். இன்று பகத்சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் வெள்ளைக்கார அரசால் தூக்கில் இட்டுக் கொல்லப்பட்டநாள் மட்டுமன்று. தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன் மற்றும் சரவணன் ஆகியோர் கொள்ளைக்கார இந்திய அரசால் கொல்லப்பட்ட நாளும் ஆகும். தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன் மற்றும் சரவணன் ஆகியோர் தமிழக காவல்துறையினரால் போலி என்கவுண்டரில் சென்னையில் கொல்லப்பட்ட நாள் இன்று ஆகும். தியாகி பகத்சிங்கை கொன்றதன் மூலம் இந்தியா சுதந்திரம் பெறுவதை வெள்ளைக்கார அரசால் தடுக்க முடியவில்லை. அதேபோல் தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன்,சரவணன் ஆகியோரை கொன்றதன் மூலம் தமிழ் இனவிடுதலையை தடுக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கு வரலாறு காட்டும். இது உறுதி. தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன் சரவணன் ஆகியோர் தமிழக மக்களுக்காக மட்டும் போராடவில்லை. ஈழத் தமிழ் மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர்கள். அதனால்தான் அவர்கள் இந்திய அரசால் கொல்லப்பட்டார்கள். பகத்சிங்கை மட்டுமல்ல தோழர் தமிழரசன் மற்றும் இராசாராமன் சரவணன் ஆகியோரையும் தமிழக மக்களும் ஈழத் தமிழர்களும் என்று நினைவில் போற்றுவார்கள். Image may contain: 2 people, hat and text Image may contain: one or more people Image may contain: one or more people No photo description available.

செய்தி - கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும்

செய்தி - கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஊரடங்குச்சட்ட வேளையிலும் காணாமல்போனவர்களின் உறவுகள் போராட்டம் 1127வது நாளாக தொடர்கிறது. சிறுமி - சுமந்திரன் அங்கிள்! எப்போது எங்கள் அப்பாவை கண்டு பிடித்து தருவீர்கள்? சுமந்திரன் - கொஞ்சம் பொறு பிள்ளை. நல்லாட்சி அரசிற்கு இரண்டு வருட அவகாசம் பெற்று கொடுத்தோம். சிறுமி- அந்த அவகாசத்தில் அவர்கள் கண்டு பிடிக்கவில்லையே அங்கிள்? சுமந்திரன் - அப்படியில்லை பிள்ளை. அப்புறமும் இரண்டு வருடம் அவகாசம் பெற்று கொடுத்தோம் அல்லவா.? சிறுமி - சரி. அப்ப எப்பதான் எங்கள் அப்பாவை கண்டு பிடித்து தருவீர்கள் அங்கிள்? சுமந்திரன் - கண்டு பிடிப்பதற்காக அவகாசம் பெற்று கொடுக்கவில்லை பிள்ளை. நீங்கள் உங்கள் அப்பாவை மறப்பதற்காகதானே அவகாசம் பெறுகிறோம். சிறுமி - அப்போ நீங்கள் கண்டுபிடிக்க அவகாசம் பெறவில்லை. நாங்கள் மறப்பதற்காகத்தான் அவகாசம் பெறுகிறீர்கள். அப்படிதானே? சுமந்திரன் - கரெக்ட். நீ கெட்டிக்காரி யம்மா. சீக்கிரம் அப்பாவை மறந்திடும்மா! அல்லது ஒவ்வொருவராய் செத்திடுங்கள். சிறுமி - அப்புறம் எதற்காக இந்த முறையும் தேர்தலில் போட்டியிட்டு பதவி பெற முயல்கிறீர்கள்? சுமந்திரன் - அம்பிகா அன்ரியை எம்.பி யாக்க வேண்டும் அல்லவா? சிறுமி - அம்பிகா அன்ரி இத்தனை நாளும் எங்களுக்காக எதுவும் செய்யவில்லை. இனி எம்.பி யானால் செய்வார் என்று எப்படி நாங்க நம்புறது? சுமந்திரன் - நீங்க வீட்டு சின்னத்தில் வோட்டுப் போட்டால் சம்பந்தர் ஐயாவுக்கு மட்டுமல்ல அம்பிகா அன்ரிக்கும் கொழும்பில் சொகுசு வீடு கிடைக்கும் அல்லவா? குறிப்பு - உரையாடல் கற்பனைதான் ஆனால் உரையாடிய விடயங்கள் உண்மையே. Image may contain: 4 people, people sitting

பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி

•பிரதமர் மோடி கேட்டுக்கொண்டபடி தன் வீட்டு மொட்டைமாடியில் ஏறிநின்று கைதட்டும் இந்தியர்! பல நாடுகள் மக்கள் வரி செலுத்த தேவையில்லை என்று அறிவித்துள்ளன. அதுமட்டுமல்ல மக்களுக்கு உதவுவதற்காக பல பில்லியன் டாலர் பணத்தை ஒதுக்கியுள்ளன. ஆனால் இந்திய பிரதமர் மக்களை மொட்டை மாடியில் ஏறி நின்று கை தட்டும்படி கேட்டுள்ளார். பாவம் அன்றாடம் காய்ச்சிகள் என்ன செய்ய முடியும்? வேலை இல்லை. வருமானம் இல்லை. இவர்கள் உணவிற்கு என்ன செய்ய முடியும்? மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அரசு கடவள்களைப் பற்றி கவலை கொள்கிறது. உத்தரப்பிரதேச முதல்வர் பூரி ஜகன்நாதன் கோயில் சாமி சிலைகளுக்கு கொரோணா தொற்று எற்பட்டுள்ளதா என பரிசோதிக்கும்படி டாக்டர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். டாக்டர்களும் மறுப்பு கூறாமல் முதல்வர் உத்தரவுப்படி சென்று பரிசோதித்துள்ளனர். கொரோணா வைரஸ் பரிசோதிப்பதற்கு ரத்தம் எடுக்க வேண்டும். இவர்கள் எப்படி சாமி சிலையில் இருந்து ரத்தம் எடுத்திருப்பார்கள்? இதுகூடப் பரவாயில்லை என்று கருதும் அளவிற்கு இலங்கை ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். கொரோணா பாதிக்கப்பட்டவர்களை தங்களுடன் கொண்டுவந்து அடைக்க வேண்டாம் என்று கூறிய சிறைக்கைதிகள் மூவரை சுட்டுப் படுகொலை செய்துள்ளார். என்ன கொடுமை இது? Image may contain: 4 people, outdoor

எங்களைப்போல் தமது விடுதலைக்காக போராடும் ஒரு இனம்.

எங்களைப்போல் தமது விடுதலைக்காக போராடும் ஒரு இனம். அதுமட்டுமல்ல எமது போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கிவரும் இனம். அவர்களின் ஆண்டு (2719)பிறப்பு நேற்று கொண்டாடப்பட்டது. பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து தொடரும் அவர்கள் போராட்டம் வெல்லட்டும். ஆம். குர்து இன மக்கள் விடுதலை பெற எமது வாழ்த்துகள்! Image may contain: 2 people, people standing, fire and outdoor

•நான் நலம். நீங்கள் நலமா?

•நான் நலம். நீங்கள் நலமா? நான் நலமாக இருக்கிறேன். அதுபோல் நீங்களும் நலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அக்கறையுடன் நலம் விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாம் எதிர்பார்த்ததைவிட கொரோனோவின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இன்னும் இருக்கப் போகிறது. ஆனாலும் இதை எல்லாம் எதிர் கொண்டு மனித இனம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தரும் செய்திகள் வந்தவண்ணமே இருக்கின்றன. இதுவரை எந்த நாடுகள் பொருளாதார தடை விதித்து கொடுமைப்படுத்தினார்களோ அந்த நாடுகளுக்கு எல்லாம் சென்று கியூப மருத்துவர்கள் சேவை செய்கின்றனர். சில மனிதர்கள் சுயநலத்துடன் செயற்பட்டாலும் பலர் தங்கள் உயிரை பணயம் வைத்து உதவி புரிகின்றனர். இது “மனிதம்” குறித்து நம்பிக்கை தருகிறது. சரி. நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? குறிப்பு - பிளீஸ்! நள்ளிரவில் எல்லாம் எழுப்பி நலம் விசாரிக்காதீர்கள்.😀😀

அநுராதபுர சிறையில்

அநுராதபுர சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாண சிறைக்கு அரசு மாற்றியுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுவது தீர்வு அல்ல. அவர்களை உடனடியாக விடுதலை செய்வதே உரிய தீர்வாகும். எம்மவர்களுக்காக நாமே குரல் கொடுக்க வேண்டும். எனவே ஒருமித்து ஒன்றாய் குரல் கொடுப்போம். அரசே! தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்! Image may contain: one or more people

ஓர் அறிவித்தல்!

ஓர் அறிவித்தல்! யாரிடமாவது தமிழ்நாடு அமைப்பு கமிட்டியினர் வெளியிட்ட “கேடயம்” “மனஓசை” இதழ்கள் இருக்கின்றனவா? 1988 – 1990 காலப்பகுதியில் இவ் இதழ்களில் இந்திய அமைதிப்படையினர் பற்றி நான் எழுதிய கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன. அக் கட்டுரைகள் அடங்கிய இதழ்களை வைத்திருப்பவர்கள் தயவு செய்து என்னுடன் இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி. Image may contain: one or more people and outdoor

இந்தோனிசிய டாக்டர் குறித்த

இந்தோனிசிய டாக்டர் குறித்த படமும் செய்தியும் தவறானது என்று அறிகிறேன். அதனால் அப் பதிவை நீக்கி விட்டேன். தவறுக்கு மன்னிப்பு கோருவதுடன் சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றியையும்; தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா நோயைவிட அது பற்றிய வதந்திகள் வேகமாக பரவுகின்றன.

நாம் என்ன செய்யப்போகிறோம்?

•நாம் என்ன செய்யப்போகிறோம்? எநத நேரம் போர் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும் நாடுகள் நோய்கள் வந்தால் அதை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகின்றன. அணுகுண்டு வீசினாலும் தங்களால் ராணி குடும்பத்தை காப்பாற்ற முடியும் என பீற்றிய பிரிட்டிஷ் அரசுகூட கொரோணா நோயில் இருந்து இளவரசர் சார்லஸ்சை காப்பாற்ற முடியவில்லை. போர் விமானம், ஏவுகணை, செயற்கைகோள் என பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஒதுக்கிய அரசுகள் மருத்தவமனைகளுக்கு பணம் ஒதுக்கவில்லை. கொரோணா தாக்கியவர்களுக்கு மருத்துவமனைகளில் தங்கவைக்ககூட இடம் இன்றி அனைத்து நாடுகளும் தடுமாறுகின்றன. மனித இனத்திற்கு இப்போது ஆயுதங்களைவிட கிருமிகளே அதிக அச்சுறுத்தலாக உள்ளன. எமது அடுத்த சந்ததிக்கு நாம் எதை விட்டுச் செல்லப் போகிறோம்? Image may contain: தென்னரசு தென்னரசு, beard and text

நாம் ஊமைகளாக இருக்கும்வரை

•நாம் ஊமைகளாக இருக்கும்வரை உலகம் செவிடாகவே இருக்கும்! தான் பதவிக்கு வந்தால் அடுத்த நிமிடமே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வேன் என கோத்தா உறுதியளித்திருந்தார். அதுமட்டுமல்ல தான் தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்களுக்கும் பொதுவான ஜனாதிபதியாக செயற்படுவேன் என பதவியேற்பின்போது உறுதியளித்தார். ஆனால் உறுதியளித்தபடி ஜனாதிபதி கோத்தா செயற்படவில்லை. மாறாக சிங்கள பௌத்த இனவெறி அரசாகவே அவர் செயற்படுகின்றார். எட்டு தமிழர்களை கொலை செய்தமைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள ராணுவ வுPரரை இன்று அவர் விடுதலை செய்துள்ளார். இந்த சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட எட்டு தமிழர்களுக்குள் ஒரு ஜந்த வயதுச் சிறுவனும் அடங்கும். ஜனாதிபதி கோத்தாவின் இந்த சிங்கள இனவெறிச் செயற்பாட்டை நாம் உலகிற்கு எடுத்துச் சொல்வோம். இலங்கையில் தமிழருக்கு நீதி மறுக்கப்படுகின்றது என்பதை நாம் உலகிற்கு உரத்துக் கூறுவோம். கோத்தா போன்ற கொடி விஷப் பாம்புகளுக்கு புரியும் மொழியில் பேச வேண்டும் என்றால் நாம் கழுகாக மாற வேண்டும். Image may contain: 2 people

கேரள அரசிற்கு

•கேரள அரசிற்கு உழைப்பதற்கும் தமிழர்கள் தேவை உதைத்து அனுப்புவதற்கும் தமிழர்கள் தேவை! கியூப கம்யுனிஸ்ட்; அரசு கொரோனா பாதித்த கப்பலை வரவேற்று சிகிச்சை அளிக்கிறது. ஆனால் கேரள கம்யுனிஸ்ட்; அரசு தமக்காக உழைத்த தமிழர்களை இரக்கமின்றி உதைத்து விரட்டுகிறது. இந்த இந்திய கம்யுனிஸ்ட்டுகளுக்கு இன்று மட்டுமல்ல என்றுமே தமிழர்களை பிடிப்பதில்லை. இந்த உண்மையை சொன்னால் தமிழக சிபிஎம் கம்யுனிஸ்டுகளுக்கு புரிவதில்லை. Image may contain: one or more people and text Image may contain: one or more people, people standing, outdoor and water

ஓநாயின் சாயம் வெளுக்க ஆரம்பித்துவிட்டது

•ஓநாயின் சாயம் வெளுக்க ஆரம்பித்துவிட்டது அது தன் குணத்தை காட்ட தொடங்கிவிட்டது! எல்லோருடைய கவனமும் கொரோனாவின் பக்கம் இருக்கும்போது ஜனாதிபதி கோத்தா அவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலையாளிக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்துள்ளார். பதவிக்கு வரும்வரை வேஷம் போட்டவர் இப்போது தன் உண்மையான முகத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார். இங்கு வேதனை என்னவெனில் இவருடைய சிங்கள இனவெறி நடவடிக்கைகளை கண்டிக்க வேண்டிய தமிழ் தலைவர்கள் பலரும் மௌனமாக இருக்கின்றனர். சிங்கள ராணவ வீரரை விடுதலை செய்ததைக் கண்டிக்காவிட்டாலும் பரவாயில்லை , ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதையாவது இத் தலைவர்கள் கேட்டிருக்கலாம். எமது தமிழ் தலைவர்களுக்கு தாம் பதவி பெறுவதில்தான் அக்கறையே யொழிய அரசியல் கைதிகள் விடுதலையில் அக்கறை இல்லை என்பது ஜனாதிபதி கோத்தாவுக்கு நன்கு தெரியும். அதனால்தான் அவர் இவ்வளவு தைரியமாக நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒரு இனப்படுகொலையாளியை விடுதலை செய்துள்ளார். அவர் சிங்களவர். தன் இனத்திற்கு விசுவாசமாக செயற்படுகின்றார். ஆனால் எமது தமிழ் தலைவர்களுக்கு தமிழ் இன உணர்வு கொஞ்சம்கூட இல்லையே. தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கும்படி இந்திய பிரதமர் மோடி ஜனாதிபதி கோத்தாவுக்கு அழுத்தம் கொடுத்தார் என எழுதிய ஆரசியல் ஆய்வாளனர்கள் இனி என்ன எழுதப் போகிறார்கள்? இந்திய அரசின் ஆதரவுடனேயே ஜனாதிபதி கோத்தா தமிழர்களுக்கு எதிராக செயற்படுகின்றார் என்ற உண்மையை தமிழ் மக்கள் உணராதவரை தீர்வு எதுவும் கிடைக்கப்போவதில்லை. குறிப்பு - கொரோணாவுக்காக சம்பந்தர் ஐயா மாஸ்க் போட்டிருப்பதால் அவரால் கண்டிக்க முடியவில்லை போலும். ஆனால் அம்பிகா அன்ரியை எப்படியாவது எம்.பி யாக்குவேன் என சபதம் எடுத்திருக்கும் சுமந்திரன் ஏன் மெனளமாக இருக்கிறார்? Image may contain: 1 person, standing and suit, possible text that says '2020 President GOTLER'

கை குலுக்காதீர்கள் மாறாக கை எடுத்து கும்பிட்டுக்கொள்ளுங்கள்

கை குலுக்காதீர்கள் மாறாக கை எடுத்து கும்பிட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார் இளவரசர் சார்லஸ். அடிக்கடி நன்றாக கை கழுவுங்கள் என்றார் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இப்ப என்னடாவென்றால் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் இவர்கள் மக்களுக்கு கூறியதை தாங்கள் கடைப்பிடிக்கவில்லையா? அல்லது பயன் அற்ற வழிமுறைகளை இவர்கள் மக்களுக்கு கூறியிருக்கிறார்களா? இவர்களுக்கு கொரோனா தொற்று என்பது உண்மையா அல்லது பொய்யா என்றுகூட தெரியவில்லை. ஆனால் மக்களின் கோபத்தில் இருந்து தப்ப இவர்களுக்கு இது உதவியிருக்கிறது . ஏனெனில் இவ் கொரோனா தொற்று பற்றி பல மருத்துவர்கள் எச்சரிக்கை செய்தும் பிரித்தானிய அரசு நடவடிக்கை எடுக்காமல் அசட்டையாக இருந்துவிட்டது. அருகில் இருக்கும் பிரான்ஸ் நாடுகூட பாடசாலைகளுக்கு விடுமுறை விட்டபோதும் பிரிட்டன் பிரதமர் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். விமான நிலையத்தையாவது மூடுங்கள் என்று மருத்துவர்கள் கேட்டார்கள். ஆனால் பிரதமர் அதைக்கூட செய்யவில்லை. இப்போது பிரித்தானிய மக்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சனே பொறுப்பாகும். அவர் மக்களுக்கு பதில் சொல்லியேயாக வேண்டும். Image may contain: 1 person, text

"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!

•"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்! தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் 26ம் ஆண்டு நினவு நாள் 29.03.2020 ஆகும். 19.11.1967 ல் பிறந்த தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார். தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின். தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார். தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார். தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார். தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும். தோழர் லெனின் நினைவை போற்றுவோம்! குறிப்பு- தமிழ்தேசமக்கள் கட்சி சார்பில் தோழர் செந்தமிழ் குமரன் அவர்களால் தோழர் லெனின் வாழ்கை வரலாறு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது . இந்த நூலுக்கு ஒரு சிறிய அணிந்துரையை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் எழுதிய அணிந்தரையை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2016/03/blog-post_33.html No photo description available.

அடிப்படை வசதிகள் அற்ற எளிதில் நோய் தொற்றக்கூடிய நிலையில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள்

•அடிப்படை வசதிகள் அற்ற எளிதில் நோய் தொற்றக்கூடிய நிலையில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் குறித்து தமிழக அரசு அக்கறை கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். •சாதாரண மக்களுக்கு பல நிவாரணங்கiளை அறிவித்துள்ள தமிழக அரசு இவ் ஈழத் தமிழ் அகதிகள் குறித்து எந்த நிவாரணமும் அறிவிக்காதது ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருக்கிறது. •இந்த நேரத்திலாவது மனிதாபிமான அடிப்படையில் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் ஈழத் தமிழ் அகதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். •ஈழத் தமிழ் அகதிகளுக்காக குரல் கொடுத்த தமிழக தலைவர்களுக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம Image may contain: புகழேந்தி பாண்டியன், possible text that says 'அகதி முகாமிலுள்ள இலங்கை தமிழர்களை காத்திடு! தமிழ்நாட்டில் 110 க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்கள் வசிக்கும் இடங்களோ குறுகலான இடமாக இருப்பதால் பெருமளவு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு என்பது ஏற்பட்டால் மிகுதியாக மாறிடுமோ அச்சமும் நிலவுகிறது. ஆகையால் தமிழக முதலமைச்சரும், மருத்துவத்துறை அமைச்சரும் உடனடியாக சிறப்பு நடவடிக்கையினை எடுத்து இவர்களைக் காத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். தோழர் பா.புகழேந்தி தலைவர் தமிழர் கட்சி'

பிள்ளையான்!

•பிள்ளையான்! மகிந்த கும்பல் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்த கறிவேப்பிலை! யுத்த காலத்தில் சிறந்த சேவையை வழங்கியதால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிங்கள ராணுவ வீரரை மன்னித்து விடுதலை செய்ததாக ஜனாதிபதி கோத்தா கூறுகிறார். அப்படியென்றால் அந்த சிங்கள ராணுவ வீரரைவிட ஜனாதிபதி கூறும் சிறந்த(?) சேவையை வழங்கியவர் பிள்ளையான். ஆனால் அவரை ஏன் ஜனாதிபதி கோத்தா இன்னும் விடுதலை செய்யவில்லை? கறியில் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கறிவேப்பிலை போன்று முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துள்ளது மகிந்தா கும்பல். பல வருடங்களாக சிறையில் வாடும் பிள்ளையான் இப்போதாவது இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும். Image may contain: 3 people, people standing

நடிகர் அக்ஷய்குமார் கொரோனா நிதியாக 25 கோடி ரூபா

நடிகர் அக்ஷய்குமார் கொரோனா நிதியாக 25 கோடி ரூபா வழங்கியுள்ளார். தெலுங்கு நடிகர்கள்கூட பல கோடி ரூபாய்களை வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மராட்டிய நடிகர் ரஜனி எத்தனை கோடி ரூபா வழங்கினார் என்பதை யாராவது அறியத் தருவீர்களா? அவர் பணம் வழங்க தேவையில்லை. பள்ளி வாடகையை செலுத்தினாலே போதும் என இதைப் படிப்பவர்கள் மனதில் நினைக்கக்கூடும். என்ன செய்வது? அவர் தமிழர்களை ஆள நினைப்பதால் தமிழருக்கு எவ்வளவு கொடுத்தார் என்பதை அறிய தூண்டுகிறது. ஆனால் 27 வருடங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஏழு தமிழர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் 5000ரூபா பணத்தை வழங்கியுள்ளார். இவர் இப்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு 20000 ரூபா பணத்தை வழங்கியுள்ளார். சிறையில் உழைத்து வரும் பணத்தில் இருந்து இந்த உதவிகளை அவர் தமிழ் மக்களுக்கு செய்கிறார். ஆனால் அவரை “பயங்கரவாதி” என்று கூறி 27 வருடமாக சிறையில் அடைத்து வைத்திருக்கிறது அரசு. குறைந்தபட்சம் நீண்டகால பரோலிலாவது தமிழக அரசு இவரை விடுதலை செய்ய முன்வர வேண்டும். Image may contain: 1 person, selfie and close-up Image may contain: 1 person

இருவரும் பெண் குழந்தைகள்

இருவரும் பெண் குழந்தைகள். இருவரும் இலங்கை நாட்டு குழந்தைகள். ஒரு குழந்தைக்கு தன் தந்தையின் அரவணைப்பை பெறுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னொரு குழந்தைக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஏனெனில் அக் குழந்தை தமிழ் குழந்தை. இத் தமிழ் குழந்தைக்கு தாயும் இல்லை. எனவே தந்தையின் அரவணைப்பு கண்டிப்பாக தேவை. ஆனாலும் இரக்கம் காட்ட மறுக்கும் இந்த சிங்கள இனவெறி ஆட்சிகளில் இருந்து தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என எப்படி நம்புவது? Image may contain: 4 people, including Santhulaki Eelapriyan

•பொறுப்புடன் கருத்துகளை பகிர்வோம்!

•பொறுப்புடன் கருத்துகளை பகிர்வோம்! கொரோனா குறித்து சிலர் முகநூலில் பொறுப்பற்ற முறையில் பதிவுகள் இடுகிறார்கள். அதுவும் தம்மை இலக்கியவாதிகளாக அடையாளப்படுத்தியவர்கள் மக்களுக்கு அச்சமூட்டும் வகையில் எழுதுகிறார்கள். நெருக்கடியான வேளைகளில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பதிவுகள் இட வேண்டும் என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றார்கள். கொரோனா இழப்புதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதேபோன்று பல இழப்புகளை மனித இனம் சந்தித்துள்ளது. தான் சந்தித்த இழப்புகளை எல்லாம் எப்படி மனித இனம் கடந்து வந்திருக்கிறதோ அதேபோன்று இந்த கொரோனா அழிவில் இருந்தும் மனித இனம் மீண்டு எழும். ஸ்பெயின் அரசி இறந்துவிட்டார் என்று நாம் நம்பிக்கையை இழக்க தேவையில்லை. மாறாக கொரோனா பாதிப்படைந்த கனடா பிரதமரின் மனைவி நலமாகி விட்டார் என்பதை கவனத்தில் கொள்வோம். கொரோனா பாதிப்பில் இறந்தவர்களைவிட நலம் பெற்று வீடு திரும்பியவர்கள் அதிகம் என்பதை கவனத்தில் கொள்வோம். சீனாவில் கொரோனா பாதிக்கப்பட்ட பிரதேசம் இப்போது இனி எந்த ஆபத்தும் இல்லை என திறந்து விடப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்வோம். எனவே மிக விரைவில் இந்த கொரோனா அழிவில் இருந்து மனித இனம் மீண்டு எழும் என்று நம்புவதற்குரிய விடயங்களில் கவனம் செலுத்துவோம். ஆனால் இப்போது எழும் முக்கிய கேள்வி என்னவெனில் இந்த கொரோனாவினால் ஏற்படும் பொருளாதார அரசியல் நெருக்கடிகளை மனிதஇனம் இனி எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதே. ஏனெனில் இத்தாலியில் கொரோனா நெருக்கடி ஏற்பட்டவேளையில் அது அங்கம் வகிக்கும் ஜரோப்பிய யூனியன் உதவவில்லை. மாறாக கியூபா சீனா போன்ற நாடுகளே உதவியுள்ளன. இதனால் இத்தாலி நாட்டு மக்களுக்கு ஜரோப்பியன்யூனியன் மீது கோபம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஏதோவொரு கோபம் ஏற்பட்டு வருகிறது. மக்களின் இந்த கோபம் உலக ஒழுங்கில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? இதுவே இன்று விடை காண வேண்டிய முக்கிய கேள்வியாக எம்முன் உள்ளது. Image may contain: 2 people, people standing and outdoor