Sunday, March 29, 2020

ரணில் உங்களை ஏமாற்றிவிட்டார் - சுமந்திரன் மனைவி.

ரணில் உங்களை ஏமாற்றிவிட்டார் - சுமந்திரன் மனைவி. சுமந்திரனின் துரோகத்தை நாம் விமர்சித்தபோது புலம்பெயர்ந்தவர்கள் விமர்சிக்க அருகதை இல்லை என்றார்கள். அதாவது சுமந்திரன் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்றும் அவரை தெரிவு செய்த மக்களுக்கே விமர்சிக்கும் அருகதை உண்டு என்றார்கள். அதன்பின் காணாமல்போன உறவுகளின் தாயார் செருப்பு கொண்டு விரட்டியபோதும் அவரை புலம்பெயர்ந்த சிலர் பணம் கொடுத்து தூண்டிவிட்டதாக கூறினார்கள். இப்போது தமிழரசுக்கட்சியின் மகிளிர் பிரிவு தலைவியே சுமந்திரன் இருக்கும்வரை கடவுளால்கூட தமிழ் மக்களை காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளார். தனக்கு சீட் தராத கோபத்தில் இவ்வாறு இவர் கூறுகின்றார் என்று சுமந்திரனின் விசுவாசிகள் கூறக்கூடும். ஆனால் “உங்களை ரணில் நல்லாய் ஏமாற்றிவிட்டார்” என்று மனைவியே தன்னிடம் கூறியதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். இனி இதற்கு சுமந்திரனின் விசுவாசிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? சுமந்திரனின் மனைவிக்கு பணம் கொடுத்து தூண்டிவிட்டதாக தயவு செய்து வழக்கம்போல் எழுதிடவேண்டாம் என்று சுமந்திரன் விசுவாசிகளிடம் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் சுமந்திரன் மனைவியுடன் எமக்கு எந்த தொடர்பும் இல்லை என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பு - இதுவரை நான் சுமந்திரனின் குடும்பத்தவர்களை விமர்சித்ததில்லை. இப்போது சுமந்திரனே அதுவும் பொதுவெளியில் பகிரங்கமாக கூறியதால்தான் விமர்சித்துள்ளேன். அவருடைய மனைவியின் படம் இருந்தும்கூட அதனை நான் பயன்படுத்தவில்லை. Image may contain: 2 people, people sitting

No comments:

Post a Comment