Sunday, March 29, 2020

லைக்கா நிறுவனம் சினிமா தயாரிப்பை நிறுத்துமா?

• லைக்கா நிறுவனம் சினிமா தயாரிப்பை நிறுத்துமா? அண்மையில் லண்டனில் யமுனா ராஜேந்திரன் தனது சினிமா குறித்த நூல்களை வெளியிட்டு பேசும்போது சில செய்திகளை கூறியிருந்தார். அவர் பிரசுரத்திற்கு அல்ல என்று குறிப்பிட்டு கூறியிருந்தாலும் அதன் முக்கியம் கருதி அதனை இங்கு தெரியப்படுத்த விரும்புகிறேன் ( யமுனா ராஜேந்திரன் மன்னிக்க வேண்டும்) “இயக்குனர் பாலச்சந்தரும் தன் படங்களில் நடிக்கும் நடிகைகளை வைப்பாட்டியாக வைத்திருக்கிறார். ஆனால் அது குறித்து பேசாதவர்கள் நான் வைத்திருக்கும்போது பேசுகிறார்கள். ஏனெனில் இவர்களுக்கு ஒரு ஈழத் தமிழன் வந்து இவ்வாறு புகழ் பெற்று இருப்பது பிடிக்கவில்லை” என்று பேட்டியின்போது பாலுமகேந்திராரா தன்னிடம் கூறியதாக யமுனா ராஜேந்திரன் தெரிவித்தார். ஈழத் தமிழரான பாலு மகேந்திரா கூறிய இந்த விடயத்தை நான் பலமுறை தெரிவித்து வருகிறேன். இந்திய தமிழ் சினிமாவில் ஒரு தெலுங்கரோ அல்லது மலையாளியோ பிழைக்க முடியும். ஏன் பம்பாய்காரர்கூட பிழைக்க முடியும். ஆனால் ஒரு ஈழத் தமிழர் பிழைக்க விட மாட்டார்கள். யாராவது ஒரு ஈழத் தமிழர் தமிழ் சினிமாவில் கொஞ்சம் பிரபலம் அடைகிறார் எனில் எப்படியாவது அவரை வீழ்த்திவிடவே செய்வார்கள். அண்மையில் பிக்பாஸ் மூலம் பிரபலம் அடைந்த ஈழத் தமிழர் தர்ஷன் மீதும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் மத்தியில் கொஞ்சம் தாக்கு பிடித்து நின்றது ஈழத் தமிழரின் லைக்கா தயாரிப்பு நிறுவனம் மட்டுமே. இப்போது அந்த நிறுவனமும் தொடர் நட்டத்தினால் தன் தயாரிப்பை நிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந் நிறுவனம் இப்போது தயாரித்து வரும் கமல் நடிக்கும் இந்தியன் படமும் எதிர்பாராத விபத்து மற்றும் தாமதத்தினால் அதிக செலவு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியன் படமும் இவர்களுக்கு இலாபம் சம்பாதித்து தரப்போவதில்லை. அத்துடன் மணிரத்னம் இயக்கும் படமும் லாபம் தர வழியில்லை. அதனால் இனி இந் நிறுவனம் படத் தயாரிப்பை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை. கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்கே லைக்கா படம் தயாரிக்கிறது. எனவே லைக்கா நிறுவனம் நட்டம் குறித்து கவலை கொள்ளாது என சிலர் கூறுகிறார்கள். இது உண்மை என்று எடுத்துக்கொண்டாலும் எந்தளவு காலத்திற்கு தொடர்ந்து நட்டமாகவே படங்களை தயாரிக்க முடியும்? குறிப்பு - 500 கோடி ரூபாவில் ரஜனியை வைத்து படம் எடுத்து நட்ட மடைந்ததற்கு பதிலாக 50 ஈழத்து படம் எடுத்து நட்ட மடைந்திருக்கலாம். ஒரு ஆறுதலாவது மிஞ்சியிருக்கும். Image may contain: 1 person, standing and shoes

No comments:

Post a Comment