Sunday, March 29, 2020

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! தோழரே!!!!சகல சௌபாக்கியங்களுடனும்!நீடூழி நீங்கள் வாழவேண்டும்!!!!என... இறைவனிடம் வேண்டுகிறேன்!!! என் மனம்நிறைந்த வாழ்த்துகள்!தோழரே!!💐😍😍😍😍 தமிழினத்திற்கு எதிராக ஒன்று திரண்டு விட்ட பல வாறான சதிகளாலும்,எதிரிகளின் சூழ்ச்சிகளினால் எம்மினத்தினிடையே ஏற்பட்ட உள் முரண்களாலும்,”ஈழத்தமிழர்கள்” எனும் எம் இனம்!21ம் நூற்றாண்டில் சர்வ உலகங்களின் சதிகொண்டு அழிக்கப்பட்டோம்!! உலக நாடெங்கும் “அகதிகள்” எனும் “மனவலியை” தரும் “முத்திரைகளோடு” வலம் வருகின்றோம்.😔 ஆனபோதும்........ நாடுகள்தான் கடந்த போதும் நமக்குள்ளே இருக்கும் ஓர் “தாய்மண்ணை” விட்டகன்ற தவிப்பு,ஆற்றொணாத துயர்,எமக்குள்ளே இருக்கும் ஓர் பிடிவாதம்,நம்பிக்கை,மனவலிமை,துணிவு,விழ விழ எழுவோம்!!!! எனும் ஓர் உந்துதலின் வேகம்,அடக்குமுறையின் ஆற்றாமை அனைத்தையும் உள்ளடக்கி நம்மில் சிலர்,”இனத்திற்கான” விடிவை ஏற்படுத்த வேண்டும்,அதற்கான விதைகளை விதைத்தே ஆக வேண்டும் என்ற “உடும்பு பிடி” போன்று “ஈழத்தவர்” “எழுத்துலகை” கட்டியாளும் சில முன்னோடிகளில்!!!! #நீங்களும் ஒருவர் என்பதில் #பெருமகிழ்ச்சி கொள்கிறேன் தோழரே!!!😍😍😍 திசைகள்தான் வேறான போதும் எம் “எண்ணங்கள்” ஒன்றுதான்!!! ஆறுகள் போய் “சங்கமிக்கும்” இடம் கடல்!!! போன்று நாமும் “இலைமறை காயாக” உங்களின் காலத்திலேயே வாழ்கிறோம் என்பதிலும் மட்டற்ற மகிழ்ச்சியே!!!! நம் ஈழ அழிப்பின் பின்னான காலத்தில் பல எழுத்துலகில் தங்களை ஜாம்பவான்கள் என காட்டிகொண்ட பலர் இருந்த இடமோ!! பதிந்த தடமோ!! தெரியாமல் ஒளிந்த கொண்ட #இவ்வேளையில்!!!! நீங்கள் எம் “#வடமராச்சிக்கு” (மற்றவர்கள் கோபம் கொள்ள வேண்டாம்) உரிய துணிவோடு இன்றுவரை களத்தில் கடந்தகால!நிகழ்கால!பல வரலாற்று உண்மைகளையும்,சான்றுகளையும் உரிய நேரங்களில் எடுத்தெடுத்து போட்டு எம்மினத்தினிடையே விழிப்புணர்வை!ஏற்படுத்துவது மட்டுமல்லாது,ஒரு பத்திரிகை துறைக்கே உரிய “நொதுமலாளராக” பாரபட்சம் பார்க்காது அனைத்து தரப்பினரையும்,”அறுத்து தொங்கவிடும்” உங்கள் எழுத்திற்கு “ஈடு இணை” இல்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். “ஈழத்தவர்” எழுத்துலகில் “ஈடுஇணையற்ற” ஓர் போராளியாக!!! உங்களை பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் கூட தோழரே!!! எம் இனம் இழந்து நிற்கும் அனைத்தையும் இணைத்து ஈடேற்றவாவது,இறைவன் உங்களுக்கு “நீண்ட ஆயுளையும்” “சௌபாக்கியத்தையும்” தரவேண்டும் என இறைவனிடம் வேண்டிகொண்டு,மீண்டும் என் உளம் நிறைந்த பிறந்ததின!!வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்!! #உங்களின் சேவைக்கு நன்றியும் தோழரே!!!🙏😍😍😍😍😍😍😍😍 Image may contain: 1 person, standing and outdoor

No comments:

Post a Comment