Sunday, March 29, 2020

•இந்தியாவை ஒரு இந்தியர்தான் ஆள வேண்டும்

•இந்தியாவை ஒரு இந்தியர்தான் ஆள வேண்டும் என்பது சரியென்றால் தமிழ்நாட்டை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும் என்பது எப்படி தவறாகும்? சோனியாகாந்தி தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அவரது எம்.பி களின் ஆதரவோடு அவர் பிரதமர் பதவி ஏற்க முனைந்தார். ஆனால் அப்போது பாஜக கட்சி அவரை பிரதமராக விடமாட்டோம் என போராட்டம் செய்து தடுத்தது. ஏன் என்று கேட்டதற்கு சோனியா காந்தி இத்தாலியில் பிறந்தவர் என்றும் இந்தியாவை ஒரு இந்தியர்தான் ஆள வேண்டும் என்றார்கள். சோனியாகாந்தியும் வேறு வழியின்றி மன்மோகன் சிங் அவர்களை பிரதமராக தேர்தெடுத்தார். இப்போது தமிழ்நாட்டை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் இந்தியாவை ஒரு இந்தியர்தான் ஆள வேண்டும் என்பதை சரி என்றவர்கள் தமிழ்நாட்டை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும் என்பதை தவறு என்கிறார்கள். ஆனால் மராட்டிய நடிகரான ரஜனி அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாட்டேன் என்று கூறியுள்ளார். மராட்டிய நடிகருக்கு எமது பாராட்டுகள். Image may contain: one or more people, people sitting and beard

No comments:

Post a Comment