Sunday, March 29, 2020

•தியானம் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியுமா?

•தியானம் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலை பெற முடியுமா? தமிழ் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக இருந்தாலும் அதை அடைவதற்கான பாதை குறித்து பல்வேறு கருத்துகள் காணப்படுகின்றன. சிலர் பாராளுமன்ற பாதை மூலம் தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியும் என்கின்றனர். இன்னும் சிலர் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியும் என்கின்றனர். வேறு சிலர் இந்தியாவைப் பயன்படுத்தி இராஜதந்திரத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியும் என்கின்றனர். போராளிகள் ஆயுதப் போராட்டத்தின் மூலமே தமிழ் மக்கள் விடுதலை பெற முடியும் என்கின்றனர். இவற்றைத் தவிர இப்போது கனடாவில் இருக்கும் உஷா சிறீஸ்கந்தராசா என்பவர் தியானத்தின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை அடைய முடியும் என்கிறார். உஷா சிறீஸ்கந்தராசா சிறந்த உணர்வாளர் மட்டுமன்றி செயற்பாட்டாளரும்கூட. அவர் “ஒரே நோக்கத்துடன் கருத்தொருமித்த மனத்திட்பத்துடன் நாம் வாழும் நாடுகளிலும் தாயகத்திலும் நின்று அவரவர் கால மண்டலத்தில் 4, 8, 12, 18, 22 மணிகளில், கண்களை மூடி, மனதை ஒரு நிலைப் படுத்தி, உயர்பேராற்றலை வேண்டியழைத்துத், தமிழீழம் மலர வழிபடுவோம் – என்று கூறுகிறார். தியானம் செய்வது, ஆலயங்களில் வழிபடுவது, விரதம் இருப்பது போன்றவை எமது மனங்களை ஒருநிலைப்படுத்த உதவலாமே யொழிய தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தராது. அகிம்சைப் போராட்டத்தையே மதிக்காத இலங்கை இந்திய அரசுகள் தியானத்திற்கு மதிப்பளித்து தமிழீழ விடுதலையை தரும் என நம்புவது முட்டாள்தனமாகவே இருக்கும். அதுமட்டுமல்ல தமிழ் மக்களின் விடுதலைக்கு தியானத்தை பாதையாக முன்வைப்பது இலங்கை இந்திய அரசுகள் தொடர்ந்தும் தமிழ் மக்களை நசுக்கி அழிப்பதற்கே உதவியாக இருக்கும். இந்த நேரத்தில் எதற்காக உஷா சிறீஸ்கந்தராசா இந்த தியானப்பாதையை முன்வைக்கிறார் என்ற கேள்வி ஒருபுறம் எழுந்தாலும் மறுபுறத்தில் மார்க்சியபாதையை முன்வைக்கும் தோழர் தியாகு இதை எப்படி மொழிபெயர்த்து ஆதரவு தெரிவிக்கின்றார் என்ற ஆச்சரியம் எழுகிறது. உஷா சிறீஸ்கந்தராசா முன்வைத்திருக்கும் தியானப் பாதையால் எந்த பயனும் இல்லையா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுக்கூடும். ஆம். தமிழ் இன விடுதலைக்கான பாதை எது என்ற ஆய்வை தமிழ் மக்கள் மத்தியில் தூண்டுவதைத் தவிர வேறு எந்த பயனும் இதனால் விளையப் போவதில்லை. குறிப்பு - உஷா சிறீஸ்கந்தராசாவின் அறிக்கை இணைப்பு கீழே பின்னூட்டத்தில் தரப்பட்டுள்ளது. Image may contain: 1 person Image may contain: 1 person

No comments:

Post a Comment