Sunday, March 31, 2024

வெள்ளைக்கார அரசை விரட்ட

வெள்ளைக்கார அரசை விரட்ட வெடிகுண்டு வீசிய பகத்சிங்கை தியாகி என்று போற்றும் சிலர் , கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக குண்டு வீசிய தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்கின்றனர். நாம் பகத்சிங்கை மட்டுமல்ல மக்களுக்காக போராடிய தோழர் தமிழரசனையும் என்றும் நினைவில் போற்றுவோம்.

நினைவு கூர்வோம்!

நினைவு கூர்வோம்! தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன், சரவணன் ஆகியோர் தமிழக காவல்துறையினரால் போலி என்கவுண்டரில் சென்னையில் கொல்லப்பட்ட நாள் மார்ச் - 23 ஆகும். இராசாராமன்,சரவணன் ஆகியோரை கொன்றதன் மூலம் தமிழ் இனவிடுதலையை தடுக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கு வரலாறு காட்டும். இது உறுதி.

நாதியற்றவனாக இருக்கிறேன்...

நாதியற்றவனாக இருக்கிறேன்... புகலிடக் கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை! இதயம் இருக்குமாயின் இடம் கொடுங்கள் இறப்பதற்கு முன் வாழ்ந்துவிட்டு போகிறேன். ஒரு நாளாவது (இந்திய) குடிமகனாக! -விக்டர் செ இந்த (ஈழ) அகதியின் குரல் திராவிட முதல்வரின் செவிக்கு எட்டுமா?

அமைதியான கடல்

அமைதியான கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்குவதில்லை. போராட்டம் இன்றி இனத்திற்கான சிறந்த தலைமை உருவாகுவதில்லை.

நிச்சயம் வெற்றி பெறுவோம்”

நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்ற ஒற்றை நம்பிக்கையைத்தவிர வேறு எதுவுமே இவர்களிடம் இல்லை. ஆனால் அந்த ஒற்றை நம்பிக்கையே தொடர்ந்து இவர்களை முன்னோக்கி செல்ல வைக்கிறது என்றோ ஒருநாள் நிச்சயம் தமது இலக்கை அடைவார்கள். இது உறுதி

சாத்தான் ஓதும் வேதம்!

•சாத்தான் ஓதும் வேதம்! நூல்கள் எழுதுவதன் மூலம் நிரபராதி ஆகிவிட முடியாது. நீதிமன்ற விசாரணைகளே முடிவு செய்ய வேண்டும்.

பன்றி பல குட்டிகளை போடலாம்

பன்றி பல குட்டிகளை போடலாம் ஆனால் யானை ஒரு குட்டி போடும்போதுதான் நிலம் அதிர்கிறது. அதிர்வுகளை ஏற்படுத்தும் “நாம் தமிழர்”

ஆழ்ந்த இரங்கல்

•ஆழ்ந்த இரங்கல் கடந்த வாரம் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றி தன் தொண்டுகள் பற்றி கூறியிருந்தார். குறிப்பாக வசதியற்ற ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை கூறி பலரின் பாராட்டைப் பெற்றார். சிறந்த சிரிப்பு நடிகர் , இந்த வாரம் இப்படி ஒரு செய்தியை கொடுத்து கவலை கொள்ள வைத்திட்டாரே?

அடேய்! யாரு பார்த்த வேலையிடா இது?

அடேய்! யாரு பார்த்த வேலையிடா இது? என்ன இருந்தாலும் அவர் தமிழக முதல்வரடா! 😂😂

எம் வீட்டில் திருட வந்தனர்

“எம் வீட்டில் திருட வந்தனர் நாம் “திருடன்” “திருடன்” என்று கத்தினோம் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி எம்மை கைது செய்து சிறையில் அடைத்தனர்” - கவிஞர் அறிவுமதி செய்தி - வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தில் கைதானவர்கள் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டனர்.

முடிந்துவிட்டான் என்று நினைக்கும்போது

முடிந்துவிட்டான் என்று நினைக்கும்போது எழுந்து நில்லுங்கள். எதிரியும் சிலிர்த்து போவான் இனப்படுகொலைக்கு நீதிகோரி புலம்பெயர் சமூகத்தின் அடுத்த தலைமுறையும் போராட ஆரம்பித்துவிட்டது.

சாராயம் இல்லை

சாராயம் இல்லை பிரியாணி இல்லை ஆனாலும் கூட்டம் தானாக சேர்கிறது. வோட்டுக்கு பணம் இல்லை எந்த கட்சியுடனும் கூட்டு இல்லை ஆனாலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு அதிகரிக்கின்றது. நம்பிக்கை தரும் “நாம் தமிழர்”

தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின்

"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்! தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் 30ம் ஆண்டு நினவு நாள் 29.03.2024 ஆகும். 19.11.1967 ல் பிறந்த தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார். தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின். தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார். தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார். தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார். தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும். குறிப்பு- தோழர் செந்தமிழ் குமரன் அவர்களால் தோழர் லெனின் வாழ்கை வரலாறு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது . இந்த நூலுக்கு ஒரு சிறிய அணிந்துரையை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் எழுதிய அணிந்துரையை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2016/03/blog-post_33.html

உலகப்புகழ்பெற்ற “தாய்” நாவலை

உலகப்புகழ்பெற்ற “தாய்” நாவலை எழுதிய மார்க்சிம் கார்க்கி அவர்களின் பிறந்த தினம் இன்று.(28.03.1868) இலக்கியம் என்பது போராட துணிந்தவனை உந்தி தள்ளுவதாக இருக்க வேண்டும் என்று மார்க்சிம் கார்க்கி கூறினார். அதனால்தான் அவர் ரஸ்சிய புரட்சிக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து புரட்சியாளர்களுக்கும் உத்வேகம் தரக்கூடிய தாய் நாவலை படைத்தார். எமது ஈழப் போராட்ட வரலாற்றிலும் பல தாய் கதைகள் உண்டு. ஆனால் அதை எழுத ஒரு மார்க்சிம் கார்க்கி இன்னும் எம்மிடம் தோன்றவில்லை.

எந்தவொரு கருத்துக்கணிப்பும்

எந்தவொரு கருத்துக்கணிப்பும் நாம் தமிழர் கட்சி வெற்றிபெறும் என்று கூறவில்லை எனினும் மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் ஏன் நாம் தமிழர் கட்சிக்கு அதிக நெருக்கடிகளை கொடுக்கின்றன? பாஜகவும் திமுகவும் ஏன் நாம்தமிழர் கட்சியை அதிகம் விமர்சிக்கின்றன? நாம் தமிழர் கட்சி தமிழ்த்தேசியத்தை முன்வைப்பதை தவிர வேறு என்ன காரணம் இருக்கும்? ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து தமிழத்தேசியத்தை எதிர்க்கும் என்பது இதுதானா? இந்நிலையில் கடந்த தேர்தலைவிட ஒரு வோட்டு அதிகமாக பெற்றாலே நாம் தமிழர் கட்சியினர் வெற்றி பெற்றதாகவே கருத வேண்டும். அது நடக்கும்.

எம் வாழ்வில் நாம் கண்ட

எம் வாழ்வில் நாம் கண்ட மறக்க முடியாத நாடகம் குறிப்பு – 27.03.2024உலக நாடக தினத்தை முன்னிட்டு.

செய்தி – உலக உருண்டைக்கு

செய்தி – உலக உருண்டைக்கு தண்ணீர் ஊற்றுவதன்மூலம் உலகத்தை குளிர்விக்க முடியும் என சாமியார் ஒருவர் தெரிவிப்பு. சாமி! பிளீஸ், யாழ்ப்பாணத்தில் நம்ம ஊர் கரவெட்டி பக்கமாக தண்ணீர் ஊற்றுங்க. 32C வெப்பமாம். தாங்க முடியவில்லை என்கிறார்கள். 😂😂

செய்தி - ஈழத் தமிழ் அகதிகளுக்கு

செய்தி - ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுப்போம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் இருட்டு வந்திட்டாலே சின்ராசு பாட ஆரம்பித்துவிடுவான் என்பதுபோல் தேர்தல் வந்திட்டாலே திராவிட முதல்வர் உருட்ட ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஈழஅகதிகளுக்கு வாக்குறுதி அளிப்பதும் தேர்தல் முடிந்த பின்பு அதை மறந்துவிடுவதும் திமுக வின் வழக்கமாகும். கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, 40 வருடமாக தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை பெற்றுக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அந்த அகதிச் சிறுவன் மணி எங்கே என்பதையாவது கூறுங்கள் பிளீஸ். எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி என்றும் அவருக்கு தமிழ் இன உணர்வு இல்லை என்று காட்டுவதற்காக கலைஞர் 1984ம் ஆண்டு ஈழ அகதிச் சிறுவன் ஒருவனை தத்தெடுத்து வளர்த்தார். கனிமொழி ஒரு தம்பி வேண்டும் என்று கேட்டதாகவும் இனி அந்த சிறுவன் கனிமொழிக்கு தம்பியாக இருப்பான் என்றும் கலைஞர் கூறினார். அந்த அகதிச் சிறுவனுக்கு மணி என்று பெயரும் வைத்தார். ஆனால் இப்போது அந்த மணி எங்கே என்று தெரியவில்லை. சொத்தில் பங்கு கொடுக்க வேண்டி வரும் என அஞ்சி ஸ்டாலின் அந்த சிறுவனை கொன்றுவிட்டதாக ஸ்டாலினுடன் கூட இருந்த பரிதிஇளம்வழுதி கூறினார். தயவு செய்து இப்பவாவது அந்த அப்பாவி அகதிச் சிறுவன் எங்கே என்பதை கூறுங்கள் தமிழக திராவிட முதல்வரே!

தண்ணீரை திராட்சைரசமாக

தண்ணீரை திராட்சைரசமாக மாற்றிய தேவனும் தேவையில்லை தண்ணீரில் நடக்கும் இறைவனும் தேவையில்லை செங்கடலை இரண்டாக பிளந்த ரட்சகரும் தேவையில்லை மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்த தெய்வமும் தேவையில்லை தன் தேவாலயத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளையாவது செயலிழக்க வைக்கும் கடவுளே தற்போது தேவை

படம்-1 தமிழின விடுதலைக்காக

படம்-1 தமிழின விடுதலைக்காக போராடி பல வருடம் சிறையில் வாடிய புலவர் கலியபெருமாள் வீடு. படம் -2 தன்னைத்தானே உலகத் தமிழின தலைவர் என அழைத்துக்கொண்ட கலைஞர் குடும்பத்தின் வீடு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதில் யார் தமிழினத்தவருக்கானவர் என்று.

ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு

ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு இந்தியா காரணமா? இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார். மைத்திரி கூறியிருப்பது உண்மைதான். ஆனால் இதை பதவிலியில் இருக்கும்போது கூறாமல் இப்போது ஏன் கூறுகின்றார்?

Friday, March 22, 2024

பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!

•பாராட்டுகளும் வாழ்த்துக்களும்! 13 வயதில் 31 கிலோ மீட்டர் பாக்குநீரிணை கடலை எட்டு மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த சிறுவன் தன்வந்த் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

அன்று தாய் பார்வதி அம்மாள்

அன்று தாய் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற வந்தபோது கொஞ்சம்கூட இரக்கமின்றி திருப்பி அனுப்பினார் முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று தன் மகனை ஒருமுறையேனும் உயிரோடு பார்த்துவிட வேண்டும் என 33 வருடமாக காத்திருந்த தாய்க்கு உயிரற்ற மகன் உடலை அனுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த இரண்டு தாய்களின் பெயரை இனி உச்சரிக்கும்போதெல்லாம் இவர்கள் சிந்திய கண்ணீருக்கு காரணமானவர்களின் பெயரையும் வரலாறு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.

ஆசையோடு தேசம்காண

ஆசையோடு தேசம்காண இருந்தவருக்கு எமனானது இந்திய அதிகாரம் உயிரோடு வந்தவரை உயிறற்று அனுப்பி வைத்துள்ளது பாரதம் சாந்தனின் இறப்பு காந்தி தேசத்தின் அவலக்குறியீடு" - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை.

தன் மகன் உயிரோடு வருவான்

தன் மகன் உயிரோடு வருவான் என 33 வருடமாக காத்திருக்கும் இத் தாய் ஞாயிறு அன்று தன் மகனின் உயிரற்ற உடலை காண்கையில் நாம் என்ன சொல்லி தேற்றுவது? இவரது மகன் மரணம் இந்திய அரசின் கோர முகத்தை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் “ஈழத் தமிழர் அனாதைகள் அல்ல. அவர்களுக்கு நாம் இருக்கிறோம்” என்றார் தாம் ஆட்சிக்கு வந்தால் 7 தமிழர்களையும் விடுதலை செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பின்பும் அவர்களை சிறப்புமுகாமில் அடைத்து "மாரடைப்பு மரண விடுதலை" அளிப்பார் என்று நினைக்கவில்லையே..

இருவரும் தமிழர்கள்

இருவரும் தமிழர்கள் ஒருவர் ஈழத் தமிழர் சாந்தன் இன்னொருவர் தமிழ்நாடு வேலூர் வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழர் சீனிவாசன் கடந்த 28.02.2024யன்று மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர் சாந்தன் சிகிச்சை பலனின்றி மரணமானதாக தமிழக அரசு அறிவித்தது. சாந்தன் மரணமான அதே 28ம் திகதி 2009ல் ஈழத் தமிழர்களுக்காக சீனிவாசன் தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் சிகிச்சை பலனின்றி 02.03.2009ல் இறந்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இங்கு கவனிக்க வேண்டியது 2009, 2024ல் தமிழக அரசாக இருந்தது திமுக. ஈழத் தமிழருக்காய் தன்னை ஆகுதியாக்கிய சீனிவாசனுக்கு நாளை 15வது நினைவுதினம் ஆகும். அவருக்கு எமது நினைவஞ்சலிகள்.

சிறப்புமுகாமில் இருந்த சாந்தன் மரணத்திற்கு

சிறப்புமுகாமில் இருந்த சாந்தன் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் பொறுப்பு என நான் எழுதியிருந்தேன். அப்போது சில திமுக உடன்பிறப்புகள் சிறப்புமுகாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதற்கும் தமிழக முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று என்னை திட்டினார்கள். இப்போது முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் சாந்தன் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமன்றி நடைப்பயிற்சி செய்யக்கூட விடாமல் சிறப்புமுகாமில் சித்திரவதை செய்து வருகிறது தமிழக அரசு என்று கூறியிருக்கிறார். இப்போது இங்கு நான் கேட்க விரும்புவது, எடப்பாடிக்கும் சிறப்புமுகாம் யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று தெரியவில்லை என திமுக வினர் கூறப்போகின்றார்களா? எடப்பாடி அவர்கள் கூறியிருப்பது யாவும் உண்மைதான். ஆனால் இதைக்கூற அவருக்கும் எந்த அருகதையும் கிடையாது ஏனெனில் அவருடைய ஆட்சிக்காலத்திலும் இந்த சிறப்புமுகாம் சித்திரவதைகள் இருந்தன. இன்று ஸ்டாலின் எப்படி சிறப்புமுகாம் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறாரோ அதேபோன்றுதான் எடப்பாடி அவர்களும் ஆட்சியில் இருந்தபோது கண்டு கொள்ளாமல் இருந்தார். இவர்கள் இருவரும் எதிர்க்கட்சியில் இருக்கும்போது நீலிக் கண்ணீர் வடிப்பதும் ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தமிழர் தாயகம் முழுவதும் தேசிய துக்கதினமாக அனுட்டிக்க பல பொது அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. ஒன்று திரண்டு தமிழ் மக்கள் செலுத்தும் அஞ்சலி என்பது இந்திய அரசுக்கு தமிழ் மக்களின் பதிலாக அமையட்டும்.

ஊருக்குபோய் தன் தாயின் கையால்

ஊருக்குபோய் தன் தாயின் கையால் ஒரு குவளை கஞ்சி குடிக்க வேண்டும் என்பதே சாந்தனின் கடைசி ஆசையாக இருந்தது. தான் இறப்பதற்கு முன் தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்பதே சாந்தன் தாயாரின் 33 வருட ஆசையாக இருந்தது. இரக்கமற்ற இந்திய அரசு இவர்களின் ஆசையை நிறைவேற்றவில்லை. எத்தனை தடைகள். அத்தனையும் தாண்டி மக்கள் சாந்தன் உடலை அவர் ஊருக்கு கொண்டு சென்று தாயிடம் ஒப்படைக்கின்றனர். மக்கள் அளித்துள்ள இந்த பதிலை இனியாவது இந்திய அரசு புரிந்துகொள்ளட்டும். மற்ற மூவரையுமாவது உயிரோடு அவர்கள் விரும்பும் நாடு செல்ல அனுமதிக்கட்டும்.

சாந்தன் தன் தாயாரிடம் சென்றடைந்துவிட்டார்.

சாந்தன் தன் தாயாரிடம் சென்றடைந்துவிட்டார். உயிரற்ற உடலாகவாவது சென்று சேர்ந்துவிட்டார் என ஆறுதல் கொள்வதா? அல்லது உயிருடன் அனுப்பிவைக்காதது குறித்து இந்திய அரசு மீது கோபம் கொள்வதா? தூக்கு தண்டனையே அதி உச்சபட்ச தண்டனையாக இருந்து வருகிறது. ஆனால் சாந்தன் அதைவிட கொடிய தண்டனையை அனுபவித்துள்ளார். இதனை அவர் தமிழ் மக்களுக்காகவே அனுபவித்தார். எனவேதான் தமிழ் மக்களும் அவருக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகின்றனர். இனி ஒவ்வொரு வருடமும் இந் நாளில் சாந்தனை மட்டுமன்றி சாந்தன் மரணத்திற்கு காரணமானவர்களையும் சேர்த்தே வரலாறு நினைவு படுத்தப் போகிறது.

சாந்தன் உடலை ஆரத்தி எடுத்து

சாந்தன் உடலை ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார் தங்கை. சாந்தன் உயிருடன் வந்தால் எப்படி வரவேற்க விரும்பியிருந்தாரோ அத்தகைய ஒரு வரவேற்பை சாந்தன் உடலுக்கு கொடுத்து தன்னை தேற்றுகிறார் தங்கை. அழுது ஓய்ந்துவிட முடியாத ஆறாதத் துயரம் இது.

உலகில் மரணித்த போராளிகள் எல்லாம்

உலகில் மரணித்த போராளிகள் எல்லாம் வேதனைகளை அனுபவித்து மடிந்தவர்களே. அவர்கள் அனுபவித்த வேதனைக்கு சற்றும்குறையாத வேதனையை அனுபவிப்பவர்கள் அவர்களைப் பெற்ற தாய்மார்கள். ஆனால் மரணித்த போராளிகளை தியாகிகள் என்று நினைவுகூறும் வரலாறு அத் தாய்மார்களை அப்படி நினைவுகூர்வதில்லை. தாயின் கையால் ஒரு கவளம் சோறு தின்ன வேண்டும் என்றே சாந்தன் விரும்பினார். சாந்தனின் அந்த கடைசி விருப்பத்தை வாய்க்கரிசி போட்டு நாளை நிறைவேற்றப்போகிறார் தாய். 33 வருடமாக தன் மகனைக் காண காத்திருக்கும் தாய் மகனின் உயிரற்ற உடலைக் காண நேருவது மிகப் பெரிய துயரம். அக் கொடுங் துயரத்தை அனுபவிக்கும் இத் தாயை நாம் என்ன சொல்லி தேற்றுவது?

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்

•“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள். தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் பிறந்ததினம் 04.03.1924 ஆகும். புலவர் அவர்கள் “தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர். தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர். அதனாலேயே அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கில் இணைக்கப்பட்டார். வயதான காலத்தில் வழக்கின் நிமித்தம் அலைக்கழிக்கப்ட்டபோதும் ஈழத் தமிழர்களுக்கான தனது ஆதரவை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை. தமிழின விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி.

எந்த மண்ணுக்காக சாந்தன் ஏங்கினாரோ

எந்த மண்ணுக்காக சாந்தன் ஏங்கினாரோ அந்த மண்ணில் சாந்தனை விதைத்துள்ளார் அவரது தாய். தவறி விழும் விதையைக்கூட முளைத்தெழ வைக்கும் மண் தனக்காக போராடியவரை ஏமாற்றிவிடுமா என்ன? நிச்சயம் ஓராயிரம் சாந்தன்களை முளைத்தெழ வைக்கும்.

என்றும் நினைவில் கொள்வோம்!

என்றும் நினைவில் கொள்வோம்! ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை கண்டித்து சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) என்பவர் தீக்குளித்து உயிரீகம் செய்த நாள் 05.03.2009

இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று

இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்நினைவு தினமாகும். தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள். மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும், பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும், உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும். கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் , ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது. பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி. தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. (முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது. ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் அவர்களும் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர். ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.

சாந்தனை புதைத்து அதன் ஈரம்

சாந்தனை புதைத்து அதன் ஈரம் காய்வதற்குள் அடுத்த இடியை இறக்கியுள்ளது இரக்கமில்லாத தமிழக அரசு. மற்ற மூவரையும் இலங்கை அனுபுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளது. அவர்கள் இலங்கை திரும்புவதற்குரிய அனுமதியை இலங்கை தூதரகத்தில் கோரினால் அதுபற்றி பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர்கள் மூவரும் தனித்தனியாக நீதிமன்றத்தை அணுகினால் பரிசீலிக்கப்படும் எனகூறி உயர்நீதிமன்றம் சாந்தன் வழக்கை முடித்துவிட்டது. சாந்தனுக்குரிய நீதி வழங்கப்படவில்லை. வழக்கம்போல் சாந்தனுக்குரிய நீதியை மத்திய மாநில அரசுகளுடன் சேர்ந்து நீதிமன்றமும் மூடி மறைத்துவிட்டது. இப்போது விடயம் என்னவென்றால் முருகன் நளினி இருவரும் பிரித்தானியாவில் இருக்கும் தம் மகளிடம் சென்று வாழ விரும்புகின்றனர். இவர்கள் பிரித்தானியா செல்ல விரும்புவது உலகத்திற்கே தெரியும். ஆனால் தெரியாதமாதிரி மத்திய மாநில அரசுகள் மட்டுமன்றி உயர்நீதிமன்றமும் சேர்ந்து நாடகமாடுகின்றன. 7 தமிழர்களையும் விடுதலை செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தவர் ஸ்டாலின். ஆனால் அவர் பதவிக்கு வந்ததும் உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துமகூட் நாலு ஈழத் தமிழரை சிறப்புமுகாமில் அடைத்தார். இந்தியா ஒரு ஜனநாயகநாடு என்றும் இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறுகின்றனர். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று 7 தமிழர்களையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் தமிழக முதல்வரைப் பொறுத்தவரையில் “சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். ஆனால் ஈழத் தமிழரைத் தவிர” என்று கருதுகிறார். நாலு தமிழர்களையும் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்தே அவர்களை சிறப்புமுகாமில் அடைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால் வழக்கம்போல் இந்த வாக்குறுதியையையும் அவர் காப்பாற்றவில்லை.

முருகன் லண்டனில் உள்ள தன்

முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். ஆனால் தமிழக அரசு அவரை லண்டன் செல்ல அனுமதி வழங்காமல் இலங்கைக்கு அனுப்ப முயல்கிறது. இதுதான் சட்ட நடைமுறை என்று சிலர் தமிழக அரசை நியாயப்படுத்த முயல்கின்றனர். அவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன் இதே ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விக்கி மற்றும் ஆதிரை. இவர்கள் மீதான ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தபோது இவர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டனர். சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட இருவரும் அங்கிருந்து ஜரோப்பிய நாடொன்றுக்கு சென்று அங்கு வாழ்ந்து வருகிறார்கள். எனவே ராஜீவ் வழக்கில் வைக்கப்பட்டிருந்த விக்கி ஆதிரை ஆகியோர் வெளிநாடு செல்ல சட்ட நடைமுறை அனுமதிக்கும் என்றால் முருகன் செல்ல ஏன் அனுமதிக்க முடியாது? எல்லாவற்றுக்கும் மேலாக முருகன் ஒரு இந்து. அவர் இப்போது ஒரு சாமியார் போல் ஆகிவிட்டார். உலகில் உள்ள இந்துக்கள் அனைவரின் மீதும் அக்கறை கொள்வதாக கூறும் இந்திய அரசு முருகன் மீது ஏன் அக்கறை கொள்ளவில்லை? இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் அவர்கள் "இந்து" முருகனுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?

நினைவஞ்சலிகள்!

• நினைவஞ்சலிகள்! சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், ஜோசப் பரராயசிங்கம். சந்திரநேரு வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசனும் கொல்லப்பட்டார். சிங்கள ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியரின் கிளைமோர் தாக்குதலில் 06.03.2008 யன்று சிவநேசன் கொல்லப்பட்டார். அவர் தன்னை தெரிவு செய்த மக்களுடன் இருந்தார். அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் அவர் கொல்லப்பட்டு 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கொலைக்கு நீதி வழங்கப்படவில்லை. தமது சக பாராளுமன்ற உறுப்பினரின் கொலைக்கே இதுவரை நீதி பெறாத தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் மக்களின் படுகொலைகளுக்கு நீதி பெற்றுத் தருவார்கள் என எப்படி நம்புவது?

என் கணவரை உயிரோடு விடுதலை செய்யுங்கள்”

“என் கணவரை உயிரோடு விடுதலை செய்யுங்கள்” ஜெயக்குமாரின் மனைவி உருக்கமான வேண்டுகோள். தமிழக அரசு இரக்கம் காட்டுமா? அல்லது சாந்தன் போன்று மாரடைப்பு மரண விடுதலையை அளிக்கப் போகிறதா?

நடிகை திரிஷாவுக்காக குரல் கொடுத்தவர்கள்

•நடிகை திரிஷாவுக்காக குரல் கொடுத்தவர்கள் நடிகை பெத்து ராஜ்க்காக குரல் கொடுப்பார்களா? நடிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்குமான உறவு பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. நடிகை பெத்து ராஜ்க்கு மதுரையில் மால் ஒன்றை உதயநிதி வாங்கிக்கொடுத்ததாக முன்னர் ஒரு செய்தி வந்தது. இப்போது நடிகை பெத்துராஜ்க்கு துபாயில் ஒரு வீட்டை அமைச்சர் உதயநிதி வாங்கிக் கொடுத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. நடிகை திரிஷா பற்றி செய்தி வந்தபோது அதற்கு எதிராக குரல் கொடுத்த சேரன் போன்றவர்கள், இப்போது நடிகை பெத்து ராஜ் பற்றிய செய்தி குறித்து ஏன் மௌனமாக இருக்கின்றனர்? உதயநிதி அமைச்சராக இருக்கிறார். காவல்துறை அவர்களின் கையில் இருக்கிறது. ஏன் இச் செய்தியை கூறிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? சவுக்கு சங்கர் கூறியது உண்மை என்றால் உதயநிதிக்கு இத்தனை கோடி பணம் எங்கிருந்து வந்தது? கலைஞர் 36 படத்திற்கு கதைவசனம் எழுதி 45000கோடி ரூபா சம்பாதித்தார் என்று கூறுவதுபோல் உதயநிதி நாலு படத்தில் நடித்து இத்தனை கோடி சம்பாதித்தார் என்று கூறப்போகிறார்களா?

பெண் விடுதலை குறித்து !

பெண் விடுதலை குறித்து ! பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை மட்டுமல்ல இன விடுதலையும்கூட இல்லை. ஆனாலும் இன விடுதலை குறித்து பேசுபவர்கள் எந்தளவு தூரம் பெண் விடுதலை குறித்து பேசுகிறார்கள்? ஐனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே எண்ணிக்கையில் அதிகம். அப்படியென்றால் ஐனநாயக முறைப்படி பெண்கள் கையில்தானே அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லையே? வரலாற்றில் பெண்கள் எப்போதும் இப்படி இருந்தில்லை என்றும் இடையில்தான் இவ்வாறு ஆக்கப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால் பெண் எப்போது அடிமையானாள்? அவள் ஏன் அடிமையாக்கப்பட்டாள்? வரலாற்றின் தொடக்க காலத்தில் தாய் வழிச் சமூக வடிவமே இருந்திருக்கிறது. இச் சமூக வடிவத்தில் ஆணைவிடவும் பெண்ணிற்கே கூடுதல் அதிகாரம் இருந்துள்ளது. பெண்ணே குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் பிரதான பணியைச் செய்ததன் காரணமாக குடும்பத்தின் தலைமை பெண்ணிடமே இருந்தது. குழந்தைகள் தாயின் வழியிலேயே அடையாளம் காணப்பட்டனர். சமுதாயத்தின் அக் கால கட்டத்தில் திருமணமோ அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்பதோ சமூக கட்டுப்பாடாக இருக்கவில்லை. இதன் பொருள் அவர்கள் பாலியற் கட்டுப்பாடு இன்றி வாழ்ந்தனர் என்பது அல்ல. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் ஆதிக்கம் பெண்ணிடமே இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரும்போது ஆணே(தந்தை) சமூக குழும வீட்டை நீங்கிச் செல்ல வேண்டியிருந்தது. குழந்தைகள் தாயுடனேயே இருந்தன. சமுதாயத்தின் இக் காலகட்டத்தில் உற்பத்திக் கருவிகளான அம்பு, வில், ஈட்டி போன்றன பொதுவானதாக முழு சமூகத்திற்கும் சொந்தமானதாக இருந்தன. அதாவது உற்பத்திக் கருவிகள் தனியார் உடமையாக இருக்கவில்லை. மந்தைகள், காணிகள் போன்ற உற்பத்தி வசதிகளும் இருக்கவில்லை. தனியார் உடமையாக எதுவும் இல்லாததால் ஒரு தந்தை தன் குழந்தைக்கு விட்டுச் செல்ல எதுவும் இருக்கவில்லை. உற்பத்தி சக்திகளின் விருத்தியின் விளைவாக உற்பத்திக் கருவிகளின் உடமை தனியார் கைக்கு மாறியது. அதன்பின் பணத்தின் திரட்சியும் மூலதனமும் உருவாகின. இந்த நிலையில் ஆண் தனது தனியுடமை தனது மனைவிக்கு பிறந்த தனது குழந்தைகளுக்கு போவதை விரும்பினான். இதுவே ஒருதார மணம் நடைமுறைக்கு வந்த அடிப்படை. இந்த ஒருதார மணம் என்பது பெண்ணுக்குரியதாக இருந்ததேயொழிய ஆணுக்கு அல்ல. பெண் வழிச் சமூகம் ஆண் வழிச் சமூகமாக மாறியது. ஆண் ஆதிக்கத்திற்கு வந்தான். இந்த ஆண் ஆதிக்க நிலை முடிவுக்கு வருமா? பெண் விடுதலை பெறுவாரா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

1910 ஆண்டு கிளாரா ஐட்கின் தலைமையில்

1910 ஆண்டு கிளாரா ஐட்கின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களின் பிரச்சனைக்கு உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1917ம் ஆண்டு மார்ச் 8 ம் திகதியன்று பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர் இந்த தினமே உலக மகிளிர் தினமாகும் இந்த அமைப்பில் முதலாளிகளுக்கு இலாபத்தை தருகிற வேலை மட்டுமே ஆக்கபூர்வமான வேலையாக கருதப்படுகிறது. இதன்படி பெண்கள் வீடுகளின் நான்கு சுவர்களுக்குள் செய்யும் உழைப்பு பயனற்ற வேலை என்றே கருதப்படுகிறது. இதை கவனிக்க வேண்டியது பெண் செய்யவேண்டிய முதல் காரியம் என்றார் ரோசா லக்சம்பேர்க் பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்போது? பொருளாதார நிலைமைகள் மாறி உற்பத்திக் கருவிகள் மீண்டும் சமூகத்தின் உடமையாகும்போது நிச்சயமாக அது முடிவுக்கு வரும். உற்பத்தியில் சமபங்குடையவராகப் பெண்ணின்நிலை மீட்கப்படும். அப்போது திருமணமும் ஒருதார முறையும் நிலைக்குமா என்பதை இப்போது கூறுவது கடினம். ஆனால் வேறுபட்ட பொருளாதார நிலைமைகள் வேறுபட்ட விதமான சமுதாயத்தை உருவாக்கும். அவ்வாறு மாறிய பொருளாதார சமூகநிலைமைகளின் கீழ் வாழும் மக்கள் தாம் வேண்டும் சமூக அமைப்பு எப்படியானதாயிருக்க வேண்டும் என்பதுபற்றி தமது சொந்த முடிவுகளை எடுப்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாயிருப்பர் என்பதில் ஐயமில்லை.

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு.

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு. முறத்தால் புலியை விரட்டியதாக கூறும் புறநானூற்றுக் கதைகள் எல்லாம் உண்மைதானோ என்று இப்பொது நினைக்க தோன்றுகிறது. ஆதிகாலத்தில் பெண் தலைமையே இருந்ததாக சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காலப் போக்கில் பெண் எப்படி அடிமையானாள் அல்லது ஆணாதிக்கம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி இங்கு நான் உரையாடப் போவதில்லை. ஆனால் வெகுவிரைவில் அனைத்து அடிமைத்தனத்தையும் உடைத்து அவர்கள் தமது வரலாற்றை படைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்குரிய அனைத்து தகுதிகளும் எமது தமிழ இன பெண்களுக்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

செய்தி - மற்ற மூவரையும் உயிரோடு

செய்தி - மற்ற மூவரையும் உயிரோடு விடுதலை செய்ய வேண்டும் என கோரியுள்ளார் சிறீதரன் சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 33 வருடமாக மௌனமாக இருந்தவர் இப்போது அதுவும் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கோரியுள்ளார். இதற்கு காரணம் சாந்தன் மரணமும் அதையடுத்து மக்கள் மத்தியில் உருவாகியுள்ள இந்தியா மீதான கோபம். இனியாவது மற்ற மூவரையும் உயிரோடு விடுதலை செய்து மக்களின் கோபத்தை தணிக்க இந்திய அரசு முன்வரவேண்டும்.

சாந்தன் உடலை ஊருக்கு எடுத்துச் சென்று

சாந்தன் உடலை ஊருக்கு எடுத்துச் சென்று தாயாரிடம் ஒப்படைத்திருக்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி அப்போது சாந்தன் பல நாட்களாக கழுத்தில் கட்டியிருந்த மாலையையும் தாயாரிடம் ஒப்படைத்துள்ளார். சாந்தனின் தாயார் வழக்கறிஞரின் காலில் விழுந்து என் மகனுக்கு நான் செய்யாத கடமை எல்லாம் நீங்கள் செய்துள்ளீர்கள்” என்று அழுதுதிருக்கிறார். “உங்கள் மகன் சாந்தனை உயிருடன் கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றேன். முடியாமற் போய்விட்டது” என்று கூறி அழுதிருக்கிறார் வழக்கறிஞர். மூன்று நாட்கள் தொடர்ந்து அழுது கொண்டிருந்த ஒரு வழக்கறிஞரை நான் இதற்கு முன் பார்த்ததில்லை என்று அருகில் இருந்து அவதானித்த முன்னாள் பெண் போராளி ஒருவர் பதிவு செய்கிறார். வழக்கறிஞரின் இந்தப் பணியை பாராட்டி கௌரவித்துள்ளது யாழ் ஊடக மையம். சாந்தன் மரண நிகழ்வில் பங்கு பற்றிய முருகன் தாயார் எப்படியாவது என் மகனை உயிருடன் மீட்டு தாருங்கள் என வழக்கறிஞரின் கரங்களை பிடித்து கெஞ்சுகிறார். வழக்கறிஞர் புகழேந்தி வெறும் வழக்கறிஞர் மட்டுமல்ல. அவர் ஒரு தமிழ்த் தேசிய உணர்வாளர். அதுவும் தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்த்தேசிய விடுதலையை நேசிப்பவர். அதனால்தான் அவர் நான் இந்தியனாக வரவில்லை. தமிழனாக கூறுகின்றேன் “ சாந்தன் மரணத்திற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் இரண்டுமே பொறுப்பு” என பகிரங்கமாக யாழ்ப்பாணத்தில் கூறினார். அவர் சிறப்புமுகாமில் உள்ளவர்களின் விடுதலைக்கு தொடர்ந்து உதவி வருகிறார். நான் எழுதிய சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் நூலுக்கு அணிந்துரையும் எழுதியிருக்கிறார். கொடுமை என்னவென்றால் சாந்தன் விடுதலை தாமதத்திற்கு இந்த வழக்கறிஞர்தான் காரணம் என்று ஒருவர் ஆதாரம் இன்றி அவதூறு செய்கிறார். இந்த நபர் யார் என்று பார்த்தால் நாலு சங்கிகளை வைத்து டில்லியில் கூட்டம்போட்டுவிட்டு இந்திய அரசு தமிழீழம் பெற்று தரப்போகிறது என்று கூறித்திரிபவர். இந்திய உளவுப்படையினரை திருப்திப்படுத்துவதற்காக சாந்தன் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள் மீது சேறு பூசும் இந்த நாய்களுடன் கடிபடுவதைவிட அவற்றுக்கு வழி விடுவதே மேல்.

கஞ்சாவை விற்றார் .

கஞ்சாவை விற்றார் . பிடித்து சிறையில் போட்டார்கள். கஞ்சாவுடன் சேர்த்து பக்தியை விற்றார். இப்போது மகான் என்கிறார்கள் கடவுள் சிவனுக்கு தமிழ் தெரியாது என்று கூறிய கன்னட ஆசாமி. சிவராத்திரி வந்தால் கஞ்சாவை போட்டிட்டு இந்தாள் ஆடுற ஆட்டம் தாங்க முடியவில்லை. ஸ்டாலின் சார்! பிளீஸ், இந்தாளை பிடிச்சு உள்ளே போடுங்க.

தமிழ்நாட்டில் ஒருநாள் ஒரு ஊரில்

தமிழ்நாட்டில் ஒருநாள் ஒரு ஊரில் பசு மாடு ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இதை கவனித்த கோயில் யானை “ஏன் இந்தளவு வேகமாய் ஓடுகிறாய்?” என கேட்டது. அதற்கு அந்த பசு மாடு “ தெருவில் திரியும் நாய்களை பிடிக்க வண்டியுடன் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்” என்றது. இதைக் கேட்ட யானை ஆச்சரியத்துடன் “ நீதான் நாய் இல்லையே. நீ பசு மாடுதானே? நீ ஏன் ஓடுகிறாய்?” என கேட்டது அதற்கு அந்த பசுமாடு “ நான் பசுமாடுதான். ஆனால் அவர்கள் என்னை பிடித்தால் நான் நாய் இல்லை பசு என்பதை நிரூபிக்க 33 வருடம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் ” என்றது. இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓடியது. இது ஒரு நகைச்சுவை கதைதான். ஆனால் இதைவிட நகைச்சுவையானது தமிழ்நாடு பொலிசாரின் நிஜக்கதைகள். இப்போது சாந்தன் இறந்த பின்பு குண்டு சாந்தனுக்கு பதிலாக சின்ன சாந்தனை வழக்கில் இணைத்துவிட்டார்கள் என்ற கதை அடிபடுகிறது. இதைக் கேட்ட சிலர் இப்படியும் நடக்க முடியுமா என ஆச்சரியத்துடன் கேட்கின்றனர். இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு தருகிறேன் . தமிழ்நாட்டில் கிருபன் என்பவர் புலிகளின் பொறுப்பாளராக இருந்த காலம். அவர் மோட்டார் சயிக்கிளில் வருவதாகவும் அவரை கைது செய்யும்படி வயலர்ஸ்சில் பொலிஸ் கமிஷனர் அறிவித்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிசார் ஒருவர் வீதியால் அப்போது மோட்டார் சயிக்கிளில் வந்த ஒரு ஈழத் தமிழரை மறித்தார். அவரிடம் பெயர் என்ன என்று கேட்டபோது அவர் தன் பெயர் நிருபன் என கூறியிருக்கிறார். உடனே அந்த பொலிசார் இவர்தான் அந்த கிருபன் என நினைத்து கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்த நிருபன் புலி உறுப்பினர் இல்லை. இவர் ஒரு முன்னாள் ரெலோ இயக்க போராளி. அப்போது இவர் இயக்கத்தில் இருந்து விலகி சென்னை திருவொற்றியூரில் பெற்றோல் விற்பனை நிலையம் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். தான் கிருபன் இல்லை, நிருபன் என்று அவர் எவ்வளவோ முறை கூறியும் பொலிசார் அதை கேட்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் உண்மையான கிருபன் கைது செய்யப்பட்ட பின்பும்கூட இவரை பொலிசார் விடுதலை செய்யவில்லை. அதைவிடக் கொடுமை என்னவென்றால் ரெலோ இயக்க போராளியான இவரை புலி இயக்க போராளி என்றுகூறி பல வருடங்களாக சிறையில் அடைத்துவிட்டார்கள். பல வருட சிறை மற்றும் சிறப்புமுகாம் கொடுமைகளை அனுபவித்த அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார். அவர் தற்போது ஜரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகிறார். குண்டு சாந்தனுக்கு பதிலாக சின்ன சாந்தனை அடைப்பது, கிருபனுக்கு பதிலா நிருபனை அடைப்பது தமிழக பொலிசாரின் வழமையே.

தமிழால் வாழ்ந்தவர் பலர்

தமிழால் வாழ்ந்தவர் பலர் தமிழுக்காக வாழ்ந்தவர் சிலரே அந்த சிலருள் பாவலேறு பெருஞ்சித்திரனார் ஒருவர் அவர் இருந்தவேளை அவரின் அருமை தெரியவில்லை ஆனால் இப்போது அவர் இல்லையே என்று ஏங்க வைக்கிறது. அதுதான் அவர் சம்பாதித்த சொத்து தமிழும் தமிழரும் இருக்கும்வரை அவர் பெயரும் உச்சரிக்கப்படும் பெண்களை கவிதை எழுத வைத்தது திராவிட இயக்கமே என்று வைரமுத்து போல் கூறி பரிசுகளும் பதவிகளும் பெற்றிருக்க முடியும். ஆனால் அவரோ ராஜிவ்காந்தி வயிறு வெடித்து சாக வேண்டும் என்று அறம்பாடி சிறைத் தண்டனையை அனுபவித்தார். ஏன் அவரை திராவிடமும் ஆரியமும் விரும்புவதில்லை என்பது இப்போது புரிகிறதா?

தமிழர் , தமிழ்நிலத்தில்

தமிழர் , தமிழ்நிலத்தில் அமைந்துள்ள தம் கடவுளை வணங்க முடியவில்லை. தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைக்கூட தூக்கி எறிகிறார்கள் சிங்கள பொலிஸ். எம்மவர் கையில் எம் நிலம் கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்த பிரச்சனை இருக்கவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது? தமிழர் தம் கடவுளை வணங்குவதற்குகூட தமிழரிடம் அதிகாரம் இருக்க வேண்டும். பூநகரியில் சீன கம்பனி , இறால் கம்பனிக்கு உதவுவதை ஏன் எதிர்க்கவில்லை என தமிழ் தலைவர்களிடம் கேட்ட இந்திய தூதர் இது பற்றி கேட்கமாட்டாரா? தமிழ்க் கிருத்தவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம் சிஙகள பௌத்த பேரினவாதிகளுக்கு எதிராக போராட மாட்டாரா?

ஆண்டவரின் வளர்ச்சி!

•ஆண்டவரின் வளர்ச்சி! பாவம். எப்படி இருந்த மனிதர். இப்படி ஆயிட்டாரே? ஊழலை ஒழிக்க மையம் ஆரம்பித்தவர் ஒற்றை எம்.பி சீட்டுக்காக ஊழல் திமுக வில் ஐக்கியமாயிட்டாரே?

ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து

ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து ஜெயா அம்மையார் தமிழக முதல்வராக இருந்தநேரம் அவரது சட்ட அமைச்சராக இருந்தவர் கிருஸ்ணசாமி. இந்த சட்ட அமைச்சர் 1991ல் ஒருநாள் மதுரை சிறைக்கு வந்து கைதிகளை பார்வையிட்டார். அப்போது என்னருகில் வந்தபோது “இவர் ஒரு ஈழப் போராளி. கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்” என சிறை ஜெயிலர் கூறினார். உடனே சட்ட அமைச்சர் மிகுந்த கோபத்துடன் “ இனி ஈழத் தமிழருக்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடைக்காது. உங்கள் நெடுமாறனிடம் கூறுங்கள். ஈழத் தமிழரை ஆதரிக்க வேண்டாம் என்று” என்னைப் பார்த்து ஏசினார். ஆனால் வேடிக்கை என்னவெனில் பின்னர் இவரது இதே ஜெயா அம்மையார் ஈழத் தமிழரை ஆதரித்தது மட்டுமன்றி ராஜீவ் காந்தி வழக்கில் இருந்த ஏழு தமிழரின் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றினார். நெடுமாறன் அவர்கள் ஆரம்பம் முதல் ஈழத் தமிழர்களையும் புலிகளையும் உறுதியாக ஆதரித்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்த விடயமே. இதனால் அவர் பல வழக்குகளை சந்தித்து பல வருடங்டகள் சிறையும் அனுபவித்தவர். மதுரை சிறையில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை ஒருநாள் நெடுமாறன் அவர்கள் என்னை பார்வையிட வந்திருந்தார். அன்று நான் சிறைக் கண்காணிப்பாளருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தமையினால் அதைக் காரணம் காட்டி அவருக்கு பார்வையிட அனுமதிக்கவில்லை. அக் காலத்தில் சிறை மற்றும் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளுக்கு மாதா மாதம் நூறு ரூபா பணம் உதவியளித்து வந்தார் நெடுமாறன் அவர்கள். அதன்படி அவர் எனக்கும் பணம் உதவி செய்ய முன்வந்தார். ஆனால் நான் “எனக்கு நிறைய தோழர்கள் உதவி செய்கிறார்கள். எனவே எந்த உதவியும் இன்றி இருப்பவர்களுக்கு இந்த உதவியை வழங்குங்கள் “ என்று கூறினேன். பின்னர் எனது வழக்கில் நான் நிரபராதி என்று திண்டுக்கல் நீதிமன்றம் என்னை விடுதலை செய்தபோது தமிழக அரசு என்னை சிறப்புமுகாமில் அடைத்தது. அப்போது இதை அறிந்த நெடுமாறன் அவர்கள் சிறப்புமுகாமில் இருந்து விடுதலைபெற ஏதாவது சட்ட உதவி வேண்டுமா எனக் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். இவ்வாறு பல தடவைகள் எனக்கு உதவ முன்வந்தவர் நெடுமாறன் அவர்கள். அதனை நான் இங்கு நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். ஆனால் நெடுமாறன் அவர்கள் இப்போது பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் அவர் மீண்டும் வந்து ஈழம் பெற்று தரப்போகிறார் என்றும் கூறிவருவது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு கூறுவது ஈழத் தமிழருக்கு எந்த நனமையும் தராது என்பது நன்கு தெரிந்தும் ஏன் அவ்வாறு கூறி வருகின்றார் என்பது புரியவில்லை. எனினும் அவர் ஈழத் தமிழருக்கு அளித்து வந்த ஆதரவை மறக்க முடியாது. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

போராட்டம் வெற்றி பெறட்டும்

போராட்டம் வெற்றி பெறட்டும் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை பெற வழி பிறக்கட்டும்! ஒன்று சேர்வோம்! ஒருமித்து குரல் கொடுப்போம்!! எமது மண்ணில் எமது கடவுளை நாம் வணங்குவதற்குரிய உரிமையை பெற தொடர்ந்து போராடுவோம்!!

கஞ்சா அடிச்சா சிரிப்புதானே வரும்

கஞ்சா அடிச்சா சிரிப்புதானே வரும் அதெப்படி சிரிப்பு நடிகருக்கு அழுகை வருகிறது? 😂😂

போதைபொருள் கடத்தல் மேட்டர் வந்ததும்

போதைபொருள் கடத்தல் மேட்டர் வந்ததும் மணல் கடத்தல் நபரை மறந்துவிட்டார்கள் சிறையில் கிடந்து வாடுவதைவிட இவர் அப்பூரூவராக மாறி காட்டிக் கொடுக்கலாமே?

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் தமது சொந்த செலவில் நாட்டைவிட்டு வெளியேற விரும்பினால் உடனே அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதன்படி முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கேட்டு வருகிறார். ஆனால் தமிழக அரசு அவரது விருப்பத்திற்கு மாறாக அவரை இலங்கைக்கு அனுப்ப உயர்நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது. இந்தியாவில் உள்ள ஈழத் தமிழரை பலவந்தமாக அவர்கள் விருப்பத்திற்கு மாறாக இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என உயர்மன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றத்திடம் இருந்து பெற்றுக்கொடுத்தவர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள். தமிழக அரசின் இந்த சட்டவிரோத போக்கை கண்டிக்க வேண்டியவர்கள் இதுதான் சட்டநடைமுறை என தமிழக அரசை நியாயப்படுத்த முயல்கிறார்கள். இதே ராஜிவ் காந்தி வழக்கில் மரண தண்டனை பெற்றவர்களில் ஒருவர் ரங்கன். உச்சநீதிமன்றம் இவரது மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது. அப்போது இவர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறி லண்டன் வந்தார். லண்டனில் அவர் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகையில் 2012ல் மரணமடைந்துள்ளார். இங்கு எனது கேள்வி என்னவெனில் இதே ராஜிவ் காந்தி வழக்கில் இருந்த ரங்கன் லண்டன் வந்து வாழ இடங்கொடுத்த சட்டநடைமுறை இப்போது எப்படி முருகனுக்கு மறுக்கிறது? ஒரே காரணம்தான். அப்போது தமிழக முதல்வராக ஸ்டாலின் இருக்கவில்லை.

புலவரின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு

புலவரின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு புலவரின் நினைவு இல்லத்தில் சாந்தனின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்கார்த்தி அவர்கள் சாந்தனின் படத்தை திறந்து வைத்துள்ளார். இந்திய மத்திய மாநில அரசுகளின் நீதியற்ற செயலால் உயிரிழந்த சாந்தன் எனக் குறிப்பிட்டு வரலாற்றுக்கு கடத்தியுள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

கை தட்டு பெறுவதற்கு

கை தட்டு பெறுவதற்கு குரங்கு பல விதங்களில் குட்டிக்கரணம் போட வேண்டும். ஆனால் புலி நடந்தாலே போதும். குறிப்பு – மன்னிக்கவும். பிரதமர் மோடியை குரங்குடன் ஒப்பிடுவதாக கருத வேண்டாம். உதாரணம் ஊனமானவை.😂

முதல் இந்தி எதிர்ப்பு மொழிப் போரில்

முதல் இந்தி எதிர்ப்பு மொழிப் போரில் உயிர்நீத்த இரண்டாம் ஈகி தாளமுத்து நினைவுநாள் 12.03.1939

வாரிசு அரசியலுக்கு

வாரிசு அரசியலுக்கு இலங்கையில் ஏற்பட்ட முடிவு தமிழ்நாட்டிலும் ஏற்படுமா?

பேச்சுவார்த்தைக்காக செல்லும்

பேச்சுவார்த்தைக்காக செல்லும் ஒரு தூதுவரை சுட்டுக்கொல்ல முடியுமா? அதுவும் அமைதிப்படை என்று வந்தவர்கள் செய்ய முடியுமா? சென்னையில் சிறை வைக்கப்பட்டிருந்த போராளி ஜொனியை தூதுவராக அழைத்துச் சென்று வன்னியில் இந்திய ராணுவம் நயவஞ்சகமாக கொன்ற தினம் 13.03.1988

உலகில் எந்த நாட்டில் இருந்தும்

உலகில் எந்த நாட்டில் இருந்தும் ஒரு இந்து வந்து இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் ஈழத் தமிழ் இந்துக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது. இதுதான் இந்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமைச்சட்டம். ஏனெனில் ஈழத் தமிழரை இந்துக்களாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறிவரும் காசி ஆனந்தன், இந்திய அரசுக்காக ஈழத்தில் சிவசேனை அமைத்த மறவன்புலவு சச்சிதானந்தம், இருவரும் இனி என்ன கூறப்போகிறார்கள்? குறிப்பாக அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்டியவர்கள் பதில் தருவார்களா?

சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமி.

சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமி. அவரின் உதவியாளர் போதைப்பொருள் கடத்தலில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக வரலட்சுமி NIAயினால் விசாரிக்கப்பட்டுள்ளார். தன் மகளை காப்பாற்றுவதற்காகவே சரத்குமார் பாஜகவில் ஜக்கியமாயுள்ளதாக பஞ்சாயத்து வந்துள்ளது. நாட்டாமைக்கே பஞ்சாயித்தா?

கமல், சரத்குமார் போன்றவர்கள்

கமல், சரத்குமார் போன்றவர்கள் எல்லாம் தனித்து கட்சி நடத்த முடியாமல் திமுக விலும் பாஜகவிலும் சரணடைவதை பார்க்கும்போது, எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் அடிபணியாது தனித்து நிற்கும் நாம்தமிழர் கட்சியினர் பாராட்டுக்குரியவர்களே. அவர்கள் இதுவரை வெற்றிபெறவில்லையே என வருந்த வேண்டியதில்லை. அவர்கள் தனித்து நிற்பதே வெற்றிதான்.

எந்தவொரு நீண்ட இரவுக்கும்

எந்தவொரு நீண்ட இரவுக்கும் விடிவு உண்டு என்கிறார்கள். தமிழ்நாட்டில் ஈழத் தமிழரின் 40 வருட அகதி வாழ்விற்கு ஒரு முடிவு வராதா?

நாலு திருடர்கள் ஒன்று சேர்ந்து தமக்குதாமே

நாலு திருடர்கள் ஒன்று சேர்ந்து தமக்குதாமே "பொலிஸ்" என பெயர் வைத்துக்கொண்டார்களாம். அப்புறம் இனி யாரும் தம்மை கைது செய்ய மாட்டார்கள் என எண்ணிக்கொண்டார்களாம். நம்புங்கள்! திமுகவில் எல்லாமே ஜனநாயக முறைப்படியே நடக்கிறது. வாரிசு முறையில் அல்ல.😂

இருவரும் ஈழத்தமிழர்கள்

இருவரும் ஈழத்தமிழர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும்கூட ஒருவர் வெடுக்குநாறி மலையில் ஈழத் தமிழரின் வணங்கும் உரிமைக்காக போராடுகிறார். இன்னொருவர் ஈழத் தமிழரின் கடவுளை வழிபடும் உரிமையை மறுக்கும் ஜனாதிபதியுடன் சேர்ந்து கிரிக்கட் பார்க்கிறார். இதில் யார் தமிழ்மக்களுக்கானவர்?

மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள் மார்ச் 14,

மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள் மார்ச் 14, மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட நாள் என்று அவருடைய நண்பர் எங்கெல்ஸ் அவர்கள் உலகிற்கு அறிவித்தார். கால் மாக்ஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாக்சியமானது மாபெரும் அக்டோபர் புரட்சியினூடாக லெனிசமாக வளர்ச்சி கண்டது. பின்னர் மாபெரும் சீனப் புரட்சியினூடாக மாவோ சிந்தனையாக விரிபு பெற்றது. இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மாக்சியம் வளம் பெற்றது. இன்றைய உலகமயமாதல் சூழலிலே மாக்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியி;ன் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச்செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர் நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக் கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு. இன்றைய சூழலில் மாக்சியம் சோசலிசத்திற்கான தேவைகள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளன. மாக்சியம் படிக்கப்பட வேண்டியதாயும் சோசலிசத்திற்கான பல்வேறு வகைப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியனவாகவும் உள்ளன

மனிதனால் ஒரு புழுவைக்கூட உருவாக்க முடியாது.

மனிதனால் ஒரு புழுவைக்கூட உருவாக்க முடியாது. ஆனால் டஜன் கணக்கில் கடவுள்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறான். ஒரு பாடசாலையை உருவாக்கினால் அதில் ஆயிரம் ஆயிரம் கல்விமான்கள் உருவாகுவார்கள். ஆனால் ஒரு கோயில் கட்டினால் அதன் முன் ஆயிரம் பிச்சைக்காரர்கள்தான் உட்காருவார்கள். “உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும் - லெனின்

வெடக்குநாறிமலை சிவன் ஆலயத்தில்

வெடக்குநாறிமலை சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் உண்ணாவிரதம் ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் சென்னை ஆளுநர் மாளிகையில் விருந்து.

மார்க்ஸைப் படி

மார்க்ஸைப் படி லெனினைப் படி அப்புறம் அறிவாலயத்தில் ஸ்டாலினுக்கு விளக்கு பிடி 4 சீட்டும் 25 கோடி ரூபா பணமும்தான் இலட்சியமென்றால் கட்சியை கலைச்சிட்டு திமுகவிலேயே சேர்ந்துடுங்க.

உச்சநீதிமன்றத்தால் விடுதலையான

உச்சநீதிமன்றத்தால் விடுதலையான ஏழு தமிழரில் ஒருவரான ரவிச்சந்திரன் அவர்களின் காரா புத்தக நிலைய திறப்புவிழா நடைபெற்றுள்ளது. ரவிச்சந்திரன் அவர்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். உச்சநீதிமன்றத்தால் விடுதலையான பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் கடந்த 15 மாதங்களாக சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அவர்களால் தமிழ்நாட்டில் எந்தவித சட்ட ஒழுங்கும் பாதிக்கப்படவில்லை. ஆனால் முருகன், ஜெயக்குமார், பயஸ் ஆகியோரை வெளியில் விட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. இத்தனைக்கும் முருகனின் மனைவி நளினி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஜெயக்குமாரின் மனைவி தமிழ்நாட்டை சேர்ந்தவர். மனைவியுடன் சேர்ந்துவாழ கணவனை அனுமதிக்க வேண்டும் என்பது உலக மரபு. ஆனால் அதையும்கூட ஏற்றுக்கொள்ள தமிழக அரசு தயாராக இல்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள். அதுவும் ஈழத் தமிழர்கள்.

ஒரு டவுட்!

ஒரு டவுட்! ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் வழக்கில் கூட இருந்த அமீரை இத்தனை கேள்வி கேட்ட ஊடகங்கள் உதயநிதியைவும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதியையும் ஏன் கேள்வி கேட்கவில்லை?

நினைவஞ்சலிகள்!

•நினைவஞ்சலிகள்! தனித் தமிழர் சேனைத் தலைவர் நகைமுகன் அவர்களின் நினைவுதினம் இன்று ஆகும்.(14.03.2016) நகைமுகன் அவர்கள் தமிழ்த் தேசிய உணர்வாளர் மட்டுமன்றி உறுதியான ஈழத்தமிழர் ஆதரவாளரும்கூட. விடுதலைப்புலிகளை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டில் கலைஞர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டவர். சிவசேனைத் தலைவர் பால்தக்ரே அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்க இவரே காரணம் என்றும் கூறப்பட்டது. 1991ல் ராஜிவ் காந்தி மரணத்தின் பின் ஈழத் தமிழரை ஆதரிக்க பலரும் அஞ்சிய சூழலில் இவர் தைரியமாக ஈழத் தமிழரை ஆதரித்தார். “பாயும்புலி பண்டார வன்னியன்” என்னும் இதழ் நடத்தி வந்தார். அதில் தமிழ் நாட்டில் ஈழத் தமிழருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து எழுதினார். குறிப்பாக சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த என் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம்

எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து

எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துவதும் வாழ்த்து பெறுவதும் வரம் என்பார்கள். அது எனக்கு நிறைய கிடைத்து வருவது மகிழ்ச்சியே. சிறுவயதில் அர்ச்சனை செய்து விபூதியை தாயார் என் நெற்றியில் பூசும்போது அன்று என் பிறந்தநாள் என்பதை தெரிந்து கொள்வேன். அதன்பின்னர் பெரியவனான பின்பு பிறந்த நாள் பற்றி ஒருபோதும் அக்கறை கொண்டதில்லை. ஒருமுறை நான் வேலுர் கோட்டையில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது (1992ம் ஆண்டு) அங்கு இருந்த காயம்பட்ட புலிப் போராளிகளால் எனது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கரப்பந்தாட்டப்போட்டி நடத்தி கொண்டாடினார்கள். இறுதியாக இரண்டு கண்ணும் இரண்டு கையும் அற்ற ஒரு போராளி எனக்கு புட்டும் பலாப்பழமும் பிறந்தநாள் பரிசாக தந்தது இன்றும் என் நினைவில் உள்ளது. இந்த வாழ்த்துக்கள் எனக்கு மகிழ்சியையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன.அவை தொடர்ந்து பயணிக்க துணைபுரிகின்றன.

ஒரு நாட்டில் போராடும் இனத்திற்காக

ஒரு நாட்டில் போராடும் இனத்திற்காக இன்னொரு நாட்டில் வாழும் அதே இனம் தீக்குளித்து மரணிப்பது என்பது ஒரு அதிசய வரலாறுதான். அந்த அதிசய வரலாற்றை ஈழத் தமிழர்களுக்காக நடத்தியவர்கள் தாய் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 16 பேர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளனர். 2009ல் இதே நாளில் (17.03.2009) ஈழத் தமிழருக்கு ஆதரவாக யுத்தம் நிறுத்தம் கோரி இருவர் தீக்குளித்து மரணம் அடைந்தார்கள். ஒருவர் அரியலூரைச் சேர்ந்த ராசசேகர். இன்னொருவர் கடலூரைச் சேர்ந்த நா. ஆனந்து. இவர்களுடைய தியாகம் மறக்க முடியாதது. ஈழத் தமிழர்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியது. ஆனால் இவர்கள் உட்பட மொத்தம் 16 பேர் உயிர் தியாகம் செய்தும் யுத்தம் நிறுத்தப்படவில்லை. இவர்களது போராட்டத்திற்கோ அல்லது உயிர் தியாகத்திற்கோ இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை. 8 கோடி தமிழர் அருகில் இருந்தும் வெறும் இரண்டு கோடி பேர் கொண்ட சிங்கள அரசு அஞ்சவில்லை அதற்கு ஓரே காரணம் அந்த 8 கோடி தமிழரிடம் அதிகாரம் இல்லை. மாறாக 8 கோடி தமிழரும் அடிமையாக இருப்பதால்தான் இந்திய அரசும் பொருட்படுத்தவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை. சரி. அப்படியென்றால் ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்? ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும். இதை நான் கூறுவதாக கருத வேண்டாம். தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து போராட்டம் நடத்திய தோழர் தமிழரசன் கூறியிருக்கிறார்.

ஆயுதம் ஏந்திப் போராடுவதை

ஆயுதம் ஏந்திப் போராடுவதை “பயங்கரவாதம்” என்று கூறிய காந்திதேசம் என்னும் இந்தியாவின் அரசு, அன்னை பூபதியின் அகிம்சைப் போராட்டத்திற்கு அளித்த மதிப்பு என்ன?

உனக்கான சுதந்திரத்தையும்,

"உனக்கான சுதந்திரத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் யாராலும் கொடுக்க முடியாது. உண்மையில் நீ மனிதன் என்றால் அவற்றை நீயே எடுத்துக்கொள்" - மால்கம் எக்ஸ்

இன்று இவரின் பிறந்தநாள்

இன்று இவரின் பிறந்தநாள் இது இவரின் வாழ்வில் மறக்க முடியாத பிறந்தநாளாக இருக்கும் தமிழரின் வழிபாட்டு உரிமைக்காக போராடுவதும் அதற்காக சிறையில் அடைபட்டுக்கிடப்பதும் அச் சிறையிலேயே பிறந்தநாளை கழிக்க நேருடுவதும் பிறந்த நாளில் கணவர் சிறையில் என்பது மனைவிக்கு நிச்சயம் வருத்தம் தரும் கோவிலுக்கு வழிபடச் சென்ற தந்தை ஏன் இன்னும் வரவில்லை என்ற ஏக்கம் பிள்ளைகளுக்கு இருக்கும் இவர்களுடைய நிலம் இவர்களுடைய கோவில் இவர்களுடைய கடவுள் இவற்றை விற்றவர்கள் யார் என்று தெரியவில்லை ஆனால் இவற்றுக்கு இவர்கள் இன்று விலை கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

எங்களைப்போல் தமது விடுதலைக்காக

எங்களைப்போல் தமது விடுதலைக்காக போராடும் ஒரு இனம். அதுமட்டுமல்ல எமது போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கிவரும் இனம். பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து தொடரும் அவர்கள் போராட்டம் வெல்லட்டும். குர்து இன மக்கள் விடுதலை பெற எமது வாழ்த்துகள்! அவர்களின் ஆண்டு பிறப்பு 20.03.24

நேற்றைய தினம் லெவ் ஷெய்னின்

நேற்றைய தினம் லெவ் ஷெய்னின் அவர்களின் “புலனாய்வாளரின் குறிப்புகள்” என்னும் நூல் படித்தேன். இது ரஸ்ய புலனாய்வாளர் ஒருவரின் குறிப்புகள். அவர் குறிப்பிடுகின்றார் “ புலனாய்வாளன் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தின் ஆழத்திலும் புகுந்து பார்க்க வேண்டும். ஆகவேதான் ஒரு புலனாய்வாளனுக்கும் ஓர் எழுத்தாளனுக்கும் இடையே பொதுவானவை அதிகம் இருக்கின்றன.” எம் இனத்திலும் ஒரு பெருமைப்படக்கூடிய புலனாய்வாளர் இருந்தார். அவருடைய குறிப்புகள் ஒரு நூலாக வர வேண்டும். அவர் வன்னிக் காட்டுக்குள் இருந்துகொண்டு எப்படி இந்திய புலனாய்வு அமைப்புகளின் சதித்திட்டங்களை முறியடித்தார் என்பதை மக்கள் அறிய வேண்டும். அவர் எந்த புலனாய்வு கல்லூரியிலும் பயிலவில்லை. அதி சிறந்த தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத நிலையிலும் அவர் எப்படி அந்த சாதனைகளை புரிந்தார் என்பதை அடுத்த சந்ததியினர் அறிய வேண்டும். இப்போது அவரது பேச்சுக்கள் , எழுத்துக்கள் ஒரு நூலாக வந்துள்ளது. நான் இன்னும் படிக்கவில்லை. விரைவில் படித்துவிட்டு என் கருத்தை பகிர்வேன்.

ரொம்பநாள் வாய் பேச முடியாமல்

ரொம்பநாள் வாய் பேச முடியாமல் இருந்த மகன் ஒருநாள் திடீரென்று பேசினான். தாயைப் பார்த்து “தேவடியா” என்று கூப்பிட்டான். மகன் தன்னை அவ்வாறு அழைத்தது குறித்து தாய் கவலைப்படவில்லை. மாறாக ரொம்பநாள் பேசாமல் இருந்த மகன் பேசிவிட்டான் என்று மகிழ்ச்;சி அடைந்தார். அதுதான் தாய் என்பது. அதுபோல இந்துக்கல்லூரி சிறுவன் புலம்பெயர் தமிழர்களை பார்த்து பேசியுள்ளான். குட்டைக்கு கல் எறிந்து குழப்பியுள்ளான். நல்லது. குழம்பிய குட்டைதான் தெளிவு பெறும். ஆனால் தாயகத்தில் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்று பேசுவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமே என்பதை அந்த சிறுவன் உணர்ந்து கொள்ளட்டும்.

இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ,

இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்திற்கு உடையதோ, ஒரு தேசத்தினுடையதோ அல்ல. ஏன் மனிதனின் கூட்டுச்சொத்துமல்ல, நாம் பூமிக்கு விருந்தினர் மட்டுமே. பூமியில் நமக்கு கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில், வரும் தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்கவேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. - காரல் மார்க்ஸ்

நினைவஞ்சலிகள்

• நினைவஞ்சலிகள் ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக யுத்த நிறுத்தம்கோரி தமிழ்நாட்டில் நெற்குன்றம் விக்ரம் தீக்குளித்து மரணித்த நாள் 21.03.2009ஆகும் இந்தியஅரசு அகிம்சைப் போராட்டங்களை மதிக்காது என்பது மட்டுமன்றி தமிழர்களுக்கு உதவாது என்பதற்கும் இவரது மரணம் வரலாற்றில் ஒரு சாட்சி.

இலங்கையில் அதிகரிக்கும்

•இலங்கையில் அதிகரிக்கும் இந்திய அரசு மீதான எதிர்ப்பு யாழ் இந்திய தூதரலாயத்திற்கு முன்பாக வடபகுதி தமிழ் மீனவர்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். கொழும்பில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் “இந்திய மேலாதிக்கத்தை தோற்கடிப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலையில் இந்தியாவுக்காக தமது நிலம் பறிபோவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்மையில் இந்தியா சென்று வந்த ஜேவிபி தலைவர் அனுரா “ மகிந்தா கும்பலை விலைக்கு வாங்கியதுபோல் நம்மை வாங்க முடியாது” என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். தலைவர்களை விலைக்கு வாங்கிய இந்திய அரசால் மக்களை வாங்க முடியவில்லை. மாலைதீவைத் தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்திய எதிர்ப்பானது மோடி தலைமையிலான இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கைக்கு கிடைத்த தோல்வியாக உள்ளது.

ஒரு நாள் மகள் கொசு ஒன்று

ஒரு நாள் மகள் கொசு ஒன்று தன் தாய் கொசுவிடம் சென்று தான் யானையைக் காதலிப்பதாகவும் யானையுடன் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டதாம். அதற்கு அந்த தாய்கொசு “சரி காலையில பேசலாம். இப்ப பேசாமல் படு” என்றது. உடனே அந்த மகள் கொசு “இல்லை அம்மா. நான் மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறேன். என் கர்ப்பத்திற்கு அந்த யானைதான் காரணம்” என்றது. இதைக் கேட்ட அந்த தாய்க் கொசு மகள் கொசுவுக்கு எட்டி ஒரு உதைவிட்டது. தாய்க்கொசு “எத்தனை தடவை உனக்கு சொல்றது அந்த சாமி ஆச்சிரமத்திற்கு போகாதேயென்று. அங்கே போய் கஞ்சாவை தின்னுட்டு வந்து இப்படி உளறுவதே உனக்கு வேலையாகி போய்விட்டது” என்று மகள் கொசுவை ஏசியது. குறிப்பு – இது ஒரு (கொசு) கடி ஜோக்தான்😂. மற்றப்படி இதைப்படித்ததும் உங்களுக்கு ஜக்கி சாமி ஆச்சிரமம் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. சரி இப்போது விடயத்திற்கு வருகிறேன். நோய் வந்தால் தமது ஆச்சிரமத்திற்கு வந்து தியானம் செய்யும்படி தமது பக்தர்களுக்கு கூறும் எந்த மத மகானும் தனக்கு நோய் வந்தால் ஏன் உடனே மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள்?

சாந்தன் மரணம் போன்று

சாந்தன் மரணம் போன்று இன்னொரு மரணம் நிகழப்போகிறதா? இதை தடுத்து நிறுத்த என்ன செய்யப்போகிறோம்?

எனது நாட்டில் ஒரு சாண் நிலம்

எனது நாட்டில் ஒரு சாண் நிலம் எஞ்சி இருக்கும்வரை என்னிடம் ஒரு ஒலிவ் மரம் எஞ்சி இருக்கும்வரை ஒரு எலுமிச்சை மரம் ஒரு கிணறு, ஒரு சப்பாத்திக் கள்ளி எஞ்சி இருக்கும்வரை ஒரு சிறு நினைவு ஒரு சிறு நூலகம் ஒரு பாட்டனின் புகைப்படம், ஒரு சுவர் எஞ்சி இருக்கும்வரை அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை கவிஞர்கள் அந்தர் அல் -அப்ஸ் கதைகள் பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான யுத்த காவியங்கள் எனது நாட்டில் இருக்கும் வரை எனது கண்கள் இருக்கும் வரை எனது உதடுகள், எனது கைகள் எனது தன்னுணர்வு இருக்கும் வரை விடுதலைக்கான பயங்கரப் போரை எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்”. - மஹ்மூத் த‌ர்வீஷ் (பலஸ்தீனக் கவிதை)

எச்சரிக்கை !

எச்சரிக்கை ! இதயம் பலவீனமானவர்கள்; இதை படிக்க வேண்டாம் 😂😂

நினைவஞ்சலிகள்

•நினைவஞ்சலிகள் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் பாலசுந்தரம் ஆகியோரின் 15வது நினைவு நாள் 22.03.2024 இவ்வாறு 16 பேர் ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உயிர் தியாகம் செய்தார்கள். ஆனாலும் இந்திய அரசு இவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை.