Friday, March 22, 2024

எனது நாட்டில் ஒரு சாண் நிலம்

எனது நாட்டில் ஒரு சாண் நிலம் எஞ்சி இருக்கும்வரை என்னிடம் ஒரு ஒலிவ் மரம் எஞ்சி இருக்கும்வரை ஒரு எலுமிச்சை மரம் ஒரு கிணறு, ஒரு சப்பாத்திக் கள்ளி எஞ்சி இருக்கும்வரை ஒரு சிறு நினைவு ஒரு சிறு நூலகம் ஒரு பாட்டனின் புகைப்படம், ஒரு சுவர் எஞ்சி இருக்கும்வரை அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை கவிஞர்கள் அந்தர் அல் -அப்ஸ் கதைகள் பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான யுத்த காவியங்கள் எனது நாட்டில் இருக்கும் வரை எனது கண்கள் இருக்கும் வரை எனது உதடுகள், எனது கைகள் எனது தன்னுணர்வு இருக்கும் வரை விடுதலைக்கான பயங்கரப் போரை எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்”. - மஹ்மூத் த‌ர்வீஷ் (பலஸ்தீனக் கவிதை)

No comments:

Post a Comment