Friday, March 22, 2024

ஒரு நாள் மகள் கொசு ஒன்று

ஒரு நாள் மகள் கொசு ஒன்று தன் தாய் கொசுவிடம் சென்று தான் யானையைக் காதலிப்பதாகவும் யானையுடன் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டதாம். அதற்கு அந்த தாய்கொசு “சரி காலையில பேசலாம். இப்ப பேசாமல் படு” என்றது. உடனே அந்த மகள் கொசு “இல்லை அம்மா. நான் மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறேன். என் கர்ப்பத்திற்கு அந்த யானைதான் காரணம்” என்றது. இதைக் கேட்ட அந்த தாய்க் கொசு மகள் கொசுவுக்கு எட்டி ஒரு உதைவிட்டது. தாய்க்கொசு “எத்தனை தடவை உனக்கு சொல்றது அந்த சாமி ஆச்சிரமத்திற்கு போகாதேயென்று. அங்கே போய் கஞ்சாவை தின்னுட்டு வந்து இப்படி உளறுவதே உனக்கு வேலையாகி போய்விட்டது” என்று மகள் கொசுவை ஏசியது. குறிப்பு – இது ஒரு (கொசு) கடி ஜோக்தான்😂. மற்றப்படி இதைப்படித்ததும் உங்களுக்கு ஜக்கி சாமி ஆச்சிரமம் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. சரி இப்போது விடயத்திற்கு வருகிறேன். நோய் வந்தால் தமது ஆச்சிரமத்திற்கு வந்து தியானம் செய்யும்படி தமது பக்தர்களுக்கு கூறும் எந்த மத மகானும் தனக்கு நோய் வந்தால் ஏன் உடனே மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள்?

No comments:

Post a Comment