Friday, March 22, 2024

இலங்கையில் அதிகரிக்கும்

•இலங்கையில் அதிகரிக்கும் இந்திய அரசு மீதான எதிர்ப்பு யாழ் இந்திய தூதரலாயத்திற்கு முன்பாக வடபகுதி தமிழ் மீனவர்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். கொழும்பில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் “இந்திய மேலாதிக்கத்தை தோற்கடிப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலையில் இந்தியாவுக்காக தமது நிலம் பறிபோவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்மையில் இந்தியா சென்று வந்த ஜேவிபி தலைவர் அனுரா “ மகிந்தா கும்பலை விலைக்கு வாங்கியதுபோல் நம்மை வாங்க முடியாது” என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். தலைவர்களை விலைக்கு வாங்கிய இந்திய அரசால் மக்களை வாங்க முடியவில்லை. மாலைதீவைத் தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்திய எதிர்ப்பானது மோடி தலைமையிலான இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கைக்கு கிடைத்த தோல்வியாக உள்ளது.

No comments:

Post a Comment