Friday, March 22, 2024

சிறப்புமுகாமில் இருந்த சாந்தன் மரணத்திற்கு

சிறப்புமுகாமில் இருந்த சாந்தன் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் பொறுப்பு என நான் எழுதியிருந்தேன். அப்போது சில திமுக உடன்பிறப்புகள் சிறப்புமுகாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதற்கும் தமிழக முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று என்னை திட்டினார்கள். இப்போது முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் சாந்தன் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமன்றி நடைப்பயிற்சி செய்யக்கூட விடாமல் சிறப்புமுகாமில் சித்திரவதை செய்து வருகிறது தமிழக அரசு என்று கூறியிருக்கிறார். இப்போது இங்கு நான் கேட்க விரும்புவது, எடப்பாடிக்கும் சிறப்புமுகாம் யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று தெரியவில்லை என திமுக வினர் கூறப்போகின்றார்களா? எடப்பாடி அவர்கள் கூறியிருப்பது யாவும் உண்மைதான். ஆனால் இதைக்கூற அவருக்கும் எந்த அருகதையும் கிடையாது ஏனெனில் அவருடைய ஆட்சிக்காலத்திலும் இந்த சிறப்புமுகாம் சித்திரவதைகள் இருந்தன. இன்று ஸ்டாலின் எப்படி சிறப்புமுகாம் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறாரோ அதேபோன்றுதான் எடப்பாடி அவர்களும் ஆட்சியில் இருந்தபோது கண்டு கொள்ளாமல் இருந்தார். இவர்கள் இருவரும் எதிர்க்கட்சியில் இருக்கும்போது நீலிக் கண்ணீர் வடிப்பதும் ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

No comments:

Post a Comment