Friday, March 22, 2024

ஊருக்குபோய் தன் தாயின் கையால்

ஊருக்குபோய் தன் தாயின் கையால் ஒரு குவளை கஞ்சி குடிக்க வேண்டும் என்பதே சாந்தனின் கடைசி ஆசையாக இருந்தது. தான் இறப்பதற்கு முன் தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்பதே சாந்தன் தாயாரின் 33 வருட ஆசையாக இருந்தது. இரக்கமற்ற இந்திய அரசு இவர்களின் ஆசையை நிறைவேற்றவில்லை. எத்தனை தடைகள். அத்தனையும் தாண்டி மக்கள் சாந்தன் உடலை அவர் ஊருக்கு கொண்டு சென்று தாயிடம் ஒப்படைக்கின்றனர். மக்கள் அளித்துள்ள இந்த பதிலை இனியாவது இந்திய அரசு புரிந்துகொள்ளட்டும். மற்ற மூவரையுமாவது உயிரோடு அவர்கள் விரும்பும் நாடு செல்ல அனுமதிக்கட்டும்.

No comments:

Post a Comment