Thursday, August 31, 2023

எல்லா நூல்களையும்விட

எல்லா நூல்களையும்விட பூணூல் தடிப்பு மிக்கது கொழுப்பும் கூடியது அறுத்தெறிய வேண்டியது

தமிழக தமிழன் அடிமை நிலையில்

தமிழக தமிழன் அடிமை நிலையில் இருப்பதையும், இந்திய அரசால் தமிழ்நாடு சுரண்டப்படுவதையும் தோழர் தமிழரசன் உணர்ந்துகொண்டார். அவர் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என விரும்பினார். தமிழக தமிழன் தன் அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதன் மூலமே ஈழத் தமிழனின் விடுதலைக்கும் உதவ முடியும் என நம்பினார். இவ்வாறு அவர் சிந்தித்து, உணர்ந்து செயற்பட்டமையினாலே அவர் இந்திய அரசின் உளவுப்படைகளால் கொல்லப்பட்டார். 01.09.2023 அவரது நினைவு தினமாகும். அவரது நினைவை போற்றுவோம்!

இந்த தாயின் விருப்பம்

இந்த தாயின் விருப்பம் எப்போது நிறைவேறும்?

முழந்தாளிட்டு வாழ்வதைவிட

முழந்தாளிட்டு வாழ்வதைவிட எழுந்து நின்று மரணிப்பது மேல் ஆம். தமிழின விடுதலைக்காக எழுந்து நின்று மரணித்தவர்கள் இவர்கள். இவர்கள் விரும்பிய தமிழத்தேசிய விடுதலையை வென்றெடுப்பதே இவர்களுக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.

Wednesday, August 30, 2023

செய்தி – தமிழர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

செய்தி – தமிழர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் - மேர்வின் சில்வா கோரிக்கை. அடேய் மேர்வின் சில்வா உன்னைப் பற்றி தெரியாதாடா? 😂😂 வீடியோ – நன்றி ,சுந்தர் நத்தமன்

கேட்கிறவன் கேனையன் என்றால்

கேட்கிறவன் கேனையன் என்றால் காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்றும் கூறுவார்கள். எடுக்கிறது பிச்சை. ஆனால் பேச்சு மட்டும் பல்லக்கு பாவம் மக்கள். இன்னும் என்னெல்லாம் இவனுகளிட்ட கேட்டுத் தொலைக்கனுமோ?

வீரப்பன் வேட்டை ( The Hunt for Veerappan)

• வீரப்பன் வேட்டை ( The Hunt for Veerappan) வீரப்பன் கொலை பற்றி பொலிஸ் அதிகாரி விஜயகுமார் என்ன சொன்னாரோ அதை உண்மையாக்கும் முயற்சியோ இது என சந்தேகம் கொள்ள வைக்கிறது. மாறாக வீரப்பன் கொலை பற்றி அப்போது எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு உரிய பதில் அளிக்க இதில் தவறிவிட்டதாகவே தோன்றுகிறது. வீரப்பன் கொலை பற்றிய உண்மைகளை நீண்ட நாளைக்கு மறைக்க முடியாது. நிச்சயம் ஒருநாள் வெளிவந்தே தீரும்.

அமெரிக்காவை நம்பியோர் கைவிடப்பட்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவை நம்பியோர் கைவிடப்பட்டிருக்கிறார்கள். ஏன் கடவுளை நம்பியோர்கூட கைவிடப்பட்டிருக்கிறார்கள். ஆனால் மக்களை நம்பியோர் ஒருபோதும் கைவிடப்பட்டதில்லை. மக்கள் சக்தியே மகத்தான சக்தி. அது அணுகுண்டைவிட வலிமையானது. இவர்கள் அந்த மக்கள் சக்தியை நம்புகின்றனர். அதனால்தான் சயிக்கிளில் ஜநா செல்கின்றனர். ஜநா வை மட்டும் நம்பியிருந்தால் மற்றவர்கள் போல் விமானத்திலோ அல்லது ரயிலிலோ சென்றிருப்பார்கள். ஆனால் இவர்கள் வழக்கம்போல் 31.08.2023 யன்று லண்டன் பிரதமர் இல்லத்தில் இருந்து ஆரம்பித்து மக்கள் ஊடாக சென்று 18.09.2023யன்று ஜெனிவா ஐ.நா மன்றத்தை அடைகிறார்கள். கொராணாவாக இருந்தாலும் சரி கொட்டும் பனியாக இருந்தாலும் சரி 20 நாட்கள் வழியில் உள்ள நாடுகளில் உள்ள மக்களை , அமைப்புகளை முக்கிய பிரமுகர்களை சந்தித்து இனப்படுகொலைக்கு நீதி கோருகிறார்கள். வருடா வருடம் தொடர்ந்து இப்படி நம்பிக்கையுடன் மக்களை சந்திக்கிறார்கள். வழியெங்கும் மக்கள் வழங்கும் ஆதரவு இவர்களை விரக்தி அடையாமல் தொடர்ந்தும் பயணிக்க வைக்கிறது. இத்தனை வருடம் செல்கிறார்களே பெற்ற வெற்றி என்ன என்று சிலர் நக்கலாக கேட்கின்றனர். நீரில் மூழ்கிய ஒருவன் மேலே வரும்வரை அவன் மேலே வருவதற்கு முயற்சி செய்வது வெளியே நிறபவர்களுக்கு தெரிவதில்லை. வெளியே வந்தபின்தான் அவன் இதுவரை மேலே வர முயற்சி செய்துள்ளான் என்பது தெரிய வரும். அதுபோல் இவர்கள் வெற்றிபெறும்வரை இவர்கள் செய்யும் முயற்சிகள் வெளியே நிற்பவர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால் இவர்கள் வெற்றி பெறப்போவது உறுதி. ஏனெனில் மக்களை நம்பியவர்கள் ஒருபோதும் தோல்வி அடைவதில்லை. புலத்தில் அண்ணாமலையை அழைத்து பாலம் கட்டுவோரே போராட்டத்தை முன்நகர்த்துவதாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் போராட்டம் இத்தகையவர்களால்தான் முன்நகர்த்தப்படுகின்றது என்றால் அது மிகை அல்ல.

கடவுள் - பக்தா! உன் பக்தியை மெச்சினேன்

கடவுள் - பக்தா! உன் பக்தியை மெச்சினேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். அப்பாவி தமிழன் - கடவுளே! இலங்கையில் இருந்து கனடாவரை ரோடு வேண்டும். அதில் சென்று கனடாவில் அகதி அந்தஸ்து பெற வேண்டும். கடவுள் - பக்தா! கனடா போவதற்கு கடலில் ரோடு போடுவது கஷ்டம். வேறு ஏதாவது வரம் கேள். அப்பாவி தமிழன் - கடவுளே குருந்தூர் மலையில் இருக்கும் உனக்கு பொங்கல் வைத்து வணங்க புத்த பிக்குகள் விடுகிறார்களில்லை. எனவே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நம்ம சம்பந்தர் ஐயா எழுந்துவந்து எமக்காக போராடி வணங்குவதற்குரிய உரிமையை பெற்றுத் தர வேண்டும். கடவுள் - கனடாவுக்கு சிங்கிள் ரோட் போதுமா அல்லது டபிள் ரோட் வேண்டுமா? அப்பாவி தமிழன் - என்ன கடவுளே, சம்பந்தர் ஐயா எழுந்துவந்து போராடவைப்பது கனடாவுக்கு ரோடு போடுவதைவிட கஷ்டமா? 😂😂

நானும் என் தோழர்களும்

நானும் என் தோழர்களும் சென்னையில் மடிப்பாக்கம் என்னும் இடத்தில் SIP காலனி என்னும் இடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம். 1983 முதல் 1986வரை அந்த வீட்டில் குடியிருந்தோம். எப்போதும் குறைந்தது 25 பேராவது அங்கிருந்தோம். வீட்டு ஓனர் ஒரு பார்ப்பணர். அருகில் இருந்த வீட்டில் அவர் இருந்தார். அவருக்கு நாம் ஈழத் தமிழர் என்று மட்டுமே தெரியும். வேறு எதுவும் தெரியாது. நாம் மாட்டுக்கறி சமைத்து சாப்பிடுவது அவருக்கு தெரியும். ஆனால் அவர் அது பற்றி எதுவுமே எம்மிடம் பேசியதில்லை. பல்லாவரத்தில் மாடு வெட்டி உடன் கறி விற்கும் ஒரு கடை உண்டு. காலையில் சயிக்கிளில் அங்கு சென்று மாட்டிறைச்சி வாங்கி வந்து சமைத்து உண்பது எமது வழக்கம். தோழர் தமிழரசன் சென்னை வரும்போதெல்லாம் இரவில் எமது இந்த வீட்டில்தான் வந்து தங்குவார். அவருடைய நண்பர் ஒருவர் திட்டக்குடி சென்னை பஸ்ஸில் கண்டக்டராக இருந்தார். அந்த நண்பரின் பஸ்ஸில்தான் தோழர் தமிழரசன் சென்னை வருவார். அவர் வரும்நேரம் நள்ளிரவாகிவிடும். அந் நேரத்தில் பறங்கிமலையில் இருந்து மடிப்பாக்கத்திற்கு பஸ் இருக்காது. குதிரை வண்டியில்தான் வரவேண்டும். குதிரை வண்டிக்கு எதற்கு வீணாக பணம் கொடுக்க வேண்டும் என்றெண்ணி நடந்தே வருவார் தமிழரசன். எந்நேரம் வந்தாலும் எமது இடத்தில் நிச்சயம் சாப்பாடு இருக்கும் என்பதால் தமிழரசன் வழியில் கடையில் சாப்பிடாமலே வருவார் அவர் சாப்பிடாமல் வருவார் என்பது எமக்கும் தெரியும். எனவே வந்தவுடன் முதலில் இருக்கும் சாப்பாட்டை கொடுப்போம். எமது மாட்டிறைச்சிக் கறியை கேட்டு வாங்கி விரும்பி சாப்பிடுவார். நாம் பொதுவாக தேங்காய்பால் விட்டு நல்ல காரமாக கறி சமைப்போம். இது எமது ஈழத்து சமையல் ஸ்டைல். அதனால் இதனை சாப்பிடும் தமிழ்நாட்டு தமிழர் பலரும் அதிக காரமாக இருக்கிறது எனக்கூறி உண்ண சிரமப்படுவார்கள். ஆனால் தோழர் தமிழரசன் எம்மைப்போல் இந்த கறியை நன்றாக விரும்பி ருசித்து சாப்பிடுவார். இது எமக்கு ஆச்சரியமாக இருக்கும். அதைவிட ஆச்சரியம் என்னவெனில் அவர் எவ்வளவு உணவு கொடுத்தாலும் மீதி வைக்காமல் நன்றாக சாப்பிடுவார். அதேவேளை உணவு இல்லை என்றாலும் எதுவும் கூறாமல் தண்ணி குடித்துவிட்டு தூங்குவார். இப்போதெல்லாம் பலர் “இன்று பீவ் கறி சாப்பிட்டோம்” என்று பதிவு போடுகிறார்கள். அப் பதிவுகளை பார்க்கும்போது தோழர் தமிழரசன் மாட்டுக்கறி சாப்பிட்டது நினைவு வருகிறது.

குருந்தூர் மலையில் மக்கள் போராடுகிறார்கள்

குருந்தூர் மலையில் மக்கள் போராடுகிறார்கள். ஆனால் இந்த தலைவர்கள் உறக்கத்தில் இருப்பதாக யாரும் சினம் கொள்ள வேண்டாம். அவர்கள் இந்த குருந்தூர்மலைப் பிரச்சனை பற்றி இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பலாமா அல்லது யாழ் இந்திய தூதரை சந்தித்து முறையிடலாமா என சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று நம்புவோம். அதைவிட தீர்வு 13 மூலம் கிடைக்கும் பொலிஸ் எப்படி தடியுடன் இந்த புத்த பிக்குகளை அடக்கப் போகிறார்கள் என்றும் சிந்திக்கவும் கூடும். எனவே உஷ் சத்தம் போட்டு பேசாதீர்கள். அவர்கள் சிந்தனை தடைப்பட்டுவிடும்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி!

•10ம் ஆண்டு நினைவஞ்சலி! பெயர் - தோழர் உத்ராபதி தாய் தந்தையர் - ரங்கநாதன் , சரசுவதியம்மாள் இடம் - அரியலூர் மாவட்டம் ,ஆண்டிமடம் வட்டம் சிலுவைச்சேரி கிராமம். அமைப்பு - தமிழ்நாடு விடுதலைப்படை வழக்குகள் - குள்ளஞ்சாவடி காவல் நிலைய தாக்குதல், பூம்புகார் ராம் இறால் பண்ணை மீதான தாக்குதல், மயிலாடுதுறை டிவி டவருக்கு குண்டு வைத்தது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் டவருக்கு குண்டு வைத்தது, ஆண்டிமடம் காவல்நிலையத்தை தாக்கி ஆயுதங்களை சூறையாடியது சிறை வாழ்க்கை - 10 ஆண்டுகள் மறைவு - 24.08.2013

ஒரு பூனை தப்பி ஓடாதவாறு எல்லா

ஒரு பூனை தப்பி ஓடாதவாறு எல்லா பக்கத்தையும் அடைத்துவிட்டு அதன் முன்னால் போய் நின்றால் அங்கு ஒரு புலியை காணவேண்டி வரும்.

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு

• உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு என் வாழ்வில் மறக்க முடியாத படம் இது. 1992ம் ஆண்டு கொடைக்கானல் நீதிமன்றத்திற்கு என்னை அழைத்து வரும்போது எடுக்கப்பட்ட படம். விசாரணை சிறைவாசிக்கே கைவிலங்கு போடக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் அகதியான எனக்கு கைவிலங்கு மட்டுமல்ல லீடிங்செயினும் பூட்டி இழுத்துச் சென்றார்கள். வேலுர் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இருந்த என்னை இவ்வாறு சுமார் 40 மணி நேரம் பேருந்தில் பயணம் செய்ய வைத்தார்கள். இந்த பயணவேளையில் உணவும் வழங்க மாட்டார்கள். நான் அகதி என்பதால் நீதிமன்றம் எனக்கு உணவுப்படி தருவதில்லை. நான் முகாமைவிட்டு வெளியே செல்லும்போது உணவுப்படி வழங்க முடியாது என முகாம் நிர்வாகமும் கூறிவிட்டது. இதனால் என் தோழர்களே நீதிமன்றத்தில் காத்திருந்து எனக்கு உணவு வாங்கி தருவார்கள். இதுகுறித்து கொடைக்கானல் நீதிமன்ற நீதிபதியிடம் முறையிட்டபோது தனக்கு இது குறித்து உத்தரவிட அதிகாரம் இல்லை என்றார். அதனால் எமது தோழர்கள் இப் புகைப்படத்தை எடுத்து மனிதவுரிமைகமிஷன் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பினார்கள். அதையடுத்து அதன் பின்னர் எனக்கு கைவிலங்கு மற்றும் லீடிங் செயின் போடுவதில்லை. இப் படத்தை எடுத்து எனக்காக குரல் கொடுத்த அந்த தோழர்களை நன்றியுடன் நினைவு கூருகிறேன்.

கருணாநிதி மனைவி தயாளு அம்மையாரும்

கருணாநிதி மனைவி தயாளு அம்மையாரும் மகிந்த ராஜபக்ச மனைவி சிராந்தி அம்மையாரும்! கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் கலைஞர் டிவி முதலாளிகளில் ஒருவர். கலைஞர் டிவிக்கு வந்த கோடிக் கணக்கான ரூபா பற்றி விசாரணையில் கேட்ட போது தனக்கு தெரியாது என்று பதில் கூறினார். ஒரு முதலாளிக்கு தெரியாமல் எப்படி அவர் கம்பனிக்கு பணம் வந்தது என்று கேட்டபோது தனக்கு மறதி நோய் என்று கூறினார். ஊழல் செய்துவிட்டு அதுபற்றிய விசாரணை வந்தபோது கொஞ்சம்கூட கூச்சமின்றி தனக்கு மறதி நோய் இருப்பதாக பொய் கூறினார். இது குறித்து கலைஞர் கருணாநிதியும் வெட்கப்படவில்லை. அவர் கட்சி தி.மு.க வும் வெட்கப்படவில்லை. அதுபோல் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி அம்மையாரும் தாஜீதீன் கொலை பற்றிய விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். தனது பொறுப்பில் இருந்த வாகனங்கள் எப்படி கொலைக்கு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். அதுமட்டுமன்றி விசாரணை முடிவில் கையொப்பமிடுமாறு கோரியபோது அவர் தனக்கு சிங்களம் தெரியாது என்று கூறினார். தனக்கு சிங்களம் தெரியாது என்று பொய் கூறுவதையிட்டு சிராந்தி அம்மையார் கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை. அதேபோல் சிங்களம் தெரியாது என்று தன் மனைவி பொய் கூறியதையிட்டு மகிந்த ராஜபக்சவும் வெட்கப்படவில்லை. தாய் தந்தையும் இப்படியென்றால் மகன் ரோகித ராஜபக்சவோ இன்னும் ஒருபடி மேலேபோய் தாஜீதீன் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறினார். தங்கள் கணவன்மார் பதவியில் இருக்கும்வரை இந்த மனைவிமாருக்கு எந்த நோயும் வருவதில்லை. பதவி போனபின் விசாரணைக்கு வா என்று அழைத்தவுடன் திடீரென்று மறதி நோய் வருகிறது. சிங்களம்கூட மறந்து விடுகிறது. பாவம் தாஜீதீன் குடும்பம். ரணில் அரசு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் என்று நம்பினார்கள். ஆனால் ரணில் அரசோ மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தை காக்கவே பாடுபடுகின்றது! குறிப்பு – தான் விரும்பிய பெண் தன்னை விரும்பாமல் தாஜீதீனை விரும்புகிறார் என சந்தேகம் கொண்டு மகிந்தவின் மகன் ரோகித அவரை சிராந்தி அம்மையாரின் பொறுப்பில் இருந்த வாகனத்தில் உயிருடன் கொளுத்தி கொன்றார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அண்மையில் கூறியிருந்தார்.

நடந்தவற்றை மாற்ற முடியாது

நடந்தவற்றை மாற்ற முடியாது ஆனால் மறக்க முடியும் மறக்க முடியாதவற்றை மன்னிக்க முடியும் ஆனால் எம்மால் மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை கண்ணில் முட்டும் கண்ணீரைக்கூட சிந்த முடியவில்லை நெஞ்சில் கணன்றுகொண்டிருக்கும் அந்த பெருநெருப்பை அணைத்துவிடுமோ என்று அச்சமாய் உள்ளது.

காணாமல் போதல் கொடுமை என்றால்

காணாமல் போதல் கொடுமை என்றால் அதைவிடக் கொடுமையானது அவர்களை தேடி அலைவது. அந்த கொடுமையை 14 ஆண்டுகளாக எமது உறவுகள் அனுபவித்து வருகின்றனர். இந்த கொடுமையை அவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அனுபவிக்கப் போகின்றார்கள்? இந்த தேடுதலில் தங்கள் உறவுகள் குறித்து ஒரு ஓற்றைச் சொல்லைக்கூட அறியாமல் மாண்டுபோகிறார்களே அவர்களின் வலியை எப்படி உரைப்பது? ஆனாலும் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தேடும் முயற்சியை கைவிடவில்லை. தங்கள் முயற்சிக்கு தமிழ் மக்கள் ஆதரவும் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் இழக்கவில்லை. அந்தளவில் சிறுமி கில்மிஷா தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தை பல லட்சம் தமிழ் மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளும். கூடவே வாய்ப்பளித்த ஜீ டிவி சரிகமப குழுவினருக்கும் நன்றிகள். குறிப்பு- காணாமல் போனவர்கள் என கூறுகின்றனர். அது தவறு. அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.

பிரபாகரன் மற்றும் மனைவி மதிவதனி

பிரபாகரன் மற்றும் மனைவி மதிவதனி மகள் துவாராகா உயிருடன் இருப்பதாக கூறுவது, புலிகள் இயக்கத்தை தொடர்ந்து தடை செய்ய இந்திய அரசுக்கு உதவும் அப்பாவி அகதிகளை புலிகள் என்றுகூறி கைது செய்து சிறப்புமுகாமில் அடைக்க இந்திய உளவுப்பிரிவினருக்கு உதவும் சிறப்புமுகாமை மூடாமல் தொடர்ந்து வைத்திருக்க தமிழக அரசுக்கு உதவும் எந்த தீர்வையும் வழங்காமல் ஏமாற்ற ஜனாதிபதி ரணிலுக்கு உதவும் மீண்டும் பதவிக்கு வர மகிந்த ராஜபக்சா கும்பலுக்கு உதவும். சிஙகள பௌத்த பேரிவானதிகளுக்கு தங்களை நியாயப்படுத்த உதவும். வடக்கு கிழக்கில் இருந்து சிங்கள ராணுவத்தை வெளியேற்றாமல் வைத்திருக்க சிங்கள அரசுக்கு உதவும். ஜ.நா மன்றத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளில் இருந்து தப்ப சிங்கள அரசுக்கு உதவும். புலத்தில் புலிகளின் பேரால் பணம் திரட்ட சிலருக்கு உதவும். எல்லாவற்றையும்விட, மக்களை காப்பாற்றாமல் குடும்பத்துடன் தப்பி சென்றுவிட்டார் என்ற பழி பிரபாகரன் மீது விழும். குறிப்பாக தன் கடைசி மகன் பாலச்சந்திரனைக்கூட இரக்கமின்றி விட்டுச் சென்றவர் என்ற பழி ஏற்படும்

இருவரும் நடிகர்கள்.

இருவரும் நடிகர்கள். ஒருவர் மராட்டிய நடிகர் ரஜனி. இன்னொருவர் விஜய் டிவி காமடி நடிகர் பாலா. 110கோடி ரூபா சம்பளம் வாங்கிவிட்டு மனைவி நடத்தும் பள்ளிக்கு வாடகை கட்டாமல் ஏமாற்றுகிறார் நடிகர் ரஜனி. ஆனால் தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் முதியோர்களுக்கு அம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார் நடிகர் பாலா. இப்போது கூறுங்கள் யார் சுப்பர் ஸ்டார் என்று?

பாராளுமன்ற பாதை மூலம்

பாராளுமன்ற பாதை மூலம் இதுவரை தமிழ் தலைவர்கள் பெற்றுத்தந்த தீர்வு என்ன?

சிங்கள பௌத்த பேரினவாதி

சிங்கள பௌத்த பேரினவாதி கம்மன்பில அவர்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள் இதன் மூலமாவது சொகுசு மாளிகையில் நீண்ட உறக்கத்தில் இருக்கும் நம்ம சம்பந்தர் ஐயா விழித்தெழுகிறாரா என்று பார்ப்போம்.😂

2009ல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால்

2009ல் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்தனர். அப்போது வயது மூப்பு காரணமாக பேசிக் கொண்டிருக்கும்போதே கலைஞர் கருணாநிதி அடிக்கடி உறங்கியிருக்கிறார். உறக்கத்தில் இருந்து விழித்தபோது அவர் கேட்ட முதல் கேள்வி “பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?” இவ்வாறு மொத்தம் நான்கு தடவை "பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?" எனக் கேட்டார். இவ்வாறு தமிழ்த்தேசியகூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். கலைஞரின் ஆழ் மனதில் இக் கேள்வி ஏன் இருந்துள்ளது? அவர் செய்த துரோகம் அவரை இறுதிவரை துரத்தியதா?

காங்கிரஸ் கட்சியின் இந்திராகாந்தி பிரதமராக

காங்கிரஸ் கட்சியின் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோதே கச்சதீவு சிங்கள அரசுக்கு வழங்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வராக இருந்த திமுக கட்சியின் கலைஞர் கருணாநிதி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது ஆட்சியில் இருக்கும் பாஜக கட்சியின் அண்ணாமலை கச்சதீவை மீட்போம் என்கிறார். இப்போது தமிழக முதல்வராக இருக்கும் திமுக கட்சியின் ஸ்டாலின் அவர்களும் கச்சதீவை மீட்போம் என்கிறார். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் முன்னாள் முதல்வர் அதிமுக கட்சியின் எடப்பாடி அவர்களும் கச்சதீவை மீட்போம் என்கிறார். இவர்கள் கச்சதீவை சிங்கள அரசுக்கு வழங்கும்போதும் சரி இப்போது அதனை மீட்போம் என்று கூறும்போதும் சரி ஈழத் தமிழர்கள் கருத்தை அறிய அக்கறை காட்டவில்லை. கச்சதீவை மீட்டால் மீனவர் பிரச்சனை தீரும் என்கிறார்கள். அதெப்படி தீரும் என்பதை இதுவரை யாரும் கூறியதில்லை. மீனவர் பிரச்சனை தீர வேண்டும் என்றால் மீனவர்களை தாக்கும் சிங்கள கடற்படைக்கு பயிற்சி வழங்குவதை இந்திய அரசு நிறுத்த வேண்டும். சிங்கள கடற்படைக்கு போர்க் கப்பல் இலவசமாக வழங்குவதை நிறுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக சிஙகள அரசுக்கு உதவி செய்து ஆதரவளிப்பதை இந்திய அரசு நிறுத்த வேண்டும். தமிழக மீனவர்களை கொல்லும் சிங்கள கடற்படைக்கு எதிராக தமிழக அரசு இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். கடலில் குஜராத் மீனவன் கொல்லப்பட்டமைக்கு பாக்கிஸ்தான் கடற்படைக்கு எதிராக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் என்றால் தமிழக மீனவனை கொல்லும் சிங்கள கடற்படைக்கு எதிராக தமிழ்நாட்டில் ஏன் வழக்கு தொடர முடியாது?

1984ல் கிழக்கு மாகாணத்தில் அம்பிலாந்துறை

1984ல் கிழக்கு மாகாணத்தில் அம்பிலாந்துறை என்னும் இடத்தில் களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலைய வண்டிக்கு கண்ணிவெடி தாக்குதல் செய்து ஆயுதங்களை கைப்பற்றினோம். அதன்பின்னர் அவ் ஆயுதங்களின் துணையுடன் சென்ரல்கேம்ப் பொலிஸ் நிலையத்தை தாக்கி அங்கிருந்த ஆயுதங்கள் யாவற்றையும் நாம் கைப்பற்றினோம். இதை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அப்போது புளட் இயக்கம் இத் தாக்குதலை தாம் செய்ததாக உரிமைகோரி யாழ் மாவட்டத்தில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தன. ஈழப் போராட்டத்தில் இவ்வாறு ஒரு இயக்கம் செய்ததை இன்னொரு இயக்கம் செய்ததாக உரிமைகோரி பிரசுரம் வெளியிட்டதை அறிந்துள்ளேனே தவிர ஒருபோதும் ஒரு இயக்கம் செய்ததை இன்னொரு இயக்கம் கண்டித்து பிரசுரம் வெளியிட்டதாக நான் அறியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தோழர் தமிழரசன் மருதையாற்றில் வெடிகுண்டு வைத்தபோது அதனைக் கண்டித்து மகஇக அமைப்பு தமிழ்நாடு எங்கும் போஸ்டர் ஒட்டியது. ஒரு புரட்சிகர அமைப்பு செய்த தாக்குதலை இன்னொரு புரட்சிகர அமைப்பு கண்டித்து போஸ்டர் ஒட்டியது அப்பட்டமான காட்டிக் கொடுப்பாக எனக்கு தோன்றியது. நான் இது குறித்து ஆச்சரியத்துடன் தோழர் தமிழரசனிடம் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே “பொலிஸ் தங்களை கைது செய்துவிடுமோ என்ற பயத்தில் செய்துள்ளார்கள்” என்றார். தமிழ்நாடு விடுதலைப்படை செய்ததாக நீங்களே சம்பவம் நடந்த இடத்தில் போஸ்டர் ஒட்டி உரிமை கோரியுள்ளீர்கள். அப்படியிருக்க இவர்களை எப்படி பொலிஸ் கைது செய்யும் என நான் கேட்டேன். “அவர்கள் அப்படித்தான். இது குறித்து பெரிதாக எதுவும் யோசிக்க தேவையில்லை” என்றார் தோழர் தமிழரசன். நாம் தமிழ்நாட்டில் முதன் முதலாக தொடர்பு கொண்ட அமைப்பு தோழர் தமிழரசனின் அமைப்பே. அப்போது தோழர் தமிழரசன் “தமிழ்நாட்டில் பல புரட்சிகர அமைப்புகள் இருக்கின்றன. நீங்கள் எல்லாவற்றுடனும் தொடர்பு கொள்ள வேண்டும்” எனக்கூறி அவற்றின் தொடர்பு விபரங்களை தந்தார். அதன்படி மகஇக தலைவர் மருதையனை சென்னையில் சந்தித்தேன். அப்போது மருதையன் தாங்கள் மட்டுமே உண்மையான புரட்சிகர அமைப்பு. மற்றவர்கள் எல்லாம் போலிகள். அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடன் தாம் தொடர்பு வைக்க மாட்டோம் என்றார். அவர் தோழர் தமிழரசனுடனான எமது உறவைத்தான் கூறுகின்றார் என்பதை புரிந்துகொண்ட நான் "அவர் கூறித்தான் உங்களை சந்திக்க வந்தேன். உங்களுக்காக அவருடனான உறவை நாம் முறித்துக்கொள்ள மாட்டோம் " எனக்கூறிவிட்டு எழுந்தேன். அப்போது மருதையன் “சரி பரவாயில்லை. காலப்போக்கில் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்” என்று கூறிவிட்டு தொடர்ந்து தொடர்பு கொள்ள சம்மதித்தார். ஆனால் , தமிழத்தேசிய விடுதலையை முன்னெடுத்த தோழர் தமிழரசனே உண்மையான புரட்சியாளர் என்பதை வரலாறு இன்று நிரூபித்துவிட்டது. மருதையனின் இன்றைய நிலை எனக்கு ஆச்சரியம் தரவில்லை.

தொடரும் சிறை வாழ்வு

தொடரும் சிறை வாழ்வு எந்தவொரு நீண்ட இரவுக்கும் விடிவு உண்;டு ஆனால் இவர்கள் வாழ்வில் மட்டும் இன்னும் விடுதலை வரவில்லையே? மிருகத்தை வதை செய்தால் ஏன் என்று கேட்க புளுகிராஸ் உண்டு ஆனால் இவர்களின் வதை பற்றி கேட்க யாரும் இல்லையே? ஈழத்தமிழர் என்றால் இந்தியாவில் மிருகத்தைவிட கேவலமானவர்களா? சிறப்புமுகாமில் உண்ணாவிரதம் இருந்தால் பதில் சொல்ல ஒரு அதிகாரி இல்லை ஆனால் சிறப்புமுகாம் பற்றி நான் பதிவு போட்டால் லண்டனில் இருக்கும் தோழர் பாலனுக்கு தகவல் அனுப்புவது யார் என்று விசாரிக்க பல கியூ பிராஞ் அதிகாரிகள் உண்டு. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

தோழர் தமிழரசனுடான எனது அனுபவங்கள

தோழர் தமிழரசனுடான எனது அனுபவங்களை “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலில் எழுதியுள்ளேன். அந் நூலை படிக்க விரும்புபவர்கள் கீழே பின்னூட்டத்தில் தந்துள்ள இணைப்பில் PDF பிரதி டவுன்லோட் செய்து படிக்கலாம். செப் - 1 தோழர் தமிழரசனின் 36 வது நினைவு தினம்.

சாதி தீண்டாமைக்கு எதிராக போராடியது,

சாதி தீண்டாமைக்கு எதிராக போராடியது, காவிரி நீர் உரிமைக்காக குரல் கொடுத்தது, தமிழ்த்தேசிய விடுதலையை முன்னெடுத்தது , இப்படி தமிழக மக்கள் தோழர் தமிழரசனை நினைவுகூர பல காரணங்கள் உண்டு. ஆனால் ஈழத் தமிழர்கள் தோழர் தமிழரசனை நினைவுகூர இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. தமிழ்நாட்டில் பல அமைப்புகள் ஈழத் தமிழரின் போராட்டத்தை ஆதரித்தாலும் தோழர் தமிழரசன் மட்டுமே தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றுகூறி மருதையாற்று பாலத்தில் குண்டு வைத்தவர். அது மட்டுமன்றி இந்திய அரசு என்றாவது ஒருநாள் சிங்கள அரசுடன் சேர்ந்து ஈழப் போராட்டத்தை அழிக்கும் என்பதை எதிர்வுகூறி இதனைத் தடுப்பதற்கு பத்தாயிரம் தமிழக இளைஞர்கள் ஈழப் போராட்டத்தில் கலக்க வேண்டும் என்றார். கலக்க வேண்டும் என்று கூறியதுடன் தானே முதல் ஆளாக வருகிறேன் என்றுகூறி ஈழம் வருவதற்காக இரண்டுமுறை வேதாரணியத்தில் வந்து காத்து நின்றார். துரதிருஸ்டவசமாக இரண்டுமுறையும் அவர் பயணம் நிகழவில்லை. நிகழ்ந்திருந்தால் இன்று வரலாறு வேறு விதமாக அமைந்திருக்குமோ என சிந்திக்க வைக்கிறது. குறிப்பாக, ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்பதை கூறி தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். அதன் மூலம் ஈழத் தமிழர் போராட்டத்திற்கு உதவினார். செப் - 1 தோழர் தமிழரசன் 36வது நினைவு தினம்.

சந்திராயன் ராக்கட்டை பத்திரமாக

சந்திராயன் ராக்கட்டை பத்திரமாக நிலவுக்கு கொண்டு சென்ற ஆஞ்சநேய பகவான் அவர்களுக்கு நன்றிகள் 😂😂

செய்தி – நாடு தமிழர்களுடையது அல்ல.

செய்தி – நாடு தமிழர்களுடையது அல்ல. தமிழர்களின் தலை கொய்யும் நிலைப்பாட்டிலும் மாற்றம் இல்லை என்கிறார் மேர்வின் சில்வா மேர்வின் சில்வா ஏன் விக்ரமபாகு கருணாரத்னாவின் சவாலை ஏற்றுக்கொள்ளக்கூடாது?

ஈழப் போராட்டத்தின் முதல் தியாகி சிவகுமாரன்

ஈழப் போராட்டத்தின் முதல் தியாகி சிவகுமாரன் பிறந்த நாள் இன்று ஆகும். (26.08.1950 – 05.06.1974) அவர் தனது 24 வயதில் விதையானார். அவரில் இருந்து பல்லாயிரம் போராளிகள் முளைத் தெழுந்தார்கள். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்று அவரின் வயது 73 ஆக இருக்கும். மற்றவர்கள் போல் அவரும் ஏதாவது ஒரு வெளிநாடு சென்று வசதியாக வாழ்ந்திருக்கலாம். அல்லது பாராளுமன்ற அரசியலில் புகுந்து ஒரு எம் பி யாகவும் ஆகியிருக்கலாம். ஆனால் அவரோ தமிழ் இன விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி தன் வாழ்வை அர்ப்பணித்தார். உலகில் கொடியது இன விடுதலைக்காக 24 வயதில் மரணமடைவது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தன் மகனின் உடலை 24 வயதில் பிணமாக பார்க்கும் தாயின் நிலையே கொடியது என நான் கருதுகிறேன். இந்த கொடுமையை சிவகுமாரனின் தாயார் அனுபவித்தார். அவர் அனுபவித்த அந்த கொடுமையை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த இடத்தில் “தாய்” நாவலைப் படைத்த மார்க்சிம் கார்க்கி மீது கொஞ்சம் பொறாமை கொள்கிறேன். ஏனெனில் அவரின் திறமையில் கொஞ்சமேனும் எனக்கிருந்தால் அவர் காட்டிய ரஸ்சிய தாய்க்கு ஒப்பான பல ஈழத் தாய்களை என்னால் காட்டியிருக்க முடியும். இப்போது எனது கவலை எல்லாம் இந்த தியாகிகளைப் பற்றி எழுதவில்லையே என்பது அல்ல. மாறாக , தியாகிகளை துரோகிகளாகவும் துரோகிகளை தியாகிகளாகவும் மாற்ற சிலர் முற்படுகிறார்கள். அதை தடுக்க என்னால் எதுவும் எழுத முடியவில்லையே என்பது பற்றியே நான் கவலை கொள்கிறேன். தியாகி சிவகுமார் துரையப்பாவை துரோகி என்றார். அவரை கொல்ல பலமுறை முயன்றார். ஆனால் இப்போது சிலர் துரையப்பாவை தியாகி ஆக்கிறார்கள். இவர்கள் இனி விரைவில் தியாகி சிவகுமாரனை துரோகியாக்குவார்கள். ஏனெனில் இது தியாகிகள் துரோகிகளாகவும் துரோகிகள் தியாகிகளாகவும் ஆக்கும் காலம். த்தூ .......

தமிழா! நீ வஞ்சிகப்படுவதை எப்போது

•தமிழா! நீ வஞ்சிகப்படுவதை எப்போது புரிந்து கொள்ளப் போகிறாய்? வருடம்தோறும் 85000கோடி ரூபாவை தமிழ்நாட்டில் இருந்து வரியாக பெற்றுக்கொள்ளும் இந்திய அரசு, அதுபோதாதென்று டோல்கேட்கள் மூலமும் தமிழர்களிடம் வழிப்பறி செய்கிறது. கேரளாவில் 1782 கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் இருந்தாலும் அங்கு 5 டோல்கேட்களே உள்ளன. மகாராஷ்ராவில் 15437 கி.மீ தூரம் நெடுஞ்சாலைகள் இருந்தாலும் அங்கு 44 டோல்கேட்களே உள்ளன. 5381 கி.மீ தூரம் நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழகத்தில் 52 டோல்கேட்கள் உள்ளன. ஆக, கேரளாவுடன் ஒப்பிடும்போது 9 டோல்கேட்களே தமிழகத்தில் இருக்க வேண்டும் அல்லது, மகாராட்ராவுடன் ஒப்பிடும்போது 15 டோல்கேட்களே தமிழகத்தில் இருக்க வேண்டும் ஆனால் தமிழகத்தில் உள்ள டோல்கேட்களின் எண்ணிக்கையோ 52. இது வழிப்பறி அன்றி வேறு என்ன? தமிழகத்தில் 52 டோல்கேட்களை அமைத்து வழிப்பறி செய்வதாக பிரதான கட்சியான திமுக குற்றம் சாட்டியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த 52 டோல்கேட்களில் 23 டோல்கேட்களை அமைத்தவர் திமுக வைச் சேர்ந்த டி.ஆர்.பாலுவே. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 35000 கோடி ரூபா. கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு 45000 கோடி ரூபா. ஆனால் தமிழக மக்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் மொத்த கடன் 5லட்சம் கோடி ரூபா. “ஒரு மனிதன் அடிமையாக பிறந்தது அவன் குற்றமல்ல. ஆனால் தனது விடுதலைக்கு போராட விரும்பாதது மட்டுமன்றி தனது அடிமைத்தனத்தை ஆதரித்து அதை அழகுபட வர்ணிப்பவன் ஒரு கீழ்மகன் ஆவான்” - தோழர் லெனின். செப் - 1 தோழர் தமிழரசன் 36வது நினைவு தினம்.

போராடி தோற்றால்

போராடி தோற்றால் வெற்றிகூட ஒருமுறை உன்னை திரும்பி பார்க்கும். வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

1983ல் தாக்கப்பட்டபோது இலங்கையில்

1983ல் தாக்கப்பட்டபோது இலங்கையில் உள்ள 40 லட்சம் தமிழர்களே எதிர்கொண்டோம். ஆனால் இனி தாக்கப்பட்டால் உலகில் உள்ள தமிழர்களை எல்லாம் ஒருங்கிணைத்து எட்டுக்கோடி தமிழர்களை முன்னிறுத்தி எதிர் கொள்வோம். எம்முன் இரண்டு தெரிவுகளே உள்ளது. ஒன்று அவர்களிடம் மிதிபட்டு அடிமையாக மடிவது அல்லது எழுந்து நின்று போராடி மடிவது எழுந்து நின்றால் ஒருவேளை விடுதலை பெற வாய்ப்பு உண்டு. எனவே சிறிதளவு மூளை உள்ளவன்கூட எழுந்து நிற்பதையே தெரிவு செய்வான். நாம் ரத்தம் சிந்தும் வன்முறையை விரும்பவில்லை. ஆனால் எம் மீது போர் திணிக்கப்படுமாயின் அதனை விடுதலையாக மாற்றும் சக்தி எமக்கு உண்டு. ரணில் மற்றும் மகிந்த ராஜபக்சா கும்பல தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக இனமோதல் என்ற பெயரில் தமிழின அழிப்பை மேற்கொள்ள முனைகிறது. இது விடுதலையை தங்கத்தட்டில் வைத்து தந்ததுபோல் மாற்ற தமிழர் நாம் முனைய வேண்டும்.

செய்தி – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின்

செய்தி – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் வீட்டை பேரினவாதிகள் முற்றுகையிட்டு அச்சுறுத்தல். எவனைப் பார்த்து உன் எதிரி எரிச்சல் அடைகிறானோ அவன் உன் இனத்திற்கு உண்மையாக இருக்கிறான் என்று அர்த்தம் அச்சுறுத்தலுக்கு அடி பணிய மாட்டோம் என கஜேந்திரகுமார் கூறியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. குறிப்பு – 3 பேர் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். இது சிங்கள மக்களே பேரினவாதிகளை நிராகரிக்கிறார்கள் என அர்த்தம் கொள்ளலாமா?

ஊழல் வழக்கில் பொலிசார் கைது செய்ய

ஊழல் வழக்கில் பொலிசார் கைது செய்ய சென்றபோது “ஐயோ கொல்லுறாங்க காப்பாத்துங்க” என்று அலறினார் கலைஞர் மரணத் தறுவாயில் சிவகுமாரன் கூறிய இறுதி வார்த்தைகள்” நான் மீண்டும் தமிழனாக பிறப்பேன். தமிழ் இனத்திற்காக போராடுவேன்” கலைஞரை “உலகத் தமிழின தலைவர்” என்கிறார்கள். போராளி சிவகுமாரனை “பயங்கரவாதி” என்கிறார்கள். இப்ப கூறுங்கள் யார் தமிழின தலைவர்? குறிப்பு - இன்று தியாகி சிவகுமாரனின் 73 வது பிறந்த தினம்.

தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவராக

தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு நினைவுதினம் அனுட்டிப்பதை தடை செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் கூறுகின்றது அரங்கத்திற்குள் நடக்கும் நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி பெறத்தேவையில்லை என சட்டம் சொல்கிறது. ஆனாலும் 36 வருடங்களுக்கு முன் இறந்த தோழர் தமிழரசன் நினைவு நிகழ்விற்கு தமிழக காவல்துறை தடை விதித்துள்ளது. தோழர் தமிழரசனையும் அவர் முன்வைத்த தமிழ்த்தேசியத்தையும் கண்டு மோடி அரசு மட்டுமல்ல தமிழக திராவிட முதல்வரின் அரசும் அச்சமடைகிறது. எத்தனை தடைகள் போட்டாலும் அத்தனை தடைகளையும் தாண்டி தோழர் தமிழரசன் நினைவு கூரப்படுவார்.

சில வெங்காயங்களின் புலம்பல்கள்

சில வெங்காயங்களின் புலம்பல்கள் தமிழ் கட்சிகள் யாவும் ஒற்றுமையாக வந்தால் இந்தியா தீர்வு 13 ஐ பெற்று தரும் என்று இப்போது சிலர் கூறுகின்றார்கள். அதாவது தமிழ் கட்சிகள் யாவும் ஒற்றுமையாக வராதபடியால்தான் இந்தியா தீர்வு பெற்று தரவில்லை என்று தமிழர் தரப்பின் மீது பழியை போடுகின்றனர். இதே இவர்கள்தான் தீர்வு கிடைக்க புலிகள்தான் தடையாக இருக்கின்றனர் என முன்னர் சொல்லிக் கொண்டிருந்தவர்கள். புலிகள் இல்லாமல் 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏன் இன்னும் தீர்வு வழங்கவில்லை என்று கேட்டால் தமிழர் தரப்பு ஒற்றுமையாக வரவில்லை என்று இப்போது கூற ஆரம்பித்துள்ளனர். இவர்கள் கூறுகின்றபடி தமிழர் தரப்பு ஒற்றுமையாக வந்தாலும் தீர்வு கிடைக்கப்போதில்லை. அதற்கு இன்னொரு காரணம் கண்டு பிடித்து கூறுவார்கள். இல்லை, தெரியாமத்தான் கேட்கிறோம். தமிழர் தரப்பு அனைவரும் ஒற்றுமையாக கேட்டா இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இந்திய அரசு செய்தது? இல்லைதானே. அப்படியென்றால் தமிழரின் சம்மதம் பெறாமல் செய்யப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த தமிழர் தரப்பு எதற்கு ஒற்றுமையாக வரவேண்டும்? அல்லது, தமிழர் தரப்பு ஒற்றுமையாக வந்தால்தான் தீர்வு வழங்க வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டம் கூறுகின்றதா? இல்லைதானே. தீர்வு வழங்காமல் ஏமாற்றும் சிங்கள மற்றும் இந்திய அரசுகளை கேட்க வக்கற்ற இந்த வெங்காயங்கள் தமிழர் தரப்பினர் மீது குற்றம் சாட்டுகின்றன.

நேற்று 3 பேர் வந்தனர்

நேற்று 3 பேர் வந்தனர் இன்று 30 பேர் வந்துள்ளனர். நாளை இது 300 அல்லது 3000 ஆகலாம். முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது இது. ஆனால் அரசு பாதுகாப்பு கொடுத்து வளர்த்து விடுகிறது. சிங்கள மக்களால் தூக்கியெறியப்பட்டவர்கள் இனவாதத்தின் பேரால் மீண்டும் அதிகாரத்திற்கு வர துடிக்கின்றனர். கஜேந்திரகுமாருக்கு எதிராக என்றால் பாராளுமன்றத்தில் கண்டித்திருக்கலாம். அல்லது எதாவது ஒரு பொது இடத்தில் கூடி கண்டித்திருக்கலாம். ஆனால் கஜேந்திரகுமாரின் தாயார் வீட்டின் முன் கூடுவதன் அர்த்தம் என்ன? இது கஜேந்திரகுமாரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தையும் அச்சுறுத்தும் செயல். இது குறித்து தமிழ்த் தலைமைகளோ ஒன்று சேர்ந்து கண்டிக்காமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது வியப்பாக இருக்கிறது.

செங்கொடியை நினைவில் கொள்வோம்!

•செங்கொடியை நினைவில் கொள்வோம்! இவர் தேர்ந்தெடுத்த பாதை குறித்து விமர்சனம் இருக்கலாம் ஆனால் இவரின் அர்ப்பணிப்பு குறித்து யாருக்கும் விமர்சனம் இருக்க முடியாது. மூன்று தமிழர் உயிர் காக்க தன் உயிரைக் கொடுத்தவர் வாழ வேண்டி வயதில் சாவை விரும்பி ஏற்றவர். தன் உடல் கருகி உயிர் போகும் நேரத்தில்கூட தன்னைக் காப்பாற்றும்படி அவர் கோரவில்லை தன் உடலை வைத்து 3 பேரின் உயிரையும் காப்பாற்றும்படியே கேட்டார். அவர் அர்ப்பணிப்பு மகத்தானது. உலகில் தமிழ் இனம் உள்ளவரை வரலாற்றில் அவர் பெயர் நிலைத்து நிற்கும். இது உறுதி! குறிப்பு - செங்கொடியின் 12 வது நினைவு தினம் 28.08.2023

பட்டி தொட்டி எங்கும்

பட்டி தொட்டி எங்கும் பெரியவர் முதல் சிறியவர் வரை பரவும் தோழர் தமிழரசன் புகழ் கொன்று புதைத்தால் ஆயிரம் ஆயிரமாய் முளைத்து எழுவோம் துண்டு துண்டாய் வெட்டி எறிந்தால் பொங்கும் கடல் அலைபோல் மீண்டும் மீண்டும் எழுவோம் செப் -1 தோழர் தமிழரசன் 36வது நினைவு தினம்.

குரங்கில் இருந்து மனிதன் வந்தான்

•குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்பது உண்மையே! தமது கையால் தமது சாப்பாட்டை உண்ண முடிந்தவர்களால் தமது கையால் தமது குண்டியை கழுவ முடிந்தவர்களால் தமது கையால் தமக்கு குடை பிடிக்க முடியாதா? அதுவும் பதவி வந்தவுடன் தமக்கு குடை பிடிக்கவென சம்பளத்திற்கு இன்னொரு ஆளை நியமிக்கத்தான் வேண்டுமா? இதை “கௌரவம்” என நினைக்கிறார்களே! - இவர்களுக்கு இது “அசிங்கம்” என எப்படி புரிய வைப்பது? குறிப்பு- குரங்குகளுக்கு அருகில் எமது தலைவர்களின் படத்தை போட்டு குரங்குகளை நான் கேவலப்படுத்தி விட்டதாக தயவு செய்து யாரும் என்மீது கோபம் கொள்ள வேண்டாம்.

மற்றவர்கள் போல் தானும் வாழ வேண்டும்

மற்றவர்கள் போல் தானும் வாழ வேண்டும் என்று தோழர் தமிழரசன் விரும்பியிருந்தால் படித்து பட்டம் பெற்று நல்ல வேலையும் பெற்று வசதியாக வாழ்ந்திருக்க முடியும். அல்லது, தோழர் தமிழரசன் கொஞ்சம் தந்திரமாக கம்யுனிசம் பேசியிருந்தால் இன்று திமுக விடம் நாலு சீட்டும் 25 கோடி ரூபா பணமும் பெற்று வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் உண்மையாகவே தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டு தமிழ்த்தேசிய விடுதலையை முன்னெடுத்தார். அதனால் சதி செய்து கொல்லப்பட்டார். அவரைக் கொன்றால் தமிழ்த்தேசிய விடுதலையை தடுத்துவிட முடியும் என இந்திய அரசு நினைத்தது. ஆனால் இன்று தோழர் தமிழரசனை மறுத்துவிட்டு யாரும் தமிழ்த்தேசியம் பேசவிட முடியாது. அந்தளவுக்கு தோழர் தமிழரசன் வளர்ந்து நிற்கிறார். செப் -1 தோழர் தமிழரசன் 36வது நினைவு தினம்

இன்று சதுரங்கம் விளையாட விரும்புவோர்

இன்று சதுரங்கம் விளையாட விரும்புவோர் கம்யுட்டரில் விளையாடலாம். விரும்பினால் உலப் புகழ் பெற்ற சாம்பியன்களுடன்கூட ஆன்லைனில் விளையாடலாம். ஆனால் நான் சிறுவனாக இருந்த காலத்தில் இந்த வசதிகள் எமக்கு இருக்கவில்லை. எனது கரவெட்டி ஊரில் அரசடிச்சந்தி என்னும் இடத்தில் பலர் சீட்டு விளையாடுவார்கள். அவர்களுக்கு அருகில் இருவர் சதுரங்கம் விளையாடுவார்கள். எனக்கு நன்றாக சீட்டு விளையாட தெரியும். சதுரங்கம் தெரியாது. ஆனாலும் நான் அந்த இருவர் விளையாடும் சதுரங்கத்தையே விரும்பி பார்ப்பேன். எனக்கு சதுரங்கம் விளையாட பழக வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசை. அந்த ஆசை மதுரை சிறையில் நிறைவேறும் என்று நான் நினைத்திருக்கவில்லை. மதுரை சிறையில் அப்போது மணி என்று ஒரு கைதி இருந்தார். அவரை எல்லோரும் புரட்சி மணி என்றே அழைப்பார்கள். அவர் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். கட்சிக்காக கொலை செய்து அதனால் ஆயுள் தண்டனை பெற்றிருந்தார். அவர்தான் எனக்கு சதுரங்கம் விளையாட பழக்கினார். மிக விரைவாக கற்றுக்கொண்டேன். இறுதியில் அவரையே தோற்கடித்தேன். தன்னை யாரும் சிறையில் தோற்கடித்ததில்லை என்றும் நான் தோற்கடித்தற்காக தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியது இன்றும் என் நினைவில் இருக்கிறது. பின்னர் மதுரை சிறையில் இருந்து என்னை வேலூர் கோட்டை சிறப்புமுகாமில் கொண்டு சென்று அடைத்தார்கள். அங்கிருந்த புலி இயக்க போராளிகள் பலர் சதுரங்கம் விளையாடினார்கள். அதில் ஓட்டி குமார் என்ற போராளி நன்கு விளையாடக்கூடியவர். அவரும் நானும் பல தடவைகள் விளையாடியிருக்கிறோம். என்னுடைய எட்டு வருட சிறைவாழ்வு பல மறக்க முடியாத அனுபவங்களை தந்திருக்கிறது. அதில் இந்த சதுரங்க விளையாட்டும் ஒன்று என்று கூறலாம்.

பகத் சிங் பாராளுமன்றத்திற்கு குண்டு

பகத் சிங் பாராளுமன்றத்திற்கு குண்டு வீசினார். தாம் யாருக்கும் தீங்கிழைப்பதற்காக குண்டு வீசவில்லை என்றும் ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே அதனை மேற்கொண்டதாக அவர் கூறினார். ஒரு தாக்குதல் நடவடிக்கையானது ஆயிரம் பொதுக்கூட்டங்களுக்கு ஒப்பானது என்று மாபெரும் ஆசான் மாவோ கூறினார். அதனால்தான் பகத் சிங் குண்டு வீசியது ஒரு சாகச நடவடிக்கை என்றோ அல்லது புரட்கர நடவடிக்கை இல்லை என்றோ எந்தவொரு புரட்சியாளரும் கூறியதில்லை. ஆனால் தோழர் தமிழரசன் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளை சாகச நடவடிக்கை என்றும் அது புரட்சி அல்ல என்றும் சில போலிப் புரட்சிவாதிகள் கூறுகின்றனர். இவர்கள் உலகில் நடக்கும் எல்லா போராட்டத்தையும் ஆதரிப்பார்கள். ஆனால் தோழர் தமிழரசனை மட்டும் ஆதரிக்க மாட்டார்கள். ஏனெனில் தோழர் தமிழரசன் தமிழ்த்தேசிய விடுதலைக்காக போராடியதே காரணம். ஆரியமும் திராவிடமும் மட்டுமன்றி இந்த போலி புரட்டுவாதிகளும் தமிழ்த் தேசிய விடுதலையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். செப் -1 தோழர் தமிழரசன் 36வது நினைவு தினம்

செய்தி – கிழக்கு மாகாண ஆளுநருக்கு

செய்தி – கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக சிங்கள பிக்குகள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம். அவர்கள் நியமித்த கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவை அவர்களே ஏற்க மாட்டோம் என்கிறார்கள் அவர்கள் நியமித்த முல்லைத்தீவு நீதிபதியின் தீர்ப்பை அவர்களே ஏற்க மாட்டோம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல அந்த நீதிபதி ஒரு பையித்தியக்காரர் என்று அவர்களே பாராளுமன்றத்திலே ஏசுகின்றனர். இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் அவர்களே தங்கள் சட்டத்தை மதிக்காததுடன் தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கவும் மறுக்கின்றனர். ஒருபுறம் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக்கொண்டு மறுபுறம் அப் பிச்சை பணத்தில் தமிழினத்தை அழிக்க முயலுகின்றனர். மீண்டும் நாய்களை(பிக்குகளை) அவிழ்த்துவிட்டு சிங்கள அரசு வேடிக்கை பார்க்கிறது இதை இந்தியா மட்டுமன்றி சர்வதேசமும் பாராமுகமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. சிங்கள அரசு மற்றும் பிக்குகளின் பேரினவாதம் மீண்டும் புலிகள் வர வேண்டும் என்ற எண்ணத்தையே தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கும்.

காணமல் போதல் கொடுமை என்றால்

காணமல் போதல் கொடுமை என்றால் அதைவிடக் கொடுமையானது அவர்களை தேடி அலைவது. அந்த கொடுமையை 14 ஆண்டுகளாக எமது உறவுகள் அனுபவித்து வருகின்றனர். இந்த கொடுமையை அவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அனுபவிக்கப் போகின்றார்கள்? இந்த தேடுதலில் தங்கள் உறவுகள் குறித்து ஒரு ஓற்றைச் சொல்லைக்கூட அறியாமல் மாண்டுபோகிறார்களே அவர்களின் வலியை எப்படி உரைப்பது? இவர்கள் குறித்து அக்கறை அற்று இருக்கும் இந்த அரசை நொந்து கொள்வதா? அல்லது இந்த அரசை தட்டிக் கேட்காமல் இருக்கும் எமது தலைவர்களை நொந்துகொள்வதா? ஆனாலும் அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தேடும் முயற்சியை கைவிடவில்லை. தங்கள் முயற்சிக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் கைவிடவில்லை. குறிப்பு - 30.08.2023 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்.

தேர்தல் பாதையில் பயணிக்கும்

தேர்தல் பாதையில் பயணிக்கும் சீமானை அவதூறு மூலம் அப்புறப்படுத்த முனைந்தால் அவர் பின்னால் இருக்கும் இளைஞர்கள் ஆயுதப் போராட்டப் பாதைக்கு நகருவார்களே யொழிய ஒருபோதும் தமிழ்த் தேசியத்தை விட்டுவிட மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் தமிழ்த்தேசியத்திற்காகவே சீமான் பின்னால் நிற்கிறார்கள். மாறாக சீமான் பின்னால் நிற்பதற்காக தமிழ்த்தேசியத்தை விரும்பியவர்கள் அல்ல. எனவே சீமானை அப்புறப்படுத்துவதற்காக ஆரியமும் திராவிடமும்தான் கவலைப்பட வேண்டுமேயொழிய தமிழத்தேசியம் வருத்தப்படாது.

இதுவரை விமர்சனம் என்னும்

இதுவரை விமர்சனம் என்னும் பெயரில் எத்தனையோ கற்கள் இவர் மீது வீசப்பட்டதுண்டு. அத்தனை கற்களுக்கு மத்தியிலும் அவர் பணி தொடர்கிறது. அவர் தாயின் வீட்டை முற்றுகையிட்டு அச்சுறுத்தினார்கள். அவர்களுக்கு இதோ தையிட்டியில் மக்களுக்கான போராட்டத்தின் மூலம் பதில் அளித்துள்ளார். அவர் போராட்டம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே என்ற கேள்வியை மக்கள் மனதில் எழுப்புகிறது என்பது உண்மை. அதனால் இனி இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி காலத்தை கடத்த முடியாது என்ற நெருக்கடியை அவர்களுக்கு உருவாக்கிறது.

பரம பிதாவே!

பரம பிதாவே! இந்த அருட்தந்தை தெரியாமல் தவறு செய்யவில்லை. தெரிந்தே தவறு செய்கிறார். எனவே அவரின் பாவங்களை மன்னித்து விடாதீர்கள்.

தோழர் தமிழரசனும் தோழர் நெப்போலியனும்

•தோழர் தமிழரசனும் தோழர் நெப்போலியனும் தோழர் நெப்போலியன் ஈழத்தில் கரவெட்டியை பிறப்பிடமாக கொண்டவர். அவரின் இயற் பெயர் மனோகரன் 1984ல் தோழர் தமிழரசன் பெண்ணாடத்தில் நடத்திய மாநாட்டில் எமது அமைப்பின் சார்பில் தோழர் நெப்போலியன் கலந்துகொண்டார். தோழர் நெப்போலியன் கேட்டுக்கொண்டதற்கிணங்க எமது அமைப்பு தோழர்களுக்கு மலையாளப்பட்டி என்னும் இடத்தில் தோழர் தமிழரசன், புலவர், சுந்தரம் ஆகியோர் மார்க்சிய தத்துவங்களை போதித்தனர். வாடிப்பட்டி என்னும் இடத்தில் அமைந்திருந்த எமது பயிற்சி முகாமில் தோழர் தமிழரசன் மற்றும் அவரது தோழர்களுக்கு தோழர் நெப்போலியனே ஆயுதப் பயிற்சி வழங்கினார். பயிற்சி வழங்கியது மட்டுமன்றி தோழர் தமிழரசனுக்கு ஆயுதங்களும் கொடுத்து உதவினார் தோழர் நெப்போலியன். இதனை அறிந்துகொண்ட இந்திய உளவு அமைப்பு ஈரோஸ் இயக்கத்தின் மூலம் மலையகத்தில் வைத்து தோழர் நெப்போலியனைக் கொன்றது. தோழர் நெப்போலியன் மலையகம் சென்று மலையக மக்களுக்காக மலையக மக்கள் விடுதலை முன்னணி(ULO) என்ற அமைப்பை உருவாக்கி போராடியிருந்தார். யாழ்ப்பாணத்தவர்கள் மலையக மக்கள் பற்றி அக்கறை கொள்வதில்லை என்று இன்றும் சிலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையக மக்களுக்காக போராடி மடிந்த தோழர் நெப்போலியனை பதிலாக கூற விரும்புகிறேன். செப் -1 தோழர் தமிழரசன் நினைவு தினம்

தோழர் தமிழரசனும் தோழர் ராயுவும்

• தோழர் தமிழரசனும் தோழர் ராயுவும் தாக்குதல்களில் உதவி பெறுவதற்காகவும் குறிப்பாக வாகனங்கள் ஓட்டுவதற்காகவும் எமது தோழர் ராயுவை தன்னுடன் அழைத்துச் சென்றார் தோழர் தமிழரசன். தோழர் ராயு கிழக்கு மாகாணம் மட்டக்களப்பை சேர்ந்தவர். அவருக்கு எமது அமைப்பில் பெயர் ராயு. ஆனால் தோழர் தமிழரசன் தன்னுடன் அழைத்துச் சென்றபோது அவருக்கு வைத்த பெயர் தினேஸ். தோழர் தமிழரசன் மேற்கொண்ட மருதையாற்று பால வெடி குண்டு தாக்குதலில் பெரும் பங்கு வகித்தவர் இந்த தினேஸ். அதுமட்டுமன்றி காவிரி அணையை தகர்க்க வேண்டும் என்ற தோழர் தமிழரசன் விருப்பத்திற்கு உரிய திட்டங்களை வகுத்தக் கொடுத்தவரும் இந்த தினேஸ்தான். அடுத்து உட்கோட்டையில் தோழர் தமிழரசன் வங்கியில் பணப் பறிப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது வாகனத்தை ஓட்டிச் சென்றவர் தினேஸ். அச் சம்பவத்தில் தோழர் தமிழரசன் குழுவினரை மக்கள் சுற்றிவளைத்தபோது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும் கிரினைட் குண்டை வெடிக்க வைத்தும் மக்களை பின்வாங்க வைத்து தோழர் தமிழரசனை காப்பாற்றியவர் தினேஸ். அதன் பின்னர் பொன்பரப்பி வங்கியில் பணப் பறிப்பு செய்ய சயிக்கிளில் செல்வது என தோழர் தமிழரசன் தீர்மானித்தபோது வேண்டாம். அது ஆபத்தானது என தினேஸ் தடுத்தார். ஆனால் தோழர் தர்மலிங்கம் “ ஈழத்தில் நீங்கள் சயிக்கிளில் சென்று பணப் பறிப்பு செய்கிறீர்கள். இங்கு எம்மால் செய்ய முடியாதா?” எனக் கேட்டு சயிக்கிளில் செல்ல வேண்டும் என தோழர் தமிழரசனிடம் வற்புறுத்தினார். தோழர் தர்மலிங்கத்தின் பேச்சைக் கேட்டு பணப்பறிப்பு நடவடிக்கைக்கு சயிக்கிளில் செல்வது என்று தோழர் தமிழரசன் முடிவெடுத்தார். அத்துடன் சயிக்கிளில் செல்வதால் தினேஸ் தம்முடன் கூட வரத்தேவையில்லை என்றும் தோழர் தமிழரசன் கூறினார். தோழர் தமிழரசனின் இந்த முடிவு உளவுப்படையினருக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. தினேஸ் கூறியபடி காரில் சென்றிருந்தால் உட்கோட்டையில் காப்பாற்றியதுபோல் பொன்பரப்பியிலும் தோழர் தமிழரசனை நிச்சயம் தினேஸ் காப்பாற்றியிருப்பார். செப் -1 தோழர் தமிழரசன் நினைவு தினம்

Tuesday, August 15, 2023

இலங்கைக்கு பௌத்த மதத்தைக் கொண்டு

இலங்கைக்கு பௌத்த மதத்தைக் கொண்டு வந்தவர்கள் மகிந்தனும் சங்கமித்திரையும் என்று மகாவம்சமே கூறுகின்றது. அப்படியிருக்க இலங்கையை பௌத்த நாடாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? சம்பந்தர் ஐயா பதில் பிளீஸ்!

எதிர்வரும் ஆகஸ்ட் 2ம் திகதி

எதிர்வரும் ஆகஸ்ட் 2ம் திகதி தனிநாயகம் அடிகளாரின் 100வது பிறந்த தினம் ஆகும். உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கி முதல் நான்கு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தியவர் தனிநாயகம் அடிகளார். இதனால் ஈழத் தமிழர்களால் மட்டுமன்றி உலகத் தமிழர்களாலும் பெரிதும் மதிக்கப்படுபவர். அத்தகைய தனிநாயகம் அடிகளார் பற்றி வட்ஸ்அப்பில் உலாவிய ஒரு செய்தி நேற்று படிக்க நேர்ந்தது. தனிநாயகம் அடிகளார் ஒரு பறங்கியர் என்றும் தனது கிருத்தவமத வளர்ச்சிக்காக துரையப்பா மீது வீண் பழி சுமத்தி இளைஞர்கள் மூலம் துரையப்பாவை கொன்றார் என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. உடல் முழுவதும் இந்து மத வெறி கொண்ட ஒருவனால் மட்டுமே இப்படி ஒரு செய்தியை எழுத முடியும். இது துரோகிகள் தியாகிகளாகவும் தியாகிகள் துரோகிகளாகவும் மாற்றும் காலம். எனவே தாராளமாக துரையப்பாவை தியாகியாக மாற்றட்டும். ஆனால் அதற்காக தமிழுக்காக வாழ்ந்து மடிந்த தனிநாயகம் அடிகளாரை துரோகியாக்க வேண்டாம்.

எனக்கும் இந்த மறவன்புலவு சச்சிதானந்திற்கும்

எனக்கும் இந்த மறவன்புலவு சச்சிதானந்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை - இப்படிக்கு கடவுள் சிவன்

காலியில் 11வயது சிறுமியை

காலியில் 11வயது சிறுமியை 76 வயது புத்த பிக்கு ஒருவர் பாலியல் வல்லுறவு செய்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். பிக்குகளின் பாலியல் சேட்டைகளை அம்பலப்படுத்துவோரை வெளிநாட்டு சதி என்று கூறும் அமைச்சு செயலர் இருக்கும்வரை, பொருளாதார நெருக்கடியில் 100 ஒழுக்கமான பிக்குகளை எதிர்பார்க்க முடியாது என்று நியாயப்படுத்தும் சக பிக்கு இருக்கும்வரை, எல்லாவற்றுக்கும் மேலாக இந்த பிக்குகளுக்கு தன் வேட்டியை உரிந்து கொடுக்கும் ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம் இருக்கும்வரை, இந்த மாதிரி பிக்குகளின் பாலியல் வல்லுறவு நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கப் போகின்றன. இரண்டாம் துட்ட கைமுனு என்று போற்றிப் புகழப்பட்ட மகிந்த ராஜபக்சா கும்பலை விரட்டி அடித்ததுபோன்று இந்த புத்த பிக்குகளையும் சிங்கள மக்கள் விரட்டி அடிக்கும் காலம் வர வேண்டும்.

இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்!

•“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்! 1968 மார்ச் 16 யன்று அமெரிக்க ராணுவம் வியட்நாமில் 347 அப்பாவி வியட்நாம் மக்களை சுட்டுக் கொன்றது. இது மைலாய் படுகொலைகள் (My Lai Massacre ) என அழைக்கப்படுகிறது. 1989 ஆகஸ்ட் 2 யன்று வல்வெட்டித்துறையில் அமைதிப்படை என வந்த இந்திய ராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்தது. இப் படுகொலைகள் “இந்தியன் மைலாய்” என அழைக்கப்படுகிறது. •64 பொது மக்கள் கொல்லப்பட்டனர் •100 க்கு மேற்பட்டோர் காய மடைந்தனர் •50 க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். •சுமார் 200 வீடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. •40 க்கு மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன . •150 க்கு மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் சேதமாக்கப்பட்டன. •வல்வை நூலகம் முற்றாக எரித்து சேதமாக்கப்பட்டது. இத் தாக்குதல்கள் ஆகஸ்ட் 2, 3. 4 திகதிகளில் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இறந்தவர்களின் உடல்களை எடுத்து அடக்கம் செய்யக்கூட இந்திய ராணுவம் அனுமதிக்கவில்லை. வியட்நாம் கொலைகளுக்காக 26 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்கு தாக்கல் செய்தது. அதில் ஒரு அதிகாரிக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் படுகொலை செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வல்வைப் படுகொலைகளுக்காக எந்தவொரு இந்திய ராணுவ அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. சீக்கிய படுகொலைகளுக்காக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி, வல்வை படுகொலைகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை. வியட்நாம் படுகொலைக்காக அனுதாபப்பட்ட சர்வதேசம்கூட வல்வைப் படுகொலைகளையிட்டு கவனம் கொள்ளவில்லை

பேசுவது “திராவிடம்”

பேசுவது “திராவிடம்” வைத்திருக்கும் அமைப்பு “திராவிடர் கழகம்” ஆனால் பட்டம் மட்டும் “தகைசால் தமிழர்” ஏன் “தகைசால் திராவிடர்” என்று கொடுக்கவில்லை? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி தமிழரை ஏமாற்றப் போகிறார்கள்?

பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா

பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா என்று கேட்ட போது வராத கோபம் 786 அல்லாவின் போன் நம்பரா என கேட்டபோது வராத கோபம் திமுக வுக்கு வோட்டு போடுகிறவன் சாத்தானின் பிள்ளைகள் என்னும்போது ஏன் வருகிறது? “சாத்தான்” அந்தளவு கெட்ட சொல்லா? குறிப்பு – சாத்தான் இல்லையேல் கடவுளே இல்லை என்கிறார்களே?

வந்தார்கள்

வந்தார்கள் கொன்றார்கள் ஏறி குந்தியும் விட்டார்கள் நிரந்தரமாக! அவர்கள் வந்தார்கள். முதலில் வானில் இருந்து உணவுப் பொட்டலம் போட்டார்கள் பின்னர் துப்பாக்கி டாங்கிகளுடன் வந்தார்கள் எமது மீட்பர்கள் வருகிறார்கள் என்று நம்பினோம். திடீரென மருத்துவ மனையில் சுட்டார்கள் பத்திரிகை அலுவலத்தில் சுட்டார்கள் ஊரையே சுற்றி வழைத்து சுட்டார்கள் ஏன் என்று கேட்டதற்கு “ நாங்கள் அமைதிப்படை. அமைதியை நிலை நாட்டுகிறோம்” என்றார்கள். அவர்களது அமைதி நிலைநாட்டலில் நாம் 12000 தமிழர்களின் உயிர்களை இழந்தோம் 800 பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டோம் பல கோடி ரூபா பெறுமதியான உடமைகளை இழந்தோம். நல்லவேளை இரண்டு வருடத்தில் திரும்பிச் சென்றார்கள் இல்லையேல் என்ன நடந்திருக்கும் என்று நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. ஆனால் மீண்டும் வந்தார்கள் இம் முறை “பயங்கரவாத ஒழிப்பு” என்று கூறிக்கொண்டு மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து வந்தார்கள் புலிகளைத்தானே அழிக்கிறார்கள் என்று நாங்களும் சும்மா இருந்தோம் ஆனால் அவர்கள் புலிகளை அழித்தது தமது ஆக்கிரமிப்புக்காகவே என்பதை இப்போதுதான் உணர்கிறோம் இந்தியாவுக்காகவே யுத்தம் செய்தோம் என்று ராஜபக்சாக்கள் கூறியதன் அர்த்தத்தையும் இப்போதுதான் நாம் உணர்கிறோம் ஆபிரிக்க நாடுகளை ஆக்கிரமித்தவர்கள் துப்பாக்கிகளுடன் கிருத்தவ மதத்தையும் கொண்டு சென்றார்கள் அதனால்தான் ஒரு கவிஞன் எழுதினான் “அவர்கள் வருமுன்னர் நாடு எமது கையில் இருந்தது பைபிள் அவர்கள் கையில் இருந்தது. இப்போது பைபிள் எமது கையில் இருக்கிறது அவர்கள் கையில் எமது நாடு இருக்கிறது” இதே கதைதான் எமது நாட்டிலும் நடந்துள்ளது. ஆனால் இதை எழுத எமக்கு ஒரு கவிஞன் இல்லை அவர்கள் இம்முறை இந்து மதத்தையும் இந்தி மொழியையும் கொண்டு வந்துள்ளார்கள் அதனால் இப்போது நாம் கிளிநொச்சியில் சர்வதேச இந்து மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறோம் யாழ் இந்துக் கல்லூரியில் இந்தி மொழி படித்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் அவர்கள் கையில் காங்கேசன்துறை துறைமுகம் போய்விட்டது கூடவே அதன் சீமெந்து ஆவையும் போய்விட்டது பலாலி விமான நிலையம் போய்விட்டது திருகோணமலை துறைமுகம் போய்விட்டது சம்பூர் 500 எக்கர் நிலமும் போய்விட்டது கூடவே அனல்மின் நிலையமும் போய்விட்டது புல்மோட்டை கனிவளமும் போய்விட்டது மன்னாரில் எண்ணெய் வளமும் போய்விட்டது. இதென்ன நியாயம் என்று கேட்டால் கவலைப்படாதீர்கள் வடக்கு கிழக்கு முழுவதும் 20 காந்திசிலைகளை நிறுவித் தருகிறேன் என்று யாழ் இந்திய தூதர் சிரித்தக் கொண்டே கூறுகிறார். ஆனாலும் இந்திய தூதர் கொஞ்சம் நல்லவர்தான் ஏனெனில், 20 ராஜீவ் காந்தி சிலைகளை நிறுவப் போகிறேன் என்று கூறியிருந்தால் என்னாவது? ஆனாலும் இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை ஏனெனில் ராஜீவ் காந்தி இருந்திருந்தால் ஈழம் பெற்று தந்திருப்பார் என்று எழுதுவதற்கு நம் மத்தியில் நாலு பேர் அப்போதும் இருப்பார்கள்தானே?

பாலகுமார் எங்கே?

•பாலகுமார் எங்கே? பாலகுமார் முள்ளிவாய்க்காலில் தன் மகனுடன் சரணடைந்தார். அவர் உயிரோடு வைக்கப்பட்டிருந்த படங்களும் வெளிவந்துள்ளன. ஆனால் பாலகுமார் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை. தற்போது அவர் பெயரும் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இங்கு கொடுமை என்னவெனில் சமாதான காலத்தில் வன்னி சென்று பாலகுமாரோடு படம் பிடித்தவர்கள பலர் இன்று எம்.பி களாகவும் தலைவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர்கூட பாலகுமார் எங்கே என்று இலங்கைஅரசை இதுவரை கேட்கவில்லை.

பல வருடங்களாக சிறையில் இருக்கும்

பல வருடங்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யாதது மட்டுமன்றி அவர்களை விடுதலை செய்தால் இப்பவும் இந்து மக்களுக்கு ஆபத்து இருக்கிறது என்று உச்சநீதிமன்றில் கூறியவர்கள் , இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யுங்கள் எமது வோட்டு எல்லாம் உங்களுக்கு தருகிறோம் என்றதற்கு எப்படி லாவகமாக சாத்தான் பிள்ளைகள் பிரச்சனை மாற்றி விட்டிருக்கிறார்கள். நான் என் வாழ்வில் எத்தனையோ உருட்டுகளை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த திராவிட உருட்டுபோல் ஒரு உருட்டை பார்க்கவில்லை.

செய்தி – சிங்கள பௌத்த மதபீடம்

செய்தி – சிங்கள பௌத்த மதபீடம் தமிழர் அருண்சித்தார்த் அவர்களுக்கு "கீர்த்திசிறி தேசமான்ய" விருது வழங்கியுள்ளது. “எதிரி உன்னைப் பாராட்டுகிறான் என்றால் நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம்” - மாவோ சேதுங்

முதலில் குருந்தூர் மலைக்கு புத்தர் வந்தார்

முதலில் குருந்தூர் மலைக்கு புத்தர் வந்தார் அடுத்து தையிட்டிக்கு புத்தர் வந்தார். இப்போது யாழ் பல்கலைக்கழகத்திற்குள்ளும் புத்தர் வந்துள்ளார். கூடவே, புத்தர் வருவதில் என்ன தவறு இருக்கிறது என்று நம்மவர் சிலரே கேட்கின்றனர். வருவது புத்தராக இருந்தால் பரவாயில்லை. ஆனால் வருவது சிங்கள பௌத்த பேரினவாதமாயிற்றே. அதுவும் தமிழின அழிப்பை நோக்கமாக கொண்டு வருகிறது இந்த சிங்கள பௌத்த பேரினவாதம். எப்படி தமிழினம் இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியும்? இந்த பொருளாதார நெருக்கடியிலும் சிங்கள அரசு தனது தமிழின அழிப்பை கைவிடவில்லை. இதற்கு எதிராக போராட வேண்டிய தமிழ்த் தலைவர்களோ இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு மௌனமாக இருக்கின்றனர். வெண்டிக்காயை வாங்கும்போதுகூட ஒடித்துப் பார்த்து வாங்கும் தமிழர்கள் இத் தலைவர்களை மட்டும் எதுவும் பார்க்காமல் எப்படி தெரிவு செய்கின்றனர்?

நம்ம சிங்கத்தை சீண்டியவன் எவனடா?

• நம்ம சிங்கத்தை சீண்டியவன் எவனடா? நம்ம ஐயா சிங்கள அரசை எச்சரிக்கிறார் எனில் ஒன்று தேர்தல் வரப் போகிறது என்று அர்த்தம் அல்லது சொகுசு மாளிகைக்கு ஆபத்து என்று அர்த்தம். இப்போது இதில் எது காரணமாக இருக்கும்?

எத்தனை அடக்குமுறைகளை மேற்கொண்டாலும்

•எத்தனை அடக்குமுறைகளை மேற்கொண்டாலும் அத்தனையையும் தாண்டி பரவும் தோழர் தமிழரசன் புகழ்! 36 ஆண்டுகளுக்கு முன் அவரை கொன்று விட்டார்கள். ஆனால் இன்றும்கூட அவரை நினைவு கூர்வதை தடுக்கிறார்கள். அவருக்கு சிலை வைக்க தடுக்கிறார்கள் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கிறார்கள் புத்தகம் வெளியிட இடைஞ்சல் கொடுக்கிறார்கள் போஸ்டர் ஒட்டினால் இரவிரவாக கிழிக்கிறார்கள் அவர் பெயரை உச்சரிப்பவர்களை பின்தொடர்ந்து கண்காணிக்கிறார்கள் அதையும் மீறி செயற்பட்டால் கைது செய்து பொய் வழக்கு போடுகிறார்கள் சிறையில் அடைத்தால் வழக்கை விரைந்து விசாரிக்காமல் வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள் சரி ஜாமீனாவது கொடுங்கள் என்றால் அதையும் மறுக்கிறார்கள். வேடிக்கை என்னவெனில் ஜாமீன் கோரினால் அதை தள்ளுபடி செய்வதாக ஒற்றைவரி எழுதுவதற்குகூட நீதிபதி 6 மாதம் எடுத்துக்கொள்கிறார். ஏன் இத்தனை அராஜகம்? எதற்காக அரசு அவரைக் கண்டு அஞ்சுகிறது? அவர் இறந்து 36 ஆண்டு ஆகியும்கூட அரசு ஏன் அவர் பெயரைக் கேட்டால் பதட்டமடைகிறது? ஒரே ஒரு காரணம்தான். இந்த ஒற்றைப் பெயர் அணுகுண்டைவிட ஆபத்தானது என்று நினைக்கிறார்கள். இந்தப் பெயரே தங்களை தகர்த்து எறியப் போகிறது என்று உணர்கிறார்கள். அதனால்தானே அந்தப் பெயருக்கு அரசு அஞ்சுகிறது. ஆம். அந்த பெயர் “ தோழர்.தமிழரசன் குறிப்பு – செப் -1 தோழர் தமிழரசனின் 36வது நினைவு தினம். தயாராகுவோம் அவரை நினைவு கூர்வதற்கு.

கடவுள் இல்லை என்று உலகில் கூறிய

கடவுள் இல்லை என்று உலகில் கூறிய முதல் பகுத்தறிவுவாதி புத்தர். இன்றும்கூட கடவுள் இல்லை என்றுகூற பலர் அச்சப்படுகின்றனர். ஆனால் 2500 வருடங்களுக்கு முன்னரே கடவுள் இல்லை என்று கூறியவர் புத்தர் கடவுள் இல்லை என்று கூறியவரையே கடவுளாக்கி அதற்கு பௌத்த மதத்தையும் உருவாக்கிவிட்டார்கள். 1989ல் இதனைக்கூறி புத்தர் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையையும் ஏற்படுத்தியவர் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் சண்முகதாசன். 1994ம் ஆண்டு மதுரை சிறையில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை அம்பேத்கார் எழுதிய “புத்தர் தம் வரலாறு” தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்தது. இதையறிந்த நான் உடனே என் வழக்கறிஞர் கணேசன் மூலம் அந் நூலை வாங்கி படித்தேன். நான் புத்தர் பற்றிய நூலைப் படிக்க காட்டிய ஆர்வத்தைப் பார்த்து சிறை ஜெயிலர் செல்வராஜ் ஆச்சரியமடைந்தார். ஆனால் இப்போது புத்தரை வைத்து சிங்கள பௌத்த பேரினவாத அரசு செய்யும் தமிழின அழிப்பை பார்க்கும்போது என்னையும் அறியாமல் அந்த புத்தர் மீதே எரிச்சல் வருகிறது.

வல்வை படுகொலையின் 34வது நினைவுதினம்

வல்வை படுகொலையின் 34வது நினைவுதினம் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட இந்த அப்பாவி மக்களுக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள். ராஜீவ் கொலைக்கு நீதி கோருவோர் வல்லைப் படுகொலைக்கு ஏன் நீதி கோருவதில்லை? ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரையில் ராஜீவுக்கு போனால் உயிர். தமிழனுக்கு போனால் மயிர். அப்படித்தானே?

நாம் எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும்

நாம் எந்த ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான் எதிரி ஆயுதம் ஏந்தாதவரை விமர்சனமே எமது ஆயுதம். எதிரி ஆயுதம் ஏந்திவிட்டால் ஆயுதமே எமது விமர்சனம் - தோழர் மாவோ

400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல

400 இந்தியர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்ட அதிகாரி டயரை இங்கிலாந்து சென்று கொன்ற உதம்சிங்கை "தியாகி" என்று கௌரவிக்கும் இந்திய அரசு, 7000 தமிழர்களை கொல்ல காரணமான ராஜீவ் காந்தியை இந்தியா சென்று கொன்ற தாணுவை "பயங்கரவாதி" என்கிறது. இது என்ன நியாயம்? (31.07.2023 உதம் சிங் நினைவு தினம்.)

நேற்றைய செய்தி

நேற்றைய செய்தி “எம்மை தொடர்ந்து சீண்டிப் பார்க்காதீர்” - அரசுக்கு சம்பந்தன் எச்சரிக்கை இன்றைய செய்தி “பொறுமையாக இருங்கள். விரைவில் மாற்றம் வரும்” - தீர்வு குறித்து சம்பந்தன் நம்பிக்கை எதைச் சொன்னாலும் அதை “ஐயாவின் சாணக்கியம்” என கொண்டாட நாலு சுமந்திரன் தம்பிகள் இருக்கும்வரை, “வாழும் வரை வீரர்” என்று பட்டம் கொடுக்க கனடாவில் நாலு முதியவர்கள் இருக்கும்வரை, சம்பந்தர் ஐயா இப்படியான அறிக்கைகள் விடுவதை நிறுத்தப் போவதில்லை.

இவர் ஏன் விமர்சிக்கப்படுகிறார்?

•இவர் ஏன் விமர்சிக்கப்படுகிறார்? தையிட்டியில் விகாரை அமைப்பதற்கு எதிராக போராடுகிறார். கடற்படைக்கு நிலம் அளவீடு செய்தால் ஓடிச் சென்று தடுக்கிறார். இதனிடையில் இந்திய தூதர் கோபம் கொள்வார் என்று தெரிந்தும் அதற்கு அஞ்சாது வல்வை சென்று இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களை மக்களுடன் சேர்ந்து நினைவு கூருகிறார். அப்புறம் ஓய்வெடுப்பார் என்று பார்த்தால் மன்னார் சென்று மலையக மக்களின் பவனியில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கிறார். இப்படி மக்களோடு மக்களுக்காக நிற்கிறார் ஆனாலும் இவர் விமர்சிக்கப்படுகிறார். ஒருவேளை சம்பந்தர் ஐயா போல் கொழும்பில் சொகுசு மாளிகையில் நீண்ட உறக்கத்தில் இருக்காததை தவறு என்கிறார்களா?

சீமானைவிட அதிகமாக இஸ்லாமிய சிறைவாசிகளின்

சீமானைவிட அதிகமாக இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்கு குரல் கொடுத்தோர் தாராளமாக சீமான் மீது கல்லெறியட்டும்.

இன்று சீமானை "இனவாதி" என்று விமர்சிக்கும்

இன்று சீமானை "இனவாதி" என்று விமர்சிக்கும் இதே போலிக் கம்யுனிஸ்டுகள்தான் தோழர் தமிழரசன் தமிழ்த்தேசியத்தை முன்வைத்தபோது அவரையும் இனவாதி என்றார்கள். இவர்கள் உலகில் எல்லா தேசிய இனங்களின் தேசியத்தையும் ஆதரிப்பார்கள். ஆனால் தமிழ் இனத்தின் தமிழ்த்தேசியத்தை மட்டும் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள். (படம் - தன் மகன் கொல்லப்பட்டுவிட்டான் என்பதை அறியாமல் தமிழ்நாடு விடுதலை அடைந்ததும் அவன் திரும்பி வருவான் என இறக்கும்வரை காத்து இருந்த தமிழரசனின் தாயார் பதூசு அம்மாளை மேடை ஏற்றி கௌரவித்த சீமான்.)

அருண் சித்தார்த் எதிரிக்கு சோரம்

அருண் சித்தார்த் எதிரிக்கு சோரம் போய்விட்டார் என்று கூறுவதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழருக்கு தகுதி இல்லையா? நாட்டில் ரவுண்ஸ் எண்ணி போராடியவர் மட்டும்தான் அருண் சித்தார்த்தை விமர்சிக்க முடியுமா? என்னே கொடுமை இது? சரி. பரவாயில்லை. நானும் ரவுண்ஸ் எண்ணி போராடிய ஒரு போராளிதான். அதனால் எட்டு வருடம் சிறை வாழ்க்கையை அனுபவித்தவன் என்பதை எப்படி இந்த சிஙகள அரசு விசுவாசிக்கு நான் நிரூபிப்பது? குறிப்பு – என் பெயர் பாலகன் அல்ல. பாலன்.

யூதர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?

•யூதர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? உலகெங்கும் அகதிகளாக அலைந்துகொண்டிருந்த யூதர்களுக்கு இஸ்ரவேல் என்ற தனிநாடு கிடைப்பதற்கு அன்றிருந்த சூழலே காரணம் என்பார் சிலர். இன்னும் சிலர் வல்லரசுகளான அமெரிக்காவும் பிரிட்டனுமே காரணம் என்பார்கள். கம்யுனிஸ்ட் தலைவர் ஸ்டாலின்தான் காரணம் என்று சொல்பவர்களும்கூட உண்டு. ஆனால் இவை எல்லாவற்றையும்விட முக்கிய காரணம் தங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற யூதர்கள் அனைவரினதும் விருப்பமும் அதை அடைவோம் என்ற உறுதியான நம்பிக்கையுமே. நாட்டை விட்டு ஓடிவிட்டீர்கள். உங்களுக்கு இனி நாட்டைப் பற்றி கதைக்க தகுதியில்லை என்று ஒரு யூதன் இன்னொரு யூதனைப் பார்த்து கூறவில்லை. மாறாக இஸ்ரவேல் என்ற நாட்டை அடைவதற்கு முன்பே ஒரு யூதன் இன்னொரு யூதனை சந்தித்துவிட்டு விடைபெறும்போது நாளை இஸ்ரவேலில் சந்திப்போம் என்றே கூறி விடை பெறுவார்களாம். அந்தளவுக்கு தமக்கு ஒரு நாட்டை அடைய வேண்டும் என்ற உறுதியும் ஒற்றுமையும் நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது. அதுபோல தமிழர்களும் இன்று பல நாடுகளில் அகதிகளாக சிதறி இருக்கிறோம். சுமார் 8 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறோம் இன்று போராட்டத்தை முன்னகர்த்துவதில் இந்த புலம் பெயர்ந்தவர்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்றால் அது மிகை அல்ல. புலம் பெயர்ந்தவர்கள் தம் தமிழின அடையாளத்தை மறந்து அந்தந்த நாடுகளின் அடையாளங்களுடன் கலந்து விடுவார்கள் அல்லது கரைந்துவிடுவார்கள் என்று சிங்கள அரசும் இந்திய அரசும் நினைத்தன. ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒரு கையால் போராட்டத்தை நகர்த்திக்கொண்டு மறு கையால் தாயகத்தில் உள்ள உறவுகளுக்கு உதவி வருவதைக் கண்டு அவை ஆச்சரியம் அடைகின்றன. வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப் பிடிக்க அமைப்பு இல்லை. ஆனாலும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அடுத்த சந்ததியும்கூட போராட்டத்தைக் கையில் எடுத்துவிட்டது. தலைவர்களை விலைக்கு வாங்கிய சிங்கள மற்றும் இந்திய அரசுகளால் புலம்பெயர்ந்த இந்த மக்களை வாங்கவும் முடியவில்லை. இவர்களின் போராட்டங்களை அடக்கவும் முடியவில்லை. புலம் பெயர்ந்த மக்களை அடக்கவும் முடியவில்லை. அச்சுறுத்தவும்கூட முடியவில்லை என்றவுடன் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாராளமாக இலங்கை வந்து முதலீடு செய்யலாம் என சிங்கள அரசு ஆசை வார்த்தை வீசுகின்றது. இந்திய அரசோ அண்ணாமலையை அனுப்பி நாம் அனைவரும் இந்துக்கள் என்றுகூறி உறவுப்பாலம் கட்ட முனைகிறது. இதற்கு “நாம் மீண்டும் எழுவோம்” என்று புலம் பெயர்ந்த தமிழர் அளிக்கும் பதில் சிங்கள மற்றும் இந்திய அரசுகளுக்கு எரிச்சல் கொடுப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதனால் தம் கைக்கூலிகள் மூலம் “ஒருமுறை எழும்பி அழிந்தது போதாதா? மீண்டும் அழியனுமா?” , “போராடுவதாக இருந்தால் நாட்டில் வந்து போராடுங்கள்” என்று கூற வைக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் யூதர்களின் வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்டு உலகத் தமிழர்கள் அனைவiரையும் ஒற்றுமைப்படுத்தி தம் இலக்கை அடையும் பயணத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

தோழர் பிரடெரிக் எங்கெல்சின் நினைவு நாள்(05.08.23)

தோழர் பிரடெரிக் எங்கெல்சின் நினைவு நாள்(05.08.23) தோழர் எங்கெல்ஸ் இல்லையேல் கால் மார்க்ஸ் இல்லை. மாக்சியமும் இல்லை என்று தோழர் லெனின் கூறியிருந்தார். ஆனால் தோழர் எங்கெல்ஸ் “அனைத்து பெருமைகளையும் தன் நண்பன் கால் மார்க்ஸ்ற்கே உரியது” என்று அடக்கத்துடன் கூறுகிறார். அத்தகைய மாபெரும் ஆசான் தோழர் எங்கெல்ஸ் நினைவு தினம் இன்று ஆகும். (05.08.2023) உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார். அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849-இல் ஜெர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெய்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார். தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறுகிறார். மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார். எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவஞானி;. எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.

இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள

இலங்கையில் உள்ள இஸ்லாமியர்களை “ சோனகர்” என்ற தனி இனமாக இலங்கை அரசு கருதுகின்றது. ஆனால் தமிழ் நாட்டில் உள்ள இஸ்லாமியர் தம்மை தமிழராகவே உணர்கின்றனர். அடையாளப்படுத்துகின்றனர். அதனால்தான் அப்துல் ரவூப் என்ற இஸ்லாமிய இளைஞன் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்தான். ஆனால் இன்று அம் மக்கள் மத்தியில் இன உணர்வை விட மத உணர்வு அதிமாக ஊட்டப்படுகின்றது. இதன் விளைவே இதுவரை புலிகளை ஆதரித்து வந்த அமீரே “நாம் தமிழர் கட்சியில் உள்ள இஸ்லாமியர்களிடம் உங்கள் தலைவர் பிரபாகரனா இல்லை அல்லாவா என்று கேளுங்க” என்று பேச வைத்திருக்கிறது. எல்லோரும் அமீரா இப்படி பேசியது என்று ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். ஆனால் எனது கவலையெல்லாம் தமிழ்நாட்டில் இரகசியமாக வளர்ந்துவரும் இஸ்லாமிய மத வெறிக் கும்பல் பற்றியே. இந்த கும்பல்தான் இலங்கையில் நடந்த ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு காரணம். இக் கும்பல்தான் அக் குண்டுத் தாக்குதல்களுக்கு ஆர்டிஎக்ஸ் வெடி மருந்துகளை வழங்கியது. அவ் ஈஸ்டர் வெடி குண்டு தாக்குதல்களில் அதிகம் இறந்தது கிருத்தவ தமிழ் மக்களே. ஆனாலும் இந்து மற்றும் கிருத்தவ தமிழ் மக்கள் இஸ்லாமிய மக்களை திருப்பி தாக்கவில்லை அதுமட்டுமல்ல சிங்களவர்கள் இஸ்லாமிய மக்களை தாக்க முற்பட்டபோதும் அதனை தடுத்து இஸ்லாமிய மக்களை அப்போது பாதுகாத்தவர்கள் தமிழ் மக்களே. அதேபோல் தமிழக மக்களும் ஒன்று திரண்டு இந்த இஸ்லாமிய மத பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும். நான் அறிந்தவரையில் தமிழ்நாட்டில் இஸ்லாமிய மத பயங்கரவாதத்தை ஆரம்பித்து வைத்தவர் இமாம் அலி. பாபர் மசூதி இடிக்கப்பட்டால் மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலை இடிப்பேன் என இவர் கூறினார். அதனால் இவரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்தார்கள். இவர் எனது செல்லுக்கு அருகில் வைக்கப்பட்டதால் எப்போதும் என்னுடன் பேசிக் கொண்டிருப்பார். இவர் மதுரை சிறையில் இருந்து தப்பிச் சென்று பல குண்டு தாக்குதல்களை நடத்தியபோது அதற்கு நான்தான் உதவி செய்திருக்ககூடும் என கியூ பிரிவு பொலிஸ் சந்தேகம் கொண்டது. அப்போது திருச்சி கியூ பிரிவு டி எஸ் பியாக இருந்த சண்முகம் “ தமிழ்நாட்டில் நடக்கும் அத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் நீதான் காரணம். உன்னை ஒருபோதும் விட மாட்டோம்” என நேரிடையாகவே என்னை மிரட்டினார்.

செப் -1 தோழர் தமிழரசன்

செப் -1 தோழர் தமிழரசன் 36வது நினைவு தினம் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய விடுதலைக்காக போராடி மரணித்த மாவீரர்கள் அனைவரையும் நினைவு கூர்வோம் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து தமிழ்த்தேசிய விடுதலையை வென்றெடுப்போம்

என் முகநூலில் எனது பதிவு

என் முகநூலில் எனது பதிவு ஒன்றின் கீழ்தான் கவிஞர் தாமரை இந்த கருத்தை பதிவு செய்திருந்தார் அவர் பொதுவாக கூறிய கருத்தை கருணாநிதிக்கு கூறிய கருத்தாக நினைத்து உடன்பிறப்புகள் திராவிட மொழியில் திட்டித் தீர்க்கின்றனர். தொப்பி கலைஞருக்கு அளவாக இருப்பதற்கு கவிஞர் தாமரை என்ன செய்ய முடியும்?

புரட்சிப் பாடகர் கத்தார் அவர்கள்

புரட்சிப் பாடகர் கத்தார் அவர்கள் மரணமடைந்துள்ளார். அவருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள். 1986ல் ல் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அவரின் நிகழ்ச்சியை பார்வையிடும் வாய்ப்பு கிட்டியது. தெலுங்கு மொழியில் அவர் பாடினார். மொழி புரியாதவர்களுக்கும் அவரின் உடல் அசைவு பாடல் அர்த்தத்தைப் புரிய வைத்துவிடும். இன்றும்கூட அவர் பாடல்களை யுரியூப்பில் அடிக்கடி கேட்டு வருகின்றேன். பல வருடங்கள் அவர் நக்சலைட் இயக்கத்தில் இருந்தாலும் இறுதிக் காலங்களில் அதிலிருந்து விலகியிருந்தார். ஆனாலும் அவர் பாடிய புரட்சிப் பாடல்கள் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

மலையக தமிழ் சிறுமி அசானி

மலையக தமிழ் சிறுமி அசானி அவர்களுக்கு ஜீ தமிழ் சரிகம நிகழ்வில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறுமி அசானி அவர்களுக்கு வாழ்த்துகளும் வாய்ப்பளித்த ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றிகளும். இதுவரை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் வடக்கு கிழக்கில் வாழும் பூர்வீக தமிழர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. முதன்முறையாக மலையக தமிழருக்கு அதுவும் இந்தியாவில் இருந்து அவர்கள் அழைத்து வரப்பட்ட 200வது ஆண்டை நினைவு கூர்ந்துகொண்டிருக்கும் தருணத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மக்களின் இன்றைய நிலைபற்றி உலகில் உள்ள தமிழ் மக்கள் குறிப்பாக தமிழக மக்கள் அறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கூமுட்டை குஞ்சு பொரிப்பதில்லை

•கூமுட்டை குஞ்சு பொரிப்பதில்லை பொதுவாக ஒரு பேப்பரில் வடையை வைத்து அழுத்தினால் எண்ணெய் காணாமல் போகும். ஆனால் வித்தியாதரன் எழுதிய பேப்பரில் வடையை வைத்து அழுத்தினால் வடையே காணாமல் போகும். ஆச்சரியம். ஆனால் உண்மை. அந்தளவுக்கு வித்தகர் இந்த வித்தியாதரன். தான் மகிந்தவுடன் உணவு அருந்தியது பிரபாகரனுக்கும் பிரபாகரனுடன் உணவருந்தியது மகிந்தவுக்கும் தெரியும் என்று கூறுகின்றார். அப்படியென்றால் கொழும்பில் கோத்தபாயாவின் வெள்ளைவான் கடத்தியது என்று ஆடியது எல்லாம் நாடகமா வித்தியாதரன் அவர்களே? தான் பத்திரிகையாளன் என்றும் தான் யாருடனும் கை குலுக்குவேன் என்கிறார். முன்னாள் போராளிகளை வைத்து ஜனநாயகப் போராளிகள் கட்சி தொடங்கியவரை, உள்ளுராட்சி தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் பெயர் கொடுக்கப்பட்டவரை, இறப்பதற்குள் மாகாண முதல்வராகவோ அல்லது ஒரு எம்.பியாகவோ ஆகத் துடிப்பவரை, வெறும் பத்திரிகையாளர் என்பதா அல்லது அரசியல்வாதி என்பதா? ஒரு தமிழினப் படுகொலையாளியை குடும்ப நிகழ்வுக்கு அழைத்து கைகுலுக்குவதை தொழில் நிமித்தமானது என ஒருபோதும் குறிப்பிட முடியாது. குறிப்பு – என்ன இருந்தாலும் ஒரு மூத்த ஊடகவியலாளரை கூமுட்டை என்று குறிப்பிடலாமா என ஆதங்கப்படுபவர்களுக்கு என் விளக்கம் உதாரணங்கள் ஊனமானவை.

கேரளாவில் கம்யுனிஸ்டாக இருந்தாலும்

கேரளாவில் கம்யுனிஸ்டாக இருந்தாலும் மலையாளி தன்னை மலையாளியாக உணர்கிறான். அவன் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்று அறைகூவல் விட்டுக்கொண்டு மறுபுறம் அருகில் இருக்கும் தமிழ் தொழிலாளிக்கு தண்ணி கொடுக்க மறுக்கிறான். கர்நாடகாவில் பிஜே.பி யாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரசாக இருந்தாலும் சரி கன்னடன் தன்னை கன்னடனாகவே உணர்கிறான். அதனால்தான் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழனுக்கு காவிரி தண்ணி கொடுக்க அவன் மறுக்கிறான். ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் தன்னை தமிழனாக உணர வேண்டும் என்றால், ஒருத்தன் “இல்லை, திராவிடனாக உணர வேண்டும்” என்கிறான். இன்னொருத்தன் “சாதி”யாக உணர வேண்டும் என்கிறான். வேறு ஒருத்தன் “ இந்து” வாக உணர வேண்டும் என்கிறான். இதையும்மீறி யாராவது தமிழன் தன்னை தமிழானாக உணர்ந்தால் உடனே அவனை “தமிழ் இன வெறியன்” என்கிறார்கள். மலையாளி தன்னை மலையாளியாக உணர்வதை “மலையாள இனவெறி” என்று கூறாதவர்கள், கன்னடன் தன்னை கன்னடனாக உணர்வதை “கன்னட இனவெறி” என்று கூறாதவர்கள், தமிழன் தன்னை தமிழனாக உணர்வதை மட்டும் “தமிழ் இனவெறி” என்று கூறுகிறார்கள். கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலை வாயப்பு என சட்டம் இயற்றுகிறார்கள். நாகலாந்தில் அம் மாநிலத்தவருக்கே வேலையில் முன்னுரிமை என சட்டம் இயற்றியுள்ளார்கள். குஜராத் உட்பட பல மாநிலங்களில் இப்படி சட்டம் இயற்றி செயற்படுத்துகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் திருச்சி ரயில்வேயில் 90 வீதமான வேலை வாய்ப்பு வட இந்தியருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழனுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குங்கள் என்றால் தமிழன் என்றால் யார் என்று நக்கலாக கேட்கிறார்கள் தமிழன் தனக்கு ஏற்பட்டுள்ள இந்த அவல நிலை குறித்து அக்கறை கொள்ளவில்லை. மாறாக மலையாள நடிகர் அஜீத் எப்போது அடுத்த படம் நடிப்பார் என கவலைப் பட்டுக்கொண்டு இருக்கிறான். என்னே அவலம்? ஒரேயொருமுறை தமிழன் தன்னை தமிழனாக உணர்ந்தால் போதும். அது எப்போது நிகழும்?

2009ல் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்

2009ல் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் கொல்லப்பட்டபோது “ சங்க இலக்கியத்தில் ஒரு வீட்டில் மரண ஓலம் கேட்டபோது இன்னொரு வீட்டில் மங்கள ஒலி கேட்டது என்று கூறினார் கலைஞர். அதேபோல் 07.08.2018ல் கலைஞர் இறந்தபோது மங்கள ஒலி கேட்டது என்று நாம் கூறியிருக்க முடியும். ஆனால் நாம் அவ்வாறு கூறவில்லை, ஏனெனில் நாம் தமிழர்

பார்வதி அம்மாள் !

•பார்வதி அம்மாள் ! பிரபாகரனின் தாயார். அவர் எந்த அரசியல் செயற்பாடும் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் வயதான அந்த தாயாரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் தாயாரும் பயங்கரவாதி. அதனால் அவரையும் கைது செய்ததாக காரணம் சொன்னார்கள். அதெப்படி தாயாரை பயங்கரவாதி என்று கூறமுடியும்? என நாம் இங்கு கேட்க வரவில்லை. நாம் கேட்க விரும்புவது அதேபோல் ஜேவிபி தலைவர் ரோகண விஜேயவீராவையும் பயங்கரவாதி என்றார்களே. ஆனால் அவருடைய தாய் தந்தையரை ஏன் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை? அதையும்விட பிரபாகரனின் 12 வயது மகனைக்கூட பயங்கரவாதி என்று கொன்றார்கள். ஆனால் விஜேயவீராவின் 6 குழந்தைகளையும் பராமரித்து படிக்க வைத்தார்கள். ஆனால் கைது செய்த பிரபாகரனின் தாயாருக்கு உரிய மருத்துவ வசதிகூட வழங்காமல் அடைத்து வைத்திருந்தார்கள். இறுதியாக அந்த தாயார் சிகிச்சைக்காக சென்னை சென்றபோது கலைஞர் கருணாநிதி அவரை வயதான நோயாளி என்றும் பார்க்காமல் திருப்பி அனுப்பினார். இத்தனை கொடுமைகளும் பார்வதி அம்மாள் ஒரு தமிழர் என்பதால்தானே நடைபெற்றது? ஒருவேளை அவர் சிங்கள இனத்திலோ அல்லது வேறு இனத்திலோ பிறந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா என கேள்வி எழுவது தவறா நண்பர்களே? குறிப்பு – விஜேயவீராவின் குடும்பமும் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என நாம் கோரவில்லை. மாறாக பிரபாகரன் குடும்பம் கொல்லப்பட்டமைக்கு அவர்கள் தமிழர்கள் என்பதே காரணம் என்பதை சுட்டிக் காட்டுவதே இந்த பதிவின் நோக்கம்.

எம்மால் மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை!!

•எம்மால் மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை!! “உலகத் தொழிலார்களே ஒன்று சேருங்கள்” என்று காரல் மார்க்ஸ் சொல்லுமுன்னரே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கூறிய இனம் தமிழ் இனம். வந்தாரை வாழ வைத்த அந்த இனம் கைபர் கணவாய் வழியே வந்த திருட்டு கூட்டத்திடம் இரந்து கேட்டது. 17 பேர் தீக்குளித்து இறந்தும் கேட்டனர். தன் கைக்கெட்டும் தூரத்தில் தன் தொப்புள் கொடி உறவுகள் ஒன்றரை லட்சம்பேர் இறந்தபோது தாய்த் தமிழகம் செய்வதறியாது திகைத்து நின்றது. ஆனாலும் அந்த வெளிவிவகார அமைச்சர் இரங்க மறுத்தார். அவர் கொஞ்சம்கூட இரக்கம் இன்றி “போர் நிறுத்தம் செய்யுமாறு அண்டை நாட்டை நாம் வலியுறுத்த முடியாது, அது அந்நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக ஆகிவிடும்” என்றார். ஆனால் யுத்தத்தை இலங்கை இந்திய அரசுகள் சேர்ந்தே செய்தன. தமிழ் இனப் படுகொலையை சேர்ந்தே செய்தன என்ற உண்மைகள் இப்போது வெளிவந்துவிட்டன. அதுமட்டுமன்றி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை படுகொலை செய்த விடயத்திலும் இந்திய அரசு சார்பில் இவருக்கும் நேரடிப்பங்கு உண்டு. பல்லாயிரம் ஈழத்தமிழ் மக்களின் மரணங்களுக்கு காரணமானவர். பல கோடி தமிழக தமிழ் மக்களின் கோரிக்கையை மதிக்காதவர். இவர் மரணமடைந்துவிட்டார் எனில் தமிழனாகிய எம்மால் எப்படி வருத்தப்பட முடியும்? ஏனெனில் எம்மால் இவரை மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை

தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார்

தன்னை உலகத் தமிழினத் தலைவர் என்றார் தன்னை கடலிலே தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக மாறி வந்து உதவுவேன் என்றார் ஆனால் ஈழத்தில் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டபோது அது தூவானமாக அவருக்கு தெரிந்தது கொல்லப்பட்டவர்கள் எழுப்பிய மரண ஓலம் மங்கள இசையாக அவருக்கு கேட்டது. தமிழர்களைக் கொன்ற ராஜபக்சாவின் ரத்தம் தோய்ந்த கரங்களை குலுக்கி பரிசில் பெற முடிந்தது. சீ வெட்கம்!

இராணுவ தளபதிகளை பாடசாலைக்கு

இராணுவ தளபதிகளை பாடசாலைக்கு அழைத்து கௌரவிக்க வேண்டும் என்று சட்டம் சொல்லுகிறதா? இல்லையே! இராணுவ தளபதிகளை அழைத்தால்தான் பாடசாலைக்கு நிதி உதவி செய்வோம் என்று அரசு சொல்கிறதா? இல்லையே! பாடசாலைகள் மீது குண்டு போட்டவர்களை, பாடசாலை மாணவர்களை கொன்று புதைத்தவர்களை, பாடசாலை மாணவிகளை பாலியல் வல்லுறவு செய்து கொன்றவர்களை, பாடசாலைக்கு அழைத்து கௌரவிக்கலாமா? இந்த இனப்படுகொலையாளிகளை விசாரித்து தண்டனை வழங்க வேண்டும் என்று உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் குரல் எழுப்பும் வேளையில், இந்த இனப்படுகொலையாளிகளுக்கு கனடா அரசு பயணத் தடை விதித்திருக்கும்வேளையில். யாழ் நகரில் புகழ் பெற்ற பாடசாலையே இனப்படுகொலையாளிகளை மாலை அணிவித்து வரவேற்பது முறையோ? முழந்தாளிட்டு இப்படி வாழ்வதைவிட எழுந்து நின்று மடிவது மேல்!

புலிகள் இயக்கம் வெற்றி பெறவில்லை

தமிழ் இனம் விடுதலை பெறவேண்டும் என்ற எமது இலக்கு வெற்றி பெற வேண்டுமாயின் அதனை அடைவதற்குரிய பாதை எது என்பது குறித்தும் நாம் தெளிவாக கண்டறிய வேண்டும். இன்று இரண்டு பாதைகள் எம்முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதை. இன்னொன்று அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையாகும். ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை பலாத்கார முறையென்றும் அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையை சாத்வீக பாதையென்றும் இன்னொரு வடிவத்தில் சிலர் வரையறை செய்கிறார்கள். புலிகள் இயக்கம் வெற்றி பெறவில்லை என்பதை வைத்து ஆயுதப் போராட்டம் பயனற்றது என இன்று சிலர் போதிக்க முற்படுகின்றனர். புலிகள் மௌனித்தது தங்களது ஆயுதங்களையே ஒழிய ஆயுதப் போராட்டத்தை அல்ல. 1948ம் ஆண்டு முதல் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாத நிலையில் தமிழரசுக்கட்சி 1962ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது. இந்த அகிம்சைப் போராட்டத்தை வெகு இலகுவாக பலாத்காரத்தை பாவித்து இலங்கை அரசால் முறியடிக்க முடிந்தது. அகிம்சையை போதித்த தமிழரசுக்கட்சி தலைவர்களால் இலங்கை அரசின் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை முன்வைக்க முடியவில்லை. இருந்தபோதும் இவர்கள் பின்னால் சென்ற தமிழ் இளைஞர்கள் அந்த உண்மையைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கி அரச பலாத்காரத்திற்கு தகுந்த பதில் அளித்தார்கள். இதனை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் தமது பூரண ஆதரவை இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இவ்வாறே இலங்கை அரசின் பலாத்காரத்திற்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பலாத்காரம் உருவாகியது. மக்களை ஏமாற்றவும் புரட்சியின் கவனத்தில் இருந்து மக்களை திசைதிருப்பவுமே முதலாளித்துவ நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுகின்றனர். இதன்மூலம் இந் நாடுகளில் உண்மையான அதிகாரம் ஆயுதம் தாங்கிய படைகளின் கையில்தான் இருக்கின்றது என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது. பாராளுமன்ற வழி மூலம் பேச்சுவார்த்தைகளினால் தீர்வு பெறும்படி கூறுவதன் மூலம் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றனர். எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கத்தை அடக்கிவைத்திருப்பது பலாத்காரத்தின் மூலமே. ஆயுதம் தாங்கிய படைகள் உள்ளடங்கிய ஒரு அரசு இயந்திரத்தை இதற்காக உருவாக்கி வைத்திருக்கின்றனர். ஆளும் வர்க்கத்தின் காவல் நாய்களான ஆயுதப் படைகளின் கைகளில் இருக்கும் துப்பாக்கி இல்லாமல் ஒரு நிமிடமேனும் ஆளும் வர்க்கத்தால் ஆட்சி நடத்த முடியாது. அதனால்தான் “அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழாயில் இருந்து பிறக்கின்றது” என்று தோழர் மாசேதுங் கூறினார். இதன் அடிப்படையில்தான் ஆளும் வர்க்கத்தின் பலாத்காரத்திற்கு எதிராக ஆளப்படும் வர்க்கம் எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்காமல் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்று புரட்சியாளர்கள் கூறிவருகிறார்கள். கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிவான். இது கடவுள் செயல் என்று சாத்வீக வாதிகள் போதிக்கின்றனர். ஆனால் அவர்களின் கடவுள்கள்கூட ஆயுதத்தைப் பாவித்தே அதர்மத்தை ஒழித்ததாக உள்ள கதைகளை இவர்கள் மறந்துவிடுகின்றனர். இந்துசமயப் புராணக் கதைகளை எடுத்துப் பார்த்தாலும் அதர்மத்தை அழித்து தர்மம் வெல்வதற்கு பலாத்காரமே காரணமாய் இருப்பதைக் காணலாம். இந்துமத சிவன் கையில் சூலாயுதம் இருக்கிறது. கிருஸ்ணன் கையில் சக்கராயுதம் இருக்கிறது. முருகன் கையில் வேலாயுதம் இருக்கிறது. காளி கையில் கத்தி இருக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். கடந்த 71 வருட தேர்தல் வரலாற்றில் இருந்து நாம் தெரிந்துகொண்டது தேர்தல் மூலம் ஆளும் வர்க்கத்தில் ஆட்களை மாற்ற முடியுமேயொழிய ஆளும் வர்க்கத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதே. இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சண்முகதாசன் தமது அனுபவங்களில் இருந்து கூறியது, “ இன்றுள்ள நவகாலனிச பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே அவை செயற்படும். எனவே அடக்கு முறையான பூர்சுவாவர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது”.

தமிழா!

தமிழா! கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது உனது ரயில்வேயில் உனக்கு வேலை இல்லை. 90% வேலை வட மாநிலத்தவருக்கு. காஸ்மீர் எல்லையில் காவலுக்கு சென்று நீ சாக வேண்டும். ஆனால் கடலில் உன் மீனவனைக் காக்க யாரும் வருவதில்லை. வருடம் 85 ஆயிரம் கோடி ரூபா வரி நீ கட்ட வேண்டும். ஆனால் கொரோனோவுக்கு காசு கேட்டு நீ கையேந்தினாலும் உதவி கிடைப்பதில்லை. தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் நீ அதை ஆள முடியாது! உன் கைக்கு எட்டும் தூரத்தில் 2 லட்சம் தமிழர் உன் கண்முன் கொல்லப்படும்போதும் உன்னால் காப்பாற்ற முடியாது. ஏனெனில் நீ அடிமையாக இருக்கிறாய் தமிழா! இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல் கிடக்கப் போகிறாய் தமிழா! மூவாயிரம் ஆண்டுக்கு மேலான வரலாறு உனக்கு உண்டு. ஆனால் அதை உணராமல் கைபர் கணவாய் வழியே ஆடு மாடு மேய்த்து வந்தவனிடம் அடிமையாகக் கிடக்கிறாயே. நீ எட்டுக் கோடி தமிழா. ஆனால் இரண்டு கோடி சிங்களவன் எப்படி உன் தொப்புள் கொடி உறவுகளை தைரியமாக கொல்ல முடிந்தது? ஏனெனில் அவன் இரண்டு கோடியாக இருந்தாலும் அவனுக்கு தனி நாடு இருக்கிறது. அவனுக்கு ஒரு அரசும் இருக்கிறது. உனக்கும் ஒரு நாடும் அதில் உன் அரசும் இருந்தால் நீயும் தலை நிமிர்ந்து வாழ முடியும் அல்லவா? உன்னைவிட வரலாறும் சனத் தொகையும் குறைந்த பிரான்ஸ் இன்று வல்லரசு. பிரிட்டன் இன்று வல்லரசு. ஆனால் நீ மட்டும் இதை உணராமல் அடிமையாகக் கிடக்கிறாயே? நீ அடிமையாக கிடப்பது கேவலம் அல்ல. மாறாக நீ அடிமையாக கிடக்கிறாய் என்பதை உணராமல் இருக்கிறாயே அதுதான் கேவலம். உன் அடிமைத்தனத்தை உணர்ந்துகொள் உன் பலத்தை அறிந்துகொள் அதன் பின்னர் கிழக்காசியாவில் ஒரு அதிசயம் நிகழ்வதை நீ காண்பாய். "ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும். தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவதே ஈழத்தமிழருக்கு செய்யும் உதவியாகும்" – தோழர் தமிழரசன்.

கடவுள் கந்தன் கற்றுக் கொடுக்கும்

கடவுள் கந்தன் கற்றுக் கொடுக்கும் முக்கிய விடயம் என்னவெனில் ஆயுதத்தின் மூலமே தீர்வு பெற முடியும் எனபதுதான். கடவுள் கந்தன் எப்போதும் கையில் வேலாயுதத்துடனே காட்சியளிக்கிறார். அவர் சூரனை அகிம்சை முறையில் தோற்கடிக்கவில்லை. மாறாக தனது வேலாயுத்தின் மூலமே வதம் செய்தார் என்று புராணம் கூறுகிறது. எனவே கடவுள் கந்தன் காட்டிய வழியில் தமிழ் மக்களும் தீர்வு பெற வேண்டுமாயின் ஆயுதப் போராட்டமே ஒரே வழியாகும். சம்பந்தர் ஐயா ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை பயங்கரவாதிகள் என்றார். அப்படியென்றால் அவர் தினமும் வணங்கும் கடவுள் கந்தனே முதல் பயங்கரவாதியாகும்.😂

பெரியாரியம் அம்பேத்காரியம் இரண்டும்

பெரியாரியம் அம்பேத்காரியம் இரண்டும் சீர்திருத்தக் கருத்துகளே யொழிய புரட்சிகர கருத்துகள் இல்லை. அதாவது இருக்கின்ற சுவரை பேணிக்கொண்டு அதில் உள்ள பிளவை கொத்துப்பூச்சு செய்வது. ஆனால் சாதி ஒழிப்பிற்கு பாழடைந்த சுவரை அகற்றிவிட்டு புதிய சுவர் எழுப்பும் புரட்சிகர கருத்துகள் தேவை சாதி ஒழிப்பிற்கு பெரியாரை படியுங்கள், அம்பேத்காரை படியுங்கள் என்பவர்கள், தோழர் தமிழரசன் முன்வைத்த “சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்” என்னும் மீன்சுருட்டி அறிக்கையை ஏன் படிப்பதில்லை?

காட்டில் ஒருநாள் சாராயம்

காட்டில் ஒருநாள் சாராயம் குடித்துக்கொண்டிருந்த சிங்கத்திடம் சென்று ஒரு எலி “சாராயம் குடித்து உடம்பை கெடுக்க வேண்டாம். அழகிய சொர்க்கத்தை காட்டுகிறேன்” என்றது. இதைக் கேட்ட சிங்கம் அந்த எலியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது. இதைக் கண்ட அருகில் நின்ற எருமை “ஏன் எலிக்கு அடிக்கிறீர்கள்? நல்லதுதானே சொல்கிறது” என்று சிங்கத்திடம் கேட்டது. சிங்கம் சொன்னது "இந்த பரதேசி கஞ்சா அடிச்சிட்டு இதையே சொல்லி நேத்து என்னை இந்த காடு பூராவும் நடக்க வெச்சான். டெய்லி இவனுக்கு இதான் வேலையே" குறிப்பு - இந்த கதைக்கும் கீழே உள்ள படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?😂

நம்மை ஆளும் அவர்கள் எல்லாம்

நம்மை ஆளும் அவர்கள் எல்லாம் நம் நாட்டின் எல்லை வழியாக நுழையவில்லை. எறும்புபோல் அவர்கள் ஊர்ந்து வந்ததெல்லாம் நம் குறைகள் வழியாகத்தான்.

1984ல் தமிழ்நாட்டில் மலையாளப்பட்டி

• மக்களோடு சேர்ந்து உழையுங்கள்! • மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள்! • மக்களோடு சேர்ந்து உறங்குங்கள்! தோழர்மாஓ சேதுங் சிந்தனையை கற்றுத் தந்த தோழர் தமிழரசன்! 1984ல் தமிழ்நாட்டில் மலையாளப்பட்டி என்னும் இடத்தில் அமைந்திருந்த அரசியல் பயிற்சி முகாமில் எமது தோழர்களுக்கு தோழர் தமிழரசன் அவர்கள் மாக்சிய தத்துவங்களை போதித்தார். அப்போது ஒரு நாள் பெரம்பலூருக்கு அருகில் இருந்த மிகவும் வறிய மக்களின் அழைப்பின் பேரில் எமது சில தோழர்களை அழைத்துக்கொண்டு சென்றார். அந்த மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகவும் கஸ்டப்படுபவர்கள். இருப்பினும் அவர்கள் ஈழப்போராளிகளுக்கு உணவு வழங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதனால் தோழர் தமிழரசன் எமது தோழர்களை அவர்களது இடத்திற்கு அழைத்து சென்றார். உணவு உண்பதற்கு முன்னர் எல்லோரும் குளத்தில் குளிக்கலாம் என்று தோழர் தமிழரசன் கூறினார். இதைக் கேட்டதும் எமது தோழர்கள் மிகவும் மகிழ்வு கொண்டு குளத்தை நோக்கி ஓடினார்கள். மிகவும் ஆர்வமுடன் குளிப்பதற்காக ஒடியவர்கள் குளிக்காமல் குளக்கரையில் நிற்பதைக் கண்ட தோழர் தமிழரசன் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவினார். எமது தோழர்கள் என்னதான் பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்டிருந்தாலும் அவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தில் இருந்து வந்தவர்கள். எனவே அவர்களின் உணவு உடை பழக்க வழக்கங்களில் அந்த வர்க்க குணாம்சம் இருக்கவே செய்தது. அந்த குளம் குட்டையாகவே இருந்தது. கால் பாதம் நனையும் அளவிற்கே தண்ணீர் இருந்தது. அதுவும் கலங்கி மஞ்சள் நிறத்தில் இருந்தது. அதில் ஒரு புறத்தில் எருமைகள் கிடந்து புரண்டு கொண்டிருந்தன. இன்னொரு புறத்தில் பன்றிகள் குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த எமது தோழர்கள் அருவருத்து குளிப்பதற்கு தயங்கினர். இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “ மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று சொல்லிக்கொண்டு தான் முதலில் தண்ணீரில் இறங்கி குளித்தார். மாவோ வின் வரிகளைக் கேட்தும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட எமது தோழர்கள் “புரட்சி ஓங்குக” என்று உரத்துக் கோசம் இட்டவாறு ஒவ்வொருவராக குளத்தில் குதித்து விளையாடினர். பின்பு சாப்பிடுவதற்காக அந்த மக்களின் வீடுகளுக்கு சென்றபோது அங்கு இலையில் சோறும் சுண்டெலிக் கறியும் வைக்கப்பட்டிருந்தது. எலிக்கறி அதுவும் அதன் தலையுடன் பார்த்ததும் எமது தோழர்களுக்கு வாந்தி வராத குறை. யாருமே சாப்பிட வில்லை. இதைப் புரிந்து கொண்ட தோழர் தமிழரசன் “அந்த மக்கள் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கே சோறு சாப்பிடுவார்கள். அந்தளவுக்கு சோறே அம் மக்களுக்கு மிகவும் உயர்ந்த சாப்பாடு. அதை உங்களுக்கு தந்திருக்கிறார்கள். நீங்கள் சாப்பிடவில்லை என்றால் அவர்கள் மிகவும் வருத்தப்படுவார்கள” என்றார். தோழர்கள் புரிந்து கொண்டனர். இம்முறை தோழர் தமிழரசன் கூறுமுன்னரே எமது தோழர்கள் “மக்களோடு சேர்ந்து உழையுங்கள். மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள். மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் என்று தோழர் மாவோ கூறினார்” என்று உரத்து கூறிக்கொண்டு சாப்பிட்டார்கள். என்ன வேடிக்கை என்றால் முதலில் சாப்பிட தயங்கியவர்கள் சாப்பிட்டு சுவை பிடித்துக்கொள்ள மேலும் மேலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். அந்த மக்களும் மிக்க மகிழ்வோடு உணவு பரிமாறினார்கள். உணவு முடிந்த பின்பு அவர்களும் எமது தோழர்களும் மாறி மாறி சில பாடல்கள் பாடியும் மற்றும் நடிப்புகள் செய்து காட்டியும் அனைவரையும் மகிழ்வுறச் செய்தார்கள். இந்த சம்பவத்திற்கு பின்பு எமது தோழர்கள் எப்போதும் தோழர் தமிழரசனை இந்த மாவோவின் வரிகளை உரத்து உச்சரித்து கிண்டல் செய்வார்கள். அவரும் நன்றாக சிரித்து நகைச்சுவை செய்வார். குறிப்பு- செப்-1 திகதி தோழர் தமிழரசன் நினைவு தினத்தை முன்னிட்டு இது ஒரு மீள் பதிவு ஆகும்

விடுதலை படத்தில் வாத்தியார்

விடுதலை படத்தில் வாத்தியார் (புலவர்) ரயிலுக்கு குண்டு வைத்தது போல் வெற்றிமாறன் காட்டியிருப்பார். ஆனால் உண்மையில் அந்த ரயில் குண்டு வெடிப்பிற்கும் புலவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த சம்பவம் தோழர் தமிழரசன் தலைமையிலேயே நடந்தது. மேலும் படத்தில் காட்டியதுபோல் அது கனிம வள கொள்ளைக்கு எதிராக நடந்த சம்பவம் அல்ல. இந்திய அரசு தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கோரி நடந்த சம்பவம். பலரும் நினைப்பதுபோல் ரயிலுக்கு குண்டு வைக்கப்படவில்லை. பாலத்திற்குதான் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பாலம் தகர்க்கப்பட்டு இரண்டரை மணி நேரம் கழித்து வந்த ரயிலே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பாலத்தை தகர்த்துவிட்டு அருகில் இருந்த ரயில்நிலையம் சென்று பாலம் தகர்க்கப்பட்ட செய்தி ஸ்டேசன் மாஸ்டரிடம் கூறப்பட்டது. ஸ்டேசன் மாஸ்டர் உடனே சம்பந்தப்பட்ட தலைமை அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறார். ஆனால் அடுத்து வரும் ரயிலை மறிக்க வேண்டாம். தொடர்ந்து செல்ல அனுமதியுங்கள் என அவருக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளது. ஸ்டேசன் மாஸ்டருக்கு மேலிடத்தின் முடிவு குழப்பத்தை தந்திருக்கிறது. அதனால் அவர் மனம் கேளாமல் ரயில் சாரதியிடம் ஏதோ சத்திம் கேட்டது. மெதுவாக செல்லுங்கள் என கூறியிருக்கிறார். அச் சாரதியும் மெதுவாக ஓட்டி வந்ததால் முன்பக்க ஒரு பெட்டி மட்டுமே பாலத்தில் கவிழ்ந்து விழுந்தது. ரயில் கவிழ்ந்ததிற்கும் அதில் பயணம் செய்த 30 பேர் இறந்ததற்கும் ரயில்வே நிர்வாகமே பொறுப்பு. ஆனால் அரசு செய்த சதியால் அப் பழி தோழர் தமிழரசன் மீது விழுந்தது. மக்களுக்காக போராடிய தன்மீது மக்களைக் கொன்ற பழி விழுந்துவிட்டதே என்று தோழர் தமிழரசன் மிகவும் வருந்தினார். அதுவே அவர் பொன்பரப்பியில் தன் ஆயுதங்களை மௌனிப்பதற்கும் அதனால் மரணமடைவதற்கும் காரணமாகிவிட்டது. வெற்றி மாறன் விடுதலை இரண்டாம் பாகத்தில் இந்த உண்மைகளை காட்டுவாரா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் உண்மைகள் உறைந்துபோகாது. அது மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்துவிட்டது. தோழர் தமிழரசன் இப்போது பரந்துபட்ட மக்களால் உணரப்படுகிறார்.

விடுதலை படம் யாவும் கற்பனை

விடுதலை படம் யாவும் கற்பனை என்றும் யாரையும் குறிப்பிடவில்லை என்றும் வெற்றிமாறன் படத்தின் ஆரம்பத்திலேயே கூறியிருக்கிறார். ஆனாலும் படம் பார்ப்பவர்களுக்கு வாத்தியாரும் (புலவர்) தமிழரசனும் நிச்சயம் நினைவில் வருகிறார்கள். அப் படத்தில் வாத்தியார் (புலவர்) காவல்நிலையத்தை தாக்குவதாக காட்டியிருக்கிறார் வெற்றிமாறன். ஆனால் உண்மையில் புலவரோ அல்லது தமிழரசனோ காவல்நிலையத்தை ஒருபோதும் தாக்கவில்லை. தோழர் தமிழரசன் மறைவிற்கு பின்பு அவரின் தமிழ்நாடுவிடுதலைப்படையை முன்னெடுத்த தோழர் லெனின், தோழர் சுந்தரம் போன்றவர்களே காவல்நிலையங்களை தாக்கியிருந்தனர். தோழர் தமிழரசன் காவல்நிலையத்தை தாக்கவில்லை என்றாலும் அப்போது பொலிஸ் அதிகாரியாக இருந்த தேவாரத்தை கொல்ல முயன்றார். ஏனெனில் காவல்துறை அதிகாரி தேவாரம் நக்சலைட்டுகள் என்றுகூறி தர்மபுரி மாவட்டத்தில் பல அப்பாவி இளைஞர்களை கொன்றிருந்தார். அதற்கு தேவாரத்தை பழி வாங்க வேண்டும் என தமிழரசன் நினைத்தார். தேவாரம் விருகம்பாக்கத்தில் இருந்த ஒரு பெண் வீட்டிற்கு இரவில் வந்து செல்லும் விபரம் தமிழரசனுக்கு தெரிந்திருந்தது. எனவே அங்கு வைத்து தேவாரத்தைக் கொல்வதற்காக துப்பாக்கியுடன் சென்னை வந்து காத்திருந்தார் தமிழரசன். ஆனால் தேவாரத்தின் அதிர்ஷ்டம் தமிழரசன் காத்திருந்தவேளை அவர் வரவில்லை. வந்திருந்தால் கொல்லப்பட்டிருப்பார். தோழர் தமிழரசன் நினைத்த இப்படியான காவிரி அணைக்கு குண்டு வைப்பது போன்று பல விடயங்கள் நடக்காமல் போய்விட்டது. 1990ல் வேலூர் கோட்டையில் கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமில் அப்பாவி அகதிகள் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி கோட்டைக்குள் கலகம் செய்தார்கள். அதை அடக்கச்சென்ற தேவாரம் கலைஞர் உத்தரவுக்கு இணங்க இரண்டு அகதிகளை சுட்டுக் கொன்றார். சுட்டுக்கொன்றதுகூட பரவாயில்லை. அவர்கள் பிரியாணி கேட்டு கலகம் செய்ததால் சுட்டுக் கொன்றேன் என தேவாரம் பேட்டி கொடுத்தார் . அப்போதுதான் தோழர் தமிழரசன் நினைத்தது நடக்காமல் போய்விட்டதே என நான் கவலை கொண்டேன்.

என்னத்தைச் சொல்ல?

என்னத்தைச் சொல்ல? ரஜனியே கூட தன் பட வெற்றிக்காக ஒருபோதும் மண்சோறு சாப்பிட மாட்டார். அப்படியிருக்கையில் இந்த முட்டாள்கள் எதற்காக ரஜனியின் பட வெற்றிக்காக மண்சோறு சாப்பிடுகிறார்கள்? தமக்காக வாழும் குடும்பத்திற்காக இப்படி சாப்பிடாதவர்கள் தம்மைப் பற்றி ஒரு துளிகூட அக்கறைப்படாத ஒரு மராட்டிய நடிகருக்காக ஏன் சாப்பிடுகிறார்கள்? இதை முட்டாள்தனம் என்பதா அல்லது ஒருவகை விளம்பரம் என்பதா? பக்தி ஒருவகை மனநோய் என்பார்கள். அது ஒரு நடிகனுக்காக மண் சோறு சாப்பிடும் அவல நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

வானமும் வசப்படும்!

•வானமும் வசப்படும்! முதலில் தமிழர்காடு அவர்கள் வசப்பட்டது அடுத்து தமிழர்கடல் அவர்கள் வசப்பட்டது இறுதியாக தமிழர்வானமும் அவர்கள் வசப்பட்டது ஆம். “போராடுவது என்று மக்கள்முடிவெடுத்துவிட்டால் ஓடும் விமானத்தைகூட வீழ்த்துவார்கள்” என்ற வரி அங்கே நிரூபிக்கப்பட்டது.

1995ம் ஆண்டு அகஸ்டு 15ம் திகதியன்று

1995ம் ஆண்டு அகஸ்டு 15ம் திகதியன்று நான் அடைத்து வைக்கப்பட்டிருந்த துறையூர் சிறப்புமுகாம் திருச்சி காவல் கண்காணிப்பாளாரால் சோதனை செய்யப்பட்டது. இவ்வாறான சோதனை வழக்கமாக மாதக் கடைசியில் நடைபெறுவதுதான் வழக்கம். மாறாக திடீரென இடையில் சோதனை செய்யப்பட்டால் எங்கேயோ ஏதோ பெரிய பிரச்சனை நடந்துவிட்டது என்று அர்த்தம். ஆம். அன்றும் ஜெயா அம்மையாரின் ஆட்சியையே ஆட்டம்காண வைத்த சிறையுடைப்பு சம்பவம் ஒன்று நடந்து விட்டது. அதாவது வேலூர் கோட்டை சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த புலிகள் தப்பி விட்டார்கள் என்பதே அந்த சம்பவம். பல நூற்றுக்கணக்கான ஆயுதம் ஏந்திய பொலிசாரின் 24 மணிநேரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த புலிகள் தப்பிவிட்டனர் என்பது ஆச்சரியம் எனில் அதைவிட ஆச்சரியம் அவர்கள் சுரங்கம் தோண்டி தப்பிவிட்டனர் என்ற செய்தியாகும். கியூ பிரிவு உயர் அதிகாரி ஒருவர் சென்னையில் இருந்து சென்று சுரங்கத்தை வீடியோ எடுத்து காண்பிக்கும்வரை யாருமே அதை நம்பாமல் இருந்தனர். எனக்கும்கூட எப்படி சுரங்கம் தோண்டியிருப்பார்கள்? எப்படி தப்பியிருப்பார்கள்? யார் யார் தப்பினார்கள்? என்ற கேள்விகள் தோன்றின. அதேவேளை இவ்வாறு தப்பிய புலிகளில் இருவர் சென்னையில் பொலிசார் மறித்து சோதனை செய்தபோது சயனைட் அருந்தி இறந்துவிட்டனர் என்ற செய்தியும் பத்திரிகையில் வந்திருந்தது. நானும் வேலூர் கோட்டையில் ஒரு வருடம் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். எனவே எனக்கு அந்த முகாம் சூழல் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்தவர்கள் பலரை எல்லாம் தெரியும். ஆனால் நான் எவ்வளவோ முயன்றும் சிறையுடைப்பு பற்றிய மேலதிக விபரங்களை அப்போது அறிய முடியவில்லை. இந்நிலையில் சிறப்புமுகாம் பற்றிய என் முகநூல் பதிவுகளை படித்துவரும் ஒருவர் ஸ்கொட்லாந்தில் இருந்து என்னுடன் தொடர்பு கொண்டார். அவர் தன் உறவினர் பற்றி அறிவதற்காக என்னுடன் தொடர்பு கொணடார். சென்னையில் பொலிசார் சோதனை செய்தபோது சயனைட் அருந்தி இறந்த இருவரில் ஒருவர் சங்கர். இன்னொருவர் பஞ்சன் என்ற விபரத்தை அவரே கூறினார். இந்த சங்கர் என்பவர் வேலூர் சிறப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு பொறுப்பாக இருந்தவர். இவருக்கு முன்னர் மன்னாரைச் சேர்ந்த அண்ணை என்பவர் இருந்தார். சங்கர் மிகவும் கட்டுப்பாடு நிறைந்தவர். ஆனால் நகைச்சுவை உணர்வு கொண்டவர். எப்போதும் ஏதாவது படித்துக்கொண்டு அல்லது எழுதிக் கொண்டிருப்பார். காயம்பட்ட தனது சக போராளிகளின் மருத்துவ சிகிச்சை தொடர்பாக என்னுடன் அடிக்கடி உரையாடியிருந்தார். அவருடன் நான் பழகிய நாட்கள் மிகவும் குறைவு. ஆனாலும் மறக்கமுடியாத இனிய நினைவுகள் அவை. மேஜர் தாகூர் / சங்கர் (அழகரட்ணம் இரவீந்திரன் ) அவர்களின் 28ம் ஆண்டு நினைவுதினம் 15.08.2023 அன்று ஆகும். குறிப்பு – தென்னிந்திய திரைப்படத்துறையினர் மயிர்கூச்செறியும் மர்மங்கள் நிறைந்த வேலுர் சிறையுடைப்பை ஏன் இன்னும் படமாக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம்.

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம். ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது! நீங்கள் செஞ்சோலையில் அப்பாவி குழந்தைகளை கொன்றுவிட்டு பயங்கரவாத ஒழிப்பு என்று கொட்டமடிக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக எழுச்சி கொள்வதை உங்களால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஒரு புழுகூட நசுக்கும்போது துடித்து எழுகிறது. தமிழ் இனம் மட்டும் நசுக்கும்போது அடிமையாகவே கிடந்துவிடுமா? புலிகளிடமும் விமானமும் குண்டுகளும் இருந்தது. ஆனால் அவர்கள் ஏன் சிங்கள மாணவர் மீது குண்டு வீசவில்லை என்பதை இனியாவது சிங்களமும் சர்வதேசமும் புரிந்துகொள்ளுமா? குறிப்பு - 2006 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ம் திகதி இலங்கை விமானப்படை குண்டு வீச்சில் 62 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்

அண்மையில் இந்தியா சென்ற சிங்கள ஜனாதிபதி

அண்மையில் இந்தியா சென்ற சிங்கள ஜனாதிபதி ரணிலிடம் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் இந்திய முதலாளி அதானி ஆரம்பிக்கும் கம்பனிகளுக்கு விரைந்து காணிகளை வழங்கும்படி பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தீர்வு 13ஐ பெற்றுதருமாறு தமிழ் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கிறனர். ஆனால் இந்திய பிரதமரோ ஈழத் தமிழருக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக தனது நணபர் முதலாளி அதானிக்கு தமிழர் நிலத்தை பெற்றுக்கொடுப்பதிலேயே அக்கறை காட்டுகிறார். ஏற்கனவே திருமலை துறைமுகம், பலாலி விமானநிலையம், காங்கேசன் துறைமுகம் மற்றும் சீமெந்து தொழிற்சாலை, சம்பூரில் அனல்மின்நிலையம், மன்னாரில் எண்ணெய் வளம் யாவும் இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டுவிட்டது. தற்போது மன்னார் மற்றும் பூநகரியில் அதானிக்கு தமிழர் நிலம் கொடுக்கப்படுகிறது. இந்திய அரசு தீர்வு பெற்றுதரும் என தமிழ்த் தலைவர்கள் நம்பிக்காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இந்திய அரசோ ஈழத் தமிழரின் கோவணத்தைக்கூட உருவி எடுத்துக்கொண்டிருக்கிறது.

1947 ஆகஸ்டு 15 தூங்கிக் கொண்டிருந்த

"1947 ஆகஸ்டு 15 தூங்கிக் கொண்டிருந்த எம் மீது தேசியக்கொடி என்ற போர்வையை போர்த்தி விட்டனர். ஆனால் விடிந்ததும் எமது கோவணத்தைக் காணவில்லை. தூங்குபவனுக்கு போர்வை முக்கியம்,விழித்துக் கொண்டவனுக்கு கோவணம் முக்கியம். வாருங்கள் தேசியக் கொடியை கிழித்து கோவணத்தை கட்டிக்கொள்வோம் " - அறிவுமதி

தமிழகத்தை ஆட்சிசெய்த

தமிழகத்தை ஆட்சிசெய்த ஜெயா அம்மையாரின் சொத்து மதிப்பு 30000 கோடி ரூபா. கலைஞர் கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு 45000 கோடி ரூபா. ஆனால் தமிழக மக்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் கடன் 5லட்சம் கோடி ரூபா. இந்த கொடுமையை தமிழன் எப்போது உணர்வான்? தயாராவோம் ஆர்ப்பரித்து எழுவோம் மாண்டவர்கள் நினைவாக உறுதி கொள்வோம் செப் -1 தமிழரசன் 36வது நினைவு தினம்

வீரப்பன் யானைத் தந்தந்களை

வீரப்பன் யானைத் தந்தந்களை கடத்திய போது இந்திய அரசால் கொல்லப்படவில்லை. வீரப்பன் சந்தன மரங்களை வெட்டியபோதும் இந்திய அரசால் கொல்லப்படவில்லை. வீரப்பன் பொலிசாரைக் கொன்றபோதும்கூட இந்திய அரசால் கொல்லப்படவில்லை. ஆனால் வீரப்பன் தமிழ்நாடு விடுதலையை முன்வைத்ததும் உடனடியாக இந்திய அரசால் சதி செய்து கொல்லப்பட்டார். தமிழ்நாடு விடுதலையை முன்வைக்கும் பலர் உயிரோடுதானே இருக்கிறார்கள். அப்படியிருக்க வீரப்பனை மட்டும் கொன்றார்கள் என்று எப்படி சொல்ல முடியும் என சிலர் கேட்கலாம். உண்மைதான். நல்ல கேள்விதான். இதற்கு காரணம் வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கியே. வீரப்பனின் துப்பாக்கி யானைகளை சுட்டுக் கொன்ற போது இந்திய அரசு கவலை கொள்ளவில்லை. வீரப்பனின் துப்பாக்கி பொலிசாரை சுட்டுக் கொன்றபோதும்கூட இந்திய அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் வீரப்பன் துப்பாக்கி தமிழ்நாடு விடுதலைக்காக சுடப் போகிறது என்று அறிந்ததும் உடனடியாக இந்திய அரசால் கொல்லப்பட்டார். கொலைகாரன், கொள்ளைக்காரன், கடத்தல்காரன் என்று அழைக்கப்படும் வீரப்பன் முன் வைத்த கோரிக்கைகள் சில, (1) 10ம் வகுப்புவரை தமிழ் வழிக் கல்வி வேண்டும் (2) வாசாத்தியில் பாதிக்கப்ட்ட பெண்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் (3) தடா சட்டத்தில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் (4) பெங்களுரில் மூடப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறக்க வேண்டும் (5) காவிரி பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். வீரப்பனைக் கொன்ற ஜெயா அம்மையார் சிறையில் அடைக்கப்பட்டபோது முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு, (1)தனக்கு சுகர், மூட்டுவலி இருப்தால் சலுகை தர வேண்டும் (2)சிறையிலும் தன்கூட சசிகலா இருக்க அனுமதிக்க வேண்டும் (3)வயது மூப்பு காரணமாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் தமிழ் மக்களே! இப்போது புரிகிறதா ஏன் வீரப்பன் கொல்லப்பட்டார் என்று? பல கொலைகள் கொள்ளைகள் செய்த பூலான்தேவி சரணடையவும் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி யாகவும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் வீரப்பன் சரண்டைய முன்வந்தபோதும் அதற்கு வாய்ப்பளிக்காது ஏன் கொல்லப்பட்டார் என்று புரிகிறதா?

கடவுள் இல்லை என்னும் பெரியாரின் கொள்கை

கடவுள் இல்லை என்னும் பெரியாரின் கொள்கையை கொண்டிருப்பதாக கூறும் ஸ்டாலின் தன் மனைவி துர்க்காவை கோயில் கோயிலாக அனுப்புகிறார். பெண்கள் படித்து சம உரிமை பெற வேண்டும் என்று கூறும் சீமான் தன் மனைவி கயல்விழியை வழக்கறிஞராக அனுப்புகிறார். இதில் யார் தமது கொள்கைக்கு விசுவாசமாக இருக்கிறார்?

அவரை இறப்பதற்கு முன் ஒரு தடவையாவது

அவரை இறப்பதற்கு முன் ஒரு தடவையாவது நேரில் பார்க்க விரும்பினேன். முடியவில்லை. இது எனக்கு வருத்தமே. எனினும் அவர் மகன் குறித்து நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்னும் நூலை அவர் கையில் சேர்ப்பித்தமை ஆறுதல் தருகிறது. தன் மகன் தோழர் தமிழரசனுக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்ற அவரது ஆசை குறித்து அறிந்தவுடன் இது பற்றி தோழர் பொழிலனிடம் பேசினேன். அவரும் தாம் இதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருப்பதாகவும் சில சட்டச்சிக்கல்கள் இருப்பதாக குறிப்பிட்டார். நான் அறிந்தவரையில் பொது இடத்தில் சிலை வைப்பதாக இருந்தால் மட்டுமே காவல்துறை தடுக்க முடியும். மாறாக யாராவது தமது சொந்த நிலத்தில் சிலை வைத்தால் அதனை தடுக்க முடியாது என உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. எனவே தோழர் தமிழரசன் மீது மதிப்பும் பற்றும் கொண்டவர்கள் அவரின் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். எதிர்வரும் செப் -1 திகதி தோழர் தமிழரசனின் 36 வது நினைவு தினம் அகும். இத் தினத்தில் இதுகுறித்து ஒரு நல்ல முடிவை அனைவரும் எட்டுவார்கள் என நம்புகிறேன்.

இந்தியாவில் நடக்கும் சாதீய மோதல்கள்

இந்தியாவில் நடக்கும் சாதீய மோதல்கள், தொடரும் தீண்டாமைக் கொடுமைகள் உணர்த்துவது பெரியாரியத்தினதும் அம்பேத்காரியத்தினதும் போதாமையையே. ஈழத்திலும் சாதிகள் உண்டு. ஆனாலும் இந்தளவு தீண்டாமைக் கொடுமைகள் தற்போது இல்லை. இதற்கு காரணம் ஈழத்தில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர்கள் பெரியாரியத்தையோ அல்லது அம்பேத்காரியத்தையோ முன்வைக்கவில்லை. மாறாக “அடிக்கு அடி” என்னும் புரட்சிகர தத்துவத்தை முன்வைத்தார்கள். அதனால் விளைவுகள் வித்தியாசமானதாகவும் முற்போக்காகவும் இருந்தது.

போராட்டம் இன்பமயமானது

“போராட்டம் இன்பமயமானது” என்று கடந்த ஒரு பதிவில் நான் குறிப்பிட்டிருந்தேன். உடனே ஒரு நபர் “ போராட்டம் உயிர் இழப்பை தருகிறது, சிறை வாழ்வை தருகிறது, சித்திரவதைகளை அனுபவிக்க வைக்கிறது. அதெப்படி இன்பமயமானதாக இருக்க முடியும்?” எனக் கேட்டார். போராட்டம் மகிழ்சிகரமானது என்று நான் கூறவில்லை. இப்படி கூறியவர் காரல் மார்க்கஸ். மார்க்ஸ் நாடுவிட்டு பல நாடுகள் சென்று அகதி வாழ்க்கை வாழ்ந்தவர். பெற்ற குழந்தைக்கு பால்மா வாங்கவும் அவரிடம் பணம் இருக்கவில்லை. அந்த குழந்தை இறந்தபோது சவப்பெட்டி வாங்கவும் பணம் இருக்கவில்லை. அந்தளவு வறுமையை அவர் அனுபவித்தார். இன்று உலகில் அதிக மொழிகளில் வெளியிடப்பட்ட நூல் அவரது மூலதனமே. இன்று உலகில் அதி சிறந்த சிந்தனையாளராக போற்றப்படும் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குபற்றியவர்கள் வெறும் 34 பேர் மட்மே. அந்த மார்க்ஸ்தான் "போராட்டம் மகிழ்சிகரமானது" என்றார். உண்மைதான். போராட்டம் வெற்றியை தர தவறலாம். அதாவது தாமதமாகலாம். ஆனால் அது ஒருபோதும் தோல்வியை தருவதில்லை. பிரசவம் மரண வலியைத் தருகிறது. ஆனாலும் அதை அனுபவித்த எந்த தாயும் பிரசவத்தை வெறுப்பதில்லை.. ஏனெனில் பிரசவம் பிறப்பு என்னும் மகிழ்சிகரமான அற்புதக் குழந்தையை தருகிறது. இன்று நாம் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளும் சலுகைகளும் தானாக கிடைத்தவை அல்ல. யாவும் போராடியே பெறப்பட்டது. படுத்திருப்பவனுக்கு பாய் மட்டுமே சொந்தம் உட்கார்ந்திருப்பவனுக்கு நாற்காலி மட்டுமே சொந்தம் ஒடுகின்றவனுக்கு மட்டுமே இந்த உலகம் சொந்தம் தமிழ் இனம் ஓடுகின்றது. அது போராடுகின்றது. எனவே அது நிச்சயம் உலகை வெல்லும்

செய்தி - இந்தியாவின் சுதந்திரதினத்தை

செய்தி - இந்தியாவின் சுதந்திரதினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி • அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி. அன்று ஹிட்லர் அழியும்வரை மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைளும் ஜெர்மானிய தேசத்தின் நன்மைக்காக என ஜெர்மனிய மக்கள் நம்ப வைக்கப்பட்டார்கள். இன்று மோடி மேற்கொள்ளும் அனைத்து நடவவடிக்கைளும் இந்திய நலனுக்கானவை என தேசபக்தியின் பேரால் நம்ப வைக்கப்படுகிறது. ஆனால் வரலாற்றில் பாசிச ஹிட்லருக்கு என்ன முடிவு ஏற்பட்டதோ அந்த முடிவு மோடிக்கும் நிச்சயம் ஏற்படும்.

ஆக-15 தேசியக்கொடி ஏற்றுவோர் கவனத்திற்கு

•ஆக-15 தேசியக்கொடி ஏற்றுவோர் கவனத்திற்கு இவர்களும் இந்தியர்கள்தான். இவர்கள் நிர்வாணமாக போராடுவதற்கு யார் காரணம்? இவர்கள் மீது பாலியல் வன்முறை மேற்கொள்வது பாக்கிஸ்தான் படையோ அல்லது சீன படையோ அல்ல. இந்திய படைகளே மேற்கொள்கின்றன. இன்று இரண்டு பெண்கள் மணிப்பூரில் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தப்பட்டதாக எந்த காங்கிரஸ் கட்சி (நீலிக்) கண்ணீர் வடிக்கிறதோ அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான் இந்த நிர்வாணப் போராட்டம் நிகழ்ந்தது. கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது. மணிப்பூர் மட்டுமல்ல மிசோரம், நாகலாந்து அசாம் காஸ்மீர் என அனைத்து வட இந்திய மாநிலங்களிலும் கொந்தளிப்பு நிலவுகிறது. இது தோழர் தமிழரசன் கூறிய “தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா” என்ற வரிகளை உண்மை என்று நிரூபிக்கிறது.

நடந்தது போர்க்குற்றம் என்றுகூட

நடந்தது போர்க்குற்றம் என்றுகூட இதுவரை இந்திய அரசு கூறவில்லை போர்க்குற்ற விசாரணைக்குகூட இதுவரை இந்திய அரசு ஜநா வில் ஆதரவு தெரிவிக்கவில்லை. அந்த இந்திய அரசின் முக்கிய அமைச்சர் அமிர்த்ஷா இலங்கையில் நடந்தது “இனப்படுகொலை” என்று முதன் முறையாக சொல்லியுள்ளார். இது இந்திய அரசின் மிகப் பெரிய மாற்றம். இருந்தும் தமிழக தலைவர்களோ ஏன் ஈழத் தமிழ்த் தலைவர்கள்கூட இதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. ஏனெனில் இந்திய அமைச்சர் இதனை பாராளுமன்றத்தில் கூறவில்லை. ஜநா வில் கூறவில்லை. மாறாக தமிழ் நாட்டில் அதுவும் ராமேஸ்வரத்தில் கூறியுள்ளார். காங்கிரஸ் திமுக கூட்டணிக்கு இவ் இனப்படுகொலையில் பங்கு இருப்பதால் இதனைக் கூறுவதன்மூலம் தமிழ் மக்களின் ஆதரவைப் பெறவே அமைச்சர் இவ்வாறு பேசியதாக பலரும் கருதுகின்றனர். அடுத்த வருடம் தேர்தல் வர இருக்கிறது. அதற்கு முன்னர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பலவீனப்படுத்த பாஜக அரசு முனைகிறது. அதனால் எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதான கட்சியாக இருக்கும் திமுக விற்கு பல நெருக்கடிகளை கொடுக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த “இனப்படுகொலை” என்ற அமைச்சரின் பேச்சு. ஆனாலும் ஈழத் தமிழத் தலைவர்கள் இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்திய பாராளுமன்றத்தில் இந்திய அரசு மூலம் நடந்தது இனப்படுகொலை என தீர்மானம் கொண்டுவர முயல வேண்டும். இந்திய அரசு இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுமாயின் அதனைப் பயன்படுத்தி தமிழருக்கு சாதகமான பல விடயங்களை சர்வதேச அளவில் செய்ய முடியும்.

வாஜ்பேய் நல்லவரா?

•வாஜ்பேய் நல்லவரா? (16.08.23 வாஜ்பேயின் 5ம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.) வாஜ்பேய் நல்லவர். ஆனால் தவறான கட்சியில் இருந்தார் என்கிறார்கள். ஒரு நல்லவர் எப்படி தவறான கட்சியில் இருக்க முடியும்? என்று கேட்டால் அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்கிறார்கள். காட்டிக் கொடுத்தவர் எப்படியடா சுதந்திர போராட்ட வீரர் என்று அழைக்கலாம்? என்று கேட்டால் பதில் சொல்லாமல் முழிக்கிறார்கள். இதோ நீதிமன்றத்தில் வாஜ்பாய் கொடுத்த வாக்குமூலம், "எனது தந்தை பெயர் கவுரிசங்கர். நான் குவாலியர் கல்லூரியில் படித்துள்ளேன். நான் பிராமண சமூகத்தை சேர்ந்தவன்.ஆக்ரா மாவட்டம் பட்டேஸ்வர் கிராமத்தை சேர்ந்தவன். 1942 ஆகஸ்ட் 27ம் தேதி மதியம் 2 மணி இருக்கும். காகு,மகுன் என்ற இருவரும் ஊர்ச்சாவடி அருகில் வந்தனர் வனத்துறை அலுவலகத்தை உடைக்கவேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இருநூறுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். நானும், எனது தம்பியும் பின் தொடர்ந்து சென்றோம். பாதி தூரம் சென்றதும் நின்று கொண்டோம். வனத்துறை அலுவலகம் இடிக்கப்பட்டது .உடைந்த செங்கல்கள் விழுவதைப் பார்த்தோம்.ஆடு,மாடுகளை அவிழ்த்துவிட்டனர். தடுப்புகள் உடைக்கப்பட்டது. நாங்கள் அருகில் செல்லவில்லை. காகு,மகுன் மற்றும் ஊர் மக்கள்தான் இதற்குக் காரணம்." இந்த வாக்குமூலத்திற்குப்பிறகு அந்த ஊர் என்ன கதியானது தெரியுமா? வாஜ்பாய் நீதிமன்றத்தில் ஊர் மக்களைக் காட்டிக்கொடுத்து வாக்குமூலம் கொடுத்தவுடன் பட்டேஸ்வர் கிராமத்தை போலீஸ் சுற்றி வளைத்தது. 263 வீடுகள் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டது. காகு,மகுன் ஆகிய இருவரும் இரும்புச்சங்கிலியால் கட்டி இழுத்துச்செல்லப்பட்டனர். 300 க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டுசித்தரவதை செய்யப்பட்டனர். காகு,மகுனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.ஊருக்கு 10,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 65 ஆண்டுகளுக்கு முன்பு அந்தத்தொகை மிகப்பெரியது. ஊர் மக்களால் கட்ட முடியவில்லை. எனவே பொதுமக்கள் மேலும் சித்ரவதை செய்யப்பட்டனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ஊரில் முஸ்லிம் களோ, கிறிஸ்தவர்களோ யாரும் இல்லை. முற்றிலும் இந்து மக்கள் தான். அந்த இந்து மக்களை காட்டிக் கொடுத்தவர்தான் இந்து தலைவர் வாஜ்பேய். காட்டிக் கொடுத்ததற்கு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழ்நாட்டில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். கூட இருந்தவர்களை காட்டித் தரும்படி அவருக்கு சித்திரவதை செய்யப்பட்டது. அவரது மீசை மயிர்கள் தீயினால் சுடப்பட்டது. ஆனாலும் அவர் சிறைவாசத்தை அனுபவித்தார். அந்த இளைஞர் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு. அவருக்கு பாரத ரத்னா விருதும் இல்லை. அவர் இன்றைக்கும் அரச மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுகிறார்.

அபிவிருத்தி என்றால் என்ன?

•அபிவிருத்தி என்றால் என்ன? எம்.பி யாகி அமைச்சுப் பதவி பெறுவதன் மூலம் அபிவிருத்தி அடைய முடியுமென்றால் இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களாக சிங்களப்பிரதேசங்கள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் சிங்கள பிரதிநிதிகளே அதிகளவு அமைச்சு பதவிகளை இதுவரை கொண்டிருக்கிறார்கள். இனியும் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையவில்லை என்பதே உண்மை. உண்மை இவ்வாறு இருக்கும்போது அமைச்சு பதவி பெறுவதால் எப்படி தமிழ் பிரதேசம் அபிவிருத்தி அடைய முடியும் என சிலர் நம்புகிறார்கள்? றோட்டு போடுவது, சிலருக்கு வேலை வாய்ப்பு பெறுவதுதான் அபிவிருத்தி என்றால் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே இவை எல்லாம் கிடைத்தனவே. பேசாமல் அவர்களின் கீழ் அடிமையாக இருந்திருக்கலாமே? அபிவிருத்தி முக்கியமே. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகாரம் வேண்டும். எனவே அதிகாரப் பரவலாக்கம் செய்யாதவரை தமிழ் பிரதேசம் ஒருபோதும் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாது. 1948வரை ஆங்கிலேயர் மட்டுமே எம்மை ஆக்கிரமித்து சுரண்டினார்கள். இப்போது வடக்கு கிழக்கில் இந்தியா சுரண்டுகிறது. தெற்கில் சீனா சுரண்டுகிறது. இதற்கிடையில் தன்னுடன் ஒப்பந்தம் செய் என்று அமெரிக்கா மிரட்டுகிறது. கடன் சுமையோ வருடா வருடம் அதிகரிக்கிறது. பெற்ற கடனுக்குரிய வட்டியைக் கட்டுவதற்கே கடன் வாங்க வேண்டிய நிலையில் இலங்கை அரசு இருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அரசுடன் சேர்ந்தால் அபிவிருத்தி அடைய முடியும் என பதவி வெறி பிடித்த சுயநலவாதிகளைவிட வேறு யார் நினைப்பார்கள்?

நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேள

நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை எனக்கு காவலாக நல்லதம்பி என்ற காவலர் இருந்தார். நான் தனிமையில் அடைக்கப்பட்டிருந்தபடியால் பொழுதுபோக்கிற்கு காவலுக்கு இருக்கும் அக் காவலருடன் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை. இந்த சிறைக்காவலர்களைப் பொறுத்தவரையில் நாம் கம்பிக்குள்ளே இருக்கும் கைதிகள். அவர்கள் கம்பிக்கு வெளியே இருக்கும் கைதிகள். அந்தளவுக்கு அவர்களையும் ஒரு கைதி போலவே சிறை நிர்வாகமும் தமிழக அரசும் நடத்தியது. அதனால் அவர்களுக்கு ஒரு தொழிற்சங்கத்தின் அவசியத்தை வலியுறுத்தி அதற்கு என்னால் ஆன உதவிகள் செய்தேன். உயர்நீதிமன்றத்தில் வாதாடுவதற்காக எனது வழக்கறிஞர் மக்கள் உரிமைகழகம் பி.வி. பக்தவச்சலம் அவர்களின் தொடர்பையும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தேன். இதனால் காவலர் நல்லதம்பி அவர்களுக்கு என்மேல் மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டிருந்தது. அதைவிட காவலர் நல்லதம்பி சிபிஎம் கட்சியின் தீவிர ஆதரவாளர். ஒவ்வொருநாளும் கடசி அலுவலகத்திற்கு சென்றுவிட்டே வேலைக்கு வருவார். நான் கம்யுனிஸ்ட் நூல்களை விரும்பி படிப்பதைக் கண்டு எனக்கு தன் கட்சியின் பத்திரிகை மற்றும் வெளியீடுகளை இரகசியமாக கொண்டு வந்து தருவார். அதில் செம்மலர் இதழ் நான் விரும்பி படிப்பதுண்டு. பார்க்க குமுதம் இதழ் போல் இருக்கும். ஆனால் குமுதம் ஒரு குப்பை. செம்மலர் ஆயிரம் மடங்கு சிறந்த சஞ்சிகை. காவலர் நல்லதம்பி என்னுடன் உரையாடும் விடயங்களை நான் எழுப்பிய கேள்விகளை தமது தலைவர்களில் ஒருவரான மோகன் எம்.பி யிடம் கூறியிருக்கிறார். மோகன் அவர்கள் என்னை பார்வையிட விரும்பி மதுரை சிறைக்கு வந்தார். அவர் வந்த அன்று எனக்கு நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வாய்தா இருந்தமையினால் பார்வையிட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவர் காத்து நின்று சிறை வாசலில் என்னை அழைத்து வரும்போது பேசினார். ராஜிவ் காந்தி மரணமடைந்த அவ்வேளையில் ஒரு எம்பி அதுவும் சிபிஎம் எம்பி ஈழப் போராளியான என்னை சந்திக்க வந்தது உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. அப்போது “நீங்கள் ஏன் ஈழப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை?” என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் “ஈழத்தில் பிரிவினையை ஆதரித்தால் இந்தியாவிலும் பிரிவினை கேட்பவர்களை ஆதரிக்க வேண்டி வருமே” என்றார். உடனே நான் “லெனின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்க வேண்டியது கம்யுனிஸ்டுகளின் கடமை என்கிறார். நீங்கள் கம்யுனிஸ்ட் என்றால் ஈழத்தில் தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணய போராட்டத்தை எப்படி மறுக்க முடியும்?” எனக் கேட்டேன். அதற்கு அவர் “நல்ல கேள்வி. நீங்கள் உங்கள் கேள்வியை எழுத்தில் தாருங்கள். எங்கள் இளம் தலைவர் காரத் அவர்களிடம் கொடுத்து பதில் வாங்கி தருகிறேன்” என்றார். நானும் அவர் கேட்டுக்கொண்டபடி என் கேள்விகளை எழுத்தில் கொடுத்தேன். ஆனால் அதற்கு இதுவரை பதில் வரவில்லை. இனியும் வருமா என்று தெரியவில்லை. இவர்கள் ஏன் தோழர் தமிழரசனின் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதில்லை என்பதை இப்போது உணர்ந்து கொண்டேன்.

வழியில் குரைக்கும் ஒவ்வொரு நாய்க்கும்

வழியில் குரைக்கும் ஒவ்வொரு நாய்க்கும் பதில் அளித்துக்கொண்டிருந்தால் எமது இலக்கை சென்றடைய முடியாது. அதனால்தான் சிலவேளை சில நாய்கள் குரைக்கும்போது பதில் அளிக்காமல் மௌனமாக கடந்து போவதுண்டு. சில நாய்களுடன் கடிபடுவதைவிட அதற்கு வழி விடுவதே மேல் என்றும் நினைத்து தவிர்ப்பதும் உண்டு. ஆனால் அந்த நாய் காலுக்கடியில் வந்துவிட்டால் மௌனமாக இருக்க முடியாது. எட்டி உதைத்து விரட்டியே ஆக வேண்டும். “தமிழரின் தலையை வெட்டுவோம்” , “தமிழரை இந்தியாவுக்கு விரட்டுவோம்” என்றெல்லாம் சிஙகள இனவெறியர்கள் பேசும்போது மௌனமாக கேட்டுக்கொண்டிருக்க இது ஒன்றும் 1983 இல்லை. இது 2023. பயந்து அடங்கிட மாட்டோம். முடிந்தால் தொட்டுப்பார் என்றே பதில் அளிப்போம். எங்கெல்லாம் தமிழர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் பதிலடியை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறோம். இனி ஒரு தமிழன் மீது கைவைத்தால் எட்டுக் கோடி தமிழனை சந்திக்கும் நிலையை ஏற்படுத்துவோம்.

சிறந்த தமிழத்தேசிய உணர்வாளர்

சிறந்த தமிழத்தேசிய உணர்வாளர் உறுதியான ஈழத்தமிழர் ஆதரவாளர் தடா சந்திரசேகர் (வழக்கறிஞர்)அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

ஆடுகள் எப்போதும் ஓநாய்களையே நம்புகின்றன.

(செம்மறி) ஆடுகள் எப்போதும் ஓநாய்களையே நம்புகின்றன. செய்தி – சிஙகள ராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழில் சில தமிழர் போராட்டம்

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி

செய்தி - இந்தியாவின் சுதந்திரதினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் - பிரதமர் மோடி அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி

பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை!

பெண்கள் பலவீனமானவர்கள் இல்லை! அவர் சுமந்து சென்ற வெடி பொருள் 50 கிலோ வுக்கு மேல் இருக்கும். ஆனால் அவரின் எடையோ 60 கிலோதான். சிறு படகில் சென்றால்கூட ராடரில் தெரிந்துவிடும்; என்பதால் இந்த வெடி பொருட்களுடன் அவர் நீந்தி சென்ற தூரம் கிட்டத்தட்ட 17 மைல்கள் என்கிறார்கள். அவர் எட்டு மணி நேரம் நீந்தி சென்று தாக்குதலை மேற்கொண்டார் என்று கூறுகிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் தான் மரணமடையப் போகிறேன் என்று தெரிந்தும் அவரது கால்கள் சோரவில்லை. கைகள் செயல் இழக்கவில்லை. இலக்கை அடைந்தார். 326 அடி நீளம் , 51 அடி அகலம். 6300 தொன் எடை கொண்ட அதி நவீன ராடர் பொருத்தப்பட்ட போர்க்கப்பலை முழ்கடித்தார். இதைப் படிக்கும்போது இந்த வீர தீரச் செயலை செய்தவர் ஒரு இளைஞனாக இருப்பான் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால் ஆண்களே வியக்கும் இந்த சாதனையைப் புரிந்தவர் ஒரு பெண். அவர் பெயர் அங்கையற்கண்ணி. அப்போது அவரின் வயது 21. பெண்கள் பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்தவர்கள் என்ற கதையே பெரும்பாலும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் பலமிக்கவர்கள் என்பதை கூறும் கதைகள் தந்திரமாக மறைக்கப்பட்டு வருகின்றன. இனி நாம் அங்கையற்கண்ணிகளின் கதைகளை கூறுவோம்.