Tuesday, August 15, 2023

முதலில் குருந்தூர் மலைக்கு புத்தர் வந்தார்

முதலில் குருந்தூர் மலைக்கு புத்தர் வந்தார் அடுத்து தையிட்டிக்கு புத்தர் வந்தார். இப்போது யாழ் பல்கலைக்கழகத்திற்குள்ளும் புத்தர் வந்துள்ளார். கூடவே, புத்தர் வருவதில் என்ன தவறு இருக்கிறது என்று நம்மவர் சிலரே கேட்கின்றனர். வருவது புத்தராக இருந்தால் பரவாயில்லை. ஆனால் வருவது சிங்கள பௌத்த பேரினவாதமாயிற்றே. அதுவும் தமிழின அழிப்பை நோக்கமாக கொண்டு வருகிறது இந்த சிங்கள பௌத்த பேரினவாதம். எப்படி தமிழினம் இதனைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியும்? இந்த பொருளாதார நெருக்கடியிலும் சிங்கள அரசு தனது தமிழின அழிப்பை கைவிடவில்லை. இதற்கு எதிராக போராட வேண்டிய தமிழ்த் தலைவர்களோ இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு மௌனமாக இருக்கின்றனர். வெண்டிக்காயை வாங்கும்போதுகூட ஒடித்துப் பார்த்து வாங்கும் தமிழர்கள் இத் தலைவர்களை மட்டும் எதுவும் பார்க்காமல் எப்படி தெரிவு செய்கின்றனர்?

No comments:

Post a Comment