Tuesday, August 15, 2023

ஆக-15 தேசியக்கொடி ஏற்றுவோர் கவனத்திற்கு

•ஆக-15 தேசியக்கொடி ஏற்றுவோர் கவனத்திற்கு இவர்களும் இந்தியர்கள்தான். இவர்கள் நிர்வாணமாக போராடுவதற்கு யார் காரணம்? இவர்கள் மீது பாலியல் வன்முறை மேற்கொள்வது பாக்கிஸ்தான் படையோ அல்லது சீன படையோ அல்ல. இந்திய படைகளே மேற்கொள்கின்றன. இன்று இரண்டு பெண்கள் மணிப்பூரில் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தப்பட்டதாக எந்த காங்கிரஸ் கட்சி (நீலிக்) கண்ணீர் வடிக்கிறதோ அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான் இந்த நிர்வாணப் போராட்டம் நிகழ்ந்தது. கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது. மணிப்பூர் மட்டுமல்ல மிசோரம், நாகலாந்து அசாம் காஸ்மீர் என அனைத்து வட இந்திய மாநிலங்களிலும் கொந்தளிப்பு நிலவுகிறது. இது தோழர் தமிழரசன் கூறிய “தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா” என்ற வரிகளை உண்மை என்று நிரூபிக்கிறது.

No comments:

Post a Comment