Tuesday, August 15, 2023

அண்மையில் இந்தியா சென்ற சிங்கள ஜனாதிபதி

அண்மையில் இந்தியா சென்ற சிங்கள ஜனாதிபதி ரணிலிடம் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் இந்திய முதலாளி அதானி ஆரம்பிக்கும் கம்பனிகளுக்கு விரைந்து காணிகளை வழங்கும்படி பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தீர்வு 13ஐ பெற்றுதருமாறு தமிழ் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கிறனர். ஆனால் இந்திய பிரதமரோ ஈழத் தமிழருக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக தனது நணபர் முதலாளி அதானிக்கு தமிழர் நிலத்தை பெற்றுக்கொடுப்பதிலேயே அக்கறை காட்டுகிறார். ஏற்கனவே திருமலை துறைமுகம், பலாலி விமானநிலையம், காங்கேசன் துறைமுகம் மற்றும் சீமெந்து தொழிற்சாலை, சம்பூரில் அனல்மின்நிலையம், மன்னாரில் எண்ணெய் வளம் யாவும் இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டுவிட்டது. தற்போது மன்னார் மற்றும் பூநகரியில் அதானிக்கு தமிழர் நிலம் கொடுக்கப்படுகிறது. இந்திய அரசு தீர்வு பெற்றுதரும் என தமிழ்த் தலைவர்கள் நம்பிக்காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இந்திய அரசோ ஈழத் தமிழரின் கோவணத்தைக்கூட உருவி எடுத்துக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment