Tuesday, August 15, 2023

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம்.

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம். ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது! நீங்கள் செஞ்சோலையில் அப்பாவி குழந்தைகளை கொன்றுவிட்டு பயங்கரவாத ஒழிப்பு என்று கொட்டமடிக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் அடிமைத்தனத்திற்கு எதிராக எழுச்சி கொள்வதை உங்களால் ஒருபோதும் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஒரு புழுகூட நசுக்கும்போது துடித்து எழுகிறது. தமிழ் இனம் மட்டும் நசுக்கும்போது அடிமையாகவே கிடந்துவிடுமா? புலிகளிடமும் விமானமும் குண்டுகளும் இருந்தது. ஆனால் அவர்கள் ஏன் சிங்கள மாணவர் மீது குண்டு வீசவில்லை என்பதை இனியாவது சிங்களமும் சர்வதேசமும் புரிந்துகொள்ளுமா? குறிப்பு - 2006 ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14ம் திகதி இலங்கை விமானப்படை குண்டு வீச்சில் 62 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்

No comments:

Post a Comment