Wednesday, August 30, 2023

சில வெங்காயங்களின் புலம்பல்கள்

சில வெங்காயங்களின் புலம்பல்கள் தமிழ் கட்சிகள் யாவும் ஒற்றுமையாக வந்தால் இந்தியா தீர்வு 13 ஐ பெற்று தரும் என்று இப்போது சிலர் கூறுகின்றார்கள். அதாவது தமிழ் கட்சிகள் யாவும் ஒற்றுமையாக வராதபடியால்தான் இந்தியா தீர்வு பெற்று தரவில்லை என்று தமிழர் தரப்பின் மீது பழியை போடுகின்றனர். இதே இவர்கள்தான் தீர்வு கிடைக்க புலிகள்தான் தடையாக இருக்கின்றனர் என முன்னர் சொல்லிக் கொண்டிருந்தவர்கள். புலிகள் இல்லாமல் 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஏன் இன்னும் தீர்வு வழங்கவில்லை என்று கேட்டால் தமிழர் தரப்பு ஒற்றுமையாக வரவில்லை என்று இப்போது கூற ஆரம்பித்துள்ளனர். இவர்கள் கூறுகின்றபடி தமிழர் தரப்பு ஒற்றுமையாக வந்தாலும் தீர்வு கிடைக்கப்போதில்லை. அதற்கு இன்னொரு காரணம் கண்டு பிடித்து கூறுவார்கள். இல்லை, தெரியாமத்தான் கேட்கிறோம். தமிழர் தரப்பு அனைவரும் ஒற்றுமையாக கேட்டா இலங்கை இந்திய ஒப்பந்தத்தை இந்திய அரசு செய்தது? இல்லைதானே. அப்படியென்றால் தமிழரின் சம்மதம் பெறாமல் செய்யப்பட்ட அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த தமிழர் தரப்பு எதற்கு ஒற்றுமையாக வரவேண்டும்? அல்லது, தமிழர் தரப்பு ஒற்றுமையாக வந்தால்தான் தீர்வு வழங்க வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டம் கூறுகின்றதா? இல்லைதானே. தீர்வு வழங்காமல் ஏமாற்றும் சிங்கள மற்றும் இந்திய அரசுகளை கேட்க வக்கற்ற இந்த வெங்காயங்கள் தமிழர் தரப்பினர் மீது குற்றம் சாட்டுகின்றன.

No comments:

Post a Comment