Tuesday, August 15, 2023

வழியில் குரைக்கும் ஒவ்வொரு நாய்க்கும்

வழியில் குரைக்கும் ஒவ்வொரு நாய்க்கும் பதில் அளித்துக்கொண்டிருந்தால் எமது இலக்கை சென்றடைய முடியாது. அதனால்தான் சிலவேளை சில நாய்கள் குரைக்கும்போது பதில் அளிக்காமல் மௌனமாக கடந்து போவதுண்டு. சில நாய்களுடன் கடிபடுவதைவிட அதற்கு வழி விடுவதே மேல் என்றும் நினைத்து தவிர்ப்பதும் உண்டு. ஆனால் அந்த நாய் காலுக்கடியில் வந்துவிட்டால் மௌனமாக இருக்க முடியாது. எட்டி உதைத்து விரட்டியே ஆக வேண்டும். “தமிழரின் தலையை வெட்டுவோம்” , “தமிழரை இந்தியாவுக்கு விரட்டுவோம்” என்றெல்லாம் சிஙகள இனவெறியர்கள் பேசும்போது மௌனமாக கேட்டுக்கொண்டிருக்க இது ஒன்றும் 1983 இல்லை. இது 2023. பயந்து அடங்கிட மாட்டோம். முடிந்தால் தொட்டுப்பார் என்றே பதில் அளிப்போம். எங்கெல்லாம் தமிழர் இருக்கின்றனரோ அங்கெல்லாம் பதிலடியை சந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கிறோம். இனி ஒரு தமிழன் மீது கைவைத்தால் எட்டுக் கோடி தமிழனை சந்திக்கும் நிலையை ஏற்படுத்துவோம்.

No comments:

Post a Comment