Wednesday, August 30, 2023

கருணாநிதி மனைவி தயாளு அம்மையாரும்

கருணாநிதி மனைவி தயாளு அம்மையாரும் மகிந்த ராஜபக்ச மனைவி சிராந்தி அம்மையாரும்! கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் கலைஞர் டிவி முதலாளிகளில் ஒருவர். கலைஞர் டிவிக்கு வந்த கோடிக் கணக்கான ரூபா பற்றி விசாரணையில் கேட்ட போது தனக்கு தெரியாது என்று பதில் கூறினார். ஒரு முதலாளிக்கு தெரியாமல் எப்படி அவர் கம்பனிக்கு பணம் வந்தது என்று கேட்டபோது தனக்கு மறதி நோய் என்று கூறினார். ஊழல் செய்துவிட்டு அதுபற்றிய விசாரணை வந்தபோது கொஞ்சம்கூட கூச்சமின்றி தனக்கு மறதி நோய் இருப்பதாக பொய் கூறினார். இது குறித்து கலைஞர் கருணாநிதியும் வெட்கப்படவில்லை. அவர் கட்சி தி.மு.க வும் வெட்கப்படவில்லை. அதுபோல் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி அம்மையாரும் தாஜீதீன் கொலை பற்றிய விசாரணையில் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். தனது பொறுப்பில் இருந்த வாகனங்கள் எப்படி கொலைக்கு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்தும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். அதுமட்டுமன்றி விசாரணை முடிவில் கையொப்பமிடுமாறு கோரியபோது அவர் தனக்கு சிங்களம் தெரியாது என்று கூறினார். தனக்கு சிங்களம் தெரியாது என்று பொய் கூறுவதையிட்டு சிராந்தி அம்மையார் கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை. அதேபோல் சிங்களம் தெரியாது என்று தன் மனைவி பொய் கூறியதையிட்டு மகிந்த ராஜபக்சவும் வெட்கப்படவில்லை. தாய் தந்தையும் இப்படியென்றால் மகன் ரோகித ராஜபக்சவோ இன்னும் ஒருபடி மேலேபோய் தாஜீதீன் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறினார். தங்கள் கணவன்மார் பதவியில் இருக்கும்வரை இந்த மனைவிமாருக்கு எந்த நோயும் வருவதில்லை. பதவி போனபின் விசாரணைக்கு வா என்று அழைத்தவுடன் திடீரென்று மறதி நோய் வருகிறது. சிங்களம்கூட மறந்து விடுகிறது. பாவம் தாஜீதீன் குடும்பம். ரணில் அரசு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் என்று நம்பினார்கள். ஆனால் ரணில் அரசோ மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தை காக்கவே பாடுபடுகின்றது! குறிப்பு – தான் விரும்பிய பெண் தன்னை விரும்பாமல் தாஜீதீனை விரும்புகிறார் என சந்தேகம் கொண்டு மகிந்தவின் மகன் ரோகித அவரை சிராந்தி அம்மையாரின் பொறுப்பில் இருந்த வாகனத்தில் உயிருடன் கொளுத்தி கொன்றார் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அண்மையில் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment