Wednesday, August 30, 2023

பகத் சிங் பாராளுமன்றத்திற்கு குண்டு

பகத் சிங் பாராளுமன்றத்திற்கு குண்டு வீசினார். தாம் யாருக்கும் தீங்கிழைப்பதற்காக குண்டு வீசவில்லை என்றும் ஒரு பிரச்சார நடவடிக்கையாகவே அதனை மேற்கொண்டதாக அவர் கூறினார். ஒரு தாக்குதல் நடவடிக்கையானது ஆயிரம் பொதுக்கூட்டங்களுக்கு ஒப்பானது என்று மாபெரும் ஆசான் மாவோ கூறினார். அதனால்தான் பகத் சிங் குண்டு வீசியது ஒரு சாகச நடவடிக்கை என்றோ அல்லது புரட்கர நடவடிக்கை இல்லை என்றோ எந்தவொரு புரட்சியாளரும் கூறியதில்லை. ஆனால் தோழர் தமிழரசன் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளை சாகச நடவடிக்கை என்றும் அது புரட்சி அல்ல என்றும் சில போலிப் புரட்சிவாதிகள் கூறுகின்றனர். இவர்கள் உலகில் நடக்கும் எல்லா போராட்டத்தையும் ஆதரிப்பார்கள். ஆனால் தோழர் தமிழரசனை மட்டும் ஆதரிக்க மாட்டார்கள். ஏனெனில் தோழர் தமிழரசன் தமிழ்த்தேசிய விடுதலைக்காக போராடியதே காரணம். ஆரியமும் திராவிடமும் மட்டுமன்றி இந்த போலி புரட்டுவாதிகளும் தமிழ்த் தேசிய விடுதலையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். செப் -1 தோழர் தமிழரசன் 36வது நினைவு தினம்

No comments:

Post a Comment