Sunday, July 30, 2017

•பொலிசார், இம்முறை ஏன் வானத்தை நோக்கி சுடவில்லை?

•பொலிசார்,
இம்முறை ஏன் வானத்தை நோக்கி சுடவில்லை?
சுட்டிருந்தால் கொலையாளி செத்திருப்பானே!
கடந்த வருடம் மோட்டார் சயிக்கிளில் வந்த இரண்டு பல்கலை மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அப்போது, தாங்கள் வானத்தை நோக்கி சுட்டதாகவும் ஆனால் தவறுதலாக மாணவர்களில் பட்டு இறந்து விட்டார்கள் என்று பொலிசார் கூறினர்.
கடந்த மாதம் வடமராட்சி துன்னாலையில் வெளிநாட்டில் இருந்து வந்த தமிழ் இளைஞன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
அப்போதும், தாங்கள் வானத்தை நோக்கி சுட்டதாகவும் அது தவறுதலாக இளைஞன் மீது பட்டு இறந்து விட்டான் என்று பொலிசார் கூறினர்.
இப்போது, பொலிஸ் ஒருவரை சுட்டுக் கொன்றது மட்டுமன்றி நீதிபதி இளஞ்செழியன் மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு ஒருவன் தப்பியோடி யிருக்கிறான்.
அந்த கொலையாளி மீது அதாவது வழக்கும்போல் ஏன் பொலிசார் வானத்தை நோக்கி சுடவில்லை?
வானத்தை நோக்கி சுடாதது மட்டுமன்றி கொலையாளியின் இலக்கு நீதிபதி இளஞ்செழியன் அல்ல என்று அவசர அவசரமாக அறிக்கை விட்டுள்ளனர்.
கொலையாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. விசாரணை இன்னும் முடியவில்லை.
ஆனால் அதற்குள் அதுவும் 24 மணி நேரத்திற்குள் “இலக்கு நீதிபதி இல்லை” என்று ஏன் அறிக்கை விட வேண்டும்?
கொலையாளி புங்குடுதீவைச் சேர்ந்தவர் என்பதும் அவர் வித்யா கொலையாளி சுவிஸ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.
பணத்தால் வாங்க முடியாத நீதிபதி இளஞ்செழியனை துப்பாக்கியால் மிரட்டி பணிய வைக்க முற்பட்டுள்ளதா என்ற கோணத்தில் இது விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதாவது சுவிஸ் குமாரின் பணம் இந்த கொலையாளிக்கும் பாய்ந்துள்ளதா என்று அறியப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், “போதையில் தகராறு செய்த ஒரு இளைஞன் நடத்திய துப்பாக்கி சூடு இது. அவன் இலக்கு நீதிபதி இளஞ்செழியன் அல்ல” என்று அவசரமாக அறிக்கை விட்டிருப்பது பலத்த சந்தேகம் தருகிறது.
ஏனெனில் பொலிஸ் உதவி அதிகாரி சிறீகஜனை கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.
அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பதை ஆராய்ந்தால் நீதிபதி மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததின் பின்னணியும் தெரியவரும்.

•அமைச்சர் ரிசாத் பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும்!

•அமைச்சர் ரிசாத்
பதவி விலக வேண்டும் அல்லது
பதவி விலக்கப்பட வேண்டும்!
அமைச்ர் ரிசாத் பொறுப்பு வகிக்கும் சதோச நிறுவனத்தில் இறக்குமதி செயய்ப்ட்ட சீனியினுள் 3200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரலாற்றில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பெரிய தொகையான கொக்கேயின் போதைப் பொருள் கடத்தல் இது.
அமைச்சரின் ஒத்துழைப்பினூடாகவே இந்தளவு பெறுமதியான போதைப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறது.
எனவே இது குறித்து நீதியான விசாரணை நடைபெற வேண்டுமாயின் அமைச்சர் ரிசாத் பதவி விலக வேண்டும் அல்லது பதவி விலக்கப்பட வேண்டும்.
அதுமட்டுமன்றி மிகவும் குறுகிய காலத்தினுள் அமைச்சர் ரிசாத் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான சொத்துகளுக்கு அதிபதியாக இருக்கிறார்.
கனடாவில்கூட பினாமி பெயரில் அவருக்கு சொத்துக்கள் இருப்பதாக அறியப்படுகிறது.
இந்தளவு சொத்துக்கள் இந்தளவு குறுகிய காலத்தில் நிச்சயம் நேர்மையாக சம்பாதித்திருக்க முடியாது.
எனவே கண்டு பிடிக்கப்பட்ட போதைப் பொருள் கடத்தலில் அவர் சம்பந்தப்பட்டிருக்லாமோ என்பது நியாயமான சந்தேகமே.
ஆனால் அவரோ புத்தமத இனவாதிகள் வேண்டுமென்றே தன்மீது பழி சுமத்தவதாக சொல்லி தப்பிக்க முனைகிறார்.
இவர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முஸ்லிம் இனப் போர்வையைப் பயன்படுத்த முனைவதை முஸ்லிம் மக்கள் அனுமதிக்கக்கூடாது.
உண்மையிலே அவருக்கு இந்த போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தம் இல்லையென்றால் தானாக பதவி விலகி நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முஸ்லிம் மக்கள் வலியுறுத்த வேண்டும்.
அத்துடன் தனது சொத்து விபரம் முழுவதையும் சமர்ப்பித்து அவை எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது என்பதையும் அவர் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோர வேண்டும்.
வடமாகாண சபையில் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் மக்கள் போராடியதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அமைச்சர் ரிசாத் மீது நடவடிக்கை எடுக்குமாறு முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி தமிழ் சிங்கள அனைத்து மக்களும் வலியுறுத்த வேண்டும்.

•சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் ஆனால் அமைச்சர்கள் மட்டும் விதிவிலக்கு!

•சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்
ஆனால் அமைச்சர்கள் மட்டும் விதிவிலக்கு!
இலங்கையில் மக்களுக்கு ஒரு நியாயம். அமைச்சர்களுக்கு இன்னொரு நியாயம். இதுதான் இலங்கை அரசின் நியாயமா?
மாணவி வித்யா கொலைக் குற்றவாளி சுவிஸ்குமார் தப்பிக்க உதவினார் என்ற குற்றச்சாட்டில் பிரதி பொலிஸ் மாஅதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சட்டப் பேராசிரியர் தமிழ் மாறனின் மாணவர். அமைசச்ர் விஜயகலா வின் அழுத்தத்தினாலே இவர் சுவிஸ்குமாரை தமிழ்மாறனுடன் அனுப்பி வைத்ததாக அறிய வருகிறது.
தற்போது இவருடைய சட்டத்தரணிகள் சுவிஸ்குமாரை மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்தபோது அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சென்று காப்பாற்றிய வீடியோவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
பிரதி பொலிஸ் மாஅதிபரின் சட்டத்தரணிகள் கேட்டுக்கொண்டபடி இதுகுறித்து அமைச்சர் விஜயகலாவிடம் விசாரிக்குமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.
இந்நிலையில் இன்னொரு பொலிஸ் அதிகாரியான சிறீகஜனை கைது செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.
நீதிபதி இளஞ்செழியனின் பொலிஸ் பாதுகாவலரை சுட்ட கொலையாளிகூட நீதிமன்றில் இன்று சரணடைந்துவிட்டான்.
ஆனால் பொலிஸ் அதிகாரி சிறீகஜன் சரணடையவும் இல்லை. இன்னமும் கைது செய்யப்படவும் இல்லை.
சட்டவிரோதமாக சிறீகஜனை பாதுகாப்பவர்கள் யார்? அல்லது சிறீகஜனை கைது செய்யாமல் தடுக்கும் அந்த “பவர்புல்” கரங்கள் யாருடையது?
அதுமட்டுமன்றி, சிறீகஜன் நீதிமன்றில் சரணடைந்து உண்மைகளை கூற விரும்பியதாகவும் ஆனால் அதற்குள் அவர் கடத்தப்பட்டு குடோன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்தாகவும் அவர் உயிருக்கு ஆபத்து எற்பட்டுள்ளது என்றும் உறவினர்கள் பக்கத்தில் இருந்து கதை வருகிறது.
இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்ர் விஜயகலா தன்னை பாதுகாக்க எந்த மட்டத்திற்கும் இறங்குவார்.
அதேவேளை, பிரதி பொலிஸ்மாஅதிபருக்கும் சுவிஸ்குமாருக்கும் பல வருடங்களாக தொடர்பு இருந்திருக்ககூடும் என்றும் இதுபற்றி விசாரணை செய்ய வேண்டும் என்று நீதிபதி கேட்டுள்ளார்.
அப்படியென்றால் அமைச்சர் விஜயகலா மற்றும் சட்டப் பேராசிரியர் தமிழ்மாறனுக்கும்கூட சுவிஸ்குமார் வியாபாரத்தில் பங்கு இருக்கிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.
பெண்கள் தனியாக பாதுகாப்பாக செல்லும் வரை தன் பணி ஓயப்போவதில்லை என்று நீதிபதி இளஞ்செழியன் கூறியிருந்தார்.
ஆனால் இப்போது அவரே அதிரடிப்படையின் பாதுகாப்பு இன்றி வெளியில் செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளது.
நீதிபதியை கொல்ல முயன்ற கொலையாளிக்கும் மாணவி வித்யா கொலையாளிசுவிஸ் குமாருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது.
ஆனால் இந்த உண்மைகள் யாவும் மறைக்கப்படுகிறது. மாணவி வித்யாவுக்கு நீதி கிடைக்குமா என்ற சந்தேகம் தோன்றியுள்ளது.
மண் கடத்தினார்கள் என்ற சந்தேகத்திலேயே பலர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
ஆனால் போதை பொருள் கடத்தல் வழக்கில் அமைச்சர் ரியாத் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அமைச்சர் விஜயகலா மீது போதிய ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது, இலங்கையில் அமைச்சர்கள்சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா என கேட்கத் தூண்டுகிறது?

•தமிழர்கள் கேணையர்கள் இல்லை!

•தமிழர்கள் கேணையர்கள் இல்லை!
மச்சான் சொன்னான், சுட்டேன் என்கிறான்
இவன் சுட முயன்றது ஒரு நீதிபதியை.
இவன் சுட்டுக் கொன்றது ஒரு பொலிஸ் ஏட்டையாவை
ஆனால் அவன் ஏதோ தோசையை சுட்டது போன்று
சர்வ சாதாரணமாக கதை சொல்கிறான்.
இப்படி ஒரு நிலை வரும் என்று தெரிந்துதான்
முன்னமே நம்முடைய ஆட்கள் சொல்லியிருக்கிறார்கள்.
கேட்பவன் கேணையன் என்றால்
காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்பார்களாம்.
எருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்றால்கூட நம்புவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
ஆனால் இந்த தோசை சுட்ட கதை எல்லாம் சொல்ல முயலாதீர்கள்.
ஏனெனில் இப்போது நாம் கேணையர் இல்லை
பொலிஸ் மாஅதிபர் அவர்களே!

•எம் இனிய தமிழக மக்களே!

•எம் இனிய தமிழக மக்களே!
இந்த காத்துமுத்து ஆனந்தன் (காசிஆனந்தன்) என்ற பெரியவரை தயவு செய்து இலங்கைக்கு அனுப்பி வையுங்கள்.
அவர் இங்கு வந்து தாராளமாக இந்து தமிழீழமோ அல்லது இட்லி தமிழீழமோ என்ன வேணுமென்டாலும் கேட்கட்டும்.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இந்திய உளவுப்படையின் விருப்பப்படி தமிழ் மக்களை பிரிக்கும் நாசகார வேலைகளை செய்ய அனுமதிக்காதீர்கள்.
1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணி கீழ் தமிழ் மக்கள் ஜக்கியப்பட்டபோது அதற்கு எதிராக போட்டியிட்டு தோல்வி கண்டவர்.
சொந்த ஊரில் சொந்த மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டவர். பின்னர் புலிகள் அமைப்பில் சேர்ந்தார்.
சீருடை அணிந்தார். இந்தியாவுடன் போர் வெடிக்கும் என்று உண்ணாவிரதம் இருந்த திலீபன் முன் சீறினார்.
இவர் கூறியபடி போர் ஆரம்பித்தது. போர்க்களம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கவிஞர் தலைமறைவானார்.
சீருடை களைந்தார். இரகசியமாக வள்ளம் ஏறி தமிழ்நாட்டுக்கு ஓடித் தப்பினார். ஆனால் வள்ளம் ஏறுமுன் கூறினார் “தம்பியிடம் கூறுங்கள். எக் காரணம் கொண்டும் இந்த சண்டையை கைவிட்டுவிட வேண்டாம் என்று”
இந்தியாவில் இத்தனை நாளும் மௌனமாக இருந்தவர் இப்போது இந்திய உளவுப்படைகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்துத் தமிழீழம் என்று சீறுகிறார்.
இத்தனை அழிவுக்குப் பின்பும் இத்தனை அழிவுக்கு காரணமான இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவும் என்று நம்பும்படி கோருகிறார்.
இவர் ஏன் சிறப்புமகாமில் அடைக்கப்படவில்லை என்று நாம் கேட்கவில்லை. ஆனால் இவர் ஏன் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுக்க வில்லை என்றே கேட்கிறோம்.
இவர் எப்படி தன் இரு மகள்களுக்கும் அரச மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெற்றார் என்று நாம் கேட்கவில்லை. ஆனால் அகதிகளுக்கு கல்லூரி அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக இவர் ஏன் குரல் கொடுக்கவில்லை என்றே கேட்கிறோம்.
இவருடைய மகள் எப்படி கடவுச் சீட்டு பெற்று அவுஸ்ரேலியா சென்று வாழ்கிறார் என்று நாம் கேட்கவில்லை. மாறாக டிறைவிங் லைசென்ஸ்கூட எடுக்கமுடியாமல் இருக்கும் அகதிகளுக்கு இவர் ஏன் குரல் கொடுக்கவில்லை என்றே கேட்கிறோம்.
பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் 34 வருடமாக அகதியாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்படவில்லை. என்று இவரால் ஏன் கேட்கப்படவில்லை?
இந்தியாவில் இருக்கும் மற்ற அகதிகள் எல்லாம் சுதந்திராமாக நடமாட அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஈழ அகதிகள் மட்டும் சிறப்பு முகாமில் அடைக்கப்படுகிறார்கள். இதை ஏன் இவரால் கேட்க முடியவில்லை?
கடந்த வருடம் மதுரை அகதிமுகாமில் 7 பிள்ளைகளின் தந்தை தாசில்தாரின் சித்திரவதை பொறுக்க முடியாமல் மின்சாரக்கம்பியை பிடித்து தற்கொலை செய்தாரே. அப்போது இந்த காத்துமுத்து ஆனந்தன் ஏன் வாய் உட்பட எல்லாத்தையும் பொத்திக் கொண்டிருந்தார்?
இவர் முதலில் இந்தியாவில் அகதியாக இருக்கும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு மூலம் உதவி பெற்று கொடுக்கட்டும். அதற்கு ஒரு மாநாடு நடத்தட்டும்.
இல்லையேல் அவரை பிடித்து இலங்கைக்கு அனுப்பி வையுங்கள்.

•தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.

•தோழர் சாருமஜீம்தார் அவர்களுக்கு வீர வணக்கம்.
கொன்று புதைத்தால் மீண்டும் முளைத்து எழுவர்.
வெட்டி எறிந்தால் கடல் அலைபோல் மீண்டு வருவர்
- செர பண்டாயி
மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில் நக்சல்பாரி என்ற கிராமத்தில் எழுந்த விவசாயிகளின் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கம் இந்திய துனைகண்டம் முழுவதும் பேரலைகளை எழுப்பியது.
”வசந்தத்தின் இடி முழக்கம்” என்று வர்ணிக்கப்பட்ட அந்த எழுச்சியின் நாயகன் தோழர் சாரு.
தோழர் சாருமஜீம்தார் அவர்களின் நினைவுகள் அழிவதில்லை.
1972ல் படுகொலை செய்யப்பட்ட தோழர் சாரு அவர்களுக்கு வீர வணக்கம்.
தோழர் சாருவை கொலை செய்வதன் மூலம் புரட்சியாளர்களான நக்சலைட்டுகளை ஒழித்துவிட முடியும் என இந்திய அரசு நினைத்தது.
ஆனால் இன்று பல மாநிலங்களில் குறிப்பாக 160 மாவட்டங்களில் நக்சலைட் நிர்வாகமே நடைபெறுகிறது.
நக்சலைட்டுகளை ஒழிப்பதற்காக மேலும் 7 பட்டாலியன்களை இந்திய அரசு உருவாக்கியுள்ளது.
Image may contain: 1 personஎத்தனை பட்டாலியன்களை உருவாக்கி எத்தனை பேரை சுட்டுக் கொன்றாலும் நக்சலைட்டுகளை ஒருபோதும் ஒழிக்க முடியாது.
சொந்த மக்களை கொல்வதற்காக மேலும் மேலும் படைகளை உருவாக்கும் ஒரே ஜனநாயகநாடு(?) உலகில் இந்தியா மட்டுமே.
நக்சலைட்டுகள் தேச விரோதிகள் அல்லர். அவர்கள் தேச பக்தர்கள் என்று இந்திய உச்ச நீதிமன்றமே தெரிவித்திருக்கிறது.
ஆனால் இந்திய அரசோ நக்சலைட்டுகளை ஒழிப்பதாக கூறிக்கொண்டு அப்பாவி மக்கள் மீது யுத்தம் நடத்துகிறது.
ஏழை மக்களின் அபிவிருத்திக்கு பணம் ஒதுக்க மறுக்கும் இந்திய அரசு, அந்த ஏழை மக்களை ஒழிப்பதற்காக படைகளை உருவாக்க பணம் ஒதுக்கிறது
.
இந்த அநியாயத்தை இன்னும் எத்தனை நாளைக்கு இந்திய மக்கள் அனுமதிக்கப் போகின்றார்கள்?
இந்த அவலத்திற்கு எப்போது இந்திய மக்கள் முடிவு கட்டப் போகிறார்கள்?

•கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆயுள்தண்டனை! எப்படி நல்லிணக்கம் ஏற்படுத்தப் போகிறார்கள்?

•கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆயுள்தண்டனை!
எப்படி நல்லிணக்கம் ஏற்படுத்தப் போகிறார்கள்?
40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களை கொன்றவர்களுக்கு இன்னும் தண்டனை வழங்கவில்லை.
தண்டனை மட்டுமல்ல இவர்கள் மீது விசாரணையே இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. விசாரணை நடைபெறுமா என்பதுகூட தெரியவில்லை.
ஆனால் கட்டாய ஆட்சேர்ப்பு செய்ததாக முன்னாள் போராளி கண்ணதாசன் என்பவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
முதலாவது, இவர் தலைமை கிடையாது. எனவே கட்டாய ஆட்சேர்ப்பு செய்யும்படி இவர் உத்தரவு இட்டிருக்க முடியாது.
இரண்டாவது, தலைமை இட்ட உத்தரவையே ஒரு போராளி என்ற நிலையில் இவர் நிறைவேற்றியிருக்க முடியும்.
மூன்றாவது, கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆயுள் தண்டனை என்பது அதிக பட்ச தண்டனையாகும் எந்த நாட்டிலும் இப்படி ஒரு தண்டனை வழங்கியது கிடையாது.
நான்காவது, இவர் ஒரு போராளியாக இருந்தமையினாலே சித்திரவதை முகாம் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டே விடுதலை செய்யப்ட்டிருக்கிறார். எனவே இவருக்கு மீண்டும் தண்டனை வழங்குவது தவறாகும்.
ஒரு குற்றத்திற்கு இரண்டு முறை தண்டனை வழங்குவதன் மூலம் எப்படி இலங்கை அரசு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்?
இந்த தீர்ப்பின் மூலம் புனர்வாழ்வு பெற்ற 12 ஆயிரம் போராளிகள் மத்தியில் அச்ச நிலை தோன்றியுள்ளது.
இவர்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலை உருவாகியுள்ளது. ஒவ்வொரு நாளும் பயத்துடனேயே கழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு தமிழ் தலைவர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
குறிப்பிட்ட முன்னாள் போராளி கண்ணதாசனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும். இல்லையேல் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.

•மன்னித்து விடுங்கள் கருணாரட்ணம் அடிகளாரே!

•மன்னித்து விடுங்கள் கருணாரட்ணம் அடிகளாரே!
நீங்கள் கிருத்தவ பாதிரியராக இருந்தும் தமிழ் இன உணர்வோடு தமிழ் இன விடுதலைக்காக போராடியது உண்மைதான்.
அதனால்தான் சிங்கள அரசின் ஆழ ஊடுருவும் படையணி உங்களை கண்ணி வெடி (கிளைமோர்) வைத்து கொன்று போட்டது.
நீங்கள் விரும்பியிருந்தால் வெளிநாடு சென்று பாதிரியாராக பாதுகாப்பாக இருந்திருக்கலாம்.
ஆனால் நீங்கள் மக்களோடு மக்களாக இருந்துகொண்டு மக்களுக்காக குரல் கொடுத்தீர்கள்.
கிளிநொச்சியில் இருந்துகொண்டு சிங்கள அரசின் மனிதவுரிமை மீறல்களை உலகிற்கு எடுத்துச் சொன்னீர்கள்.
சிங்கள இராணுவம் உங்களை கிருத்தவராக பார்க்கவில்லை. உங்களையும் தமிழனாகவே பார்த்தது. அதனால்தான் கொன்றது.
ஆனால் நாங்கள் இனி உங்களை தமிழனாக பார்க்க முடியாது. இனி நீங்கள் கிருத்தவர். நாங்கள் இந்துக்கள்.
எங்களுக்காக சாசிஆனந்தன் அய்யா இந்துத் தமிழீழம் கேட்கிறார். இதனால் தமிழ் இனம் பிளவு படப் போகிறதே என்ற கவலையெல்லாம் எமக்கு இல்லை
இதை அறிந்தால் உங்களுக்கும் கவலையாக இருக்கும்தான். ஆனால் என்ன செய்வது? எங்களை மன்னித்து விடுங்கள்.

•மோடி ஏன் அப்துல்கலாமுக்கு சிலை வைத்தார்?

•மோடி ஏன் அப்துல்கலாமுக்கு சிலை வைத்தார்?
விஞ்ஞானி கலாம் என்றார்கள். கடைசியில் பார்த்தால் அவரை வித்துவான் கலாம் ஆக்கிவிட்டார்கள்.
ராக்கட் விட்ட விஞ்ஞானியை எதோ வீணை வாசித்த வித்துவான் போல் சிலையை வைத்துள்ளார்கள்.
அதுகூட பரவாயில்லை. பக்கதில் பகவத்கீதையை வேற வைத்துள்ளார்கள். நல்லவேளை பூணூல் போடாமல் விட்டுவிட்டார்கள்.
சரி அதை விடுவம். ஆனால் பிரதமர் மோடி ஏன் அப்துல் கலாமுக்கு சிலை திறந்து வைத்தார்?
கலாம் இராமேஸ்வரத்தில் பிறந்தும் இராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டபோது மௌனமாக இருந்தமைக்காகவா? அல்லது,
கலாம் ஒரு தமிழராக இருந்தும் ஈழத்தில் 40 ஆயிரம் தமிழ்மக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டபோது மௌனமாக இருந்தமைக்காகவா? அல்லது,
இலங்கை சென்று இனப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவின் கரங்களை கொஞ்சம்கூட கூச்சமின்றி கைகுலுக்கியமைக்காகவா? அல்லது,
கூடங்குளம் அணு உலையால் ஆபத்து இல்லை என்று தமிழ் மக்கள் நலனுக்கு விரோதமாக பேட்டி கொடுத்தமைக்காகவா? அல்லது,
நடிகை சொர்ணமால்யாதான் வேணும் என்று அடம்பிடித்த கொலைகார சின்ன சங்கராச்சாரியாரை சென்று வணங்கியமைக்காகவா? அல்லது
தமிழ் இளைஞர்களை இந்தியனாக கனவு காணும்படி கூறியமைக்காகவா?

•46வது பிறந்தநாள் காணும் பேரறிவாளனுக்கு வாழ்த்துக்கள்!

•46வது பிறந்தநாள் காணும் பேரறிவாளனுக்கு வாழ்த்துக்கள்!
இன்று 30.07.17, 46வது பிறந்தநாள் காணும் பேரறிவாளனுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த 46 வருடத்தில் 26 வருடங்களை சிறையில் கழித்துள்ள பேரறிவாளன் தன் இளமைக் காலம் முழுவதையும் இழந்துவிட்டார்.
இனியும் எப்போது விடுதலை கிடைக்கும் என்பது தெரியாமலும் பரோல் லீவுகூட வழங்கப்படாமலும் சிறையில் வாடுகிறார்.
இவர் செய்த ஒரேயொரு தவறு தமிழ் இன உணர்வு கொண்டதாகும். அதனால் ஈழத் தமிழருக்கு ஆதரவாக இருந்ததாகும்.
அதனால்தான் இவர் கழுத்தில் தூக்கு கயிறு தொங்கியபோது செங்கொடி தன் உயிரைக் கொடுத்து தடுத்தாள்.
தமிழகமே திரண்டு எழுந்து இவர் உயிரைக் காப்பாற்றியது. இன்றும்கூட இவர் விடுதலையை தமிழகம் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது.
இத்தனை வருட சிறைக் கொடுமையிலும் பின்பும்கூட அவர் தான் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்ததை தவறு என்று கூறவில்லை.
முக்கியமாக அவர் தாயாரும்கூட தன் மகன் ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்தது தவறு என்று என்றுமே கூறியதில்லை.
அவர் நம்பிய தலைவர்கள்கூட மௌனமாக இருந்தபோதும் அவர் ஈழத் தமிழருக்கான ஆதரவு நிலையை மாற்றவில்லை.
ஆனால் கேவலம் என்னவெனில் இதுவரை ஒரு ஈழத் தமிழ் தலைவர்கள்கூட பேரறிவாளனை விடுதலை செய்யும்படி கோரவில்லை.
ஆனால் பேரறிவாளனோ அல்லது அவரது குடும்பத்தவர்களோ இதை ஒரு குறையாக ஒருபோதும் குறிப்பிட்டதில்லை.
அந்த சிறிய இளைஞனிடம் எந்தளவு பெரிய மனசு. உண்மையிலே எனக்கு வெட்கமாக இருக்கிறது.
எங்களுக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக ஒரு குடும்பமே எந்தளவு துன்பம் அனுபவிக்கிறது. ஆனால் அதை மறந்து நாங்கள் திரிகிறோம்.
அடுத்த பிறந்தநாளாவது தன் தாய் தந்தையருடன் பேரறிவாளன் கொண்டாட வேண்டும். அதற்காக குரல் கொடுப்போம்.

•ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில் இனப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்குமா?

•ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில்
இனப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டிருக்குமா?
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டிருக்காவிட்டால் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முதலாவது,
ராஜீவ்காந்தியைக் கொன்றதால் தமிழ் இனத்தின் மீது வன்மம் காட்டப்படுகிறது எனில் இந்திராகாந்தியைக் கொன்ற சீக்கிய இன மன்மோகன் சிங்கிற்கு எப்படி பிரதமர் பதவி வழங்கப்பட்டது?
இரண்டாவது,
ஈழத்தில் இந்திய ராணுவம் செய்த கொடுமைகளுக்கு இந்தியாவின் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் நீதி வழங்கப்பட்டிருந்தால் ராஜீவ்காந்தி கொலை நடந்திருக்காது.
மூன்றாவது,
ராஜீவ்காந்தி கொலை நடந்திருக்காவிடினும் இனப்பிரச்சனைக்கு தீர்வுகாண இந்தியா உதவாது என்பதே உண்மையாகும்.
இந்தியா எப்போதும் தனது நலன்களுக்காகவே இலங்கைப்பிரச்சனையில் தலையிட்டு வருகிறது.
இந்தியாவின் நோக்கம் இலங்கை மீதான ஆக்கிரமிப்பேயொழிய தமிழ் மக்களுக்கு உதவுவது அல்ல.
தனது நாட்டில் சிறுபான்மை தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கி வரும் இந்தியாவானது இலங்கையில் தமிழ் தேசிய இனத்திற்கு உதவும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.
தனது அயல்நாடுகளை எப்போதும் குழப்ப நிலையில் வைத்து அதனூடாக தனது ஆக்கிரமிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதே இந்திய வெளியுறவுக் கொள்கையாகும்.
இலங்கை அரசு ஒருவேளை தமிழீழத்தை தர முன்வந்தாலும் இந்திய அரசு அனுமதிக்காது என்பதை சம்பந்தர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஈழத்தில் தமிழ் மகக்ள் உரிமை பெறுவது தமிழ்நாட்டில் உள்ள தமிழருக்கு உத்வேகத்தை கொடுக்கும் என இந்திய அரசு கருதுகிறது.
தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரிந்தால் முழு இந்தியாவுமே சிதறிவிடும் என இந்திய ஆளும் வர்க்கம் அஞ்சுகிறது.
நாகலாந்து மாநில மக்கள் தனி கொடி , தனி பாஸ்போட் வைத்திருக்க அனுமதிக்கும் இந்திய அரசு தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்கு ஆதரவாய் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்யக்கூட மறுப்பதன் காரணம் இதுதான்.
•இந்திய அரசு இதுவரை தமிழீழத்தை அங்கீகரிக்கவில்லை. இனியும் அங்கீகரிக்கப் போவதில்லை
•இந்திய அரசு தமிழீழத்தை மட்டுமல்ல ஈழத் தமிழர்கள் தமிழக தமிழர்களைவிட அதிக உரிமை பெறுவதை ஒருபோதும் அனுமதிக்காது.
•இந்திய அரசின் நோக்கம் எப்போதும் இலங்கை மீதான ஆக்கிரமிப்பேயொழிய ஈழத் தமிழர்களுக்கு உதவுவது அல்ல.
இது சம்பந்தருக்கும் நன்கு தெரியும். ஆனால் தமது துரோகங்களை மறைப்பதற்கு புலிகள் மீது பழியை போடுகிறார்.
முதலில் புலிகள் பயங்கரவாதிகள் என்றார். இப்போது புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றதால்தான் தீர்வு கிடைக்கவில்லை என்கிறார்.
கடந்த 8 வருடமாக புலிகள் இல்லை. சம்பந்தரோ அல்லது இந்தியாவோ எந்த தீர்வையும் இதுவரை ஏன் பெற்றுத்தரவில்லை?

நிர்வாணமாக்கப்பட்டது காதலர்கள் மட்டுமல்ல உங்கள் பாரத மாதாவும்தான்!

நிர்வாணமாக்கப்பட்டது
காதலர்கள் மட்டுமல்ல
உங்கள் பாரத மாதாவும்தான்!
ஒருபுறம் நிர்வாண சாமியை வணங்குகிறார்கள்
இன்னொருபுறம் மனிதனை நிர்வாணமாக்கி அடிக்கிறார்கள்
இந்த லட்சணத்தில் 2020 ல் இந்தியா வல்லரசு என்கிறார்கள்.
சம்பவம் நடந்தது- நேற்று
சம்பவம் நடைபெற்ற இடம்- பிஜேபி ஆளும்
உத்தரபிரதேச மாநிலம்
செய்த தவறு- காதலித்தது
வழங்கப்பட்ட தண்டனை-
காதலனும் காதலியும் நிர்வாணமாக வீதியில் ஒருவரை ஒருவர் தூக்கி செல்ல வேண்டும்.
தூக்க முடியாமல் கீழே விழுந்தால் ஆண் உறுப்பிலும் பெண் உறுப்பிலும் இரும்புக் கம்பியால் அடி விழும்.
இந்த காதலர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையை வழங்கியவர்கள் இறுதியாக எழுப்பிய கோஷம்- பாரத் மாதாகி ஜே!
இந்தியாவில் மாட்டுக்கு இருக்கும் பாதுகாப்புகூட தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு இல்லை.
இப்போது எனது அச்சம் என்னவென்றால்
ஈழத்தில் இந்து தமிழீழம் கேட்க ஆரம்பித்துள்ளார்கள்.
அங்கேயும் இனி இந்த அக்கிரமங்களை காண வேண்டி வருமா?

எங்கட சம்பந்தர் அய்யா ரொம்ப கெட்டிக்காரர் பாருங்கோ!

எங்கட சம்பந்தர் அய்யா ரொம்ப கெட்டிக்காரர் பாருங்கோ!
ஒரு ஊரில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவருக்கு காது நன்றாக கேளாது. அவருக்கு கண் நன்றாக தெரியாது.
அந்தளவுக்கு முதுமை அடைந்து விட்டார். என்றாலும் அந்தப் பெரியவர் தலைமைப் பொறுப்பை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்.
அந்த பெரியவர் ஒருநாள் ஒரு தவளையைப் பிடித்து அதன் ஒரு காலை வெட்டி விட்டு தாவு என்று குரல் கொடுத்தார். அந்த தவளையும் தாவியது.
அதன்பின் இன்னொரு காலையும் வெட்டிவிட்டு தாவு என்றார். அது தாவியது.
அதன்பின் மூன்றாவது காலையும் வெட்டிவிட்டு தாவும்படி சத்தம் போட்டார். தவளை ஒருவாறு ஒற்றைக் காலில் எம்பிக் குதித்தது.
அதன்பின் நான்காவது காலையும் வெட்டிவிட்டு தாவு என்றார். ஆனால் தவளை தாவவில்லை.
உடனே அந்த பெரியவர் கூறினார் “நான்கு கால்களையும் வெட்டினால் தவளைக்கு காது கேட்காது”
அதேபோல் தமிழ் மக்களுக்கும் இப்போது ஒரு பெரியவர் தலைவராக இருக்கிறார். அவர்தான் எங்களது சம்பந்தர் அய்யா.
அவர் ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்றார். அதன்பின் இரண்டு வாரத்தில் நல்ல செய்தி வரும் என்றார்.
இப்போது, ராஜீவ்காந்தி கொல்லப்டாமல் இருந்திருந்தால் இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கும் என்கிறார்.
அதுசரி ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்று அவர் கூறியபோது ராஜீவ்காந்தி உயிரோடு இருந்தாரா?
இதை யாராவது இந்த பெரியவரிடம் கேட்டுச் சொல்வீர்களா?

Sunday, July 23, 2017

கொழும்பில் அரச நிறுவனத்திற்கு சொந்தமான காணிகள் இந்தியாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது!

கொழும்பில் அரச நிறுவனத்திற்கு சொந்தமான காணிகள்
இந்தியாவுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது!
கொழும்பிலுள்ள பிரதான காணிகள் பலவற்றை இந்தியாவுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்கிறது.
கொழும்பு டீ.ஆர்.விஜேராம மாவத்தை 56, 70 மற்றும் 126 என்ற இலக்கங்களின் கீழ் சதோச நிறுவனத்திற்கு சொந்தமான 3 ஏக்கர் காணியை இந்தியாவின் ஜே ஹோட்டல் லிமிட்டட் சென்னை நிறுவனத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சதொச நிறுவனத்திற்கு சொந்தமான அதே வீதியில் அமைந்துள்ள இலக்கம் 40, 105 மற்றும் 109 என்ற இலக்கங்களில் உள்ள காணியை க்ரூடின் க்ரூப் கல்கத்தா இந்தியா என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் 165 என்ற இலக்கத்தின் கீழ் உள்ள சதொச நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடத்தை இந்தியா நிறுவனத்திற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
இதேவேளை, பான்ஸ் பிரதேசத்தின் இலக்கம் 17 இன் கீழ் உள்ள காணியை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இவற்றிற்கு மேலதிகமாக கொழும்பு மற்றும் ததாசன்ன பிரதேசத்தில் பாரிய அளவு காணியை இந்திய நிறுவனம் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அறிய வருகிறது
.
கடந்த மகிந்த ஆட்சி மட்டுமல்ல தற்போதைய ரனில் - மைத்திரி ஆட்சியும்கூட இந்திய ஆக்கிரமிப்புக்கு துணை போவதாகவே இருக்கின்றது.
ஜே.ஹோட்டல் லிமிட்டெட் சென்னை, இது திமுக பாலு மற்றும் கனிமொழி ஆகியோரின் பினாமி கம்பனி என கூறப்படுகிறது.
திமுக டி.ஆர்.பாலு வுக்கு சொந்தமான ரோலர் படகுகளே பெரும்பாலும் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கின்றன.
இவர்கள் ஏன் அவசரம் அவசரமாக வந்து மகிந்தவின் கையைக் குலுக்கினார்கள் என்பது இப்போது புரிகிறதா?

வரிகளற்ற ஒரு அரசு சாத்தியமா?

வரிகளற்ற ஒரு அரசு சாத்தியமா?
இந்தியாவில் நள்ளிரவில் GST என்னும் நாடுதழுவிய வரி முiறையை இந்திய அரசு அமுல் படுத்தியுள்ளது.
நள்ளிரவில் வரி விதிப்பை அமுல்படுத்தியது மட்டுமன்றி மக்கள் மீது வரி விதிப்பு செய்தமையை “புதிய இந்தியா பிறந்து விட்டது” என்று கூறும் முட்டாள்தனம் உலகில் இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிறது.
எந்த ஒரு அரசாக இருந்தாலும் மக்களிடமிருந்து ஏதோவொரு வடிவத்தில் வரி பெற்றுக்கொள்கிறது. வரி பெற்றுக்கொள்ளாத அரசு உலகில் இல்லை.
உலக அளவில் ஒரு மனிதன் பெறும் ஒரு ரூபா வருமானத்தில் சராசரியாக 28 சதம் பல்வேறு வடிவங்களில் வரியாக அரசு பெறுகிறது.
பிரித்தானியாவில் சராசரியாக இது ஒரு பவுண்ட் வருமானத்தில் 32 பென்ஸ் வரியாக அறவிடப்படுகிறநது.
இந்த அதிக வரிவிதிப்பை சுட்டிக்காட்டினால் ஜரோப்பாவில் வரி குறைந்த நாடு பிரித்தானியா என்று அவ் அரசு நியாயம் கூறுகிறது.
ஆனால் அதேவேளை மக்களுக்கு ஒரு ரூபா வழங்கப்படும்போது இறுதியில் மக்களுக்கு 40 சதமே சென்றடைகிறது. இந்த 40 சதம் மக்களுக்கு சென்றடைய அரசு நிர்வாக செலவாக 60 சதம் செலவாகிறது.
மக்களுக்காக அரசு என்ற நிலைபோய் இப்போது அரசுக்காக மக்கள் என்ற நிலை வந்துள்ளது.
உலகில் அரசு இருக்கும்வரை வரிகள் இருக்கும். எனவே வரிகளற்ற அரசு என்பது சாத்தியம் இல்லை.
ஆனால் அரசு அற்ற சமூகம் என்பது சாத்தியம். கம்யுனிச சமூகத்தில் அரசு இருக்காது. அரசு வாடி உதிர்ந்துவிடும் என்றார் கால் மாக்ஸ்.
ஆம். அரசு அற்ற அந்த கம்யுனிச சமுதாயம் குறித்து மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.