Sunday, July 30, 2017

•தமிழர்கள் கேணையர்கள் இல்லை!

•தமிழர்கள் கேணையர்கள் இல்லை!
மச்சான் சொன்னான், சுட்டேன் என்கிறான்
இவன் சுட முயன்றது ஒரு நீதிபதியை.
இவன் சுட்டுக் கொன்றது ஒரு பொலிஸ் ஏட்டையாவை
ஆனால் அவன் ஏதோ தோசையை சுட்டது போன்று
சர்வ சாதாரணமாக கதை சொல்கிறான்.
இப்படி ஒரு நிலை வரும் என்று தெரிந்துதான்
முன்னமே நம்முடைய ஆட்கள் சொல்லியிருக்கிறார்கள்.
கேட்பவன் கேணையன் என்றால்
காட்டெருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்பார்களாம்.
எருமை ஏரோப்பிளேன் ஓட்டுது என்றால்கூட நம்புவதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.
ஆனால் இந்த தோசை சுட்ட கதை எல்லாம் சொல்ல முயலாதீர்கள்.
ஏனெனில் இப்போது நாம் கேணையர் இல்லை
பொலிஸ் மாஅதிபர் அவர்களே!

No comments:

Post a Comment