Sunday, July 23, 2017

•மாவை சேனாதிராசாவின் மாவிட்டபுரத்து மாடி வீடு!

•மாவை சேனாதிராசாவின் மாவிட்டபுரத்து மாடி வீடு!
இது சாஜகான் தன் இறந்து போன காதலிக்காக கட்டிய தாஜ்மகால் அல்ல.
இது சிவாஜிகணேசன் வாணிசிறீக்காக கட்டிய வசந்த மாளிகையும் அல்ல
இது மாவைசேனாதிராசா தன் குடும்பத்திற்காக 3 கோடி ரூபா செலவில் மாவிட்டபுரத்தில் கட்டி வரும் மாடி வீடு.
தனக்கு பறக்கும் சக்தி இருந்திருந்தால் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை பறித்து வந்து மின் விளக்காக தொங்க விட்டிருப்பேன் என்றார் சிவாஜி கணேசன்.
ஆனால் நம்ம மாவை சேனாதிராசா விலை உயர்ந்த மாபிள் பளிங்கு கற்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வீட்டில் பதித்து இருக்கிறார்.
வீட்டு மதில் சுவர்கூட இறக்குமதி செய்யப்பட்ட கருங்கற்களால் அல்லவா கட்டி வருகிறார்.
வீட்டுவாசல்வரை வாகனத்தில் சென்று இறங்க வேண்டும் என்பதற்காக கங்கிறீட்டில் வீதி அமைக்கிறார்.
தமிழரசுக்கட்சியை ஆரம்பித்து இறக்கும்வரை அதன் தலைவராக இருந்த தந்தை செல்வநாயகத்திற்கு கடைசியில் 3000 ரூபா கடன் இருந்ததாக அவர் மகன் சந்திரகாசன் கூறுகிறார்.
ஆனால் எந்த சொத்தும் இல்லாமல் அரசியலுக்கு வந்த இன்றைய தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு சென்னையில் வீடு. மாவிட்டபுரத்தில் வீடு. கொழும்பில் வீடு. லண்டனில் வீடு.
இதே மாவிட்டபுரத்தில் இன்னும் பல மக்களின் நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. பல மக்கள் இன்னும் இடம் பெயர்ந்து முகாம்களில் வாழ்கிறார்கள்.
எப்படி இவரால் கொஞ்சம்கூட மனசாட்சியின்றி இப்படி நடந்துகொள்ள முடிகிறது?

No comments:

Post a Comment