Sunday, July 30, 2017

•எம் இனிய தமிழக மக்களே!

•எம் இனிய தமிழக மக்களே!
இந்த காத்துமுத்து ஆனந்தன் (காசிஆனந்தன்) என்ற பெரியவரை தயவு செய்து இலங்கைக்கு அனுப்பி வையுங்கள்.
அவர் இங்கு வந்து தாராளமாக இந்து தமிழீழமோ அல்லது இட்லி தமிழீழமோ என்ன வேணுமென்டாலும் கேட்கட்டும்.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இந்திய உளவுப்படையின் விருப்பப்படி தமிழ் மக்களை பிரிக்கும் நாசகார வேலைகளை செய்ய அனுமதிக்காதீர்கள்.
1977ல் தமிழர் விடுதலைக் கூட்டணி கீழ் தமிழ் மக்கள் ஜக்கியப்பட்டபோது அதற்கு எதிராக போட்டியிட்டு தோல்வி கண்டவர்.
சொந்த ஊரில் சொந்த மக்களாலேயே தோற்கடிக்கப்பட்டவர். பின்னர் புலிகள் அமைப்பில் சேர்ந்தார்.
சீருடை அணிந்தார். இந்தியாவுடன் போர் வெடிக்கும் என்று உண்ணாவிரதம் இருந்த திலீபன் முன் சீறினார்.
இவர் கூறியபடி போர் ஆரம்பித்தது. போர்க்களம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கவிஞர் தலைமறைவானார்.
சீருடை களைந்தார். இரகசியமாக வள்ளம் ஏறி தமிழ்நாட்டுக்கு ஓடித் தப்பினார். ஆனால் வள்ளம் ஏறுமுன் கூறினார் “தம்பியிடம் கூறுங்கள். எக் காரணம் கொண்டும் இந்த சண்டையை கைவிட்டுவிட வேண்டாம் என்று”
இந்தியாவில் இத்தனை நாளும் மௌனமாக இருந்தவர் இப்போது இந்திய உளவுப்படைகளின் விருப்பத்திற்கு ஏற்ப இந்துத் தமிழீழம் என்று சீறுகிறார்.
இத்தனை அழிவுக்குப் பின்பும் இத்தனை அழிவுக்கு காரணமான இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு உதவும் என்று நம்பும்படி கோருகிறார்.
இவர் ஏன் சிறப்புமகாமில் அடைக்கப்படவில்லை என்று நாம் கேட்கவில்லை. ஆனால் இவர் ஏன் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்கு குரல் கொடுக்க வில்லை என்றே கேட்கிறோம்.
இவர் எப்படி தன் இரு மகள்களுக்கும் அரச மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெற்றார் என்று நாம் கேட்கவில்லை. ஆனால் அகதிகளுக்கு கல்லூரி அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக இவர் ஏன் குரல் கொடுக்கவில்லை என்றே கேட்கிறோம்.
இவருடைய மகள் எப்படி கடவுச் சீட்டு பெற்று அவுஸ்ரேலியா சென்று வாழ்கிறார் என்று நாம் கேட்கவில்லை. மாறாக டிறைவிங் லைசென்ஸ்கூட எடுக்கமுடியாமல் இருக்கும் அகதிகளுக்கு இவர் ஏன் குரல் கொடுக்கவில்லை என்றே கேட்கிறோம்.
பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் 34 வருடமாக அகதியாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்படவில்லை. என்று இவரால் ஏன் கேட்கப்படவில்லை?
இந்தியாவில் இருக்கும் மற்ற அகதிகள் எல்லாம் சுதந்திராமாக நடமாட அனுமதிக்கப்படுகிறது. ஆனால் ஈழ அகதிகள் மட்டும் சிறப்பு முகாமில் அடைக்கப்படுகிறார்கள். இதை ஏன் இவரால் கேட்க முடியவில்லை?
கடந்த வருடம் மதுரை அகதிமுகாமில் 7 பிள்ளைகளின் தந்தை தாசில்தாரின் சித்திரவதை பொறுக்க முடியாமல் மின்சாரக்கம்பியை பிடித்து தற்கொலை செய்தாரே. அப்போது இந்த காத்துமுத்து ஆனந்தன் ஏன் வாய் உட்பட எல்லாத்தையும் பொத்திக் கொண்டிருந்தார்?
இவர் முதலில் இந்தியாவில் அகதியாக இருக்கும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசு மூலம் உதவி பெற்று கொடுக்கட்டும். அதற்கு ஒரு மாநாடு நடத்தட்டும்.
இல்லையேல் அவரை பிடித்து இலங்கைக்கு அனுப்பி வையுங்கள்.

No comments:

Post a Comment