Sunday, July 30, 2017

எங்கட சம்பந்தர் அய்யா ரொம்ப கெட்டிக்காரர் பாருங்கோ!

எங்கட சம்பந்தர் அய்யா ரொம்ப கெட்டிக்காரர் பாருங்கோ!
ஒரு ஊரில் ஒரு வயதான பெரியவர் இருந்தார். அவருக்கு காது நன்றாக கேளாது. அவருக்கு கண் நன்றாக தெரியாது.
அந்தளவுக்கு முதுமை அடைந்து விட்டார். என்றாலும் அந்தப் பெரியவர் தலைமைப் பொறுப்பை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்.
அந்த பெரியவர் ஒருநாள் ஒரு தவளையைப் பிடித்து அதன் ஒரு காலை வெட்டி விட்டு தாவு என்று குரல் கொடுத்தார். அந்த தவளையும் தாவியது.
அதன்பின் இன்னொரு காலையும் வெட்டிவிட்டு தாவு என்றார். அது தாவியது.
அதன்பின் மூன்றாவது காலையும் வெட்டிவிட்டு தாவும்படி சத்தம் போட்டார். தவளை ஒருவாறு ஒற்றைக் காலில் எம்பிக் குதித்தது.
அதன்பின் நான்காவது காலையும் வெட்டிவிட்டு தாவு என்றார். ஆனால் தவளை தாவவில்லை.
உடனே அந்த பெரியவர் கூறினார் “நான்கு கால்களையும் வெட்டினால் தவளைக்கு காது கேட்காது”
அதேபோல் தமிழ் மக்களுக்கும் இப்போது ஒரு பெரியவர் தலைவராக இருக்கிறார். அவர்தான் எங்களது சம்பந்தர் அய்யா.
அவர் ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்றார். அதன்பின் இரண்டு வாரத்தில் நல்ல செய்தி வரும் என்றார்.
இப்போது, ராஜீவ்காந்தி கொல்லப்டாமல் இருந்திருந்தால் இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கும் என்கிறார்.
அதுசரி ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்று அவர் கூறியபோது ராஜீவ்காந்தி உயிரோடு இருந்தாரா?
இதை யாராவது இந்த பெரியவரிடம் கேட்டுச் சொல்வீர்களா?

No comments:

Post a Comment