Wednesday, September 30, 2015

• தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!

• தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கங்கள்!
பிற்போக்குவாதிகள் வரலாற்றுச் சக்கரத்தை தடுத்து நிறுத்த எவ்வளவுதான் முயன்றாலும் இன்றோ, நாளையோ புரட்சி தோன்றுவது நிச்சயம். அது வெற்றிவாகை சூடுவதும் தவிர்க்க முடியாது- தோழர் மாஓ சேதுங்
தோழர் தமிழரசனைக் கொல்வதன் மூலம் தமிழ்நாடு விடுதலைப் படையை நசுக்கலாம். அதன் மூலம் தமிழ்நாடு விடுதலையை தடுக்கலாம் என இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் திட்டம்போட்டு சதி மூலம் தோழர் தமிழரசனையும் அவரது தோழர்கள் 4 பேரையும் 1987ம் ஆண்டு பொன்பரப்பியில் கொன்றனர். ஆனால் அவர்கள் கனவு பலிக்கவில்லை.
படுகொலை செய்யப்பட்ட தோழர் தமிழரசன் புதைக்கப்படவில்லை. மாறாக விதைக்கப்பட்டுள்ளார். அவரில் இருந்து பல தமிழரசன்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர்.
வெகுவிரைவில் தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் வீறு கொண்டு எழும். அது தோழர் மாஓசேதுங் கூறியதுபோல் வெற்றிவாகை சூடுவது தவிர்க்க முடியாதது.
தோழர் தமிழரசன் அவர்கள் பாதையில் தொடர்ந்து செல்வதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
யார் மாமனிதர்கள்?
யார் பெரும் மகிழ்ச்சியாளர்கள்?
மாபெரும் ஆசான் காரல் மாக்ஸ் கூறுகிறார்,
மனிதன் தனக்காக மட்டும் பணியாற்றுவானேயானால் கீர்த்தியுள்ள ஒரு கல்விமானாகவும், மாபெரும் ஞானியாகவும், சிறந்த கவிஞனாகவும் ஒருவேளை ஆகியிருக்கலாம். ஆனால் அவன் முழுமையான, உண்மையான ஒரு பெரும் மனிதனாக ஒருநாளும் ஆகியிருக்க முடியாது. சாதாரண மனிதர்களின் நலனுக்காகப் பணியாற்றுவதன் மூலமாகத் தாங்களாகவே பேரும் பெருமையும் பெற்றிருக்கிறார்களே அத்தகைய மனிதர்களைத் தான் வரலாறு மாமனிதர்களென ஏற்றுக் கொள்கிறது. பெருவாரியான மனிதர்களை மகிழ்ச்சி பெறச் செய்கிற மனிதன்தான் பெரும் மகிழ்ச்சியாளன் என்று அனுபவம் கூறுகிறது.
ஆம். தோழர் தமிழரசன் நினைத்திருந்தால் நல்ல சம்பளம் பெறும் உத்தியோகத்தில் அமர்ந்து தனக்கென ஒரு வசதியான வாழ்க்கையை அமைத்திருக்க முடியும். ஆனால் அவரோ அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் விடுதலைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
பரந்துபட்ட மக்களின் நலனுக்காக போராடிய தோழர் தமிழரசன் மாமனிதரே!
அவரை என்றும் நினைவில் கொள்வோம்.
அவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம்
குறிப்பு- பெண்ணாடத்தில் தோழர் தமிழரசனுக்கு வீர வணக்கம் செலுத்துவதை தமிழக காவல்துறை தடை செய்துள்ளது. தடையை மீறி தோழர்கள் வீர வணக்கம் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு எமது வாழ்த்துகள்!

• அரச செலவில் சிவாஜிக்கு மணி மண்டபம் தேவைதானா?

• அரச செலவில் சிவாஜிக்கு மணி மண்டபம் தேவைதானா?
ஏற்கனவே அரச செலவில் சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இப்போது அவருக்கு அரச செலவில் மணி மண்டபம் கட்டப்படும் என ஜெயா அம்மையார் அறிவித்துள்ளார்.
சிவாஜி கணேசன் சிறந்த நடிகராக இருக்கலாம். அதற்காக எதற்கு மக்களின் வரிப்பணத்தில் மணி மண்டபம் கட்ட வேண்டும்?
மணி மண்டபம் கட்டுவதாயின் சிவாஜி குடும்பத்து பணத்தில் கட்டலாமே. அவர்களிடம் இல்லாத பணமா?
மணி மண்டபம் கட்டுவதாயின் சினிமாத்துறையில் உள்ளவர்களிடம் பணம் பெற்று கட்டலாமே. அவர்கள்தானே கோடியில் புரளுகிறார்கள.;
ஒரு சினிமா நடிகருக்கு எதற்காக மக்கள் பணத்தில் மணி மண்டபம் கட்ட வேண்டும்?
100 கோடி ருபாயில் தமிழ்தாய்க்கு சிலை வைக்கப்படும் என ஜெயா அம்மையார் அறிவித்தார். அது ஏன் இன்னும் கட்டப்படவில்லை?
மக்கள் பணத்தில் தமிழ் தாய்க்கு சிலை வேண்டுமா என கேட்டவர்கள் இப்போது ஏன் மௌனமாக இருக்கின்றனர்?
தமிழத் தாயைவிட சிவாஜி கணேசன் முக்கியமானவரா?
ஒரு சந்தேகம்- சிறந்த நடிகர் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுவோர் சிறந்த மருத்துவர், சிறந்த பொறியிலாளர், சிறந்த ஆசிரியர் , சிறந்த தொழிலாளி போன்றவர்களுக்கு ஏன் மணிமண்டபம் கட்டுவதில்லை? சினிமா இவை எல்லாவற்றையும்விட சமூகத்திற்கு முக்கியமானதா?

• மாவை சேனாதிராசா அவர்களே

• மாவை சேனாதிராசா அவர்களே
அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தனது 5 வருட சம்பளம் முழுவதையும் ஏழை மாணவர்களின் கல்விக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தமது 45 ஏக்கர் காணியை பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
ஆனால் உங்கள் தலைவர் சம்பந்தர் அய்யா தனது காணியில் குடியிருக்கும் லிங்கா நகர் ஏழை மக்களுக்கு அவ் காணியை வழங்க மறுப்பதுடன் அவர்களை அங்கிருந்து விரட்ட முயல்கிறாரே? இது என்ன நியாயம்?
நீங்கள் மக்களுக்கு உங்கள் சம்பளம், சொத்து எதுவும் வழங்க வேண்டாம். ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கணக்கு விபரங்களை மக்கள் முன்வைத்தாலே போதும். அதையாவது செய்வீர்களா?

• முதலமைச்சர் விக்கி மீது நடவடிக்கை ஏன்?

• முதலமைச்சர் விக்கி மீது நடவடிக்கை ஏன்?
செய்தி- விக்கினேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை! 11-ம் திகதி கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவு - மாவை சேனாதிராஜா
இந்தியாவில் குடியிருக்கும் தலைவர்களை தெரிவு செய்யாமல் மக்கள் மத்தியில் வாழும் தலைவர்களை தெரிவு செய்யுங்கள் என்று விக்கி கூறினார். இது தவறா?
மக்களுக்கு ஒரு கருத்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இன்னொரு கருத்தும் சொல்லும் தலைவர்களை தெரிவு செய்யாதீர்கள் என்று விக்கி சொன்னார். அது தவறா?
உள்ளக விசாரணை வேண்டாம். சர்வதேச விசாரணையே வேண்டும் என்று விக்கி கூறினார். அது தவறா?
ரணில் விக்கிரமசிங்காவிடம் சிலர் இரகசியமாக பணம் பெற்றுக் கொண்டதை மக்களுக்கு விக்கி வெளிப்படுத்தினார். இது தவறா?
எதற்காக விக்கி மீது ஒழுங்கு நடவடிக்கை?
நீங்களே அவரை பெரும் நீதிமான் என அழைத்து வருவீர்கள். அப்புறம் நீங்களே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பீர்கள்.
உங்க கூத்துக்கு எல்லாம் ஆமாம் போட மக்கள் என்ன வெங்காயங்களா?

தமிழக அரசே! தோழர் பொழிலனை உடனே விடுதலை செய்!

• தமிழக அரசே!
தோழர் பொழிலனை உடனே விடுதலை செய்!
பன்னாட்டு முதலாளியத்தை வளர்க்கும் முதலீட்டாளர் மாநாட்டை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய தோழர் பொழிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தோழர் பொழிலன் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கொடைக்கானல் டிவி டவர் தகர்ப்பு வழக்கில் பத்து வருடம் சிறை வைக்கப்பட்டவர்.
தமிழக மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வரும் தோழர் பொழிலன் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
தோழர் பொழிலன் உடனே விடுதலை செய்யப்படல் வேண்டும்.
நிலத்தடி நீரை லிட்டர் 40 பைசாவுக்கு முதலீட்டாளர்களுக்கு விற்று அதை மீண்டும் 20 ரூபாய்க்கு வாங்கும் முட்டாள்தன நாடாக தமிழ்நாடு விளங்குகிறது. அதனால்தான் முதலீட்டிற்கு சிறந்த இடமாக இந்தியாவில் தமிழ்நாடு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பொழிலன் கண்டிப்பது தவறா?
நோகியா - பாக்ஸ்கான் போல 24000 கோடி வரி ஏய்ப்பு மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் தவிக்க விட்டு ஒடத் தான் பல பன்னாட்டு முதலாளிகள் பங்கேற்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை தமிழக அரசு நடத்துகிறதா? இதனை பொழிலன் தட்டிக் கேட்பது தவறா?
சமூக அக்கறை உள்ளவர்களே!
பன்னாட்டு முதலாளியத்திற்கு எதிராக பன்னாட்டு தொழிலாளர்களை ஒன்று திரட்டுவோம்!

மாபெரும் ஆசான் தோழர் மாஓ சேதுங் நினைவு தினம்!

மாபெரும் ஆசான் தோழர் மாஓ சேதுங் நினைவு தினம்!
மக்கள் சக்தியே மகத்தான சக்தி என்றார்.
மக்கள் சக்தி அணுகுண்டை விட வலிமையானது என்றார்.
மக்களை அணிதிரட்ட
ஆயிரம் பொதுக் கூட்டங்களை விட
கொரில்லா தாக்குதல் மேன்மையானது என்றார்.
ஆயுதப் போராட்டத்தின் மூலம்
புதிய ஜனநாயகப் புரட்சியை வென்று காட்டினார்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகார தலைமையில்
கலாச்சாரப் புரட்சியை வழி நடத்தினார்.
நூறு மலர்கள் மலரட்டும்
ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும் என்றார்.
மரம் ஓய்வை விரும்பினாலும்
காற்று விடுவதில்லை என்றார்.
மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனையின் வழிகாட்டலில்
புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்!

தமிழக அரசே! "எம்மை குடும்பத்துடன் வாழ விடு. இல்லையேல் கருணை கொலை செய்துவிடு"

• தமிழக அரசே!
"எம்மை குடும்பத்துடன் வாழ விடு. இல்லையேல் கருணை கொலை செய்துவிடு"
திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் நால்வர் தங்களை விடுதலை செய்யும்படியும் இல்லையேல் கருணைக்கொலை செய்துவிடுமாறும் கோரியுள்ளனர்.
கடந்தமாதம் ஒரு அகதி தம்பதியினர் சிறப்புமுகாம் கொடுமைகள் தாங்கமுடியாமல் தற்கொலை முயற்சி மேற்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் நால்வர் தாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் தமது குடும்பம் சீரழிந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே தங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது தங்களை கருணைக் கொலையாவது செய்யுங்கள் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
வழக்கம்போல் தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. தமிழக அரசின் இக் கொடுமைகளை தமிழக அரசியல் தலைவர்களும் கண்டிக்காதது வருத்தமளிக்கிறது.
"ஈழத்தாய்" ஜெயா அம்மையார் அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து சித்திரவதை செய்கிறார். "உலக தமிழின தலைவர்" கலைஞர் கருணாநிதி இது குறித்து ஒரு கண்டன அறிக்கைகூட விட மறுக்கிறார்.
இந்த இரு தமிழ் தலைவர்களும் ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் பெற்று தருவார்கள் என இப்பவும் சிலர் எம்மை நம்பும்படி கூறுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது !

• "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு

• "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் எதிர்வரும் 21.09.2015யன்று சென்னையில் வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்புமுகாம் கொடுமைகளை இந் நூல் விபரிக்கிறது.
சிறப்புமுகாமை மூடுவதற்கும் அதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை பெறுவதற்கும் இந் நூல் உதவிட வேண்டும் என விரும்புகிறேன்.
சிறப்புமுகாம் கொடுமைகளை விபரிக்கும் முதலாவது நூலாக இது இருக்கிறது. சிறப்புமுகாம் பற்றி மேலும் பல நூல்கள் வெளிவருவதற்கு இது வழி சமைக்கும் என நம்புகிறேன்.
ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழ்தேச மக்கள் கட்சியினர் இந் நூலை வெளியிடுகின்றனர்.
அவர்களின் உணர்வுகளைப் பாராட்டுவதோடு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

• ஈழத்து குட்டிச் சுட்டீஸ்

• ஈழத்து குட்டிச் சுட்டீஸ்
ஒரு வருடத்திற்குள் தீர்வு பெற்று தருவோம் என்று கூறிய தமிழ்தேசிய கூட்டமைப்பினர் சர்வதேச விசாரணை குறித்து குழந்தைப்பிள்ளைத்தனமாக பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொருவிதமான கருத்துகளை கூறி மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர்.
தமிழ்மக்களின் தலைமை தாங்களே என கூறிக்கொள்ளும் இவர்களால்; தமிழ் மக்களின் முக்கியமான இந்த பிரச்சனையில் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்பது வெட்கக்கேடானது.
தமிழக சட்டசபையில் சர்வதேச விசாரணை வேண்டும் என ஜெயா அம்மையார் தீர்;மானம் நிறைவேற்றுகிறார்.
கலைஞர் கருணாநிதி சர்வதேச விசாரணைக்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரியுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சர்வதேச விசாரணை கோரி அமெரிக்க தூதரலாயத்தின் முன்னால் போராட்டம் நடத்துகின்றனர்.
வடமாகாண சபை முதலமைச்சர் விக்கி தலைமையில் சர்வதேச விசாரணை கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
தமிழ்மக்கள் சர்வதேச விசாரணை கோரி கிளிநொச்சியில் இருந்து யாழ் நோக்கி பாத யாத்திரை செல்கின்றனர்.
லண்டனில் புலம் பெயர்ந்த மக்கள் கொட்டும் மழையிலும் சர்வதேச விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இன்னும் சிலர் சர்வதேச விசாரணை கோரி லண்டனில் இருந்து ஜ.நா நோக்கி சயிக்கிளில் பிரச்சாரம் செய்து செல்கின்றனர்.
இவ்வாறு எல்லோரும் சர்வதேச விசாரணை கோரும்போது தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மட்டும் அதற்கு எதிராக கருத்து வெளியிடுவது மிகப் பெரிய துரோகமாகும்.
"துரோகமே" உன் மறுபெயர் தமிழ்தேசியகூட்டமைப்பா?

• நூல் வெளியீட்டு விபரம்

• நூல் வெளியீட்டு விபரம்
"சிறப்புமுகாம் என்னும் சிறையை விடக் கொடிய சித்திரவதை முகாம்"
அமெரிக்காவின் குவாண்டநாமோ சித்திரவதை முகாம் பற்றி அறிந்த அளவிற்கு, கிட்லரின் யூத சித்திரவதை முகாம்கள் பற்றி அறிந்த அளவிற்கு, தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் பற்றி உலகம் இதுவரை அறியவில்லை.
இதில் வேதனை என்னவென்றால் தமிழ்நாட்டில் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் இந்த சித்திரவதை முகாம் கொடுமைகள் பற்றி தமிழர்களே இன்னும் முழுமையாக அறியாமல் இருப்பதே.
அமெரிக்காவின் குவாண்டநாமோ சிறை கொடுமைகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆகக் குறைந்தது அதை ஒத்துக்கொள்ளவாவது செய்கிறார். அந்த வதைமுகாமை மூடுவதற்கு தான் எவ்வளவோ முயன்றதாக பேட்டியும் கொடுக்கிறார்.
ஆனால் தமிழ் அகதிகளின் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்து இந்திய ஆட்சியாளர்கள் இதுவரை ஒத்துக் கொள்ளவுமில்லை. அது குறித்து வாய் திறப்பதும் இல்லை.
‘வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு!’ என்று தமிழக மக்கள்; பெருமையாக கூறி வருகிறார்கள். ஆனால் அது தன்னை நம்பி வந்த ஈழத் தமிழ் அகதிகளை மட்டும் சிறப்புமுகாமில் அடைத்து வைத்துத் துன்புறுத்துகின்றது என்பதை ஏனோ அவர்கள் கவனத்தில் கொள்ளத் தவறுகிறார்கள்.
(நூலில் இருந்து சில வரிகள்)
இந்நூல் எந்தளவுக்கு ஒரு ஆவணமாக எதிர்காலத்தில் பயன்படும் என எனக்கு தெரியவில்லை. ஆனால் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்கு சிறிதளவேனும் இந்நூல் உதவுமேயாயின் அதுவே எனக்குப் போதும். ஏனெனில்; எனது நோக்கமும் அதுவே.
இந் நூல் வெளியீட்டுக்கு உதவிய அனைவருக்கும் எனது தோழமை கலந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்.

• இந்த முட்டாள்தனத்தை என்னவென்று அழைப்பது?

• இந்த முட்டாள்தனத்தை என்னவென்று அழைப்பது?
தேவலோகத்தில் ஒரு நாள் உமாதேவியார் குளிக்கச் சென்றாராம். அப்போது அவர் தனது உடலில் உள்ள ஊத்தையை வளித்து உருட்டி காவலுக்கு வைத்தாராம். அவ்வேளை சிவபெருமான் அங்கே வந்தாராம். அவரை யார் என்று அறியாத அந்த ஊத்தை சிவபெருமானை உள்ளே விடாமல் தடுத்ததாம். உடனே கோபம் கொண்ட சிவபெருமான் அந்த ஊத்தையின் தலையை வெட்டி எறிந்தாராம். இதனைக் கண்ட உமாதேவியார் அது தனது மகன் என்றும் அதன் தலையை வெட்டிவிட்டீர்களே என்று கவலை கொண்டாராம். உடனே சிவபெருமான் அருகில் சென்றுகொண்டிருந்த ஒரு யானையின் தலையை வெட்டி அந்த ஊத்தையில் பொருத்தினாராம். அந்த யானை முகம் கொண்ட ஊத்தையே பிள்ளையார் என அழைக்கப்படுகிறது. அதுவே விநாயகர் சதூத்தி என கொண்டாடப்படுகிறது.
இங்கு எனது கேள்வி என்னவெனில் சிவபெருமான் உமாதேவியாரின் திருவிளையாடலுக்காக அநியாயமாக ஒரு யானையின் தலையை வெட்டிவிட்டார்களே! யானைக்கு இழைக்கப்பட்டிருக்கும் இந்த அநியாயத்தை யார் கேட்பது?
உலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் மட்டுமே ஆறாவது அறிவான பகுத்தறிவு கொண்டுள்ளான் என கூறுகின்றனர். அப்படிப்பட்ட மனிதன் இப்படியான ஊத்தைக் கதைகளை பக்தியின் பெயரால் "விநாயகர் சதுர்த்தி" என கொண்டாடும் முட்டாள் தனத்தை என்னவென்று அழைப்பது?

• "சிறப்புமகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு

• "சிறப்புமகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு
நாளை (21.09.2015) மாலை 5.30 மணிக்கு சென்னை வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" நூல் தமிழ்தேச மக்கள் கட்சியினால் வெளியீடு செய்யப்படுகிறது.
சிறப்புமகாம் மூடப்படுவதற்கும் அதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படுவதற்கும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
டில்லி அரசு கொஞ்சம்கூட கவனிக்காவிடினும் ஜெயா அம்மையார் தொடர்ந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக தீர்மானங்கள் நிறைவேற்றி அனுப்புகிறார்.
ஆனால் ஜெயா அம்மையார் உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர் எனில் தன்னால் இயன்ற, தனது அதிகாரத்தின் கீழ் உள்ள சிறப்பு முகாமை மூடி அதில் உள்ள அகதிகளை விடுதலை செய்யலாமே!
எனவே ஜெயா அம்மையாரின் சட்டசபை தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவிப்போர் ஜெயா அம்மையாரிடம் வலியுறுத்தி சிறப்புமுகாமை மூட வழி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம

சென்னையில் இடம் பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு

• சென்னையில் இடம் பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு
இன்று (21.09.15) மாலை 5.30 மணிக்கு நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" நூல் தமிழ்த்தேசியகட்சியினரால் வெளியிடப்பட்டது.
நூலை வெளியிட்ட தமிழ்தேசியகட்சி தோழர்களுக்கும் மற்றும் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த உணர்வாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்.
எம் அனைவரின் நோக்கமும் மக்கள் மத்தியில் இச் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்த செய்திகள் சென்றடைந்து அவர்கள் இவ் முகாமை மூட வழி சமைக்க வேண்டும் என்பதே!
இன்றைய நிகழ்வு எமது நோக்கம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.
அனைத்து மக்கள் மத்தியிலும் இவ் சிறப்புமுகாம் கொடுமைகளை எடுத்துரைப்போம்!
மக்கள் விழிப்புணர்வு மூலம் இவ் கொடிய முகாமை மூட வழி செய்வோம்!

• இவைகள் இனப்படுகொலைகள் இல்லையா?

• இவைகள் இனப்படுகொலைகள் இல்லையா?
இன ஒடுக்குமுறை உள்ள ஒரு நாட்டில்
இனக் கலவரங்கள் நடந்த ஒரு நாட்டில்
இனவாத ஆட்சியாளர்களால் நடந்த கொலைகள்
இனப்படுகொலைகள் அன்றி வேறு என்ன?
கொசவோவில் 4 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது இனப்படுகொலையாம் ஆனால் இலங்கையில் 40 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது வெறும் போர்க்குற்றமாம்.
ஒருவேளை வன்னியில் எண்ணெய் கிணறு இருந்திருந்தால் இவர்களுக்கு இது இனப்படுகொலையாக தெரிந்திருக்குமா?
கொலை செய்த குற்றவாளிகளையே நீதிபதியாக இருந்து விசாரணை செய்யும்படி கேட்கும் அதிசயம் இலங்கை விடயத்தில் ஜ.நா எமக்கு வழங்கும் நியாயம். இந்த கொடுமையை என்னவென்று அழைப்பது?
இன அழிப்பிற்கு துணை போன இந்தியாவிடம் நியாயம் வழங்குமாறு கேட்பது,
தனது சொந்த மக்களையே கொன்று குவிக்கும் இந்திய அரசிடம் மனிதாபிமானம் எதிர்பார்ப்பது,
வியட்நாமில், அப்கானிஸ்தானில், ஈராக்கில் மக்களை கொன்ற அமெரிக்கா இலங்கையில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யும் என நம்புவது,
இலங்கை அரசிற்கு ஆயுதம் வழங்கிய பிரிட்டனிடம் தமிழர்களுக்கு ஆதரவு தரும்படி கேட்பது,
இத்தகைய முட்டாள் தனங்களை என்னவென்று அழைப்பது?
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்ற தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இன்று நடந்தது இனப்படுகொலைகள் அல்ல அதற்கு சாட்சியும் இல்லை என்று ஏமாற்றுவதை என்னவென்பது?

தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? அல்லது பொலிஸ் சர்வாதிகார ஆட்சியா?

• தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா?
அல்லது பொலிஸ் சர்வாதிகார ஆட்சியா?
செய்தி- பொலிசை விமர்சிப்பவன் யாராக இருந்தாலும் உடனே பிடித்து சிறையில் அடையுங்கள்- பொலிஸ் அதிகாரி வெள்ளைத்துரை திமிர் பேச்சு
பொலிஸ் "என்கவுண்டர்" கொலை செய்யலாம்!
பொலிஸ் "லாக்கப்பில்" கொலை செய்யலாம்!
பொலிஸ் அகதிகளை சிறப்புமுகாமில் அடைக்கலாம்!
பொலிஸ் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யலாம்!
பொலிஸ் பெண் அதிகாரி தற்கொலை செய்யலாம்!
பொலிஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கலாம்!
அரசியல்வாதிகளுடன் சேர்ந்து ஊழல் செய்யலாம்!
ஆனால் அவர்களை ஒருவரும் விமர்சிக்க கூடாதாம்!!
பொலிஸ் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா?
பொலிஸ் தவறுகளை யாரும் தட்டிக் கேட்கக்கூடாதா?
ஜெயா அம்மையார் பதவிக்கு வரும்போதெல்லாம் பொலிசார் சர்வாதிகாரிகளாக நடக்கும் மர்மம்தான் என்னவோ?
சட்டத்தை காக்க வேண்டிய பொலிசாரே சட்டத்தை மதிக்காமல் சர்வாதிகாரமாக நடந்தால் அப்புறம் சட்டம் எதற்கு? நீதிமன்றம் எதற்கு? நீதிபதிகள் எதற்கு?
கருத்து சுதந்திரம் என்பது அரசியல் அமைப்பு சட்ட மூலமாக இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. இந்த உரிமையை மக்கள் போராடியே பெற்றிருக்கிறார்கள்.
மக்களின் கருத்துரிமையை பறிக்கும் வெள்ளைத்துரை போன்றவர்களை அனுமதிக்க கூடாது.
மக்கள் விழிப்புணர்வுடன் இவர்களுக்கு எதிராக செயற்பட வேண்டும்.

• இந்தியா தலையிட்டிருந்தால் 40 ஆயிரம் தமிழர் காப்பாற்றப்பட்டிருப்பார்களா?

• இந்தியா தலையிட்டிருந்தால் 40 ஆயிரம் தமிழர் காப்பாற்றப்பட்டிருப்பார்களா? அல்லது இந்தியா தலையிட்டதால்தான் 40 ஆயிரம் தமிழர் கொல்லப்பட்டார்களா?
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதியில் இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் 40 ஆயிரம் தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள் என முன்னாள் ஜ.நா மனிதவுரிமைத் தலைவர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------
கலைஞர் கருணாநிதி அவர்களே!
எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். நவநீதம்பிள்ளை அம்மையாரின் கூற்றுக்கு தங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம்.
நீங்களும் இந்திய அரசும் ஈழத்தமிழர்களை காப்பாற்ற முயற்சி செய்ததாக கூறிவந்தீர்கள். 3 மணி நேர உண்ணாவிரத நாடகமும்கூட ஆடினீர்கள்.
ஆனால் இப்போது நவநீதம்பிள்ளை அம்மையார் நீங்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.
இனி இதற்கு என்ன கூறப்போகிறீர்கள்?
-----------------------------------------------------------------------------------------
ஆனால் இந்தியாவே அனைத்து உதவிகளையும் வழங்கி தலையிட்டதால்தான் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதே உண்மையாகும்.
மன்மோகன்சிங்கின் காங்கிரஸ் ஆட்சியானாலும், மோடியின் பி.ஜே.பி ஆட்சியானாலும் இலங்கை அரசுக்கு உதவி வருவதும் ஜ.நா வில் இலங்கை அரசைக் காப்பாற்றி வருவதும் யுத்தத்தில் தலையிட்டதால்தானே.
இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு அனைத்து வழிகளிலும் உதவி வழங்கிய இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படும் என இன்னமும் சிலர் நம்பும் முட்டாள்தனத்தை என்னவென்று அழைப்பது?

• இந்த கொடுமையை என்னவென்று அழைப்பது?

• இந்த கொடுமையை என்னவென்று அழைப்பது?
17 வயது சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கியுள்ள சவூதிஅரேபியாவுக்கு ஜ.நா மனிதவுரிமை தலைமைப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இச் சிறுவனை சிலுவையில் அறைந்து தலை துண்டிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இச் சிறுவன் எவ்வித ஆதாரமும் இன்றி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சிறையில் தனது வக்கீலை சந்திக்கக்கூட அனுமதி அளிக்கப்படவில்லை என மனிதவுரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
அதுமட்டுமல்ல சிறையில் இச் சிறுவன் துன்புறுத்தப்பட்டதாகவும் தனக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிராக அப்பீல் செய்யவும் அனுமதிக்கப்படவில்லை.
இத்தகைய கொடுமையை இழைக்கும் சவூதி அரேபியாவுக்கு ஜ.நா மனிதவுரிமை தலைப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதவி வழங்கப்பட்டவுடன் சவூதி அரேபியா கடவுள் மறுப்பாளர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்று அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவுக்கு தலைமைப்பதவி வழங்கியமைக்காக கவலைப்படுவதா? அல்லது
நலலவேளை இலங்கைக்கு வழங்கப்படவில்லை என ஆறுதல்படுவதா?
அடிப்படை மனிதவுரிமைகளை மறுக்கும் சவூதி அரேபியாவுக்கு மனிதவுரிமை தலைமைப்பதவி!
குற்றம் செய்த இலங்கை அரசே குற்றத்தை விசாரிக்கும் நீதிபதியாக இருக்கலாம் என்று சிபாரிசு!
வர வர இந்த ஜ.நா செய்யும் தமாஸ்க்கு ஒரு அளவேயில்லாமல் இருக்கிறது!
இன்னும் என்னென்ன கொடுமையை எல்லாம் காணவேண்டி வருமோ தெரியவில்லை!

• தவறு தலைவர்களிலேயேயொழிய மக்களில் இல்லை

• தவறு தலைவர்களிலேயேயொழிய மக்களில் இல்லை
ஈழத்தில் 2 லட்சம் மக்கள் கொல்லப்பட்டபோது ஏன் இந்த கூட்டம் கூடவில்லை?
ஆந்திராவில் 20 தமிழர்கள் கொல்லப்பட்டபோது ஏன் இந்த கூட்டம் கூடவில்லை?
600 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோது ஏன் இந்த கூட்டம் கூடவில்லை?
என்று நடிகை நயன்தாராவை காண வந்த கூட்டம் மீது சிலர் எரிச்சல்படுகின்றார்கள்.
ஆனால் நாம் அவ்வாறு இதனை பார்க்கவில்லை. மாறாக ஒரு நடிகையை பார்க்க இத்தனை ஆவலாக வந்தவர்கள் தமது பிரச்சனைக்காக வரமாட்டார்களா என்றெ கேட்கிறோம்.
நிச்சயம் வருவார்கள். ஏனெனில்
இந்த மக்கள் மத்தியில் இருந்துதானே தமிழ்நாடு விடுதலைப்படை தளபதி தோழர் தமிழரசன் தோன்றினார்
இந்த மக்கள் மத்தியில் இருந்து வந்த தோழர் மாறன்தானே கொடைக்கானலில் வெடிகுண்டு வைத்து வீர மரணம் அடைந்தார்.
இந்த மக்கள் மத்தியில் இருந்தானே அப்துல் ரசீக் தோன்றி தன்னையே எரித்து மாண்டான்.
இந்த மக்கள மத்தியில் இருந்துதானே தன்னையே எரித்து பேரறிவாளனைக் காப்பாற்றிய செங்கொடி வந்தாள்.
இந்த மக்கள் மத்தியில் இருந்துதானே ஈழத் தமிழர்களுக்காக தங்களையே எரித்த 16 தியாகிகள் வந்தார்கள்.
எனவே இவ்வாறு வந்த மக்கள் கூட்டம் தமது பிரச்சனைகளுக்காக திரண்டு வரவில்லையெனில் தவறு அவர்களிடம் இல்லை. மாறாக தலைவர்களிடமே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
போலித் தலைவர்களின் துரோகங்களினால் மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள் என்பதே உண்மை. எனவே நம்பிக்கையான தலைமையை உருவாக்குவோம்.
மக்களே மகத்தான சக்தி.
மக்களே வரலாற்றை உருவாக்கும் சக்திகள்.

தோழர் பகத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம்!

தோழர் பகத் சிங் அவர்களுக்கு வீர வணக்கம்!
ஓ! மரணித்த வீரனே!
வெள்ளையரை விரட்ட நீ குண்டெறிந்தபோது
உன்னை தியாகி என்றழைத்தவர்கள்
கொள்ளையரை விரட்ட தமிழரசன் எறிந்தபோது
பயங்கரவாதி என்கிறார்கள்.
நீ விரும்பிய சுதந்திர இந்தியா மலர்ந்தது
வெள்ளையர் ஆட்சி போயிற்று – ஆனால்
கொள்ளையர் ஆட்சி வந்துவிட்டது.
இந்த கொள்ளையர் ஆட்சியில்
கல்லெறியும் காஸ்மீர் சிறுவன் ஜிகாத் பயங்கரவாதி
சதீஸ்கரில் ஆதிவாசி மாவோயிஸ்ட் பயங்கரவாதி
தமிழகத்தில் ஈழ அகதிகள் புலிப் பயங்கரவாதிகள்
மணிப்பூரில் 12 வருடம் உண்ணாவிரதம் இருக்கும் பெண் கொடிய பயங்கரவாதியாக சிறையில் அடைப்பு!
தலைநகர் டில்லியில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆனால்
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு
அன்று முஸ்லிம்களும் சேர்ந்து சுதந்திர இந்தியாவுக்கு போராடினார்கள்.
இன்று முஸ்லிம்களை கொன்று குவித்தவர் மாண்புமிகு பிரதமர்.
வெள்ளையர் உன்னை பயங்கரவாதி என்றனர்.
ஆனால் சுதந்திர இந்தியா உன்னை தியாகி என்றது.
இன்று கொள்ளையர் எம்மை பயங்கரவாதி என்கின்றனர்.
நாளைய விடுதலை எம்மை போராளிகள் என்றழைக்கும்.
தோழனே!
நீ எறிந்த குண்டை கொடு
கொள்ளையரை விரட்ட.

• லண்டனில் நடைபெற்ற தோழர் வைத்திலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா

• லண்டனில் நடைபெற்ற தோழர் வைத்திலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா
கடந்த 12.09.15 யன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் மாலை 6 மணியளவில் தோழர் வைத்திலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இலங்கை கம்யுனிஸ் கட்சி ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான காலம்சென்ற தோழர் வைத்திலிங்கம் அவர்களின் பிறந்ததின நூற்றாண்டு விழா அவரது கட்சியை சேர்ந்த குகதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அரசியல் விமர்சகர் மு. சிவலிங்கம் அவர்கள் விழாவை வழி நடத்தினார். விரிவுரையாளர் நித்தியானந்தன் நூலை வெளியிட்டு உரையாற்றினார்.
நோர்வேயில் இருந்து வந்திருந்த ஆதித்தன் ஜெயபாலன் நினைவுப் பேருரை நிகழத்தினார்.
சட்டத்தரணி பசீர் மற்றும் உரும்பராய் இந்துக்கல்லூரி , யாழ் இந்துக்கல்லூரி பிரதிநிதிகளும் உரையாற்றினார்கள்.
இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.யு குணசேகரா தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை. எனவே அவரது வாழ்த்து செய்தியை "தமிழ் ரைம்ஸ்" ஆசிரியர் இராஜநாயகம் அவர்கள் வாசித்தார்.
மூத்த ஊடகவியலாளர் மாலிங்கசிவம் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இரவு 10 மணியளவில் கூட்டம் நிறைவு பெற்றது. பல இடதுசாரி உணர்வாளர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டது சிறப்பம்சமாகும்.

லண்டனில் நடைபெற்ற மாவை சேனாதிராசாவின் இரகசிய கூட்டம்

• லண்டனில் நடைபெற்ற மாவை சேனாதிராசாவின் இரகசிய கூட்டம்
இன்று 27.09.15 மாலை 6 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் மாவை சேனாதிராசா அவர்களின் இரகசிய கூட்டம் நடைபெற்றது.
தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமான கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆச்சரியம்!
தமிழரசுக்கட்சியின் தலைவர், தமிழ் தேசியகூட்டமைப்பின் உபதலைவர், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாங்களே எனக்கூறும் மாவை சேனாதிராசா அவர்கள், லண்டன் வாழ் தமிழ் மக்களை சந்திக்கும் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தாதது ஆச்சரியமளிக்கிறது.
எரிச்சல்!
கூட்டம் 4.30 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 6 மணிக்குதான் ஆரம்பமானது. 8 மணிக்கு கூட்டம் முடிவுற்றது.
வெள்ளைக்காரனைப் பார்த்து கோட்டு சூட்டு போடும் இந்த கணவான்கள் வெள்ளைக்காரனின் பங்சுவாலிட்டியை எப்பதான் பின்பற்றப்போகிறார்களோ தெரியவில்லை.
ஏமாற்றம்!
(1) ஒரு வருடத்திற்கு தீர்வு பெற்றுத் தரப்படும் என தேர்தலின் போது சம்பந்தர் அய்யா கூறியிருந்தார். அவ்வாறு தீர்வு பெறுவதற்கு என்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்தோ அல்லது அவ்வாறு தீர்வு கிடைக்காவிடின் என்ன போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பது குறித்தோ மாவையார் தன் பேச்சில் குறிப்பிடாதது ஏமாற்றமாக இருந்தது.
(2) தமிழ் மக்கள் தங்களை நம்புவதாகவும் தாங்கள் அமெரிக்காவை நம்புவதாகவும் அவர் தன் பேச்சில் குறிப்பிடட்டார். அமெரிக்கா ஏமாற்றினால் என்ன செய்வது என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
1983க்கு முன்னர் இலுப்பம்பழம் பழுத்தால் வெளவால் வரும் என்றும் இந்திய வெளவால் வந்து உதவி செய்யும் என்று கூறிய மாவையார் தற்போது அமெரிக்க வெளவால் வரும் என்கிறார். அடுத்த தேர்தலுக்கு Nவுறு ஏதாவது வெளவாலை காட்டி பதவியை பெறுவார் போலும்.
(3) சிறையில் உள்ளவர்களின் விடுதலை, அகதிகளின் மீள் குடியேற்றம் என்பன குறித்து அரசிடம் பல முறை கேட்டுவிட்டோம். ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது நாங்கள் என்ன செய்யமுடியும்? என மாவையார் கேட்கிறார். அப்படியென்றால் அரசிடம் இது குறித்து எந்த வாக்குறுதியும் பெறாமல் ஏன் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறித்து அவர் எதுவும் கூற மறுக்கிறார்.
கோபம்!
மக்கள் துன்பத்தை அனுபவிக்கும்போது அது குறித்து எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் உலக சுற்றுலா மேற்கொள்ளும் மாவையாருக்கு ஒருவர் பொன்னாடை போர்த்தியதும் மாலை அணிவித்ததும் மிகுந்த கோபத்தை வரவழைக்கிறது. இந்த வாலுகள் லண்டனிலும் இந்த பொன்னாடை கலாச்சாரத்தை கொண்டு வநதுவிட்டார்களே!

• இந்த மாணவர்களின் தியாகம் பயனற்று போகலாமா?

• இந்த மாணவர்களின் தியாகம் பயனற்று போகலாமா?
இந்த மாணவர்கள்
சுயநல அரசியல்வாதிகள் அல்லர்
பதவிக்காக இருப்பவர்கள் அல்லர்
ஈழத் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் அல்லர்
புலம்பெயர் தமிழர் பணத்தில் போராட்டம் நடத்துபவர்கள் அல்லர்.
இவர்கள் ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை என்கிறார்கள்.
இவர்கள் அதற்கு சர்வதேச விசாரணை கோருகிறார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
ஆனால்,
ஈழத் தமிழர்களின் தலைவர்கள் என்போர்
இனப் படுகொலைக்கு ஆதாரம் இல்லை, எனவே அது போர்க் குற்றம் என்கிறார்கள்.
சர்வதேச விசாரணை தேவையில்லை .உள்ளக விசாரணை போதும் என்கிறார்கள.;
அமெரிக்கா எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் அதனை அதரிப்போம் என்கிறார்கள்.
மாணவர்களே!
உங்கள் தியாகம் பயனற்று போகலாமா?
உங்கள் போராட்டம் முதலில் துரோகம் இழைக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு எதிராக அமையட்டும்.
உங்கள் உண்ணாவிரதம் சென்னையில் உள்ள மாவை சேனாதிராசா வீட்டின் முன்னால் இடம்பெறட்டும்.
இந்தியாவில் குடியிருந்துகொண்டு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யாவின் முகத்திரையை கிழித்தெறியுங்கள்.
கலைஞர் கருணாநிதி அவர்களே!
அமெரிக்காவுக்கு எதிராக அறிக்கை விடுமுன்னர் அமெரிக்க தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு எதிராக அறிக்கை விடுங்கள்.
இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுங்கள்.

சம்பந்தர் அய்யா அவர்களே!

• சம்பந்தர் அய்யா அவர்களே!
இந்த குழந்தைகளுக்காவது கொஞ்சம் இரக்கம் காட்டமாட்டீர்களா?
குழந்தைகள் என்றால் எந்த கல் நெஞ்சும் இரங்கும் என்பார்களே.
தமது தந்தையரை விடுதலை செய்யுமாறு இந்தக் குழந்தைகள் கெஞ்சுவது உங்களுக்கு தெரியவில்லையா?
உங்களுக்கு வாக்களித்த மக்கள் தங்கள் உறவினர்களின் விடுதலைக்கு வழி செய்வீர்கள் என்று நம்பியிருப்பது தெரியவில்லையா?
நீங்கள் எதிர்கட்சி தலைவர் பதவி எடுப்பதற்காகவா இந்த மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்?
21 வருடங்களுக்கு மேலாகவும் சிறையில் வாடுகிறார்களே, அவர்களின் விடுதலைக்கு உங்களால் ஏன் குரல் எழுப்ப முடியவில்லை.
சிறையில் உள்ளவர்களையே உங்களால் விடுதலை செய்யமுடியாவிடின் ஒருவருடத்திற்கள் இனப்பிரச்சனைக்கு எப்படி தீர்வு பெறப்போகிறீர்கள்?
நீங்கள் உங்கள் குடும்பம் குட்டிகளுடன் இந்தியாவில் சொகுசாக வாழ்கிறீர்கள். ஆனால் உங்களை நம்பிய குழந்தைகள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.
உங்களால் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க முடியாவிடினும் இந்த குழந்தைகளை சந்தித்து ஆறுதல் சொல்லவும் முடியவில்லையா?
பாடையில் போகவேண்டிய உங்களுக்கு பாராளுமன்ற பதவி எதற்கு என்று இந்த குழந்தைகள் நினைக்கு முன்னர் உங்களால் இயன்றதை தயவு செய்து செய்யுங்கள்.
குழந்தைகளின் சாபத்தை சம்பாதிக்காதீர்கள்!

• பொழிலன் அவர்களே!

• பொழிலன் அவர்களே!
வைகோ அவர்களுடன் சேர்ந்து அமெரிக்க தூரகத்தை முற்றுகையிட்டுள்ளீர்கள்.
ஏற்கனவே ஈழத் தமிழர்களுக்காக குண்டு வீசிய வழக்கில் 10 வருடம் சிறைவாசம் அனுபவித்துள்ளீர்கள்.
நீண்ட சிறைவாசத்தின் பின்னரும் எவ்வித விரக்தியும் இன்றி தொடர்ந்தும் ஈழத் தமிழர்களுக்காக போராடுகிறீர்கள்.
ஈழத் தமிழர் மீதான உங்கள் உணர்வை பாராட்டுகிறேன.மிக்க நன்றி.
ஆனால் எமது தலைவர்களான தமிழ்தேசிய கூட்டமைப்பினர் அமெரிக்க தீர்மானத்தை முழமையாக ஆதரிக்கின்றனர். ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை தாங்கள் அறிவீர்கள்.
ஈழத் தமிழர்களின் தலைவர்கள் எனப்படுவோர் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளும்போது தமிழகத்தில் இருந்து தீர்மானத்தை நீங்கள் எதிர்ப்பதை அமெரிக்கா எப்படி ஏற்றுக்கொள்ளும்?
எனவே ஈழத் தமிழர்களுக்காக உண்மையில் ஏதாவது செய்யவேண்டும் என நீங்கள் விரும்பினால் சென்னையில் சொகுசாக இருந்துகொண்டு மக்களுக்கு துரோகம் இழைக்கும் தமிழ்தேசியகூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன் ,மாவைசேனாதிராசா போன்றவர்களின் வீடுகளை முற்றகையிடுங்கள்.
ஈழ தமிழ்மக்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
இதுவே ஈழத்தமிழருக்கு நீங்கள் செய்யும் போராட்ட உதவியாக இருக்கும்.

தோழர் தமிழரசனின் அறிக்கைகள் நூலாக வெளியீடு

தோழர் தமிழரசனின் அறிக்கைகள் நூலாக வெளியீடு
எதிர்வரும் 02.10.15 யன்று காலை 11 மணியளவில் சென்னை செய்தியாளர் மன்றத்தில் தோழர் தமிழரசன் இரு அறிக்கைகள் கொண்ட நூல் தமிழ்தேசமக்கள் கட்சியினரால் வெளியிடப்படுகிறது.
சுமார் 30 அண்டுகளுக்கு முன்னர் தோழர் தமிழரசனால் தயாரிக்கப்பட்ட இரு முக்கிய ஆவணங்கள் இன்று தமிழ்தேச மக்கள் கட்சியினரால் நூலாக வெளியிடப்படுகிறது.
28 வருடங்களுக்கு முன்னர் தோழர் தமிழரசனை அடித்துக் கொன்றுவிட்டு அவரது இலட்சியங்களைக் கொன்றுவிட்டதாக கனவு கண்ட தமிழக காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் இந்த நூல் வெளியீடு நிச்சயம் பேரிடியாக அமையும்.
தோழர் தமிழரசன் ஒரு கொள்ளைக்காரன், ரயிலுக்கு குண்டு வைத்த பயங்கரவாதி, மக்களைக் கொன்ற கொலைகாரன் என்றெல்லாம் விஷம பிரச்சாரம் செய்வோரின் முகத்திரையை இந் நூல் நிச்சயம் கிழித்தெறியும்.
• ஏன் தமிழ்நாடு விடுதலை அவசியம்?
• ஏன் சாதி விடுதலை அவசியம்?
• தமிழ்நாடு விடுதலைக்கும் சாதி விடுதலைக்குமிடையிலான தொடர்பு என்ன?
போன்றவை பற்றி தோழர் தமிழரசனின் கருத்துக்களை அறிந்துகொள்ள அனைவரும் இந் நூலை வாங்கிப் படிப்பது அவசியமாகும்.
தோழர் தமிழரசன் தமிழக மக்களின் விடுதலை பற்றி மட்டுமன்றி ஈழத் தமிழரின் விடுதலை குறித்தும் சிந்தித்தவர்.
ஒரு அடிமை தனது அடிமைத் தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும் என்று எடுத்துக்கூறி தமிழக விடுதலையை முன்னெடுப்பதே ஈழ விடுதலைக்கு செய்யும் உதவியாகும் என காட்டியவர் தோழர் தமிழரசன்
எனவே தமிழக மக்கள் மட்டுமன்றி ஈழத் தமிழர்களும் தமது ஆதரவை இந் நூல் வெளியீட்டிற்கு வழங்குவது கடமையாகும்.