Wednesday, September 30, 2015

• இந்த மாணவர்களின் தியாகம் பயனற்று போகலாமா?

• இந்த மாணவர்களின் தியாகம் பயனற்று போகலாமா?
இந்த மாணவர்கள்
சுயநல அரசியல்வாதிகள் அல்லர்
பதவிக்காக இருப்பவர்கள் அல்லர்
ஈழத் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்கள் அல்லர்
புலம்பெயர் தமிழர் பணத்தில் போராட்டம் நடத்துபவர்கள் அல்லர்.
இவர்கள் ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை என்கிறார்கள்.
இவர்கள் அதற்கு சர்வதேச விசாரணை கோருகிறார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு நீதி கோரி உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
ஆனால்,
ஈழத் தமிழர்களின் தலைவர்கள் என்போர்
இனப் படுகொலைக்கு ஆதாரம் இல்லை, எனவே அது போர்க் குற்றம் என்கிறார்கள்.
சர்வதேச விசாரணை தேவையில்லை .உள்ளக விசாரணை போதும் என்கிறார்கள.;
அமெரிக்கா எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் அதனை அதரிப்போம் என்கிறார்கள்.
மாணவர்களே!
உங்கள் தியாகம் பயனற்று போகலாமா?
உங்கள் போராட்டம் முதலில் துரோகம் இழைக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு எதிராக அமையட்டும்.
உங்கள் உண்ணாவிரதம் சென்னையில் உள்ள மாவை சேனாதிராசா வீட்டின் முன்னால் இடம்பெறட்டும்.
இந்தியாவில் குடியிருந்துகொண்டு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் அய்யாவின் முகத்திரையை கிழித்தெறியுங்கள்.
கலைஞர் கருணாநிதி அவர்களே!
அமெரிக்காவுக்கு எதிராக அறிக்கை விடுமுன்னர் அமெரிக்க தீர்மானத்தை முழுமையாக ஆதரிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு எதிராக அறிக்கை விடுங்கள்.
இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுங்கள்.

No comments:

Post a Comment