Wednesday, September 30, 2015

• "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு

• "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் வெளியீடு
நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்" நூல் எதிர்வரும் 21.09.2015யன்று சென்னையில் வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் அமைந்துள்ள சிறப்புமுகாம் கொடுமைகளை இந் நூல் விபரிக்கிறது.
சிறப்புமுகாமை மூடுவதற்கும் அதில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை பெறுவதற்கும் இந் நூல் உதவிட வேண்டும் என விரும்புகிறேன்.
சிறப்புமுகாம் கொடுமைகளை விபரிக்கும் முதலாவது நூலாக இது இருக்கிறது. சிறப்புமுகாம் பற்றி மேலும் பல நூல்கள் வெளிவருவதற்கு இது வழி சமைக்கும் என நம்புகிறேன்.
ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தமிழ்தேச மக்கள் கட்சியினர் இந் நூலை வெளியிடுகின்றனர்.
அவர்களின் உணர்வுகளைப் பாராட்டுவதோடு விழா வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment