Wednesday, September 30, 2015

சென்னையில் இடம் பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு

• சென்னையில் இடம் பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு
இன்று (21.09.15) மாலை 5.30 மணிக்கு நான் எழுதிய "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" நூல் தமிழ்த்தேசியகட்சியினரால் வெளியிடப்பட்டது.
நூலை வெளியிட்ட தமிழ்தேசியகட்சி தோழர்களுக்கும் மற்றும் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு சிறப்பித்த உணர்வாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்.
எம் அனைவரின் நோக்கமும் மக்கள் மத்தியில் இச் சிறப்புமுகாம் கொடுமைகள் குறித்த செய்திகள் சென்றடைந்து அவர்கள் இவ் முகாமை மூட வழி சமைக்க வேண்டும் என்பதே!
இன்றைய நிகழ்வு எமது நோக்கம் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.
அனைத்து மக்கள் மத்தியிலும் இவ் சிறப்புமுகாம் கொடுமைகளை எடுத்துரைப்போம்!
மக்கள் விழிப்புணர்வு மூலம் இவ் கொடிய முகாமை மூட வழி செய்வோம்!

No comments:

Post a Comment