Wednesday, September 30, 2015

தமிழக அரசே! தோழர் பொழிலனை உடனே விடுதலை செய்!

• தமிழக அரசே!
தோழர் பொழிலனை உடனே விடுதலை செய்!
பன்னாட்டு முதலாளியத்தை வளர்க்கும் முதலீட்டாளர் மாநாட்டை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய தோழர் பொழிலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தோழர் பொழிலன் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கொடைக்கானல் டிவி டவர் தகர்ப்பு வழக்கில் பத்து வருடம் சிறை வைக்கப்பட்டவர்.
தமிழக மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வரும் தோழர் பொழிலன் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
தோழர் பொழிலன் உடனே விடுதலை செய்யப்படல் வேண்டும்.
நிலத்தடி நீரை லிட்டர் 40 பைசாவுக்கு முதலீட்டாளர்களுக்கு விற்று அதை மீண்டும் 20 ரூபாய்க்கு வாங்கும் முட்டாள்தன நாடாக தமிழ்நாடு விளங்குகிறது. அதனால்தான் முதலீட்டிற்கு சிறந்த இடமாக இந்தியாவில் தமிழ்நாடு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதனை பொழிலன் கண்டிப்பது தவறா?
நோகியா - பாக்ஸ்கான் போல 24000 கோடி வரி ஏய்ப்பு மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலையில்லாமல் தவிக்க விட்டு ஒடத் தான் பல பன்னாட்டு முதலாளிகள் பங்கேற்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை தமிழக அரசு நடத்துகிறதா? இதனை பொழிலன் தட்டிக் கேட்பது தவறா?
சமூக அக்கறை உள்ளவர்களே!
பன்னாட்டு முதலாளியத்திற்கு எதிராக பன்னாட்டு தொழிலாளர்களை ஒன்று திரட்டுவோம்!

No comments:

Post a Comment