Wednesday, September 30, 2015

தமிழக அரசே! "எம்மை குடும்பத்துடன் வாழ விடு. இல்லையேல் கருணை கொலை செய்துவிடு"

• தமிழக அரசே!
"எம்மை குடும்பத்துடன் வாழ விடு. இல்லையேல் கருணை கொலை செய்துவிடு"
திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் நால்வர் தங்களை விடுதலை செய்யும்படியும் இல்லையேல் கருணைக்கொலை செய்துவிடுமாறும் கோரியுள்ளனர்.
கடந்தமாதம் ஒரு அகதி தம்பதியினர் சிறப்புமுகாம் கொடுமைகள் தாங்கமுடியாமல் தற்கொலை முயற்சி மேற்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் நால்வர் தாங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் தமது குடும்பம் சீரழிந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். எனவே தங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது தங்களை கருணைக் கொலையாவது செய்யுங்கள் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
வழக்கம்போல் தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருக்கிறது. தமிழக அரசின் இக் கொடுமைகளை தமிழக அரசியல் தலைவர்களும் கண்டிக்காதது வருத்தமளிக்கிறது.
"ஈழத்தாய்" ஜெயா அம்மையார் அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து சித்திரவதை செய்கிறார். "உலக தமிழின தலைவர்" கலைஞர் கருணாநிதி இது குறித்து ஒரு கண்டன அறிக்கைகூட விட மறுக்கிறார்.
இந்த இரு தமிழ் தலைவர்களும் ஈழத் தமிழர்களுக்கு தமிழீழம் பெற்று தருவார்கள் என இப்பவும் சிலர் எம்மை நம்பும்படி கூறுவதுதான் ஆச்சரியமாக இருக்கிறது !

No comments:

Post a Comment