Monday, December 30, 2019

நாம் என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை

நாம்
என்ன ஆயுதம் ஏந்த வேண்டும் என்பதை
எமது எதிரியே தீர்மானிக்கிறான் !
இந்தியா ஜனநாக நாடு என்கிறார்கள்
இங்கு மக்கள் அகிம்சை வழியில் போராட முடியும் என்கிறார்கள்
ஆனால் அகிம்சை வழியில் போராடிய 15 மக்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளார்கள்.
பல நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
என்றுமில்லாதவாறு தனது சொந்த மக்களையே இந்திய அரசு ஈவு இரக்கமின்றி கொல்கிறது.
அரச வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு மக்களின் போராட்டத்தை அடக்க அரசு முயல்கிறது.
சர்வாதிகாரி ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டார்
சர்வாதிகாரி முசோலினி மக்களால் கட்டி தொங்கவிடப்பட்டார்
இந்த வரலாற்றை மோடியும் அமித்ஷாவும் நினைவில் கொள்வது நல்லது.

சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது

சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது, ‘வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது’ என்று கூறி அதனைக் கொண்டாடியவர்கள், இப்போது முதலாளித்துவமே சிறந்த முறை என்று உயர்த்திப்பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
முதலாளித்துவ உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவது அதிகரித்து வருவதும், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள ஏற்றத்தாழ்வுகளும் அதிகரித்து வருவதும், முதலாளித்துவ அமைப்பின் குரூர முகத்தை மிகத் தெளிவாகக் காட்டத் துவங்கியுள்ளன.
நெருக்கடிகள் எற்படும்போது புதிய கண்டு பிடிப்புகள் மூலம் முதலாளித்துவம் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்றார்கள். ஆனால் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் மிகப் பெரிய வங்கிகளே திவாலாகிக் கொண்டிருக்கின்றன.
இவ் முதலாளித்தவ நெருக்கடிக்கு மாக்சியமே சிறந்த தீர்வை முன்வைக்கிறது என்று உறுதியாக கூறமுடியாது என்பது உண்மைதான். ஆனால் உலகில் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வுகளில் மார்க்சியத்தை விட சிறந்த தீர்வு வேறு எதுவும் இல்லை என்பதும் உண்மையே.
முதலாளித்துவத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் வல்லரசு நாடான பிரிட்டனிலேயே முதலாளித்தவத்தின் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் அரசு தினறுகிறது.
இனவாதம், மதவாதம் போன்றவற்றை முன்வைத்து மக்களின் கவனத்தை திசை திருப்ப உலகெங்கும் உள்ள பிற்போக்கு அரசுகள் முயலுகின்றன. ஆனால் இதன் மூலம் அதிகரித்துவரும் முதலாளித்துவ நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது

குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது
அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே?
குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை?
அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை.
குழந்தை- ஏன் வேலை போய்விட்டது?
அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள்.
மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது.
இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர்.
சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும்.
இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது. இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை.
பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது.
ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும். அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும்.
எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்க முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார்.
உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர்.
ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

•கோழிகளால் தன் குஞ்சுகளை

•கோழிகளால் தன் குஞ்சுகளை
எப்படி பாதுகாக்க முடிகிறது?
தன் குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால் எதிரி எந்தளவு பெரியது என்றாலும் கோழி போராட தயங்குவதில்லை
ஏனென்றால் போராடினால் மட்டுமே உயிர் தப்ப முடியும் என்பதைத் தவிர வேறு எதுவும் அதற்கு தெரியாது.
அதுமட்டுமல்ல,
•குஞ்சுகளைக் காப்பாற்ற போராடுவது பயங்கரவாதம் என்று யாரும் அதற்கு கூறுவதில்லை.
•அகிம்சை வழியில் போராடினால் குஞ்சுகளைக் காப்பாற்றலாம் என யாரும் ஏமாற்றுவதில்லை.
•இதெல்லாம் போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவு என்று யாரும் போதிப்பதில்லை
.
•எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அழிப்பது போர்க்குற்றமா? அல்லது இனப்படுகொலையா? என்று ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை.
கோழிகளால் தம் குஞ்சுகளை போராடி பாதுகாக்க முடிகிறது. ஆனால் தமிழனால் தன் இனத்தை பாதுகாக்க முடியவில்லை.
தமிழனும் ஒருவேளை கோழியாக பிறந்திருந்தால் தன் இனத்தை காக்க போராடியிருப்பானோ?

பெண்களை “சைட்” அடிப்பதற்காகவே

பெண்களை “சைட்” அடிப்பதற்காகவே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக நகைச்சுவை நடிகர் Y.G.மகேந்திரன் கூறியுள்ளார்.
இவர் இந்த நகைச்சுவையை தன் படங்களில் கூறி நடித்திருந்தால் சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற பெயரையாவது பெற்றிருக்கலாம்.
அகதிமுகாமில் இருக்கும் ஈழ அகதிகளை சந்தித்து பேசியதற்காக கம்யுனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஸணன் மீது தமிழக அரசு வழக்கு போட்டுள்ளது.
ஒரு கட்சியின் மாநில செயலரே ஈழ அகதிகளை சந்தித்து பேச முடியாத நிலையிலேதான் ஈழ அகதிகள் இந்தியாவில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்காத நடிகர் மகேந்திரன் இதற்காக போராடும் மாணவர்களை கொச்சைப்படுத்தி அறிக்கை விடுகிறார்.
கனடாவில் அகதியாக சென்ற ஈழ அகதி ஹரிஆனந்தசங்கரி என்பவர் அந்த நாட்டில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் இந்தியாவில் 30 வருடமாக இருக்கும் ஈழஅகதிகளை ஒரு பாராளுமன்ற கட்சிகூட சந்தித்து பேச முடியாத நிலையில் உள்ளனர்.
இந்த கொடுமைக்கு எதிராக ஒரு தமிழன் என்ற ரீதியில் குரல் எழுப்பாவிட்டாலும் மனிதாபிமான ரீதியிலாவது மகேந்திரன் குரல் கொடுத்திருக்கலாம் அல்லவா?
அவருடைய ரத்தத்தில் இன உணர்வு இல்லாமல் இருக்கலாம். மனிதாபிமான உணர்வுகூடவா இல்லாமல் இருக்கிறது?
சரி. பரவாயில்லை. இந்தியாவில் பாலியல் வழக்கில் தண்டனை பெற்றவர்களில் 60 வீதமானவர்கள் சங்கிகள் என்பதாவது நடிகர் மகேந்திரனுக்கு தெரியுமா?
குறிப்பு - கீழே உள்ள படம் நடிகர் மகேந்திரனின் மாணவர் ஒருவர் காஞ்சிபுரத்தில் கோயிலுக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டது.

அவுஸ்ரேலியாவில் இருக்கும் ஈழத் தமிழர் ஒருவர்

அவுஸ்ரேலியாவில் இருக்கும் ஈழத் தமிழர் ஒருவர் எனக்கு போன் செய்து சார்ல்ஸ், துவாரகா, பாலச்சந்திரன் பிறந்து விட்டார்கள் என்றார்.
எனக்கு புரியவில்லை. ஏனெனில் இவைகள் பிரபாகரன் பிள்ளைகளின் பெயர்கள். எனவே அவர்கள் எப்படி பிறக்க முடியும் என நினைத்தேன்.
தான் மருத்துவமனையில் இருந்து பேசுவதாகவும் தமது மனைவி ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்திருப்பதாக கூறினார்.
அவர் எனது உறவினரும் இல்லை. அவர் எனது நண்பரும் இல்லை. ஆனாலும் அவர் எனக்கே முதலில் போன் செய்து கூறியது ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தது.
மறுபுறம் பிரபாகரனின் குழந்தைகள் பிறந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் அவர் கூறியது அதைவிட ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் பிரபாகரன் பயங்கரவாதி. ஆகவே அவர் குழந்தைகளும் பயங்கரவாதிகள் என்று கூறி அவர்கள் அனைவரையும் இலங்கை அரசு கொன்றுள்ள நிலையில் ஒரு ஈழத் தமிழர் தமது குடும்பத்தில் அவர்கள் பிறந்து விட்டார்கள் என்று மகிழ்வுடன் நினைக்கிறார் அல்லவா.
இதையும்விட ஆச்சரியம் என்னவெனில் புலிகள் பயங்கரவாத இயக்கம் என்று இந்திய அரசு தொடர்ந்து தடை செய்து வருகிறது.
ஆனால் அதே இந்தியாவில் தமிழ் மக்கள் பிரபாகரன் படத்திற்கு முன்னால் திருமணம் செய்வது, தமது குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைப்பது, தமது உடல்களில் பிரபாகரன் படத்தை பச்சை குத்துவது, தமது கடைகளுக்கு பிரபாகரன் பெயர் வைப்பது, தமது வாகனங்களில் பிரபாகரன் படம் வைப்பது என்று அனைத்து வழிகளிலும் பிரபாகரனைக் கொண்டாடி வருகிறார்கள்.

மக்கள் வெள்ளத்தில் மூழ்கிறார்கள்.

மக்கள் வெள்ளத்தில் மூழ்கிறார்கள்.
எமது அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.
மக்களை எப்படி காப்பாற்றுவது என்று அவர்கள் ஆழ்ந்து சிந்திக்கிறார்கள் என்று நம்புவோம்.
ஆனால் எமது புதிய ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆம். இனி யாரும் சுவர்களில் பிரசுரம் ஒட்டக்கூடாது என்று கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அட பிக்காலிப் பயலே. வெள்ளத்திற்கும் பிரசுரம் ஒட்டாமல் விடுவதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டுவிடாதீர்கள்.
ஏனெனில் இதுதான் இப்ப இலங்கை அரசியல்.

மாபெரும் ஆசான் தோழர் மாவோ

மாபெரும் ஆசான் தோழர் மாவோ அவர்களின் பிறந்த தினம்(26.12.2019)
மாபெரும் மாக்சிய ஆசான்களில் ஒருவரும் சீனப்புரட்சியின் தலைவருமாகிய தோழர் மாசேதுங் அவர்களின் 126வது பிறந்த நாள் உலகெங்கும் நினைவு கூரப்படுகிறது.
தூங்கும் பூதம் என வர்ணிக்கப்பட்ட சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி மூலம் விடிவை ஏற்படுத்திய மாபெரும் தலைவர் அவர்.
ரஸ்சியாவில் குருசேவ் கும்பலால் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்ட ஆபத்தை சீனாவிலும் எதிர்வு கூறி அதை தடுக்கப் பல கலாச்சாரப் புரட்சிகள் நடக்க வேண்டும் எனக் கூறியவர் தோழர் மாவோ அவர்கள்.
தோழர் ஸ்டாலினுக்கு எதிராக குருசேவ் கும்பல் வைத்த குற்றச்சாட்டுகளை மாபெரும் விவாதம் மூலம் தோற்கடித்து சர்வதேச ரீதியில் ஸ்டாலினையும் மாக்சியத்தையும் காப்பாற்றியவர்.
மாக்சியம் லெனிசத்தை அடுத்து மாவோ சிந்தனைகள் மூலம் மாக்சியத்தை வளர்த்தெடுத்தவர்.
சீனாவில் மாவோ மறைவுக்கு பின்னர் டெங்சியாபிங் கும்பல்களால் முதலாளித்துவம் மீண்டும் ஆட்சி பீடம் ஏறினாலும் அவர்களால் இன்று வரை மக்கள் மனங்களில் இருந்து மாவோ புகழை நீக்க முடியவில்லை.
சீனாவில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மாவோ சிந்தனைகள் வழங்கிய மகத்தான பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.
குறிப்பாக ஜரோப்பாவில் இருந்து வைக்கப்பட்ட எதிர்ப்புரட்சிகர தத்துவமாகிய பின்நவீனத்துவத்திற்கு எதிராக மாவோசிசத்தின் பங்களிப்பு மகத்தானது.
மாக்சிச லெனிசிச மாவோ சிந்தனையில்
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

•ஈழத் தமிழர்கள் மீதான இந்திய அரசின் அக்கறை?

•ஈழத் தமிழர்கள் மீதான இந்திய அரசின் அக்கறை?
இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் இலங்கை திரும்பிச் செல்ல வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இதே கருத்தையே பாஜக வின் தமிழக தலைவர்களான எச்ச.ராசா மற்றும் வானதி சீனிவாசன் போன்றவர்களும் கூறியுள்ளனர்.
ஒருபுறம் இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என சட்டம் கொண்டு வந்திருக்கும் பாஜக மறுபுறம் இந்து அகதிகளான ஈழத் தமிழ் அகதிகள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறுகின்றது.
மராட்டிய தலைவரான சரத்பவார் கூட இந்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டது என்று கூறியுள்ளார்.
மேற்குவங்க முதல்வர் கேரள முதல்வர் போன்றவர்களும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனக் கோருகின்றனர்.
ஆனால் தமிழர்களான, தமிழக பாஜக தலைவர்கள் “ஈழத் தமிழ் அகதிகள் இலங்கை திரும்பிச் செல்ல வேண்டும்” என்று கொஞ்சம்கூட இரக்கம் இன்றி கூறுகின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்கினால் அப்புறம் இலங்கையில் உள்ள தமிழர்களை எல்லாம் இலங்கை அரசு விரட்டி அடித்துவிடுமாம்.
இவர்கள் உண்மையில் லூசா அல்லது லூசு மாதிரி பேசுறாங்களா என்று தெரியவில்லை.
இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். ஆனால் கனடா, லண்டன் போன்ற நாடுகளில் சுமார் ஆறு லட்சம் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் இவர்களுக்கு தெரியுமா?
சரி. பரவாயில்லை. நாட்டில் அமைதி ஏற்படாமல் ஒரு அகதியை திருப்பி அனுப்பக்கூடாது என்ற உலக நடைமுறையாவது இவர்களுக்கு தெரியுமா?
உண்மையில் இவர்களுக்கு ஈழத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் முதலில் அகதிகள் திரும்பிப் போவதற்கான அமைதியான சூழ்நிpலையை இலங்கையில் உருவாக்கி கொடுக்க வேண்டும் அல்லவா?
தமிழ் மக்களுக்கு தீர்வு கொடுக்க மாட்டேன் என்று இலங்கை ஜனாதிபதி கோத்தா இந்தியாவில் வைத்தே கூறியுள்ளார். ஆனால் இதுவரையில் இந்த தலைவர்களில் ஒருவர்கூட அதைக் கண்டிக்கவில்லை.
அதுமட்டுமல்ல இனி தமிழில் தேசியகீதம் பாடக்கூடாது என இந்த ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அகதிகள் எந்த நம்பிக்கையில் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியும்?
அதனால்தானே தங்களுக்கு குடியுரிமை தாருங்கள் அல்லது கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள் என்று ஈழ அகதிகள் மனுக் கொடுத்துள்ளனர்.
இல கணேசன் எதிர்க்கட்சியாக இருந்தபோது ஈழத் தமழர்களுக்கு ஆதரவாக பல போராட்டங்களில் பங்குபற்றியவர். ஆதரவான கருத்துகள் தெரிவித்தவர்.
அவரே இன்று ஆளும்கட்சியாக மாறியவுடன் ஈழத் தமிழருக்கு எதிராக குரல் கொடுப்பது ஆச்சரியமாக மட்டுமல்ல அதிர்சியாகவும் இருக்கிறது.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாக தெரிகிறது. காங்கிரசாக இருந்தாலும் சரி பாஜக வும் சரி. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழருக்கு எதிராகவே செயற்படுகின்றன. ஈழத் தமிழர் மீதான இந்திய அரசின் அக்கறை என்பது இதுதான்.

•இந்திய உளவு (பாகம்-2)

•இந்திய உளவு (பாகம்-2)
1983ல் ஈழத் தமிழர்கள் மத்தியில் முப்பத்தைந்து விடுதலை இயக்கங்கள் இருந்ததை நான் அறிந்திருக்கிறேன்.
ஆனால் முப்பத்தாறாவது இயக்கமாக இந்திய உளவுப்படையால் ஒரு இயக்கம் இருந்ததை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.
ரெலோ (TELO ) இயக்கத்தைச் சேர்ந்த சோதிலிங்கம் என்பவர் தனது சிறை அனுபவங்கள் தொடர்பாக ஒரு நூல் எழுதியுள்ளார்.
அதில், இந்தியாவுக்கு அகதியாக சென்ற சில ஈழத் தமிழர்களை இந்திய உளவுத்துறையானது இயக்கமாக ஒன்று சேர்த்து உளவு பார்ப்பதற்காக இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
அவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் யாவரையும் இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்துவிட்டதாகவும் அவர்களை தான் சிறையில் சந்தித்தாகவும் அவர் எழுதியிருக்கிறார்.
இந்த செய்தியின் உண்மைத் தன்மையை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. ஏனெனில் சோதிலிங்கத்தைத்தவிர வேறுயாரும் இச் செய்தி பற்றி இதுவரை கூறியதாக நான் அறியவில்லை.
ஆனால் 1991ற்கு பின்னர் இந்திய உளவுப்படையானது பல வழிகளில் இலங்கையில் ஊடுருவியது. புலிகளை அழிக்க முனைந்தது என்பது குறித்து பலர் இன்று பல விடயங்களை தெரிவிக்கிறார்கள்.
நான் 1992ல் வேலுர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டவேளை அங்கு 60 புலிப் போராளிகளும் வைக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் பெரும்பாலும் கால்களை இழந்தவர்கள், கைகளை இழந்தவர்கள், கண்களை இழந்தவர்கள் என மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது கைது செய்யப்பட்டவர்கள்
அதில் ஒருவர் எஞ்சினியர் என்பவர். (இவர் மாத்தையாவின் டிறைவராக இருந்தவர் என்கிறார்கள்). இவருக்கு மட்டும் திடீரென்று இந்திய அரசு விடுதலை உத்தரவு வழங்கியது.
புலிப் போராளிகளில் ஒருவருக்கு மட்டும் அதுவும் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு திடீரென்று இந்திய அரசு விடுதலை உத்தரவு வழங்கியது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்தது.
அங்கிருந்தவர்களுக்கு நாட்டில் உள்ள புலித் தலைமையுடன் நேரடி தொடர்பு இருக்கவில்லை. பற்பொடி வாங்கக்கூட பணம் இன்றி செங்கட்டிக் கல்லை உடைத்து பல் தேய்த்து வந்தார்கள்.
இந்நிலையில் எஞ்சினியருக்கு விடுதலை கிடைத்ததோடு அவருக்கு விமான டிக்கட் எடுக்கவும் எப்படி பணம் கிடைத்தது என்று அங்கிருந்த புலிப் போராளிகளுக்கே ஆச்சரியமாக இருந்தது.
இங்கு எல்லாவற்றையும்விட ஆச்சரியம் என்னவெனில் எஞ்சினியர் விடுதலை செயப்பட்ட அன்று காலை மாவட்ட கலக்டரே சிறப்புமுகாமுக்கு வந்து அவரை தன் காரில் அழைத்துச் சென்று காலை உணவு கொடுத்து பயணம் அனுப்பியது.
இது இந்திய உளவுப்படையில் செயல் என்பது அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது. ஆனால் எதற்காக இந்திய உளவுப்படை இப்படி செய்கிறது என்பதை அப்போது யாராலும் தெரிந்துகொள்ள முடியவில்லை.
ஆனால் ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னர் இந்திய அரசு தான் சட்ட ரீதியாக நடப்பதாக காட்டிக்கொண்டாலும் அதன் உளவுப்படையானது சட்டவிரோதமாக பிரபாகரனையும் பொட்டு அம்மானையும் கொல்வதற்கு பல வழிகளில் முயற்சி செய்திருக்கிறது.
இஸ்ரவேலின் மொசாட் பாணிpயில் திடீரென்று ஒரு கமாண்டோ படையை வன்னிக்குள் இறக்கி பிரபாகரனை கைது செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் அது முடியவில்லை.
கைது செய்யாவிட்டாலும் பரவாயில்லை. குண்டு போட்டாவது அழிக்க முடியுமா என்றும் முயற்சி செய்திருக்கிறார்கள். அதற்கும் அவர்களால் பிரபாகரனின் இருப்பிடத்தை அறிய முடியவில்லை.
இங்குதான் பொட்டு அம்மானின் திறமையை நாம் வியக்காமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் இந்திய உளவுப்படை எடுத்த அனைத்து முயற்சிகளையும் அறிந்து அதனை முறியடித்து பிரபாகரனை காப்பாற்றியதில் பொட:;டு அம்மானுக்கு பெரும் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்திய உளவுப்படையானது தனது உளவு வேலைகளுக்;காக இந்திய தமிழரை பயன்படுத்தியதோடு அந்த இந்திய தமிழர் தம்மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக ஈழத் தமிழ் பெண்களை திருமணம்கூட செய்திருக்கின்றனர்.
இன்று இந்த செய்திகள் ஆச்சரியம் தராமல் இருக்கலாம். ஆனால் இன்றும் ஆச்சரியம் தருவது என்னவெனில் 1992ல் இதை எப்படி பொட்டு அம்மான் கண்டு பிடித்து முறியடித்தார் என்பதே.
வன்னியில் பிரபாகரன் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிற்கு சென்றுவந்த என் நண்பர் “இந்தியாவில் இருந்து வந்த பத்திரிகையாளர்களை புலிகள் கடுமையாக பரிசோதனை செய்தார்கள். அவர்களின் தலை மயிரைக்கூட பிடித்துப் பார்த்தார்கள்” என்று கூறினார்.
இதைக் கேட்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இப்போதுதான் புரிகிறது பொட்டு அம்மான் எந்தளவு எச்சரிக்கையாக இருந்திருக்கிறார் என்று.
உண்மைதான். ஜேவிபி இயக்கத்தின் தலைமையை ஒரு தோட்டாகூட செலவு செய்யாமல் கைது செய்ய முடிந்த இலங்கை அரசால் புலிகளின் தலைமையை அவ்வாறு கைது செய்ய முடியவில்லையே.
இதற்கு தமிழ் மக்களின் ஆதரவு புலிகளுக்கு இருந்தது என்பது காரணம் என்றாலும் அதுமட்டுமன்றி புலிகளின் புலனாய்வுபிரிவின் திறமையும் அதற்கான பொட்டு அம்மானின் பங்களிப்பும் இருந்திருக்கிறது என்பதும் உண்மைதான்.
(இன்னும் வரும்)