Saturday, December 21, 2019

தமிழக அரசு தமிழர்களின் அரசு என்கிறார்கள்

தமிழக அரசு தமிழர்களின் அரசு என்கிறார்கள்
தமிழக முதல்வரும்கூட தமிழர்தான் என்கிறார்கள்
ஆனால் கேரள மலையாள முதல்வருக்கு இருக்கும் அக்கறைகூட
தமிழக முதல்வருக்கு ஈழத் தமிழ் அகதிகள் மீது இல்லையே?
அது ஏன்?
தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆட்சி செய்தால் தமிழருக்கு அனைத்தும் கிடைக்கும் என்றார்களே?
அப்படியென்றால் ஏன் இப்போது கிடைக்கவில்லை?
என்ன காரணம்?
குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அசாம் மணிப்பூர் எல்லாம் தீப்பற்றி எரிகிறதே
ஆனால் தமிழகம் மட்டும் அமைதியாக இருக்கிறதே?
ஏன் தமிழகம் கொந்தளிக்கவில்லை?
ஈழ தமிழ் அகதிகளை “இந்து” இல்லை என்று இந்திய அரசு நினைப்பதுபோல் ஈழ அகதிகளை தமிழர் இல்லை என்று தமிழகம் நினைக்கிறதா?

No comments:

Post a Comment