Monday, December 30, 2019

அவுஸ்ரேலியாவில் இருக்கும் ஈழத் தமிழர் ஒருவர்

அவுஸ்ரேலியாவில் இருக்கும் ஈழத் தமிழர் ஒருவர் எனக்கு போன் செய்து சார்ல்ஸ், துவாரகா, பாலச்சந்திரன் பிறந்து விட்டார்கள் என்றார்.
எனக்கு புரியவில்லை. ஏனெனில் இவைகள் பிரபாகரன் பிள்ளைகளின் பெயர்கள். எனவே அவர்கள் எப்படி பிறக்க முடியும் என நினைத்தேன்.
தான் மருத்துவமனையில் இருந்து பேசுவதாகவும் தமது மனைவி ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்திருப்பதாக கூறினார்.
அவர் எனது உறவினரும் இல்லை. அவர் எனது நண்பரும் இல்லை. ஆனாலும் அவர் எனக்கே முதலில் போன் செய்து கூறியது ஒருபுறம் ஆச்சரியமாக இருந்தது.
மறுபுறம் பிரபாகரனின் குழந்தைகள் பிறந்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் அவர் கூறியது அதைவிட ஆச்சரியமாக இருந்தது.
ஏனெனில் பிரபாகரன் பயங்கரவாதி. ஆகவே அவர் குழந்தைகளும் பயங்கரவாதிகள் என்று கூறி அவர்கள் அனைவரையும் இலங்கை அரசு கொன்றுள்ள நிலையில் ஒரு ஈழத் தமிழர் தமது குடும்பத்தில் அவர்கள் பிறந்து விட்டார்கள் என்று மகிழ்வுடன் நினைக்கிறார் அல்லவா.
இதையும்விட ஆச்சரியம் என்னவெனில் புலிகள் பயங்கரவாத இயக்கம் என்று இந்திய அரசு தொடர்ந்து தடை செய்து வருகிறது.
ஆனால் அதே இந்தியாவில் தமிழ் மக்கள் பிரபாகரன் படத்திற்கு முன்னால் திருமணம் செய்வது, தமது குழந்தைகளுக்கு பிரபாகரன் என்று பெயர் வைப்பது, தமது உடல்களில் பிரபாகரன் படத்தை பச்சை குத்துவது, தமது கடைகளுக்கு பிரபாகரன் பெயர் வைப்பது, தமது வாகனங்களில் பிரபாகரன் படம் வைப்பது என்று அனைத்து வழிகளிலும் பிரபாகரனைக் கொண்டாடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment