Saturday, December 21, 2019

பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது!

பரிசுத்த ஆவியில் கொழுக்கட்டை வேகவைக்க முடியாது!
இந்து தமிழீழம் கேட்டால் இந்தியா உதவி செய்யும் என்ற முட்டாள்தனமான பேச்சுக்களை இனி காசிஆனந்தன் ஐயா நிறுத்திக் கொள்ள வேண்டும்.
30 வருடமாக இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் இந்துக்கள்தான். ஆனாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கும் இந்திய அரசு எப்படி இந்துத் தமிழீழத்திற்கு உதவும் என்று காசி ஆனந்தன் ஐயா நம்புகிறார்?
இந்தியாவில் இருப்பதால் தவிர்க்க முடியாமல் இந்திய அரசுக்கு ஆதரவான கருத்துகளை கூறுகிறார் என இத்தனை நாளும் நினைத்திருந்தோம்.
ஆனால் அவரது இந்திய விசுவாசம் காரணமாகவே இந்தியாவில் தொடர்ந்தும் இருக்கிறார் என்பதை இப்போது உணர முடிகிறது.
தனது தனிப்பட்ட நலன்களுக்காக அவர் இந்திய அரசு மீது தாராமாக விசுவாசம் காட்டட்டும்.
ஆனால் இந்துத் தமிழீழம் கேட்டால் இந்தியா உதவும் என்று தமிழ் மக்களை ஏமாற்ற முயல வேண்டாம்.
இந்திய அரசினால் ஈழத் தமிழருக்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்பதை அவர் இனியாவது உணர வேண்டும்.

No comments:

Post a Comment