Saturday, December 21, 2019

இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் அனைவரும் திரும்பி வர வேண்டும் - சுமந்திரன்

செய்தி - இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் அனைவரும் திரும்பி வர வேண்டும் - சுமந்திரன்
சிங்கள பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பில் இருக்கும் சுமந்திரனுக்கு அகதிகளை திரும்பி வரும்படி கூறுவதற்கு தார்மீக தகுதி உண்டா?
இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் தங்களுக்கு குடியுரிமை வேண்டும் என்று கோருகின்றனர்.
அதேபோன்று ஈழ அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் யாவும் போராட்டம் நடத்துகின்றன.
ஆனால் சுமந்திரன் கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் ஈழ அகதிகள் திரும்பி வரவேண்டும் என்று இந்திய அரசுக்கு விசுவாசமாக அறிக்கை விடுகிறார்.
என்ன செய்வது? இதெல்லாம் தமிழன் தலைவிதி என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

No comments:

Post a Comment