Saturday, December 21, 2019

• தீ பரவட்டும் !

• தீ பரவட்டும் !
குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம் இந்தியா எங்கும் நடைபெறுகிறது.
நேற்றைய தினம் மங்களுரில் இருவர் பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்று உத்தரப் பிரதேசத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். நேற்றும் ஒருவர் இதே உத்தரப் பிரதேசத்தில் கொல்லப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ளது. எற்கனவே வட இந்திய மாநிலங்களில் இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
பல பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
போராட்டம் மேலும் பரவும் என்ற அச்சத்தில் தமிழக அரசு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
அமெரிக்கா லண்டன் போன்ற நாடுகள் இந்தியாவுக்கு செல்வது பாதுகாப்பற்றது என்று தமது உல்லாச பயணிகளுக்கு அறிவித்துள்ளன.
இந்திய அரசு தனது சொந்த மக்கள் மீதே வன்முறையை ஏவி விட்டுள்ளது.
ஆயினும் நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் அதிகரித்துச் செல்கிறது.
தீ பரவட்டும்
மக்கள் போராட்டம் வெற்றி பெறட்டும்

No comments:

Post a Comment