Saturday, December 21, 2019

•இன்று மனிதவுரிமை தினமாம்?

•இன்று மனிதவுரிமை தினமாம்?
போர் முடிந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன.
போர் முடிந்த பின் சரணடைந்த இவர்களுக்கு என்ன நடந்தது என்றே இன்று வரை தெரியவில்லை.
இறந்தவர்கள் பட்டியலில் சேர்ப்பதா அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ப்பதா என்றும் தெரியவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 3 வருடங்களாக வீதியில் உட்கார்ந்து போராட்டம் நடத்துகின்றனர்.
தமிழ் மக்களுக்கு பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பல கட்சிகள் இருக்கின்றன. பல தலைவர்கள்;கூட இருக்கிறார்கள்.
ஆனால் இவர்களால்கூட இந்த காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.
ஆயுதம் ஏந்திப் போராடியதாலே எந்த தீர்வையும் தமிழ் மக்களால் பெற முடியவில்லை என்று கூறும் சம்பந்தர் ஐயா கூட 3 வருடங்களாக அறவழியில் போராடும் இந்த மக்களுக்கு ஒரு தீர்வை பெற்று தர முடியவில்லை.
இந்நிலையில் புதிய ஜனாதிபதி கோத்தாவுக்கு தாங்கள் "அழுத்தம் கொடுப்போம்" என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
கடந்த ஜந்து வருடமாக நல்லாட்சி அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். அதுபோன்று இனி கோத்தா அரசுக்கு அழுத்தம் கொடுக்கப் போகிறாராம்.
தமக்கு பதவி மற்றும் சொகுசு பங்களாக்கள் பெறுவதுதான் அழுத்தம் என்று இவர் நினைக்கிறாரா?
பரவாயில்லை. சுமந்திரன் அவர்களே! ரொம்ப அழுத்தியிடாதீங்க. அப்புறம் கோத்தாவுக்கு வலிக்கப் போகுது.

No comments:

Post a Comment