Monday, October 26, 2020

இன்று சர்வதேச சிறுவர்கள் தினம்

•இன்று சர்வதேச சிறுவர்கள் தினம் சரணடைய சொன்னார்கள் சரணடைந்தேன் பெஞ்சில் உட்காரச் சொன்னார்கள் உட்கார்ந்தேன் சாப்பிட பிஸ்கட் தந்தார்கள் சாப்பிட்டேன் அப்புறம் பார்த்தா சுட்டுக் கொன்றார்கள் இறந்துவிட்டேன். பரவாயில்லை. ஆனால் ஒரு கேள்வி என்னை ஏன் சுட்டுக் கொன்றார்கள் ? ஏனென்றால் என் அப்பா பயங்கரவாதியாம். எனவே நானும் பயங்கரவாதி என்கிறார்கள் சரி. அப்படியென்றால் , ஜேவிபி விஜேயவீராவை பயங்கரவாதி என்று கொன்றீர்கள் ஆனால் அவர் பிள்ளைகளை பயங்கரவாதி என்று ஏன் கொல்லவில்லை? ஏனென்றால் அவர் சிங்களவர் இப்போது புரிகிறதா ? நடந்தது இனப்படுகொலை என்று! குறிப்பு - இவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்குரிய நீதியை எப்போது, எப்படி பெற்றுக் கொடுக்கப் போகிறோம்?

பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்ட

பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்ட உயிரிழந்த மனிஷா வால்மிகி குடும்பத்தினரை சந்திக்க ராகுல் காந்தியும், பிரியங்காவும் இன்று சென்றுள்ளனர் ஆனால் யமுனா துரித சாலையில் அவர்களது வாகனங்கள் உத்திரபிரதேச போலிசாரில் தடுத்து நிறுத்தப்பட்டு , வாகனப்பயணம் தொடர அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இருவரும் 100 கி.மீ தொலைவிற்கு நடந்தே செல்ல முடிவெடுத்து கால்நடையாக பயணத்தை தொடர்ந்தனர். அப்போது உத்திரபிரதேச போலிசார் தன்னை கீழே தள்ளி , லத்தியால் அடித்ததாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார் . அதேவேளை நடந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டு, ராகுலும் , பிரியங்காவும் இப்போது உத்திரபிரதேச போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலித் தலைவர்களே வெறுமனே அஞ்சலி அறிக்கை விட்டிட்டு மௌனமாக இருக்கும்போது ராகுல்; ஒரு தலித் பெண்ணிற்காக இந்தளவு தூரம் வந்திருப்பது பாராட்டப்பட வேண்டியது. ராகுலும் பிரியங்காவும் உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்ணில் இரக்கம்கொண்டு சென்றிருந்தால் தம் தந்தை அனுப்பிய இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் பெண்களின் வலியையும் இப்போது அவர்களால் உணர்ந்திருக்க முடியும் என நம்புகிறேன்.

மகிந்தவுக்கு வந்துள்ள “நோய்” எது?

•மகிந்தவுக்கு வந்துள்ள “நோய்” எது? இந்திய பிரதமர் மோடியுடன் பேசிய விடயங்கள் தனக்கு ஞாபகம் இல்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்சா கூறியுள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னர் அதுவும் அயல் நாட்டு பிரதமருடன் பேசிய விடயம் ஞாபகம் இல்லை என்றால் நிச்சயம் இது ஒரு நோயாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நோய் மிக மோசமாக முற்றவில்லை என்பது ஒரு ஆறுதல். ஏனெனில் அவர் இந்திய பிரதமருடன் தான் பேச வில்லை என்று கூறவில்லை அல்லவா? இNதுபோன்று கொலை வழக்கு விசாரணையின்போது இவருடைய மனைவி தனக்கு சிங்கள மொழியே மறந்து போய்விட்டது என்று கூறியிருக்கிறார். இவர்களுக்கு வந்திருக்கும் இது என்ன நோய் என்று யாராவது மருத்துவர்கள் விபரமாக கூறினால் மக்களுக்கு பிரயோசனமாய் இருக்கும். குறிப்பு - ஞாபகம் இல்லை என்று கூறியதன் மூலம் தான் தப்பித்துவிட்டதாக மகிந்த கருதலாம். ஆனால் அவர் எந்த இனவாதத்தின் மூலம் பதவிக்கு வந்தாரோ அந்த இனவாதமே அவரை பதவியில் இருந்து விரட்டப் போகிறது. 110

எல்லா நாடுகளிலும் குழந்தையைக் காணவில்லை

எல்லா நாடுகளிலும் குழந்தையைக் காணவில்லை என்று அப்பா தேடுவார். ஆனால் இலங்கையில் மட்டுமே அப்பாவைக் காணவில்லை என்று குழந்தை தேடும் நிலை இருக்கிறது. அதுவும் போர் முடிந்து பதினொரு வருடம் கழிந்த பின்பும்கூட அப்பாவைத் தேடும் அவலநிலை தமிழ் இன குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கிறது. சமர் பல கண்ட களத்தை மறந்தோம் அதில் எமக்காக மாண்டவர்களை மறந்தோம் நிலத்தை மறந்தோம். இனத்தை மறந்தோம். எதிரி விட்டெறியும் எலும்புத் துண்டிற்காக குழந்தைகள் துயர் துடைக்க மறந்தோமே இந்தளவு கேவலமான இனமா இது? குறிப்பு – சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வு.

முதியோர் தின வாழ்த்துகள்!

முதியோர் தின வாழ்த்துகள்! 203 You, கமலா பாலன், Santhulaki Eelapriyan and 200 others 26 comme

கலைஞர் ஆட்சியில் இருந்தபோது

கலைஞர் ஆட்சியில் இருந்தபோது அவர் கார்க்கதவை திறந்து சலூயுட் அடித்த அதே பொலிஸ்தான் “என்னைக் கொல்றாங்க” “என்னை கொல்றாங்க” என்று அவர் கத்தக் கத்த இழுத்துச் சென்று சிறையில் அடைத்தது. காங்கிரஸ் ஆட்சியில் ராகுல் காந்திக்கு சலூயுட் அடித்த அதே பொலிஸ்தான் இன்று அவரை சட்டையில் பிடித்து தள்ளி வீழ்த்தியிருக்கிறது. ஏனெனில் பொலிஸ் என்பது அரசின் ஏவல்நாய். அதனை அரசு ஏவினால் அது யாரை வேண்டுமானாலும் கடித்து குதறும். இதுவே உண்மை. ஆனால் பொலிஸ் மக்களின் நண்பன் என்று கூறி ஏமாற்றுகிறார்கள்.

துருக்கிய மொழியில் தோழர் சண் நூல்!

•துருக்கிய மொழியில் தோழர் சண் நூல்! தமிழ் சிங்கள முஸ்லிம் மூவின மக்கள் மத்தியில் மதிப்பு பெற்ற தமிழ் தலைவர்களில் தோழர் சண்முகதாசனும் ஒருவர். அவர் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேசரீதியிலும் மதிப்பு மிக்க ஒரு தமிழ் தலைவர் ஆவார். அவர் எழுதிய “ஒரு கம்யுனிஸ்டின் அரசியல் நினைவுகள்” நூல் முதலில் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் வெளிவந்தது. பின்னர் அதன் தமிழ் பதிப்பு நூலை 1990ல் தமிழகத்தில் நான் வெளியிட்டிருந்தேன். அதன் பின்னர் விடியல் பதிப்பகம் அதனை மீள்பதிப்பு வெளியிட்டது. அதன்பின்னர் மார்க்சிச கற்கைக்கான நிலையம் இலங்கையில் வெளியிட்டது. இப்போது இதன் துருக்கிய மொழிபெயர்ப்பு நூல் வெளியிடப்பட்டிருக்கிறது என்ற செய்தியை பத்மநாபன் ஐயர் இன்று எனக்கு தெரிவித்தார். அவர் அந்த துருக்கிய மொழிபெயர்ப்பு நூலை வாங்கி வைத்திருப்பதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “துருக்கிய மொழி தெரியாத நீங்கள் எதற்காக அவ் நூலை வாங்கி வைத்திருக்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் “ ஒரு ஈழத் தமிழரின் நூல் துருக்கிய மொழியில் வெளியிடப்பட்டிருப்பது எமக்கு பெருமை அல்லவா. எனவேதான் அதனை வாங்கி பாதுகாத்து வைத்திருக்கிறேன்”என்றார். பத்மநாபன் ஐயர் ஒரு நடமாடும் நூலகம் என்று கூறலாம். அவரிடம் ஈழத்து எழுத்தாளர்கள் பற்றியோ அவர்களது நூல்கள் பற்றியோ விபரங்கள் பெறலாம். அவர் கம்யுனிஸ்ட் எழுத்துக்கள் மீதும் ஆர்வம் கொண்டவர் என்பது பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். நான் அவரை வீட்டில் சந்திக்கும்போதெல்லாம் தனது புத்தக குவியலில் இருந்து அரிய கம்யுனிஸட் புத்தகங்களை தேடி எடுத்து அன்பளிப்பாக தருவார். அவருக்கு எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பு - இந்தியாவில் நக்சலைட் எழுச்சி ஆரம்பமானவேளை அதுகுறித்து தோழர் சண் அவர்கள் எழதிய அறிக்கை யாரிடமாவது இருந்தால் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனோவுக்கு நன்றி !

•கொரோனோவுக்கு நன்றி ! அக்டோபர் 21, 1987: முப 11 : 00 மணி – யாழ் கோட்டைப் பகுதியில் இருந்த இந்திய ராணுவம் யாழ் மருத்துவமனைப் பகுதியை நோக்கி பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களும், உலங்கு வானூர்திகளில் இருந்து குண்டுத் தாக்க்குதல்களும் ஆரம்பித்தது. முப 11 : 30 மணி – யாழ் மருத்துவமனையின் வெளிமருத்துவ பீடத்தின் மீது ஏவுகணை ஒன்று வந்து வீழ்ந்தது. பிப 13 : 00 மணி – அருகில் உள்ள சாந்தி தியேட்டர் பக்கத்தில் இந்திய இராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதாக மருத்துவமனையில் கடமையில் இருந்த மருத்துவ அதிகாரிக்குத் தகவல் வந்தது. பிப 13 : 30 மணி – 8ம் இலக்க கூடத்தில் ஏவுகணை ஒன்று வீழ்ந்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். பிப 15 : 00 மணி – சில ஊழியர்கள் பின்பக்க வழியாக மதிய உணவுக்காக மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். பிப 16 : 00 மணி – ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தின் பக்கமாக 15 – 20 நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதை ஊழியர்கள் கேட்டனர். மாலை 16 : 20 மணி முதல் – இந்திய இராணுவத்தினர் மருத்துவமனையின் முன்பக்கமாக உள்ளே வந்தனர். நடைபாதை வழியாக உள்ளே வந்த அவர்கள் அங்கிருந்த அனைவரையும் உள்ளே செல்லுமாறு பணித்தனர். அதன் பின்னர் மேற்பார்வையாளரின் அலுவலகத்தினுள்ளும் ஏனைய அறைகளுள்ளும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேரில் கண்டவர்களின் கூற்றுப்படி, பல பணியாளர்கள் இறந்து வீழ்ந்தனர். இவர்களில் மேற்பார்வையாளர், மற்றும் முதலுதவி வண்டி சாரதியும் அடங்குவர். ஒரு படையினன் பணியாளர் ஒருவரை நோக்கி கிரனேட்டு எறிந்ததில் பலர் கொல்லப்பட்டனர். இன்னும் ஒருவரின் கூற்றுப்படி, இந்திய இராணுவத்தினர் ஊடுகதிரியல் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றனர். 8, இலக்க வார்டில் இருந்து நோயாளிகள் பலர் இங்கு பாதுகாப்புக்காக தங்கியிருந்தனர். இறந்து விட்டதாகத் தரையில் படுத்திருந்த சிலர் உயிர் தப்பினர். இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சுகளும் இடம்பெற்றன. அக்டோபர் 22, 1987: காலை 08 : 30 மணி – டாக்டர் சிவபாதசுந்தரம் மேலும் மூன்று தாதிகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். அவர்கள் தமது கைகளை மேலே தூக்கியவாறு “நாம் சாதாரண மருத்துவர்களும் தாதிகளும். நாம் சரணடைகிறோம்,” எனக் கத்தியபடி சென்றனர். துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. டாக்டர் சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டார், தாதிகள் மூவரும் கடும் காயங்களுக்குள்ளானார்கள். முப 11 : 00 மணி – இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் வார்டு ஒன்றினுள் நுழைந்தார். ஒரு பெண் மருத்தவர் எதிரில் எதிர்ப்பட்டார். அவர் இராணுவ அதிகாரிக்கு நிலைமையை விளக்கிய பின்னர் அவர் ஏனைய பணியாளர்களை கைகளைத் தூக்கியவாறு வெளியேறி வருமாறு கூறினார். அங்கு உயிருடன் இருந்த 10 பேர் வெளியேறினர். வெளியேறும் போது அவர்கள் டாக்டர் கணேசரத்தினம் இறந்து கிடப்பதைக் கண்டனர். அன்று மாலை இறந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் சேகரிக்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டன. கிட்லர்கூட மருத்துவமனைகள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தியது இல்லை. ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி அப்பாவி தமிழ் மக்களை கொன்றுள்ளனர். 33 வருடமாகியும் இறந்த இந்த அப்பாவி மக்களுக்கு இந்திய அரசு நியாயம் வழங்கவில்லை. ஆனால் அதே மருத்துவமனை வாசலில் காந்தி சிலை வைத்து அதற்கு வருடா வருடம் காந்தி ஜெயந்தியன்று யாழ் இந்திய தூதர் மாலை அணிவிக்கிறார். இந்தமுறை யாழ் மருத்துவமனைக்கு முன்னால் உள்ள காந்தி சிலைக்கு யாழ் இந்திய தூதர் மாலை அணிவிக்கவில்லை நன்றி கொரோனோவுக்கு

காந்தியின் அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததா?

•காந்தியின் அகிம்சை வழியில் இந்தியா சுதந்திரம் அடைந்ததா? அகிம்சை வழியில் போராடி காந்தி சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. இதை இந்தியர்கள் எந்தளவுக்கு நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஈழத் தமிழர் பலர் நம்புகிறார்கள். ஏனெனில் சிறுவயது முதல் இது போதிக்கப்படுகிறது. இதுவே உண்மை என்று நம்ப வைக்கப்படுகிறது. அதனால்தான் அகிம்சை வழியில் போராடியிருந்தால் தீர்வு பெற்றிருக்க முடியும் என்று சுமந்திரனால் தைரியமாக கூறமுடிகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் நடந்தது என்ன? இதுபற்றி பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவர் தன் நூலில் எழுதியிருப்பது வருமாறு, “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து எப்போதெல்லாம் மக்கள் வீதியில் இறங்கி ஆயுத புரட்சி செய்கிறார்களோ, அப்போதெல்லாம் காந்தி, தன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவார். இந்த வழியில் நாம் போராடுவது தவறு, நாம் அகிம்சையை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பார். மக்கள் புரட்சியால் நிலமை கட்டுக்கடங்காமல் போய், போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில், காந்தி அகிம்சை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க தொடங்குவார். பிறகு அந்த செய்தி நாடு முழுக்க பரவும், மக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி ஆவார்கள். இப்படியே நாங்கள் இந்தியாவை மேலும் 10 ஆண்டுகள் என தொடர்ந்து ஆண்டு கொண்டிருந்தோம்”. இதே நிலைமைதான் இலங்கையிலும் நடந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தல் பாதை மூலம் நடத்திய போராட்டம் யாவும் இலங்கை அரசு தொடர்ந்தும் தமிழ் மக்களை இன அழிப்பு செய்வதற்கே உதவி வந்தது. எனவே தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய இரண்டு முக்கிய விடயங்கள், (1) அகிம்சை வழியில் விடுதலை பெற முடியாது (2) ஆயுத போராட்டத்தின் மூலமே விடுதலை பெற முடியும்

முதலில் ராகுல்காந்தி பொலிசாரால் தள்ளி விழுத்தப்படுகிறார்.

முதலில் ராகுல்காந்தி பொலிசாரால் தள்ளி விழுத்தப்படுகிறார். அடுத்து பிரியங்காவின் சட்டையை பொலிஸ் இழுக்கிறது. ஆனாலும் ராகுலும் பிரியங்காவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கின்றனர். கொரோனோவினால் எம்.பி, எம்எல்.ஏ க்கள் செத்துக்கொண்டிருக்கும் நிலையில் இவ் இருவரும் இவ்வாறு செய்திருப்பது பாராட்டப்பட வேண்டியதே. இது இவர்களுக்கு அடுத்த தேர்தலில் எந்தளவு வோட்டுகளை பெற்றுக் கொடுக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இவர்களால் இந்திய பொலிஸ் அராஜகம் பற்றி இந்தியாவில் மட்டுமல்ல முழு உலகத்திலும் அறிய வாய்ப்பு எற்பட்டுள்ளது. இந்திரா மற்றும் ராகுல் காந்தி குடும்பத்திற்கே இப்படி என்றால் சாதாரண மக்களை இந்த பொலிஸ் எப்படி நடத்தும் என்று அனைவரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். இத்தனை நாளும் பொலிஸ் கொலைகள் மற்றும் பாலியல் வல்லுறவு பற்றி காஸ்மீர் மக்கள் கூறியபோது அதனை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் பொய்ப் பிரச்சாரம் என்று இந்திய அரசு கூறி வந்தது. மணிப்பூரில் பெண்கள் பொலிசுக்கு வழங்கிய கறுப்பு சட்ட அதிகாரத்தை நீக்கும்படி போராடியபோது அதனை தீவிரவாதிகளின் கலகம் என இந்திய அரசு கூறியது. சதீஸ்கரில் மலைவாழ் மக்களை பொலிஸ் சுட்டுக் கொன்றபோது அவர்களை நக்சலைட்டுகள் என்று இந்திய அரசு கூறியது. ஏன் தமிழ்நாட்டில்கூட தூத்துக்குடியில் 14 அப்பாவி மக்களை பொலிஸ் சுட்டுக்கொன்றபோது நடிகர் ரஜனி இறந்த மக்களை தீவிரவாதிகள் என்றார். ஆனால் இப்போது பொலிஸ் என்பது அரசின் ஏவல்நாய் என்பதும் அரசின் ஒடுக்குமறைக் கருவிகளில் ஒன்று என்பதும் நிரூபணமாகியுள்ளது.

இன்று சர்வதேச விலங்குகள் தினம்!

•இன்று சர்வதேச விலங்குகள் தினம்! ( இது அரசியல் பதிவு இல்லை) விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 4ம் திகதி சர்வதேச விலங்குகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அழிந்துவரும் விலங்குகளை பாதுகாக்கவும் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஒருவர் தன் நாய்க்கு தமிழ் தெரியும் என்றும் தான் தமிழில் கூறுவதை அது புரிந்து செயற்படுவதற்கு 6 மாதம் எடுத்தது என்றும் கூறிக்கொண்டிருந்தார். அப்போது அவரது நாய் “ இந்த மனிதனுக்கு எனது மொழி புரிய 6 மாதம் எடுத்திருக்கிறது”என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டதாம். இது பகிடிதான். ஆனால் இது கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது. ஏனெனில் உணர்வை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமே மொழி என்கிறார்கள். அப்படியென்றால் விலங்குகளும் தம் உணர்வுகளை வெளிப்படுத்த தமக்கு ஒரு மொழி வைத்திருக்கின்றனவா? விலங்கிற்கு மொழி இருக்கிறதா இல்லையா என்பதைவிட விலங்குகளுக்கு கணக்கு தெரியுமா என்பது என் மூளையைக் குடைகிறது. ஏனெனில் உதாரணத்திற்கு ஒரு பன்றி தன் 20 குட்டிகளை எப்படி நினைவில் கணக்கு வைத்திருக்கும்? குறிப்பு - இங்குள்ள படங்களை பார்த்துவிட்டு நான் விலங்குகளை கேவலப்படுத்திவிட்டதாக விலங்கு ஆர்வலர்கள் தயவு செய்து என்மீது கோபம் கொள்ள வேண்டாம். 161

வெறும் 800 போராளிகள்

வெறும் 800 போராளிகள் ஒரு லட்சத்து இருபதினாயிரம் இந்திய ராணுவத்தை எதிர்க்க எப்படி துணிந்தார்கள்? டாங்கிகள் பீரங்கிகள் மட்டும்ல்ல நவீன போர் விமானங்கள் சகிதம் வந்தவர்கள் அமைதிப்படை அல்ல அது ஒரு அழிவுப்படை என்பதை எப்படி உணர்ந்தார்கள்? ஆம். அதற்கு இந்த 12 போராளிகளின் மரணங்கள் ஒரு முக்கிய காரணமாக அமைந்தன. திலீபன் மரணத்திற்கு எந்த இந்திய அரசு பொறுப்போ அதே இந்திய அரசுதான் இந்த 12 போராளிகளின் மரணத்திற்கும் பொறுப்பு ஆகும். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து தமிழ் மக்கள் மீது போரைத் திணித்த இந்திய அரசு அதற்கான பழியை புலிகள் மீது போடுகிறது. ஆம். காட்டின் வரலாற்றை சிங்கம் எழுதினால் தானாக வந்து தன் வாயில் மாட்டாமல் தப்பி ஓட முயலும் மான்கள் யாவும் தவறானவர்கள் என்றே எழுதும். 325 You, கமலா பாலன், Santhulaki Eelapriyan and 322 others 56 comme

வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள்!!

வந்தார்கள் கொன்றார்கள் சென்றார்கள்!! இது ஜீனியர்விகடனில் மதன் எழுதிய “வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள்” கதை அல்ல. இது அமைதிப்படை என்று வந்து அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்துவிட்டு சென்ற இந்திய ராணுவத்தின் கதை. கொடுங்கோலன் என்றழைக்கப்பட்ட கிட்லர்கூட எதிரி நாட்டு மருத்துவமனைகளையோ நூலகத்தையோ தாக்கியது கிடையாது. ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் யாழ் மருத்துவமனையைத் தாக்கி பல அப்பாவி தமிழ் மக்களை கொன்றார்கள். யாழ் மருத்துமனையில் மட்டும் படுகொலைகள் நிகழ்த்தப்படவில்லை. வல்வையில் நடத்தப்பட்டது. பிரம்படியில் நடத்தப்பட்டது. வடக்கு கிழக்கு முழுவதும் சுமார் இரண்டரை வருடங்கள் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். எழுநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார்கள். 80 வயதுக் கிழவியைக்கூட பாலியல் வல்லுறவு செய்த பெருமை இந்திய அமைதிப்படைக்கே சேரும் என அன்றைய பிரதமர் பிரேமதாசா கூறியிருந்தார். புலிகள் பொதுமக்களுக்குள் இருந்து துப்பாக்கி பிரயோகம் செய்ததால் அப்பாவி பொது மக்கள் இறக்க நேரிட்டது என இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படியென்றால் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டமைக்கு என்ன காரணம்? ஏன் இதுவரை ஒரு ராணுவம்கூட இதற்காக தண்டிக்கப்படவில்லை? அதுமட்டுமன்றி, அமைதிப்படையின் முதல் குண்டு புலிகளை தாக்கவில்லை. மாறாக ஈழநாடு பத்திரிகை அலுவலகத்தையல்லவா தாக்கியது. 48 மணி நேரத்தில் ஒரு லட்ச்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவ வீரர்கள் அமைதிப்படை என்று வந்தார்கள் அவர்கள் வெறும் துப்பாக்கியுடன் மட்டும் வரவில்லை. பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்களுடன் வந்தார்கள். ஒருபுறம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வற்புறுத்தினார்கள். மறுபுறம் புளட், டெலோ போன்ற இயக்கங்களுக்கு ஆயுதங்களை வழங்கி புலிகளை அழிக்கும்படி கூறினார்கள். இத்தனையும் இந்திய ராணுவம் செய்தது தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக அல்ல. மாறாக இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பிற்காகவே. இங்கு கொடுமை என்னவென்றால் இத்தனையும் செய்துவிட்டு அதற்காக இதுவரை ஒரு வருத்தம் கூட தெரிவிக்காதது மட்டுமன்றி தமிழ் மக்கள் தம் உறவுகளை நினைவு கூர்வதைக்கூட மிரட்டி தடுக்கின்றனர். 192 You, கமலா பாலன், Santhulaki Eelapriyan and

மெண்டல்” பத்மநாதன் மரணத்திற்கு

•“மெண்டல்” பத்மநாதன் மரணத்திற்கு யார் நியாயம் வழங்குவார்கள்? யாழ்ப்பாணத்தில் நெல்லியடி என்றதும் சந்தை, இரண்டு தியேட்டர் பாடசாலை என்பன நினைவுக்கு வரும். 1970களில் நெல்லியடியில் புளங்கியவர்களுக்கு கூடவே மெண்டல் பத்மநாதனும் நினைவுக்கு வரும். அவர் ஒரு மனநோயாளி. அவரை எல்லோரும் “மெண்டல் பத்மநாதன்” என்றே அழைத்தார்கள். அவர் எப்போதும் நெல்லியடியிலேயே இருப்பார். பசித்தால் அருகில் இருக்கும் சங்குண்ணி கடை வாசலில் போய் நிற்பார். அவர்கள் உணவு வழங்குவார்கள். இரவில் ஏதாவது ஒரு கடை வாசலில் படுத்து தூங்குவார். மாதத்திற்கு ஒருமுறை யாராவது முடி வெட்டி குளிக்க வார்த்து விடுவார்கள். அவர் மிகவும் சாதுவானவர். யாருக்கும் எந்த தீங்கும் இழைக்காதவர். தன்னை நடிகை சரோஜாதேவி திருமணம் செய்ததாக கூறுவார். நாம் பாடசாலைக்கு செல்வதற்கு பஸ்க்கு காத்துக்கொண்டிருக்கும் வேளையில் எமது அருகில் வந்து “ நதி எங்கே போகிறது கடலைத் தேடி . நான் எங்கே போகிறேன் சரோஜாதேவியை தேடி “ என்று பாடுவார். இந்திய ராணுவம் ஈழத்தில் இருந்தவேளை ஒருநாள் அதிகாலையில் துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டன. யாருக்கும் எதுவும் புரியவில்லை. காலை இந்திய வானொலியில் “ “நெல்லியடியில் புலிகளின் அதி முக்கிய தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்” என்று செய்தி வாசிக்கப்பட்டது. விடிந்ததும் மக்கள் நெல்லியடிக்கு சென்றபோது சுட்டுக்கொல்லப்பட்டது புலிகளின் தளபதி அல்ல அப்பாவி மெண்டல் பத்மநாதன் என்று அறிந்து கொண்டார்கள். இருட்டில் தவறுதலாக சுட்டுவிட்டோம் என்று இந்திய ராணுவத்தினர் கூறியிருந்தால்கூட மக்கள் அதை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரு மனநோயாளியை சுட்டதும் அல்லாமல் அவரை புலிகளின் முக்கிய தளபதி என்று இந்தியா கூறியது மக்களுக்கு ஆத்திரத்தைக் கொடுத்தது. இலங்கை ராணுவம்கூட பத்மநாதன் ஒரு மனநோயாளி என்பதை தெரிந்து அவரை சுடவில்லை. அவருக்கு எந்த தீங்கும் செய்ததில்லை. ஆனால் அமைதிப்படை என்று வந்தவர்கள் கொஞ்சம்கூட இரக்கமின்றி ஒரு மனநோயாளியை கொன்று விட்டார்களே என மக்கள் கவலை கொண்டனர். சரி. இப்ப இதை இங்கு கூறுவதற்கு என்ன காரணம்? ராஜீவ் கொலைக்கு நீதி வழங்கியதாக கூறும் இந்திய அரசு இந்த அப்பாவி பத்மநாதன் கொலைக்கு எப்போது நீதி வழங்கப் போகிறது? அதுமட்டுமல்ல, ராஜீவ் மரணத்தின்போது இறந்தவர்களுக்காக சிலர் நியாயம் கேட்கிறார்கள். அப்படியென்றால் இந்த மெண்டல் பத்மநாதன் மரணத்திற்கு யார் நியாயம் கேட்பது? குறிப்பு- இது ஒரு மீள் பதிவு. (படத்தில் இருப்பவர் மெண்டல் பத்மநாதன் அல்ல.)

க/பெ.ரணசிங்கம் - சிறு குறிப்பு

•க/பெ.ரணசிங்கம் - சிறு குறிப்பு வெளிநாட்டில் இறந்த தன் கணவனின் உடலைப் பெறுவதற்காக ஒரு பெண் அரசோடும் அதிகாரிகளோடும் போராடும் கதை இது. இது ஈழத் தமிழருக்கும் பரிட்சயமான கதைதான். ஆனால் இந்திய அரசோடு ஒப்பிடும்போது இலங்கை அரசு பரவாயில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் இலங்கை அரசு எடுத்த எடுப்பிலே முகத்தில் அடித்தாற்போல் தன்னால் முடியாது என்று கூறிவிடும். எனவே தமிழ் மக்கள் இலங்கை அரசை நம்பி ஏமாறும் நிலை இல்லை என்று கூறலாம். இந்த படத்தை மேலோட்டமாக பார்க்கும்போது மோடி அரசையும் அதன் ஜஏஎஸ் அதிகாரிகளையும் நல்லவர்கள் போல் காட்டுவதாக தோன்றும். ஆனால் கொஞ்சம் ஆழமாக பார்க்கும்போதுதான் பிரதமர் உட்பட மொத்த ஆளும் வர்க்கமும் எப்படி ஒரு ஏழைப் பெண்ணை ஏமாற்றுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதுவும் வெளிநாட்டில் இறந்த நடிகை சிறீதேவியின் உடலை உடன் பெற்றுக்கொடுத்த அரசானது ஏழை மக்களின் உடலை பெறுவதற்கு காட்டும் அசிரத்தை நன்கு காட்டப்பட்டுள்ளது. வியாபாரத்திற்காக விஜய் சேதுபதியை இணைத்து பின்னர் அவருக்காகவே சில காட்சிகளையும் இணைத்ததால் படம் சற்று நீண்டு விட்டது. இதை தவிர்த்து மோடி அரசு எதிர்ப்பையும் தெளிவாக காட்டியிருந்தால் மிகச் சிறந்த படமாக வந்திருக்கும்.

“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்!

•“இந்தியன் மைலாய்” எனப்படும் வல்வை படுகொலைகள்! 1968 மார்ச் 16 யன்று அமெரிக்க ராணுவம் வியட்நாமில் 347 அப்பாவி வியட்நாம் மக்களை சுட்டுக் கொன்றது. இது மைலாய் படுகொலைகள் ( My Lai Massacre ) என அழைக்கப்படுகிறது. 1989 ஆகஸ்ட் 2 யன்று வல்வெட்டித்துறையில் அமைதிப்படை என வந்த இந்திய ராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்தது. இப் படுகொலைகள் “இந்தியன் மைலாய்” என அழைக்கப்படுகிறது. •64 பொது மக்கள் கொல்லப்பட்டனர் •100 க்கு மேற்பட்டோர் காய மடைந்தனர் •50 க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். •சுமார் 200 வீடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டன. •40 க்கு மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டன. •150 க்கு மேற்பட்ட மீன்பிடி வள்ளங்கள் சேதமாக்கப்பட்டன. •வல்வை நூலகம் முற்றாக எரித்து சேதமாக்கப்பட்டது. இத் தாக்குதல்கள் ஆகஸ்ட் 2, 3. 4 திகதிகளில் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது. இறந்தவர்களின் உடல்களை எடுத்து அடக்கம் செய்யக்கூட இந்திய ராணுவம் அனுமதிக்கவில்லை. வியட்நாம் கொலைகளுக்காக 26 அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்கு தாக்கல் செய்தது. அதில் ஒரு அதிகாரிக்கு மட்டும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் படுகொலை செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வல்வைப் படுகொலைகளுக்காக எந்தவொரு இந்திய ராணுவ அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. சீக்கிய படுகொலைகளுக்காக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர் மோடி, வல்வை படுகொலைகளுக்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரவில்லை. மன்னிப்பு கோர விட்டாலும் பரவாயில்லை. ஆனால் இறந்த தம் உறவுகளை வல்வெட்டித்துறை மக்கள் நினைவுகூர்வதைக்கூட யாழ் இந்திய தூதர் மிரட்டி தடுக்கிறார். வியட்நாம் படுகொலைக்காக அனுதாபப்பட்ட சர்வதேசம்கூட வல்வைப் படுகொலைகளையிட்டு கவனம் கொள்ளவில்லை. படுகொலை செய்த இந்திய ராணுவத்திற்கு யாழ் மண்ணில் நினைவு தூபி அமைத்து இந்திய தூதர் மரியாதை செலுத்துகிறார். ஆனால் படுகொலையான தம் உறவுகளுக்கு வல்வை மக்கள் தமது மண்ணில் அஞ்சலி செலுத்தவதை அவர் தடுக்கிறார். என்னே கொடுமை இது? ராஜீவ் மரணத்தின் போது இறந்தவர்களுக்காக நியாயம் பேசுவோர் இந்த வல்வை மக்களுக்காக கொஞ்சம் நியாயம் பேசுவார்களா? மறக்கவும் முடியாத மன்னிக்கவும் முடியாத படுகொலைகள் இவை. குறிப்பு - இது ஒரு மீள் பதிவு

பிரபாகரன் பயங்கரவாதி

பிரபாகரன் பயங்கரவாதி எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதிதான். அதனால்தான் சுட்டுக்கொன்றோம் என்று இதுவரை திமிராக கூறிவந்தார்கள். பிரபாகரன் மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். ஆனாலும் நாங்கள் அவனை சுட்டுக் கொல்லவில்லை என்று இப்போது கூற ஆரம்பித்துள்ளனர். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணிக்கு கட்டளை தளபதியாக செயற்பட்டதாக முன்னாள் ராணுவதளபதி சரத்பொன்சேகா கூறியுள்ளார். அது மட்டுமன்றி, பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை புலிகளே கொன்றிருக்க கூடும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் கூறியிருப்பதை சிங்கள மக்கள்கூட நம்பப்போவதில்லை. இவ்வாறு இவர்கள் இப்போது கூறுவதற்கு காரணம் தமிழ் மக்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்து இனப் படுகொலைக்கு நீதி கோரி வலியுறுத்தி வருவதே. இந்திய அரசு தங்களை நிச்சயம் காப்பாற்றும் என இந்த இனப்படுகொலையாளிகள் இதுவரை நம்பியிருந்தார்கள். ஆனால் இந்திய அரசால்கூட காப்பாற்ற முடியாத ஒரு சர்வதேச சூழ்நிலையை தமிழ் மக்கள் உருவாக்குவார்கள் என்பதை இவர்கள் கணிக்கத் தவறிவிட்டார்கள்.

ஒருவர் ஆர்மேனிய பெண் இன்னொருவர் ஈழத்து தமிழ் பெண்

ஒருவர் ஆர்மேனிய பெண் இன்னொருவர் ஈழத்து தமிழ் பெண் இருவரும் பெண்கள் மட்டுமல்ல வயதான மூதாட்டிகளும்கூட. ஆனால் இந்த இருவரும் உலகிற்கு ஒரு செய்தியை கூறுகிறார்கள். வீடு இழந்தால் நிலம் இழந்துவிடுவோம் நிலம் இழந்தால் இனம் இழந்துவிடுவோம் இனம் இழந்தால் வாழத் தகுதி இழந்துவிடுவோம். எனவே இருப்புக்காக போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்துவிட முடியாது!

புரட்சியாளர் தோழர் சேகுவாரா!

புரட்சியாளர் தோழர் சேகுவாரா! இன்று புரட்சியாளர் தோழர் சே வின் நினைவு தினம் ஆகும். தன் வாழ்வின் இறுதிக் கணம்வரை உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய ஒரு உன்னதமான போராளியின் நினைவு தினம் ஆகும். துப்பாக்கி அவர் நெஞ்சை குறி பார்த்தபோதும் அவர் உயிருக்காக கெஞ்சவில்லை. “நான் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்படமாட்டேன்” என்று அவர் முழங்கிய வார்த்தைகள் இன்று ஈழத் தமிழருக்கு உறுதியளிக்கிறது. அவர் தேர்தல் பாதையை முன்வைக்கவில்லை. மாறாக ஆயுதப் போராட்ட பாதையையே முன்னெடுத்தார். “உலகில் எங்கு அநியாயம் காணப்படுகிறதோ அங்கு கோபமும் வெறுப்பும் கொண்டு குமுறி எழுவாய் எனில் நீ என் தோழனே” என்று கூறினார் தோழர் சே.

அக்-10, இன்று உலக மனநல தினம்

அக்-10, இன்று உலக மனநல தினம் இந்த தினம் எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ குறிப்பாக இன்றைய நிலையில் எமது தமிழ் இனத்திற்கு இது எந்தளவு முக்கியமானது என்பது பற்றியோ எம்மிடையே போதியளவு விழிப்புணர்வு காணப்படவில்லை. எமது தமிழ் சமூகத்தில் மனக்கோளாறு என்பது பேசாப் பொருளாகவும் பொத்திப் பாதுகாக்கும் ரகசியமாகவும் இருந்து வருகிறது. பைத்தியம், கிறுக்கு, விசர் என்றும் நவீன தமிழில் லூசு, மெண்டல் என்றும் தரக்குறைவாக அழைக்கப்படுகிறது. தமிழ்படங்களில் மனநோய் உள்ளவர்கள் விநோதமானவர்களாகவும் விசித்திரமானவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றார்கள். இதனால் சிறுவர்கள் இவர்கள் மீது கல் எறிகின்ற கோர நிலை எமது சமூகத்தில் காணப்படுகிறது மனநோயாளர்கள் என்று சமூகத்தினால் முத்திரை குத்தப்படுபவர்கள் மீது பாரபட்சமும் வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகின்றன. குடும்பங்களிடையே இது ஒரு அவமானமாக பார்க்கப்படுகின்றது. மனநோயாளிகள் சமூகத்தில் இருந்து ஒதுக்கப்படுகின்றார்கள். அவர்களை பாதுகாக்க வேண்டிய காப்பகங்கள்கூட அவர்களை கேவலமாக நடத்துகின்றன. அவர்களின் மனிதவுரிமைகள் மீறப்படுகின்றன. அவர்கள் பயங்கரமானவர்கள் , வக்கிர புத்தி கொண்டவர்கள் என்ற பயம் நிலவி வருகிறது. இந்த கருத்துகள் மக்களிடையே சகல மட்டங்களிலும் காணப்படுகின்றது. எனவேதான் இந்த மனநோய் பற்றி உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு எற்படுத்துவதற்காக உலக மனநல தினம் கொண்டாடப்படுகின்றது. மன நல பாதிப்பு அறிகுறிகள் தெரிந்த வுடனேயே மன நல சிகிச்சை, ஆலோசனை பெற வேண்டும் என்பதே, மன நல நாளின் நோக்கமாகக் கருதப்படுகிறது. மன நோய்கள் என்பது உடல்நோய்கள் போல யாருக்கு வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் வரலாம். ஒரு நபர், வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் மன நல மருத்துவரின் ஆலோசனை தேவைப்பட்டவராகவே உள்ளார். குறைந்தது 4 பேரில் ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு மன நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடல் நலத்தைப் பேணுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல், மன நலத்தையும் பேணி பாதுகாப்பது ஒருவருடைய வாழ்க்கை தரத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது. இலங்கையில் நடந்து முடிந்த நீண்ட யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் வாழும் சுமார் 30வீதமான தமிழ் மக்கள் மனநோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. முன்னேறிய நாடுகள் என கருதப்படும் ஜரோப்பிய நாடுகளில் அரசாங்கம் மனநோய் பற்றி அதிக கவனம் எடுக்கிறது. அதற்காக அதிக பணம் ஒதுக்கிறது. ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இது குறித்து அரசு மட்டுமல்ல சமூக அக்கறை உள்ள அமைப்புகள்கூட கவனம் செலுத்தாமை துரதிருஸ்டவசமானது. மக்கள் மத்தியில் மனநோய்கள் மனக்கோளாறுகள் குறித்து பல குழப்பங்களும் தவறான புரிதல்களும் உள்ளன. மனநலம் பற்றிய தமிழ் நூல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. தற்போது மன நோய் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கும் போதிலும், இன்னும் பல நேரங்களில் தாங்கள் மன நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்பதை ஏற்க மறுத்து மறுதலிப்பதாலும் ஆரம்ப நிலையில் சிகிச்சை பெற்றுக் கொள்வதைப் பலர் தள்ளிப் போடுகின்றனர் . இதனால், எளிதில் செய்ய வேண்டிய சிகிச்சைகளைக் கடினமாக்குவதுடன் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்படுகின்றனர். அதனால், மன நல நோய்க்கு ஆரம்ப நிலை சிகிச்சை என்பது கட்டாயம். தவிர்த்தால் அதுவே பின்னாளில் சிக்கலாகி விடுகின்றது.

டேவிட் ஐயா!

•டேவிட் ஐயா! இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்பதைக்கூட அடுத்த சந்ததி நம்புமா என்று தெரியவில்லை. 92வது வயதிலும் அவரை மிகவும் ஆபத்தான மனிதர் பட்டியலில் தமிழ்நாடு (கியூ) உளவுப்பிரிவு பொலிசார் வைத்திருந்தனர். இதுவே அவரை உணர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் போதுமானது. குறிப்பு - இன்று (10.10.20) அவருடைய ஐந்தாவது நினைவு தினம்.

“சிங்கள” சேதுபதி!

•“சிங்கள” சேதுபதி! சிங்க சின்னம் பொறித்த ரீசேர்ட் அணிந்து கொண்டு சிங்கள சிங்கக் கொடியை கையில் பிடித்துக்கொண்டு சிங்கள ராஜபக்சா தமிழர்களை கொன்ற நாளே எனது மகிழ்சிக்குரிய நாள் என்று வசனம் பேசப்போகும் முதல் தமிழ் நடிகர் விஜய சேதுபதியை இனி சிங்கள சேதுபதி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

இந்திய படையின் பிரம்படிப் படுகொலைகள்

•இந்திய படையின் பிரம்படிப் படுகொலைகள் இந்திய தூதுவரையும் மீறி நினைவு கூர்ந்த தமிழ் மக்கள்! 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12ம் திகதி யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் 50க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்டனர். யாழ் இந்திய தூதரின் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் இந்த இடத்தில் கொல்லப்பட்ட தம் உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்துள்ளனர். யாழ் இந்திய தூதர் தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் இந்திய படை செய்த அக்கிரமங்களை தங்களால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது என்பதே தமிழ் மக்கள் இந்திய தூதருக்கு அளித்துள்ள பதில் ஆகும். இதை இனியாவது இந்திய தூதரும் இந்திய அரசின் விசுவாசிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

அதிசயம். ஆனால் உண்மை!

•அதிசயம். ஆனால் உண்மை! திலீபனை நினைவு கூர அனுமதி வழங்க மறுத்த இலங்கை அரசு இந்திய ராணுவத்தை நினைவுகூர இந்திய தூதுவருக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இலங்கை இந்திய அரசுகளை மீறி தமிழக மக்கள் திலீபனை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்திய அரசு திலீபனை பயங்கரவாதி என்று கொன்றது. ஆனால் தமிழக மக்கள் திலீபனை தியாகி என்று நினைவு கூர்கின்றனர். திலீபன் தெரு, திலீபன் பஸ் தரிப்பிடம், திலீபன் ஆட்டோ ஸ்டாண்ட், திலீபன் கடை, மட்டுமன்றி பிறக்கும் குழந்தைகளுக்குகூட திலீபன் பெயர் சூட்டி நினைவு கூர்கின்றனர். நான் அறிந்தவரையில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு தமது அரசு கொன்ற இன்னொரு நாட்டவரை எந்த மக்களும் நினைவு கூர்ந்ததில்லை. அதுமட்டுமல்ல, தமது இனம் இன்னொரு நாட்டில் அழியும்போது வேறு எந்த இனமும் 16 பேர் தீக்குளித்து மரணம் அடைந்ததும் இல்லை. இத்தனை அதிசயத்தையும் உலகில் நிகழ்த்தும் ஒரே இனம் தமிழ் இனம் மட்டுமே.

மராட்டிய நடிகர் ரஜனி,

•மராட்டிய நடிகர் ரஜனி, கல்யாண மண்டபத்திற்கு வரி கட்டவில்லை பள்ளிக்கூடத்திற்கு வாடகை செலுத்தவில்லை இவர் தமிழ் நாட்டிற்கு நேர்மையான ஆட்சி தரப் போகிறாராம். ஏற்கனவே வருமானத்திற்கு உரிய வரி செலுத்தவில்லை என்ற இவர் மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இப்போது கல்யாண மண்டபத்திற்குரிய வரியைக்கூட செலுத்த முடியாது என்று விலக்கு அளிக்கும்படி நீதிமன்றத்தை நாடியுள்ளார். 120 கோடி ரூபா சம்பளம் வாங்கும் இந்த உச்ச நடிகரால் ஒரு கலியாண மண்டபத்திற்குரிய வரியை செலுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்? வரிப்பணம் மக்களுக்குதானே செல்கிறது. மக்களுக்கு செல்லும் பணத்தைக்கூட செலுத்த விரும்பாதவர் தமிழ் மக்களை ஆட்சி செய்ய ஏன் விரும்புகிறார்? இன்னுமா இந்த பரட்டையை தமிழகம் நம்புது?

ராஜபக்சேவின் செல்வன்!

•ராஜபக்சேவின் செல்வன்! முரளி படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த முதல் நபர் நாமல் ராஜபக்சா. எதிரி உன்னை பாராட்டி புகழ்கிறான் எனில் நீ அவனுக்கு சோரம் போய்விட்டாய் என்று அர்த்தம். இனி என்ன அடுத்து மகிந்த ராஜபக்சா வேடம் போட்டும் விஜய் சேதுபதி நடிக்கலாம். அதையும் பக்கா உருவ பொருத்தம் என்று பாராட்ட நாலு பேர் இருப்பார்கள். எனவே இதுவரை தமிழ் மக்களின் செல்வனாக இருந்த விஜய் சேதுபதி இனி ராஜபக்சேவின் செல்வனாக இருப்பார். ஆனால் தமிழ் மக்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். சேதுபதிக்கு மட்டும்மன்றி சேதுபதி மூலம் தமிழர்களுக்குள் ஊடுருவ முயலும் மகிந்த ராஜபக்சே அரசியலுக்கும் தகுந்த பதில் அளிக்கப்படும். ஒரு படத்திற்கு பதில் அளிக்க முடியாத அளவிற்கு தமிழ் தேசியம் ஒன்றும் பலவீனமானது அல்ல.

அடைத்து வைத்திருக்கும் புலிக்கு

அடைத்து வைத்திருக்கும் புலிக்கு மாட்டிறைச்சி வழங்கக்கூடாது என்று அசாமில் சங்கிகள் போராட்டம் செய்துள்ளனர். இவர்கள் மாட்டுப்பாலை சாமிக் கல்லுக்கு ஊற்றுவார்கள். மாட்டு மூத்திரத்தை குடிப்பார்கள். ஆனால் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. அதை இந்த முட்டாள்களுக்கு எப்படி புரிய வைப்பது? தான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை புலிகளுக்கு உண்டு. எனவே இது குறித்து பேச்சுவார்த்தை செய்வதற்காக போராட்டம் செய்யும் சங்கிகளை புலிகளின் கூண்டுக்குள் அனுப்ப வேண்டும். இல்லையேல் போராட்டம் செய்பவர்களின் இடத்தில்; புலிகளை திறந்துவிட வேண்டும். இந்த நல்ல முடிவை அசாம் அரசு எடுக்கும் என நம்புவோம். குறிப்பு – மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனோ நோய் குணமாகும் என்று கூறிய அசாம் மாநில எம்எல்.ஏ யை பொலிஸ் கைது செய்துள்ளது.

திம்பு பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது.

திம்பு பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்று மலையக தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது. அப்போது இலங்கை அரசு சார்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் சகோதரர் “அவர்களைப் பற்றி நீங்கள் ஏன் அக்கறைப்படுகிறீர்கள்?” என கேட்டார். ஆனால் கலந்துகொண்ட அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் அக் கோரிக்கையில் ஒருமித்து உறுதியாக இருந்தனர். அதன்பின்னர்தான் ஜனாதிபதி ஜே.ஆh.; ஜெயவர்த்தனா மலையக தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்கினார். இதை மலையக மக்களின் தலைவர் தொண்டைமானே நன்றியுடன் நினைவு கூர்ந்தும் இருக்கிறார். இங்கு கவனிக்கவேண்டிய விடயம் என்னவெனில் மலையக தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அந்த தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் வடக்கு கிழக்கு தமிழர்களே. அனைத்து இயக்கங்களும் மலையக இளைஞர்களை உள்வாங்கியிருந்தன. ஈரோஸ், ஈபிஆர்எல்எவ் போன்ற இயக்கங்கள் மலையகத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கிய ஈழத்தை தீர்வாக முன்வைத்திருந்தன. 1985ல் “மலையக மக்கள் விடுதலை முன்னணி” என்ற அமைப்பை உருவாக்கி மலையக தமிழ் மக்களின் போராட்டத்திற்கு வழி சமைத்தவர் தோழர் நெப்போலியன். அந்த மலையக மண்ணிலேயே இந்திய உளவுப்படையினரால்; கொல்லப்பட்டவர் இந்த தோழர் நெப்போலியன். இவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரே மலையகத்தில் சயனைட் அருந்தி மரணமடைந்த வரதன் என்ற போராளியும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரே. எனவே யாழ்ப்பாண தமிழர்கள் மலையக தமிழர்கள் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்று புதிய வரலாறு எழுத முனைபவர்கள் இவற்றுக்கு பதில் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்

தேர்தலில் போட்டியிட்ட முத்தையா முரளிதரனின்; சகோதரர் வெற்றி பெறவில்லை. மலையக தமிழ் மக்களால் அவர் தோற்கடிக்கப்பட்டார். மனோ கணேசனுக்கு வோட் போடவேண்டாம் என்று முத்தையா முரளிதரன் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் தமிழ் மக்கள் மனோ கணேசனுக்கு வோட் போட்டு அவரை வெற்றி பெற வைத்தார்கள். இதுதான் முத்தையா முரளிதரனுக்கு அவரது மலையக தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு ஆகும். அதேவேளை வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது மனோ கணேசனுக்கு தமது ஆதரவை தெரிவித்திருந்தது. இந்த விபரங்கள் எதுவும் தெரியாத முட்டாள் ஒன்று “முத்தையா முரளிதரன் மலையக தமிழர் என்பதால் யாழ்ப்பாண வெள்ளாளர்கள் எதிர்க்கிறார்கள்” என்று ரிவி யில் உளறுகிறது. இன்னும் இப்படி எத்தனை கொடுமைகளைக் கேட்டுத் தொலைக்க வேண்டி வருமோ தெரியவில்லை? 324

ஒரு கோடரிக்காம்பின் புலம்பல்!

ஒரு கோடரிக்காம்பின் புலம்பல்! காட்டில் உள்ள மரங்கள் தொடர்ந்து கோடரிகளால் வெட்டி தறிக்கப்படுகின்றன. ஆனாலும் மரங்கள் தொடர்ந்தும் அக் கோடரிகளை நம்பி வருகின்றன. ஏனெனில் மரத்தினால் செய்யப்பட்ட தன் கைப்பிடியைக்காட்டி “ நானும் உங்களில் ஒருவன்தான்” என கோடாரி ஏமாற்றுவதை மரங்கள் நம்புகின்றன. - நன்றி – துருக்கிய பழமொழி

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி

வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கி இன்னொரு தோளுக்காக காத்துக் கொண்டிருக்கிறது! வீரப்பன் யானைத் தந்தந்களை கடத்திய போது இந்திய அரசால் கொல்லப்படவில்லை. வீரப்பன் சந்தன மரங்களை வெட்டியபோதும் இந்திய அரசால் கொல்லப்டவில்லை. வீரப்பன் பொலிசாரைக் கொன்றபோதும்கூட இந்திய அரசால் கொல்லப்படவில்லை. ஆனால் வீரப்பன் தமிழ்நாடு விடுதலையை முன்வைத்ததும் உடனடியாக இந்திய அரசால் சதி செய்து கொல்லப்பட்டார். தமிழ்நாடு விடுதலையை முன்வைக்கும் பலர் உயிரோடுதானே இருக்கிறார்கள். அப்படியிருக்க வீரப்பனை மட்டும் கொன்றார்கள் என்று எப்படி சொல்ல முடியும்? உண்மைதான். நல்ல கேள்விதான். இதற்கு காரணம் வீரப்பன் தோளில் தொங்கிய துப்பாக்கியே. வீரப்பனின் துப்பாக்கி யானைகளை சுட்டுக் கொன்ற போது இந்திய அரசு கவலை கொள்ளவில்லை. வீரப்பனின் துப்பாக்கி பொலிசாரை சுட்டுக் கொன்றபோதும்கூட இந்திய அரசு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் வீரப்பன் துப்பாக்கி தமிழ்நாடு விடுதலைக்காக சுடப் போகிறது என்று அறிந்ததும் உடனடியாக இந்திய அரசால் கொல்லப்பட்டார். கொலைகாரன், கொள்ளைக்காரன், கடத்தல்காரன் என்று அழைக்கப்படும் வீரப்பன் முன் வைத்த கோரிக்கைகள் சில, (1) 10ம் வகுப்புவரை தமிழ் வழிக் கல்வி வேண்டும் (2) வாசாத்தியில் பாதிக்கப்ட்ட பெண்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் (3) தடா சட்டத்தில் அடைக்கப்பட்ட அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் (4) பெங்களுரில் மூடப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திறக்க வேண்டும் (5) காவிரி பிரச்சனை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். புரட்சிதலைவி என்று அழைக்கப்பட்ட ஜெயா அம்மையார் சிறையில் அடைக்கப்பட்டபோது முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு, (1)தனக்கு சுகர், மூட்டுவலி இருப்தால் சலுகை தர வேண்டும் (2)சிறையிலும் தன்கூட சசிகலா இருக்க அனுமதிக்க வேண்டும் (3)வயது மூப்பு காரணமாக ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் தமிழ் மக்களே! இப்போது புரிகிறதா ஏன் வீரப்பன் கொல்லப்பட்டார் என்று? குறிப்பு – 18.10.2020 வீரப்பன் நினைவு தினத்தை முன்னிட்டு இது ஒரு மீள்பதிவு.

ராதிகா அம்மையாரின் உணர்வுகளை பாராட்டுகிறோம்!

•ராதிகா அம்மையாரின் உணர்வுகளை பாராட்டுகிறோம்! விஜய் சேதுபதி முரளி வேடத்தில் நடிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்கள் “வேலை அற்றவர்கள்” என நடிகை ராதிகா அம்மையார் தெரிவித்துள்ளார். சிங்கள அரசுக்கு ஆதரவான முரளியின் படம் வெளிவரவேண்டும் என ராதிகா அம்மையாரின் உணர்வுகளை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. ராதிகா அம்மையாரின் தாய் சிங்களம் என்கிறார்கள். ராதிகா அம்மையாரின் தாய் மொழி சிங்களம் சிங்களம் என்கிறார்கள். ராதிகா அம்மையாரின் தாய் நாடு இலங்கை என்கிறார்கள். அப்படியாயின் ராதிகா அம்மையார் தன் தாய் இனத்தின் மீதும் தன் தாய் மொழி மீதும் தன் தாய் நாட்டின் மீதும் கொண்டிருக்கும் பற்று உண்மையில் பாராட்டுக்குரியதே. அதுவும் தமிழ் நாட்டில் வந்து இருந்துகொண்டு, தமிழ்நாட்டில் பிழைத்துக்கொண்டு, தமிழன் சோற்றைத் தின்றுகொண்டு இத்தனை தைரியமாக தமிழர்களை “வேலை அற்றவர்கள்” என்று கூறுவது உண்மையில் பாராட்டுக்குரியது. அவர் முதலில் ஒரு மலையாள நடிகரை திருமணம் செய்தார் என்கிறார்கள். அடுத்து ஆங்கிலேயரை திருமணம் செய்தார் என்கிறார்கள். அதன்பின்னர் ஒரு தமிழ் நடிகரை திருமணம் செய்தார் என்கிறார்கள். இந்த அம்மையார் எத்தனை திருமணம் செய்தார் என்பதல்ல மாறாக எத்தனை திருமணம் செய்தாலும் அவர் தன் தாய் மொழி, இனம் மீதான பற்றை விட வில்லை என்பதே கவனிக்க வேண்டிய விடயம் ஆகும். இனியாவது இந்த அம்மையாரைப் பார்த்தாவது தமிழர்களுக்கு தம் இனம் மீது, தம் மொழி மீது. தம் நாட்டின் மீது பற்று வர வேண்டும். கர்நாடகாவில் போய் இருந்துகொண்டு யாராவது கன்னடர்கள் வேலை அற்றவர்கள் என்று கூறமுடியுமா? அல்லது கூறிவிட்டு கர்நாடகாவில் இருந்துவிட முடியுமா? இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே வந்து இருந்துகொண்டு தமிழனுக்கு எதிராக கருத்து சொல்ல முடியும். ஏனெனில் வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்று தமிழன் பெருமையாக நினைப்பதை இவர்கள் பலவீனமாக பார்க்கிறார்கள். குறிப்பு – ராதிகா அம்மையார் முரளி படத்தை ஏன் தன் சிங்கள மொழியில் எடுத்து இலங்கையில் திரையிடக்கூடாது?

ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை ஈழத் தமிழர்கள் எப்படி எதிர்க்க துணிந்தார்கள்?

•ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்தை ஈழத் தமிழர்கள் எப்படி எதிர்க்க துணிந்தார்கள்? அமெரிக்காவை விரட்டியடித்த வியட்நாமியர்கள் போல் ரஸ்சியாவை விரட்டியடித்த ஆப்கானிஸ்தானியர் போல் இந்தியாவை விரட்டியடித்த ஈழத் தமிழர்கள் என்பதும் உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்டது. வியட்நாமிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் பல நாடுகள் உதவி புரிந்தன. ஆனால் எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் ஈழத் தமிழர்கள் இந்திய ராணுவத்தை விரட்டியடித்தனர். பலரும் ஆச்சரியத்துடன் எழுப்பும் கேள்வி “இந்த துணிவு ஈழத் தமிழர்களுக்கு எப்படி வந்தது? ஏனெனில் டாங்கிகள் பீரங்கள் மற்றும் போர் விமானங்களுடன் வந்த ஒரு லட்சத்து இருபதாயிரம் இந்திய ராணுவத்துடன் மோதுவதென்பது தற்கொலைக்கு ஒப்பானதே என்றுதான் எல்லோரும் கருதினார்கள். ஏனெனில் அப்போது புலிகள் அமைப்பில் இருந்த உறுபினர்களின் எண்ணிக்கை அண்ணளவாக 1000 பேர்கூட இல்லை. ஆனாலும் இந்திய ராணுவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ் மக்கள் முழு ஆதரவு வழங்கி வெற்றியை பெற்றார்கள். தமிழ் மக்கள் எப்படி இவ்வாறு துணிந்தார்கள் என்பதற்கு விடை காணுவதாயின் ஈழத் தமிழர்களின் வரலாற்றை கொஞ்சம் புரட்டி பார்க்க வேண்டும். 738 மைல்களுக்கு அப்பால் உள்ள அந்தமான் தீவுகளையும் 227 மைல்களுக்கு அப்பால் உள்ள இலட்ச தீவுகளையும் இந்தியாவுடன் இணைத்த ஆங்கிலேயர்களால் வெறும் 18 மைல்கள் அப்பால் இருந்த இலங்கையை இந்தியாவுடன் ஏன் இணைக்க முடியவில்லை என்பதை அறிய வேண்டும். இந்திய சுதந்திரம் பெற்ற அதே காலப் பகுதியில் இலங்கையும் எப்படி சுதந்திரம் பெற்றது என்பதை அறிய வேண்டும். ஏனெனில் அதே காலப்பகுதியில் இலங்கையை விட பெரிய நாடுகள் பல சுதந்திரம் பெறாமல் இருந்தன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்கூட 100 வருடங்களுக்கு மேல் இலங்கையை ஏன் வைத்திருக்க முடியவில்லை என்பதையும் அறிய வேண்டும். ஈழத் தமிழர்கள் ஏன் தமக்கு தனி ராஜதானிகளை கொண்டிருந்தார்கள் என்பதை அறிய வேண்டும். இவற்றில் இருந்து, இலங்கை மக்கள் குறிப்பாக ஈழத் தமிழர்கள் வீரம் செறிந்த போராட்டத்தின் சொந்தக்காரர்கள் என்பதும் அவர்கள் ஒருபோதும் அடிமையாக வீழ்ந்து கிடந்து விடமாட்டார்கள் என்பதையும் அறிந்து கொள்ள முடியும். இத்தகைய வீர வரலாற்றை கொண்ட ஈழத் தமிழர்கள் இந்திய ராணுவத்தை எதிர்த்து போராட துணிந்தது ஆச்சரியம் இல்லை. மாறாக அவ்வாறு போராட துணியவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும். குறிப்பு- இது ஒரு மீள்பதிவு ஆகும். 21.10.2020 யன்று இந்திய ராணுவத்தால் யாழ் மருத்துவமனையில் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவு தினம் ஆகும்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில் “தமிழீழம்” கிடைத்திருக்குமா?

•ராஜீவ் காந்தி கொல்லப்பட்டிருக்காவிடில் “தமிழீழம்” கிடைத்திருக்குமா? மழை பெய்தால் புற்றில் இருந்து பாம்புகள் கிளம்பி வருவதுபோல் ராஜிவ்காந்தி விடயம் வந்துவிட்டால் சிலர் ஓடிவந்து முகநூலில் விஷம் கக்குகின்றனர். ராஜீவ்காந்தியை கொன்றிருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும். பிரபாகரன் தமிழீழத்தின் பிரதமர் ஆகியிருப்பார் என்றெல்லாம் இவர்கள் எழுதுகின்றனர். இதே இவர்கள்தான் இந்திராகாந்தி இறந்திருக்காவிட்டால் தமிழீழம் கிடைத்திருக்கும், எம.ஜி.ஆர் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும் என்றும் கதை எழுதுபவர்கள். ஆனால் இந்திராகாந்தி உயிரோடு இருந்திருந்தாலும் தமிழீழம் கிடைக்க அவர் உதவியிருக்கமாட்டார் என்பதே உண்மை. இந்திராகாந்தி காலத்தில்தான் ஈழப் போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதமும் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் அப்போது பயிற்சி பெற்ற போராளிகளுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் தமிழீழம் பெற இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது என்பதை இந்திய அரசு உறுதியாக தெரிவித்திருந்தது. தமிழீழத்தை இந்தியா ஆதரிக்கவில்லை என்பது மட்டுமல்ல தமிழ் மக்கள் தாங்களாகவே போராடி தமிழீழம் பெறுவதையும் இந்தியா அனுமதிக்காது என்பதை அமிர்தலிங்கம் உட்பட அனைத்து ஈழத்து தமிழ் தலைவர்களும் உணர்ந்தேயிருந்தார்கள். அதனால்தான் அப்போது இலங்கை தேசியபந்தோபஸ்து அமைச்சராக இருந்த அத்துலத்முதலி இலங்கை பாராளுமன்றத்தில் “ ஒருவேளை சிங்களவர்கள் தமிழீழத்தை கொடுக்க முன்வந்தாலும் இந்தியா அனுமதிக்காது என்பதை ஈழப் போராளிகள் உணர வேண்டும்” என்று பேசியிருந்தார். அதேபோன்று ராஜீவ் காந்தி; பிரதமராக இருந்த காலத்திலும் தமிழீழத்தை இந்திய அரசு ஒருபோதும் ஆதரிக்கவில்லை. எனவே ராஜிவ் காந்தியைக் கொன்றிருக்காவிடில் தமிழீழம் கிடைத்திருக்கும் என்று சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வடக்கு கிழக்குமாகாணசபையின் முதலைமச்சராக இருந்தபோது வரதராஜபெருமாள் தமிழீழ பிரகடனம் செய்திருந்தார். அவர் கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டில்; உரையாற்றிய போது “ இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்கவும் இல்லை.. தமிழீழம் பெற உதவுவதாகவும் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார். அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் அமைப்போம் என்று 1983ல் கூறிய டெலோ இயக்க தலைவர்களும்கூட இந்தியா தமிழீழத்தை ஆதரிக்கவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்கின்றனர். இந்தியா தமிழீழத்தை மட்டுமல்ல ஒரு சமஸ்டி தீர்வைக்கூட ஆதரிக்க முன்வரவில்லை என்பதே உண்மையாகும். இந்தியாவில் இருக்கும் மாநில சுயாட்சி முறையிலான தீர்வைக்கூட ஈழத் தமிழர்கள் பெறுவதை இந்திய அரசு விரும்பவில்லை. அதனால்தான் எந்தவித அதிகாரமும் அற்ற மாகாணசபையை தீர்வாக ஒப்பந்தம் மூலம் ஈழத் தமிழர்களுக்கு இந்தியா திணித்துள்ளது. இந்த ஒப்பந்த மூலம் கிடைத்த வடக்கு கிழக்கு இணைப்பைக்கூட இலங்கை அரசு நீதிமன்றம் மூலம் நீக்கிய போதும்கூட இந்திய அரசு அது குறித்து அக்கறை கொள்ளவில்லை. இதுதான் ஈழத் தமிழர் மீது இந்தியா கொண்டுள்ள அக்கறை. ஆனால் இதை மறைத்து சிலர் ராஜீவ் காந்தியைக் கொன்றிருக்காவிடின் தமிழீழம் கிடைத்திருக்கும் என நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். இனி யாராவது இப்படி விஷத்தைக் கக்கினால் அவர்களை காலில்போட்டு மிதிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. (மீள் பதிவு) 193

தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதானா?

•தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதானா? முரளி படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய சேதுபதியைக் கேட்கும் தமிழர்களை வேலை அற்றவர்கள் என பகிரங்கமாக பொதுவெளியில் ராதிகா அம்மையார் ஏசுகிறார். முரளி படத்தில் நடிப்பதற்கு தனக்கு சான்ஸ் வந்ததாகவும் ஆனால் அதனை தான் நிராகரித்துவிட்டதாகவும் நடிகர் டி.ஜே. அருணாசலம் கூறுகிறார். ராதிகா அம்மையாரின் தாயார் சிங்கள பெண். அருணாச்சலத்தின் தாயார் ஒரு ஈழத்தமிழ் பெண். ராதிகா அம்மையார் முரளி படத்திற்காக குரல் கொடுப்பதற்கும் அருணாச்சலம் அப் படத்தை நிராகரிப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கிறது. அப்படியென்றால் “என்ன இருந்தாலும் தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்களே”. அது இது தானா? சரி அப்படியென்றால், விஜய் சேதுபதியின் சதை ஏன் ஆடவில்லை? அவர் தமிழர் இல்லையா? என்ற கேள்வி இதைப் படிக்கும்போது மனதில் எழலாம். ஆம். விஜய் சேதுபதி தமிழர் இல்லையா? அல்லது நம் முன்னோர்கள் காலம் காலமாக கூறிவந்த பழமொழி தவறா? என்பதை கண்டறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அல்லது, சிலர் கூறுவதுபோல் அவர் சதையும் ஆடத்தான் செய்யும். ஆனால் காட்டப்பட்ட பணம் அதிக தொகை என்பதால் அவர் நாக்கில் எச்சில் ஊறவைத்துவிட்டது என்பது உண்மையாகவும் இருக்கலாம்.

ஜல்லிக்கட்டு மாட்டுக்காக போராடுபவர்கள்

ஜல்லிக்கட்டு மாட்டுக்காக போராடுபவர்கள் ஏன் தண்ணிக்காகப் போராடவில்லை என்று அன்று கேட்டவர்கள் முரளி படத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் ஏன் பல்கலைக்கழகத்திற்காக குரல் கொடுக்கவில்லை என்று இன்று கேட்கிறார்கள். அதுவும் இன்னும் சிலர் தமிழ்தேசியவாதிகள் “பாசிசவாதிகள்” “சங்கிகளைவிட பயங்கரமானவர்கள்” என்றெல்லாம் என்னென்னவோ கூறுகிறார்கள். இவர்கள் எல்லாம் மலையில் ஒரு சிறிய கல்லை தமிழ் மக்கள் உடைத்துக்கொண்டு இருப்பதாக எண்ணுகிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் ஒன்றல்ல (இலங்கை இந்தியா ) இரண்டு பெரிய மலைகளை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ளவில்லை. ஆம். அதனால்தான், ஒரு படத்தை தமிழ் மக்கள் எதிர்ப்பதாக தெரிந்த இவர்கள் கண்களுக்கு இதற்காக தமிழ் மக்கள் ஒன்று சேருகிறார்கள் என்ற உண்மையை தெரிந்துகொள்ள முடியவில்லை. தான் தமிழனாக பிறந்தது குற்றமா என கேட்டு அறிக்கைவிட்ட முரளிதரன் இரண்டுநாளில் தன் படத்தில் இருந்து விஜய்சேதுபதியை விலகும்படி அறிக்கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த நிலையை வெறும் பேஸபுக் மற்றும் டிவிட்டரை வைத்து தமிழ் மக்கள் ஏற்படுதியிருக்கிறார்கள். முரளி படம் எடுக்க முடியவில்லை என்பதை பெரிய தோல்வியாக எதிரிகள் கருத மாட்டார்கள். மாறாக, ஒன்று சேர்ந்து ஒருமித்து பங்களித்தல் என்ற அடுத்த கட்டநிலைக்கு உலகத் தமிழினம் நகருகின்றது என்ற உண்மையே அவர்களுக்கு மிகப்பெரிய அச்சத்தைக் கொடுக்கும். 290

இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் அமைதிப்படையா? ஆக்கிரமிப்பு படையா?

•இலங்கைக்கு வந்த இந்திய ராணுவம் அமைதிப்படையா? ஆக்கிரமிப்பு படையா? மறப்பது மக்கள் இயல்பு. நினைவு படுத்த வேண்டியது எமது கடமை. 2009ல் என்ன நடந்தது என்பதே பலருக்கு மறந்துவிட்ட நிலையில் 1987ல் நடந்தது எப்படி நினைவு இருக்கும்? அதுவும் இன்று முகநூலில் பதிவு எழுதும் சிலர் 1987;ல் பிறந்தே இருக்க மாட்டார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி “ இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு” என்றும் “அமைதிப்படையை எதிர்த்து போரிட்டது ஒரு முட்டாள்தனம்” என்றும் ரீல் சுத்த முனைகின்றனர். •முதலில் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி பார்ப்போம். (1)ஒப்பந்தம் மூலம் இந்தியா அடைந்த அரசியல் இராணுவ நலன்கள் (அ) இலங்கையின் வெளியுறவுகளில் கட்டுப்பாடு செலுத்தும் உரிமை (ஆ)ஒலி ஒளி பரப்புகளை கட்டுப்படுத்தும் உரிமை (இ)திருகோணமலை தளத்தின் மீதான கட்டுப்பாடு உரிமை (ஈ)இலங்கை ராணவத்திற்கு பயிற்சி அளிக்கும் உரிமை,இலங்கை ராணுவம் மீதும் இதர நாடுகளுடனான உறவுகள் மீதும் கட்டுப்பாடு (2)ஒப்பந்தம் மூலம் இந்தியா அடைந்த பொருளாதார நலன்கள் (அ)இந்திய கொருட்களின் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படும் (ஆ)திரிகோணமலை எண்ணெய் குதங்கள் புத்துயிர்ப்பு செய்யப்படும். அதன் செயற்பாட்டிலும் லாபத்திலும் இந்தியாவுக்கு உரிமை அளிக்கப்படும் (இ)சுமார் 400 கோடி ரூபா பெறுமதியான கட்டுமான பணிகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் (ஈ)பெற்றோல் மற்றும் எண்ணெய் கிணறுகள் இந்தியாவுக்கு அளிக்கப்படும் (உ)இலங்கை வங்கி மற்றும் திட்டக்குழு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் உரிமை மூலம் இலங்கை பொருளாதார திட்ட வகுப்பில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு (ஊ)இந்திய ரயில் மற்றும் பேரூந்துகளை விற்பனை செய்யும் வாய்ப்பு இவ்வாறு தமிழர் நலனைவிட இந்திய நலனை கொண்ட ஒப்பந்தத்தை ஈழத் தமிழர்கள் எதிர்த்தது தவறு என்று கூறுகின்றனர். •அடுத்து இந்திய ராணுவம் பற்றி கொஞ்சம் பார்ப்போம் பெரும்பாலானோர் 1987ல்தான் இந்திய ராணுவம் இலங்கை வந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் 1971இலும் இந்திய ராணுவம் இலங்கை வந்தது என்பதை இவர்கள் அறியவில்லை. 1971ல் இந்திராகாந்தியின் ஆட்சி காலத்தில் 2000 இந்திய ராணுவத்தினர் இலங்கை வந்தனர். ஜே.வி.பி கிளர்சியை அடக்குவதாக கூறி அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் சுட்டதில் 6000 சிங்கள இளைஞர்கள் இறந்தார்கள். அடுத்து 1987ல் அமைதிப்படை என்று ஒரு லட்சத்து இருபதாயிரும் இந்திய ராணுவ வீரர்கள் இலங்கைக்கு வந்தார்கள். அமைதிப்படை வந்தபோது தென்னிலங்கைதான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தென்னிலங்கையில்தான் பிரதமர் ராஜீவ் காந்தி துப்பாக்கியால் தாக்கப்பட்டார். வந்தது அமைதிப்படை என்றால் தென்னிலங்கையில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரம் இராணுவத்தில் ஒரு வீரர் கூட தென்னிலங்கையில் நிறுத்தப்படவில்லை. அதேவேளை எதிர்ப்பே தெரிவிக்காத வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில்தான் 10 தமிழருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டார். அதுமட்டுமல்ல, இந்திய ராணுவம் 1965ல் பாகிஸ்தானுடன் நடந்த போர் 22 நாட்களே நடைபெற்றது. 1971ல் வங்கதேசத்தை உருவாக்கிய போர் 14 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் 1987ல் அமைதிப்படை ஈழத்தில் நடத்திய போர் இரண்டரை வருடங்கள் நடைபெற்றது. அதுவும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ருபா வீதம் 5400 கோடி ரூபா செலவு செய்து நடத்தியது. இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் வரலாறு காணாத வரட்சியில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்த வேளை இலங்கையில் இந்திய அமைதிப்படை 5400 கோடி ரூபா செலவு செய்து போர் நடத்தியது. இந்த இந்திய அமைதிப்படையினரால் 10000 மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 800 அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டன. இந்திய ராணுவம் தமிழ் மக்களின் நலனுக்காக இந்த போரை செய்யவில்லை. மாறாக தென்கிழக்காசிய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் மத்தியஸ்தன் என்கிற அரசியல் பாத்திரத்தையும் இப் பிராந்திய வல்லரசு என்கிற இராணுவ பாத்திரத்தையும் அது நிலை நிறுத்திக் கொண்டது. இலங்கைக்கு வந்தது அமைதிப்படை அல்ல. அது இந்திய ஆக்கிரப்புபடை. அதனை ஈழத் தமிழர்கள் எதிர்த்து போரிட்டது சரியே. ஒரு தேசிய இனத்தை அதன் சொந்த மண்ணில் எந்த வல்லரசாலும் தோற்கடிக்க முடியாது என்பதையே ஈழத்தில் தமிழ்மக்கள் செய்து காட்டினார்கள். 102 You, Gulasinganathan Mukunthan, Satha Manoraj and 99 others 14 comments 31 shares

கனிமொழியின் கண்டனம் பாராட்டுக்குரியது!

•கனிமொழியின் கண்டனம் பாராட்டுக்குரியது! விஜய் சேதுபதியின் மகளுக்கு வக்கிர மிரட்டல் விடுத்தவர் மீது கடும் நடிவடிக்கை எடுக்குமாறு கனிமொழி கோரியிருப்பது பாராட்டுக்குரியது. விஜய் சேதுபதி பிரச்சனை பற்றி இதுநாள் வரை எந்த கருத்தும் கூறாமல் மௌனம் காத்த கனிமொழி இப்போது இதற்கு கருத்து கூறியிருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் முகநூலில் யாரோ ஒருவர் மிரட்டல் விட்டதற்கே இந்தளவு சீற்றம் கொண்ட கனிமொழி உண்மையிலேயே தமிழ் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்த மகிந்த ராஜபக்சாவுடன் எப்படி கைகுலுக்கி பரிசில்கள் பெற முடிந்தது? கனிமொழி அவர்களே! “அகதி நாயே! உன் அம்மாவை அனுப்பு ……….” என்று முகநூலில் எழுதும் உங்கள் உடன்பிறப்புகளையாவது உங்களால் கண்டிக்க முடியுமா?

இந்தக் கொடி ஏற்றுக்கொள்ளப்படுமா என்று தெரியவில்லை

இந்தக் கொடி ஏற்றுக்கொள்ளப்படுமா என்று தெரியவில்லை ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒரு கொடி வேண்டும் என்ற கருத்து நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கர்நாடகா தனிக் கொடி வைத்திருக்கிறது. நாகலாந்து தனிப் பாஸ்போர்ட் கூட வைத்திருக்கிறது. ஆனாலும் தமிழன் தனக்கு கொடி வைப்பதை எதிரி விரும்பப்போவதுமில்லை. அனுமதிக்கப்போவதுமில்லை. ஏனெனில் தனிக்கொடி, தனி சின்னம், தனிநாடு என்று தமிழ்த் தேசியம் நகருவது நிச்சயம் எதிரிக்கு அச்சத்தைக் கொடுக்கும் . அதனால் முன்னோக்கி வேகமாக நகரும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தன்னால் இயன்ற அனைத்து தடைகளையும் எதிரி எற்படுத்துவான். எத்தனை தடைகள் போட்டாலும் அத்தனை தடைகளையும் உடைத் தெறிந்து தமிழ்த் தேசியம் முன்னேறும். அது தன் இலக்கை அடையும். அது உறுதி. குறிப்பு – தமிழ்த்தேசியம் பாசிசம், பயங்கரவாதம், இனவாதம் பிரிவினைவாதம், என்றெல்லாம் எழுதிக் குவிக்கப்போகின்றவர்கள் தயவு செய்து அந்த குப்பைகளை எல்லாம் கொண்டுபோய் கர்நாடகாவில் கொட்டவும். 150

இந்திராகாந்தியின் இன்னொரு முகம் அல்லது அவரது உண்மை முகம்!

•இந்திராகாந்தியின் இன்னொரு முகம் அல்லது அவரது உண்மை முகம்! இந்திராகாந்திதானே போராளிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் தந்தவர். அவர் இருந்திருந்தால் தமிழீழம் பெற்று தந்திருப்பார் என்று சிலர் கூறுகின்றனர். இந்திராகாந்தி மட்டுமல்ல மகாத்மா காந்தியே இருந்தாலும் தமிழீழம் அமைய இந்தியா ஒருபோதும் உதவமாட்டாது என்பதே உண்மை. ஆனால் அந்த சிலர் “ பாகிஸ்தானை பிரித்து பங்களாதேஸ் உருவாக்கிய இந்திராகாந்தி இருந்திருந்தால் இலங்கையை பிரித்து தமிழீழம் அமைத்திருப்பார்” என்கிறார்கள். பாகிஸ்தானை பலவீனப்படுத்தவே பங்களாதேஸ் பிரிவினையை இந்திராகாந்தி ஆதரித்தார். இந்திய நலனுக்காகவே இதனை அவர் செய்தார். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழீழ பிரிவினையை ஆதரிப்பது இந்திய நலனுக்கு உகந்தது அல்ல என்றே அவர் கருதினார். அவர் முழு இலங்கையையும் ஆக்கிரமிப்பதற்காகவே ஈழப் போராளிகளுக்கு உதவி செய்தார். அவர் ஒருபுறத்தில் அமிர்தலிங்கத்தையே ஈழத் தமிழர்களின் பிரதிநிதியாக வெளி உலகிற்கு காட்டினார். ஆனால் மறுபுறத்தில் அதே அமிர்தலிங்கம் தடுத்தும் அவரையும்மீறி போராளிகளுக்கு பயிற்சி வழங்கினார். அப்போது ஈழத்தில் 36 போராளிகள் இயக்கங்கள் இருந்தன. ஆனால் இந்திராகாந்தி 5 இயக்கங்களுக்கு மட்டும் பயிற்றி வழங்கினார். இந்த ஜந்து இயக்கங்களை மட்டும் ஏன்? எப்படி? அவர் தேர்ந்தெடுத்தார் என்பது இன்றுவரை தெரியவில்லை. இயக்கங்களுக்கு இந்திய அரசு செய்த உதவி என்பது இயக்கங்களை வீங்கவைத்து பலவீனப்படுத்தும் ஒரு முயற்சி என்ற விமர்சனம் அப்போதே இருந்தது. இந்திராகாந்திதான் போராளிகளுக்கு முதன்முதலாக பயிற்சியும் ஆயுதமும் கொடுத்தார் என்பது தவறு. ஏனெனில் அதற்கு முன்னரே இவர்கள் பயிற்சி வசதி மற்றும் ஆயுதங்களை கொண்டிருந்தார்கள். புளட், ஈபிஆர்எல்எவ், ஈரோஸ் புலிகள் அமைப்புகள் ஏற்கனவே லெபனானில் பாலஸ்தீன இயக்கங்களிடம் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்கள். ரெலோ இயக்கம் தமிழ்நாட்டில் தனியாக பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார்கள். ஈழத்தில் வன்னியில் சில இயக்கங்களுக்கு இரகசிய பயிற்சிமுகாம்கள் இருந்திருக்கின்றன. எனவே இந்திராகாந்தி உதவி செய்வதற்கு முன்னரே இயக்கங்களிடம் பயிற்சி வசதி மற்றும் ஆயுதங்கள் இருந்தன. இந்திராகாந்தி உதவி செய்யாவிட்டாலும் இயக்கங்கள் இந்த வசதிகளை பெருக்கிக்கொள்ளும் திறமை அவர்களிடம் இருந்தது. இதை புலிகள் பின்னாளில் இந்தியாவை மீறி ஈழத்தில் செய்துகாட்டியிருக்கின்றார்கள். அவர்கள் இந்திய உதவி இன்றி பலமான இயக்கம் ஒன்று வளர முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். இந்தியா பயிற்சி வழங்கிய போராளிகளின் மொத்த எண்ணிக்கை 800 பேர்அளவில்தான் இருக்கும் . பயிற்சி பெற்ற பத்து போராளிகளுக்கு தலா ஒன்று அளவில்தான் ஆயுதங்களும் வழங்கினார்கள். இது குறித்து கேட்டபோது தாக்குதலுக்கு ஆயுதம் தரவில்லை. தற்காப்புக்கு மட்டுமே ஆயுதம் தருவதாக கூறினார்கள். ஆனால் இந்தியா போராளிகளுக்கு கொடுத்த நெருக்கடியோ இவற்றைவிட பலமடங்கு அதிகம். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரித்த இந்திய அரசு ஈழ விடுதலை இயக்கங்களை ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினர் சென்னையில் அலுவலகம் அமைத்து வெளிப்படையாக இயங்க அனுமதித்த இந்திய அரசு ஈழப்போராளி இயக்கங்களை அவ்வாறு இயங்க அனுமதிக்கவில்லை. சென்னையில் இருந்த பாலஸ்தீன விடுதலை இயக்த்தினரின் செலவுகளுக்கு இந்திய அரசு மாதா மாதம் பணம் வழங்கியது. ஆனால் ஈழப் போராளிகளுக்கு பணம் வழங்காதது மட்டுமன்றி அவர்களிடமிருந்த பணத்தையும் பல சமயங்களில் பறித்தது. ரெலோ இயக்கம் சங்கானை வங்கியில் கொள்ளையடித்த 50 லட்சம் ரூபா பெறுமதியான நகைகளை தமிழ்நாட்டில் இருக்கும் தமது போராளிகளின் சாப்பாட்டு செலவிற்காக கொண்டு சென்றது. ஆனால் தமிழ்நாடு பொலிஸ் அதனை பறித்துக்கொண்டது. அதேபோல் தம்பாபிள்ளை மகேஸ்வரன் இயக்கத்தினர் காத்தான்குடி வங்கியில் கொள்ளையடித்த பணத்தை தமிழ்நாட்டில் வைத்திருந்தபோது தமிழ்நாடு பொலிஸ் அவர்களிடம் இருந்து ஒன்றரைக்கோடி ரூபா பெறுமதியான தங்கத் தகடுகளை பறித்துக்கொண்டது. அதுமட்டுமன்றி இபிஆர்எல்எவ் இயக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்த அலன் தம்பதிகள் என்ற வெள்ளை இனத்தவர்களை கடத்தினார்கள். அவர்கள் விடுதலை செய்யவேண்டும் என்றால் சிறையில் உள்ள போராளிகளை விடுதலை செய்யவேண்டும் என்று அவர்கள் கோரினார்கள். அதன்படி அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா சிறையில் வைத்திருந்த போராளிகளை விடுதலை செய்ய முன்வந்தார். ஆனால் இந்திராகாந்தியோ போராளிகளை விடுதலை செய்ய வேண்டாம் என்று ஜெயவர்த்தனாவிடம் கூறிவிட்டு சென்னையில் இருந்த ஈபிஆர்எல்எவ் இயக்க தலைவர்களை இரகசியமாக கைது செய்து உதைத்து அலன் தம்பதிகளை விடுதலை செய்யவைத்தார். அதேபோல் புளட் இயக்கம் வெளிநாட்டில் இருந்து இரகசியமாக ஆயுதங்களை இறக்குமதி செய்தது. ஆனால் இதை அறிந்த இந்திய அரசு தமிழ்நாடு பொலிஸ் மூலம் அவற்றை கைப்பற்றிக் கொண்டது (மீள் பதிவு) 124 You, Giri Mary, Eelapriyan Balan and 121 others 10 co

தோழர் பல்வீந்தர் சிங் கொலை

•தோழர் பல்வீந்தர் சிங் கொலை நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? 1985ல் கேரள நக்சலைட் இயக்க தலைவர் தோழர் வேணு அவர்களுடன் உரையாடும்போது பஞ்சாபில் “தோழர்” என்றால் “துரோகி” என்று அர்த்தம் என்றார். இதைக் கேட்டதும் நான் ஆச்சரியம் அடைந்தேன். அப்போது இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. பஞ்சாபில் தோழர் பல்வீந்தர் சிங் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் கம்யுனிஸ் கட்சி வாலிபர் சங்க தலைவராகவும் மாநில கமிட்டி உறுப்பினராகவும் இருந்தவேளை அரசுடன் சேர்ந்து பல சீக்கிய மக்களை கொன்றுள்ளார். காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக போராடுவதாக கூறிக்கொண்டு அரசுடன் சேர்ந்து பல படுகொலைகளை இவர் செய்துள்ளார். இதனால் இவருக்கும் மனைவிக்கும் மற்றும் தம்பி மற்றும் தம்பி மனைவி என நான்கு பேருக்கும் சௌர்யா சக்ர விருது வழங்கி அரசு கௌரவித்துள்ளது. பொதுவாக இவ் விருது ராணுவத்தினருக்கே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் ராணுவம் அல்லாதவர்கள் இவ் விருதைப் பெற்றது இவர்கள் மட்டுமே. இவர் மீது 42 தடவைகளுக்குமேல் கொலை முயற்சி நடைபெற்றது. இவருக்கு பாதுகாப்பு அளித்துவந்த அரசு கடந்த வருடம் பாதுகாப்பை நீக்கிவிட்டது. இப்போது இவர் கொல்லப்பட்டுள்ளார். இவர் கொலை எமக்கு புரியவைப்பது என்னவெனில், (1)கம்யுனிஸ்டுகள் அரசுடன் சேர்ந்து காட்டிக்கொடுத்து செயற்பட்டதால் பஞ்சாப் மக்கள் “தோழர்” என்றால் “துரோகி” என்று கருதுகிறார்கள். (2)சுமார் 40 வருடம் சென்றாலும் துரோகிகள் மன்னிக்கவோ மறக்கப்படவோவில்லை. தண்டிக்கப்படுகிறார்கள். (3)அரசு தமது தேவைக்கு கறிவேப்பிலைபோல் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடும். (4)கேரளா, மேற்குவங்கம் மட்டுமன்றி பஞ்சாபிலும் கம்யுனிஸ்டுகள் அரச பயங்கரவாதத்துடன் சேர்ந்து பங்காளிகளாக செயற்பட்டுள்னர். (5)தமிழ்நாட்டில் அரச பயங்கரவாதத்தை கண்டிக்கும் கம்யுனிஸ்டுகள் தமது இத் தோழர்களின் பயங்கரவாத்தை முதலில் கண்டிக்க வேண்டும். செய்வார்களா? 140 You, கமலா பாலன், Gulasinganathan

33 வது நினைவு தினம்

• 33 வது நினைவு தினம்! 1987 அக்டோபர் 21 ம் திகதி யாழ் மருத்துவமனையில் பணிபுரிந்த 21 ஊழியர்கள் உட்பட மொத்தம் 68 பேர் இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்டனர். இதுவரை இந்த கொலைக்கு இந்திய தரப்பில் இருந்து யாரும் நீதியோ நியாயமோ வழங்கவில்லை. வருத்தம்கூட தெரிவிக்கவும் இல்லை ஆனால் இந்த கொலைகளுக்கு காரணமான ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை மன்னிக்கவும் முடியாதாம். மறக்கவும் முடியாதாம். ஏனெனில் ராஜீவ்காந்தி உயிர்தான் உயிராம். 68 தமிழன் உயிர் மயிராம். போங்கடா நீங்களும் உங்கட நியாயமும்!

குமிழி – நாவல் அறிமுகம்!

குமிழி – நாவல் அறிமுகம்! புளட் இயக்கத்தில் இருந்த ரவி என்னும் போராளியால் எழுதப்பட்டு விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் நாவல் இது. நாவல் என்றாலும்கூட இது ஒரு ஆவணமாக கருத்தக்கூடிய வகையில் இருக்கின்றது. இதுவரை வந்த எழுத்துக்கள் பெரும்பாலும் புலிகள் செய்த சகோதரப்படுகொலை பற்றியே வந்திருக்கின்றன. ஆனால் இந் நாவலில் புளட் இயக்கம் செய்த சகோதரப்படுகொலை பற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சுழிபுரத்தில் ஏழு புலிப் போராளிகள் புளட் அமைப்பினரால் கொல்லப்பட்டு அவர்களின் ஆணுறுப்பு வெட்டி வாயில் செருகி புதைக்கப்பட்ட சம்பவம் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இந்திய புலனாய்வு அமைப்பானது ஈழ விடுதலை இயக்கங்களுக்குள் எந்தளவு ஊடுருவி சீரழித்தன என்பதும் இந் நாவலில் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் புளட் இயக்கத்தில் மத்திய கமிட்டி உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பதையும் அவர் பின்னர் இந்திய அமைதிப்படையுடன் வந்து திருகோணமலையில் இருந்து செயற்பட்டதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையறிந்த இலங்கை அரசு அந்த நபர் இலங்கை வருவதை தற்போது தடை செய்திருப்பதையும் இந் நாவல் பதிவு செய்திருக்கிறது. தராக்கி சிவராம் புளட் இயக்கத்தில் இருந்தபோது செய்த கொலைகள் பற்றியும் பின்னர் அவர் புலி ஆதரவாளராக ஊடகவியலாளராக இருந்தபோது புளட் இயக்கத்தால் கொழும்பில் கொலை செய்யப்பட்டதும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் சிவராமுக்கு முன்னர் இதே கொழும்பில் தலைவர் உமா மகேஸ்வரன் புளட் இயக்கத்தைச் சேர்ந்த சிலரால் கொல்லப்பட்ட விடயம் ஏன் இந்த நாவலில் குறிப்பிடப்படவில்லை என்பது புரியவில்லை. இது ஒரு நாவல். அதுவும் ஒரு சாதாரண போராளியாக மிகவும் சொற்ப காலங்கள் இருந்தவரால் தன் அனுபவங்களை தொகுத்து எழுதப்பட்டுள்ளது. எனவே இதில் புளட் இயக்க கதைகள் முழுவதும் இடம் பெறும் என எதிர்பார்க்க முடியாதுதான். ஆனாலும் இது பல முன்னாள் புளட் போராளிகளுக்கு ஒரு உந்துதலைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. அவ்வாறு பலரும் எழுத முன்வரும்போது புளட் அமைப்பின் போராட்டம் பற்றிய பல விடயங்கள் மக்கள் அறியக்கூடியதாக இருக்கும் குறிப்பாக, பிரபாகரன் கொலைகள் குறித்து விமர்சித்து புதியபாதை அமைத்த புளட் இயக்கம் பின்னர் அது எப்படி ஒரு கொலைகார இயக்கமாக மாறியது என்பதற்குரிய விடை அப்போது கிடைக்கும் என்று நம்புவோமாக. கலகம் செய்ய துணிந்தவனுக்கு உதவி செய்வதாகவே இலக்கியம் இருக்க வேண்டும் என்று மார்க்சிம் கார்க்கி கூறுகிறார். அவர் எழதிய தாய் நாவல் இன்றுவரை அவ்வாறே இருக்கிறது. அதேபோல் ஈழப் போராட்டம் பற்றிய பதிவுகள் இன்னொரு போராட்டம் முன்னெடுப்பதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். அதாவது நாம் திரும்பிப் பார்ப்பது முன்னோக்கி சரியாக நகருவதற்காக என்பது ஒவ்வொரு எழுத்தாளர் மனதிலும்; இருக்க வேண்டும். 151 You, கமலா பாலன், Giri Mary and 148 others 48 com

யாராவது கூற முடியுமா?

விவாதத்தின் தொடக்கத்தில் "No for 20A" என ஸ்ரிக்கர் அணிந்து பாராளுமன்றத்துக்கு வருகை தந்திருந்த முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், விவாத முடிவில் 20A இற்கு ஆதரவாக வாக்களித்தார். கடைசி நிமிடத்தில் அவரது முடிவை மாற்றிய அந்த “டீல்” எத்தனை கோடி? யாராவது கூற முடியுமா?