Monday, October 26, 2020

இந்திய படையின் பிரம்படிப் படுகொலைகள்

•இந்திய படையின் பிரம்படிப் படுகொலைகள் இந்திய தூதுவரையும் மீறி நினைவு கூர்ந்த தமிழ் மக்கள்! 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12ம் திகதி யாழ்ப்பாணம் பிரம்படி வீதியில் 50க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்டனர். யாழ் இந்திய தூதரின் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் இந்த இடத்தில் கொல்லப்பட்ட தம் உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்துள்ளனர். யாழ் இந்திய தூதர் தலைவர்களை விலைக்கு வாங்கலாம். ஆனால் மக்களை ஒருபோதும் வாங்க முடியாது என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் இந்திய படை செய்த அக்கிரமங்களை தங்களால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது என்பதே தமிழ் மக்கள் இந்திய தூதருக்கு அளித்துள்ள பதில் ஆகும். இதை இனியாவது இந்திய தூதரும் இந்திய அரசின் விசுவாசிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment