Monday, October 26, 2020

பிரபாகரன் பயங்கரவாதி

பிரபாகரன் பயங்கரவாதி எனவே பிரபாகரன் மகனும் பயங்கரவாதிதான். அதனால்தான் சுட்டுக்கொன்றோம் என்று இதுவரை திமிராக கூறிவந்தார்கள். பிரபாகரன் மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். ஆனாலும் நாங்கள் அவனை சுட்டுக் கொல்லவில்லை என்று இப்போது கூற ஆரம்பித்துள்ளனர். பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணிக்கு கட்டளை தளபதியாக செயற்பட்டதாக முன்னாள் ராணுவதளபதி சரத்பொன்சேகா கூறியுள்ளார். அது மட்டுமன்றி, பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை புலிகளே கொன்றிருக்க கூடும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் கூறியிருப்பதை சிங்கள மக்கள்கூட நம்பப்போவதில்லை. இவ்வாறு இவர்கள் இப்போது கூறுவதற்கு காரணம் தமிழ் மக்கள் குறிப்பாக புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்து இனப் படுகொலைக்கு நீதி கோரி வலியுறுத்தி வருவதே. இந்திய அரசு தங்களை நிச்சயம் காப்பாற்றும் என இந்த இனப்படுகொலையாளிகள் இதுவரை நம்பியிருந்தார்கள். ஆனால் இந்திய அரசால்கூட காப்பாற்ற முடியாத ஒரு சர்வதேச சூழ்நிலையை தமிழ் மக்கள் உருவாக்குவார்கள் என்பதை இவர்கள் கணிக்கத் தவறிவிட்டார்கள்.

No comments:

Post a Comment