Monday, October 26, 2020

அடைத்து வைத்திருக்கும் புலிக்கு

அடைத்து வைத்திருக்கும் புலிக்கு மாட்டிறைச்சி வழங்கக்கூடாது என்று அசாமில் சங்கிகள் போராட்டம் செய்துள்ளனர். இவர்கள் மாட்டுப்பாலை சாமிக் கல்லுக்கு ஊற்றுவார்கள். மாட்டு மூத்திரத்தை குடிப்பார்கள். ஆனால் புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. அதை இந்த முட்டாள்களுக்கு எப்படி புரிய வைப்பது? தான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை புலிகளுக்கு உண்டு. எனவே இது குறித்து பேச்சுவார்த்தை செய்வதற்காக போராட்டம் செய்யும் சங்கிகளை புலிகளின் கூண்டுக்குள் அனுப்ப வேண்டும். இல்லையேல் போராட்டம் செய்பவர்களின் இடத்தில்; புலிகளை திறந்துவிட வேண்டும். இந்த நல்ல முடிவை அசாம் அரசு எடுக்கும் என நம்புவோம். குறிப்பு – மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனோ நோய் குணமாகும் என்று கூறிய அசாம் மாநில எம்எல்.ஏ யை பொலிஸ் கைது செய்துள்ளது.

No comments:

Post a Comment