Monday, October 26, 2020

தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதானா?

•தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதானா? முரளி படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய சேதுபதியைக் கேட்கும் தமிழர்களை வேலை அற்றவர்கள் என பகிரங்கமாக பொதுவெளியில் ராதிகா அம்மையார் ஏசுகிறார். முரளி படத்தில் நடிப்பதற்கு தனக்கு சான்ஸ் வந்ததாகவும் ஆனால் அதனை தான் நிராகரித்துவிட்டதாகவும் நடிகர் டி.ஜே. அருணாசலம் கூறுகிறார். ராதிகா அம்மையாரின் தாயார் சிங்கள பெண். அருணாச்சலத்தின் தாயார் ஒரு ஈழத்தமிழ் பெண். ராதிகா அம்மையார் முரளி படத்திற்காக குரல் கொடுப்பதற்கும் அருணாச்சலம் அப் படத்தை நிராகரிப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கிறது. அப்படியென்றால் “என்ன இருந்தாலும் தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும் என்பார்களே”. அது இது தானா? சரி அப்படியென்றால், விஜய் சேதுபதியின் சதை ஏன் ஆடவில்லை? அவர் தமிழர் இல்லையா? என்ற கேள்வி இதைப் படிக்கும்போது மனதில் எழலாம். ஆம். விஜய் சேதுபதி தமிழர் இல்லையா? அல்லது நம் முன்னோர்கள் காலம் காலமாக கூறிவந்த பழமொழி தவறா? என்பதை கண்டறிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அல்லது, சிலர் கூறுவதுபோல் அவர் சதையும் ஆடத்தான் செய்யும். ஆனால் காட்டப்பட்ட பணம் அதிக தொகை என்பதால் அவர் நாக்கில் எச்சில் ஊறவைத்துவிட்டது என்பது உண்மையாகவும் இருக்கலாம்.

No comments:

Post a Comment