Monday, October 26, 2020

இந்தக் கொடி ஏற்றுக்கொள்ளப்படுமா என்று தெரியவில்லை

இந்தக் கொடி ஏற்றுக்கொள்ளப்படுமா என்று தெரியவில்லை ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒரு கொடி வேண்டும் என்ற கருத்து நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கர்நாடகா தனிக் கொடி வைத்திருக்கிறது. நாகலாந்து தனிப் பாஸ்போர்ட் கூட வைத்திருக்கிறது. ஆனாலும் தமிழன் தனக்கு கொடி வைப்பதை எதிரி விரும்பப்போவதுமில்லை. அனுமதிக்கப்போவதுமில்லை. ஏனெனில் தனிக்கொடி, தனி சின்னம், தனிநாடு என்று தமிழ்த் தேசியம் நகருவது நிச்சயம் எதிரிக்கு அச்சத்தைக் கொடுக்கும் . அதனால் முன்னோக்கி வேகமாக நகரும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தன்னால் இயன்ற அனைத்து தடைகளையும் எதிரி எற்படுத்துவான். எத்தனை தடைகள் போட்டாலும் அத்தனை தடைகளையும் உடைத் தெறிந்து தமிழ்த் தேசியம் முன்னேறும். அது தன் இலக்கை அடையும். அது உறுதி. குறிப்பு – தமிழ்த்தேசியம் பாசிசம், பயங்கரவாதம், இனவாதம் பிரிவினைவாதம், என்றெல்லாம் எழுதிக் குவிக்கப்போகின்றவர்கள் தயவு செய்து அந்த குப்பைகளை எல்லாம் கொண்டுபோய் கர்நாடகாவில் கொட்டவும். 150

No comments:

Post a Comment