Monday, October 26, 2020

மகிந்தவுக்கு வந்துள்ள “நோய்” எது?

•மகிந்தவுக்கு வந்துள்ள “நோய்” எது? இந்திய பிரதமர் மோடியுடன் பேசிய விடயங்கள் தனக்கு ஞாபகம் இல்லை என்று பிரதமர் மகிந்த ராஜபக்சா கூறியுள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னர் அதுவும் அயல் நாட்டு பிரதமருடன் பேசிய விடயம் ஞாபகம் இல்லை என்றால் நிச்சயம் இது ஒரு நோயாக இருக்கவே வாய்ப்பு இருக்கிறது. ஆனால் நோய் மிக மோசமாக முற்றவில்லை என்பது ஒரு ஆறுதல். ஏனெனில் அவர் இந்திய பிரதமருடன் தான் பேச வில்லை என்று கூறவில்லை அல்லவா? இNதுபோன்று கொலை வழக்கு விசாரணையின்போது இவருடைய மனைவி தனக்கு சிங்கள மொழியே மறந்து போய்விட்டது என்று கூறியிருக்கிறார். இவர்களுக்கு வந்திருக்கும் இது என்ன நோய் என்று யாராவது மருத்துவர்கள் விபரமாக கூறினால் மக்களுக்கு பிரயோசனமாய் இருக்கும். குறிப்பு - ஞாபகம் இல்லை என்று கூறியதன் மூலம் தான் தப்பித்துவிட்டதாக மகிந்த கருதலாம். ஆனால் அவர் எந்த இனவாதத்தின் மூலம் பதவிக்கு வந்தாரோ அந்த இனவாதமே அவரை பதவியில் இருந்து விரட்டப் போகிறது. 110

No comments:

Post a Comment