Monday, October 26, 2020

அதிசயம். ஆனால் உண்மை!

•அதிசயம். ஆனால் உண்மை! திலீபனை நினைவு கூர அனுமதி வழங்க மறுத்த இலங்கை அரசு இந்திய ராணுவத்தை நினைவுகூர இந்திய தூதுவருக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் இலங்கை இந்திய அரசுகளை மீறி தமிழக மக்கள் திலீபனை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்திய அரசு திலீபனை பயங்கரவாதி என்று கொன்றது. ஆனால் தமிழக மக்கள் திலீபனை தியாகி என்று நினைவு கூர்கின்றனர். திலீபன் தெரு, திலீபன் பஸ் தரிப்பிடம், திலீபன் ஆட்டோ ஸ்டாண்ட், திலீபன் கடை, மட்டுமன்றி பிறக்கும் குழந்தைகளுக்குகூட திலீபன் பெயர் சூட்டி நினைவு கூர்கின்றனர். நான் அறிந்தவரையில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வாறு தமது அரசு கொன்ற இன்னொரு நாட்டவரை எந்த மக்களும் நினைவு கூர்ந்ததில்லை. அதுமட்டுமல்ல, தமது இனம் இன்னொரு நாட்டில் அழியும்போது வேறு எந்த இனமும் 16 பேர் தீக்குளித்து மரணம் அடைந்ததும் இல்லை. இத்தனை அதிசயத்தையும் உலகில் நிகழ்த்தும் ஒரே இனம் தமிழ் இனம் மட்டுமே.

No comments:

Post a Comment