Wednesday, November 30, 2022

கோழிகளால் தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்க முடிகிறது?

•கோழிகளால் தன் குஞ்சுகளை எப்படி பாதுகாக்க முடிகிறது? தன் குஞ்சுகளுக்கு ஆபத்து என்றால் எதிரி எந்தளவு பெரியது என்றாலும் கோழி போராட தயங்குவதில்லை ஏனென்றால் போராடினால் மட்டுமே உயிர் தப்ப முடியும் என்பதைத் தவிர வேறு எதுவும் அதற்கு தெரியாது. அதுமட்டுமல்ல, •குஞ்சுகளைக் காப்பாற்ற போராடுவது பயங்கரவாதம் என்று யாரும் அதற்கு கூறுவதில்லை. •அகிம்சை வழியில் போராடினால் குஞ்சுகளைக் காப்பாற்றலாம் என யாரும் ஏமாற்றுவதில்லை. •இதெல்லாம் போன ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவு என்று யாரும் போதிப்பதில்லை . •எல்லாவற்றுக்கும் மேலாக தன்னை அழிப்பது போர்க்குற்றமா? அல்லது இனப்படுகொலையா? என்று ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை. கோழிகளால் தம் குஞ்சுகளை போராடி பாதுகாக்க முடிகிறது. ஆனால் தமிழனால் தன் இனத்தை பாதுகாக்க முடியவில்லை. தமிழனும் ஒருவேளை கோழியாக பிறந்திருந்தால் தன் இனத்தை காக்க போராடியிருப்பானோ?

இலங்கை இந்திய அரசுகளே!

இலங்கை இந்திய அரசுகளே! இவர்கள் வெறுமனே அழுது விட்டு ஓய்ந்து விடுவார்கள் என்றுமட்டும் நினைத்து விட வேண்டாம். தேவை ஏற்பட்டால் மாபெரும் கந்தக கிடங்காக மாறி வெடிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இவர்கள் நினைத்தால் அன்னைபூபதியாக மாறி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறப்பார்கள். அதுவே இவர்கள் நினைத்தால் தானுவாக மாறி வெடி குண்டை வெடிக்கவைப்பார்கள். இவர்கள் மாவீரர்களை மட்டும் படைக்கவில்லை இவர்கள் மாபெரும் வீர வரலாற்றையும் படைப்பவர்கள்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் கடந்த 16 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதி சிவலிங்கம் ஆரூரன் எழுதிய ஆதுரசாலை நாவலுக்கு சிறந்த தமிழ் இலக்கிய நாவல் விருது வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரியான அவர் சிறையில் 7 தமிழ்நாவல் 1 ஆங்கில நாவல் எழுதியுள்ளார்.

யாழ் புத்தவிகாரை விழாவில்

யாழ் புத்தவிகாரை விழாவில் சிங்கள தளபதியுடன் யாழ் இந்திய தூதர். இந்து ஆலயங்களை இடித்து புத்தவிகாரை கட்டும் சிங்கள பௌத்த அரசுக்கு ஆதரவு அளிக்கிறார் இந்திய தூதர். இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என நம்புபவர்கள் இதற்கு என்ன கூறப்போகிறார்கள்?

செய்தி - யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அரசு தூதரிடம்

செய்தி - யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அரசு தூதரிடம் 400 புத்தகங்களை அன்பளிப்பு செய்துள்ளார் நடிகர் எஸ.வி.சேகர். ஏன் திடீரென்று ஓநாய் ஈழத்து ஆட்டுக்குட்டிகள் மீது அக்கறை கொள்கிறது?

ராம் சேது

•ராம் சேது தன் கையால் தன் கண்ணைக் குத்துவதுபோல் தமிழன் (லைக்கா)பணத்தில் தமிழனுக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் படம் ராம் சேது. ராமர் பாலம் கட்டினார் என்று படம் எடுத்திருக்கிறார்கள். அது மட்டுமன்றி போராளிகளையும் தேவையில்லாமல் இதில் இணைத்து கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். ராமர் பாலத்தில் காணப்படும் திட்டுக்கள் போன்று பல திட்டுக்கள் மன்னார் மற்றும் ராமேஸ்வரம் கடல் பகுதிகளில் உண்டு. கச்சதீவு கூட இப்படியான் ஒரு திட்டுதான். திட்டுக்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது போன்றும் அவற்றில் நீரின் உயரம் 6 இஞ்ச் என்றும் காட்டுகிறார்கள். இது தவறு. திட்டுக்களுக்கிடையே ஆழமான பகுதி மட்டுமல்ல கடுமையான நீரோட்டமும் உண்டு. எனவே படத்தில் காட்டுவது போன்று நடந்து செல்ல முடியாது. ராமர் பாலம் என்பது மக்களின் நம்பிக்கை என்றும் அதனால் அதை உடைக்கக்கூடாது என்கிறார்கள். உலகம் தட்டையானது என்றுகூட மக்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அது உடைக்கப்பட்டது. அதேபோன்று ராமர் கட்டிய பாலம் என்ற நம்பிக்கையும் விஞ்ஞானபூர்வமாக உடைக்கப்பட வேண்டும். ஆனால் ஆரியர்கள் அன்று ராமாயணம் என்ற இதிகாசம் மூலம் உருவாக்கிய நம்பிக்கையை இன்றும் தமிழன் பணத்தில் கட்டிக்காக்க முனைகிறார்கள். ஆரியர் எப்போதும் தந்திரசாலிகளாகவே இருக்கின்றனர்.

பிரிட்டனில் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமன்றி

பிரிட்டனில் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமன்றி ஒவ்வொரு மாதமும் சுமார் பத்தாயிரம் ரூபா உதவி தொகை 16 வயதுவரை வழங்கப்பட்டு வருகிறது. இது நன்கு தெரிந்தும் எதற்காக இவர் திராவிடமாடல் கதை விடுகிறார்? பாவம். இவருக்கும் பசிக்கும்தானே?

முதலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சுப்பக்கா

முதலில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சுப்பக்கா வெளியேற்றப்பட்டார். இப்போது ராதாகிருஸ்ணன் வெளியேற்றப்பட்டிருக்கிறார். வெகுவிரைவில் இந்நிலை சுபவீ, வீரமணி போன்றவர்களுக்கும் ஏற்படும். ஈழத் தமிழருக்கு எதிரான திமுக வின் சுயரூபம் விரைவில் அனைவரும் அறிவர்.

ஒன்று சேர்வோம்

ஒன்று சேர்வோம் ஒருமித்து குரல் கொடுப்போம் இந்தி திணிப்பை முறியடிப்போம் எந்தவிலை கொடுத்தேனும் தாய்மொழி தமிழைக் காப்போம் குறிப்பு - ஈழத்தில் யாழ் இந்திய தூதர் மேற்கொள்ளும் இந்தி திணிப்பை எதிர்ப்போம்.

நடந்தவற்றை மாற்ற முடியாது

நடந்தவற்றை மாற்ற முடியாது ஆனால் மறக்க முடியும் மறக்க முடியாதவற்றை மன்னிக்க முடியும் ஆனால் எம்மால் மறக்கவும் முடியவில்லை மன்னிக்கவும் முடியவில்லை கண்ணில் முட்டும் கண்ணீரைக்கூட சிந்த முடியவில்லை நெஞ்சில் கணன்றுகொண்டிருக்கும் அந்த பெருநெருப்பை அணைத்துவிடுமோ என்று அச்சமாய் உள்ளது.

தாய் பாதுசாம்மாள் 2வது நினைவு தினம்

•தாய் பாதுசாம்மாள் 2வது நினைவு தினம் 1987.09.01 யன்று எந்த தாயும் தன் வாழ்நாளில் கேட்க விரும்பாத செய்தியை அந்த தாய் கேட்டார். தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தி எந்த தாயும் கேட்க விரும்பாத செய்தி மட்டுமல்ல, அது தாங்க முடியாத கொடுமையும் கூட. மகன் இறந்து விட்டான் என்றாலே பொதுவாக எந்த தாயும் தாங்கமாட்டார். அதுவும் தனது ஒரேயொரு மகன் வங்கி கொள்ளையன் என்று அடித்துக் கொல்லப்பட்டான் என்றால் எந்த தாயால் தாங்க முடியும்? ஆம். அந்த கொடும் துயரை 33 வருடங்களாக சுமந்து கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல. தோழர் தமிழரசனின் தாயாரே. தான் வறுமையில் வாடிய போதும் தன் மகன் எதிர்காலத்தில் வசதியாக வாழ வேண்டும் என்று கோவை பொறியியல் கல்லூரியில் விட்டுப் படிப்பித்தவர் இந்த தாய். தான் ஆசையாக பெற்று வளர்த்த மகன் போராட்ட வாழ்வை தேர்ந்தெடுத்தபோதும் அதையிட்டு அவர் ஏமாற்றம் அடையவில்லை. மகனை தேடி வரும் பொலிசார் அவர் கிடைக்கவில்லை என்றவுடன் ஏமாற்றத்தில் தன்னை சித்திரவதை செய்தபோதும் அவர் மகன் மீது கோபம் கொண்டதில்லை. நீண்ட சிறைவாசம் அனுபவித்துவிட்டு வந்த மகன் மீண்டும் போராடச் சென்றபோதுகூட அவர் “போராட்டத்தை விட்டுவிடு” என்று மகனிடம் கூறியதில்லை. அத்தகைய தாயாரிடம் வந்து “உங்க மகன் தமிழரசன் இறந்துவிட்டான்” என்று கூறியபோது அவர் எந்தளவு வேதனையை அனுபவித்திருப்பார்? இவரை ஒருமுறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என விரும்பினேன். முடியவில்லை. ஆனாலும் அவர் மகன் தமிழரசன் குறித்து நான் எழுதிய நூலையாவது அவரிடம் சேர்ப்பிக்க முடிந்ததையிட்டு ஆறுதல் அடைகிறேன். அந்த தாயாரின் இரண்டாவது நினைவு தினம் இன்று ஆகும். அவருக்கு என் அஞ்சலிகள்.

தாய் பாதுசாம்மாள்!

தாய் பாதுசாம்மாள்! ஒரு போராளியாக இருப்பது கடினம் என்றால் அதைவிடக் கடினமானது அப் போராளியின் தாயாக இருப்பது. அத்தகைய கடின வாழ்வையே இந்த தாய் இறுதிவரை அனுபவித்தார். பொதுவாக போராளியின் தியாகமே மதிக்கப்படும். அதையே வரலாறும் நினைவு கொள்ளும். ஆனால் அந்த போராளியை பெற்றெடுத்த தாயை வரலாறு நினைவு கூர்வதில்லை. ஆனால் ஆச்சரியப்படும்வகையில் பெரும்திரளான தமிழ்மக்கள் இத் தாய்க்கு உரிய மரியாதையுடன் விடை கொடுத்துள்ளனர். ஈன்ற பொழுதைக் காட்டிலும் தன் மகனை சான்றோன் எனக் கேட்கும்போதே தாய் அதிக மகிழ்ச்சி அடைவாள் என்கிறார்கள். ஆனால் இந்த தாய் தன் மகன் இறந்துவிட்டான் என்ற செய்தியுடன் கூடவே கொள்ளையன் என அடித்தக் கொல்லப்பட்டான் என்ற அவப் பெயரையும் சேர்த்தே கேட்டார். 33 ஆண்டுகள் கழிந்தன. இந்த தாய் எதிர்பார்த்த அங்கீகாரத்தை வரலாறு வழங்கியது. ஆம் தன் மகன் தமிழ்நாட்டில் தமிழ் தேசிய தலைவராக மதிக்கப்படுவதை கண்டுவிட்டே அவர் உயிர் பிரிந்துள்ளது. இன்று அவரது இரண்டாவது நினைவு தினம் ஆகும். அவருக்கு எமது அஞ்சலிகள்.

தமிழா!

தமிழா! கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது ,ஆனால் தமிழில் வழக்காட முடியாது அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது தமிழ்நாடு உன்னுடையது ,ஆனால் தமிழா! நீ அதை ஆள முடியாது! இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல் அடிமையாகவே கிடக்கப் போகிறாய் தமிழா!

தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர்

•தமிழ்செல்வன், லக்ஸ்மன் கதிர்காமர் இரண்டு கொலைகள், இரண்டு நியாயங்கள்! லக்ஸ்மன் கதிர்காமர் - இவர் ஒரு தமிழர். இவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. இவரை நியமன எம்.பி யாக்கி இவருக்கு வெளிநாட்டு அமைச்சு பதவியை சந்திரிக்கா அரசு வழங்கியிருந்தது. சிங்கள ராணுவத்தால் பாலியல் வல்லுறவு செய்து செம்மணியில் புதைக்கப்பட்ட மாணவி கிரிசாந்தியை பயங்கரவாதி என்று கூசாமல் இவர் பொய் சொன்னார். இவர் சிங்கள அரசின் தமிழ் இனப்படுகொலைகளை உலகம் முழுவதும் சென்று நியாயப்படுத்தினார்.. அதாவது இவரை தமிழ் மக்களை அழிப்பதற்குரிய கோடரிக்காம்பாக சிங்கள அரசு நன்கு பயன்படுத்திக்கொண்டது. இவர் கொல்லப்பட்டபோது இலங்கை அரசு உட்பட பல சர்வதேச நாடுகளும் கண்டித்தன. ஒரு வெளிநாட்டு அமைச்சரை கொன்றது தவறு என்று அவர்கள் கூறினார்கள். ஆனால் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வன் தனது அலுவலகத்தில் தூங்கிக்கொண்டிருந்தபோது இலங்கை அரசால் விமானம் மூலம் குண்டு வீசிக் கொல்லப்பட்டார். தவறுதலாக தமிழ்செல்வன் மீது குண்டு போட்டுவிட்டோம் என இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தவேளை “எமது இலக்கு தமிழ்செல்வனே. தெரிந்தே அவர் மீது குண்டு வீசிக் கொன்றோம்” என்று இலங்கை அரசு இறுமாப்பாக கூறியது. இங்கு எமது நோக்கம் இவர்களின் கொலை சரியா? பிழையா? என்று ஆராய்வதல்ல. மாறாக, கதிர்காமருக்கு ஒரு நியாயம். தமிழ் செல்வனுக்கு இன்னொரு நியாயம். இது என்ன நியாயம் ? என்று கேட்பதே. ஏனெனில் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டபோது ஒரு வெளிநாட்டு அமைச்சரைக் கொன்றது தவறு என்று கண்டனம் தெரிவித்த எவரும் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஒரு அரசியல்துறை பொறுப்பாளரைக் கொன்றது தவறு என்று கூறவில்லை. சிலர் “தமிழ்செல்வன் அரசியல்துறை பொறுப்பாளராய் இருந்தாலும் அவரும் புலிதானே. எனவே அவரும் பயங்கரவாதிதான். அதனால் அவரை குண்டு வீசிக் கொன்றது சரிதான்” என்பார்கள். இப்படி கூறுபவர்களிடம் உரையாடுவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் இவர்கள்தான் “பிரபாகரன் பயங்கரவாதி. எனவே அவரின் பத்து வயது மகன் பாலச்சந்திரனும் பயங்கரவாதிதான். எனவே அந்த சிறுவனைக் கொன்றதும் சரிதான்” என கூறிக் கொண்டிருப்பவர்கள். குறிப்பு - இன்று (02.11.2022) தமிழ்செல்வனின் நினைவுதினம் ஆகும்.

ரஜனி கன்னடர்.

ரஜனி கன்னடர். அவர் தனது இனத்திற்கு துரோகம் செய்யவில்லை. விசுவாசமாக இருக்கிறார். அதனால்தான் ஒரு கன்னட அமைச்சர் பெருமையுடன் குடை பிடிக்கிறார். ஆனால் இந்த நடிகர் ரஜனி தமிழ் நாட்டில் இருந்துகொண்டு தமிழன் சோற்றை சாப்பிட்டுக்கொண்டு தமிழனுக்கு எதிராக கருத்து கூறுவதுதான் எரிச்சலாக இருக்கிறது.

குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது

குழந்தை- அப்பா! மிகவும் குளிராக இருக்கிறது அப்பா- தெரியும். ஆனால் எரிப்பதற்கு நிலக்கரி இல்லையே? குழந்தை- ஏன் நிலக்கரி இல்லை? அப்பா- எனக்கு வேலை போய்விட்டது. அதனால் வாங்க முடியவில்லை. குழந்தை- ஏன் வேலை போய்விட்டது? அப்பா- நாங்கள் அதிகம் நிலக்கரியை உற்பத்தி செய்துவிட்டோம். அதனால் வேலையைவிட்டு நிறுத்திவிட்டார்கள். மிகையான உற்பத்திக் கொள்கையின் முழு அபத்தத்தை இந்த உரையாடல் அம்பலப்படுத்துகின்றது. இன்று இந்த உரையாடலை பலரும் தங்கள் சொந்த அனுபவங்களினூடாக உணர்ந்து கொள்கின்றனர். சமுதாயத்தில் உற்பத்தியாகும் பண்டங்கள் யாவற்றினதும் பெறுமதிக்கு சமமான ஒரு பெறுமதி சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் ஊதியமாகவோ அல்லது வருமானமாகவோ சமத்துவமான முறையில் பங்கிடப்படாதவரை உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையே முரண்பாடு பெருகவே செய்யும். இதுவே பொருளியல் நெருக்கடியின் காரணம். இது முதலாளித்துவ சமுதாயத்தில் தவிர்க்க முடியாதது. இந்த நெருக்கடிக்கு முதலாளித்துவத்தில் தீர்வு எதுவும் இல்லை. பெரும்பான்மையான மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் ஏற்படும் இந்த நெருக்கடியை மக்களினுடைய வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தீர்க்க முடியாது. ஏனெனில் அது முதலாளிகளின் லாபத்தை பாதித்தே அதனை செய்ய முடியும். அதனை அவர்கள் விரும்பமாட்டார்கள். எனெனில் அது அவர்களை தற்கொலை செய்யக் கேட்பதாகும். எனவேதான் எவ்வளவு கடுமையாக முயன்றாலும் இப் பிரச்சனைக்க முதலாளியத்தால் தீர்வு காணமுடியாது சோசலிசத்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மாக்ஸ் கூறினார். உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என பலர் வினா எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் மாக்சிசத்தின் பின்னரான இந்த ஒன்றரை நூற்றாண்டு முதலாளித்துவத்திற்கு ஒரே மாற்று சோசலிசமே என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

எட்டு வருடங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருந்த

எட்டு வருடங்களுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ்த்தேசிய உணர்வாளர் தோழர் திருச்செல்வம் இன்று சேலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்

திராவிட முதல்வரின் இந்த திடீர் அறிவிப்பிற்கு காரணம்,

திராவிட முதல்வரின் இந்த திடீர் அறிவிப்பிற்கு காரணம், உண்மையில் மன்னர் ராஜராஜன் மீதான மதிப்பா? அல்லது “நாம் தமிழர்” சீமான் அடைந்துவரும் வளர்ச்சி கண்டு அச்சமா?

ஆழ்ந்த இரங்கல்கள்

•ஆழ்ந்த இரங்கல்கள் தமிழ்த்தேசிய உணர்வாளர் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் மரணமடைந்துள்ளார். தமிழீழ விடுதலை மற்றும் தமிழ்நாடு விடுதலைக்கு ஆதரவு வழங்கியவர். அவருக்கு எமது அஞ்சலிகள்

நாம் தோற்றுப் போய்விட்டோமா?

நாம் தோற்றுப் போய்விட்டோமா? குத்துச்சண்டையில் ஒருவர் விழுந்தவுடன் தோல்வி அறிவிக்கப்படுவதில்லை. மாறாக பத்து எண்ணுவதற்குள் மீண்டும் எழுந்திருக்காவிட்டால்தான் தோல்வி அறிவிக்கப்படும். அதேபோல் இனவிடுதலைப் போராட்டத்திலும் ஒரு இனம் விழுந்தவுடன் தோல்வியடைந்துவிட்டது என கருதுவதில்லை. மாறாக மீண்டும் எழுந்திருக்கவில்லை என்றால்தான் அது தோல்வி அடைந்துவிட்டதாக கருதப்படும். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் அழிவு என்பது ஒரு பின்னடைவேயொழிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான தோல்வி அல்ல. ஏனெனில் போராட்டம் வெற்றியை தராது போகலாம். ஆனால் அது ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை என்பது ஒருபுறம் இருக்க, போராட்டம் என்பது தவிர்க்க முடியாதது என்பது மறுபுறத்து உண்மையாகும். பொதுவாகவே ஒரு மனிதன் பிறக்கும்போதே போராட்டத்துடனே பிறக்கிறான். அவன் பூமியில் பிறந்தவுடன் செய்யும் முதல் போராட்டமே அழுகைதான். அதனால்தான் அழுத பிள்ளை பால் குடிக்கும் என்கிறார்கள். அதுபோலவே பிறக்கும்போதே போராட்டத்துடன் பிறக்கும் மனிதன் இறக்கும்வரை போராட்டத்துடனே வாழ்கிறான். ஒருவன் போராட தயங்கினால் அவன் வாழ்வதற்கு உரிய தகுதியை இழந்துவிடுவான். எப்படி ஓடாத மான் வாழ முடியாமல் அழிந்துவிடுமோ அதுபோலவே போராடாத இனமும் வாழ முடியாமல் அழிந்துவிடும். எனவே தமிழ் இனமும் அழியாமல் இத்தனை காலமும் வாழ்ந்து வருகிறது என்றால் அது இத்தனை காலமும் போராடி வருகின்றது என்றே பொருள். எனவே இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டுமென்றால் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே அடிப்படையாகும். ஏடறிந்த வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தமிழ் இனம் போர்த்துக்கேயருக்கு எதிராக, ஒல்லாந்தருக்கு எதிராக ஆங்கிலேயருக்கு எதிராக எல்லாம் தொடர்ந்து போராடியதை அறிய முடியும். இத்தகைய வீரம் செறிந்த போராட்ட குணாம்சமே தொடர்ந்தும் இலங்கை மற்றும் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் இனத்தை போராட வைக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். எனவேதான் தமிழ் மக்கள் தோல்வியை ஒத்துக்கொள்ளாதவரை வெற்றிவிழாக் கொண்டாடியவர்களால் வெற்றியை அனுபவிக்க முடியவில்லை. அதனால்தான் அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தோல்வியை ஒத்துக்கொள்ளும்டி தமிழ் மக்களை நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால் அவர்கள் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லை. ஏனெனில் தமிழ் மக்கள் இதுவரை தோற்கவில்லை. இனியும் தோற்கப்போவதில்லை. குறிப்பு - இதைப் படித்தவுடன் இத்தனை காலமும் போராடி கண்ட பலன் என்ன அழிவைத் தவிர என்று சிலர் மனதில் கேள்வி எழுக்கூடும். அவர்களுக்கான பதில் அடுத்த பதிவில்.

உனது நிலம் உனக்கு சொந்தம் இல்லை.

உனது நிலம் உனக்கு சொந்தம் இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது இனத்திற்கு சமவுரிமை இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது இனம் படுகொலைக்கு நீதி இல்லை. ஏனெனில் நீ தமிழன். உனது உறவுகள் சிறையில் இருந்து விடுதலை இல்லை. ஏனெனில் நீ தமிழன் உனது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து எந்த பதிலும் இல்லை. ஏனெனில் நீ தமிழன். உனக்காக மரணித்த உனது உறவுகளை நினைவுகூரக்கூட உனக்கு அனுமதி இல்லை. ஏனெனில் நீ தமிழன். குறிப்பு – ஜேவிபி தமது கார்த்திகை வீரர்களை நிரைனவுகூர அனுமதி உண்டு. ஆனால் தமிழர்கள் தமக்காக இறந்தவர்களை நினைவுகூர அனுமதி மறுப்பு.

வரலாறு நல்ல மனிதர்களின் வருகைக்காக

“வரலாறு நல்ல மனிதர்களின் வருகைக்காக ஒருபோதும் காத்திருப்பதில்லை. இருப்பவர்களில் ஒருவரை தேர்வு செய்து பயணிக்கிறது” – எங்கெல்ஸ்

இந்த (அரசியல்) விவசாயி

இந்த (அரசியல்) விவசாயி இந்த வருடம் ஏதாவது விதைத்திருக்கிறாரா தமிழ் மக்கள் அறுவடை செய்வதற்கு?

என்னது , இத்தனை நாளும்

என்னது , இத்தனை நாளும் உலக தமிழின தலைவர் என்று கூறப்பட்டவர் தமிழர் இல்லையா? வீட்டில் தெலுங்கு பேசுபவரா? அதனால்தான் ஈழத்தில் தமிழினம் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது கடற்கரையில் உண்ணாவிரத நாடகம் ஆடினாரா? என்னே கொடுமை இது?

ரஸ்சிய புரட்சி !

• ரஸ்சிய புரட்சி ! உலகில் முதலாளித்துவமா அல்லது சோசலிசமா வெற்றி பெறும் என்பது விடை காணவேண்டிய வினாவாக இன்றும் இருக்கலாம். ஆனால் மார்க்சின் பின்னரான இந்த 150 ஆண்டு காலப் போராட்டங்களும் வென்றெடுப்புகளும் முதலாளித்துவத்திற்கான ஒரே மாற்று மார்க்சிசமும் சோசலிசமுமே என்பதை நிரூபித்துள்ளன. மார்க்சிசம் அது தோற்றம் பெற்ற அதே இடத்தில் அப்படியே இருந்து வந்த ஒன்றல்ல. அது தனது விஞ்ஞான அடிப்படை காரணமாக வளர்ச்சியுற்றது. மாபெரும் அக்டோபர் புரட்சி மூலமாக அது லெனினிசமாக வளர்ச்சி கண்டது. சீனப்புரட்சியின் ஊடாக மாஓசேதுங் சிந்தனையாக அது மேலும் விரிவு கண்டது. இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மார்க்சிசம் வளர்ச்சி பெற்று வருகின்றது. இன்றைய உலகமயமாதல் சூழலிலே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி மார்க்சிசம் நிற்கின்றது. அது ட்ராக்சியவாதம், சீர்திருத்தவாதம், நவீன திரிபுவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் விட்டுக்கொடுக்காத இடையறாத போராட்டத்தை நடத்தி வருகிறது. புரட்சி நடைபெற்ற நாடுகளில் இன்று புரட்சி அரசுகள் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அந்த புரட்சிகளே, •உலகில் உழைக்கும் மக்களும் நாடாள முடியும் என்பதை நிரூபித்தன. •உலகில் உழைக்கும் மக்களும் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதை நிரூபித்தன •உலகில் உள்ள தேசிய இனங்கள் அனைத்தும் சுயநிர்ண உரிமை கொண்டவை என்றன. •உலகில் சர்வாதிகார பாசிச ஆட்சிகளை ஒன்றுதிரண்டு தூக்கியெறிய முடியும் என்பதை நிரூபித்தன. •உலகில் இன மத சாதி மற்றும் நிற பேதங்களை கடந்து அனைவரும் சமமான மனிதர்கள் என பறைசாற்றின. உழைக்கும் மக்களே ஒன்று சேருங்கள் நாம் இழப்பதற்கு எதுவுமேயில்லை -ஆனால் நாம் வெல்லுவதற்கு ஒரு உலகம் இருக்கிறது!

தமிழா! மடிந்த போராளிகள்

தமிழா! மடிந்த போராளிகள் எமக்காக ஏங்கினார்கள் எமக்காக போராடினார்கள் இறுதிவரை உறுதிமாறாமல் எமக்காகவே இறந்தார்கள் எம் தமிழ் மொழிக்காகவும் எம் தமிழ் இனத்திற்காகவும் எம் தமிழ் மண்ணிற்காகவும் தொடர்ந்து இயங்கினார்களே. இன்று நாம் இயங்க வேண்டாமா? மயங்கியும் தயங்கியும் அலைந்தும் குலைந்தும் நிலையில்லாது இயங்கும் நாம் நமக்காக நம்மவருக்காக நம்முடையதற்காக இயங்க வேண்டாமா? அதற்கென நாம் இணைய வேண்டாமா? அதற்குரிய உறுதியை அதற்குரிய சூழினை இன்று நாம் எம் உள்ளத்தில் மேற்கொள்ள வேண்டாமா? அவ் உறுதிக்குரிய வல்லுணர்வினை மாவீரர்களின் நினைவுகளில் இருந்து பெறுவோமாக அதன்வழி நாம் பெருமையும் உறுவோமாக முதலில் உரிமைகளை இழந்தோம் பின்னர் உடமைகளை இழந்தோம் இறுதியாக உயிர்களை இழந்தோம் ஆனால் உணர்வுகளை இழக்கவில்லையே மீண்டும் எழுவோம் முன்னைவிட வலிமையாக எழுவோம் என்று கூறியதும் ஓடிவந்து வேண்டாம் இன்னொரு போர் என்பர் புலிகளாலேயே முடியவில்லை என்பர் இனி யாரால்தான் முடியும் என்றும் கேட்பர் புலிகள்போல் மீண்டும் வரமுடியாமல் போகலாம் ஆனால் புலிகளைவிட அதிக தூரம் நிச்சயம் எம்மால் பார்க்க முடியும் ஏனெனில், எமக்காக மாண்டவர்கள் தங்கள் தோள்களில் அல்லவா எம்மை தாங்கி நிற்கின்றனர் என்னபடி நாம் எல்லாம் ஒன்று சேர்ந்து கேட்டாலும் தாம் சொன்னபடி எதுவும் தராமல் ஏமாற்றுவதையே முதற்படியாய் கொண்டுவிட்டனர் இலங்கை அரசினர் அவர்தம் காலடியை நக்கியே நம் தலைவர்கள் அடி பணிந்து இருக்கின்றனர் - தமிழா! இன்னும் இன்னபடி நீ வீழ்ந்து கிடந்தால் எப்படித்தான் மேற்படியை எட்டுவாயோ? எத்தனை நாள் எத்தனை ஆண்டு எத்தனை பேர் எத்தனை போர் எத்தனை தோள் திரண்டு எழுவதோ எத்தனை பேச்சு எத்தனை பாட்டு எத்தனைதாம் எழுதிக் குவிப்பதோ எத்தனை நாள் நாம் பொறுப்பது எத்தனை பேர் நாம் இறப்பது எத்தனைநாள் இன்னும் நாம் அடிமையாக கிடப்பதோ? எமது மொழி எமது இனம் எமது மண் மீட்பதற்கு நாமே சோர்ந்து போனால் பின் யார்தான் முன்வருவர் எமக்காக எம் இனம் இன்று தாழ்வுற்றுக் கிடக்கிறது சிந்தனைத் திறன் இல்லாது சீரழிந்து குலைகிறது பிறர் இதை எடுத்துச்சொன்னாலும் உணர்வு பெறாமலே இருக்கிறது எவ்வளவுதான் உருகி உருகி எடுத்து கூறினாலும் செயல்படாது அடிமையாய் பணிந்து கிடக்கிறது தமிழர் தலைமையோ பதவி நலன்களுக்காக நம் பகைவனிடம் அண்டிப் பிழைக்கின்றது அண்டிப்பிழைக்கும் தலைமையிடம் இன் சொல்லால் சொன்னோம் எரிச்சலுடனும் கூறியுள்ளோம் புண் சொல்லும் வீசினோம் புண்படவும் சொல்லிவிட்டோம் என்னவகை சொன்னாலும் அவர் தம் உடலில் சின்னதொரு மாற்றமும் இன்னும் ஏற்படவில்லையே தம்மை எமது தலைவர்கள் என்றார்கள் எம் மத்தியில் வருவதற்கு அவர்களுக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் 5 கோடி ரூபா சொகுசு வாகனம் வேண்டும் கொழும்பில் சொகுசு பங்களா வேண்டும் தேர்தலில் தம்மை தெரிவு செய்தால் ஒரு வருடத்தில் தீர்வு வரும் என்றார்கள் அவர்களுக்கு எல்லாம் வந்தது - ஆனால் எமக்குத்தான் ஒரு ம- - ம் வரவில்லையே! யுத்தம் முடிந்து 13 வருடமாச்சு காணாமல் போனோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை இடம்பெயர்ந்தோர் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை அரசியல் கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை ஆனால், கிழக்கில் சிங்கள குடியேற்றம் வடக்கில் பௌத்த விகாரைகள் நாளுக்கு நாள் அரங்கேறுது ஒருபுறம் சிங்கள ஆக்கிரமிப்பு மறுபுறம் இந்திய ஆக்கிரமிப்பு தமிழன் தன் மண்ணில் நீட்டி நிமிர்ந்து நிம்மதியாக உறங்க முடியவில்லையே ஏய் தமிழா! அன்று ஒரு பெரு நிலம் உனக்கிருந்தது அறிவாயோ இன்று அரைக் காணி நிலத்திற்கு வேலிச் சண்டை போடுகிறாயே எல்லா இனமும் தாய் மொழியில் பேசும் நீ பேசுவது மொழிகளின் தாய் மொழியில் என்பதையாவது நீ அறிவாயோ? நீ வீழ்ந்து கிடப்பது எதிரியின் பலத்தால் அல்ல உன் பலத்தை அறியாததால் தன் பலம் அறியாமல் யானை கோவில் வாசலில் பிச்சை எடுப்பதுபோல் உன் பலம் அறியாமல் அடிமையாக வீழ்ந்து கிடக்கிறாய் போர்த்துக்கேயரை விரட்டியவன் நீ ஒல்லாந்தரை விரட்டியவன் நீ ஆங்கிலேயரை விரட்டியவன் நீ ஆக்கிரமிப்பாளர்கள் எல்லாரையும் விரட்டிய வீரம் செறிந்த வரலாற்றைக் கொண்டவன் நீ. ஆனால் இன்று, பல்லி சொல்லுக்கு பலன் அறிய பஞ்சாங்கத்தை தேடிக்கொண்டிருக்கிறாயே? குட்டக் குட்டக் குனிந்துகொடுக்கும் முட்டாள் தமிழனே மூடப் பிறவியே ஒன்று கேள் நீ ஒரு ஊமைப் பிறவியல்லன் தொன்று தொட்டு தொழும் அடிமைப் பிறவியும் அல்லன் அன்று உன் கொடி உன் மண்ணில் நிமிர்ந்து பறந்ததே இன்று உன் தலை குனிந்து தாழ்ந்து கிடக்கிறதே ஏய் தமிழா! எந்த நிலை வரினும் ஏற்றம் தளரோம் நாம் சோர்வுற்றபோது மாவீரரை நினைத்தெழுவோம் என்ன துயர் வரினும் ஏற்ற பணி முடிப்போம் அன்னை தமிழ் மீது அருஞ்சூழ் உரைத் தெழுவோம் துரோகிகள் எமை தாழ்த்தி வீழ்த்திடினும் எம் இனத்திற்கு உழைப்பதே கொள்கை என்போம் இலங்கை அரசால் செத்தாலும் இந்திய அரசால் செத்தாலும் தமிழ் இன விடுதலை ஒன்றே நம் இலக்கு என்போம் வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழருக்கும் வாழ்வோம் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ் பொருட்டே ஆவோம் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வோம் தனியேதான் நின்றாலும் எம் கொள்கையில் மாற மாட்டோம் சூழ்ந்தாலும் தமிழ் சுற்றம் சூழ்ந்து உரிமை கேட்போம் சூழ்ச்சியினால் எம் உடலை கூறாக்கினாலும் முடிவு அந்த முடிவே புதைத்தாலும் எரித்தாலும் அணுக்கள் எல்லாம் அதுவே!

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது

வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது இத்தனை கோடி ரூபாக்களை வரியாக செலுத்தி தமிழ்நாடு கண்ட நன்மை என்ன?

அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள்

அண்மையில் தமிழ் அரசியல் கைதிகள் எட்டுபேர் விடுதலை செய்யப்பட்டதில் லைகா முதலாளியின் பங்கு குறித்து விமர்சனம் இருக்கலாம். ஆனால் விடுதலை செய்யப்பட்ட அவ் அரசியல் கைதிகளுக்கு அவர் தலா 25 லட்சம் ரூபா வழங்கியது உண்மையில் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில்

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழில் பேசாதவர்களை கமலஹாசன் கண்டித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்யும்போதே நன்கு தமிழ் பேசும் நபர்களை தெரிவு செய்திருக்கலாமே? தமிழக முதல்வர் வீட்டில் தெலுங்கு மொழி பேசுவதாக ஆளுனர் தமிழிசை சுட்டிக்காட்டியிருக்கிறார். இன்னொருபுறம் பிக்பாஸ் வீட்டில் சிலர் மலையாளம் பேசியதை கமல் கண்டித்திருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழ் மொழி பற்றிய இந்த விழிப்புணர்வுக்கு “நாம் தமிழர்” வளர்ச்சி காரணமாக இருக்குமா?

பூனை கறுப்பா அல்லது வெள்ளையா

பூனை கறுப்பா அல்லது வெள்ளையா என்பது பிரச்சனை இல்லை. மாறாக அது எலி பிடிக்கிறதா இல்லையா என்பதே முக்கியம். அதேபோன்று நிகழ்வின் பெயர் நினைவெழுச்சிநாளா அல்லது மாவீரர் நாளா என்பது முக்கியம் இல்லை. மாறாக அங்கு உண்மையில் எமக்காக மாண்டவர்கள் நினைவு கூரப்படுகின்றனரா என்பதே முக்கியம்.

ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்?

ரவிராஜ் ஏன் கொல்லப்பட்டார்? ரவிராஜ் கொலைக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை? ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடியவரா? இல்லை ரவிராஜ் ஆயுதம் ஏந்திப் போராடிய அமைப்புகளில் உறுப்பினராக இருந்தாரா? இல்லை ரவிராஜ் ஏதாவது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்தவராக குற்றம் சாட்டப்பட்டாரா? இல்லை ரவிராஜ் ஒரு தேடப்பட்ட சந்தேக நபரா? அல்லது குற்றவாளியா? இல்லை அப்படியாயின் ரவிராஜ் ஏன் இலங்கை அரசால் கொல்லப்பட்டார்? கொல்லப்படும் அளவிற்கு ரவிராஜ் செய்த தவறுதான் என்ன? ரவிராஜ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர். அவர் புலிகள் அமைப்பை ஆதரித்தார். புலிகள் அமைப்பை ஆதரித்தது தவறு என்றால் ஏன் மற்ற தமிழ்தேசியகூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுடப்படவில்லை? எல்லா தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் புலிகளின் ஆதரவுடன்தானே பதவியைப் பெற்றவர்கள். புலிகள்தான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி என்று சொன்ன சம்பந்தர் ஐயாவையல்லவா இலங்கை அரசு முதலில் சுட்டிருக்க வேண்டும் ரவிராஜ் கொல்லப்படுவதற்கு ஒரே காரணம் அவர் சிங்கள மொழியில் சிங்கள மக்களுக்கு தமிழர் பிரச்சனையைக் கூறியதே. ரவிராஜ் பேச்சுகள் மூலம் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நியாயங்களைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தமையினாலே அவர் கொல்லப்பட்டார். இனவாதம் மூலம் ஆட்சி செய்யும் இலங்கை அரசு அந்த இனவாதத்தை இல்லாமல் செய்யும் முயற்சிகளை ஒருபோதும் அனுமதிக்காது. இனங்களுக்கடையே நல்லிணக்கம் ஏற்படுவதை இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய அரசும்கூட அனுமதிக்காது. முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் அஸ்ரப் பௌத்த இனவாதிகளுடன் சிங்கள மொழியில் விவாதம் செய்து அவர்களை அம்பலப்படுத்தினார். அதனாலேயே அஸ்ரப் கொல்லப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. தன்னை சந்தித்த சிங்கள மக்களிடம் சிங்கள மொழியில் தமிழர் நியாயங்களை தான் கூறியதாகவும் அதனை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் சிங்களப் பகுதிகளில் வந்து அவற்றை கூறும்படி தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் மாகாணசபை முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியிருந்தார். அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்றும் கொல்ல வேண்டும் என்றும் இனவாதிகள் கத்தினார்கள். தமிழ் தலைவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழர் பிரச்சனையை காலம் காலமாக இந்தியாவுக்கு கூறியிருக்கிறார்கள். அமெரிக்கா பிரிட்டனுக்கு எல்லாம் கூறியிருக்கிறார்கள். ஆனால் சிங்கள மக்களுக்கு தமிழ் மக்களின் நியாயங்களை கூற அவர்கள் முயற்சி செய்யவில்லை. ஆனால் ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவோ அல்லது அமெரிக்காவோ ஒருவேளை தமிழ் மக்களுக்கு ஏதும் தீர்வைப் பெற்றுத்தர முன்வந்தாலும் சிங்கள மக்களின் ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. ஏனவே இனியாவது காலம் சென்ற ரவிராஜ் காட்டிய பாதையில் சிங்கள மக்களுக்கு எமது பிரச்சனைகளை எடுத்துக் கூறுவோம். அவர்களை இனவாத ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து வென்றெடுப்போம். குறிப்பு- ரவிராஜ் கொல்லப்பட்ட தினம் (10.11.2022)இன்று. ரவிராஜ்க்கு சிலை வைத்த தமிழ்தேசியகூட்டமைப்பால் அவரின் கொலைக்குரிய நீதியை இன்னும் பெறவில்லை. தமது பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைக்கு நீதி பெற முடியாதவர்கள் தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதி பெற்று தருவார்கள் என எப்படி நம்புவது?

எதை அறுவடை செய்ய விரும்புகிறாரோ

எதை அறுவடை செய்ய விரும்புகிறாரோ அதை அவர் நன்றாகவே விதைக்கிறார் இடி முழக்கம் கேட்கிறது வசந்தம் வருவதை இனி யாராலும் தடுக்க முடியாது #பிறந்தநாள் வாழ்த்துக்கள்

யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையகம் சென்று

யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையகம் சென்று மலையக மக்கள் விடுதலை முன்னணி (ULO)அமைத்து போராடியவேளை இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்டவர் தோழர் நெப்போலியன். ஈழப் போராளிகள் மலையக மக்கள் பற்றி அக்கறை கொள்ளவில்லை என பிரச்சாரம் செய்யும் திராவிடம் இந்த வரலாறு அறிவார்களா? இந்திய அரசின் எற்பாட்டில் ஈழப் போராளிகள் சிங்கள அரசுடன் திம்புவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது வைத்த முதல் கோரிக்கை மலையக தமிழருக்கு பிரஜாவுரிமை வழங்க வேண்டும் என்பதே. அதனாலேயே வேறு வழியின்றி அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனா மலையக மக்களுக்கு பிராஜாவுரிமை வழங்கினார். இனியாவது இந்த வரலாறுகளை அறிந்துவிட்டு (200 ரூபா) திராவிடம் பேச வேண்டும்.

ஏழு தமிழரில் முதலில் பேரறிவாளன்

ஏழு தமிழரில் முதலில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். இப்போது மிகுதி ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களின் விடுதலைக்கு பலர் பங்களித்திருந்தாலும் முக்கிய காரணம் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவே . வாழ்த்துக்கள்.

இந்திய அரசு கோபிக்கும் என்ற பயத்தில்

இந்திய அரசு கோபிக்கும் என்ற பயத்தில் ஈழத் தமிழ் தலைவர்களே விடுதலை செய்யும்படி கோராத நிலையில், இறப்பதற்கு முன் தன் மகனை ஒருமுறை நேரில் பார்த்துவிட வேண்டும் என 31 வருடமாக காத்திருக்கும் அந்த தாயின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளனர் தமிழக மக்கள். தமிழகத்திற்கு நன்றியும் வாழ்த்துகளும்.

தமிழ்நாட்டில் ஏழு தமிழர் விடுதலைக்காக

தமிழ்நாட்டில் ஏழு தமிழர் விடுதலைக்காக செங்கொடி உயிர் நீத்தார். ஈழத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக மாணவன் செந்தூரன் உயிர் நீத்தார். செங்கொடி விருப்பம் நிறைவேறிவிட்டது. செந்தூரன் விருப்பம் எப்போது நிறைவேறும்? 26.11.2015 யன்று மாணவன் செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தன் உயிர் நீத்தார்.

உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 4

உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 4 ஈழத்தமிழர்கள் தமிழக திராவிட அரசால் சிறையைவிடக் கொடிய சிறப்புமுகாமில் அடைப்பு. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு இந்த நாலு ஈழத் தமிழர்களையும் சிறப்புமுகாமில் அடைத்திருப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும். இந்த எழுவர் விடுதலைக்கு திமுக அரசே காரணம் என்று உரிமை கோரியவர்கள் இப்போது இந்த இந்த நால்வரையும் சிறப்புமுகாமில் அடைத்தது தமிழக திராவிட அரசு என்பதை ஏற்றுக்கொள்வார்களா? நாடு திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகளையே சிறப்புமுகாமில் அடைக்க முடியும். ஆனால் சாந்தன் இலங்கை திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்தும் அவரை சிறப்புமுகாமில் அடைத்திருப்பது தமிழக திராவிட அரசின் வன்மத்தைக் காட்டுகிறது. 1990ம் ஆண்டு இந்த கொடிய சிறப்புமுகாமை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. இப்போது மகன் ஸ்டாலின் அந்த சிறப்புமுகாமில் தொடர்ந்து ஈழத் தமிழர்களை அடைத்து சித்திரவதை செய்கிறார். இதுதான் திராவிட திமுக அரசு ஈழத் தமிழர் மீது காட்டும் அக்கறை என்பதை உலகம் அறிந்து கொள்ளட்டும்.

விடுதலையான ஜெயக்குமார் மற்றும் ராபட்பயஸ்

விடுதலையான ஜெயக்குமார் மற்றும் ராபட்பயஸ் இருவருடனும் பேசவிடாது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் காவல்துறையால் தடுப்பு. நளினி தன் கணவர் முருகனுடன் பேசுவதற்கு காவல்துறை அனுமதி மறுப்பு திராவிட முதல்வரின் தமிழக காவல்துறை எதற்கு இந்தளவு கடும் கெடுபிடியை காட்டுகிறது? வீட்டில் தெலுங்குபேசும் தமிழக திராவிட முதல்வர் ஈழத் தமிழர் மீது ஏன் இந்தளவு வன்மம் காட்டுகிறார்?

இப்போது புரிகிறதா சுப்பக்கா ஏன் திமுக வில்

இப்போது புரிகிறதா சுப்பக்கா ஏன் திமுக வில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார் என்று? வீட்டில் தெலுங்கு பேசுவோரின் தலைமையில் திமுக இருக்கும்வரை உண்மை பேசும் தமிழ் உணர்வாளருக்கு அங்கு இடம் இருக்காது.

“தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா”

“தேவடியா” என்ற சொல் மருவி “மீடியா” என்று வந்தது என்பதற்கு இந்த செய்தி சிறந்த உதாரணம். 30 வருடமாக சிறையில் இருந்தவர்கள் மீது திடீரென்று எப்படி இந்த வழக்கு வந்தது? எந்தவித வழக்கு இல்லாதவர்கள்கூட சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை தினத்தந்தி இதுவரை அறியவில்லையா? சிறப்புமுகாம் என்னும் பெயரில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைககளை மூடி மறைக்க தமிழக அரசு கூறும் பொய் இது. இனியாவது திராவிட அரசின் இச் சிறப்புமுகாம் கொடுமைகளை உலகம் அறியட்டும்.

சாதாரண அகதிமுகாமுக்கும் சிறப்புமுகாமுக்கும்

சாதாரண அகதிமுகாமுக்கும் சிறப்புமுகாமுக்கும் வித்தியாசம் தெரியாமல் (200 ரூபா) திராவிட உ.பிஸ் உருட்டுகிறார்கள். கீழ்வரும் இணைப்பில் நான் எழுதிய “சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்” நூலின் PDF பிரதி உள்ளது. இனியாவது படித்து தெரிந்து கொள்ளுங்கள். https://noolaham.org/.../%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0...

மதிமாறன் அவர்களே!

மதிமாறன் அவர்களே! உண்மைதான். சிலம்பு காணாமற்போனபோதே நாம் கலைஞரை நினைத்திருக்க வேண்டும் என்கிறீர்களா ? பாவம், உங்களுக்கும் பசிக்கும்தானே!

இந்திய தூதரின் இந்தி திணிப்பு

இந்திய தூதரின் இந்தி திணிப்பு, இந்திய ஆக்கிரமிப்பு, போதைப்பொருள் விநியோகம் என்பனவற்றால் இயல்பாக உருவான மக்கள் எதிர்ப்பின் தாக்குதலா? அல்லது, அறுவர் விடுதலையால் எரிச்சல் அடைந்துள்ள சிங்கள ராணுவ உளவுப்படையினரின் சதித் தாக்குதாலா? என்பதை ஆராய வேண்டும்.

தமிழ்நாட்டில் வீட்டில் தெலுங்கு பேசுவோர்

தமிழ்நாட்டில் வீட்டில் தெலுங்கு பேசுவோர் “நாம் எல்லாம் திராவிடர்” என்று கூறுகின்றனர். ஆனால் இவர்கள் ஆந்திரா சென்று அங்குள்ள தெலுங்கர்கள் மத்தியில் “நாம் எல்லாம் திராவிடர்”என்று சொல்வதில்லை. அது ஏன்?

ஒரு சந்தேகம்!

ஒரு சந்தேகம்! தெலுங்கு நடிகரின் மரணத்திற்கு தமிழக திராவிட முதல்வர் இரங்கல் தெரிவிப்பது வீட்டில் தெலுங்கு பேசுவது காரணமாக இருக்குமா? குறிப்பு – தமிழக முதல்வர் வீட்டில் தெலுங்கு பேசுகிறார்கள் என்று நான் கூறவில்லை. ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

பதவியில் இருக்கும் முதல்வர், அமைச்சர்கள்,

பதவியில் இருக்கும் முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்வரை அரசு மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு நல்ல சிகிச்சை ஒருபோதும் கிடைக்காது

பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர் கொலை,

பத்தாயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர் கொலை, 800க்கு மேற்பட்ட தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவு , பல கோடி ரூபா பெறுமதியான உடமைகள் அழிப்பு, இத்தனைக்கும் காரணமான குற்றவாளி ராஜீவ்காந்தியை நீங்கள் கொண்டாடுவதை என்னவென்று அழைப்பது மேடம்?

ஆட்சிக்கு வந்து இரண்டு வருடமாகிறது.

ஆட்சிக்கு வந்து இரண்டு வருடமாகிறது. இன்னும் இவர்கள் முதல் கையெழுத்து போடவில்லையா? நீதி – மக்களை ஏமாற்ற வேண்டுமென்றால் முதலில் மக்களின் ஆசையை தூண்ட வேண்டும்.

ராஜீவ் காந்தி ஒரு சிங்களவனைக்கூட

ராஜீவ் காந்தி ஒரு சிங்களவனைக்கூட கொலை செய்யவில்லை. ஆனாலும் சிங்கள சிப்பாய் ராஜீவ் காந்தியை மண்டையில் அடித்து கொல்ல முயன்றான். அந்த சிங்களவனை சிங்கள அரசு பொதுமன்னிப்பில் விடுதலை செய்தபோது ஒரு காங்கிரஸ்காரன்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அது ஏன்?

ராஜீவ் காந்தியை மண்டையில்

ராஜீவ் காந்தியை மண்டையில் அடித்து கொல்ல முயன்ற சிங்கள சிப்பாயை சிங்களவர்கள் கொண்டாடியபோது குற்றவாளியை கொண்டாடுவது தவறு என்று ஒரு காங்கிரஸ்காரன்கூட தெரிவிக்கவில்லை. அது ஏன்?

தமிழர் மத்தியில் தமிழ்த்தேசியத்தை

தமிழர் மத்தியில் தமிழ்த்தேசியத்தை உச்சரிக்காமல் இனி யாரும் அரசியல் நடத்த முடியாது என்பதை உணர்ந்து கொண்டதுபோல், திராவிட திமுக கூட்டணியில் இருந்துகொண்டு தமிழ்த்தேசிய இலக்கை அடைய முடியாது என்பதையும் திருமா விரைவில் உணர வேண்டும். #இது தமிழ்த்தேசியத்தின் காலம்

பேரன் இன்பநிதி வெளிநாட்டில் காற்பந்து விளையாட சென்ற

பேரன் இன்பநிதி வெளிநாட்டில் காற்பந்து விளையாட சென்ற போது விமானநிலையம் வரை சென்று வழி அனுப்பிய திராவிட முதல்வருக்கு, திராவிடமாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா இறப்பிற்கு ஒரு இரங்கல் செய்தி கூட சொல்ல நேரமில்லையா?

தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!

•"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்! தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் பிறந்த தினம் 19.11.1967ஆகும். அவர் மற்றவர்கள் போல் வாழ விரும்பியிருந்தால் இன்று தன் குடும்பத்துடன் 55வது பிறந்த நாளைக் கொண்டாடியிருப்பார். ஆனால் தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார். தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின். தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார் . தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார். தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார். தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும். தோழர் லெனின் நினைவை போற்றுவோம்!

இந்துத் தமிழீழம் கேட்டால்

இந்துத் தமிழீழம் கேட்டால் மோடி அரசு உதவும் என்று கூறுபவர்கள் இதற்கு என்ன கூறப்போகிறார்கள்? காங்கிரஸ் மட்டுமல்ல பாஜக வும் தமிழர் விரோத கட்சிதான் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டிய தருணம் இது.

இவர் டிக்கட் இன்றி ரயிலில் வரவில்லை

இவர் டிக்கட் இன்றி ரயிலில் வரவில்லை. தன் குடும்பத்திற்கு 45000கோடி ரூபா சொத்து சுருட்டவில்லை. கோடிக்கணக்கான தன் சொத்தை தமிழ் மக்களுக்காக இழந்தார் பல வருடம் சிறையில் வாடினார். இவர் வீட்டில் தெலுங்கு பேசவில்லை. அதனால்தான் என்னவோ இவரை உலக தமிழின தலைவர் என்று அழைக்கவில்லை? மெரினா கடற்கரையில் இவருக்கு 80 கோடி ரூபாவில் நினைவு சின்னம் தமிழக அரசு அமைக்கவில்லை? குறிப்பு - இன்று (18.11.2022) கப்பல் ஓட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வஉசி சிதம்பரனாரின் 86வது நினைவுதினம்.

ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்ட

ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்ட வீரசர்வாக்கரைக் கொண்டாடும் மோடி அரசு தியாகி வஉசி யைக் கொண்டாடுவதில்லை. இதற்கு வஉசி ஒரு தமிழர் என்பதைத் தவிர வேறு காரணம் ஏதும் உண்டா அண்ணாமலையாரே? செய்தி – தமிழருக்காக மோடியின் இதயம் துடிக்கிறது – அண்ணாமலை

மனோ கணேசன் அமைச்சராக இருந்தபோது

மனோ கணேசன் அமைச்சராக இருந்தபோது தமிழ் அரசியல் கைதி தேவதாசன் உண்ணாவிரதம் இருந்தபொழுது சிறைக்குள் சென்று 3 நாட்களில் அவர் கோரிக்கை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். மூன்று வருடமாகிவிட்டது. இன்னும் தேவதாசன் சிறையில்தான் இருக்கிறார். தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசியல்வாதி மனோ கணேசன் இப்போது தமிழ் அரசியல் தலைவர்களை குறை கூறுகிறார் எனக்கு தெரிந்து எந்த தமிழ் அரசியல் தலைவர்களும் கலைஞர் கருணாநிதி மேல் எல்லா பழியையும் போடவில்லை. அப்படியிருக்க இவ்வாறு மனோ கணேசன் கூறுவது கலைஞரும் இந்திய அரசும் தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகத்தை மறைக்க முயல்வதாகவே உள்ளது. இந்தியா தீர்வு தர முன்வந்ததாகவும் ஆனால் தமிழ் தலைவர்கள் அதை பெற தவறிவிட்டனர் என்று மனோ கணேசன் குறை கூறுகின்றார். சரி பரவாயில்லை மனோ கணேசனும் அரசியல்வாதிதானே, அவர் இந்திய அரசு மூலம் தனது மலையக மக்களுக்கு இதுவரை பெற்றுக்கொடுத்த தீர்வு என்ன? மனோ கணேசனுக்கு அமைச்சு பதவி இல்லாமல் இருப்பது கஸ்டம்தான். அவர் தாராளமாக ரணில் உடன் டீல் பேசி பதவி பெற்றுக்கொள்ளட்டும். ஆனால் அதற்காக கலைஞருக்கும் இந்திய அரசுக்கும் வெள்ளை அடிக்க முயல வேண்டாம்.

திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட ராபர்ட்பயஸ்

திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட ராபர்ட்பயஸ் மற்றும் ஜெயக்குமார் 3வது நாளாக உண்ணாவிரதம். ஜெயக்குமார் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி என அறிய வருகிறது. இவர்கள் கோரிக்கை என்ன? அதற்கு தமிழக திராவிட முதல்வர் பதில் என்ன? ஏழு தமிழர் விடுதலைக்கு திராவிட முதல்வரே காரணம் என்று உரிமை கோரியவர்கள் இதற்கு பதில் தருவார்களா?

ஓ மரணித்த வீரனே!

ஓ மரணித்த வீரனே! உன் சீருடைகள் எனக்கு வேண்டாம் உன் காலணிகளும் எனக்கு வேண்டாம் உன் ஆயுதங்களும் எனக்கு வேண்டாம் உன் போட்டோ ஒன்றை மட்டும் தா விரைவில் எலெக்சன் வரும்போல கிடக்கு எனக்கு வயதும் 88 ஆகுது. கண்ணும் தெரியுதில்லை காதும் கேட்குதில்லை ஒருவர் உதவியின்றி நடக்கவும் முடியவில்லை அப்புறம் என்ன மயிருக்கு பதவியில் இருக்கிறாய் என்று நீ நினைப்பதும் எனக்கு புரியுது. என்ன செய்வது? பதவி இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை இரண்டு பங்களா இல்லாமல் வாழ முடியவில்லை சிங்கள பொலிஸ் பாதுகாப்பின்றி நடமாடுவதை என்னால் எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை நான் ஜனநாயகத்தை காக்க ஓடித் திரிவதாக எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கினம்- ஆனால் நான் என் பதவியைக் காக்க ஓடித் திரியிறன் என்பது உனக்கு மட்டும்தானே புரியும் என் பதவி தொடரும் என்று நம்பி துபாயில் பிசினஸ் செய்த மகனும் கொழும்பிற்கு வந்து விட்டான். கேரளாவில் வாழ்ந்து வந்த மகளும் இப்ப என் கொழும்பு பங்களாவில் நான் என் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்க எனக்கு பதவியும் பங்களாவும் வேண்டும் மரணித்த மாவீரனே! மாவீரர் விழாவிற்கு என்னால் வர முடியவில்லை இந்திய தூதரின் விருந்திற்கு நான் போக வேண்டும் தம்பி சிறீதரனை அனுப்பி வைக்கிறேன் மறக்காமல் உன் போட்டோவை கொடுத்து அனுப்பிவிடு அடுத்த தேர்தலிலும் வென்று பதவி பெற உதவிடு! இப்படிக்கு உன்னால் தொடர்ந்து பதவி பெற்றிடும் உனது (நன்றி மறந்த) சம்பந்தர் அய்யா

நரி உனக்கு உபதேசம் செய்கிறது

நரி உனக்கு உபதேசம் செய்கிறது எனில் நீ உன் கோழிகளை கவனித்துக்கொள்ள வேண்டும்".

போட்டோ அரசியல்!

•போட்டோ அரசியல்! நடிகர்கள் தாராளமாக அரசியல்வாதியாகலாம் ஆனால் அரசியல்வாதிகள் ஒருபோதும் அரசியலில் நடிக்கக்கூடாது

இன்று பத்மநாபா மற்றும் இந்திராகாந்தி

இன்று பத்மநாபா மற்றும் இந்திராகாந்தி பிறந்ததினம். இந்திரா காந்தி புகழ் பாடும் நாபாவின் தோழர்களிடம் ஒரு கேள்வி, “இந்தியாவை நாம் பயன்படுத்த நினைத்தோம் ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது” என்று நாபா கூறியது பற்றி உங்கள் கருத்து என்ன?

வழி நடத்த தலைவர் இல்லை.

வழி நடத்த தலைவர் இல்லை. பற்றிப்பிடிக்க ஒரு அமைப்பு இல்லை. ஆனாலும் எப்படி இந்த அற்புதங்கள் நிகழ்கிறது? எரிந்த சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை என்பார்கள். அது உண்மையா இல்லையா என்று தெரியாது. ஆனால் இரண்டு நாளில் 40 ஆயிரம் மக்களை கொன்று குவித்த பின்பும் அதில் இருந்து இவர்களால் எழுந்து நிற்க முடிகிறது. ஆம், தமிழ் இனம் “ஆசியாவின் அதிசயம்” என்பது மிகையல்ல.

ஒரு கேள்வி, உதயண்ணா

ஒரு கேள்வி, உதயண்ணா இப்பவும் இந்த போராட்டம் நடத்துகின்றாரா? அல்லது தமிழகத்தில் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை கிடைத்துவிட்டதா?

எதுவுமே எளிமை இல்லை.

எதுவுமே எளிமை இல்லை. ஆனால் அனைத்துமே சாத்தியம்தான். வெற்றியை அடையவில்லை என்பதற்காக வருத்தம் இல்லை இன்னும் நின்றுவிடாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பது பெருமைதான்.

நாளை அனைவரும் சம்பந்தன் வீட்டுக்கு

நாளை அனைவரும் சம்பந்தன் வீட்டுக்கு வாருங்கள் - சுமந்திரன்

எத்தனை தடைகள்

எத்தனை தடைகள் எத்தனை மிரட்டல்கள் அத்தனையும் தாண்டி எமக்காக மாண்டவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

சிறப்புமுகாம் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம்.

சிறப்புமுகாம் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாம். ஒரு சிறையில் இருந்து இன்னொரு சிறைக்கு மாற்றுவது விடுதலை அல்ல. கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமை அவர் மகன் ஸ்டாலினாவது மூடட்டும். அகதிகளை விடுதலை செய்யட்டும்.

சுமந்திரன் - ஆறு தமிழர் 30 வருடமாக சிறையில்

சுமந்திரன் - ஆறு தமிழர் 30 வருடமாக சிறையில் இருந்தபோது அவர்களை விடுதலை செய்யச்சொல்லி நாம் ஒருதடவைகூட கேட்கவில்லை. இப்போது அவர்களை சிறப்புமுகாமில் அடைத்திருக்கிறார்கள். இப்பவாவது ஒரு அறிக்கை விடுவமா ஐயா? சம்பந்தர் ஐயா – விடலாம்தான். ஆனால் அப்புறம் இந்திய தூதர் கோபித்தால் என்ன செய்வது? சுமந்திரன் - இல்லை ஐயா, அண்மையில் கொழும்பில் விடுதலையான எட்டு அரசியல் கைதிகளுக்கு லைக்கா முதலாளி உரிமை கோருகிறார். இவர்களுக்காவது நாம் ஒரு குரல் கொடுப்போம். எலெக்சன் வேற வரப்போகுது. போற போக்கைப் பார்த்தால் அடுத்த எலெக்சனில் லைக்கா முதலாளி எம்.பி யாகிவிடுவாரோ என்று பயமாய் இருக்கு. சம்பந்தர் ஐயா – நீர் சொல்ல வார பிரச்சனை எனக்கு புரியுது. ஆனால் எங்கள் கஸ்டம் இந்திய தூதருக்கு புரியுதில்லையே? நான் என்ன செய்வது? சுமந்திரன் - மாவீரர் தினம் வருகுது. அதற்காவது ஒரு அறிக்கை கொடுப்பமா ஐயா? சம்பந்தா ஐயா – மாவீரர் தினத்திற்கு வெளிப்படையா அறிக்கை விட்டால் இந்திய அரசுக்கு பிடிக்காது. அதனால் நீர் ஏதாவது ஒரு மாவீரர் வீட்டுக்கு ரகசியமாக சென்று விளக்கு ஏற்றிவிட்டு வாரும்.

அமைச்சர் பதவி கொடுத்தால் உதயநிதி

அமைச்சர் பதவி கொடுத்தால் உதயநிதி நடிப்பை கைவிடுவார் எனில் தயவுசெய்து அதை கொடுத்து தொலையுங்கள். தமிழ் சினிமாவாவது தப்பி பிழைக்கட்டும். கலகத்தலைவன் - சகிக்க முடியல்ல

காவல்துறை செய்யும் தவறுகளை

காவல்துறை செய்யும் தவறுகளை தைரியமாக படமாக்கி வெளியிட்டுள்ள வெற்றிமாறனின் இன்னொரு படம். பாராட்டுகள். தாம் அரசைக் காப்பாற்றுவதால் அரசு தங்களைக் காப்பாற்றும் என்ற எண்ணம் காவல்துறையினரிடம் இருப்பதாலே அவர்கள் தைரியமாக தவறு செய்கின்றனர்.

முதலில் சீன தூதர் வந்தார்

முதலில் சீன தூதர் வந்தார் இப்ப பாகிஸ்தான் தூதர் வந்துள்ளார் ஆனால் யாழ் இந்திய தூதரோ மௌனமாக இருக்கிறார். புலிகள் இருந்தவரை வடக்கு கிழக்கில் எவரும் வரவில்லை என்பதை இனியாவது இந்திய அரசு உணர்ந்து கொள்ளட்டும்.

அன்று, இந்தியனும் நாயும் உள்ளே வர அனுமதி இல்லை

அன்று, இந்தியனும் நாயும் உள்ளே வர அனுமதி இல்லை என்று லண்டன் கடை வாசலில் போர்டு வைத்திருந்தார்கள் இன்று , இரண்டும் லண்டன் பிரதமர் அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. காலம் எத்தனை ஒரு பெரிய பாடத்தை வெள்ளையர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது.

இருவரும் தமிழர்கள்

இருவரும் தமிழர்கள் இருவரும் மத நம்பிக்கை உள்ளவர்கள். ஒருவர் ஆஸ்கர் பரிசு கிடைத்தபோது தமிழில் இறைவனுக்கு நன்றி என்றார் இன்னொருவர் MP பதவி கிடைத்ததும் சமஸ்கிருதத்தில் இறைவனுக்கு பாடுகிறார். இப்போது புரிகிறதா தமிழன் ஏன் சங்கியை எதிர்க்க வேண்டும் என்று?

என்னத்தை சொல்ல?

என்னத்தை சொல்ல?

கர்நாடகாவில் கன்னடத்தில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும்

கர்நாடகாவில் கன்னடத்தில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என்னும்போது மௌனமாக இருப்பவர்கள், தமிழ்நாட்டில் தமிழில் வைக்க வேண்டும் என கோரும்போது ஓடி வந்து இனவெறி என்கிறார்கள். தமிழா! இவர்களை விரட்டி விரட்டி உதைக்கனும் என்று தோன்றவில்லையா?

மாணவன் செந்தூரனின் 7வது நினைவு தினம்!

மாணவன் செந்தூரனின் 7வது நினைவு தினம்! நவம்பர் 7 திகதிக்கு முன்னர் சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று 2015ல் சம்பந்தர் ஐயா கூறியிருந்தார். அனால் அவர் கூறியபடி கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. இந்நிலையில்தான் நவம்பர் 26 ம் திகதி சிறைக் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு மாணவன் செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தான். சம்பந்தர் ஐயா சொன்ன நவம்பர் 7ம் திகதி ஒவ்வொரு வருடமும் வருகிறது. ஆனால் சிறைக் கைதிகள்தான் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இருக்கும் கைதிகள் செந்தூரனின் தந்தையோ அல்லது சகோதரனோ இல்லை. அல்லது அவனது நண்பர்களோ இல்லை. செந்தூரன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. அவன் எந்தவொரு அரசியல் கட்சி தலைவனும் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு இல்லாத கைதிகள் விடுதலை பற்றிய கவலை அவனுக்கு இருந்தது. செந்தூரன் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் படித்து பட்டம் பெற்று சுக வாழ்வை வாழ்ந்திருக்கலாம். அல்லது வெளிநாடு சென்று வசதியாக வாழ்ந்திருக்கலாம் அல்லது இன்று சிலர் செய்வதுபோல் நடிகர்களுக்கு 30 அடியில் கட்அவுட் கட்டி மகிழ்ந்திருக்கலாம். ஆனால் மாணவன் செந்தூரன் சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக தன் உயிரை கொடுத்துள்ளான். தன் மகன் தன்னை பிற்காலத்தில் பார்த்துக்கொள்வான் என்று செந்தூரனின் தாய் கனவு கண்டிருப்பார். தன் சகோதரன் தங்களை வாழவைப்பான் என்று செந்தூரனின் சகோதரிகள் நினைத்திருப்பார்கள். ஆனால் செந்தூரன் தன்னை பெற்று வளர்த்த தாயின் கனவை நினைக்கவில்லை. தன் கூடப் பிறந்த சகோதரிகளின் விருப்பத்தை நினைக்கவில்லை. அவனுடைய நினைவு எல்லாம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே. அதற்காக அவன் தேர்ந்தெடுத்த பாதை தவறாக இருக்கலாம். ஆனால் இந்த சின்ன வயதில் அவன் செய்த அர்ப்பணிப்பு மகத்தானது. செந்தூரனை நினைவு கூர்வோம்! குறிப்பு- 26.11.2022 செந்தூரனின் 7வது நினைவு தினமாகும்.

விஜய் டிவி க்கு ஒரு வேண்டுகோள்!

விஜய் டிவி க்கு ஒரு வேண்டுகோள்! ஈழத்தமிழ் பற்றி தரக்குறைவான கருத்துகளை தெரிவித்து ஈழத் தமிழர் மனங்களை புண்படுத்த வேண்டாம். வியாபார ரேட்டிங்கிற்காக ஈழத் தமிழர் உணர்வுகளை சீண்ட வேண்டாம். ஈழத் தமிழர்களைப் பற்றி நன்கு புரிந்துகொண்ட கமல் இதனை எப்படி அனுமதிக்கிறார்?

இவர்கள் பயங்கரவாதிகள் என்றார்கள்

இவர்கள் பயங்கரவாதிகள் என்றார்கள் இவர்கள் இலங்கை ராணுவத்தைவிட அதிக தமிழ் மக்களை கொன்றவர்கள் என்றார்கள் இவர்களிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம் என்றார்கள். இவர்களால் இப்பவும் தமக்கு ஆபத்து என்று இந்திய அரசு தடையை நீடிக்கிறது. இவர்களை நினைவுகூரத் தடை விதிக்கின்றனர். இவர்களின் கல்லறைகளைக்கூட இடித்து தள்ளுகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் கொட்டும் மழையிலும் இவர்களுக்காக அஞ்சலி செலுத்துகின்றனர். ஏனெனில் இவர்கள் தமது உறவுகள் என்பதற்காக அல்ல, மாறாக இவர்கள் தமக்காக மாண்டவர்கள் என்று உணர்வதாலேயே அஞ்சலி செலுத்துகின்றனர். அதனால்தான் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி தமிழ் மக்கள் இவர்களை நினைவு கூர்கின்றனர்.

நினைவழியா நாட்கள்

•நினைவழியா நாட்கள் “அவ்ரோ குலம்” என்று அழைக்கப்படும் செல்லையா குலசேகரராஜசிங்கம் அவர்கள் இளமாறன் என்ற புனை பெயரில் எழுதிய நூல் “நினைவழியா நாட்கள்” இந் நூலின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 2022 ஒக்டோபர் 08 அன்று பிற்பகல் 15.00 மணியளவில் சுவிஸ்சில் நடைபெற்றது. ஆரம்பகால போராட்ட வரலாற்றை அறிய விரும்புவோர் இந் நூலினை படிக்கலாம். இலக்கியம் என்பது போராட துணிந்தவனுக்கு உந்து சக்தியை வழங்குவதாக இருக்க வேண்டும் என மார்க்சிம் கார்க்கி கூறியிருக்கிறார். அதன்படி போராட்டத்தில் பங்கு பற்றியவர்கள் திரும்பி பார்த்தல் என்பது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உதவுவதாக இருக்க வேண்டும். 2009 வரை சுவலிஸ் பொறுப்பாளராக இருந்தவர். பல விடயங்களை எழுதியிருக்கலாம். எழுதியிருக்க வேண்டும். ஆனால் ஏனோ எழுதாமல் தவிர்த்துவிட்டார். இந் நூல் போராட்டத்தை முன்னெடுக்க விரும்புபவர்களுக்கு ஒரு உந்து சக்தியை வழங்க தவறியிருப்பது துரதிருஸ்டவசமானதே.

அன்று கலைஞர் ஆட்சியில் சர்க்கரையை

அன்று கலைஞர் ஆட்சியில் சர்க்கரையை எறும்பு தின்றது. பைகளை கறையான் அரித்தது. இன்று உத்தரப்பிரதேசத்தில் 581 கிலோ கஞ்சாவை எலி தின்று விட்டது. வினோதமாக ஊழல் செய்வதில் கலைஞர் முன்னோடி என்பதில் திராவிடம் நிச்சயம் பெருமை கொள்ள முடியும்.

என்னது அக்கா தம்பியா?

என்னது அக்கா தம்பியா? பிஜேபி யில் அக்கா தம்பிகள் இப்படித்தான் பேசிப்பாங்களா? பீப் போட்ட ஆடியோ வேர்சனைக் கேட்டவன்கூட அக்கா தம்பி என்றால் செருப்பால் அடிப்பான்.

நீங்கள் கைபர் கணவாய் ஊடாக

நீங்கள் கைபர் கணவாய் ஊடாக வந்த வரலாற்றை ஒருபோதும் மாற்றியமைக்க முடியாது.

இவர் இழைத்த தவறுகளில்

இவர் இழைத்த தவறுகளில் இனப்படுகொலை செய்த சிங்கள அரசை ஆதரித்த இவர் தவறை யாராலும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக 16 பேர் தமிழ்நாட்டில் உயிர் துறந்துள்ளனர். இன்னும் சிலர் ஈழத்திற்கு வந்து ஆயுதம் ஏந்தி போராடி வீர மரணம் அடைந்துள்ளனர். தாய்த் தமிழகம் என்பது வெறும் உச்சரிப்பு அல்ல. அது இரத்தத்தில் கலந்த உணர்வு. நன்றியுடன் நினைவு கூர்வோம். ஒன்றிணைந்து மீண்டும் எழுவோம்

நோ கொமன்ட்ஸ்

நோ கொமன்ட்ஸ்

இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு

இவர்கள் வெறுமனே அழுதுவிட்டு ஓய்ந்துவிடுவார்கள் என்று நினைத்து விடாதீர்கள். என்ன மொழியில் பேசினால் உலகம் புரிந்துகொள்ளுமோ அந்த மொழியில் பேசுவார்கள். குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தமக்குரிய நீதியைப் பெறாமல் இவர்கள் ஓய மாட்டார்கள்.

சின்னக் குருவி நீ சினுங்கி அழக்கூடாது

சின்னக் குருவி நீ சினுங்கி அழக்கூடாது ஏழைக் குருவி நீ ஏங்கி அழக்கூடாது வலை என்ன பெருங் கனமா ? அதை அறுத்திட பல வழி இருக்குது வழியில் என்ன பெருந்தடை வந்தாலும் அதை தகர்த்தெறிய பல வழி இருக்குது!

இரண்டு நாளில் நாற்பதாயிரம் பேரை கொன்று

இரண்டு நாளில் நாற்பதாயிரம் பேரை கொன்று புதைத்தாலும் அடிமையாகவே வீழ்ந்து கிடந்திட மாட்டோம் மீண்டும் முளைத்து எழுவோம் முன்பை விட பலமாய். இதுவே இன்றைய மாவீரர் நாளில் உலகிற்கு ஈழத் தமிழர் கூறும் செய்தி.

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே வெறும் நாற்பது லட்சம் பேர்தானே என சிங்கள அரசு நினைத்தது. அது இனி ஒன்றிணைந்த எட்டுக்கோடியே நாற்பது லட்சம் தமிழர்களை சந்திக்க வேண்டும்.

உயிர்களை இழந்தோம்

உயிர்களை இழந்தோம் உடமைகளை இழந்தோம் ஆனால் உணர்வுகளை இழக்கவில்லை எமக்காக மாண்டவர்கள் நாளில் உறுதியாக உரத்து கூறுகின்றோம் மீண்டும் எழுவோம் முன்பைவிட பலமாய்

ஓடாத மானும் போராடாத இனமும்

ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.

இரண்டு கால் உள்ள சிலரே

இரண்டு கால் உள்ள சிலரே எழுந்து நிற்காமல் அடிமையாக வீழ்ந்து கிடக்கையில் ஒரு காலை இழந்த பின்பும் எப்படி இந்த இளைஞனால் எழுந்து நிற்க முடிகிறது? ஏனெனில் இவர் இழந்தது ஒரு காலையே ஒழிய உணர்வை அல்ல. அதனால்தான் எந்த தடுமாற்றமும் இன்றி உறுதியாக நிற்க முடிகிறது.

நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஒடும்.

நாய்க்கு கல் எறிந்தால் நாய் ஒடும். ஆனால் அதே கல்லை தேன் கூட்டுக்கு எறிந்தால் எறிந்தவர் ஓட வேண்டி வரும். தேனீக்கள் நாயைவிட பலவீனமானவைதான். ஆனால் அவை ஒன்று சேர்ந்து தாக்க வருவதால் ஓட வேண்டி வருகிறது. தமிழர்களும் தேனீக்கள் போல் ஒன்று சேர்ந்து தாக்க முற்பட்டால் எதிரி நிச்சயம் ஓடுவான் புலம்பெயர்ந்த தமிழர்கள் உலகத்திற்கு சொல்லும் செய்தி இதுதான், “ஓட முடியவில்லை என்றால் நடந்து செல்வோம் நடந்து செல்ல முடியவில்லை என்றால் தவழ்ந்தாவது செல்வோம். ஆனால் ஒருபோதும் எமது இயக்கத்தை நிறுத்திவிட மாட்டோம்”

போராளிகள் பயங்கரவாதிகள் இல்லை

“போராளிகள் பயங்கரவாதிகள் இல்லை அவர்கள் எமக்காக மாண்ட மாவீரர்கள்” உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் ஒன்று திரண்டு நினைவு கூர்ந்ததன்மூலம் மூலம் கூறியிருக்கும் செய்தி இதுதான். இனியாவது சிங்கள இந்திய அரசுகள் இதனை புரிந்துகொள்ளுமா?

சம்பந்தர் ஐயா

சம்பந்தர் ஐயா – என்ன தம்பி நேற்று மாவீரர் நிகழ்வில் பயங்கர கூட்டமாமே? சுமந்திரன் - ஆம் ஐயா. எல்லா இடமும் சரியான கூட்டம். அதனால நான்தான் அரசிடம் பேசி இப்படி நடத்த அனுமதி பெற்றுக்கொடுத்தவன் என்று பிரச்சாரம் செய்யும்படி என்ர தம்பிகளிடம் கூறினேன். ஆனால் அதுவும் சுகாஸ் ஆமிக்காரனுடன் சண்டை பிடிக்கிற வீடியோ வந்து குழம்பிப்போச்சு. சம்பந்தர் ஐயா – அப்ப என்ன செய்யலாம்? அடுத்த முறை இந்திய தூதரைச் சந்திக்கும்போது கோபப்படப் போகிறாரே? சுமந்திரன் - இவர்களை கொன்றதால்தான் திருமலைக்கு சுதந்திரமாக சென்றுவர முடிகிறது என்று நீங்கள் கூறியிருக்கிறியள். நான் இவர்களின் தவறுகளையும் விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா வில் கூறியிருக்கிறேன். இதையெல்லாம் இந்திய தூதரிடம் கூறி சமாளிக்கலாம்தானே ஐயா? சம்பந்தர் ஐயா - இந்திய தூதரைச் சமாளிக்கலாம். ஆனால் இதையே தம்பி கஜன் அடுத்த தேர்தலில் மக்களிடம் கூறினால் என்ன செய்வது? சுமந்திரன் - தேர்தலில் கூட்டங்களில் மாவீரர் பாடல்களை ஒலிபரப்பலாம். ஜனநாயகப் போராளிகள் கட்சிகாரர்களை நம்ம வித்தியாதரன் மூலம் எங்கள் மேடையில் ஏற்றலாம். இப்படி பல திட்டம் இருக்கு ஐயா

தோழர் பிரடெரிக் எங்கெல்சின்

•தோழர் பிரடெரிக் எங்கெல்சின் 202வது பிறந்தநாள். . தோழர் எங்கெல்ஸ் இல்லையேல் கால் மார்க்ஸ் இல்லை. மாக்சியமும் இல்லை என்று தோழர் லெனின் கூறியிருந்தார். ஆனால் தோழர் எங்கெல்ஸ் “அனைத்து பெருமைகளையும் தன் நண்பன் கால் மார்க்ஸ்ற்கே உரியது” என்று அடக்கத்துடன் கூறுகிறார். அத்தகைய மாபெரும் ஆசான் தோழர் எங்கெல்ஸ் அவர்களின் 202வது பிறந்ததினம் இன்று ஆகும். உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு. கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார். அங்கிருந்து ஜெர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849-இல் ஜெர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெய்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார். தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறுகிறார். மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார். எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவஞானி;. எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.

புலிகள் போதைப்பொருள் கடத்துகிறார்கள்

புலிகள் போதைப்பொருள் கடத்துகிறார்கள் என்று எழுதிய (200 ரூபா) உபிஸ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். மானஸ்தர்கள். ஒருவேளை தூக்கில் தொங்கியிருப்பார்களோ? #திராவிட உருட்டு

நிருபர் - போதைப்பொருள் என்பது

நிருபர் - போதைப்பொருள் என்பது சமூக தீமை என்றீர்கள். இப்ப உங்க கட்சிக்காரரே 360 கோடி போதைப்பொருள் கடத்தியிருக்கிறாரே? திராவிட முதல்வர் - என் உபதேசம் ஊருக்குத்தான். உடன்பிறப்புகளுக்கு அல்ல. நிருபர் - போதைப் பொருள் பாவித்து யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவன் பலி என்ற செய்தி பற்றி திராவிட முதல்வர் - ஈழத் தமிழர் நலன் மீது திமுக அக்கறை காட்டும் நிருபர் - ???