Sunday, March 31, 2024

வெள்ளைக்கார அரசை விரட்ட

வெள்ளைக்கார அரசை விரட்ட வெடிகுண்டு வீசிய பகத்சிங்கை தியாகி என்று போற்றும் சிலர் , கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக குண்டு வீசிய தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்கின்றனர். நாம் பகத்சிங்கை மட்டுமல்ல மக்களுக்காக போராடிய தோழர் தமிழரசனையும் என்றும் நினைவில் போற்றுவோம்.

நினைவு கூர்வோம்!

நினைவு கூர்வோம்! தமிழ்தேசிய போராளிகளான இராசாராமன், சரவணன் ஆகியோர் தமிழக காவல்துறையினரால் போலி என்கவுண்டரில் சென்னையில் கொல்லப்பட்ட நாள் மார்ச் - 23 ஆகும். இராசாராமன்,சரவணன் ஆகியோரை கொன்றதன் மூலம் தமிழ் இனவிடுதலையை தடுக்க முடியாது என்பதை இந்திய அரசுக்கு வரலாறு காட்டும். இது உறுதி.

நாதியற்றவனாக இருக்கிறேன்...

நாதியற்றவனாக இருக்கிறேன்... புகலிடக் கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை! இதயம் இருக்குமாயின் இடம் கொடுங்கள் இறப்பதற்கு முன் வாழ்ந்துவிட்டு போகிறேன். ஒரு நாளாவது (இந்திய) குடிமகனாக! -விக்டர் செ இந்த (ஈழ) அகதியின் குரல் திராவிட முதல்வரின் செவிக்கு எட்டுமா?

அமைதியான கடல்

அமைதியான கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்குவதில்லை. போராட்டம் இன்றி இனத்திற்கான சிறந்த தலைமை உருவாகுவதில்லை.

நிச்சயம் வெற்றி பெறுவோம்”

நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்ற ஒற்றை நம்பிக்கையைத்தவிர வேறு எதுவுமே இவர்களிடம் இல்லை. ஆனால் அந்த ஒற்றை நம்பிக்கையே தொடர்ந்து இவர்களை முன்னோக்கி செல்ல வைக்கிறது என்றோ ஒருநாள் நிச்சயம் தமது இலக்கை அடைவார்கள். இது உறுதி

சாத்தான் ஓதும் வேதம்!

•சாத்தான் ஓதும் வேதம்! நூல்கள் எழுதுவதன் மூலம் நிரபராதி ஆகிவிட முடியாது. நீதிமன்ற விசாரணைகளே முடிவு செய்ய வேண்டும்.

பன்றி பல குட்டிகளை போடலாம்

பன்றி பல குட்டிகளை போடலாம் ஆனால் யானை ஒரு குட்டி போடும்போதுதான் நிலம் அதிர்கிறது. அதிர்வுகளை ஏற்படுத்தும் “நாம் தமிழர்”

ஆழ்ந்த இரங்கல்

•ஆழ்ந்த இரங்கல் கடந்த வாரம் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றி தன் தொண்டுகள் பற்றி கூறியிருந்தார். குறிப்பாக வசதியற்ற ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதை கூறி பலரின் பாராட்டைப் பெற்றார். சிறந்த சிரிப்பு நடிகர் , இந்த வாரம் இப்படி ஒரு செய்தியை கொடுத்து கவலை கொள்ள வைத்திட்டாரே?

அடேய்! யாரு பார்த்த வேலையிடா இது?

அடேய்! யாரு பார்த்த வேலையிடா இது? என்ன இருந்தாலும் அவர் தமிழக முதல்வரடா! 😂😂

எம் வீட்டில் திருட வந்தனர்

“எம் வீட்டில் திருட வந்தனர் நாம் “திருடன்” “திருடன்” என்று கத்தினோம் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி எம்மை கைது செய்து சிறையில் அடைத்தனர்” - கவிஞர் அறிவுமதி செய்தி - வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தில் கைதானவர்கள் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டனர்.

முடிந்துவிட்டான் என்று நினைக்கும்போது

முடிந்துவிட்டான் என்று நினைக்கும்போது எழுந்து நில்லுங்கள். எதிரியும் சிலிர்த்து போவான் இனப்படுகொலைக்கு நீதிகோரி புலம்பெயர் சமூகத்தின் அடுத்த தலைமுறையும் போராட ஆரம்பித்துவிட்டது.

சாராயம் இல்லை

சாராயம் இல்லை பிரியாணி இல்லை ஆனாலும் கூட்டம் தானாக சேர்கிறது. வோட்டுக்கு பணம் இல்லை எந்த கட்சியுடனும் கூட்டு இல்லை ஆனாலும் ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு அதிகரிக்கின்றது. நம்பிக்கை தரும் “நாம் தமிழர்”

தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின்

"தமிழ்நாடு விடுதலைப்படை" தளபதி தோழர் லெனின் நினைவை போற்றுவோம்! தமிழ்நாடு விடுதலைக்காக மட்டுமன்றி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராடி வீர மரணம் அடைந்த தோழர் லெனின் அவர்களின் 30ம் ஆண்டு நினவு நாள் 29.03.2024 ஆகும். 19.11.1967 ல் பிறந்த தோழர் லெனின் தனது 27 வயதில் 29.03.1994யன்று முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தை தாக்க சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் எடுத்துச் சென்ற குண்டு வெடித்து மரணமடைந்தார். தோழர் தமிழரசன் மரணத்தின் பின் தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாடு விடுதலைப் படையையும் முன்னெடுத்தவர் தோழர் லெனின். தோழர் லெனின் 26.01.1990 யன்று குடியரசு நாளில் ஆத்தூர் மற்றும் குடவாசல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களை குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் 06.04.1991 யன்று, அன்னக்கிளி என்ற பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு செய்தமைக்காக புத்தூர் காவல் நிலையத்தை குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். தோழர் லெனின் 21.05.1992யன்று ராஜீவ்வைக் கொன்ற தானுவிற்கு அஞ்சலி செலுத்தி கும்பகோனம் தொலைக்காட்சி மற்றும் அஞ்சல் நிலையங்கள் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டார். தோழர் லெனின் 17.11.1993 யன்று, பொலிசார் செல்வம் , விருப்பலிங்கம் என்ற இருவரை விசாரணைக்கு என்று அழைத்தச் சென்று கொன்றமைக்காக குள்ளம்சாவடி காவல் நிலையத்தைக் குண்டு வீசி தகர்த்தார். தோழர் லெனின் "ஸ்பாட்டகஸ்" என்ற நூல் நிலையம் அமைத்து மக்களுக்கு மாக்சிய கல்வி போதித்தார். தோழர் லெனின் "வெண்மணி" கலைக்குழுவை நிறுவி மக்கள் திரள் அமைப்புகளை கட்டுவதற்கு முயன்றார். தோழர் லெனின் மறைவு தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும். மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனையை தனது தத்துவ வழிகாட்டியாக கொண்டு செயற்பட்ட தோழர் லெனின் பாதையை தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலிகள் ஆகும். குறிப்பு- தோழர் செந்தமிழ் குமரன் அவர்களால் தோழர் லெனின் வாழ்கை வரலாறு புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது . இந்த நூலுக்கு ஒரு சிறிய அணிந்துரையை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நான் எழுதிய அணிந்துரையை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். http://tholarbalan.blogspot.co.uk/2016/03/blog-post_33.html

உலகப்புகழ்பெற்ற “தாய்” நாவலை

உலகப்புகழ்பெற்ற “தாய்” நாவலை எழுதிய மார்க்சிம் கார்க்கி அவர்களின் பிறந்த தினம் இன்று.(28.03.1868) இலக்கியம் என்பது போராட துணிந்தவனை உந்தி தள்ளுவதாக இருக்க வேண்டும் என்று மார்க்சிம் கார்க்கி கூறினார். அதனால்தான் அவர் ரஸ்சிய புரட்சிக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து புரட்சியாளர்களுக்கும் உத்வேகம் தரக்கூடிய தாய் நாவலை படைத்தார். எமது ஈழப் போராட்ட வரலாற்றிலும் பல தாய் கதைகள் உண்டு. ஆனால் அதை எழுத ஒரு மார்க்சிம் கார்க்கி இன்னும் எம்மிடம் தோன்றவில்லை.

எந்தவொரு கருத்துக்கணிப்பும்

எந்தவொரு கருத்துக்கணிப்பும் நாம் தமிழர் கட்சி வெற்றிபெறும் என்று கூறவில்லை எனினும் மத்திய பாஜக அரசும் மாநில திமுக அரசும் ஏன் நாம் தமிழர் கட்சிக்கு அதிக நெருக்கடிகளை கொடுக்கின்றன? பாஜகவும் திமுகவும் ஏன் நாம்தமிழர் கட்சியை அதிகம் விமர்சிக்கின்றன? நாம் தமிழர் கட்சி தமிழ்த்தேசியத்தை முன்வைப்பதை தவிர வேறு என்ன காரணம் இருக்கும்? ஆரியமும் திராவிடமும் ஒன்று சேர்ந்து தமிழத்தேசியத்தை எதிர்க்கும் என்பது இதுதானா? இந்நிலையில் கடந்த தேர்தலைவிட ஒரு வோட்டு அதிகமாக பெற்றாலே நாம் தமிழர் கட்சியினர் வெற்றி பெற்றதாகவே கருத வேண்டும். அது நடக்கும்.

எம் வாழ்வில் நாம் கண்ட

எம் வாழ்வில் நாம் கண்ட மறக்க முடியாத நாடகம் குறிப்பு – 27.03.2024உலக நாடக தினத்தை முன்னிட்டு.

செய்தி – உலக உருண்டைக்கு

செய்தி – உலக உருண்டைக்கு தண்ணீர் ஊற்றுவதன்மூலம் உலகத்தை குளிர்விக்க முடியும் என சாமியார் ஒருவர் தெரிவிப்பு. சாமி! பிளீஸ், யாழ்ப்பாணத்தில் நம்ம ஊர் கரவெட்டி பக்கமாக தண்ணீர் ஊற்றுங்க. 32C வெப்பமாம். தாங்க முடியவில்லை என்கிறார்கள். 😂😂

செய்தி - ஈழத் தமிழ் அகதிகளுக்கு

செய்தி - ஈழத் தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுக்கொடுப்போம் - தமிழக முதல்வர் ஸ்டாலின் இருட்டு வந்திட்டாலே சின்ராசு பாட ஆரம்பித்துவிடுவான் என்பதுபோல் தேர்தல் வந்திட்டாலே திராவிட முதல்வர் உருட்ட ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஈழஅகதிகளுக்கு வாக்குறுதி அளிப்பதும் தேர்தல் முடிந்த பின்பு அதை மறந்துவிடுவதும் திமுக வின் வழக்கமாகும். கலைஞர் ஆரம்பித்த சிறப்புமுகாமை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, 40 வருடமாக தமிழ்நாட்டில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழருக்கு குடியுரிமை பெற்றுக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, கலைஞர் தத்தெடுத்து வளர்த்த அந்த அகதிச் சிறுவன் மணி எங்கே என்பதையாவது கூறுங்கள் பிளீஸ். எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி என்றும் அவருக்கு தமிழ் இன உணர்வு இல்லை என்று காட்டுவதற்காக கலைஞர் 1984ம் ஆண்டு ஈழ அகதிச் சிறுவன் ஒருவனை தத்தெடுத்து வளர்த்தார். கனிமொழி ஒரு தம்பி வேண்டும் என்று கேட்டதாகவும் இனி அந்த சிறுவன் கனிமொழிக்கு தம்பியாக இருப்பான் என்றும் கலைஞர் கூறினார். அந்த அகதிச் சிறுவனுக்கு மணி என்று பெயரும் வைத்தார். ஆனால் இப்போது அந்த மணி எங்கே என்று தெரியவில்லை. சொத்தில் பங்கு கொடுக்க வேண்டி வரும் என அஞ்சி ஸ்டாலின் அந்த சிறுவனை கொன்றுவிட்டதாக ஸ்டாலினுடன் கூட இருந்த பரிதிஇளம்வழுதி கூறினார். தயவு செய்து இப்பவாவது அந்த அப்பாவி அகதிச் சிறுவன் எங்கே என்பதை கூறுங்கள் தமிழக திராவிட முதல்வரே!

தண்ணீரை திராட்சைரசமாக

தண்ணீரை திராட்சைரசமாக மாற்றிய தேவனும் தேவையில்லை தண்ணீரில் நடக்கும் இறைவனும் தேவையில்லை செங்கடலை இரண்டாக பிளந்த ரட்சகரும் தேவையில்லை மரித்து மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்த தெய்வமும் தேவையில்லை தன் தேவாலயத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டுகளையாவது செயலிழக்க வைக்கும் கடவுளே தற்போது தேவை

படம்-1 தமிழின விடுதலைக்காக

படம்-1 தமிழின விடுதலைக்காக போராடி பல வருடம் சிறையில் வாடிய புலவர் கலியபெருமாள் வீடு. படம் -2 தன்னைத்தானே உலகத் தமிழின தலைவர் என அழைத்துக்கொண்ட கலைஞர் குடும்பத்தின் வீடு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இதில் யார் தமிழினத்தவருக்கானவர் என்று.

ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு

ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு இந்தியா காரணமா? இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார். மைத்திரி கூறியிருப்பது உண்மைதான். ஆனால் இதை பதவிலியில் இருக்கும்போது கூறாமல் இப்போது ஏன் கூறுகின்றார்?

Friday, March 22, 2024

பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!

•பாராட்டுகளும் வாழ்த்துக்களும்! 13 வயதில் 31 கிலோ மீட்டர் பாக்குநீரிணை கடலை எட்டு மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த சிறுவன் தன்வந்த் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

அன்று தாய் பார்வதி அம்மாள்

அன்று தாய் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற வந்தபோது கொஞ்சம்கூட இரக்கமின்றி திருப்பி அனுப்பினார் முதல்வர் கலைஞர் கருணாநிதி இன்று தன் மகனை ஒருமுறையேனும் உயிரோடு பார்த்துவிட வேண்டும் என 33 வருடமாக காத்திருந்த தாய்க்கு உயிரற்ற மகன் உடலை அனுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்த இரண்டு தாய்களின் பெயரை இனி உச்சரிக்கும்போதெல்லாம் இவர்கள் சிந்திய கண்ணீருக்கு காரணமானவர்களின் பெயரையும் வரலாறு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.

ஆசையோடு தேசம்காண

ஆசையோடு தேசம்காண இருந்தவருக்கு எமனானது இந்திய அதிகாரம் உயிரோடு வந்தவரை உயிறற்று அனுப்பி வைத்துள்ளது பாரதம் சாந்தனின் இறப்பு காந்தி தேசத்தின் அவலக்குறியீடு" - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை.

தன் மகன் உயிரோடு வருவான்

தன் மகன் உயிரோடு வருவான் என 33 வருடமாக காத்திருக்கும் இத் தாய் ஞாயிறு அன்று தன் மகனின் உயிரற்ற உடலை காண்கையில் நாம் என்ன சொல்லி தேற்றுவது? இவரது மகன் மரணம் இந்திய அரசின் கோர முகத்தை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் “ஈழத் தமிழர் அனாதைகள் அல்ல. அவர்களுக்கு நாம் இருக்கிறோம்” என்றார் தாம் ஆட்சிக்கு வந்தால் 7 தமிழர்களையும் விடுதலை செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால் உச்சநீதிமன்றம் விடுதலை செய்த பின்பும் அவர்களை சிறப்புமுகாமில் அடைத்து "மாரடைப்பு மரண விடுதலை" அளிப்பார் என்று நினைக்கவில்லையே..

இருவரும் தமிழர்கள்

இருவரும் தமிழர்கள் ஒருவர் ஈழத் தமிழர் சாந்தன் இன்னொருவர் தமிழ்நாடு வேலூர் வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழர் சீனிவாசன் கடந்த 28.02.2024யன்று மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர் சாந்தன் சிகிச்சை பலனின்றி மரணமானதாக தமிழக அரசு அறிவித்தது. சாந்தன் மரணமான அதே 28ம் திகதி 2009ல் ஈழத் தமிழர்களுக்காக சீனிவாசன் தீக்குளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீனிவாசன் சிகிச்சை பலனின்றி 02.03.2009ல் இறந்ததாக தமிழக அரசு தெரிவித்தது. இங்கு கவனிக்க வேண்டியது 2009, 2024ல் தமிழக அரசாக இருந்தது திமுக. ஈழத் தமிழருக்காய் தன்னை ஆகுதியாக்கிய சீனிவாசனுக்கு நாளை 15வது நினைவுதினம் ஆகும். அவருக்கு எமது நினைவஞ்சலிகள்.

சிறப்புமுகாமில் இருந்த சாந்தன் மரணத்திற்கு

சிறப்புமுகாமில் இருந்த சாந்தன் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் பொறுப்பு என நான் எழுதியிருந்தேன். அப்போது சில திமுக உடன்பிறப்புகள் சிறப்புமுகாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதற்கும் தமிழக முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று என்னை திட்டினார்கள். இப்போது முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் சாந்தன் மரணத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமன்றி நடைப்பயிற்சி செய்யக்கூட விடாமல் சிறப்புமுகாமில் சித்திரவதை செய்து வருகிறது தமிழக அரசு என்று கூறியிருக்கிறார். இப்போது இங்கு நான் கேட்க விரும்புவது, எடப்பாடிக்கும் சிறப்புமுகாம் யார் கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்று தெரியவில்லை என திமுக வினர் கூறப்போகின்றார்களா? எடப்பாடி அவர்கள் கூறியிருப்பது யாவும் உண்மைதான். ஆனால் இதைக்கூற அவருக்கும் எந்த அருகதையும் கிடையாது ஏனெனில் அவருடைய ஆட்சிக்காலத்திலும் இந்த சிறப்புமுகாம் சித்திரவதைகள் இருந்தன. இன்று ஸ்டாலின் எப்படி சிறப்புமுகாம் கொடுமைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறாரோ அதேபோன்றுதான் எடப்பாடி அவர்களும் ஆட்சியில் இருந்தபோது கண்டு கொள்ளாமல் இருந்தார். இவர்கள் இருவரும் எதிர்க்கட்சியில் இருக்கும்போது நீலிக் கண்ணீர் வடிப்பதும் ஆட்சிக்கு வந்தவுடன் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. தமிழர் தாயகம் முழுவதும் தேசிய துக்கதினமாக அனுட்டிக்க பல பொது அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. ஒன்று திரண்டு தமிழ் மக்கள் செலுத்தும் அஞ்சலி என்பது இந்திய அரசுக்கு தமிழ் மக்களின் பதிலாக அமையட்டும்.

ஊருக்குபோய் தன் தாயின் கையால்

ஊருக்குபோய் தன் தாயின் கையால் ஒரு குவளை கஞ்சி குடிக்க வேண்டும் என்பதே சாந்தனின் கடைசி ஆசையாக இருந்தது. தான் இறப்பதற்கு முன் தன் மகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்பதே சாந்தன் தாயாரின் 33 வருட ஆசையாக இருந்தது. இரக்கமற்ற இந்திய அரசு இவர்களின் ஆசையை நிறைவேற்றவில்லை. எத்தனை தடைகள். அத்தனையும் தாண்டி மக்கள் சாந்தன் உடலை அவர் ஊருக்கு கொண்டு சென்று தாயிடம் ஒப்படைக்கின்றனர். மக்கள் அளித்துள்ள இந்த பதிலை இனியாவது இந்திய அரசு புரிந்துகொள்ளட்டும். மற்ற மூவரையுமாவது உயிரோடு அவர்கள் விரும்பும் நாடு செல்ல அனுமதிக்கட்டும்.

சாந்தன் தன் தாயாரிடம் சென்றடைந்துவிட்டார்.

சாந்தன் தன் தாயாரிடம் சென்றடைந்துவிட்டார். உயிரற்ற உடலாகவாவது சென்று சேர்ந்துவிட்டார் என ஆறுதல் கொள்வதா? அல்லது உயிருடன் அனுப்பிவைக்காதது குறித்து இந்திய அரசு மீது கோபம் கொள்வதா? தூக்கு தண்டனையே அதி உச்சபட்ச தண்டனையாக இருந்து வருகிறது. ஆனால் சாந்தன் அதைவிட கொடிய தண்டனையை அனுபவித்துள்ளார். இதனை அவர் தமிழ் மக்களுக்காகவே அனுபவித்தார். எனவேதான் தமிழ் மக்களும் அவருக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகின்றனர். இனி ஒவ்வொரு வருடமும் இந் நாளில் சாந்தனை மட்டுமன்றி சாந்தன் மரணத்திற்கு காரணமானவர்களையும் சேர்த்தே வரலாறு நினைவு படுத்தப் போகிறது.

சாந்தன் உடலை ஆரத்தி எடுத்து

சாந்தன் உடலை ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார் தங்கை. சாந்தன் உயிருடன் வந்தால் எப்படி வரவேற்க விரும்பியிருந்தாரோ அத்தகைய ஒரு வரவேற்பை சாந்தன் உடலுக்கு கொடுத்து தன்னை தேற்றுகிறார் தங்கை. அழுது ஓய்ந்துவிட முடியாத ஆறாதத் துயரம் இது.

உலகில் மரணித்த போராளிகள் எல்லாம்

உலகில் மரணித்த போராளிகள் எல்லாம் வேதனைகளை அனுபவித்து மடிந்தவர்களே. அவர்கள் அனுபவித்த வேதனைக்கு சற்றும்குறையாத வேதனையை அனுபவிப்பவர்கள் அவர்களைப் பெற்ற தாய்மார்கள். ஆனால் மரணித்த போராளிகளை தியாகிகள் என்று நினைவுகூறும் வரலாறு அத் தாய்மார்களை அப்படி நினைவுகூர்வதில்லை. தாயின் கையால் ஒரு கவளம் சோறு தின்ன வேண்டும் என்றே சாந்தன் விரும்பினார். சாந்தனின் அந்த கடைசி விருப்பத்தை வாய்க்கரிசி போட்டு நாளை நிறைவேற்றப்போகிறார் தாய். 33 வருடமாக தன் மகனைக் காண காத்திருக்கும் தாய் மகனின் உயிரற்ற உடலைக் காண நேருவது மிகப் பெரிய துயரம். அக் கொடுங் துயரத்தை அனுபவிக்கும் இத் தாயை நாம் என்ன சொல்லி தேற்றுவது?

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்

•“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள். தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் பிறந்ததினம் 04.03.1924 ஆகும். புலவர் அவர்கள் “தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர். தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர். அதனாலேயே அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கில் இணைக்கப்பட்டார். வயதான காலத்தில் வழக்கின் நிமித்தம் அலைக்கழிக்கப்ட்டபோதும் ஈழத் தமிழர்களுக்கான தனது ஆதரவை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை. தமிழின விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி.

எந்த மண்ணுக்காக சாந்தன் ஏங்கினாரோ

எந்த மண்ணுக்காக சாந்தன் ஏங்கினாரோ அந்த மண்ணில் சாந்தனை விதைத்துள்ளார் அவரது தாய். தவறி விழும் விதையைக்கூட முளைத்தெழ வைக்கும் மண் தனக்காக போராடியவரை ஏமாற்றிவிடுமா என்ன? நிச்சயம் ஓராயிரம் சாந்தன்களை முளைத்தெழ வைக்கும்.

என்றும் நினைவில் கொள்வோம்!

என்றும் நினைவில் கொள்வோம்! ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை கண்டித்து சென்னை ஓட்டேரி கே.எம். தோட்டம் 9 ஆவது தெருவில் வாழ்ந்து வந்த சதாசிவம் சிறீதர் (எழில்வளவன்) என்பவர் தீக்குளித்து உயிரீகம் செய்த நாள் 05.03.2009

இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று

இன்று ரசியப் புரட்சியின் வரலாற்று நாயகன் தோழர் ஸ்டாலின்நினைவு தினமாகும். தோழர் ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறு யாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள். மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும், பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும், உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும். கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் , ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது. பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி. தோழர் ஸ்டாலின் மறைவின் பின்னர் ஆட்சிக்கு வந்த குருசேவ் காட்டிய பாதையில் சென்ற ரசியா இன்று முதலாளித்துவ நாடாகிவிட்டது. மீண்டும் பிச்சைக்காரர்கள் பட்டினி வேலையின்மை விபச்சாரம் அனைத்தும் அங்கே தலைவிரித்தாடுவதை முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. (முதலாளித்துவ) ஜனநாயகம் மீண்டும் நிலைநாட்டப்பட்டதின் பயன் என்ன என்பது அப்பட்டமாக தெரிந்துள்ளது. ஸ்டாலின் மீதான குருசேவ் இன் தாக்குதல் வெறும் தனிநபர் விவகாரம் அல்ல. “ லெனின் ஸ்டாலின் காட்டிய வழியில் இனி உலக கம்யுனிஸ்டுகள் புரட்சி செய்யத் தேவையில்லை. தேர்தலில் நின்றால் போதும். அமெரிக்காவை எதிர்க்காமல் சமாதான சகவாழ்வு நடத்தலாம்” என்ற குருசேவின் துரோகக் கொள்கையையும் ஸ்டாலின் மீதான அவதூறையும் சீனத் தலைவர் மாசேதுங் அவர்களும் இலங்கை கம்யுனிஸ்ட் தலைவர் சண்முகதாசன் உட்பட பல உலக கம்யுனிஸ்ட்கள் எதிர்த்தனர். இந்த உண்மையை வசதியாக மறைத்துவிட்டு உலக கம்யுனிஸ்ட் இயக்கமே ஸ்டாலினை தூற்றுவது போல் சிலர் சித்தரிக்க முயலுகின்றனர். ஆனால் உலகம் உள்ளவரை தோழர் ஸ்டாலின் புகழ் இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.

சாந்தனை புதைத்து அதன் ஈரம்

சாந்தனை புதைத்து அதன் ஈரம் காய்வதற்குள் அடுத்த இடியை இறக்கியுள்ளது இரக்கமில்லாத தமிழக அரசு. மற்ற மூவரையும் இலங்கை அனுபுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் கோரியுள்ளது. அவர்கள் இலங்கை திரும்புவதற்குரிய அனுமதியை இலங்கை தூதரகத்தில் கோரினால் அதுபற்றி பரிசீலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர்கள் மூவரும் தனித்தனியாக நீதிமன்றத்தை அணுகினால் பரிசீலிக்கப்படும் எனகூறி உயர்நீதிமன்றம் சாந்தன் வழக்கை முடித்துவிட்டது. சாந்தனுக்குரிய நீதி வழங்கப்படவில்லை. வழக்கம்போல் சாந்தனுக்குரிய நீதியை மத்திய மாநில அரசுகளுடன் சேர்ந்து நீதிமன்றமும் மூடி மறைத்துவிட்டது. இப்போது விடயம் என்னவென்றால் முருகன் நளினி இருவரும் பிரித்தானியாவில் இருக்கும் தம் மகளிடம் சென்று வாழ விரும்புகின்றனர். இவர்கள் பிரித்தானியா செல்ல விரும்புவது உலகத்திற்கே தெரியும். ஆனால் தெரியாதமாதிரி மத்திய மாநில அரசுகள் மட்டுமன்றி உயர்நீதிமன்றமும் சேர்ந்து நாடகமாடுகின்றன. 7 தமிழர்களையும் விடுதலை செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தவர் ஸ்டாலின். ஆனால் அவர் பதவிக்கு வந்ததும் உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துமகூட் நாலு ஈழத் தமிழரை சிறப்புமுகாமில் அடைத்தார். இந்தியா ஒரு ஜனநாயகநாடு என்றும் இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று கூறுகின்றனர். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்று 7 தமிழர்களையும் உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் தமிழக முதல்வரைப் பொறுத்தவரையில் “சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். ஆனால் ஈழத் தமிழரைத் தவிர” என்று கருதுகிறார். நாலு தமிழர்களையும் விரும்பும் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என உறுதியளித்தே அவர்களை சிறப்புமுகாமில் அடைத்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். ஆனால் வழக்கம்போல் இந்த வாக்குறுதியையையும் அவர் காப்பாற்றவில்லை.

முருகன் லண்டனில் உள்ள தன்

முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ விரும்புகிறார். ஆனால் தமிழக அரசு அவரை லண்டன் செல்ல அனுமதி வழங்காமல் இலங்கைக்கு அனுப்ப முயல்கிறது. இதுதான் சட்ட நடைமுறை என்று சிலர் தமிழக அரசை நியாயப்படுத்த முயல்கின்றனர். அவர்களுக்கு ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன் இதே ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விக்கி மற்றும் ஆதிரை. இவர்கள் மீதான ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தபோது இவர்கள் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டனர். சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட இருவரும் அங்கிருந்து ஜரோப்பிய நாடொன்றுக்கு சென்று அங்கு வாழ்ந்து வருகிறார்கள். எனவே ராஜீவ் வழக்கில் வைக்கப்பட்டிருந்த விக்கி ஆதிரை ஆகியோர் வெளிநாடு செல்ல சட்ட நடைமுறை அனுமதிக்கும் என்றால் முருகன் செல்ல ஏன் அனுமதிக்க முடியாது? எல்லாவற்றுக்கும் மேலாக முருகன் ஒரு இந்து. அவர் இப்போது ஒரு சாமியார் போல் ஆகிவிட்டார். உலகில் உள்ள இந்துக்கள் அனைவரின் மீதும் அக்கறை கொள்வதாக கூறும் இந்திய அரசு முருகன் மீது ஏன் அக்கறை கொள்ளவில்லை? இந்துத் தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறும் காசி அனந்தன் அவர்கள் "இந்து" முருகனுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?

நினைவஞ்சலிகள்!

• நினைவஞ்சலிகள்! சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், ஜோசப் பரராயசிங்கம். சந்திரநேரு வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசனும் கொல்லப்பட்டார். சிங்கள ராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியரின் கிளைமோர் தாக்குதலில் 06.03.2008 யன்று சிவநேசன் கொல்லப்பட்டார். அவர் தன்னை தெரிவு செய்த மக்களுடன் இருந்தார். அதனாலேயே அவர் கொல்லப்பட்டார் அவர் கொல்லப்பட்டு 16 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னமும் அவர் கொலைக்கு நீதி வழங்கப்படவில்லை. தமது சக பாராளுமன்ற உறுப்பினரின் கொலைக்கே இதுவரை நீதி பெறாத தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் மக்களின் படுகொலைகளுக்கு நீதி பெற்றுத் தருவார்கள் என எப்படி நம்புவது?

என் கணவரை உயிரோடு விடுதலை செய்யுங்கள்”

“என் கணவரை உயிரோடு விடுதலை செய்யுங்கள்” ஜெயக்குமாரின் மனைவி உருக்கமான வேண்டுகோள். தமிழக அரசு இரக்கம் காட்டுமா? அல்லது சாந்தன் போன்று மாரடைப்பு மரண விடுதலையை அளிக்கப் போகிறதா?

நடிகை திரிஷாவுக்காக குரல் கொடுத்தவர்கள்

•நடிகை திரிஷாவுக்காக குரல் கொடுத்தவர்கள் நடிகை பெத்து ராஜ்க்காக குரல் கொடுப்பார்களா? நடிகைகளுக்கும் அரசியல்வாதிகளுக்குமான உறவு பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. நடிகை பெத்து ராஜ்க்கு மதுரையில் மால் ஒன்றை உதயநிதி வாங்கிக்கொடுத்ததாக முன்னர் ஒரு செய்தி வந்தது. இப்போது நடிகை பெத்துராஜ்க்கு துபாயில் ஒரு வீட்டை அமைச்சர் உதயநிதி வாங்கிக் கொடுத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. நடிகை திரிஷா பற்றி செய்தி வந்தபோது அதற்கு எதிராக குரல் கொடுத்த சேரன் போன்றவர்கள், இப்போது நடிகை பெத்து ராஜ் பற்றிய செய்தி குறித்து ஏன் மௌனமாக இருக்கின்றனர்? உதயநிதி அமைச்சராக இருக்கிறார். காவல்துறை அவர்களின் கையில் இருக்கிறது. ஏன் இச் செய்தியை கூறிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை? சவுக்கு சங்கர் கூறியது உண்மை என்றால் உதயநிதிக்கு இத்தனை கோடி பணம் எங்கிருந்து வந்தது? கலைஞர் 36 படத்திற்கு கதைவசனம் எழுதி 45000கோடி ரூபா சம்பாதித்தார் என்று கூறுவதுபோல் உதயநிதி நாலு படத்தில் நடித்து இத்தனை கோடி சம்பாதித்தார் என்று கூறப்போகிறார்களா?

பெண் விடுதலை குறித்து !

பெண் விடுதலை குறித்து ! பெண் விடுதலை இல்லையேல் மண் விடுதலை மட்டுமல்ல இன விடுதலையும்கூட இல்லை. ஆனாலும் இன விடுதலை குறித்து பேசுபவர்கள் எந்தளவு தூரம் பெண் விடுதலை குறித்து பேசுகிறார்கள்? ஐனத்தொகையில் ஆண்களைவிட பெண்களே எண்ணிக்கையில் அதிகம். அப்படியென்றால் ஐனநாயக முறைப்படி பெண்கள் கையில்தானே அதிகாரம் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லையே? வரலாற்றில் பெண்கள் எப்போதும் இப்படி இருந்தில்லை என்றும் இடையில்தான் இவ்வாறு ஆக்கப்பட்டார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால் பெண் எப்போது அடிமையானாள்? அவள் ஏன் அடிமையாக்கப்பட்டாள்? வரலாற்றின் தொடக்க காலத்தில் தாய் வழிச் சமூக வடிவமே இருந்திருக்கிறது. இச் சமூக வடிவத்தில் ஆணைவிடவும் பெண்ணிற்கே கூடுதல் அதிகாரம் இருந்துள்ளது. பெண்ணே குழந்தையைப் பெற்றுக் கொடுக்கும் பிரதான பணியைச் செய்ததன் காரணமாக குடும்பத்தின் தலைமை பெண்ணிடமே இருந்தது. குழந்தைகள் தாயின் வழியிலேயே அடையாளம் காணப்பட்டனர். சமுதாயத்தின் அக் கால கட்டத்தில் திருமணமோ அல்லது ஒருவனுக்கு ஒருத்தி என்பதோ சமூக கட்டுப்பாடாக இருக்கவில்லை. இதன் பொருள் அவர்கள் பாலியற் கட்டுப்பாடு இன்றி வாழ்ந்தனர் என்பது அல்ல. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து குழந்தைகளைப் பெற்றனர். ஆனால் ஆதிக்கம் பெண்ணிடமே இருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிய நேரும்போது ஆணே(தந்தை) சமூக குழும வீட்டை நீங்கிச் செல்ல வேண்டியிருந்தது. குழந்தைகள் தாயுடனேயே இருந்தன. சமுதாயத்தின் இக் காலகட்டத்தில் உற்பத்திக் கருவிகளான அம்பு, வில், ஈட்டி போன்றன பொதுவானதாக முழு சமூகத்திற்கும் சொந்தமானதாக இருந்தன. அதாவது உற்பத்திக் கருவிகள் தனியார் உடமையாக இருக்கவில்லை. மந்தைகள், காணிகள் போன்ற உற்பத்தி வசதிகளும் இருக்கவில்லை. தனியார் உடமையாக எதுவும் இல்லாததால் ஒரு தந்தை தன் குழந்தைக்கு விட்டுச் செல்ல எதுவும் இருக்கவில்லை. உற்பத்தி சக்திகளின் விருத்தியின் விளைவாக உற்பத்திக் கருவிகளின் உடமை தனியார் கைக்கு மாறியது. அதன்பின் பணத்தின் திரட்சியும் மூலதனமும் உருவாகின. இந்த நிலையில் ஆண் தனது தனியுடமை தனது மனைவிக்கு பிறந்த தனது குழந்தைகளுக்கு போவதை விரும்பினான். இதுவே ஒருதார மணம் நடைமுறைக்கு வந்த அடிப்படை. இந்த ஒருதார மணம் என்பது பெண்ணுக்குரியதாக இருந்ததேயொழிய ஆணுக்கு அல்ல. பெண் வழிச் சமூகம் ஆண் வழிச் சமூகமாக மாறியது. ஆண் ஆதிக்கத்திற்கு வந்தான். இந்த ஆண் ஆதிக்க நிலை முடிவுக்கு வருமா? பெண் விடுதலை பெறுவாரா? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

1910 ஆண்டு கிளாரா ஐட்கின் தலைமையில்

1910 ஆண்டு கிளாரா ஐட்கின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பெண்களின் பிரச்சனைக்கு உரிமை மீட்பதே தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1917ம் ஆண்டு மார்ச் 8 ம் திகதியன்று பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக மிகப்பெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர் இந்த தினமே உலக மகிளிர் தினமாகும் இந்த அமைப்பில் முதலாளிகளுக்கு இலாபத்தை தருகிற வேலை மட்டுமே ஆக்கபூர்வமான வேலையாக கருதப்படுகிறது. இதன்படி பெண்கள் வீடுகளின் நான்கு சுவர்களுக்குள் செய்யும் உழைப்பு பயனற்ற வேலை என்றே கருதப்படுகிறது. இதை கவனிக்க வேண்டியது பெண் செய்யவேண்டிய முதல் காரியம் என்றார் ரோசா லக்சம்பேர்க் பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்போது? பொருளாதார நிலைமைகள் மாறி உற்பத்திக் கருவிகள் மீண்டும் சமூகத்தின் உடமையாகும்போது நிச்சயமாக அது முடிவுக்கு வரும். உற்பத்தியில் சமபங்குடையவராகப் பெண்ணின்நிலை மீட்கப்படும். அப்போது திருமணமும் ஒருதார முறையும் நிலைக்குமா என்பதை இப்போது கூறுவது கடினம். ஆனால் வேறுபட்ட பொருளாதார நிலைமைகள் வேறுபட்ட விதமான சமுதாயத்தை உருவாக்கும். அவ்வாறு மாறிய பொருளாதார சமூகநிலைமைகளின் கீழ் வாழும் மக்கள் தாம் வேண்டும் சமூக அமைப்பு எப்படியானதாயிருக்க வேண்டும் என்பதுபற்றி தமது சொந்த முடிவுகளை எடுப்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாயிருப்பர் என்பதில் ஐயமில்லை.

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு.

மார்ச் -8 சர்வதேச மகிளிர் தினத்தை முன்னிட்டு. முறத்தால் புலியை விரட்டியதாக கூறும் புறநானூற்றுக் கதைகள் எல்லாம் உண்மைதானோ என்று இப்பொது நினைக்க தோன்றுகிறது. ஆதிகாலத்தில் பெண் தலைமையே இருந்ததாக சமூக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காலப் போக்கில் பெண் எப்படி அடிமையானாள் அல்லது ஆணாதிக்கம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி இங்கு நான் உரையாடப் போவதில்லை. ஆனால் வெகுவிரைவில் அனைத்து அடிமைத்தனத்தையும் உடைத்து அவர்கள் தமது வரலாற்றை படைப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்குரிய அனைத்து தகுதிகளும் எமது தமிழ இன பெண்களுக்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.

செய்தி - மற்ற மூவரையும் உயிரோடு

செய்தி - மற்ற மூவரையும் உயிரோடு விடுதலை செய்ய வேண்டும் என கோரியுள்ளார் சிறீதரன் சிறீதரன் பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல தமிழரசுக்கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 33 வருடமாக மௌனமாக இருந்தவர் இப்போது அதுவும் பாராளுமன்றத்தில் பகிரங்கமாக கோரியுள்ளார். இதற்கு காரணம் சாந்தன் மரணமும் அதையடுத்து மக்கள் மத்தியில் உருவாகியுள்ள இந்தியா மீதான கோபம். இனியாவது மற்ற மூவரையும் உயிரோடு விடுதலை செய்து மக்களின் கோபத்தை தணிக்க இந்திய அரசு முன்வரவேண்டும்.

சாந்தன் உடலை ஊருக்கு எடுத்துச் சென்று

சாந்தன் உடலை ஊருக்கு எடுத்துச் சென்று தாயாரிடம் ஒப்படைத்திருக்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி அப்போது சாந்தன் பல நாட்களாக கழுத்தில் கட்டியிருந்த மாலையையும் தாயாரிடம் ஒப்படைத்துள்ளார். சாந்தனின் தாயார் வழக்கறிஞரின் காலில் விழுந்து என் மகனுக்கு நான் செய்யாத கடமை எல்லாம் நீங்கள் செய்துள்ளீர்கள்” என்று அழுதுதிருக்கிறார். “உங்கள் மகன் சாந்தனை உயிருடன் கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றேன். முடியாமற் போய்விட்டது” என்று கூறி அழுதிருக்கிறார் வழக்கறிஞர். மூன்று நாட்கள் தொடர்ந்து அழுது கொண்டிருந்த ஒரு வழக்கறிஞரை நான் இதற்கு முன் பார்த்ததில்லை என்று அருகில் இருந்து அவதானித்த முன்னாள் பெண் போராளி ஒருவர் பதிவு செய்கிறார். வழக்கறிஞரின் இந்தப் பணியை பாராட்டி கௌரவித்துள்ளது யாழ் ஊடக மையம். சாந்தன் மரண நிகழ்வில் பங்கு பற்றிய முருகன் தாயார் எப்படியாவது என் மகனை உயிருடன் மீட்டு தாருங்கள் என வழக்கறிஞரின் கரங்களை பிடித்து கெஞ்சுகிறார். வழக்கறிஞர் புகழேந்தி வெறும் வழக்கறிஞர் மட்டுமல்ல. அவர் ஒரு தமிழ்த் தேசிய உணர்வாளர். அதுவும் தோழர் தமிழரசன் முன்னெடுத்த தமிழ்த்தேசிய விடுதலையை நேசிப்பவர். அதனால்தான் அவர் நான் இந்தியனாக வரவில்லை. தமிழனாக கூறுகின்றேன் “ சாந்தன் மரணத்திற்கு இந்திய மத்திய மாநில அரசுகள் இரண்டுமே பொறுப்பு” என பகிரங்கமாக யாழ்ப்பாணத்தில் கூறினார். அவர் சிறப்புமுகாமில் உள்ளவர்களின் விடுதலைக்கு தொடர்ந்து உதவி வருகிறார். நான் எழுதிய சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம் நூலுக்கு அணிந்துரையும் எழுதியிருக்கிறார். கொடுமை என்னவென்றால் சாந்தன் விடுதலை தாமதத்திற்கு இந்த வழக்கறிஞர்தான் காரணம் என்று ஒருவர் ஆதாரம் இன்றி அவதூறு செய்கிறார். இந்த நபர் யார் என்று பார்த்தால் நாலு சங்கிகளை வைத்து டில்லியில் கூட்டம்போட்டுவிட்டு இந்திய அரசு தமிழீழம் பெற்று தரப்போகிறது என்று கூறித்திரிபவர். இந்திய உளவுப்படையினரை திருப்திப்படுத்துவதற்காக சாந்தன் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள் மீது சேறு பூசும் இந்த நாய்களுடன் கடிபடுவதைவிட அவற்றுக்கு வழி விடுவதே மேல்.

கஞ்சாவை விற்றார் .

கஞ்சாவை விற்றார் . பிடித்து சிறையில் போட்டார்கள். கஞ்சாவுடன் சேர்த்து பக்தியை விற்றார். இப்போது மகான் என்கிறார்கள் கடவுள் சிவனுக்கு தமிழ் தெரியாது என்று கூறிய கன்னட ஆசாமி. சிவராத்திரி வந்தால் கஞ்சாவை போட்டிட்டு இந்தாள் ஆடுற ஆட்டம் தாங்க முடியவில்லை. ஸ்டாலின் சார்! பிளீஸ், இந்தாளை பிடிச்சு உள்ளே போடுங்க.

தமிழ்நாட்டில் ஒருநாள் ஒரு ஊரில்

தமிழ்நாட்டில் ஒருநாள் ஒரு ஊரில் பசு மாடு ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. இதை கவனித்த கோயில் யானை “ஏன் இந்தளவு வேகமாய் ஓடுகிறாய்?” என கேட்டது. அதற்கு அந்த பசு மாடு “ தெருவில் திரியும் நாய்களை பிடிக்க வண்டியுடன் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்” என்றது. இதைக் கேட்ட யானை ஆச்சரியத்துடன் “ நீதான் நாய் இல்லையே. நீ பசு மாடுதானே? நீ ஏன் ஓடுகிறாய்?” என கேட்டது அதற்கு அந்த பசுமாடு “ நான் பசுமாடுதான். ஆனால் அவர்கள் என்னை பிடித்தால் நான் நாய் இல்லை பசு என்பதை நிரூபிக்க 33 வருடம் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் ” என்றது. இப்போது பசுவுடன் சேர்ந்து யானையும் ஓடியது. இது ஒரு நகைச்சுவை கதைதான். ஆனால் இதைவிட நகைச்சுவையானது தமிழ்நாடு பொலிசாரின் நிஜக்கதைகள். இப்போது சாந்தன் இறந்த பின்பு குண்டு சாந்தனுக்கு பதிலாக சின்ன சாந்தனை வழக்கில் இணைத்துவிட்டார்கள் என்ற கதை அடிபடுகிறது. இதைக் கேட்ட சிலர் இப்படியும் நடக்க முடியுமா என ஆச்சரியத்துடன் கேட்கின்றனர். இப்படி பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு தருகிறேன் . தமிழ்நாட்டில் கிருபன் என்பவர் புலிகளின் பொறுப்பாளராக இருந்த காலம். அவர் மோட்டார் சயிக்கிளில் வருவதாகவும் அவரை கைது செய்யும்படி வயலர்ஸ்சில் பொலிஸ் கமிஷனர் அறிவித்தார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து பொலிசார் ஒருவர் வீதியால் அப்போது மோட்டார் சயிக்கிளில் வந்த ஒரு ஈழத் தமிழரை மறித்தார். அவரிடம் பெயர் என்ன என்று கேட்டபோது அவர் தன் பெயர் நிருபன் என கூறியிருக்கிறார். உடனே அந்த பொலிசார் இவர்தான் அந்த கிருபன் என நினைத்து கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இந்த நிருபன் புலி உறுப்பினர் இல்லை. இவர் ஒரு முன்னாள் ரெலோ இயக்க போராளி. அப்போது இவர் இயக்கத்தில் இருந்து விலகி சென்னை திருவொற்றியூரில் பெற்றோல் விற்பனை நிலையம் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். தான் கிருபன் இல்லை, நிருபன் என்று அவர் எவ்வளவோ முறை கூறியும் பொலிசார் அதை கேட்கவில்லை. வேடிக்கை என்னவென்றால் உண்மையான கிருபன் கைது செய்யப்பட்ட பின்பும்கூட இவரை பொலிசார் விடுதலை செய்யவில்லை. அதைவிடக் கொடுமை என்னவென்றால் ரெலோ இயக்க போராளியான இவரை புலி இயக்க போராளி என்றுகூறி பல வருடங்களாக சிறையில் அடைத்துவிட்டார்கள். பல வருட சிறை மற்றும் சிறப்புமுகாம் கொடுமைகளை அனுபவித்த அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார். அவர் தற்போது ஜரோப்பிய நாடொன்றில் வாழ்ந்து வருகிறார். குண்டு சாந்தனுக்கு பதிலாக சின்ன சாந்தனை அடைப்பது, கிருபனுக்கு பதிலா நிருபனை அடைப்பது தமிழக பொலிசாரின் வழமையே.

தமிழால் வாழ்ந்தவர் பலர்

தமிழால் வாழ்ந்தவர் பலர் தமிழுக்காக வாழ்ந்தவர் சிலரே அந்த சிலருள் பாவலேறு பெருஞ்சித்திரனார் ஒருவர் அவர் இருந்தவேளை அவரின் அருமை தெரியவில்லை ஆனால் இப்போது அவர் இல்லையே என்று ஏங்க வைக்கிறது. அதுதான் அவர் சம்பாதித்த சொத்து தமிழும் தமிழரும் இருக்கும்வரை அவர் பெயரும் உச்சரிக்கப்படும் பெண்களை கவிதை எழுத வைத்தது திராவிட இயக்கமே என்று வைரமுத்து போல் கூறி பரிசுகளும் பதவிகளும் பெற்றிருக்க முடியும். ஆனால் அவரோ ராஜிவ்காந்தி வயிறு வெடித்து சாக வேண்டும் என்று அறம்பாடி சிறைத் தண்டனையை அனுபவித்தார். ஏன் அவரை திராவிடமும் ஆரியமும் விரும்புவதில்லை என்பது இப்போது புரிகிறதா?

தமிழர் , தமிழ்நிலத்தில்

தமிழர் , தமிழ்நிலத்தில் அமைந்துள்ள தம் கடவுளை வணங்க முடியவில்லை. தமிழ் பாராளுமன்ற உறுப்பினரைக்கூட தூக்கி எறிகிறார்கள் சிங்கள பொலிஸ். எம்மவர் கையில் எம் நிலம் கட்டுப்பாட்டில் இருந்தபோது இந்த பிரச்சனை இருக்கவில்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது? தமிழர் தம் கடவுளை வணங்குவதற்குகூட தமிழரிடம் அதிகாரம் இருக்க வேண்டும். பூநகரியில் சீன கம்பனி , இறால் கம்பனிக்கு உதவுவதை ஏன் எதிர்க்கவில்லை என தமிழ் தலைவர்களிடம் கேட்ட இந்திய தூதர் இது பற்றி கேட்கமாட்டாரா? தமிழ்க் கிருத்தவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஈழத்து சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம் சிஙகள பௌத்த பேரினவாதிகளுக்கு எதிராக போராட மாட்டாரா?

ஆண்டவரின் வளர்ச்சி!

•ஆண்டவரின் வளர்ச்சி! பாவம். எப்படி இருந்த மனிதர். இப்படி ஆயிட்டாரே? ஊழலை ஒழிக்க மையம் ஆரம்பித்தவர் ஒற்றை எம்.பி சீட்டுக்காக ஊழல் திமுக வில் ஐக்கியமாயிட்டாரே?

ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து

ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து ஜெயா அம்மையார் தமிழக முதல்வராக இருந்தநேரம் அவரது சட்ட அமைச்சராக இருந்தவர் கிருஸ்ணசாமி. இந்த சட்ட அமைச்சர் 1991ல் ஒருநாள் மதுரை சிறைக்கு வந்து கைதிகளை பார்வையிட்டார். அப்போது என்னருகில் வந்தபோது “இவர் ஒரு ஈழப் போராளி. கொடைக்கானல் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்” என சிறை ஜெயிலர் கூறினார். உடனே சட்ட அமைச்சர் மிகுந்த கோபத்துடன் “ இனி ஈழத் தமிழருக்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடைக்காது. உங்கள் நெடுமாறனிடம் கூறுங்கள். ஈழத் தமிழரை ஆதரிக்க வேண்டாம் என்று” என்னைப் பார்த்து ஏசினார். ஆனால் வேடிக்கை என்னவெனில் பின்னர் இவரது இதே ஜெயா அம்மையார் ஈழத் தமிழரை ஆதரித்தது மட்டுமன்றி ராஜீவ் காந்தி வழக்கில் இருந்த ஏழு தமிழரின் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றினார். நெடுமாறன் அவர்கள் ஆரம்பம் முதல் ஈழத் தமிழர்களையும் புலிகளையும் உறுதியாக ஆதரித்து வந்தவர் என்பது அனைவரும் அறிந்த விடயமே. இதனால் அவர் பல வழக்குகளை சந்தித்து பல வருடங்டகள் சிறையும் அனுபவித்தவர். மதுரை சிறையில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை ஒருநாள் நெடுமாறன் அவர்கள் என்னை பார்வையிட வந்திருந்தார். அன்று நான் சிறைக் கண்காணிப்பாளருக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தமையினால் அதைக் காரணம் காட்டி அவருக்கு பார்வையிட அனுமதிக்கவில்லை. அக் காலத்தில் சிறை மற்றும் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளுக்கு மாதா மாதம் நூறு ரூபா பணம் உதவியளித்து வந்தார் நெடுமாறன் அவர்கள். அதன்படி அவர் எனக்கும் பணம் உதவி செய்ய முன்வந்தார். ஆனால் நான் “எனக்கு நிறைய தோழர்கள் உதவி செய்கிறார்கள். எனவே எந்த உதவியும் இன்றி இருப்பவர்களுக்கு இந்த உதவியை வழங்குங்கள் “ என்று கூறினேன். பின்னர் எனது வழக்கில் நான் நிரபராதி என்று திண்டுக்கல் நீதிமன்றம் என்னை விடுதலை செய்தபோது தமிழக அரசு என்னை சிறப்புமுகாமில் அடைத்தது. அப்போது இதை அறிந்த நெடுமாறன் அவர்கள் சிறப்புமுகாமில் இருந்து விடுதலைபெற ஏதாவது சட்ட உதவி வேண்டுமா எனக் கேட்டு கடிதம் எழுதியிருந்தார். இவ்வாறு பல தடவைகள் எனக்கு உதவ முன்வந்தவர் நெடுமாறன் அவர்கள். அதனை நான் இங்கு நன்றியுடன் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். ஆனால் நெடுமாறன் அவர்கள் இப்போது பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் அவர் மீண்டும் வந்து ஈழம் பெற்று தரப்போகிறார் என்றும் கூறிவருவது ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு கூறுவது ஈழத் தமிழருக்கு எந்த நனமையும் தராது என்பது நன்கு தெரிந்தும் ஏன் அவ்வாறு கூறி வருகின்றார் என்பது புரியவில்லை. எனினும் அவர் ஈழத் தமிழருக்கு அளித்து வந்த ஆதரவை மறக்க முடியாது. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

போராட்டம் வெற்றி பெறட்டும்

போராட்டம் வெற்றி பெறட்டும் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை பெற வழி பிறக்கட்டும்! ஒன்று சேர்வோம்! ஒருமித்து குரல் கொடுப்போம்!! எமது மண்ணில் எமது கடவுளை நாம் வணங்குவதற்குரிய உரிமையை பெற தொடர்ந்து போராடுவோம்!!

கஞ்சா அடிச்சா சிரிப்புதானே வரும்

கஞ்சா அடிச்சா சிரிப்புதானே வரும் அதெப்படி சிரிப்பு நடிகருக்கு அழுகை வருகிறது? 😂😂

போதைபொருள் கடத்தல் மேட்டர் வந்ததும்

போதைபொருள் கடத்தல் மேட்டர் வந்ததும் மணல் கடத்தல் நபரை மறந்துவிட்டார்கள் சிறையில் கிடந்து வாடுவதைவிட இவர் அப்பூரூவராக மாறி காட்டிக் கொடுக்கலாமே?

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்

சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் தமது சொந்த செலவில் நாட்டைவிட்டு வெளியேற விரும்பினால் உடனே அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. அதன்படி முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கேட்டு வருகிறார். ஆனால் தமிழக அரசு அவரது விருப்பத்திற்கு மாறாக அவரை இலங்கைக்கு அனுப்ப உயர்நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது. இந்தியாவில் உள்ள ஈழத் தமிழரை பலவந்தமாக அவர்கள் விருப்பத்திற்கு மாறாக இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என உயர்மன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றத்திடம் இருந்து பெற்றுக்கொடுத்தவர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள். தமிழக அரசின் இந்த சட்டவிரோத போக்கை கண்டிக்க வேண்டியவர்கள் இதுதான் சட்டநடைமுறை என தமிழக அரசை நியாயப்படுத்த முயல்கிறார்கள். இதே ராஜிவ் காந்தி வழக்கில் மரண தண்டனை பெற்றவர்களில் ஒருவர் ரங்கன். உச்சநீதிமன்றம் இவரது மரண தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்தது. அப்போது இவர் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறி லண்டன் வந்தார். லண்டனில் அவர் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகையில் 2012ல் மரணமடைந்துள்ளார். இங்கு எனது கேள்வி என்னவெனில் இதே ராஜிவ் காந்தி வழக்கில் இருந்த ரங்கன் லண்டன் வந்து வாழ இடங்கொடுத்த சட்டநடைமுறை இப்போது எப்படி முருகனுக்கு மறுக்கிறது? ஒரே காரணம்தான். அப்போது தமிழக முதல்வராக ஸ்டாலின் இருக்கவில்லை.

புலவரின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு

புலவரின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு புலவரின் நினைவு இல்லத்தில் சாந்தனின் உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்கார்த்தி அவர்கள் சாந்தனின் படத்தை திறந்து வைத்துள்ளார். இந்திய மத்திய மாநில அரசுகளின் நீதியற்ற செயலால் உயிரிழந்த சாந்தன் எனக் குறிப்பிட்டு வரலாற்றுக்கு கடத்தியுள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

கை தட்டு பெறுவதற்கு

கை தட்டு பெறுவதற்கு குரங்கு பல விதங்களில் குட்டிக்கரணம் போட வேண்டும். ஆனால் புலி நடந்தாலே போதும். குறிப்பு – மன்னிக்கவும். பிரதமர் மோடியை குரங்குடன் ஒப்பிடுவதாக கருத வேண்டாம். உதாரணம் ஊனமானவை.😂

முதல் இந்தி எதிர்ப்பு மொழிப் போரில்

முதல் இந்தி எதிர்ப்பு மொழிப் போரில் உயிர்நீத்த இரண்டாம் ஈகி தாளமுத்து நினைவுநாள் 12.03.1939

வாரிசு அரசியலுக்கு

வாரிசு அரசியலுக்கு இலங்கையில் ஏற்பட்ட முடிவு தமிழ்நாட்டிலும் ஏற்படுமா?

பேச்சுவார்த்தைக்காக செல்லும்

பேச்சுவார்த்தைக்காக செல்லும் ஒரு தூதுவரை சுட்டுக்கொல்ல முடியுமா? அதுவும் அமைதிப்படை என்று வந்தவர்கள் செய்ய முடியுமா? சென்னையில் சிறை வைக்கப்பட்டிருந்த போராளி ஜொனியை தூதுவராக அழைத்துச் சென்று வன்னியில் இந்திய ராணுவம் நயவஞ்சகமாக கொன்ற தினம் 13.03.1988

உலகில் எந்த நாட்டில் இருந்தும்

உலகில் எந்த நாட்டில் இருந்தும் ஒரு இந்து வந்து இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். ஆனால் ஈழத் தமிழ் இந்துக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது. இதுதான் இந்திய மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமைச்சட்டம். ஏனெனில் ஈழத் தமிழரை இந்துக்களாக இந்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்து தமிழீழம் கேட்டால் இந்திய அரசு உதவும் என்று கூறிவரும் காசி ஆனந்தன், இந்திய அரசுக்காக ஈழத்தில் சிவசேனை அமைத்த மறவன்புலவு சச்சிதானந்தம், இருவரும் இனி என்ன கூறப்போகிறார்கள்? குறிப்பாக அண்ணாமலையை அழைத்து லண்டனில் உறவுப்பாலம் கட்டியவர்கள் பதில் தருவார்களா?

சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமி.

சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமி. அவரின் உதவியாளர் போதைப்பொருள் கடத்தலில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக வரலட்சுமி NIAயினால் விசாரிக்கப்பட்டுள்ளார். தன் மகளை காப்பாற்றுவதற்காகவே சரத்குமார் பாஜகவில் ஜக்கியமாயுள்ளதாக பஞ்சாயத்து வந்துள்ளது. நாட்டாமைக்கே பஞ்சாயித்தா?

கமல், சரத்குமார் போன்றவர்கள்

கமல், சரத்குமார் போன்றவர்கள் எல்லாம் தனித்து கட்சி நடத்த முடியாமல் திமுக விலும் பாஜகவிலும் சரணடைவதை பார்க்கும்போது, எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் அடிபணியாது தனித்து நிற்கும் நாம்தமிழர் கட்சியினர் பாராட்டுக்குரியவர்களே. அவர்கள் இதுவரை வெற்றிபெறவில்லையே என வருந்த வேண்டியதில்லை. அவர்கள் தனித்து நிற்பதே வெற்றிதான்.

எந்தவொரு நீண்ட இரவுக்கும்

எந்தவொரு நீண்ட இரவுக்கும் விடிவு உண்டு என்கிறார்கள். தமிழ்நாட்டில் ஈழத் தமிழரின் 40 வருட அகதி வாழ்விற்கு ஒரு முடிவு வராதா?

நாலு திருடர்கள் ஒன்று சேர்ந்து தமக்குதாமே

நாலு திருடர்கள் ஒன்று சேர்ந்து தமக்குதாமே "பொலிஸ்" என பெயர் வைத்துக்கொண்டார்களாம். அப்புறம் இனி யாரும் தம்மை கைது செய்ய மாட்டார்கள் என எண்ணிக்கொண்டார்களாம். நம்புங்கள்! திமுகவில் எல்லாமே ஜனநாயக முறைப்படியே நடக்கிறது. வாரிசு முறையில் அல்ல.😂

இருவரும் ஈழத்தமிழர்கள்

இருவரும் ஈழத்தமிழர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும்கூட ஒருவர் வெடுக்குநாறி மலையில் ஈழத் தமிழரின் வணங்கும் உரிமைக்காக போராடுகிறார். இன்னொருவர் ஈழத் தமிழரின் கடவுளை வழிபடும் உரிமையை மறுக்கும் ஜனாதிபதியுடன் சேர்ந்து கிரிக்கட் பார்க்கிறார். இதில் யார் தமிழ்மக்களுக்கானவர்?

மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள் மார்ச் 14,

மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்களின் நினைவு நாள் மார்ச் 14, மாபெரும் ஆசான் தோழர் கால் மாக்ஸ் அவர்கள் சிந்திப்பதை நிறுத்திக் கொண்ட நாள் என்று அவருடைய நண்பர் எங்கெல்ஸ் அவர்கள் உலகிற்கு அறிவித்தார். கால் மாக்ஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட மாக்சியமானது மாபெரும் அக்டோபர் புரட்சியினூடாக லெனிசமாக வளர்ச்சி கண்டது. பின்னர் மாபெரும் சீனப் புரட்சியினூடாக மாவோ சிந்தனையாக விரிபு பெற்றது. இவ்வாறு பல நாடுகளின் புரட்சிகளினூடாக மாக்சியம் வளம் பெற்றது. இன்றைய உலகமயமாதல் சூழலிலே மாக்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியி;ன் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச்செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர் நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக் கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு. இன்றைய சூழலில் மாக்சியம் சோசலிசத்திற்கான தேவைகள் அதிகரிக்கப்பட வேண்டியுள்ளன. மாக்சியம் படிக்கப்பட வேண்டியதாயும் சோசலிசத்திற்கான பல்வேறு வகைப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட வேண்டியனவாகவும் உள்ளன

மனிதனால் ஒரு புழுவைக்கூட உருவாக்க முடியாது.

மனிதனால் ஒரு புழுவைக்கூட உருவாக்க முடியாது. ஆனால் டஜன் கணக்கில் கடவுள்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறான். ஒரு பாடசாலையை உருவாக்கினால் அதில் ஆயிரம் ஆயிரம் கல்விமான்கள் உருவாகுவார்கள். ஆனால் ஒரு கோயில் கட்டினால் அதன் முன் ஆயிரம் பிச்சைக்காரர்கள்தான் உட்காருவார்கள். “உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும் - லெனின்

வெடக்குநாறிமலை சிவன் ஆலயத்தில்

வெடக்குநாறிமலை சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் உண்ணாவிரதம் ஈழத்து சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் சென்னை ஆளுநர் மாளிகையில் விருந்து.

மார்க்ஸைப் படி

மார்க்ஸைப் படி லெனினைப் படி அப்புறம் அறிவாலயத்தில் ஸ்டாலினுக்கு விளக்கு பிடி 4 சீட்டும் 25 கோடி ரூபா பணமும்தான் இலட்சியமென்றால் கட்சியை கலைச்சிட்டு திமுகவிலேயே சேர்ந்துடுங்க.

உச்சநீதிமன்றத்தால் விடுதலையான

உச்சநீதிமன்றத்தால் விடுதலையான ஏழு தமிழரில் ஒருவரான ரவிச்சந்திரன் அவர்களின் காரா புத்தக நிலைய திறப்புவிழா நடைபெற்றுள்ளது. ரவிச்சந்திரன் அவர்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். உச்சநீதிமன்றத்தால் விடுதலையான பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் கடந்த 15 மாதங்களாக சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அவர்களால் தமிழ்நாட்டில் எந்தவித சட்ட ஒழுங்கும் பாதிக்கப்படவில்லை. ஆனால் முருகன், ஜெயக்குமார், பயஸ் ஆகியோரை வெளியில் விட்டால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்று சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு. இத்தனைக்கும் முருகனின் மனைவி நளினி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ஜெயக்குமாரின் மனைவி தமிழ்நாட்டை சேர்ந்தவர். மனைவியுடன் சேர்ந்துவாழ கணவனை அனுமதிக்க வேண்டும் என்பது உலக மரபு. ஆனால் அதையும்கூட ஏற்றுக்கொள்ள தமிழக அரசு தயாராக இல்லை. ஏனெனில் இவர்கள் தமிழர்கள். அதுவும் ஈழத் தமிழர்கள்.

ஒரு டவுட்!

ஒரு டவுட்! ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் வழக்கில் கூட இருந்த அமீரை இத்தனை கேள்வி கேட்ட ஊடகங்கள் உதயநிதியைவும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதியையும் ஏன் கேள்வி கேட்கவில்லை?

நினைவஞ்சலிகள்!

•நினைவஞ்சலிகள்! தனித் தமிழர் சேனைத் தலைவர் நகைமுகன் அவர்களின் நினைவுதினம் இன்று ஆகும்.(14.03.2016) நகைமுகன் அவர்கள் தமிழ்த் தேசிய உணர்வாளர் மட்டுமன்றி உறுதியான ஈழத்தமிழர் ஆதரவாளரும்கூட. விடுதலைப்புலிகளை ஆதரித்தார் என்ற குற்றச்சாட்டில் கலைஞர் ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டவர். சிவசேனைத் தலைவர் பால்தக்ரே அவர்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்க இவரே காரணம் என்றும் கூறப்பட்டது. 1991ல் ராஜிவ் காந்தி மரணத்தின் பின் ஈழத் தமிழரை ஆதரிக்க பலரும் அஞ்சிய சூழலில் இவர் தைரியமாக ஈழத் தமிழரை ஆதரித்தார். “பாயும்புலி பண்டார வன்னியன்” என்னும் இதழ் நடத்தி வந்தார். அதில் தமிழ் நாட்டில் ஈழத் தமிழருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து எழுதினார். குறிப்பாக சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த என் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம்

எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து

எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துவதும் வாழ்த்து பெறுவதும் வரம் என்பார்கள். அது எனக்கு நிறைய கிடைத்து வருவது மகிழ்ச்சியே. சிறுவயதில் அர்ச்சனை செய்து விபூதியை தாயார் என் நெற்றியில் பூசும்போது அன்று என் பிறந்தநாள் என்பதை தெரிந்து கொள்வேன். அதன்பின்னர் பெரியவனான பின்பு பிறந்த நாள் பற்றி ஒருபோதும் அக்கறை கொண்டதில்லை. ஒருமுறை நான் வேலுர் கோட்டையில் சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது (1992ம் ஆண்டு) அங்கு இருந்த காயம்பட்ட புலிப் போராளிகளால் எனது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. கரப்பந்தாட்டப்போட்டி நடத்தி கொண்டாடினார்கள். இறுதியாக இரண்டு கண்ணும் இரண்டு கையும் அற்ற ஒரு போராளி எனக்கு புட்டும் பலாப்பழமும் பிறந்தநாள் பரிசாக தந்தது இன்றும் என் நினைவில் உள்ளது. இந்த வாழ்த்துக்கள் எனக்கு மகிழ்சியையும் நம்பிக்கையையும் அளிக்கின்றன.அவை தொடர்ந்து பயணிக்க துணைபுரிகின்றன.

ஒரு நாட்டில் போராடும் இனத்திற்காக

ஒரு நாட்டில் போராடும் இனத்திற்காக இன்னொரு நாட்டில் வாழும் அதே இனம் தீக்குளித்து மரணிப்பது என்பது ஒரு அதிசய வரலாறுதான். அந்த அதிசய வரலாற்றை ஈழத் தமிழர்களுக்காக நடத்தியவர்கள் தாய் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள். அதுவும் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 16 பேர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழருக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்துள்ளனர். 2009ல் இதே நாளில் (17.03.2009) ஈழத் தமிழருக்கு ஆதரவாக யுத்தம் நிறுத்தம் கோரி இருவர் தீக்குளித்து மரணம் அடைந்தார்கள். ஒருவர் அரியலூரைச் சேர்ந்த ராசசேகர். இன்னொருவர் கடலூரைச் சேர்ந்த நா. ஆனந்து. இவர்களுடைய தியாகம் மறக்க முடியாதது. ஈழத் தமிழர்களால் என்றும் நினைவு கூரப்பட வேண்டியது. ஆனால் இவர்கள் உட்பட மொத்தம் 16 பேர் உயிர் தியாகம் செய்தும் யுத்தம் நிறுத்தப்படவில்லை. இவர்களது போராட்டத்திற்கோ அல்லது உயிர் தியாகத்திற்கோ இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை. 8 கோடி தமிழர் அருகில் இருந்தும் வெறும் இரண்டு கோடி பேர் கொண்ட சிங்கள அரசு அஞ்சவில்லை அதற்கு ஓரே காரணம் அந்த 8 கோடி தமிழரிடம் அதிகாரம் இல்லை. மாறாக 8 கோடி தமிழரும் அடிமையாக இருப்பதால்தான் இந்திய அரசும் பொருட்படுத்தவில்லை. இலங்கை அரசும் அஞ்சவில்லை. சரி. அப்படியென்றால் ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்? ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும். இதை நான் கூறுவதாக கருத வேண்டாம். தமிழ்நாடு விடுதலையை முன்வைத்து போராட்டம் நடத்திய தோழர் தமிழரசன் கூறியிருக்கிறார்.

ஆயுதம் ஏந்திப் போராடுவதை

ஆயுதம் ஏந்திப் போராடுவதை “பயங்கரவாதம்” என்று கூறிய காந்திதேசம் என்னும் இந்தியாவின் அரசு, அன்னை பூபதியின் அகிம்சைப் போராட்டத்திற்கு அளித்த மதிப்பு என்ன?

உனக்கான சுதந்திரத்தையும்,

"உனக்கான சுதந்திரத்தையும், நீதியையும், சமத்துவத்தையும் யாராலும் கொடுக்க முடியாது. உண்மையில் நீ மனிதன் என்றால் அவற்றை நீயே எடுத்துக்கொள்" - மால்கம் எக்ஸ்

இன்று இவரின் பிறந்தநாள்

இன்று இவரின் பிறந்தநாள் இது இவரின் வாழ்வில் மறக்க முடியாத பிறந்தநாளாக இருக்கும் தமிழரின் வழிபாட்டு உரிமைக்காக போராடுவதும் அதற்காக சிறையில் அடைபட்டுக்கிடப்பதும் அச் சிறையிலேயே பிறந்தநாளை கழிக்க நேருடுவதும் பிறந்த நாளில் கணவர் சிறையில் என்பது மனைவிக்கு நிச்சயம் வருத்தம் தரும் கோவிலுக்கு வழிபடச் சென்ற தந்தை ஏன் இன்னும் வரவில்லை என்ற ஏக்கம் பிள்ளைகளுக்கு இருக்கும் இவர்களுடைய நிலம் இவர்களுடைய கோவில் இவர்களுடைய கடவுள் இவற்றை விற்றவர்கள் யார் என்று தெரியவில்லை ஆனால் இவற்றுக்கு இவர்கள் இன்று விலை கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.

எங்களைப்போல் தமது விடுதலைக்காக

எங்களைப்போல் தமது விடுதலைக்காக போராடும் ஒரு இனம். அதுமட்டுமல்ல எமது போராட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கிவரும் இனம். பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து தொடரும் அவர்கள் போராட்டம் வெல்லட்டும். குர்து இன மக்கள் விடுதலை பெற எமது வாழ்த்துகள்! அவர்களின் ஆண்டு பிறப்பு 20.03.24

நேற்றைய தினம் லெவ் ஷெய்னின்

நேற்றைய தினம் லெவ் ஷெய்னின் அவர்களின் “புலனாய்வாளரின் குறிப்புகள்” என்னும் நூல் படித்தேன். இது ரஸ்ய புலனாய்வாளர் ஒருவரின் குறிப்புகள். அவர் குறிப்பிடுகின்றார் “ புலனாய்வாளன் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தின் ஆழத்திலும் புகுந்து பார்க்க வேண்டும். ஆகவேதான் ஒரு புலனாய்வாளனுக்கும் ஓர் எழுத்தாளனுக்கும் இடையே பொதுவானவை அதிகம் இருக்கின்றன.” எம் இனத்திலும் ஒரு பெருமைப்படக்கூடிய புலனாய்வாளர் இருந்தார். அவருடைய குறிப்புகள் ஒரு நூலாக வர வேண்டும். அவர் வன்னிக் காட்டுக்குள் இருந்துகொண்டு எப்படி இந்திய புலனாய்வு அமைப்புகளின் சதித்திட்டங்களை முறியடித்தார் என்பதை மக்கள் அறிய வேண்டும். அவர் எந்த புலனாய்வு கல்லூரியிலும் பயிலவில்லை. அதி சிறந்த தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாத நிலையிலும் அவர் எப்படி அந்த சாதனைகளை புரிந்தார் என்பதை அடுத்த சந்ததியினர் அறிய வேண்டும். இப்போது அவரது பேச்சுக்கள் , எழுத்துக்கள் ஒரு நூலாக வந்துள்ளது. நான் இன்னும் படிக்கவில்லை. விரைவில் படித்துவிட்டு என் கருத்தை பகிர்வேன்.

ரொம்பநாள் வாய் பேச முடியாமல்

ரொம்பநாள் வாய் பேச முடியாமல் இருந்த மகன் ஒருநாள் திடீரென்று பேசினான். தாயைப் பார்த்து “தேவடியா” என்று கூப்பிட்டான். மகன் தன்னை அவ்வாறு அழைத்தது குறித்து தாய் கவலைப்படவில்லை. மாறாக ரொம்பநாள் பேசாமல் இருந்த மகன் பேசிவிட்டான் என்று மகிழ்ச்;சி அடைந்தார். அதுதான் தாய் என்பது. அதுபோல இந்துக்கல்லூரி சிறுவன் புலம்பெயர் தமிழர்களை பார்த்து பேசியுள்ளான். குட்டைக்கு கல் எறிந்து குழப்பியுள்ளான். நல்லது. குழம்பிய குட்டைதான் தெளிவு பெறும். ஆனால் தாயகத்தில் உள்ளவர்கள் நிமிர்ந்து நின்று பேசுவதற்குரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டமே என்பதை அந்த சிறுவன் உணர்ந்து கொள்ளட்டும்.

இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ,

இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்திற்கு உடையதோ, ஒரு தேசத்தினுடையதோ அல்ல. ஏன் மனிதனின் கூட்டுச்சொத்துமல்ல, நாம் பூமிக்கு விருந்தினர் மட்டுமே. பூமியில் நமக்கு கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில், வரும் தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்கவேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. - காரல் மார்க்ஸ்

நினைவஞ்சலிகள்

• நினைவஞ்சலிகள் ஈழத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக யுத்த நிறுத்தம்கோரி தமிழ்நாட்டில் நெற்குன்றம் விக்ரம் தீக்குளித்து மரணித்த நாள் 21.03.2009ஆகும் இந்தியஅரசு அகிம்சைப் போராட்டங்களை மதிக்காது என்பது மட்டுமன்றி தமிழர்களுக்கு உதவாது என்பதற்கும் இவரது மரணம் வரலாற்றில் ஒரு சாட்சி.

இலங்கையில் அதிகரிக்கும்

•இலங்கையில் அதிகரிக்கும் இந்திய அரசு மீதான எதிர்ப்பு யாழ் இந்திய தூதரலாயத்திற்கு முன்பாக வடபகுதி தமிழ் மீனவர்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். கொழும்பில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் “இந்திய மேலாதிக்கத்தை தோற்கடிப்போம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலையில் இந்தியாவுக்காக தமது நிலம் பறிபோவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்மையில் இந்தியா சென்று வந்த ஜேவிபி தலைவர் அனுரா “ மகிந்தா கும்பலை விலைக்கு வாங்கியதுபோல் நம்மை வாங்க முடியாது” என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். தலைவர்களை விலைக்கு வாங்கிய இந்திய அரசால் மக்களை வாங்க முடியவில்லை. மாலைதீவைத் தொடர்ந்து இலங்கையில் அதிகரிக்கும் இந்திய எதிர்ப்பானது மோடி தலைமையிலான இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கைக்கு கிடைத்த தோல்வியாக உள்ளது.

ஒரு நாள் மகள் கொசு ஒன்று

ஒரு நாள் மகள் கொசு ஒன்று தன் தாய் கொசுவிடம் சென்று தான் யானையைக் காதலிப்பதாகவும் யானையுடன் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டதாம். அதற்கு அந்த தாய்கொசு “சரி காலையில பேசலாம். இப்ப பேசாமல் படு” என்றது. உடனே அந்த மகள் கொசு “இல்லை அம்மா. நான் மூன்று மாத கர்ப்பமாக இருக்கிறேன். என் கர்ப்பத்திற்கு அந்த யானைதான் காரணம்” என்றது. இதைக் கேட்ட அந்த தாய்க் கொசு மகள் கொசுவுக்கு எட்டி ஒரு உதைவிட்டது. தாய்க்கொசு “எத்தனை தடவை உனக்கு சொல்றது அந்த சாமி ஆச்சிரமத்திற்கு போகாதேயென்று. அங்கே போய் கஞ்சாவை தின்னுட்டு வந்து இப்படி உளறுவதே உனக்கு வேலையாகி போய்விட்டது” என்று மகள் கொசுவை ஏசியது. குறிப்பு – இது ஒரு (கொசு) கடி ஜோக்தான்😂. மற்றப்படி இதைப்படித்ததும் உங்களுக்கு ஜக்கி சாமி ஆச்சிரமம் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. சரி இப்போது விடயத்திற்கு வருகிறேன். நோய் வந்தால் தமது ஆச்சிரமத்திற்கு வந்து தியானம் செய்யும்படி தமது பக்தர்களுக்கு கூறும் எந்த மத மகானும் தனக்கு நோய் வந்தால் ஏன் உடனே மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள்?

சாந்தன் மரணம் போன்று

சாந்தன் மரணம் போன்று இன்னொரு மரணம் நிகழப்போகிறதா? இதை தடுத்து நிறுத்த என்ன செய்யப்போகிறோம்?

எனது நாட்டில் ஒரு சாண் நிலம்

எனது நாட்டில் ஒரு சாண் நிலம் எஞ்சி இருக்கும்வரை என்னிடம் ஒரு ஒலிவ் மரம் எஞ்சி இருக்கும்வரை ஒரு எலுமிச்சை மரம் ஒரு கிணறு, ஒரு சப்பாத்திக் கள்ளி எஞ்சி இருக்கும்வரை ஒரு சிறு நினைவு ஒரு சிறு நூலகம் ஒரு பாட்டனின் புகைப்படம், ஒரு சுவர் எஞ்சி இருக்கும்வரை அரபுச் சொற்கள் உச்சரிக்கப்படும் வரை நாட்டுப் பாடல்கள் பாடப்படும் வரை கவிஞர்கள் அந்தர் அல் -அப்ஸ் கதைகள் பாரசீகத்துக்கும் ரோமுக்கும் எதிரான யுத்த காவியங்கள் எனது நாட்டில் இருக்கும் வரை எனது கண்கள் இருக்கும் வரை எனது உதடுகள், எனது கைகள் எனது தன்னுணர்வு இருக்கும் வரை விடுதலைக்கான பயங்கரப் போரை எதிரியின் எதிரில் நான் பிரகடனம் செய்வேன்”. - மஹ்மூத் த‌ர்வீஷ் (பலஸ்தீனக் கவிதை)

எச்சரிக்கை !

எச்சரிக்கை ! இதயம் பலவீனமானவர்கள்; இதை படிக்க வேண்டாம் 😂😂

நினைவஞ்சலிகள்

•நினைவஞ்சலிகள் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் பாலசுந்தரம் ஆகியோரின் 15வது நினைவு நாள் 22.03.2024 இவ்வாறு 16 பேர் ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்தில் உயிர் தியாகம் செய்தார்கள். ஆனாலும் இந்திய அரசு இவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கவில்லை.

Thursday, February 29, 2024

இந்த தாய் சிந்தும் கண்ணீருக்கு

இந்த தாய் சிந்தும் கண்ணீருக்கு யார்தான் பதில் சொல்வது? இந்த தாய் அப்படி என்ன பெரிதாக கேட்டுவிட்டார்? சாவதற்கு முன் தன் மகனை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்பதுதானே அவரது 33 வருட ஆசையாக இருந்தது. சிறையில் தூக்குத் தண்டனை கைதியிடம்கூட கடைசி ஆசை என்ன என்று கேட்டு நிறைவேற்றுவார்களே சாந்தனின் கடைசி ஆசை தாயின் கையால் ஒரு குவளை கஞ்சி குடிக்க வேண்டும் என்பதுதானே. அதைக்கூட நிறைவேற்ற முடியாத அளவிற்கு சிறையைவிடக் கொடியதா சிறப்புமுகாம்? ஆட்சியாளரின் அரக்க இதயத்தில் ஒரு துளி இரக்கம்கூட இல்லையா. இதுதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்

உயர்நீதிமன்றத்தின் இக் கேள்வி மூலம்,

உயர்நீதிமன்றத்தின் இக் கேள்வி மூலம், சிறப்புமுகாம் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதும், சாந்தனை உயிருடன் ஊருக்கு அனுப்ப தவறியமைக்கு தமிழக அரசே பொறுப்பு என்பதும் உறுதியாகிறது. தமிழக திராவிட முதல்வர் பதில் சொல்லியாகவே வேண்டும்.

சாந்தனைக் காப்பாற்ற தவறிவிட்டோம்

சாந்தனைக் காப்பாற்ற தவறிவிட்டோம் முருகன், பயஸ் .ஜெயக்குமார் மூவரையுமாவது காப்பாற்ற முனைவோம். அவர்களது விடுதலைக்காக குரல் கொடுப்போம். குறிப்பு – பயஸ் உலகத் தமிழருக்கு எழுதிய கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

32 வருடம் சிறைவாழ்வின் பின்னரும்

32 வருடம் சிறைவாழ்வின் பின்னரும் கம்பீரமாக வந்தவரை 15 மாத சிறப்புமுகாம் வாழ்க்கை எப்படி சிதைத்துவிட்டது என்பதை பாருங்கள் சிறப்புமுகாமில் நோய்வாய்ப்பட்டதும் பலமுறை தனக்கு மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு சாந்தன் கோரியிருக்கிறார். ஆனால் சிறப்புமுகாமுக்கு பொறுப்பான தமிழக அரசு அவரை மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவில்லை. இறுதியாக அவர் எழுந்து நிற்க முடியாமல் விழுந்து தவழ்ந்த வீடீயோ சமூக ஊடகங்களில் வெளிவந்து மக்களிடமிருந்து எதிர்ப்பு வந்தபின்பே அவர் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். திருச்சி மருத்துவமனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் மேலதிக சிகிச்சைக்காக என்றுகூறி சென்னை அழைத்துச் சென்றனர். திருச்சியில் இருந்து அரை மணி நேர விமான பயணத்தில் அவரை அழைத்து வந்து தாயாரிடம் ஒப்படைத்திருக்க முடியும். ஆனால் சிகிச்சைக்காக என்று 8 மணி நேரம் பயணம் செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர். சென்னையில்கூட அவர் தன் தம்பியுடன் உற்சாகமாக உரையாடும் வீடியோ வந்தது. அவர் தாயிடம் செல்கிறார். அவர் தாயின் 33 வருடம் நிறைவேறப்போகிறது என்று எல்லோரும் மகிழ்வுடன் இருக்க திடீரென்று அவர் இறந்தவிட்டதாக செய்தி வருகிறது. மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தவருக்கு நள்ளிரவு ஒரு மணிக்கு மாரடைப்பு வந்ததாகவும் 4 மணிக்கு இறந்துவிட்டார் என்றும் தமிழக அரசு கூறுகின்றனது. தமிழக அரசின் இந்த மாரடைப்பு மரண செய்தியை நம்ப மனம் மறுக்கிறது. 22ம் திகதி மத்திய அரசின் அனுமதி கிடைத்தும் ஏன் சாந்தனை அனுப்பவில்லை என உயர்நீதிமன்றம் கேட்டபோது அவர் உடந்நிலையைக் காரணம் காட்டியுள்ளது தமிழக அரசு தற்போது சாந்தனின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இங்கு கொடுமை என்னவென்றால் சாந்தன் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு பலமுறை கோரியும் சிகிச்சைஅளிக்காத தமிழக அரசு, சிகிச்சை அளிக்க சாந்தன் சம்மதிக்க மறுத்தபடியால்தான் அவரை காப்பாற்ற முடியாமற்போனது என்று தற்போது கூறுகின்றது. இதேவேளை சாந்தனுடன் உடன் இருந்த வழக்கறிஞர் சாந்தன் மரணத்தில் சந்தேகம் தெரிவித்துள்ளார். இது ஒரு கொலை என அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். சாந்தன் 32 வருடமாக சிறையில் வாடியதற்கு இந்திய மத்திய அரசே பொறுப்பு. ஆனால் கடைசி 15 மாதங்களும் அவர் சிறப்புமுகாமில் வாடியதற்கு தமிழக அரசே பொறுப்பு. எனவே சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருந்த சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே பதில் சொல்ல வேண்டும்.

ஒரு தாயின் 33 வருட விருப்பம்

ஒரு தாயின் 33 வருட விருப்பம் நிஜத்தில் நிறைவேற்ற நாம் தவறிவிட்டோம் நிழற்படம் வரைந்து ஆறுதல் அடைய முயல்வோம் அழுது தீர்த்து ஓய்ந்துவிட முடியாத பெருங்கோபத்தை அணையா நெருப்பாக நெஞ்சில் சேமித்து வைத்திருப்போம்

Wednesday, February 28, 2024

இலாபம் எங்கிருந்து வருகிறது?

இலாபம் எங்கிருந்து வருகிறது? இலாபம் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் வரவு – செலவு = இலாபம் ( Income – Expenses = Profit ) என்று ஒரு அக்கவுண்டன் கூறுவார். இதையே லாபம் எங்கிருந்து வருகிறது என்று ஒரு பொருளாதார அறிஞரிடம் கேட்டால் அவர் “ முதலாளி முதலீடு செய்யும் மூலதனம் அவருக்கு இலாபத்தை பெற்றுக் கொடுக்கிறது” என்பார். இதையே ஒரு ஆன்மீகவாதியிடம் கேட்டால் “இது எல்லாம் போன பிறப்பில் செய்த பாவ புண்ணிய விதிப்படி இந்தப் பிறப்பில் கடவுள் தருவது” என்பார். ஆனால் மார்க்சியவாதிகள் மட்டுமே தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டியே லாபம் பெறப்படுகிறது என்ற உண்மையை கூறுவார்கள். இந்த உண்மையை விஞ்ஞான முறைப்படி நிரூபித்து இந்த சுரண்டலை ஒழிக்க புரட்சி மட்டுமே தீர்வு என்பதையும் கூறியவர் காரல் மார்க்ஸ். எனவேதான் இந்த உண்மையை தொழிலாள வர்க்கம் உணர்ந்துவிடக்கூடாது என்பதில் முதலாளித்துவ அரசுகள் கவனமாக இருக்கின்றன. ஏனெனில் உலக ஜனத்தொகையில் 97% மானவர்கள் உழைக்கும் மக்களாவர். அவர்களை வெறும் 3%மான முதலாளிகள் அடக்கி ஆள்வதுடன் ஏமாற்றி சுரண்டிக் கொழுக்கின்றனர். இங்கு வேடிக்கை என்னவெனில் மத அடக்குமுறையை எதிர்த்தே வளர்ந்தது முதலாளித்துவ வர்க்கம். ஆனால் அதே முதலாளித்துவ வர்க்கம் தற்போது மதத்தை பேணிக் காத்து வருகின்றது. ஏனெனில் உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்தி வைக்கும் ஆபத்தான ஆயுதங்களாக மதமும் கடவுளும் இருக்கின்றன.

கையால் சாப்பிடும்போது

கையால் சாப்பிடும்போது உணவின் சுவை அதிகமாக உணர முடியும் என்கின்றனர். அப்படியென்றால் உலகின் சில பகுதிகளில் முள்ளுக்கரண்டியால் சாப்பிடும் முறை ஏன் ஏற்பட்டது? எந்த முறையில் சாப்பிடுவது சிறந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்!

தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்! தமிழக மக்கள் தமக்கே உரிய பாணியில் அளித்து வரும் இந்த பதிலை இனியாவது இந்திய அரசு புரிந்து கொள்ளுமா?

பாலியல் வழக்கிற்காக

பாலியல் வழக்கிற்காக இந்திய அரசு நித்தியானந்தா சுவாமிகளை தேடி வருவதாக கூறுகின்றது. ஆனால் அவரோ நடிகை கஸ்தூரிக்கு “கைலாசா ஐக்கியநாடுகள்- தொன்மை வாய்ந்த இந்து ஞான நாகரீக தேசம்” என்னும் நூலை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். உண்மையில் அவர் எங்கு இருக்கிறார் என்று இந்திய அரசுக்கு இன்னமும் தெரியவில்லையா? அல்லது, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய இந்திய அரசு விரும்பவில்லையா? என்னமோ நடிகை ரஞ்சிதா வீடியோ வந்த மாதிரி நடிகை கஸ்தூரி வீடியோ வராமல் இருந்தால் சரி.😂

என் முயற்சிகள் என்னைப் பலமுறை

"என் முயற்சிகள் என்னைப் பலமுறை கைவிட்டதுண்டு. ஆனால் நான் ஒருபோதும் என் முயற்சியைக் கைவிட்டதில்லை" – தாமஸ் அல்வா எடிசன் சம்மட்டியின் கடைசி அடியில் கல் உடைகிறது என்பதால் முதல் அடிகள் வீணாணவை அல்ல. வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே.

தமிழ் நாட்டில் விவசாயிகள்

தமிழ் நாட்டில் விவசாயிகள் போராடியபோது குண்டர் சட்டத்தில் அடைத்தவர்கள் , டில்லியில் விவசாயிகள் அடக்கப்படுவதை "ஜனநாயக படுகொலை" என்கின்றனர். இதைக் கேட்டால் “நீ ஒரு சங்கி” என்கின்றனர். என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இந்தி இல்லை.

நினைவஞ்சலிகள்!

நினைவஞ்சலிகள்! 18.02.2009ல் போரை நிறுத்தக் கோரியும் ஈழத் தமிழரை காப்பாற்றக்கோரியும் கடலூர் சோதி என்கிற தமிழ் வேந்தன் தீக்குளித்து உயிர் துறந்தார். அப்போது தமிழ்வேந்தனுக்கு ஆறு மாத கைக்குழந்தை இருந்தது. ஆனால் அவர் தன் குழந்தையைக்கூட நினைக்காமல் ஈழத் தமிழருக்காய் உயிர் துறந்தார்.

Bhakshak ( இந்தி சினிமா)

•Bhakshak ( இந்தி சினிமா) உண்மை கதையை படமாக்கியுள்ளார்கள். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும்வரை விறு விறுப்பாக செல்கிறது. பீகாரில் அரசியல் பின்புலம் உள்ள ஒருவர் காப்பகத்தில் உள்ள பல பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொல்கிறார். இதனை ஒரு பெண் ஊடகவியலாளர் துணிச்சலாக செயற்பட்டு அந்த நபரை கைது செய்ய வைத்து காப்பகத்தில் உள்ள பெண்களை காப்பாற்றுகிறார். இதுவே கதை. இந்த படத்தை தயாரித்து வெளியிட்டிருப்பவர் இந்திப்பட சுப்பர் ஸ்டார் சாருக்கான். தமிழ்த் திரையுலக சுப்பர் ஸ்டார்கள் இதேபோன்று தமிழ் நாட்டில் நடந்த உண்மைக் கதைகளை படமாக்கி வெளியிடலாமே?

இருவரும் போலிச்சாமியார்கள்

இருவரும் போலிச்சாமியார்கள். இருவரும் கிரிமினல்கள். ஆனால் ஜக்கி தமிழ்நாட்டில் பாதுகாப்போடு வாழ்கிறார். நித்தியானந்தா தமிழ்நாட்டை விட்டு தப்பி ஓடி தலைமறைவாக வாழ்கிறார். இதற்கு ஜக்கி ஒரு கன்னடர், நித்தி ஒரு தமிழர் என்பதைவிட வேறு காரணம் உண்டா?

எங்கும் இந்திக்காரன்

“எங்கும் இந்திக்காரன் எதிலும் இந்திக்காரன்” என்று கேரளாவில் டிவியில் பாடுகிறார்கள். அவர்களை இனவெறியர் என்று எந்த கம்யுனிஸ்டுகளும் கூறுவதில்லை ஆனால் தமிழ்நாட்டில் இதையே “நாம் தமிழர்” கூறினால் உடனே ஓடி வந்து இனவெறியர் என கம்யுனிஸ்டுகள் முத்திரை குத்துகின்றனர் #போலிக்கம்யுனிஸ்டுகள்

ஈழத் தமிழனுக்கு யாராவது

ஈழத் தமிழனுக்கு யாராவது அடித்தால் தனக்கு வலிக்கிறது என்கிறார். அதனால் திருப்பி அடிப்பேன் என்கிறார். அவர் திருப்பி அடிக்கிறாரோ இல்லையோ ஆனால் நிச்சயம் தமிழனை அழித்தவன் கைகளை குலுக்கி பரிசில்கள் பெற மாட்டார் தான் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர் விடுதலை பெற உதவுவேன் என்கிறார். உதவுகிறாரோ இல்லையோ ஆனால் நிச்சயம் அகதிகளை சிறப்புமுகாமில் அடைத்து சித்திரவதை செய்யமாட்டார். முக்கியமாக அகதிச்சிறுவனை தத்தெடுத்து பின் அவனைக் கொல்ல மாட்டார்

ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு

“ஒரு அடிமை தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதே இன்னொரு அடிமைக்கு செய்யும் உதவியாகும்” எனக்கூறி தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து அதன் மூலம் ஈழப் போராட்டத்திற்கு உதவியவர் தோழர் தமிழரசன்.

மனிதனே கடவுளை படைக்கிறான்

மனிதனே கடவுளை படைக்கிறான் அப்புறம் அக் கடவுளே மனிதனை படைத்ததாக கூறுகின்றான் “கடவுள் எல்லாம் வல்லவர். கடவுள் எங்கும் இருக்கிறார்” என்கிறான் அந்த மனிதன் எல்லாம் கடவுள் விதிப்படியே நடக்கிறது. அந்த விதியை யாராலும் மாற்ற முடியாது என்கிறான் அப்புறம் அவனே வீதியைக் கடக்கும் போதுகூட கடவுள் விதியை நம்பாமல் வீதி சிக்னல் லைட் விதியை நம்பியே கடக்கிறான். இப்ப, “கடவுள் களைத்து விட்டார். எனவே தினமும் மதியம் ஒரு மணி நேரம் ஓய்வெடுக்கிறார்” என்கிறான். இன்னும் என்னென்ன சொல்லப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் மதம் ஒரு அபின் போதை. பக்தி ஒரு மன நோய் என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

பொலிஸ் கமிஷனர் அவர்களே!

பொலிஸ் கமிஷனர் அவர்களே! 1984ல் கலைஞர் தத்தெடுத்து வளர்த்த ஈழ அகதிச்சிறுவன் மணி எங்கே என்று கண்டுபிடித்து கூற முடியுமா? அந்த அகதிச் சிறுவனை கொன்று விட்டார்கள் என முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறுகின்றார். இது உண்மையா?

புலத்தில் உள்ள ஈழத் தமிழர்கள்

புலத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இனப்படுகொலைக்கு நீதி கோரி சர்வதேச நீதிமன்றத்தின் முன் சென்று குரல் கொடுக்கின்றனர். ஆனால் தாயகத்தில் உள்ள தமிழரசுக்கட்சி தலைவர்கள் பதவிச் சண்டைக்காக நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். என்னே கொடுமை இது? இந்த நிலை மாறாதா? தலைவர்கள் தம் தவறை உணர மாட்டார்களா?

போராடுவதால் பயன் உண்டா?

போராடுவதால் பயன் உண்டா? நடந்தது நடந்து விட்டது. இனி நடந்ததை நினைத்து போராடுவதில் பயன் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். நாலுவகை படைகள் கட்டி போராடிய புலிகளாலேயே வெற்றி பெற முடியவில்லை. இனி எப்படி போராடி வெற்றிபெற முடியும் என்று வேறு சிலர் கேட்கிறார்கள். இதெல்லாம் கடவுள் வகுத்த விதி. எனவே கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு பேசாமல் இருப்பதே சிறந்தது என்று மேலும் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் எல்லாம் கூறுவது சாரம்சத்தில் போராடுவதால் பயன் இல்லை எனவே போராடாமல் இருக்க வேண்டும் என்பதையே. ஆனால் ஓடாத மான் எப்படி வாழ முடியாமல் இறந்துவிடுமோ அதேபோல் போராடாத இனம் இந்த உலகில் வாழ முடியாது அழிந்துவிடும் என்பதே உண்மை. எனவே தமிழ் இனம் இப்போது வரை அழியாமல் வாழ்கிறது எனில் அது கடந்த காலங்களில் போராடி வந்திருக்கிறது என்பது மட்டுமன்றி இனியும் அழிந்துவிடாமல் வாழ வேண்டும் எனில் அது தொடர்ந்து போராட வேண்டும் என்பதே உண்மை. ஒரு குழந்தை இந்த உலகில் பிறந்ததும் செய்யும் முதல் போராட்டம் அழுகை. இவ்வாறு போராட்டம் என்பது பிறப்பு முதல் இறப்புவரை ஒரு மனிதன் வாழ்வில் அத்தியாவசியமாகிவிட்ட பின்பு போராட்டத்தால் பயன் உண்டா என்ற கேள்வி அர்த்தமற்றதாகவே இருக்கும். தமிழர் உயிரை விடுவார்களேயொழிய போராட்டத்தை ஒருபோதும் விட்டுவிட மாட்டார்கள். போராட்ட உணர்வு என்பது தமிழரின் உயிருடனும் உடலுடனும் இரண்டறக் கலந்து இருப்பதால்தான் எத்தனை முறை வீழ்ந்த போதும் அத்தனை முறையும் மீண்டும் எழுந்திருக்க முடிகிறது.

நினைவு அஞ்சலிகள்!

• நினைவு அஞ்சலிகள்! தமிழ் இன அழிப்பை நிறுத்தக் கோரி கடலூர் இந்தியாவில் தீக்குளித்து உயிர்நீத்த தமிழ் வேந்தனின் நினைவேந்தல் நிகழ்வு நாள் இன்று ஈழத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமைக்காரியாலயத்தில் இடம் பெற்றது இதன் மூலம் 2009ல் 17 தாய்த் தமிழ் உறவுகள் ஈழத் தமிழருக்காய் உயிர்த் தியாகம் செய்த செய்தி அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருக்கு பாராட்டுகள்.

ஒரு டவுட்!

ஒரு டவுட்! அக்பர் சிங்கத்தையும் சீதா சிங்கத்தையும் ஒன்றாக அடைத்ததற்கே வழக்கு போடுபவர்கள், சீதா சிங்கம் உணவாக மாட்டிறைச்சிதான் சாப்பிடுகிறது என்பதை அறிந்தால் என்னாகும்? இறைச்சி போடுபவரை அடித்துக் கொன்றுவிடப் போகிறார்களே? 😂😂

பிரபாகரன் பயங்கரவாதி.

பிரபாகரன் பயங்கரவாதி. எனவே பிரபாகரனைப் பெற்ற தாயும் பயங்கரவாதி என்றுகூறி சிறையில் அடைத்தார் மகிந்த ராஜபக்சா ஆனாலும் கொஞ்சம் இரக்கம்காட்டி இவர் இந்தியா சென்று சிகிச்சை பெற அனுமதித்தார். ராஜபக்சாவுக்கு இருந்த இரக்கம்கூட உலகத்தமிழினத் தலைவர் என்று கூறப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு இருக்கவில்லை. அதனால் கொஞ்சம்கூட மனிதாபிமானம் அற்று இவரை உள்ளே விட மறுத்தார். விமானநிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பினார். ஒரு தமிழ் பெண்ணை அதுவும் வயதான நோய்வாய்ப்பட்டவரை இப்படி திருப்பி அனுப்புவது நியாயமா என பலரும் கேட்டார்கள். அதற்கு , வைகோ மூலம் வந்ததால்தான் கலைஞர் அனுமதிக்கவில்லை என சிலர் கூறினார்கள். கலைஞர் என்ன செய்ய முடியும். மத்திய அரசுதான் திருப்பி அனுப்பியது என்று வேறு சிலர் கூறினார்கள். அந்த வைகோ, மத்திய அரசாக இருந்த காங்கிரஸ், யாவும் இப்போது திமுக வுடன் கூட்டணியாக இருக்கின்றன. அவர்கள் பார்வதியம்மாளை மறந்திருக்கலாம். ஆனால் தமிழ் மக்களால் அந்த கொடுமையை மறக்க முடியவில்லையே. பாவம். இந்த தாயார். இவர் தமிழ் இனத்தில் பிறந்ததைத்தவிர வேறு என்ன தவறு செய்தார்?

மதவெறியர்களால் கொல்லப்பட்ட

•மதவெறியர்களால் கொல்லப்பட்ட தத்துவவியலாளர் புரூணோ புரூணோவின் அண்டவியல் பார்வைகள் தமது மதக் கருத்துகளுக்கு எதிராக இருக்கிறது எனக்கூறி கிருத்தவ மதவாதிகளால் புரூணோ எரித்துக் கொல்லப்பட்டநாள் 17.02.1600 ஆகும். அவரை எரித்துக் கொன்றவர்களின் பெயர் வரலாற்றின் குப்பைத் தொட்டியில்கூட இல்லை. ஆனால் தத்துவவியலாளர் புரூணோ சுதந்திரமான சிந்தனை மற்றும் வளர்ந்து வரும் அறிவியலின் வரலாற்றில் ஒரு அடையாளமாக கருதப்படுகிறார்.

நல்லது நடந்தால் கடவுள் செயல்.

நல்லது நடந்தால் கடவுள் செயல். கெட்டது நடந்தால் விதி எனில் மனிதனுக்கு மூளை எதற்கு? மனித மூளையில் உள்ள மயலின் நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176000 கிலோ மீற்றர் என்கிறார்கள். மனித மூளையில் உள்ள 60 பில்லியன் நரம்பணுக்களில் சுமார் 10 பில்லியன் புறணிக் கோபுர உயிரணுக்கள். இவை தமக்குள் சமிக்கைகளை அனுப்பிக்கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் நரம்பிணைப்புகளை பயன்படுத்துகின்றன. நல்லது நடந்தால் கடவுள் செயல் , கெட்டது நடந்தால் அது விதி எனில் இத்தகைய சிறப்பான மூளை மனிதனுக்கு எதற்கு? பூசை செய்யவா? சிவன் என் முப்பாட்டன் என்று முகநூலில் படம் போடுற பயலுகள் எல்லாம் ரோட்டைக் கடக்கும்போது சிவனை நம்புவதில்லை. மாறாக எதிரில் இருக்கும் சிக்னல் லைட்டையே நம்பி கடக்கின்றனர். உலகம் உருண்டை என்று கூறிய விஞ்ஞானியை கொன்ற பாப்பரசர்கள் எல்லாம் இப்போது அப்பிள் போனில் கூகிளில்தான் இயேசுவை தேடுகின்ற நிலைமை. ஆம். கடவுள் இருக்கிறார் என்று கூறும் கருத்துமுதல்வாதிகள் எல்லாம் நடைமுறையில் கடவுள் இல்லை என்னும் பொருள்முதல்வாதிகளாகவே வாழுகின்றனர். எல்லோரும் பாப்பரசரை வணங்குவார்கள். ஆனால் அந்த பாப்பரசரே தலை வணங்கிய விஞ்ஞானி ஸ்டீபன் கேவாக்கிங் உலப் புகழ்பெற்ற அந்த அறிஞர் ஸ்டீபன் கேவாக்கிங் கேட்கிறார் “கடவுள் தன்னால் தூக்க முடியாத ஒரு கல்லைப் படைக்க முடியுமா?” பக்தர்களே உங்கள் பதில் என்ன?

திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறப்புஅகதிகள்முகாமை மூடுமாறு குரல் கொடுத்த உணர்வாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலைபெற வழி பிறக்கட்டும்.

சர்வதேச தாய் மொழி தினம்! (21.02.2024

•சர்வதேச தாய் மொழி தினம்! (21.02.2024) எல்லோருக்கும் அவர்களது தாய்மொழி பெருமை மிக்கதுதான். ஆனால் மொழிகளின் தாய் மொழி என்ற பெருமை எமது தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழியாலேதான் நாம் தமிழ் இனம் ஆனோம். ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின் முதலில் அதன் மொழியை அழிக்க வேண்டும் என்பார்கள். அதனால்தான் தமிழர்கள் தம் உயிரைக் கொடுத்தேனும் தமிழ் மொழியை காத்து வருகிறார்கள். மொழி என்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் வெறும் ஊடகம்தானே, அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சிலர் கேட்கலாம். உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து விட்டன. தமிழும் இனி மெல்ல சாகும் என சிலர் கூறலாம். ஆனால் வரலாற்றில் எத்தனை படையெடுப்புகள். அத்தனையும் தாண்டி தமிழ் மொழி எப்படி நிமிர்ந்து நிற்கிறது? போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்கள் 350 வருடங்களுக்கு மேலாக ஆண்டபோதும் அவர்களின் சில சொற்களை தமிழ் உள்வாங்கியதேயொழிய தமிழ் அழிந்து விடவில்லை. இனியும்கூட எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் தமிழ் அழிந்துவிடப் போவதில்லை. அது நிமிர்ந்து நிற்கும். ஏனெனில் தமிழர்கள் தம் தாய்க்காக மட்டுமன்றி தாய்மொழி ,தாய்நிலத்திற்காகவும் உயிர் துறக்கக்கூடியவர்கள். இப்படிப்பட்ட அர்ப்பணிப்புகள் இருக்கும்வரை தமிழ் மொழியையும் தமிழர்களையும் யாராலும் அழித்துவிட முடியாது.

முதலில் அவர்களுக்கு காடு வசப்பட்டது

முதலில் அவர்களுக்கு காடு வசப்பட்டது அடுத்து அவர்களுக்கு கடல் வசப்பட்டது இறுதியாக அவர்களுக்கு வானமும் வசப்பட்டது. ஆம். மனது வைத்தால் வானமும் வசப்படும் என்பதை எம் கண் முன்னே நிரூபித்துக்காட்டியவர்கள் அவர்கள்.

கூவத்தூருக்கு தான் போகவில்லை

கூவத்தூருக்கு தான் போகவில்லை என்று மறுக்க நடிகை திரிஷாவுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதை வைத்து கூவத்தூருக்கு எந்த நடிகையுமே போகவில்லை என்று யாரும் வாதிடக்கூடாது. ஏனெனில் அப்போது கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ களின் மனம் குளிர வைக்க பணம், மது, மாது எல்லாம் சப்பளை செய்யப்பட்டது. இது ஒன்றும் ரகசியம் அல்ல. அப்போது அனைத்து ஊடகங்களிலும் வந்த செய்திதான். முன்பு நடிகை பானுமதிக்கும் அறிஞர் அண்ணாவுக்கும் இருந்த தொடர்பு பற்றி கேட்டபோது “ அவள் படிதாண்டா பத்தினியும் இல்லை. நான் முற்றும் துறந்த முனிவனும் இல்லை” என்று அண்ணா கூறினார். அறிஞர் அண்ணா காலம் முதல் இன்றுவரை பல அரசியல்வாதிகள் நடிகைகளுடன் உறவு செய்தி வந்துகொண்டே இருக்கின்றன. அமைச்சர் உதயநிதி நடிகை நயன்தாராவுக்காக பால்டாயில் குடித்தார் என்று குமுதம் இதழில் செய்தி வந்தது. இப்போதுகூட அமைச்சர் உதயநிதி நடிகை நிவேதா பெத்து ராஜ்க்கு மதுரையில் ஒரு மால் கட்டிக் கொடுத்திருப்பதாகவும் அவருக்காக சென்னையில் ரேஸ் பந்தயம் நடத்த இருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதெல்லாம் நடிகைகளுக்காக குரல் கொடு:க்கும் இயக்குனர் சேரனுக்கும் நன்கு தெரியும். தெரிந்திருந்தும் அவர் ஏன் குரல் கொடுக்கின்றார் என்று புரியவில்லை.

ஒரு குரங்கின் புலம்பல்

• ஒரு குரங்கின் புலம்பல் அடேய்! எவன்டா குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்று கூறியது? நாங்க கட்சியை உடைப்பதில்லை. கட்சியை உடைக்க பணம், மது, மாது சப்பளை செய்வதில்லை ஏழு வருடமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராடுகிறார்கள். தமிழரசுக்கட்சியை உடைக்க நீதிமன்றம் சென்றவன் எவனாவது இவர்களுக்காக நீதிமன்றம் சென்றிருக்கிறானா? இனி இன்னொரு மனிதனை குரங்குப்புத்தியை காட்டுகிறாய் என்று திட்டாதீங்கடா. உங்க மனிதப்புத்தி எங்க புத்தியைவிடக் கேவலமடா

இரயில்விபத்தில் கால்கள்

இரயில்விபத்தில் கால்கள் பாதிக்கப்பட்ட போதும் பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்த விமலேஸ் அக்கா ஒருநாள் அவரது கைப்பையில் இருந்த பணத்தை பறிப்பதற்காக இந்திய அமைதிப்படையால் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார் அவர் திரும்பி வரவில்லை. அவரது செயற்கைகால் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. விமலாஅக்காவுக்கான நீதி எப்போது வழங்கப்படும்?

சோனியா காந்தி லண்டன் வந்தபோது

சோனியா காந்தி லண்டன் வந்தபோது புலம்பெயர் ஈழத் தமிழ் தலைவர் ஒருவர் அவரை சந்தித்தார். சந்தித்துவிட்டு “அன்னை சோனியாவின் கண்களில் இரக்கத்தைக் கண்டேன்” என அறிக்கைவிட்டார். எனக்கு சோனியாவின் கண்களில் முள்ளிவாய்க்கால் படுகொலை தெரிகிறது. உங்களுக்கு? குறிப்பு - இந்த நபர்தான் அண்மையில் இலங்கை சென்று இமாலய பிரகடனம் செய்தவர்.

அடிப்பது வன்முறை.

அடிப்பது வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. அது தற்காப்பு. திருப்பியடிக்க வலு அற்றவை யாவும் வாழத் தகுதியற்று அழிந்துவிடும். மக்கள் இதுவரை பெற்ற உரிமைகள் யாவும் அடித்துப் பெற்றவையே. தானாக கிடைத்தவை அல்ல.

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் சமாதானத்திற்கான யுத்தம் என்று கூறி சொந்த மக்கள் மீதே குண்டு போட்டவர் செம்மணி கொலைகாரி லண்டனில் அப்பாவியாக திரிகிறார். காலம் எவ்வளவு அற்புதமானது!

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்

•“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள். தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் பிறந்ததினம் 04.03.2024 ஆகும். புலவர் அவர்கள் “தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர். தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர். தமிழின விடுதலைக்காக உழைத்த புலவர் கலியபெருமாள் அவர்களை தமிழ் மக்கள் என்றும் நினைவில் கொள்வர். இது உறுதி. புலவர் கலியபெருமாள் பற்றி நான் எழுதிய சில குறிப்பகளை கீழ் வரும் இணைப்பில் படிக்கலாம். https://tholarbalan.blogspot.com/2018/05/blog-post_40.html

ஒரு அறிவிப்பு

• ஒரு அறிவிப்பு ஏன் பதிவை நீக்கிவிட்டீர்கள் என பலரும் கேட்கின்றனர். நான் பதிவை நீக்கவில்லை. நான் நீக்கியிருந்தால் காரணத்தை ஒரு பதிவாக போட்டிருப்பேன். முகநூல் நிர்வாகத்தால் அப் பதிவு நீக்கப்பட்டுள்ளது. பதிவு நீக்கப்பட்டதுடன் சில தடைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது.

என்றும் நினைவில் கொள்வோம்!

•என்றும் நினைவில் கொள்வோம்! ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி, சிவகாசி ஆணையூர் பஞ்சாயத்து அய்யம்பட்டியைச் சேர்ந்த கோகுலகிருட்ணன் என்பவர் தீக்குளித்து உயிர் நீத்த நாள் 25.02.2009

முட்டாள்தனமான தீர்ப்பு

• முட்டாள்தனமான தீர்ப்பு நல்லவேளை. அக்பர் சிங்கத்தை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும் என தீர்ப்பு கூறவில்லை என ஆறுதல் அடையலாம். மற்றும்படி, இந்த இந்துமத வெறியர்களை நீதிபதி கண்டித்து அனுப்பியிருக்க வேண்டும். மாறாக, அவர்களின் மிரட்டலுக்கு பணிந்து சிங்கங்களின் பெயரை மாற்றும்படி உத்தரவிட்டது தவறு. ஏனெனில் நாளை சீதாப் பழத்தை முஸ்லிம் கடையில் விற்பதால் தமது மன உணர்வுகள் புண்படுகின்றன என்று இந்த மத வெறியர்கள் வழக்கு தாக்கல் செய்தால் அப்போது சீதாப் பழத்தின் பெயரை மாற்றும்படி நீதிபதி உத்தரவிடுவாரா? நம்புங்கள் இந்தியா வல்லரசாம்!

தான் கூவத்தூர் சென்றதாக

"தான் கூவத்தூர் சென்றதாக திரிஷா கூறவில்லை. திரிஷாவுடன் தான் படுத்தேன் என அந்த அரசியல்வாதியும் சொல்லவில்லை" எனவே இந்த விடயத்தை பேச முடியாது என சிலர் கூறுகின்றனர். சரி. அப்படியென்றால் சான்ஸ் தருவதாக கூறி அமைச்சர் உதயநிதி தன்னுடன் படுத்துவிட்டு ஏமாற்றிவிட்டார் என்று நடிகை சிறீரெட்டி கூறினாரே. அதற்கு உதயநிதி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பாடகி சின்மயி கவிஞர் வயிரமுத்து மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறாரே. வயிரமுத்து மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மாறாக , சின்மயி தமிழ் படங்களில் டப்பிங் பேசக்கூடாது என்றல்லவா தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

நடிகர் விஜய் அவர்களின்

நடிகர் விஜய் அவர்களின் மனைவி சங்கீதா ஒரு ஈழத் தமிழர் என்பது அனைவருக்கும் தெரியும். சங்கீதா அவர்களின் தந்தை சொர்ணலிங்கம் அவர்கள் லண்டன் வாழ் ஈழத் தமிழர் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் சொர்ணலிங்கம் மிகப் பெரிய பணக்காரர் என்றும் மகிந்த ராஜபக்சாவின் பணத்தை வைத்திருக்கிறார் என்றும் திமுக வினர் இப்போது செய்யும் பிரச்சாரம் ஆதாரம் அற்ற அவதூறு ஆகும். நடிகர் விஜய் அவர்களின் அரசியலை தாராளமாக யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் அதற்காக அவர் மனைவி குடும்பம் மீது அபாண்டமாக பழி சுமத்தக்கூடாது. நடிகர் விஜய் அவர்களின் அரசியல் பிரவேசம் தமது உதயநிதியின் முதலமைச்சர் கனவுக்கு வேட்டு வைத்துவிடும் என்று பயந்து உடன்பிறப்புகள் இப்படி பொய் பிரச்சாரம் செய்கின்றனர். அதுவும் மகிந்த ராஜபக்சாவின் இரத்தம் தோய்ந்த கைகளை குலுக்கி பரிசுகள் பெற்றுவந்த திமுக வினருக்கு மகிந்த ராஜபக்சா பணம் பற்றி கூறுவதற்கு அருகதை உண்டா?

கொடுப்பதற்கு

கொடுப்பதற்கு குக்கர் இல்லை சாராயம் இல்லை பணம் இல்லை ஆனாலும் என்றாவது ஒருநாள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மட்டுமே உண்டு இது தமிழ் மக்களின் தன்னம்பிக்கை நீரில் மூழ்கியவன் மேலே வரும்வரை அவன் மேலே வர முயல்வது தெரிவதில்லை. மேலே வந்த பின்பே அவன் இதுவரை மேலே வர முயற்சி செய்திருக்கிறான் என்பது தெரியவரும். அதுபோல் இவர்கள் வென்ற பின்பே அதற்காக இவர்கள் செய்த உழைப்பு தெரியவரும்.

போராட்டம் இனிமையானது

•போராட்டம் இனிமையானது – காரல் மார்க்ஸ் விரும்பியிருந்தால் மற்றவர்கள் போல் வீட்டில் இருந்து பிறந்தநாள் கொண்டாடியிருக்கலாம். ஆனால் இவர் தையிட்டி போராட்ட களத்தில் நின்றுகொண்டு “ நாலு நானூறாக மாறியிருக்கிறது. விரைவில் நாலு லட்சமாகும்” என்கிறார் வாழ்த்து கூறியவர்களுக்குகூட “ உயிர் உள்ளவரை தடம் மாறாமல் தமிழ்த்தேசியத்திற்காய் பயணிப்பேன்” என்றே நன்றி கூறுகின்றார். காலம் நல்ல தலைவர்களுக்காக காத்திருப்பதில்லை. அது இருப்பவரில் ஒருவரை தெரிவு செய்துகொண்டு பயணிக்கிறது. வாழ்த்துக்கள் சுகாஸ் கனகரத்தினம்

அழகிய தேம்ஸ் நதி ஓரத்தில் நடக்கிறேன்

அழகிய தேம்ஸ் நதி ஓரத்தில் நடக்கிறேன் ஆனால் சோனப்பு உப்புக்காற்றே என் மனதில் தவழுகிறது உயர்ந்த கோபுரங்கள் கொண்ட தேவாலயங்களுக்குள் செல்கிறேன் அங்கு கடவுள் இயேசுவை என்னால் காண முடியவில்லை ஆனால் கரவெட்டி தேவாலயத்தில் Sisterரிடம் வாங்கி தின்ற கேக் துண்டில் இயேசுவின் அன்பை உணர்ந்திருக்கிறேன். நாகரீகமான ஹோட்டல்களில் விலையுயர்ந்த உணவுகளை உண்கிறேன் ஆனாலும் சிறு வயதில் அள்ளி தின்ற என் வீட்டு முற்றத்து மண் வாசனை இன்னும் மறக்கவில்லை லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து பல பட்டங்களை பெற்றுவிட்டேன் ஆனாலும் மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் படித்த அரிவரி இன்னும் நினைவில் இருக்கிறதே. குந்தியிருந்த மதவடியும் ஓடி விளையாடிய அத்துளு வயல் வெளிகளும் மனதில் இருக்கும்வரை ஒவ்வொரு பொழுதும் புலரும்போது நான் என்னை உயிர்பித்துக்கொண்டிருப்பதாக உணர்கிறேன். நாளை என் ஊரும் என் சனமும் அழியுமென்றால் இன்றே நான் செத்துவிட வேண்டுமென்று விரும்புகிறேன். - லண்டனில் ஒரு கரவெட்டியானின் ஏக்கம்

இந்தியாவில் பெரியாரியம் இருக்கிறது

இந்தியாவில் பெரியாரியம் இருக்கிறது இந்தியாவில் அம்பேத்காரியம் இருக்கிறது ஆனாலும் ஆணவக்கொலை பற்றிய செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. ஈழத்தில் ஆணவக்கொலை செய்திகள் இல்லை ஆனாலும் அம்பேத்காரியத்தையும் பெரியாரியத்தையும் ஈழத்திற்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என சிலர் ஏன் கூறுகின்றனர்?

கடந்த வருடம் குஜராத்தில்

கடந்த வருடம் குஜராத்தில் அதானியின் துறைமுகத்தில் பல கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அப்போது, போதைப் பொருள் கடத்தலில் குஜராத்திகள் சிக்கியது எப்படி என்று செய்தி போடப்படவில்லை. ஆனால் இப்போது யாரோ ஒரு தமிழ் தயாரிப்பாளர் கடத்தினார் என்றதும் “தமிழர்கள் சிக்கியது எப்படி?” என்று செய்தி போடுகின்றனர். குஜராத் மீனவனை பாக்கிஸ்தான் சுட்டால் “இந்திய மீனவன் சுடப்பட்டார்” என்று செய்தி போடுபவர்கள் தமிழ் மீனவன் சுடப்பட்டால் இந்திய மீனவன் சுடப்பட்டார் என செய்தி போடுவதில்லை. சரி. இப்போது இங்கு நான் கூற வரும் விடயம் என்னவெனில் கடந்தவருடம் சில கொழும்பு தாதாக்களை கைது செய்து சிறப்புமுகாமில் அடைத்துவிட்டு “புலிகள் இயக்கத்தை மீளவும் கட்டுவதற்காக போதைப் பொருள் கடத்தினார்கள்” என்று இந்திய அரசு குற்றம்சாட்டியது. அப்போது, “சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ்அகதிகள் யாவரும் கிரிமினல்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள். அவர்களை நாடு கடத்த வேண்டும்” என்று திமுக உடன்பிறப்புகள் எழுதினார்கள். அப்போது, “இந்தியாவில் இருந்துதான் ஈழத்திற்கு போதைப் பொருள் கடத்தப்படுகிறது. ஈழத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படுவதில்லை” என்று நான் கூறியிருந்தேன். அவ்வாறே கடந்த வருடம் ஈழத்திற்கு போதைப் பொருள் கடத்தியதாக கீழக்கரை திமுக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார். இப்போது டில்லியில் போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவரும் திமுகவைச் சேர்ந்தவரே. அவர் பிடிபட்டதும் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக அறிவித்துள்ளது. ஈழத் தமிழ் அகதிகள் மீது பழி சுமத்திய அந்த திமுக உடன் பிறப்புகள் இனி என்ன கூறப்போகிறார்கள்?

தமிழ்நாட்டில் அகதிமுகாமில்

தமிழ்நாட்டில் அகதிமுகாமில் இருந்துகொண்டு தமிழின விடுதலைக்காக செயற்படுவது சிரமம். அதுவும் கியூ பிராஞ் நெருக்கடிகளுக்கு மத்தியில் மார்க்சிச லெனிச மாசேதுங் சிந்தனையில் செயற்படுவது மிகவும் சிரமம். அந்த மிகவும் சிரமத்தை இறுதிவரை அனுபவித்தவர் தோழர் கௌரிகாந்தன் கடந்த ஆண்டு 26.02.2023யன்று தர்மபுரி அகதிமுகாமில் அவர் மரணமடைந்தார். அவருக்கு நினைவு அஞ்சலிகள்.

பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடியதால்

பிரபாகரன் ஆயுதம் ஏந்திப் போராடியதால் அவர் ஒரு பயங்கரவாதி என்று திமுக உபி ஒருவர் எழுதியிருந்தார். சரி அப்படியென்றால் ஆயுதம் ஏந்தாத காந்தீய அமைப்பு செயற்பாட்டாளரான டேவிட் ஐயா தமிழக அரசின் கியூ பிராஞ்சின் பயங்கரவாதி லிஸ்டில் வைக்கப்பட்டிருந்தது ஏன்? தள்ளாத வயதில்கூட அவரை ஒரு கொடிய பயங்கரவாதியாக கியூ பிராஞ் கண்காணித்தது ஏன்? இதுகூடப் பரவாயில்லை, அமெரிக்காவின் பயங்கரவாதி லிஸ்ட்டில் இப்பவும் நெல்சன் மண்டலேவின் பெயர் இருக்கிறது. எனவே யார் பயங்கரவாதி என்பதைவிட யாருக்கு பயங்கரவாதி என்பதையே பார்க்க வேண்டும். எதிரி எம்மை பயங்கரவாதி என்று கூறினால்; நாம் கவலைப்பட தேவையில்லை. மாறாக எதிரி எம்மை பயங்கரவாதி என்று கூறாவிட்டால்தான் நாம் கவலை கொள்ள வேண்டும். எதிரி எம்மை பாராட்டினால் நாம் அவனுக்கு சோரம் போய்விட்டோம் என்று அர்த்தம் - மாவோ

நினைவஞ்சலிகள்

• நினைவஞ்சலிகள் கீழவெண்மணியில், கூலி உயர்வு கேட்ட 44 அப்பாவி ஏழைத் தமிழர்களைத் தீயிட்டு எரித்துக் கொன்றவர் கோபால கிருஷ்ணன் நாயுடு அவர் தனது அரசியல் செல்வாக்கு மூலம் நீதிமன்றத்தில் இருந்து விடுதலை பெற்றார். ஆனால் தோழர் அமல்ராஜ் அக் கொடியவனை கொன்று பழி தீர்த்தார். அமல்ராஜ் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் (27-2-2019) நாள் இன்று ஆகும் “அடிக்கு அடி” என்னும் தத்துவமே ஆதிக்க சக்திகளுக்கு தகுந்த பாடத்தை புகட்டும். கல்வி கற்றால் போதும் விடுதலை பெறலாம் என்று திரைப்படம் எடுப்பவர்கள் படிக்க வேண்டிய வரலாறு அமல்ராஜ்

வீட்டில் தெலுங்கு பேசும் ஒருவருக்கு

வீட்டில் தெலுங்கு பேசும் ஒருவருக்கு தமிழ்நாட்டில் பல கோடியில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. அதேவேளையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவோம் என ஆந்திர தெலுங்கு முதல்வர் அறிவிக்கிறார். தமிழ்நாட்டில் தமிழர் நலன் குறித்து யாருமே அக்கறை காட்ட மாட்டார்களா?

ஆழ்ந்த இரங்கல்கள்!

• ஆழ்ந்த இரங்கல்கள்! எது நடக்கக்கூடாது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது. அந்த தாயின் 33 வருட விருப்பம் நிறைவேறாமலே போய்விட்டது.

தொடரும் சிறப்புமுகாம் மரணங்கள்

தொடரும் சிறப்புமுகாம் மரணங்கள் இதற்கு ஒரு முடிவு வராதா? இன்னும் எத்தனை பேர் இறந்த பின்பு சிறப்புமுகாமை மூடப்போகிறார் திராவிட முதல்வர்?

தன் மகனை உயிரோடு பார்க்க வேண்டும்

தன் மகனை உயிரோடு பார்க்க வேண்டும் என்ற அந்த தாயின் விருப்பம் நிறைவேறவில்லை. குறைந்த பட்சம் தன் மகனின் உடலையாவது ஒரு முறை அந்த தாய் பார்க்கட்டும். தயவு செய்து சாந்தன் உடலை ஊருக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்குங்கள்.

உச்சநீதிமன்றம் விடுதலை செய்தபோதே

உச்சநீதிமன்றம் விடுதலை செய்தபோதே சாந்தனை ஊர் திரும்ப அனுமதித்திருந்தால் பதினைந்து மாதமாவது அவர் தாயுடன் வாழ்ந்திருப்பார். தன் மகனை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என 33 வருடமாக காத்திருக்கும் அந்த தாய்க்கு இனி என்ன பதிலை கூறப்போகிறோம்? மன்னித்துவிடு தாயே! நாங்கள் தோற்றுப்போய்விட்டோம். அழுது ஓய்வதைத் தவிர வேறு வழியில்லை.

இருவரும் தமிழ்மக்களை நம்பினார்கள்

இருவரும் தமிழ்மக்களை நம்பினார்கள் தமிழ்மக்கள் இவர்களை கைவிடவில்லை. ஆனால் பேரறிவாளனை உயிரோடு அற்புதம்அம்மாளிடம் ஒப்படைத்த மக்களால் , சாந்தனை உயிரோடு தாயாரிடம் ஒப்படைக்க முடியாமற் போய்விட்டது.

29ம் திகதி முன்னர் சாந்தனுக்கு

29ம் திகதி முன்னர் சாந்தனுக்கு விடுதலை அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்கள். ஆனால் இப்படி உயிரற்ற உடலாக விடுதலை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லையே. மாரடைப்பு மரணம் என்பதை நம்ப மறுக்கிறது மனம்

இறுதி நிமிடத்தில் சாந்தனின் கண்கள்

இறுதி நிமிடத்தில் சாந்தனின் கண்கள் சொல்லும் சேதி என்ன? நீதிமன்றம் விடுதலை செய்தாலும்கூட அரசு நினைத்தால் ஈழத் தமிழ் அகதிக்கு தண்டனை வழங்கும் என்பதையா சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

Thursday, February 15, 2024

ஒரு இனத்தை அடக்கி ஆள முற்படும்

ஒரு இனத்தை அடக்கி ஆள முற்படும் எந்தவொரு இனமும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. எனவே சிங்கள மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களின் சுதந்திரத்தை முதலில் அங்கீகரிக்க வேண்டும்.

முத்துக்குமாரை அடுத்து ஈழத் தமிழருக்காய்

முத்துக்குமாரை அடுத்து ஈழத் தமிழருக்காய் தீக்குளித்து இறந்த பள்ளப்பட்டி ரவி அவர்களின் 15வது நினைவு நாள் . (02.02.2009) தமிழ் இனத்திற்காக தீக்குளித்தவன் ஈகத்தை அப்போதைய கருணாநிதி (திமுக) அரசு சமையல் அடுப்பு (ஸ்டவ்) வெடித்து இறந்ததாக மனச்சான்று இன்றி பொய்க்கதை கட்டியது

04.02.1957 யன்று திருமலையில்

04.02.1957 யன்று திருமலையில் கறுப்புகொடி ஏற்றியவேளை சிங்களபடையால் கொல்லப்பட்ட நடராசனை நினைவு கூர்வோம் இவர் ஆயுதம் தூக்கி போராடவில்லை. ஆனாலும் சுட்டுக்கொல்லப்பட்டார் அகிம்சை போராட்டம் வன்முறை மூலம் அடக்கப்பட்டதாலேயே தமிழர்கள் வேறு வழியின்றி ஆயுதம்ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்

இருவரும் தமிழர்கள்.

இருவரும் தமிழர்கள். அது மட்டுமல்ல இருவரும் திருமலையைச் சேர்ந்தவர்கள் ஒருவர் எல்லோரும் அறிந்த திருமலை பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் ஐயா. மற்றவர் தியாகி நடராஜா. 1957ல் சுதந்திரநாளை கரிநாளாக தமிழரசுக்கட்சி அறிவித்தது. அப்போது திருமலையில் சிங்கக்கொடியை அகற்றிவிட்டு கறுப்புகொடியை ஏற்றிய நடராஜனை சிஙகள பொலிஸ் சுட்டுக்கொன்றது. எந்த சிங்கக்கொடியை இறக்க திருமலை நடராஜன் உயிர் துறந்தாரோ அதே சிங்கக்கொடியை அதே திருமலை எம்பி சம்பந்தர் ஐயா தூக்கிப் பிடிக்கிறார். பாவம் நடராஜன். குறிப்பு – 04.02.2024 யன்று நடராஜனின் 67 வது நினைவு தினம்.

நடிகர் ரஜனி மத்திய அரசில் மட்டுமல்ல

நடிகர் ரஜனி மத்திய அரசில் மட்டுமல்ல மாநில அரசிலும் செல்வாக்கு உள்ளவர். அவர் குரல் கொடுத்தால் பிரதமர் மோடி மட்டுமல்ல தமிழக முதல்வர் ஸ்டாலினும் கேட்பார். நடிகர் ரஜனி ஈழத் தமிழ தலைவர்களில் ஒருவரான விக்கினேஸ்வரன் அவர்கள் மீது மதிப்பு கொண்டவர் என்கிறார்கள். எனவே விக்கினேஸ்வரன் அவர்கள் நடிகர் ரஜனி மூலம் சாந்தன் உட்பட சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் விடுதலைக்கு வழி காண வேண்டும். பிரேமானந்த சுவாமி பாலியல் வல்லுறவு மற்றும் கொலைக் குற்றத்திற்காக இரட்டை ஆயள் தண்டனை வழங்கப்பட்டவர். அவரை விடுதலை செய்யுமாறு விக்கினேஸ்வரன் அவர்கள் கோரியிருந்தார். பிரோமானந்தா சுவாமி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும்போதே விக்கினேஸ்வரன் இவ்வாறு கோரியிருந்தார். ஆனால் சாந்தன் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். இது எந்தளவு சட்டவிரோதமானதும் மனிதாபிமானம் அற்றதும் என்பது நீதிபதியாக இருந்த விக்கினேஸ்வரன் அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே பிரேமானந்த சுவாமிக்காக கரல் கொடுத்த விக்கினேஸ்வரன் அவர்கள் சாந்தனுக்காக குரல் கொடுக்கக்கூடாதா?

1991ல் ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து

1991ல் ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து தமிழ்நாடு மீட்சிப்படையினைச் சேர்ந்த சுமார் முப்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் புலிகள் இயக்கதில் பயிற்சி மற்றும் ஆயுதங்கள் பெற்றவர்கள் என தடா சட்டத்தின் கீழ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தேடப்பட்ட ஆறுமுகம் மற்றும் சுமி என்ற இருவர் தமிழ்நாட்டில் இருந்து தப்பி வன்னிக்கு செல்ல முயன்றனர். அவர்களை தமிழ்நாட்டில் இருந்து ஏற்றிவந்த படகினர் வன்னிப்பிரதேசம் எனக்கூறி நெடுந்தீவில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இவர்கள் இருவரும் அங்கிருந்த ஈபிடிபி யினரை புலிகள் என நினைத்து சென்றுள்ளனர். அப்புறம்தான் இரு தரப்பினருக்கும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரிந்திருக்கிறது. இதற்கிடையில் அருகில் இருந்த இலங்கை கடற்படை இவ் இருவரையும் பொறுப்பெடுத்துவிட்டது. அப்போது ஜனாதிபதியாக பிரேமாதாசா இருந்தார். அவர் இந்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தார். இதனால் இலங்கை ராணுவப் புலனாய்வினர் இந்த இருவரையும் துன்புறுத்தவில்லை. இவர்கள் இந்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவதை அறிந்து மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை எப்படியோ அறிந்த இந்திய அரசு இந்த இருவரையும் உடனடியாக ஒப்படைக்கும்படி இலங்கை அரசை மிரட்டியது. அதன்படி இலங்கை ராணுவத்தினர் வேறு வழியின்றி இந்த இருவரையும் இந்திய அரசிடம் ஒப்படைத்தனர். இந்த இருவரையும் விசேட விமானத்தில் சென்று அழைத்து வந்தவர் தமிழக காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியே. இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளை பலவந்தமாக இலங்கைகக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் மூலம் பெற்றவர் பாமக கட்சி தலைவர் ராமாதாஸ் அவர்கள். ஆனால் இந்த உத்தரவுக்கு மாறாக கடந்த வருடம் சிறப்புமுகாமில் இருந்து ஒரு ஈழத் தமிழர் பலவந்தமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து பொலிசாரை வரவழைத்து திருச்சி விமானநிலையத்தில் வைத்து இந்த சிறப்புமுகாமில் இருந்த ஈழத் தமிழரை ஒப்படைத்துள்ளது தமிழக அரசு. அவர் இப்போது இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இங்கு இந்த இரு சம்பவங்களை சுட்டிக்காட்டுவது ஏனென்றால் இலங்கை இந்திய அரசுகள் தமக்கு தேவை என்றால் உடனடியாக தமிழரை பரிமாறிக் கொள்வார்கள் என்பதைக் காட்டுவதற்கே. ஆனால் சாந்தனுக்கு இலங்கை அரசின் அனுமதி 15 மாதமாகியும் இன்னும் கிடைக்க வில்லை என்கிறது இந்திய அரசு. இந்திய அரசின் இந்த பொய்யை உண்மை என்று அப்பாவி தமிழர்களும் நம்புகின்றனர். என்ன செய்வது?

நாம் தமிழர்” கட்சியினர் 3ம் திகதி

“நாம் தமிழர்” கட்சியினர் 3ம் திகதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் தமிழத்தேச குடியரசு இயக்கம் 11ம் திகதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் கட்சிகள், அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் தொடரட்டும் தமிழக மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் சாந்தன் உட்பட சிறப்புமுகாம் அகதிகளுக்கு விடுதலை கிடைக்கட்டும்

தமிழர்களை கேவலமாக பேசியதற்கு

தமிழர்களை கேவலமாக பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் கன்னட நடிகை. கடந்த 12 வருடமாக மன்னிப்பு கோராமல் இருந்தவர் இப்போது ஏன் கோருகிறார்? ஏனெனில் நடிகர் ரஜனியின் “லால்சலாம்”படத்திற்காகவே மன்னிப்பு கோருகிறார். அதுவும் நடிகர் ரஜனி குடும்பம் கேட்டுக்கொண்டதற்காகவே இந்த மன்னிப்பை கோருகிறார். மற்றும்படி தவறை உணர்ந்து உண்மையாகவே வருந்தி இந்த மன்னிப்பை இவர் கேட்கவில்லை. எனினும் தமிழ மக்களின் எதிர்ப்பு இவருக்கும் ரஜனி குடும்பத்திற்கும் அச்சத்தைக் கொடுத்துள்ளது. இது இனி மற்ற இன நடிகர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்.

புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்ட முயன்றனர்

புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்ட முயன்றனர் எனக்கூறி திருச்சி சிறப்புமுகாமில் இருந்த சிலர் மீது இந்த NIA யினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அந்த சிலர் தாம் கொழும்பு நகரைச் சேர்ந்தவர்கள் என்றும் தாம் ஜனாதிபதி ரணில் ஆதரவாளர்கள் என்றும் தமக்கும் புலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இப்போது சாந்தன் உட்பட சிறப்புமுகாமில் இருப்பவர்களை விடுதலை செய்யுமாறு கோரி நாளை திருச்சியில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர். எனவே அதை தடுப்பதற்காக நாம் தமிழர் கட்சியினருக்கு அச்சத்தையும் நெருக்கடியையும் கொடுப்பதற்காகவே இந்த NIA சோதனை நடைபெற்றதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். அவர் மகள் துவாரகா இந்திய அரசின் ஆதரவோடு தமிழீழத்திற்காக போராட வருகிறாள் என்று கவிஞர் காசி அனந்தன் கவிதை பாடுகிறார். ஆனால் அவர் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று அவர் வீட்டில் இந்த NIA யினர் சோதனை செய்வதில்லை. ஏனெனில் காசி அனந்தன் இந்த சிறப்புமுகாம் அகதிகளை விடுதலை செய்யுமாறு கோருவதில்லை. சிறப்புமுகாமை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்ய காவல்துறை அனுமதி அளிப்பதில்லை. மீறி ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது. அதையும் மீறி ஆர்ப்பாட்டம் செய்தால் NIA சோதனை மிரட்டல்.

வெற்றியைவிட பெரிதாக ஒன்று

வெற்றியைவிட பெரிதாக ஒன்று இருக்கிறது என்றால் அது எதிரிக்கு நீ கொடுக்கும் அச்சம்.

அவருக்கு தமிழ்நாட்டிற்கு வெளியே

அவருக்கு தமிழ்நாட்டிற்கு வெளியே கேரளா, ஆந்திரா என இந்தியா எங்கும் ரசிகர்கள் உண்டு. ஆனாலும் கட்சி பெயரில் "அனைத்திந்தியா" என இல்லை. தமிழகம் மட்டுமே உண்டு. அதைவிட கட்சி பெயரில் "திராவிடம்" இல்லை. இது தமிழ்நாட்டில் பெருகி வரும் தமிழ்த்தேசிய உணர்வின் தாக்கம் இன்றி வேறு என்னவாக இருக்கும்?

நாம் தமிழர் கட்சி பாஜக வின் B டீம்

நாம் தமிழர் கட்சி பாஜக வின் B டீம் என கூறிய (200ரூபா) உடன்பிறப்புகள் இனி என்ன கூறுவார்கள்?

உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாச்சலம்

உயர்நீதிமன்ற நீதிபதிகள் அருணாச்சலம் மற்றும் பிரதாப்சிங் ஆகியோர் வழக்கு எண் WP 15044/91 இல் வழங்கிய தீர்ப்பு (1)சிறப்புமுகாமில் வைக்கப்பட்டவர்கள் விரும்பினால் தம் குடும்பத்தவர்களை வரவழைத்து தம்முடன் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் (2) சிறப்புமுகாமில் உள்ளவர்களை சிறையில் உள்ளது போன்று அடைத்து வைக்கக்கூடாது. அவர்கள் முகாம் எல்லைக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் (3) பார்வையாளர்கள் அனைவரும் அனுமதிக்கப்படுவர். நேரக்கட்டுபாடு எதுவும் இல்லை. விரும்பிய நேரம் பேசுவதற்கும் பொருட்களை கொடுக்கவும் அனுமதிக்கப்படுவர். (4) நாடு திரும்பிச் செல்ல விரும்பினால் தம் சொந்த செலவிலோ அல்லது அரசு செலவிலோ அனுப்பி வைக்கப்படுவர். தமிழக அரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலே உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கினர். மேற்கண்ட உரிமைகள் யாவும் வழங்கப்பட்டு சட்டப்படியே சிறப்புமுகாம் நடத்தப்படுவதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது. ஆனால் தமிழக அரசின் நடைமுறை என்ன? மனட்சாட்சி உள்ளவர்களே பதில் தாருங்கள்.

புலியால் ஆட்டுக்குட்டிகளுக்கு

புலியால் ஆட்டுக்குட்டிகளுக்கு ஆபத்து எனக்கூறி புலிகளை முற்றாக அழித்துவிட்டதாக ஓநாய்கள் அறிக்கை விட்டன. இருப்பினும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை புலி மீதான தடையை ஓநாய்கள் அறிவித்துக்கொண்டே இருக்கின்றன. இல்லாத புலிக்கு தடை எதற்கு என்று அப்பாவி ஆட்டுக்குட்டிகளால் கேட்க முடியவில்லை. ஏனெனில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புலிக்கதைகளை சொல்லியே தடையை நீடிக்கின்றன ஓநாய்கள். இம்முறை தன் சொந்தக் காட்டுக்குள்ளேயே புலியை பிடித்துவிட்டதாக ஓநாய்கள் அறிவிக்கின்றன. என்னடா என்று எட்டிப் பார்த்தால், சில ஆட்டுக்குட்டிகளை பிடித்து வைத்து புலி என்று ஒத்துக்கொள்ளும்படி சித்திரவதை செய்கின்றன ஓநாய்கள். இந்தமுறை புலி மீதான தடைக்கு ஓநாய் சொல்லும் கதை இது என்று தெரிந்தும் அதை தட்டிக் கேட்க முடியாமல் இருக்கின்றன ஆட்டுக் குட்டிகள். குறிப்பு - இது ஒரு அனிமல் கதை. இதை படித்ததும் உங்களுக்கு NIA சோதனை நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.

6 வருடங்களுக்கு மேலாக

6 வருடங்களுக்கு மேலாக அகிம்சை வழியில் போராடுகிறார்கள் இவர்கள் கோருவதெல்லாம் தாம் இறப்பதற்குள் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பற்றி அறிந்துவிட வேண்டும் என்பதே தமக்கு சொகுசு பங்களா, சொகுசு வாகனம் கேட்டு வாங்கிய எமது தலைவர்களால் இவர்களுக்கு ஒரு தீர்வை கேட்டு வாங்க முடியவில்லை

ஆறாவது நாளாக தொடரும்

•ஆறாவது நாளாக தொடரும் முருகன் உண்ணாவிரதம் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழக திராவிட அரசு ! முருகன் மற்றும் நளினியை பார்வையிட அவர்களின் மகளுக்கு விசா வழங்க மறுக்கிறது இந்திய அரசு லண்டனில் இருக்கும் அந்த மகளுடன் சேர்ந்து வாழ விரும்பும் முருகனை அனுமதிக்க மறுக்கிறது தமிழக அரசு மத்திய . மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து முருகன் குடும்பத்தை வஞ்சிக்கின்றன. இந்த கொடுமைகளுக்கு எப்போது முடிவு வரும்?

இவர் சாந்தனின் தாயார் என்பது

இவர் சாந்தனின் தாயார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் எங்கே சென்றுவிட்டு வருகின்றார் என்று யாருக்காவது நினைவு இருக்கிறதா? கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன் மகனை வருவித்து தருமாறு கோரி ஜனாதிபதி மற்றும் உரியவர்களுக்கு மனு கொடுத்து விட்டு வருகின்றார். ஆனால் ஆச்சரியம் என்னவெனில், ஜனாதிபதி சாந்தனை அழைத்துவர உறுதி தெரிவித்ததாகவும் ஆனால் இதற்கு சாந்தன் தாயாரிடமிருந்து ஒரு மனுவும் தமிழரசுக்கட்சி சார்பாக ஒரு மனுவும் தரும்படி கேட்டதாக சிறீதரன் கூறியுள்ளார். சாந்தன் இலங்கை பிரஜை. அவர் இலங்கை வருவதற்கு தயாரிடம் மனு எதற்கு? அதைவிட, அவர் ஏற்கனவே மனு கொடுத்துள்ள நிலையில் மீண்டும் மனு எதற்கு? அதையும்விட, இதற்கு எதற்கு தமிழரசுக்கட்சியின் மனு வேண்டும்? ஜனாதிபதி காலம் கடத்துவதற்காக இதை கேட்கிறாரா? அல்லது சிறீதரன் அறிக்கைவிட்டு தமிழ் மக்களை ஏமாற்றுகிறாரா?

சம்பந்தர் ஐயா நாளை மறுநாள்

சம்பந்தர் ஐயா நாளை மறுநாள் தனது 91வது பிறந்தநாளை தன் பிள்ளைகளுடன் கொண்டாட இருக்கின்றார். மகிழ்ச்சி. அவருக்கு எமது வாழ்த்துக்கள். ஆனால் இந்த தாயின் மகன் முருகன் கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதம் தொடர்கின்றார். அவர் உயிரை காப்பாற்றி லண்டனில் இருக்கும் தன் மகளுடன் சேர்ந்து வாழ சம்பந்தர் ஐயா குரல் கொடுக்க வேண்டும். இப்பவாவது குரல் கொடுப்பாரா?

இலங்கை அரசின் அனுமதி கிடைத்ததும்

இலங்கை அரசின் அனுமதி கிடைத்ததும் சாந்தன் அனுப்பி வைக்கப்படுவார் என இந்திய அரசு கூறுகின்றது. சாந்தன் அழைத்து வரப்படுவார் என இலங்கை ஜனாதிபதி கூறுகின்றார். 15 மாதமாகியும் இலங்கை அரசின் அனுமதி இன்னும் வந்து சேரவில்லை என்று இந்திய அரசு கூறுகின்றது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் இலங்கை அரசின் அனுமதி இந்திய அரசை சென்றடைய இன்னும் எத்தனை மாதம் எடுக்கும்? யாராவது அறிந்தவர்கள் கூறுவீர்களா?

கடும் புயல்களுக்கு மத்தியிலும்

கடும் புயல்களுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது. எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்த மனிதர் சிரித்துக் கொண்டுதானே இருக்கிறார். அதெப்படி? சரி. இவர் ஏன் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சி தொடங்கக்கூடாது? இவர் தொடங்கினாலும் ஆதரிக்க நாலு பேர் இருக்கத்தானே செய்வார்கள்? குறிப்பு - இது நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால் ஏற்பட்ட கடுப்பு பதிவு இல்லை.😂

NIA சோதனை மிரட்டல்களுக்கு மத்தியிலும்

NIA சோதனை மிரட்டல்களுக்கு மத்தியிலும் சிறப்புமுகாம் அகதிகளின் விடுதலைக்காக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் நாம் தமிழர் கட்சியினர். இனியாவது அகதிகளின் விடுதலைக்கு வழி பிறக்கட்டும்

அகிம்சை வழி போராட்டம் அடக்கப்படும்போது

அகிம்சை வழி போராட்டம் அடக்கப்படும்போது தவிர்க்க முடியாமல் ஆயுதப் போராட்டம் வெடிக்கும். வெடித்த அந்த ஆயுத போராட்டத்தை “பயங்கரவாதம்” என்று கூறி அழித்த சர்வதேசம் இப்போது என்ன கூறப்போகிறது? தமிழ் மக்கள் சர்வதேசத்திற்கு இன்று தெரிவித்துள்ள செய்தி (1) இலங்கையின் சுதந்திர தினம் தமிழரின் கரிநாள். (2) அடக்குமுறைக்கு அடிமையாக வீழ்ந்து கிடக்கமாட்டோம். தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்து போராடுவோம். இதற்கு சர்வதேசம் என்ன பதிலை அளிக்கப் போகிறது?

ஒருபுறம் நாம் தமிழர் செயற்பாட்டாளரை

ஒருபுறம் நாம் தமிழர் செயற்பாட்டாளரை திமுக ஒன்றிய செயலர் கொலை செய்கிறார். எம்எல்ஏ மேடை ஏறி தாக்கிறார். திமுக அரசின் காவல்துறை நாம் தமிழர் மீது பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறது. மறுபுறம் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மத்திய அரசு NIAயை வைத்து சோதனை செய்து மிரட்டுகிறது. இதிலிருந்து ஆரியமும் திராவிடமும் தமிழ்தேசியத்தை நசுக்கும் என்பது மட்டுமல்ல நாம் தமிழர் சரியாக பயணிக்கின்றனர் என்பதும் புலனாகிறது.

இரந்து பெறுவதற்கு

இரந்து பெறுவதற்கு உரிமை ஒன்றும் பிச்சை இல்லை அது போராடி பெறுவது. மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதில்லை மக்கள் அமைதியை விரும்பினாலும் அரசின் அடக்குமுறை மக்களை போராட வைக்கிறது போராடுவது என்று முடிவெடுத்துவிட்டால் இலக்கு ஒன்றே நோக்கமாக இருக்க வேண்டும் சீனா வந்தால் இந்தியா வரும் இந்து தமிழீழம் கேட்டால் இந்தியா வரும் என்று காரணங்களை தேடிக்கொண்டிருக்க கூடாது. வீழாமல் வாழ்ந்தோம் என்பது பெருமை இல்லை வீழும்போதெல்லாம் மீண்டும் எழுந்தோம் என்பதே பெருமை. தாம் மீண்டும் எழுவதை தமிழ் மக்கள் காட்டியுள்ளனர்.

சம்பந்தர் ஐயாவின் 91 வது பிறந்தநாள்

•சம்பந்தர் ஐயாவின் 91 வது பிறந்தநாள்!;. காது கேட்கவில்லை. கண் தெரியவில்லை. மற்றவர் உதவி இன்றி எழுந்து நடமாடக்கூட முடியவில்லை. ஆனாலும் பதவியை விட்டு ஒதுங்க இன்னும் மனம் வரவில்லை. அவர் அழைத்து வந்த சுமந்திரனே கேட்ட பின்பும்கூட கொஞ்சம்கூட வெட்கமின்றி பதவியை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இந்த சொகுசு மாளிகையில் தங்குவதற்காக இவர் தொகுதியில் 25 ஆயிரம் மக்கள் வீடு இழக்கின்றனர் பொதுவாக யார் இறந்தாலும் இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கலாம் என்று இரங்கும் மக்கள் இன்னும் இவர் இறக்கவில்லையா என வெறுப்புடன் கேட்கும் நிலை.. மன்னித்துவிடுங்கள் ஐயா வாழ்த்த மனம் வருகுதில்லை.

செய்தி – ஜேவிபி தலைவருடன் இந்திய அரசு பேச்சு

செய்தி – ஜேவிபி தலைவருடன் இந்திய அரசு பேச்சு கடந்த வருடம் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய அரசுக்கு கடிதம் அனுப்பினார்கள். அந்த கடிதம் கிடைத்தது என்றுகூட இதுவரை இந்திய அரசு பதில் அளிக்கவில்லை. ஆனால் ஜேவிபி எந்தவித கடிதமும் எழுதாத நிலையில் அதன் தலைவரை அழைத்து இந்திய அரசு பேசியுள்ளது. இதற்கு என்ன காரணம்? கடந்த வாரம் திருகோணமலையில் இந்திய அரசுக்கு எதிராக மூவின மக்கள் ஒன்று சேர்ந்து செய்த போராட்டத்தின் பின்னணியில் ஜேவிபி இருப்பதாக இந்திய அரசு நினைப்பதே காரணம் அதுமட்டுமல்ல இலங்கையில் இந்திய அரசின் முதலீடுகளுக்கு எதிராக ஜேவிபி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவேதான் ஜேவிபி யை வாங்குவதற்காக இந்திய அரசு அழைத்துள்ளது. ஜேவிபி விலை போகுமா?

இவர் புலி உறுப்பினர் இல்லை.

இவர் புலி உறுப்பினர் இல்லை. இவர் ஆயுதம் ஏந்தி போராடவில்லை இவர் மக்களால் வாக்கு அளித்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இவர் சிங்கள அரசால் போர் நிறுத்த காலகட்டத்தில் 07.02.2005 யன்று கொல்லப்பட்டார் 19 வருடங்கள் கழிந்துவிட்டன. இன்னும் இவர் கொலைக்கு நீதி வழங்கப்படவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைக்கு எப்படி இன்னும் நீதி வழங்கப்படவில்லையோ, பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராயசிங்கம் கொலைக்கு எப்படி இன்னும் நீதி வழங்கப்படவில்லையோ, அதுபோன்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அவர்கள் கொலைக்கும் இன்னும் நீதி வழங்கப்படவில்லை. தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைக்கே நீதி பெற்றுக்கொடுக்க முடியாத தமிழரசுக்கட்சியினர், தமிழ் மக்களின் கொலைக்கு நீதி பெற்றுக்கொடுப்பார்கள் என எப்படி நம்புவது? ஜோசப் பரராயசிங்கம் மரணத்தையடுத்து சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தன் தமிழரசுக்கட்சியால் பாராளுமன்ற உறுப்பினராக்கப்பட்டார். 2009ல் நடைபெற்ற வெள்ளைக்கொடி சம்பவத்தின் முக்கிய சாட்சியாக வாக்கு மூலம் அளித்துள்ளார் சந்திரகாந்தன் சந்திரகாந்தன் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக நான்கு வருடம் இருந்துள்ளார். ஆனாலும் அவர் உறுப்பினர் இல்லை எனக்கூறி அண்மையில் நடந்த தமிழரசுக்கட்சி தலைவர் தேர்வுக் கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என கூறுகின்றனர். எல்லையில் தமிழரசுக்கட்சியை கட்டிக்காத்த சந்திரநேரு அரியநாயகம் குடும்பத்திற்கே இந்த கதியா?

அடேய்!

அடேய்! யாரு பார்த்த வேலைடா இது?😂😂 என்ன இருந்தாலும் 100 கோடி சம்பளத்தை விட்டிட்டு அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். ஸ்டாலின், உதயநிதி. இன்பநிதி போன்று அப்பன், தாத்தா வாரிசாக அரசியலுக்கு வரவில்லை.

இரண்டு வாரத்திற்குள் கடவுச்சீட்டு

இரண்டு வாரத்திற்குள் கடவுச்சீட்டு பெற வழி செய்வதாக தமிழக அரசு வாக்குறுதி அளித்ததையடுத்து பயஸ் அவர்கள் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக அறிய வருகிறது. இம்முறையாவது தமிழக அரசு தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் என நம்புவோம். அவர்களின் 33 வருட சிறைவாழ்வு முடிவுக்கு வரட்டும்.

இலங்கை அரசின் அனுமதி கிடைத்தவுடன்

இலங்கை அரசின் அனுமதி கிடைத்தவுடன் சாந்தன் அனுப்பி வைக்கப்படுவார் என இந்திய அரசு கூறுகின்றது. சாந்தன் நாடு திரும்ப எந்த தடையும் இல்லை என்று இலங்கை அரசு கூறுகின்றது. ஆனாலும் இன்னும் சாந்தன் நாடு வந்து சேரவில்லை. இதற்கு என்ன காரணம்? குறிப்பு – மானாட மயிலாட புகழ் கலா மாஸ்டரும் நடிகை ரம்பாவும் இன்று காலை யாழ் வந்துள்ளார்கள். அவர்களால் உடன் வர முடிகிறது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் மூலமே தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியம் ஏற்பட வேண்டும் என்று தோழர் சண் கூறினார். அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் ஜேவிபி கட்சியை இனவாதக்கட்சி என பகிரங்கமாக விமர்சித்தார். இந்தியாவில் நக்சல்பாரி இயக்கம் (நக்சலைட்டுகள்)அழித்தொழிப்பு நடவடிக்கையை முன்வைத்து செயற்பட்டபோது அதன் தவறுகளை அப்பவே சுட்டிக்காட்டிய ஒரே தலைவர் தோழர் சண். அதுமட்டுமல்ல அத்தகைய அழித்தொழிப்பு நடவடிக்கைகள் இலங்கையில் சிலர் முன்னெடுக்க முனைந்தபோது அதனை விமர்சித்து நிறுத்தியவர் அவர். இந்தியாவைப் போன்று இலங்கையிலும் பெரியாரியம், அம்பேத்காரியம் போன்ற சீர்திருத்தக் கருத்துகள் காலூன்றி வளர முடியாமைக்கு முக்கிய காரணம் தோழர் சண் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியினர் அவர்கள் சாதீய தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தியதுடன் அதை “அடிக்கு அடி” என்னும் தத்துவத்தினூடாக ஆயுதப் போராட்டமாகவும் முன்னெடுத்தனர். வடக்கு கிழக்கில் மட்டுமன்றி மலையக தோட்ட தொழிலாளர்களின் பல வழக்குகளிலும் தோழர் சண் நேரிடையாக ஆஜராகி வெற்றிபெற்று கொடுத்துள்ளார். சண் கேட்டுக்கொண்டமைக்காக செனட்டர் நடேசன் ஆஜராகியிருக்கிறார். சண் வேண்டுகோள்படி தோட்ட தொழிலாளர் வழக்கில் நடேசன் மகன் சத்தியேந்திரா இங்கிலாந்து சென்று வாதாடி வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார். தோழர் சண் சிங்களவராக இருந்திருந்தால் இலங்கை வரலாறு வேறு விதமாக இருந்திருக்கும்.

சாந்தனிடம் கடவுச்சீட்டு இருக்கிறது.

சாந்தனிடம் கடவுச்சீட்டு இருக்கிறது. அதனை சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தால் புதுப்பிக்க முடியும். அப்படியிருக்க எதற்காக இலங்கையில் இருந்து கடவுசீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்? அப்படி அனுப்புவதாக இருந்தாலும் சென்னை இலங்கை தூதரகத்திற்கு அனுப்பி அங்கு வைத்து சாந்தனிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதானே நடைமுறை. அதைவிடுத்து எதற்காக இந்திய வெளியுறவு அமைச்சுக்கு சாந்தன் கடவுச்சீட்டு அனுப்ப வேண்டும்? சாந்தன் 15 மாதங்களாக இலங்கை திரும்ப முடியாமைக்கு உண்மையான காரணம் (1) சிறப்புமுகாமில் இருந்து சாந்தன் நாடு திரும்புவதற்குரிய அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை. (2) சாந்தன் தன் கடவுச்சீட்டை புதுப்பிக்க சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் செல்வதற்குரிய பயண ஏற்பாட்டை தமிழக அரசு செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு செய்யவில்லை. அறிக்கைவிடும் இலங்கைத் தலைவர்கள் உண்மையில் சிறப்புமுகாம் நடைமுறைகளை அறிந்து அறிக்கை விடுகின்றனரா? அல்லது, தாமதத்திற்கு காரணமான இந்திய மத்திய மாநில அரசுகளை காப்பாற்றுவதற்காக அறிக்கை விடுகின்றனரா?

சாந்தனுக்கு காங்கிரஸ் கட்சியினரால்

சாந்தனுக்கு காங்கிரஸ் கட்சியினரால் உயிராபத்து ஏற்படலாம் என்பதாலே சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதாக முன்னாள் மாகாண அமைச்சர் ஐங்கரநேசன் கூறுகின்றார். உச்சநீதிமன்றதால் விடுதலை செய்யப்பட்ட ஏழு தமிழரில் பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் கடந்த 15 மாதங்களாக சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அவர்களில் யாருக்கும் யாராலும் எந்த ஆபத்தும் இதுவரை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படப் போவதில்லை. உண்மைநிலை இப்படியிருக்க சாந்தனுக்கு மட்டும் காங்கிரஸ் கட்சியால் உயிராபத்து ஏற்படும் என்று தமிழக அரசு அடைத்து வைத்திருப்பதாக எப்படி இவர் கூறுகின்றார்? அதுமட்டுமல்ல, சாந்தன் தன்னை தமிநாட்டில் நடமாட அனுமதிக்கும்படி கேட்கவில்லை. தன்னை இலங்கை அனுப்பி வைக்குமாறே கேட்கிறார். இலங்கை திரும்ப விரும்புபவரை எதற்கு சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்க வேண்டும்? இவர் உண்மையில் சாந்தன் நிலை அறிந்து பேசுகின்றாரா? அல்லது யாழ் இந்திய தூதரை மகிழ்விப்பதற்காக இப்படி கூறுகின்றாரா?

நினைவு அஞ்சலிகள்!

நினைவு அஞ்சலிகள்!

தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்!

•தோழர் சண் அவர்களை நினைவில் கொள்வோம்! 08.02.2024யன்று தோழர் சண் அவர்களின் 31 வது நினைவு தினம் ஆகும். இலங்கையில் மாவோயிசத்தை அறிமுகப்படுத்தி வளர்த்தமைக்காக அவரை நினைவுகூர வேண்டும். இலங்கையில் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய மக்கள்யுத்தப்பாதையை முன்வைத்தமைக்காக நினைவு கூர வேண்டும். “அடிக்கு அடியே” சாதீய கொடுமையில் இருந்து விடுபட வழி வகுக்கும் என கூறி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை அளித்தமைக்காக நினைவு கூர வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு கம்யுனிஸ்ட் தலைவர் என்பது மட்டுமன்றி இனப்பிரச்சனைக்கு தீர்வாக பிரதேச சுயாட்சியை முன்வைத்தவர் என்பதால் நினைவு கூர வேண்டும். அவர் பற்றிய சில குறிப்புகள். •வறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நன்கு படித்து பட்டதாரியானவர். தமிழ் சிங்களம் ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் சிறந்த புலமை மிக்கவர். •அவர் விரும்பியிருந்தால் ஒரு நல்ல உத்தியோகம் பெற்று வசதியான வாழ்வு வாழ்ந்திருக்கலாம் •அல்லது பின்னரும்கூட பல கம்யுனிஸ் தலைவர்கள் தேர்தல் பாதையில் சென்று அமைச்சு பதவிகள் பெற்றதுபோல் இவரும் பெற்றிருக்கலாம். •ஆனால் அவர் இறுதிவரை உறுதியான புரட்சியாளராக வாழ்ந்து மறைந்தார். •சீனாவின் உதவி கிடைக்காமல் போய்விடும் என்று தெரிந்தும் சீனாவின் தவறுகளை விமர்சித்தவர். •மாசேதுங் உயிருடன் இருக்கும்போதே சீனா இலங்கை அரசுக்கு செய்த ஆயுத உதவிகளை கண்டித்தவர். சீனா முதலாளித்தவ பாதைக்கு திரும்புகிறது என்று கூறி அதனுடனான உறவுகளை கைவிட்டவர். •தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியபோது இலங்கை அரசு அவர்களை “பயங்கரவாதிகள்” என்று அழைத்தது. அமிர்தலிங்கம் உட்பட தமிழர்விடுதலைக்கூட்டணியினர் “பொடியன்கள்” என்று அழைத்தனர். ஆனால் தோழர் சண்தான் முதன் முதலில் அவர்களை “போராளிகள்” என்று அழைத்தார். (அதுவும் சிறிமாவோ பண்டாரநாயக்கா, கொல்வின் ஆர்டி சில்வா, என்எம் பெரராரோ பீட்டர் கெனமன் அமிர்தலிங்கம் இருந்த மேடையில் கொழும்பில் சிங்கள மக்கள் மத்தியில் தைரியமாக கூறினார்.) •தமிழ் சிங்கள மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்காக பல தொழிற்சங்கங்களை நிறுவி அவர்களுக்காக இலவசமாக வழக்குகள் பேசி வென்று கொடுத்தவர். (1)ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் இந்திய ஆதரவுடன் அடுத்த பொங்கலுக்கு தமிழீழம் மலரும் என்று கூறியபோது “இந்தியாவை நம்ப வேண்டாம். இந்தியா ஒரு போதும் தமிழீழம் பெற்று தராது. மாறாக போராளிகளை அழிக்கும்” என்று கூறியவர். (2)இலங்கையில் சமசமாஜக்கட்சி டிராட்சியவாதிகளுக்கும் , தேர்தல் பாதையில் பயணிக்கும் திரிபுவாத கம்யுனிஸ்டுகளுக்கும் தோழர் சண் கொடுத்த தத்துவார்த்த அடி இன்னும் அவர்களால் எழும்ப முடியாத அடியாக இருக்கிறது. (3)இலங்கையில் இனி யார் புரட்சியை செய்தாலும் அவர் முன்னெடுத்த புதிய ஜனநாயகப்புரட்சியில் இருந்தே தொடர வேண்டும்.. தோழர் சண் அவர்களை மறுத்து விட்டு யாராலும் புரட்சி செய்ய முடியாது. தோழர் சண் இலங்கையில் ஒரு மாபெரும் தலைவர் மட்டுமல்ல மகத்தான தலைவரும்கூட. அவரை நினைவு கூர்வது எமது கடமையாகும். குறிப்பு - இத்தகைய மகத்தான ஒரு தலைவரின் இறுதி நாட்களில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தமை என்னால் மறக்க முடியாதது. அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவரது “ ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” நூலை 1990ல் சென்னையில் அச்சடித்து வெளியிட்டிருந்தேன்

பெண்கள் ஆதரவின்றி

பெண்கள் ஆதரவின்றி பெண்கள் பங்களிப்பு இன்றி எந்தவொரு சமூக மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது. அதுவும் தமிழத் தேசிய பரப்பினுள் பெண்கள் அதிக அளவில் வருவதும் அவர்களுக்கு போட்டியிட சம வாய்ப்பு அளிப்பதும் நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கின்றன. அவர்கள் தேர்தலில் வெற்றி பெறவில்லையே என வருந்த வேண்டியதில்லை ஏனெனில் அவர்கள் தனித்து போட்டியிடுவதே வெற்றிதான். அவர்கள் ஏதோ சிறு கல்லை உடைத்துக்கொண்டிருப்பதாக எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆரியம் திராவிடம் என்னும் இரு மலைகளை உடைத்துக்கொண்டிருந்தனர் என்றே வரலாறு பதிவு செய்யப்போகிறது.

NIA சோதனையும் எனது சங்கீதமும்

•NIA சோதனையும் எனது சங்கீதமும் நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை ஏர். ஆர் ரகுமானின் சின்ன சின்ன ஆசை பாடல் வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் பிரபல்யம் அடைந்திருந்தது. அப்போது அந்த பாடலை ஒருமுறை கேட்டுவிட வேண்டும் என நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். சிறையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பகலில் மட்டும் பாடல்கள் போடுவார்கள். ஆனால் அவை பழைய பாடல்களாக இருந்தன. அப்போது என்னை 14 நாட்களுக்கு ஒருமுறை பஸ்ஸில் அழைத்துச்சென்று கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வார்கள். அதனால் பாட்டுப்பெட்டி உள்ள பஸ்ஸில் சென்றால் இந்த பாட்டை கேட்க முடியும் என நான் நினைத்தேன். இதனை என்னை அழைத்துச் செல்ல வந்த பொலிசாரிடம் கூறினேன். எனது ஆர்வத்தைப் பார்த்த பொலிசாரும் சிரித்துவிட்டு பாட்டு பெட்டி உள்ள பஸ்ஸில் ஏற்றியதும் மட்டுமன்றி டிரைவரிடம் அநத பாட்டைப் போடும்படி கூறினார்கள். பாடல் மட்டுமல்ல அந்த பாடலைக் கேட்ட எனது ஆசையும் சின்ன சின்ன ஆசைதான். எனது ஒரு சின்ன ஆசை இப்படித்தான் நிறைவேறியது. இப்போது நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்சிகளில் சுப்பர் சிங்கர் மற்றும் சரிகம பாட்டு நிகழ்ச்சிகள் முக்கியமானவை. அந்த நிகழ்வில் சிலர் பாடும்போது அது நன்றாக இருப்பதாக நான் நினைப்பேன். ஆனால் நடுவர்கள் சுருதி சேரவில்லை. சரணம் நன்றாக வரவில்லை என்றெல்லாம் கருத்து கூறுவார்கள். எனவே இதெல்லாம் என்ன என்பதை அறிய விரும்பி சென்னையில் உள்ள பாடகி ஒருவரை தொடர்பு கொண்டு எனக்கு சங்கீதம் கற்று தர முடியுமா எனக் கேட்டேன். அவர் உடனே “சிறந்த பாடகராக வர விரும்புகிறீர்களா?” என கேட்டார். அதற்கு நான் “இல்லை. சிறந்த பாடல் எது என்பதை தெரிந்துகொள்வதற்காக படிக்க விரும்புகிறேன்” என்றேன். என் விருப்பம் அவருக்கு வித்தியாசமாக தோன்றியிருந்தாலும் அவர் எனக்கு சொல்லி தர சம்மதித்தார். எனக்கு சங்கீதம் சொல்லிதர சம்மதித்தவர் NIA சோதனை பற்றிய செய்திகளை அறிந்ததும் இதனால் தனக்கும் ஏதும் பிரச்சனை வருமா என அச்சத்துடன் கேட்டார். அவருடைய அச்சம் நியாயமானது. ஏனெனில் நான்கு வருடங்களுக்கு முன்னர் புலிகள் இயக்க தடை நீடிப்பின்போது எனது முகநூல் பதிவுகளையும் காரணமாக காட்டியிருந்தனர். எனது முகநூல் பதிவுகளையும் காரணமாக காட்டியிருக்கின்றனர் என்பதையே நான் கடந்த வருடம்தான் அறிந்திருந்தேன். எனவே மீண்டும் புலிகள் இயக்க தடையை நீடிப்பதற்காக இந்த பாடகி வீட்டில் NIA சோதனை செய்து என்னுடன் தொடர்பு என்று காட்டினாலும் காட்டுவார்கள். NIA சோதனையால் எனது சங்கீத படிக்கும் முயற்சி தடைப்பட்டுவிட்டது. பரவாயில்லை. NIA சோதனைக்கு அஞ்சாத ஒரு பாடகர் கிடைக்காமலா போய்விடுவார்?

இரண்டு நிகழ்வுகள்

இரண்டு நிகழ்வுகள் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வு இன்னொன்று சென்னையில் இடம்பெற்ற A.R.ரகுமான் இசை நிகழ்வு இரண்டு இசை நிகழ்வுகளிலும் குழப்பம் ஏற்பட்டது சென்னையில் ஏற்பட்ட குழப்பத்திற்கு ரகுமான் மீது குற்றம் சாட்டப்பட்டது ஆனால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மக்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது. யாழ்பாண மக்கள் தான் காரணம் என்றால் இதற்கு முன்னர் நடைபெற்ற சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்வு எந்த குழப்பமும் இன்றி நடைபெற்றதுதானே? எனவே சென்னை நிகழ்வுக்கு ARரகுமான் மன்னிப்பு கோரியதுபோல் யாழ்ப்பாண நிகழ்வக்கு ஏற்பாட்டாளர்களே மன்னிப்பு கோர வேண்டும்.